9.1.13

கருப்பும் கறுப்பும்

                                               
இந்த விளக்கம் கடந்த ஞாயிறு தினமணியில் வந்தது. தமிழண்ணல் விளக்கம் கொடுத்திருந்தார். (இதை முன்னரே சொல்லியிருந்தால் அங்கேயே படித்திருப்போமே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறதுதான். அப்புறம் இன்னொரு பதிவுக்குக் கிடைத்த வாய்ப்பை நாங்கள் நழுவ விட முடியுமா என்ன!)

இனி தமிழண்ணல் சொல்லியிருப்பது கீழே :


கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் 'கருப்பு' என்பதே.

கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான், கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர்பொருள் 'நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன் பட்டன.


'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக்கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம். உரிச்சொல் இலக்கணத்தில்,


"...பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி

தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்" (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள், அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு.


கருப்பு என்பது - கரிய நிறம், 'வெளிப்பாடு சொல்லே கிடைத்தல் வேண்டா...' என்பார் தொல்காப்பியர். (783).


கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள், துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி, கருவிழி கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார்வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் எல்லாம் வல்லினத்தைப் போட்டுப் பாருங்கள். தொடர்புடைய சொற்கள் எல்லாம் கருப்பு என்பதிலிருந்தே கிடைக்கின்றன.


=====


'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்' (தொல்.855)


வெகுளி - கடுங்கோபம். இது சினத்தல், பகைத்தல், நிர்கறுத்தோர் அரணம் போல' - பகைத்தவரின் கோட்டை போல. 'நீ சிவந்து இறுத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. 'நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப'(856) நிறத்து உரு - நிறம் வேறுபாடல் (கோபத்தால் சீற்றத்தால் நிறமாற்றமேற்படல் இயல்பு. கறுத்தோர் - பகைவர், மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு. நிறம் மாறிக் கறுத்துக் கொண்டு வரும். 'வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' (குறிஞ்சி 22) இது கருநிறம் மட்டுமன்று;மிக முற்றிய கருநிறம். 'கவ்வை கறுப்பு' (அகம் 366) எல்லின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறி வருவது காட்டும். கவ்வை - எள்.


சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும் அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும். பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் 'நிறத்துஉரு' என்று குறிப்பிட்டுள்ளார். 'எச்சொல்லாயினும் வேறு பொருள் கிளத்தல்' என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.


கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சூழல் போன்றவற்றால் 'நிறத்துரு'-தோற்றம் பெறும்;பிறகு மாறிவிடும். கறுப்பணசாமி என்றது கடுங் கோபக்காரச் சாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.


'நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.


இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின 'ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும். 'கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது."


அவ்வளவுதான். கஷ்டப்பட்டு டைப் செய்திருக்கிறேன். சாமிகளே.... தயவு செய்து முழுசாகப் படித்து விடவும்! :)))))

புரிந்து விட்டதா? புரிந்து 'போய்' விட்டதா?

8.1.13

எஸ்ரா சிறுகதை, ஓவியங்கள், படித்தவை ரசித்தவை வெட்டி அரட்டை.


கணினி உடம்பு சரியில்லாமல் 4 நாட்கள் படுத்து எழுந்தது. இன்னமும் வீக்காகவே இருக்கிறது. போஷாக்குக் கொடுக்க வேண்டும்.

வாரப் பத்திரிகைகளில் வரும் தொடர் / சிறுகதைகளுக்கு  போடும் படங்களைப் பார்ப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யம். நாம் படிக்கும் பகுதிகள் மட்டுமல்லாது, படிக்காத பகுதிகளுக்கு போடப் பட்டிருக்கும் ஓவியங்களைக் கூட ரசிப்போம் நாம்.

அந்தக் காலத்தில் தேவன், சாவி  கதைகளுக்கு கோபுலு படம், சுஜாதா கதைகளுக்கு ஜெ படம், சாண்டில்யனுக்கு லதா, அப்புறம் சிறுகதைகளுக்கு மாருதி, ராமு, வர்ணம், வினு.....

போடப் படும் ஓவியம் கதை படிப்பவர்களுக்கு அந்தக் காட்சியை கண்ணில் காட்ட வேண்டும். நிறைய ஓவியங்கள் அப்படித்தான். அப்போதெல்லாம் ஓவியர்கள் வெளியாகப் போகும் அந்த வாரப் பகுதியையோ
, குறிப்பிட்ட கதை / கட்டுரையையோ முழுதும் படித்து விட்டு, அந்த உணர்வுகளை உள்வாங்கி ஓவியம் போடுவார்கள்.

