நேற்றைய 'எங்கள் செய்தி & எங்கள் கருத்தை'விட வாசகர்கள் கமெண்டுகள் நன்றாக இருந்ததாக சோபனா கூறினார். எனவே - நாங்க இன்று மௌனவிரதம். வாசகர்கள் - குறிப்பாக கிருஷ், ஈ நா -- உட்பட எல்லோரும் - இன்றைய செய்திகளைப் படித்து அவர்களுடைய கருத்துக்களை பதியுங்கள். செய்தி எண் உங்க வசதிக்காகக் கொடுத்திருக்கிறோம்.
- ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் (பயங்கரவாத கொள்கைகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.)
- ஊட்டி மலை ரயில் சேவை துவங்கியது
- அப்பாவுக்கு எதிராக 13 வயது மகன் புகார் (அம்மாவை வரதட்சணை கேட்டு, அப்பா, தாத்தா உள்ளிட்டோர் அடித்து சித்திரவதை செய்தனர்.)
- தியாகராஜசுவாமிகளுக்கு இசையஞ்சலி
- விஸ்கியை விரும்பிய தாட்சர்
- மத்திய அரசை கண்காணிக்கிறது பா.ஜ.!
- போராட்டத்தை தொடர சாய ஆலைகள் முடிவு (முழு அளவு மானியத் தொகையும் கிடைத்தால் மட்டுமே, தொழிலை நடத்த முடியும்.)
- கவுடா மீது எடியூரப்பா பாய்ச்சல் (ஆட்சி கவிழும் என, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான அவரது கட்சியினர் பகல் கனவு காண்கின்றனர்.)
- செயல் இழந்த ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,கள். ( மதுரை முழுவதிலும் உள்ள ஸ்டேட் வங்கிகளின், பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் செயல்படவில்லை. )
- டில்லியை வாட்டுகிறது குளிர்.