கவித... கவித...
மரத்தில்
உயர இருக்கும் பூக்களைபறிக்கும் முயற்சியில்
தவறி தண்ணீரில் விழுந்தவன்,
சுற்றிலும் இருந்த
அல்லி, தாமரை என்று
அழகிய மலர்க் கூட்டத்தைக்
கண்டதும் தெரிந்து கொண்டேன்
பல சமயம்
கடவுள் நம் கனவுகளை விட
அழகிய
பரிசுகளை அளிக்கிறார் என்று.
ஆகாயக் கனவுகளிருந்து
தவறி விழும்
நம்மை
லட்சியக் குன்றுகளில்
நிறுத்துவது இயற்கை
என்னும் விதி.
பணத்தை
விரும்பாதே..
அது
தூக்கத்தை அல்ல,
புத்தகங்ககளைத் தரும்,
அறிவை அல்ல.
வசதிகளைத் தரும்,
சந்தோஷத்தை அல்ல.
எனவே,
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பணத்தை
என் கணக்குக்கு
மாற்றி விடு!
கடவுளே....!
கோவில் வாசலில் வாசகம்..
கடவுளை நம்பு...
ஏனென்றால்
எல்லா கேள்விகளுக்கும்
கூகிளில் விடை கிடைப்பதில்லை!
சரியான பதிலப்பு...
கே : கான்க்ரீட் தரையில் ஒரு முட்டையை எப்படி உடையாமல் போடுவது?
ப: கவலை வேண்டாம்..இதற்கெல்லாம் கான்க்ரீட் உடையாது!
======
பதி : வெட்டப்பட்ட மறு பாதி.
======
கே : காலை உணவில் சாப்பிடவே முடியாதது எது?
பதி : இரவு உணவு!
======
வசதி, சவுக்கியம், நிம்மதி
இவை
மேலும் மேலும்
சம்பாதிப்பதிலோ
நிறைய செலவு செய்வதிலோ,
சேர்த்து வைப்பதிலோ
இல்லை.
இருக்கும் வரை
போதும் என்று
நினைக்கும்
மனதில்
இருக்கிறது.
அப்பாவிக் காதல்
ஒளிந்து பிடித்து
விளையாடிக் கொண்டிருந்த
அவன், அவள்...
விளையாட்டின் நடுவே
அவள் அனுப்பினாள்
குறுஞ்செய்தி
அவனுக்கு..
நீ என்னை
கண்டு பிடித்தால்
இறுக்கி அணைத்து
ஒரு உம்மா...
முடியவில்லை
என்றால்
அதுவரை ஒளிந்திருப்பேன்
-
-
-
-
-
-
-
-
-
-
தோட்டத்தில்.!
-
-
-
-
தோட்டத்தில்.!
நேரம்...
உங்கள் நேரம் சரியாக இருந்தால் உங்கள் தவறுகள் கூட விளையாட்டாகும்.
நேரம் சரியில்லை என்றால் உங்கள் விளையாட்டுகள் கூட தவறாகும்!
அவர் ரெடி...நீங்க ரெடியா....
கடவுளுக்கு இருக்கிறது நேரம்
உங்களுக்கு
செவி சாய்க்க..
உங்களுக்கு நேரம் இருக்கிறதா
பிரார்த்தனை செய்ய?
கவலை...
விரும்புபவர்களை
இழந்து விடுவேனோ
என்று அடிக்கடி
அச்சப் படும் எனக்குள்
இன்னொரு கேள்வி..
என்னையும்
யாராவது இப்படி யோசிப்பார்களோ?




