வியாழன், 28 ஜூன், 2018

ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..



பாபு, ராஜம், ரெங்கண்ணா, வைத்தி, பாலூர் ராமு, பார்வதி, அப்புறம் யமுனா....  ஏன் தங்கம்மாவையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் பெயர்கள் சொல்லும்போதே இந்தக் கதை எது என்று தெரிந்திருக்கும்.  

கல்கியில் வந்த தொடர்கதையா?  முன்னர் பல வருடங்களுக்கு முன்னால் படித்தபோது இருந்த உணர்வுகள் வேறு..   பல வருடங்களுக்குப் பின்னான மீள்வாசிப்பில் வரும் எண்ணங்கள் வேறு.  இது முறையா?  சரியா?  

என் அப்பாவுடன் கூட வேலைசெய்த நண்பர் ஒருவர் அவரைவிட பத்து வயது அதிகமுள்ள பெண்மணியை மணந்திருந்தார். ஏன், டெண்டுல்கர் கூட தன் மனைவியை விட ஐந்து வயது இளையவர் என்று படித்த நினைவு.

கொஞ்சம் சங்கீதம்.  கல்லூரிக்கால நிகழ்வுகள் ஆங்காங்கே கொஞ்சம்..  அந்த அறியாப்பருவத்தில் ராஜம், பாபு இருவரும் கொஞ்சம் பெரிய மனிதத்தனமாய் வித்தியாசமாய்.  ராஜம் அறிவு ஜீவி.  பாபு திறமைசாலி.  பாபுவுக்கு இருக்கும் சிறுபிள்ளை இமேஜ் சீக்கிரமே உடைகிறது. யமுனாவிடம் மனதைச் சொல்லும் வேகம்..  அப்புறம் விலகி நிற்கும் நேரங்கள்.

யமுனா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்து சரணடையும் இடத்தில் தொடர்ந்து படிக்க மனதைத் தயார் செய்து கொள்ள எனக்கு இரண்டு நாட்கள் இடைவெளி தேவைப்பட்டது.  இந்தக் கதை படமாகவும் வந்தது.  படம் பார்க்கவில்லை.  படத்தில் இதை ஜீவனுடன் எடுத்திருக்க முடியாது.

விடுதலைக்கு முன்னால் நடப்பதாய் கதை.  தஞ்சை மாவட்டத்தின் உள் ஊர்களுக்கெல்லாம் பஸ் வருகிறது.

அவரது எழுத்தில் சில..

-... கூட ஒரு பெண் இருபது வயதிருக்கும், இளமையின் கோலாகலத்துடன் பொலிந்து கொண்டிருந்தாள்.  கழுத்திலும், கன்னத்திலும் யௌவனம் நிகுநிகுத்தது.

- வாழைக்குருத்து போல- பறித்து இரண்டு நாளான - அவள் உடல் பொலிந்து கொண்டிருந்தது.  அப்பால் இருந்தது புதிய குருத்தாக பளபளத்தது.

- அந்த உயரம், வளைவு, சரிவு, குழைவு, மென்மை எல்லாம் பட்டும் பருத்தியும் போட்ட மறைவைக் களைந்து வந்து நிற்கின்றன.

- அந்தப் பாட்டி எவ்வளவு மொத்தம்! பெரிய சத்துமாப் பைகள் மாதிரி ஆடின மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே வந்தாளே...

- ... கண்ட இடத்தில் கண்டதை வாங்கி தின்னக் கூடாது.  ஆகாரம்தான் மனதை உருவாக்குகிறது.  ஆகாரத்திற்குத் தகுந்தாற்போல் மனதும் மாறும்.

-....விழுந்து வணங்குவது போல ஒரு கூண்டு வண்டி அவிழ்த்து விடப் பட்டிருந்தது.