இப்போது கொஞ்சம் அவசரம் போலும். கடைசி வார விகடனில் 'நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதைகள்' வரிசையில் எஸ்ரா எழுதிய 'ஓலைக் கிளி' சிறுகதை.

கதையில் வரும் வரிகள்...   ".....படிகளில் இறங்கி முன் கேட்டை நோக்கிப் போனபோது பிங்க் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண்..."   

இங்கு இந்த வரி போதும். கொஞ்சம் பொறுத்து வரும் வரிகளில், "..... வீட்டுக்குள் வந்த அவர்கள் இருவரும் சோபாவில் உட்காராமல் ஷோகேஸை ஒட்டிய தரையில் உட்கார்ந்து கொண்டார்கள்.... 'அவங்களுக்குக் காபி கொடு' என்றபடியே பரமன் அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தான்."  இந்த வரிகளைப் படித்து விட்டு ஓவியத்தைக் கண்கள் மேய்ந்தபோது...
                                            
                                     
படத்தில் பெண் பிங்க் நிற சுடிதார் அணிந்திருக்கிறா
ளா? இவர் நாற்காலியிலா அமர்ந்திருக்கிறார்?!!

இந்தச் சிறுகதை பற்றியும் ஒரு விஷயம்.
படித்தபோது தோன்றிய ஒன்றைச் சொல்ல வேண்டும். முன்னாள் ரௌடி ஒருவன், அந்நாளையச் சிறுவன், இந்நாள் மருத்துவர் ஒருவரிடம் தன பெண் படிப்புக்கு உதவி என்று சொல்லி ரூபாய் வாங்கிப் போவதாகக் கதை. ஆனால் அது பொய். ஏமாற்றி விட்டானா, என்றால் இல்லை. போலீசுக்கு பயந்து ஓடிய ஓர் நாளிரவில் ஒளிந்துகொள்ள இடம் தந்த வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடக்க உதவி.  சில நாட்களுக்குப் பின்னர் ஒரு கடிதம் மூலம் உண்மையை இவர்களுக்கு உரைக்கும் அந்த ரௌடி,  நன்றி சொல்லி அழுத அந்தப் பெண்ணைப் பற்றி எழுதும் போது வரும் வரிகள் படிக்காத முரட்டு ரௌடி எண்ணத்தில் இல்லாமல் இலக்கியத் தரத்தில் இருக்கிறது.  எஸ்ரா  ரௌடியின் எழுத்துகளை சாதாரண வரிகளில் காட்டி விட்டு, பின்சிந்தனையாக அந்த வரிகளைக் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

ஓவியங்கள் பற்றிப் பேசும்போது ரசித்த ஓவியம் ஒன்று இதே விகடனில் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்' தொடர்கதைக்கு ஓவியர் வரைந்த ஓவியம். அறை
வாங்கும் பெண்ணின் வலிமிகு முகம், வர்ணனைகளுக்குத் தகுந்தாற்போல் காதட்டி அறுந்து பறப்பது...

                                                                          
 
தினமணிக் கதிரில் வந்திருக்கும் ஒரு சிறுகதைக்கு வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தை வரைந்திருப்பது ஜெ என்பது நம்ப முடியவில்லை. வேறு 'ஜெ' யோ....!



கொஞ்ச நாள் முன்பு விகடனில் வந்த ஒரு, ரசித்த துணுக்கு!
                                          


கருப்பு - கறுப்பு வித்தியாசம் தெரியுமோ? நான் சமீபத்தில் படித்துத் தெளிந்தேன்!

5.1.13

பாசிட்டிவ் செய்திகள் 30/12/12 முதல் 5/01/13 வரை


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

=======================================================================


1) மணல் கொள்ளையரை வேட்டையாடும், சுடலைக்கண்ணு:  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள, அனவரதநல்லூர் கிராமம் தான், என் சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்திருக்கேன். எனக்கு, 50 ஏக்கர் நிலம் இருக்கு. காலங்காலமாக விவசாயம் செய்திட்டிருக்கோம்.

முத்தாலங்குறிச்சியில், 2005ல் மணல் குவாரி அமைக்க, அரசு அனுமதி கொடுத்தது.  அதோடு நிற்கவில்லை; பக்கத்தில் இருக்கிற கிராமம் முழுவதும், 20, 25 அடி ஆழத்தில் தோண்டி மணல் எடுத்தனர்.இதுகுறித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தும் பலனில்லை.மதுரை கோர்ட்டில் மனு கொடுத்து, ஆதாரங்களை சேகரிக்க, கேமராவை வாங்கி, இரவும் பகலும், வயல்களில் பதுங்கி இருந்து, போட்டோ எடுத்தேன். ஆதாரங்களை வைத்து, கோர்ட், முத்தாலங்குறிச்சி குவாரியை மூட உத்தரவிட்டது. இது தான், என் முதல் வெற்றி.

