எட்டெட்டு பகுதி 19 க்கு இது சுட்டி<<
பிங்கியின் போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் - (ஒரு பகுதி:)
பெயர் : பிங்கி
இனம்: பெண்
வயது: சுமார் இருபது.
உடல் சோதனைக்குக் கொண்டுவரப்பட்ட நாள்: 08-08-08.
இறந்த நேரம்: காலை 08-08.
இறப்புக்கான காரணம்: "பருகிய கோக்க கோலா பானத்தில், சாலிசைக்ளிக் ஆசிட், இப்ரால் (ஆயிரம் எம் ஜி) ஆகியவை கலந்திருப்பது தெரிகின்றது. ஆல்கஹாலில், இவை இரண்டும் கலந்தால், அது உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும். பரிசோதனையில், வேறு எந்த சந்தேகத்துக்குரிய பொருட்களோ தடயங்களோ கிடைக்கவில்லை. மேலும் இறந்து போன இந்தப் பெண் கல்யாணமாகாத கன்னிப் பெண் என்பதையும் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன."
பிணப் பரிசோதனை தெரிவு செய்த போலீஸ் ஆபீசர் பெயர்: .............."
*****************************************************
(ஆவியுலகில்...)
மாயா: என்னம்மா இது அநியாயமாக இருக்கு! பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டதே!
அம்மா: "மாயா நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். 'இந்த உலகத்துக்கு வந்த பிறகு, அந்த உலகப் பிரச்னைகள் நமக்கு வேண்டாம்' என்று. நீதான் கேட்காமல் என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்தாய். விதியை மதியால் வெல்வதற்குக் கூட விதி சரியாக அமையவேண்டும். மேலும் ..."
மாயா: அம்மா ஓ ஏ சாப்பிட வேண்டிய கோக்க கோலாவை, பிங்கி எப்படி, ஏன் குடித்தாள்?
அம்மா: "உனக்கு மட்டும் சொல்கிறேன். நீ கே வி யிடம் - ஓ ஏ வின் கோக்க கோலா பானத்தில் தன்னிலை அறியும் மாத்திரையைப் போடச் சொன்ன பொழுது, நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய எண்ண அலைகள் 'பரம்' வரை சென்றுவிட்டன. அங்கிருந்து உடனடியாக எனக்கு ஒரு எம் எம் எம் (மானசீக மெயில் மெசேஜ்) வந்தது. அதுல பரம், 'அந்தக் கோக்க கோலாவை, ஓ ஏ பருகக் கூடாது' என்று உணர்த்தியிருந்தார். "
"அந்த நேரத்திலிருந்து, கே வி யின் மனதில், காலு சிங் மனதில் எல்லாம் புகுந்து, என்னென்னவோ செய்துப் பார்த்தேன். எதுவும் பலனளிக்கவில்லை. கே வி, (உனக்கு) மாயாவுக்கு உதவியே தீருவேன் என்று உறுதியாக இருந்தார். காலு சிங், கே வி மாத்திரை கலந்ததைப் பார்க்கவில்லை. மறக்காமல், ரூம் உள்ளே கோக்க கோலாவைக் கொண்டு போய் வைத்தவுடன், அதில் ஆஸ்பிரின் மாத்திரையைப் போட்டுவிட்டான். நல்ல வேளை - அந்த நேரம், ஓ ஏ பாத் ரூமில் இருந்தார். டெலிபோனுக்குப் பக்கத்தில், காலு சிங் கோக்க கோலாவையும், ஆரஞ்சு ஜுசையும் வைத்துவிட்டு அகன்றுவிட்டான். "
"வேறு எந்த வழியும் தோன்றாத நிலையில், மும்பை ஹோட்டல் பிராஜக்ட் பார்த்துக் கொள்ளும் மானேஜரின் மனதில் புகுந்து, அவரை, ஓ ஏ வுக்கு போன் செய்ய வைத்தேன். அவருக்கு ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி, திங்கட்கிழமையன்று லீவு வேண்டியதிருந்தது. இந்த நேரத்தில் போன் செய்தால், ஓ ஏ லீவு கொடுத்துவிடுவார் என்று அவர் மனதில் தோன்றவைத்தேன். அவர் போன் செய்தவுடன், பிங்கி போனை எடுத்தாள்."
"போன் செய்த மானேஜர் 'சும்மா' லீவு மட்டும் கேட்டால், கிடைக்காது என்பதால், போனை பிங்கி எடுத்தவுடன், 'மேடம், மும்பை ஹோட்டல் பிராஜக்ட் மிகவும் சரியாக நிறைவேறி வருகின்றது. ஹோட்டலை, குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே திறந்துவிடலாம் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்' என்று தொடங்கி, மெதுவாக தன்னுடைய லீவு சமாச்சாரத்திற்கு வந்தார்."
"கேட்டுக் கொண்டிருந்த பிங்கிக்கு ஒரே சந்தோஷம். மும்பை ஹோட்டல் பிராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தால், ஓ ஏ வுடன் தன்னுடைய திருமணம் உடனே நடைபெறும் என்று சந்தோஷமடைந்தாள் அவள். அந்த சந்தோஷத்தில், காலு சிங் கொண்டு வந்து வைத்த குளிர் பானத்தை, அது என்ன என்று கூடப் பாராமல், அனிச்சையாக கையில் எடுத்துப் பருகத் தொடங்கியிருந்தாள் பிங்கி."
(தொடரும்) .... "மாயாவின் அம்மா ஆவி"
(தொடரும்) ..... "பதிவாசிரியர்" (வேறு வழி இல்லை!)


