தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு : கால் கிலோ .
நெய் : நூறு மி லி
அரிசி அரை கிலோ
தேங்காய் ஒரு மூடி.
சர்க்கரை : கால் கிலோ.
முந்திரி பருப்பு: ஐம்பது கிராம்.
பச்சைக் கற்பூரம் : சிறிதளவு.
கடலை பருப்பை சிறிதளவு நெய் விட்டு வறுத்து எடுத்துக்கொண்டு, தண்ணீரில் வேகவைக்கவும்.
கடலைப் பருப்பு வெந்ததும், அரிசியைக் கழுவிக் களைந்து போடவும்.
அரிசி முக்கால் அளவுக்கு வெந்ததும், தேங்காயைத் துருவி, சர்க்கரையுடன் கலந்து, கொட்டிக் கிளறவும்.
எல்லாம் நன்றாக வெந்ததும், லேசாக வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த் தூள், பச்சைக்கற்பூரம், நெய் சேர்த்து, நன்றாகக் கிளறி, இறக்கிவிடவும்.
நன்றாக ஆறியபின் எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுங்கள்.
கடலைப் பருப்பில் உள்ள சத்துக்கள் என்ன? இதோ பட்டியல்:
பின் குறிப்பு: சர்க்கரை சிலருக்கு ஆகாது. அவர்கள் பொங்கடலை சாப்பிடக்கூடாது.