இதைப் போல், மற்ற ஊரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம், எனக்கு இருந்தது.இரண்டு பொக்லைன் மட்டும் பயன்படுத்த வேண்டும்; 1 மீட்டர் ஆழத்துக்கு மேல் அள்ளக் கூடாது; காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தான் ஓட்டணும்; ஆற்றுக்குள் தடம் போடக் கூடாது என, கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது, எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.
திருச்சியில், 20 கி.மீ., தூரத்திற்கு, ஆற்றுக்குள் கிராவல் ரோடு போட்டிருந்தனர். ரோட்டை அகற்ற, மனு போட்டு, உத்தரவு வாங்கினேன்.தாமிரபரணியை விட, காவிரி மணல் கொள்ளை அதிகம். கரூர் முதல், நாகப்பட்டினம் வரை, காவிரி கரையிலேயே, 10 நாட்கள் கண்காணித்தேன். ஒவ்வொரு குவாரியிலும், திருவிழா கூட்டம் போல், 20, 30 பொக்லைன்கள் நின்றன.இதைத் தடுக்க, அரசு உத்தரவு பெற்ற குவாரிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக, லிஸ்ட் எடுத்தேன். கையில் தூக்கு சட்டி, அதற்குள் கேமரா வைத்து, போட்டோ எடுப்பேன்.உள்ளூர் மக்கள் துணையுடன், 43 குவாரிகளுக்கும் ஆதாரத்தை சேகரித்தேன்.

"காவிரி நீர்வள ஆதார அமைப்பு' உருவாக்கி, அதன் மூலம் கோர்ட்டுக்கு போனேன். வெற்றி கிடைத்தது. இதையடுத்து, மக்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தினர். பணம் தரவும் முன்வந்தனர்.எனக்கு, பணம் முக்கியம் இல்லை. மணல் என்பது, இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் சொத்து; அதை அழிய விடக் கூடாது. தினமலர் மற்றும் விகடன். விகடனில் இவரின் விளக்கமான கட்டுரை அவசியம் படிக்கப்பட வேண்டியது.

2) பெற்றோரே தொழுநோய் காரணமாக வீட்டை விட்டு துரத்திய நிலையில் ரயில் நிலையத்
தில், ஓரத்தில் தங்கி, தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை உண்டு காலம் கழித்து வந்த ரமேஷ் என்பவரை, தாண்டிச் செல்லும் பொதுமக்கள் யாரும் சீந்தாத, தீண்டாத நிலையில், அவரைத் தூக்கி மடியில் வைத்து உணவூட்டி, தங்கள் சேவை இல்லம் அழைத்துச் சென்று குணமாக்கி, மாநகராட்சியில் வேலை பார்க்க வைத்து, திருமணம் செய்வித்தும் சேவையாற்றுகிறார் சகோதரி மேரி.                                             பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளியில் அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஓரு தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தால் 77ம் ஆண்டு துவங்கப்பட்டு, தொழு நோயாளிகளும் வந்துவிட, அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட, சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும் இந்த வேண்டுகோள் கடிதம் கிடைக்க, அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார், இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார்.  அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
 இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர்களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார், பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.  இப்போது 75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அவரை பொறுத்தவரை "அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.

3) பள்ளிக்கல்வி துறை சார்பில், கோவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்களின், "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்பு, முதல் பரிசை தட்டிச் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து, 93 பள்ளிகள் சார்பில், 96 வகையான அறிவியல் சார்ந்த படைப்புகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் பாலமுருகன், பாசில் தயாரித்த, "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது.
                               "இந்தோ - இலங்கை மின் திட்டம்' ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை

 பள்ளிக்கல்வி துறை சார்பில், கோவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்களின், "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்பு, முதல் பரிசை தட்டிச் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து, 93 பள்ளிகள் சார்பில், 96 வகையான அறிவியல் சார்ந்த படைப்புகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் பாலமுருகன், பாசில் தயாரித்த, "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. 
இதுகுறித்து இவர்கள் கூறியதாவது: இயற்கை முறையை பயன்படுத்தி, எவ்வாறு மின் உற்பத்தி செய்வது' என்ற தலைப்பை தேர்வு செய்தோம். இன்றைய சூழலில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில், தொழிற்சாலைகளை துவங்க, பல நாடுகள் முன் வந்துள்ளன.

