creativity made simple 03 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
creativity made simple 03 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.11.09

நம்பி யார்?


நாரணன் நம்பி - என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஆண்டாள் பிரயோகம்.
நாராயணன் நம்பி - என்றால் யார் என்று நீங்க கேட்கக் கூடும். மஞ்சேரி நாராயணன் நம்பியார் - என்றால் கூட புருவத்தை நெரிப்பீர்கள்.
எம் என் நம்பியார் - என்றால் அட - அவரா! என்று வியப்பீர்கள்.
எம் ஜி யார் என்றால் யார் என்று தெரிந்தவர்களுக்கு,
நம்பியார் என்றால் யார் என்று தெரியாமல் போகாது.
நான் யார், நான் யார், நான் யார்? என்ற எம் ஜி யார் (குடியிருந்த கோவில்) படப்பாடலைக் கேட்டு இரசித்திருப்பீர்கள்.
அதில் அடுத்து வருகின்ற வரி,
நாலும் மிகுந்தவர் நம்பியார் - என்று பாடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எந்த நாலு?
நடிப்பு
நல்லொழுக்கம்
நம்பிக்கை (தன்னிடத்திலும், மற்றவரிடத்திலும், தெய்வத்திடத்திலும்)
நகைச்சுவை.
நம்பியார் பிறந்தது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பத்தொன்பதாம் வருடம், மே மாதம், இருபத்தொன்றாம் தேதி. மறைந்தது, சென்ற வருடம், இதே மாதம், இதே தேதி, இதே நேரம் (மதியம்) - இந்த இடுகை இடப்படுகின்ற இந்திய நேரம்.
மேலே சொல்லப்பட்டுள்ள நாலில் மூன்று ஏற்கெனவே உங்கள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம்.
நான்காவதான, நகைச்சுவைக்கு நல்ல உதாரணம் வேண்டும் என்றால், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவேளையில், எம்ஜியார் அவர்கள் சப்தம் போட்டு, வாய் விட்டுச் சிரிக்கிறார் என்றால் - அது நம்பியார் அவர்களின் நகைச்சுவை கலந்த உரையாடலால் மட்டுமே இருக்க முடியும் என்பது படக்குழு சேர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும்.
நம்பியாரின் தந்தை பெயர் கேளு நம்பியார் என்பதும், மனைவி பெயர் ருக்மணி என்பதும், இந்தப் பதிவைப் படிப்பவர்கள் பெரும்பாலோருக்கும் தெரிந்திருக்கும்.
இப்ப கொஞ்சம் - படைப்பாற்றல் சமாச்சாரங்கள் பார்ப்போம். நம்பியார் அவர்களுக்கும், படைப்பாற்றலுக்கும் பல சம்பந்தங்கள் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? - அவைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
* நம்பியாரைப் போல நடித்தவர்கள் - அவருக்கு முன் யாரும் கிடையாது. அவர் பாணி தனி. அந்த சிறப்பு அவருக்கு, படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுக்கொடுத்துவிட்டது.
* சினிமா உலகில், நம்பியாரைப் போல நன்னடத்தைக் கொண்டவர்கள் என்று எடுத்துக் கொண்டால், விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா உலகில் பணம் எவ்வளவோ சம்பாதிக்கலாம்; ஆனால் - ஒரு வில்லன் நடிகர் - இந்த அளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்திருப்பது, அவரின் படைப்பாற்றலுக்கு மேலும் ஒரு சான்று.
* இப்பல்லாம் எவ்வளவோ தமிழ்ச் சானல்களில், 'கலக்கப்போவது யாரு?', அசத்தப்போவது யாரு?, சிரிக்க வைப்பது யாரு, சொரியப்போவது யாரு? என்றெல்லாம் நிகழ்ச்சிகள் வருகின்றன. இவைகள் எல்லாவற்றிற்கும் - முக்கியமான தீம் - "படைப்பாற்றல் கொண்டவர் யாரு?" - இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் - நம்பியார் போல நாலு வரியாவது பேசிக் காட்டாமல் - எந்த ஒரு பங்கேற்பாளரும் பரிசு பெற்றிருக்கமுடியாது.
* இப்போ - இந்தப் பதிவாசிரியரின் சில கண்டுபிடிப்புகள். 
# நம்பியார் அவர்கள் பிறந்தது, 19 19 ஆண்டு.
# இறந்தது நவம்பர் 19.
# எம்ஜியார் வாழ்ந்தது 70 வருடங்கள். நம்பியார் வாழ்ந்தது 89 வருடங்கள். 89 - 70 = 19.
# பத்தொன்பது - ஒரு prime number (உத்தம எண்?) 
# நம்பியார் அவர்கள் திகம்பர சாமியார் படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார். 11 is a prime number.
# நம்பியார் அவர்கள் நாடகத்தில் நடித்த நாட்களில், அவருக்குக் கிடைத்த முதல் மாத சம்பளம் மூன்று ரூபாய்கள். அதில் ஒரு ரூபாயைத் தான் வைத்துக் கொண்டு இரண்டு ரூபாய்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டாராம்! 3 is a prime number.
இப்போ வாசகர்களுக்கு  கேள்வி - 
1) நம்பியார் அவர்களையும், ப்ரைம் நம்பர்களையும் இணைத்து, ஏதேனும் ஒரு பின்னூட்டம் நீங்க இங்கே போடணும். வழக்கம்போல் - ஒவ்வொரு படைப்பாற்றல் மிக்க பின்னூட்டத்திற்கும், பாயிண்டுகள் உண்டு. சும்மா - புகுந்து விளையாடுங்க!
2) நம்பியார் அவர்களின் தாயார் பெயர் என்ன?
இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்க, 
உங்களால் முடியும்.