-...."பக்தி என்பது பேரமில்லை.  'நான் உன்னை நெனைக்கிறேன்; நீ என்ன கொடுக்கிறே?  பணம் கொடுக்கிறியா?  சக்தி கொடுக்கிறியா?  ஆபத்திலேர்ந்து காப்பாத்தறியா?'  இப்படிக்கு கேட்கறதுக்காக பக்தியில்லே.  அப்படிக் கொடுக்கறதுன்னு நாம் நெனச்சிண்டிருக்கற தெய்வம் நாம்தான்.  நாம் சாதாரண மனுஷனா இருந்தாலே போதும்.  அதாவது மாயசக்திகளெல்லாம் நமக்குத் தேவையில்லை.  ஆனால் மனுஷனா இருக்கிறபோது உயர்ந்த மனுஷனா இருக்க பாடுபடணும்.... உயர்ந்த மனுஷன் எப்படியிருப்பான்னு கேட்டா போகப்போகத் தெரியும்.  நீ ஏறஏற உயர்ந்த மனுஷன் மேலேமேலே போயிண்டிருப்பான்...".

-  அந்நிய ஸ்வரங்களை இப்படிச் சேர்த்துக் கலப்பு மணம் செய்கிறாரே,,,  சீர்திருத்த நாயனக்காரர் போலிருக்கிறது!..


பெரும்பாலானோர் படித்த கதை என்பதால் கதையை விவரிக்கத் தேவை இல்லை.  

புரியாத சில வார்த்தைகள் கும்டா, கானோ விடுவது, (ஓடம் என்று நினைக்கிறேன்) 


======================================================================================================


தினமலர் பொக்கிஷம் பகுதியிலிருந்து... நிஜமான பொக்கிஷம்.


மணிமாறன்

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர், இங்கே ஓவிய கல்லூரி படிப்பை முடித்து விட்டு இது தொடர்பான உயர்படிப்பிற்காக ஐதாராபாத்தில் இருப்பவர்.

ஓவியம் வரைவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.

மணிமாறன் சென்னை வந்திருந்த போது இவரது 94 வயது தாத்தா நமசிவாயம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். மனைவி லட்சுமியம்மாள்(86)அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஏழு தலைமுறையை பார்த்துவிட்ட நமசிவாயம் நடமாட முடியாமல் படுக்கும் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர், இயங்கியவர். சிறு சிறு வியாபாரம் செய்தவர், கடைசியில் உறவினர் ஒருவரின் பிரின்டிங் பிரஸ்சை பார்த்துக் கொண்டார்.

இவரது உயிரே அந்த பிரின்டிங் பிரஸ் என்று சொல்லலாம். பிரஸ்சை திறப்பதும் மூடுவதும் இவரது பிரதான வேலை. பிரஸ்சின் சாவியை கையில் எடுத்து விட்டாலே இவருக்கு தனி பலம் வந்துவிடும்.

வேதனை கலந்த முயற்சி:
இப்படிப்பட்டவர் முதுமை நோய் காரணமாக படுத்த படுக்கையில் விழுந்து விட்டார், எப்படியும் இரவிற்குள் இறந்துவிடுவார் என்ற நிலையில் அந்த வீடும் தாத்தாவின் அறையும் ஒருவிதமாக சோக சூழலுக்குள் அமிழ்ந்து கிடந்தது. நல்லபடியாக அவரது ஜீவன் அடங்க வேண்டுமே என வீட்டில் உள்ளவர்கள் பிரார்த்திக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தன்னோடு வாழ்ந்த கணவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னைவிட்டு பிரிய போகிறார் என்ற நிஜத்தை தாங்கமுடியாமல் அருகில் இருந்தபடி அழுது கொண்டிருந்தார் லட்சுமியம்மாள்.

அங்கு இருந்த மணிமாறனுக்கு அங்கு நிலவிய ஒரு அழுத்தமான சோகத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. அது சரியா? தவறா? என்றெல்லாம் மனதிற்குள் ஒரு பக்கம் ஒடினாலும், அந்த எண்ணத்தை எல்லாம் தள்ளி விட்டு தாத்தாவின் கடைசி தருணத்தை கேமிராவில் பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.

இதை கறுப்பு வெள்ளையில் பதிவு செய்வது, யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது, கேமிராவை கண் அருகே கொண்டு செல்லாமல் செட்டிங் செய்து கொண்டு படம் எடுப்பது, என்று முடிவு செய்து அங்கு இருப்பவர்களுக்கு தெரியாதபடி படம் எடுக்க ஆரம்பித்தார்.