100 அடிக்கு ஒரு காற்றாலை:

இந்நிலையில், நமக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது மின்சாரம். மின் உற்பத்திக்கு, இந்தியா பல திட்டங்களை வகுத்து வந்தாலும், பற்றாக்குறை தொடர்கிறது. இதை சரிசெய்ய உருவாக்கப்பட்டதே,"இந்தோ- இலங்கை மின் திட்டம்'. இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் கோடியக்கரை- இலங்கைக்கு இடையே (18 கடல் மைல்) கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால், முதல்கட்டமாக பாலத்தின் பக்கவாட்டில், 100 அடிக்கு ஒரு காற்றாலை வீதம், இருபுறமும் தலா 300 காற்றாலைகள் நிறுவ வேண்டும். ஒரு காற்றாலை மூலம் 100 "மெகாவாட்' வரை, மின்சாரம் தயாரிக்கலாம். 300 காற்றாலைகள் மூலம், மொத்தம் 60 ஆயிரம் மெகாவாட் வரை, மின்சாரம் தயாரிக்க முடியும். 

இது "பாலமாக' அமையும் :

இரண்டாம் கட்டமாக, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், சோலார் பேனல்களை (தகடுகள்) பொருத்தி, அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். மூன்றாம்கட்டமாக, பாலத்தின் கான்கிரீட் தூண்களில் அமைக்கப்படும் "டைடல் வேவ் எனர்ஜி' மூலம் கடல் அலைகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோன்ற திட்டம் உருவாக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மின் தட்டுப்பாடு என்ற பிரச்னையே இருக்காது. இந்தியா- இலங்கை நட்புறவுக்கு, இது "பாலமாக' அமையும். இந்த திட்டத்தின் மாதிரி அமைக்க, ஒரு மாதம் ஆனது. பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம், முதல்வர் சகாயமேரி, ஆசிரியர் ஜோசப் ஆகியோர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர். மாநில போட்டியில் முதலிடம் பெற்றதால், ஜன., 20 ல் கர்நாடகாவில் நடைபெறவுள்ள, தென்னிந்திய அளவிலான கண்காட்சியிலும் பங்கேற்க தயாராகி வருகிறோம், என்றனர்.                                           
இதுகுறித்து இவர்கள் கூறியதாவது: இயற்கை முறையை பயன்படுத்தி, எவ்வாறு மின் உற்பத்தி செய்வது' என்ற தலைப்பை தேர்வு செய்தோம். இன்றைய சூழலில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில், தொழிற்சாலைகளை துவங்க, பல நாடுகள் முன் வந்துள்ளன.
100 அடிக்கு ஒரு காற்றாலை:
இந்நிலையில், நமக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது மின்சாரம். மின் உற்பத்திக்கு, இந்தியா பல திட்டங்களை வகுத்து வந்தாலும், பற்றாக்குறை தொடர்கிறது. இதை சரிசெய்ய உருவாக்கப்பட்டதே,"இந்தோ- இலங்கை மின் திட்டம்'. இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் கோடியக்கரை- இலங்கைக்கு இடையே (18 கடல் மைல்) கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால், முதல்கட்டமாக பாலத்தின் பக்கவாட்டில், 100 அடிக்கு ஒரு காற்றாலை வீதம், இருபுறமும் தலா 300 காற்றாலைகள் நிறுவ வேண்டும். ஒரு காற்றாலை மூலம் 100 "மெகாவாட்' வரை, மின்சாரம் தயாரிக்கலாம். 300 காற்றாலைகள் மூலம், மொத்தம் 60 ஆயிரம் மெகாவாட் வரை, மின்சாரம் தயாரிக்க முடியும்.

இது "பாலமாக' அமையும் :

இரண்டாம் கட்டமாக, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், சோலார் பேனல்களை (தகடுகள்) பொருத்தி, அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். மூன்றாம்கட்டமாக, பாலத்தின் கான்கிரீட் தூண்களில் அமைக்கப்படும் "டைடல் வேவ் எனர்ஜி' மூலம் கடல் அலைகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோன்ற திட்டம் உருவாக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மின் தட்டுப்பாடு என்ற பிரச்னையே இருக்காது. இந்தியா- இலங்கை நட்புறவுக்கு, இது "பாலமாக' அமையும். இந்த திட்டத்தின் மாதிரி அமைக்க, ஒரு மாதம் ஆனது. பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம், முதல்வர் சகாயமேரி, ஆசிரியர் ஜோசப் ஆகியோர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர். மாநில போட்டியில் முதலிடம் பெற்றதால், ஜன., 20 ல் கர்நாடகாவில் நடைபெறவுள்ள, தென்னிந்திய அளவிலான கண்காட்சியிலும் பங்கேற்க தயாராகி வருகிறோம், என்றனர்.

4) உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6 ஆயிரம் செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீடுகளில் மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியன் படித்துள்ளார். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மின் தட்டுப்பாட்டை போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்காததால் அதையும் தாங்களே உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.
                                                    
இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி., பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினார்கள். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது.

                                       
உளுந்தூர்பேட்டை இளைஞர்கள் சாதனை: வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்

தமிழகத்தில் தற்போது மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களின் மின்சார தேவைகளுக்கு ஜெனரேட்டர் மற்றும் “இன்வெட்டர்” ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் மின்சாரத்திற்கு பதிலாக மண்எண்ணை விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6 ஆயிரம் செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீடுகளில் மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியன் படித்துள்ளார். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மின் தட்டுப்பாட்டை போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்காததால் அதையும் தாங்களே உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி., பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினார்கள். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது.

அதிலிருந்து ஒரு மின் கம்பி கொண்டு வந்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. அதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின்கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்தி வருவதால் இந்த மாதம் ரூ. 200 மட்டுமே மின்கட்டணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இன்வெட்டர், ஜெனரேட்டர், சோலார் என பல்வேறு சாதனங்களை வாங்கினால் அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலையில் வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகின்றார்கள். இதை அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தலாம் என கூறுகிறார், ராமு.

மேலும் கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கிறார். இதற்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் இதை அதிக அளவு தயார் செய்ய முடியவில்லை என்றும் இதற்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் செய்து கொடுத்தால் அதிக அளவு உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார்.

சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.
அதிலிருந்து ஒரு மின் கம்பி கொண்டு வந்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. அதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின்கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்தி வருவதால் இந்த மாதம் ரூ. 200 மட்டுமே மின்கட்டணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இன்வெட்டர், ஜெனரேட்டர், சோலார் என பல்வேறு சாதனங்களை வாங்கினால் அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலையில் வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகின்றார்கள். இதை அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தலாம் என கூறுகிறார், ராமு.

மேலும் கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கிறார். இதற்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் இதை அதிக அளவு தயார் செய்ய முடியவில்லை என்றும் இதற்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் செய்து கொடுத்தால் அதிக அளவு உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார்.

சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர். (முகநூலிலிருந்து)



5) சென்னை SSN பொறியியல் கல்லூரி மின்னியல்,மின்னணுவியல் மாணவி மாஷா நசீம். 
                        
சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரவிபுதூர்க் கடை. இவரின் தந்தை நாகர்கோவில் கருவூலத்துறையில் பணிபுரிகிறார். புதிதாக எதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு ஆரம்பமுதலே இருந்து வந்திருக்கிறது. கை நீட்டினால் தண்ணீர் வரும் டெக்னிக்கை வைத்து பர்க்ளர் அலார்ம் கருவி, 2005 இல் அதி நவீன ரயில் கழிப்பறை (தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு, புது டில்லியில் நடைபெற்ற உலகக் கழிப்பறைச் சுகாதார மாநாட்டில் அங்கீகாரம், அப்துல் கலாமின் பாராட்டு ஆகியவற்றைப் பெற்ற கண்டுபிடிப்பு), இயந்திரச் சுமை தூக்கி, புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்க மாடி ஏறும் மாணவர்கள் கஷ்டத்தை நீக்க சுமை கன்வேயர் பெல்ட், நெருப்பில்லாத முத்திரை வைப்பான் என்று பலவும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார் என்று இவரைப் பற்றிய செய்தியை அறியத் தருகிறது தினமணிக் கதிர்.


6) ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உணவகம் வைத்து, காலையே அங்கிருக்கும் வார்டுகளுக்குச் சென்று, மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களுக்கு டோக்கன் கொடுத்து விட்டு வந்து விடுகிறார். பிற்பகலில் அந்த டோக்கனைக் கீழே இவரது கடையில் காட்டி உணவு பெற்றுக் கொள்ளலாம். சாப்பாட்டின் விலை 1 ரூபாய்.
                                   
 
ஒரு நாள் இரவு 10 ரூபாய்க்கு இட்லி கேட்டு வந்து ஏமாந்துபோன ஒரு ஏழைப் பெண்ணைப் பார்த்து மனக் கஷ்டப்பட்டு இதைத் தொடங்கினாராம் வெங்கட்ராமன். இது முன்னரேயே கூட நம் 'பாசிட்டிவ் செய்திகளி'ல் சொல்லியிருக்கிறோமோ என்று சந்தேகம் வந்தாலும், தேட முயலவில்லை. மறுபடி சொன்னால் தப்பில்லை என்றும் தோன்றியது. இதை முக நூலிலிருந்து பகிர்கிறேன். இந்தக் காலத்தில் 1 ரூபாய்க்கு யாரால் இவ்வளவு தர முடியும் என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார்களாம் இவரால் பயன் பெறுபவர்கள்.

