சவாரி? சமாளி!
"நீயும் உன் மனைவியும் ஒற்றுமையாக சண்டை போடாமல் இருக்கிறீர்களே... எப்படி?"
"அதுவா...இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஹனிமூன் சென்றபோது நானும் என் மனைவியும் குதிரையில் சவாரி சென்றோம். என் மனைவி சென்ற குதிரை சண்டித்தனம் செய்து குதித்ததில், அவள் கீழே விழுந்து விட்டாள். மண்ணைத் தட்டிக் கொண்டு எழுந்த அவள் குதிரையின் பின்பக்கத்தில் தட்டி "இது உனக்கு முதல் வார்னிங்" என்று ஏறி உட்கார்ந்தாள். இரண்டாம் முறையும் இதே நடந்து அவள் இரண்டாவது வார்னிங்கும் கொடுத்தாள். மூன்றாவது முறை இது நடந்ததும் ஒரு துப்பாக்கியை எடுத்து குதிரையை சுட்டு விட்டாள். "அடப் பாவி...உனக்கு இரக்கமே இல்லையா...குதிரையை சுட்டு விட்டாயே" என்றேன்..என்னை ஆழமாக உற்று நோக்கியவள் "இது உங்களுக்கு முதல் வார்னிங்" என்றாள். அப்போதிலிருந்து இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்..."
------------------------------ ---------------
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!
"என்னம்மா நீ சொல்றே நாம் எல்லோரும் கடவுளால் படைக்கப் பட்டோம்னு...அப்பா சொல்றார், நாம் எல்லோரும் குரங்கிலிருந்து வந்தோம்னு.... எதும்மா உண்மை"
ரெண்டும்தாம்பா...நான் சொன்னது எங்க வீட்டுப் பக்கம் பற்றி... அவர் சொல்வது அவர் உறவுகள் பற்றி..."
------------------------------ -------------
ஸ்மைல் ப்ளீஸ்!
ஒரு இடி மின்னல் மழை நாளில் மகன் பயப்படப் போகிறானே என்று பள்ளிக்கு அழைத்து வரச் சென்ற தாய், அவன் ஒவ்வொரு மின்னலுக்கும் வானத்தைப் பார்த்து புன்னகைப்பது கண்டு காரணம் கேட்டாள்.
"கடவுள் என்னை போட்டோ எடுக்கறார்மா...நான் அழகாய் சிரித்து, போஸ் கொடுக்க வேண்டாமா?"
------------------------------ ------------
ஓடிய ஓட்டமென்ன?
வீட்டை விட்டு ஓடிப் போன மகளால் துவண்டிருந்தது குடும்பம். மூன்று நாட்களுக்குப் பின் திரும்பி வந்த மகளிடம் தந்தை கோபமாய் கேட்டார்,
"நோக்கியா சின்ன பின் சார்ஜர்"
------------------------------ --------------
"ஏண்டி... அந்த விஞ்ஞானியோட வீட்டை விட்டு ஓடிப்போனியே..., ஏண்டி திரும்பி வந்துட்டே...?"
"பாவிப் பய திரும்பி அழைச்சுட்டு வந்துட்டு 'சோதனை ஓட்டம்'னுட்டாண்டி"
------------------------------ ------------
அவள் எப்போதுமே அவனுக்கு 'ஐ லவ் யூ', 'ஐ மிஸ் யூ'ன்னுட்டெல்லாம் மெசேஜ் அனுப்பிகிட்டு இருப்பாள். நேரம் காலம் கிடையாது.
ஒரு நாள் அபபடி நள்ளிரவு அவளிடமிருந்து வந்த மெசேஜ். தூக்கத்தினால் இவன் படிக்காமல் விட்டு விட்டான்.
மறுநாள் காலை அவள் அம்மா கிட்டயிருந்து அவனுக்கு கால் வந்தது.
"என் பொண்ணு நேத்து நைட் ஒரு ஆக்சிடனட்ல செத்து போயிட்டாப்பா..."
இவன் பதறிப் போய் நைட் படிக்காம விட்ட மெசேஜை எடுத்துப் படிச்சான்.
"டியர்...நான் உங்க தெரு முனைல தான் இருக்கேன்...ஆக்சிடன்ட் ஆயிடுச்சி ...இனி பிழைக்க மாட்டேன். கடைசியா ஒரு தரம் உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா... வாடா ப்ளீஸ்... "
நீதி: அப்போ கூட கால் பண்ணாம மெசேஜ்தான் அனுப்பியிருக்கிறாள்!
------------------------------ ------------------
வடை போச்சே...!
என்ன பயன்? வடை போச்சே....
------------------------------ -------------------