நெகிழ வைத்த காட்சிகள்:
சிலர் வந்து தாத்தாவின் நாடியை பிடித்துவிட்டு, கண்ணைப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கவிட்டு சென்றனர். பாட்டி மட்டும் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாயில் கஞ்சியை ஊற்றினார், கஞ்சி வாய்க்குள் செல்லாமல் வழிந்தது.



சரி பால் கொடுக்கலாம் என்று பாட்டி எழுந்திரிக்க முயற்சித்த போது தாத்தா தனது மெலிதான கையை அசைத்து பாட்டியின் புடவை தொட்டு லேசாக இழுத்தார், இந்த நேரத்தில் என்னை விட்டு எங்கேயும் போய்விடாதே என்று தாத்தா தனது விரல்மொழியால் சொல்வது போல பட்டது.

பாட்டியும் அந்த சைகையை உணர்ந்தவர் போல இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தார், பாட்டியின் கண்களில் அளவிடமுடியாத சோகம், பெருகிய கண்ணீரை துடைக்ககூட தோணாமல் தாத்தாவை வைத்த கண்வாங்காமல் பார்த்தவாறு இருந்தார்.

தாத்தாவிடம் எந்த அசைவும் இல்லை, ஆனால் தொண்டைக்குழி சன்னமாக ஆனால் சீரில்லாமல் ஏறி இறங்குவதை வைத்து ஜீவன் போராடுகிறது என்பதை உணரமுடிந்தது.

அவர் உயிராக மதித்த பிரின்டிங் பிரஸ் சாவியை பாட்டி கையில் கொடுத்ததும் உடம்பில் சின்ன அசைவு ,சாவியை கொஞ்ச நேரம் இறுக்கிப் பிடித்தவரின் பொக்கை வாயில் மெலிதாக ஒரு புன்னகை, கொஞ்ச நேரம்தான், புன்னகை மறைந்தது பிடிதளர்ந்து சாவி கீழே விழுந்தது.
அதற்கு மேல் 
மணிமாறனால் அந்த அறைக்குள் இருக்கமுடியவில்லை.

நெஞ்சைப் பிசைந்த நிஜம்:
தாத்தாவின் அந்திம காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு சில நாள் கழித்து தாத்தாவின் கடைசி தருணத்தில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் இறக்கி பார்த்தார். நேரில் பார்த்தபோது இருந்தைவிட இந்த நிழற்படத்தை பார்த்தபோது சோகத்தின் கனம் கூடியிருந்தது.

இவரது இந்த புகைப்பட முயற்சி பற்றி உடனடியாக கருத்து சொல்லமுடியாவிட்டாலும் படங்கள் நெஞ்சை பிசைந்தது மட்டும் நிஜம்.

- எல்.முருகராஜ்
  ஜூன் 22 2014





===================================================================================================


சென்ற வாரம் உறவினர் ஒருவர் திடீர் மரணம் அடைந்தார்.  குடும்பத்தை உலுக்கிய சோகம் அது.   வெளியிடத்தில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மயங்கி விழ, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது, ஸ்ட்ரோக் என்று தெரிந்தது.  மூளையிலிருந்து ரத்தம் வழிவது நிற்காமல் எல்லா நம்பிக்கைகளையும் பொய்யாக்கி  நான்காவது நாள் மறைந்தார். அப்போது தோன்றிய சில வரிகள் கீழே...

அழுதழுது 
பெரும் கூட்டத்தினருடன் 
அந்திமக் கிரியைகள் 
செய்தாலும் 
அடுத்தநாள் காலை 
அவர்கள் மட்டும் 
தனியாகத்தான் 
அந்த வீட்டில் 
இருக்கவேண்டும்.

***********************************

அத்தியந்த உறவுகளின் 
அத்தனை 
அஸ்திக் கரைப்புகளிலும் 
உடனிருந்தார்..
இப்போதும்தான் 
இருக்கிறார் 
ஆனால் 
அவரே அஸ்தியாக 
(எங்கள் மாமாக்களில் ஒருவர் அச்சமயம் சொன்னதை வைத்து எழுதியது)

**************************************

இப்போது 
நமக்குத் தெரியும் 
அவரின் பல நல்ல குணங்கள் 
முன்னாலேயே 
அவரிடம் இருந்ததுதான்.