3.1.13

எம் எஸ் கோபாலகிருஷ்ணன் - எங்கள் அஞ்சலி

             
பெரிய அரசியல் பிரமுகர்கள்  காலமானால், சோக கீதமாக ஒலிபரப்பப்படுவது, இவர் இசைத்த இசைத்தட்டு. 

              
இன்று காலை காலமான திரு எம் எஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். 


              
அந்தக் காலத்து முன்னணிப் பாடகர்கள் பலருக்கும் வயலின் வாசித்துள்ளார்.  

         
           
எம் எஸ் கோபாலகிருஷ்ணனின்  வயலின் நாதம், இராக ஆலாபனை, ஸ்வரம் இசைக்கின்ற பாணி எல்லாமே சிறப்பான அம்சங்கள்.
              
அன்னாருக்கு எங்கள் அஞ்சலி.  
                       

பஸ் டே, எஸ் வி சேகர், கேபிள் டிவி, - வெட்டி அரட்டை

          
ஒன்றாம் தேதி முதல் திடீரென கேபிள் டிவிக்காரர்கள் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்கள். செட் டாப் பாக்ஸ் இருந்தால்தான் இனி இணைபபாம். அப்படியும் வேறு சிலருக்குக் கொடுத்திருக்கிறீர்களே என்று கேட்டபோது, அவர்களெல்லாம் செட் டாப் பாக்ஸுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்றார்கள்.
                                                      

அரசாங்கமே கேபிள் டிவி தொழிலை நடத்தக் கூடாது என்று டிராய் சொன்னபின் இந்த செட் டாப் பாக்ஸ் பிசினஸ் எல்லாம் என்னவென்று புரியவில்லை. டிஷ் டிவிக்களில் எது நல்ல கனெக்ஷன் என்று ஆராய்ந்து வருகிறேன். டாடா ஸ்கை வாங்குங்க என்று சிலரும், ஏர் டெல் என்று சிலரும் சொல்ல, சன் டைரக்ட் வாங்கிடுங்க என்று சிலரும் சொல்கிறார்கள்! SCV இடமே மறுபடி மாட்டத் தயக்கமாக இருக்கிறது. மதிக்கவே மாட்டார்கள். ஏதோ ஒன்று... பத்தாம் தேதிக்குள் வாங்கினால் 1000 ரூபாய் ஸ்க்ராட்ச் கார்ட் வாங்கி  விஸ்வரூபம் பார்த்து விடலாம்! 20 பேரிடம் 100, 100 ரூபாய் என்று கலெக்ட் செய்து லாபம் கூடப் பார்த்து விடலாம்! :)))

நடுவில் கலைஞர் டிவி உட்பட பல சேனல்களில் தொகுப்பாளினிகள் மற்றும் தொகுப்பாளர்கள் செய்யும் தமிழ்க் கொலை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் ழ, ல, ள, உச்சரிப்பைச் சரியாகச் சொல்வோர் என்று பார்த்தால் பத்து சதம் கூடத் தேறுவார்களா என்பது சந்தேகமே என்று தோன்றுகிறது. பேசுகிறேன் என்று அவர்கள் புரியும் தமிழ்க்கொலையை 'மிஸ் தமிழ்த்தாய்' மன்னிக்கட்டும்!


ஒரு தலைப்பில், அல்லது ஒரு கருவில் படம் வெற்றியடைந்தால் அதே பாணியில் பல படங்கள் வருமே, அது போல இது கற்பழிப்பு சீசன் போலும். இந்தியா முழுதும் தினம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது இந்தக் குற்றம். செய்தியைப் படிக்கும் 100 பேரில் ஒருவருக்கு, அல்லது 1000த்தில் ஒருவருக்கு தானும் அந்தக் குற்றத்தை நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என்று தோன்றும் போலும். 

குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பது இவர்களுக்கு தைரியம் அளிக்கிறது போலும். செய்தித் தாள்களில், டிவிக்களில் இந்தச் செய்தி வராமல் நிறுத்தவும் முடியாதே... இந்தச் சீரழிவுகளுக்கு இந்தக் காலத் திரைப்படங்களும் டிவி சீரியல்களும் கூடக் காரணமாயிருக்கலாம். வயது வித்தியாசமின்றி, 14 வயதுச் சிறுவன் 4 வயதுக் குழந்தையை, இன்னொருவன் 45 வயதுப் பெண்மணியை, கல்லூரி மாணவியை, பள்ளி மாணவியை என்று எல்லாத் தரப்பிலும் இந்தச் செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் வயிற்றில் ஒவ்வொரு நிமிடமும் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கும் இந்நிலை என்று மாறுமோ? 

