நீதி மன்றத்தில், சாட்சிக் கூண்டில் குழப்பக் குப்பன்!
எதிர் தரப்பு வக்கீல் - குறுக்குக் கேள்விகள் கேட்கிறார்.
கு குப்பன், 'இப்படியும் இருக்கலாம் - அப்படியும் இருக்கலாம்' வகை பதில்கள் கொடுத்த வண்ணம் உள்ளார்.
உதாரணத்திற்கு ஒன்று:
எ த வக்கீல்: "நீங்கள் குறிப்பிடும் வீடு அஞ்சாவது மெய்ன் ரோட்டில் - எந்தப் பக்கம் அமைந்துள்ளது?"
கு கு : ஐயா அந்த வீடு ஐந்தாவது மெய்ன் ரோடின் இரண்டு பக்கத்திலும் உள்ளது.
நீதிபதி குறுக்கிட்டு - "அது எப்படி சாத்தியம்?"
கு கு - "ஐயா - நீங்க சுந்தரவல்லி ஸ்கூல் பக்கத்துலேருந்து பக்கு வீட்டுப் பக்கம் போகும்போது அந்த வீடு வலது பக்கம் வரும்; ஆனா பக்கு வீட்டுப் பக்கத்துலேருந்து சுந்தரவல்லி ஸ்கூல் பக்கம் போகும்போது அந்த வீடு இடது பக்கம் வரும் .....!!"
இதனால் மிகவும் பாதிப்படைந்த எ த வக்கீல் - மிகவும் எரிச்சலடைந்து குப்பனிடம் மோகன்லால் பாணியில் சொல்கிறார்:
"நான் கேக்கற கேள்விக்கு பைனரில பதில் சொல்லு - ஆமாம் அல்லது இல்லை - ரெண்டுல ஒண்ணுதான் சொல்லணும் சரியா?."
கு கு : "அது முடியாதே சார்!"
எ த வக்கீல் : " ஏன் முடியாது?"
கு கு : " சார் நீங்க பாட்டுக்க - குப்பா, உனக்கு முந்தி பைத்தியம் பிடித்திருந்ததே - இப்போ அது சரியாயிடுச்சா அல்லது இல்லியான்னு கேட்பீங்க .....அப்போ நான் ஆமாம்னு சொன்னாலும் - இல்லேன்னு சொன்னாலும் - என்னைப் பத்தி நீதிபதி அய்யா என்ன நினைப்பாரு?"
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Family court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Family court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2.10.09
5.9.09
மணப் பொருத்தம் - மன வருத்தம்
குடும்ப நலக் கோர்ட்டுகள் நிறைய ஏற்படுத்தப் படப் போகின்றனவாம். ஏன்? குடும்ப நல வழக்குகள் பெருகி விட்டதால்..ஏகப் பட்ட மண முறிவு வழக்குகள் வந்த வண்ணம்,உள்ளனவாம்.
பெற்றோர் ஏற்பாடு செய்யும் என்று இல்லை...காதல் திருமணங்களும் கூட தோல்வியில் முடியக் காரணம் என்ன? பிரபலமான (காதல்) திருமணங்கள் விரைவில் முறிந்து விடுவதைப் பார்க்கிறோம்.பிரபலமானவர்கள் என்பதால் அது உடனே தெரிந்து விடுகின்றது.பொதுமக்களில் எவ்வளவு தோல்விகள்? ஏன் இந்த நிலை?
பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் மனப் பொருத்தம் பார்க்காமல் பணப் பொருத்தம் அதிகமாகப் பார்க்கிறார்களா? அப்படி என்றால் மனதால் இணையும் காதல் திருமணங்கள் தோற்பதேன்? எதைப் பார்த்து இணைய முடிவெடுக்கிறார்கள், பிறகு எதைக் கண்டு சீக்கிரமே பிரிய முடிவெடுக்கிறார்கள்?
சொந்த பலவீனங்களை மறைத்து விட்டு பொழுது போக்காக காதலிக்கிறார்களா? திருமணத்துக்குப் பின் அந்த பலவீனங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றதா? ஏன் இவர்களால் விட்டுக் கொடுத்துப் போக முடிவதில்லை? இது சம்பந்தப் பட்ட இருவர் பிரச்னை என்பதைத் தவிர சமயங்களில் மாமியார், நாத்தனார் கூடப் பிரச்னை ஆவது உண்டு.
ஆனால் கூட்டுக் குடும்பம் என்பது இந்தக் காலத்தில் மறைந்து வருகிற கலாச்சாரமாகி வருகிறது.இந்த மாதிரி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் தோல்விகள் பெருமளவு குறையலாம்.
இருவரும் வேலை பார்க்கும் இடங்களில் ஆதிக்க உணர்வும், உன் சம்பளம், என் சம்பளம் comparison பிரச்னையும், வீட்டுல நான் மட்டும் வேலை செய்யணுமா போன்ற பிரச்னைகள் புகைச்சலைக் கிளப்புகின்றன.
மற்றவரது பெற்றோரை தன் சொந்தக் கோபங்களுக்கு அவமதித்து துணையை சீண்டிப் பார்ப்பது,
கணவன் மேல் மனைவி, மனைவி மேல் கணவன் என்று எழும் அனாவசிய சந்தேகங்கள் போன்றவை பிரச்னை ஆகலாம்.
மேல் நாடுகளில் குறட்டை விடுவதால் கூட மண முறிவு ஏற்பட்டிருக்கிறது!
அலுவலகங்களில் எத்தனையோ சிக்கலான பிரச்னைகளை அலசி விடை காணும் மக்களால் வீட்டில் சொந்தங்களுடன் ஏற்படும் பிரச்னைகளை சமன் செய்து ஒற்றுமையாக வாழ முடியாமல் போவதேன்?
சகித்துக் கொண்டு வாழ்வதை விட தனியாகப் போவதே மேல் (Female லும்தான்!) என்று பொறுமை இன்றி ஓட வைப்பது நாகரீக வாழ்வு தந்த பொருளாதார பலமா?
குழந்தைகள் வந்த பிறகு பிரிய நேர்ந்தால் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு தனிக் கதை.
பரஸ்பரப் புரிதல் இல்லாமல் போவதற்கு அவசர யுகத்தின் பரபரப்பு காரணமா? எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவு எடுக்க வைக்கும் Fast food கலாசாரம் காரணமா?
வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்துக்கு என்று தினமும் சற்று நேரம் ஒதுக்குவது, TV Serial களை மறந்து தினமும் சற்று நேரமாவது மனம் விட்டுப் பேசுவது சேர்ந்து சாப்பிடுவது என்றெல்லாம் இருந்தால் இந்தப் பிரச்னை கொஞ்சமாவது குறையுமோ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)