மாறுமா? அதற்கு நாமும் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து நம் பத்திரத்தை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பஸ் டே கொண்டாட்டங்களைத் தடை செய்வது போல புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் தடை செய்தால் தேவலாம். 
                                                    
பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறல்கள் கஷ்டத்தைக் கொடுக்கின்றன. நீங்கள் ஏன் அங்கு போகிறீர்கள் என்று கேட்கலாம். வேறு வேலையாக நாம் அந்தப் பக்கம் செல்வது சில சமயம் கட்டாயமாகி விடும்போது இவற்றைத் தவிர்க்க முடிவதில்லை.

எஸ் வி சேகர் நாடகம் 'காதுல பூ' வாணி மகாலில். சிரிப்பு வரவில்லை. ஆனாலும் பின்னால் ஒருவர் விழுந்து விழுந்து சிரித்து அமோக ஆதரவளித்துக் கொண்டிருந்தார். முதல் முறை பார்க்கிறார் போலும்!
நீ.....ண்ட நாட்களுக்குப் பின் நாடகம் பார்த்த அனுபவம். 
                                              
இதற்கு முன்னால் பற்பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் மெரீனாவின் 'தனிக்குடித்தனம்', 'மாப்பிள்ளை முறுக்கு' பார்த்தது. கூத்தபிரான், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்தது. ஆர் எஸ் மனோகர் நாடகங்கள் பார்க்க முடியாமல் போனது வருத்தம்தான். எஸ் வி சேகர் நாடகக் கலெக்ஷனில் என்னென்ன நல்ல காரியங்கள் செய்கிறோம் என்று சொன்னபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

                   

1.1.13

ஃப்ளூட் மாலி

                                                  
பொதுவாழ்வில் ஒரு கலைஞர் ரொம்பப் பிசுக்காரம் செய்துகொண்டால் பொதுமக்கள் என்ன செய்வார்கள்? அவர்களை மதிக்கவே மாட்டார்கள், பகிஷ்காரம் செய்து விடுவார்கள். ஆனால் இவர் செய்த அத்தனைக் கோமாளித்தனங்களையும் பொறுத்துக் கொண்டு, 'இப்படித்தான் இவர், இதையும் மீறியது இவரின் திறமை' என்று தெளிந்து, இவர் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு இவர் இஷ்டத்துக்கு வளைந்து இவரின் கலையை ரசித்தவர்கள் தமிழக மக்கள் மற்றும் சக கலைஞர்கள்.
                                                                
அவர்... புல்லாங்குழல் மாலி. T R மகாலிங்கம். சமீபத்தில் இவர் பற்றிப் பத்திரிகைகளில் படித்த சில நினைவுகள்.


மியுசிக் அகாடெமியில் இவர் வந்து கச்சேரி செய்ய ஆரம்பிக்குமுன் ரசிகர்களில் ஒருவரைக்   வெளியேற்றினால்தான் தான் கச்சேரி செய்வேன் என்று சொல்லி விட்டாராம். அவர் சொன்னால் சொன்னதுதான். அந்த ரசிகர் 'தான் ஏன் வெளியில் செல்ல வேண்டும்' என்று அடம் பிடிக்க, மற்ற ரசிகர்கள் வேறு வழியில்லாமல், 'நீங்கள் ஒருவர் வெளியேறினால்தான் மற்றவர்கள் அவர் கச்சேரியை ரசிக்க முடியும், தயவு செய்து ஒத்துழையுங்கள்' என்று வேண்டிக்கொள்ள சரி என்று வெளியேறிய அந்த ரசிகர் புல்லாங்குழல் மாலியின் சொந்தத் தந்தை!


மியுசிக் அகாடமி குழுவினர் 'இவரைக் கச்சேரிக்குப் போட்டால் தலைவலி. வராமல் கழுத்தறுத்து விடுவார்'  என்று பேசிக் கொண்டதைக் கேள்விப்பட்ட மாலி, தானே வலிய அவர்களைத் தொடர்பு கொண்டு தான் வருவதாகச் சொல்ல நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவரை ஒப்பந்தம் செய்து விட்டு, அவரைக் கண்காணிக்க ஒரு புகழ் பெற்ற மிருதங்க வித்வானையும் ஏற்பாடு செய்து 'உங்கள் பொறுப்பு' என்று விட்டார்களாம். அவரும் தினமும் மாலியைச் சந்தித்து உருவேற்றிக் கொண்டேயிருக்க, 'சரி, சரி' என்று சொல்லிக் கொண்டிருந்த மாலி கச்சேரி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கையில் காணாமல் போனாராம். எவ்வளவு முயற்சித்தும் அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் போக வேறு கச்சேரியை ஏற்பாடு செய்யவும் முடியாமல் - ரசிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் - பணம் திருப்பித் தரப் பட, மக்கள் கலைந்து செல்வதை சற்றுத் தள்ளி ஒரு கடையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாராம் மாலி!  'ஏன் இப்படிச் செய்தீர்கள், நியாயமா?' என்று அப்புறம் அவரைக் கேட்டபோது அவர், 'இல்லை, இல்லை, அவர்களுக்குத் தெரியும், நான் ஒத்துக் கொண்டாலும் வரமாட்டேனென்று... கேட்டுப் பாருங்கள். பொதுக்குழுவிலேயே பேசிக் கொண்டார்களே..' என்றாராம்!

இன்னொருமுறை வழக்கம் போல, 'தான் நிச்சயம் வருவேன்' என்று சொல்லியிருக்கிறார். சபாக்காரர்கள் அவர் காரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க கம்பளி போர்த்தி, மஃப்ளர் கட்டி அவர் உள்ளே நுழைய முயல, காவலாளி டிக்கெட் கேட்டுத் திருப்பியனுப்ப, வரவில்லை என்றதும் கோபப் பட்டுக் கொந்தளித்து அவரைத் தொடர்பு கொண்டபோது, நடந்ததைச் சொல்லி, 'நான் வந்தேன் உங்கள் காவலாளிதான் உள்ளே விடவில்லை' என்று சொல்ல, நொந்து போனார்களாம் சபாக்காரர்கள்.

இன்னொருமுறை இவர் காரைப் பார்த்ததும் டிக்கெட் வாங்கலாம் என்று காத்திருந்து ரசிகர்கள் இவர் காரைக் கண்டதும் ஓடிச்சென்று டிக்கெட் வாங்கி முண்டியடித்து உள்ளே ஓட, இவரோ காரை விட்டு இறங்காமலே 'உடல்நிலை சரியில்லை' என்று சொல்லி அவர் கிளம்பிப் போக நொந்து போனது இம்முறை ரசிகர்களும்!

இப்படி பெரிய சபாக்காரர்களை இவர் இம்சை செய்தாலும் பெரம்பூர் அயனாவரம் போன்ற சிறிய சபாக்களில் ஒருநாளும் இவர் இப்படிச் செய்ததில்லையாம்.

இவ்வளவு இருந்தும் ஒருமுறை 'மாலி வந்து விட்டார், வாசிக்கத் தொடங்கி விட்டார்' என்று ரசிகர் ஒருவர் மூலம் தகவல் கே பி சுந்தராம்பாளுக்குத் தெரிவிக்கப் பட, அவரும், அப்புறம் எம் எஸ் சதாசிவம் என்று அனைவரும் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்து முழுக் கச்சேரியை ரசித்துச் சென்றதும்,

உடைந்த புல்லாங்குழலை ஒட்டிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து ஊழியர் ஒருவர் 'இதை வைத்து எப்படி இவர் வாசிக்கப் போகிறார்' என்று பேசியபோது, வித்தை குழலில் இல்லை, இந்த மனிதரின் மூச்சில் இருக்கிறது' என்று சொல்லிய இன்னொரு ஊழியரின் பேச்சில் இருந்த நியாயத்தை அன்றைய கச்சேரியில் கண்டாராம் இந்த ஊழியர்.

இன்னொருமுறை தஞ்சாவூர் ஆனந்தபவனம் உணவகத்தில் தங்கியிருந்த மாலி அதிகாலையில் சாதகம் செய்யத் தொடங்கி, வாசித்துக் கொண்டே போனதை அங்கிருந்த ஊழியர்கள், அருகிலிருந்த ரிக்ஷாக்காரர்கள், போன்ற எளியோர்கள் மணிக்கணக்கில் ரசித்தனராம்.

'இப்படி கச்சேரியை ஒத்துக் கொண்டு ஒத்துக் கொண்டு கேன்சல் செய்கிறீர்களே, இது நியாயமா' என்று நண்பர் ஒருவர் மாலியைக் கேட்டபோது மாலி சொன்னாராம், 'ஒத்துக் கொள்ளாமல் எப்படிக் கேன்சல் செய்வது?'