**************************************



====================================================================================================



வீட்டில் மறுபடியும் ஒரு, இல்லை இல்லை இரண்டு புதிய விருந்தினர்கள்.  அதிரா, ஏஞ்சல், கீதா ரொம்பவே ரசிப்பார்கள்!


இரட்டை வேஷமா?  சிறு வித்தியாசம்தான்!  முதல் நாள் ஒன்று மட்டும் வந்தது.  மறுநாள் காலை கதவு திறக்கும்போது இரண்டாய் நின்று கொண்டிருந்தது!


"திறந்துட்டாங்க கதவை...  இப்போ பால் ஊத்துங்க..  இரு.. " (அது மட்டும்தான் சாப்பிட்டது)


மானிட்டரில் தெரிந்த மவுஸை துரத்துத் துரத்து என்று துரத்திய பிறகு அப்படியே ஓய்வெடுத்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறது.


=========================================================================================================













======================================================================================================









==================================================================================================

237 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா புதிய வரவுகள் பூஸார்கள் ஆஹா செம செம க்யூட்

    அந்த மிரட்டுவது அதிரடிதானே ஸ்ரீராம்

    பாவமாக உட்கார்ந்திருப்பது அவங்க செக் தானே ஏஞ்சல்தானே அது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பாருங்க அதிரடி துரத்திட்டு நீங்க என்ன போஸ்ட் போடறீங்கனு பாக்குது பாருங்க அப்புறம் சொல்லிக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ அப்படினு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  7. அந்த ரெண்டாவது படத்துல பாருங்க ஸ்ரீராம் அதிரடி என்னா மிரட்டு மிரட்டுது...எனக்கு ஊத்துங்க..ஊத்த போறீங்களா இல்லையா....அதுக்கு ஊத்தாதீங்கனு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. முதலில் உங்கள் கண்ணில் பட்டது பூஸார்தான் இல்லை கீதா?!!

    :)))

    பதிலளிநீக்கு
  9. தன் ஃபோட்டோவை ஸ்ரீராம் ஒழுங்கா போடறாரா இல்லையானு செக்கிங்க் போல ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் ஸ்ரீராம் முதலில் கண்ணில் பட்டது பூஸார்தான்!!! ஹா ஹா ஹா

    அதுவும் என்னா போஸ் பாருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சோகம் இல்லை துரை ஸார்... கண்ணதாசன் பற்றி அவர் பிறந்தநாளில் முகநூலில் பகிர்ந்ததும், தினமலர் பகிர்வும் யதேச்சையாகவே அமைந்தன. சேர்ந்துகொண்டது உறவினர் இழப்பால் ஏற்பட்ட எண்ணங்கள்.

    பதிலளிநீக்கு
  12. மூதாதையர் ஹா ஹா ஹா ஹா ஹா செம க்யூட் நா உங்க கமென்ட் பார்த்து சிப்போ சிப்பு!!!!

    கீதா

    அது சரி கீதாகாவை காணலை துரை அண்ணா வெயிட்டிங்க் காஃபிக்கு!!

    பதிலளிநீக்கு
  13. இன்னிக்கு இந்த ரெண்டு பூஸாரும் துரத்தி துரத்தி டாம் அண்ட் ஜெர்ரி தான் எபில கலக்கல் போங்க!!! இன்னிக்கு எபி அதிரும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. "என் போட்டோவை ஒழுங்கா போடறாரா" என்று நானும் எழுத நினைத்தேன் கீதா!!!

    பதிலளிநீக்கு
  15. இதோ... இப்போ டைப் செய்யும்போதும் அந்தக் குட்டிப்பூனை மானிட்டருக்கும், கீபோர்டுக்கும் நடுவே அமர்ந்து என் கைகளை விரும்புகிறது. தடவிக் கொடுக்கவேண்டுமாம். சொரசொரவென்று நக்கிக் கொடுக்கிறது!

    பதிலளிநீக்கு
  16. இந்தக் கேஜிஜே தான் அந்த சிவப்பு எழுத்துக்காரர்!!! இல்லையா ஸ்ரீராம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. மானிட்டரில் தெரியும் மவுசுடன் ரவுசு செய்கிறது!

    பதிலளிநீக்கு
  18. "என் போட்டோவை ஒழுங்கா போடறாரா" என்று நானும் எழுத நினைத்தேன் கீதா!!!//

    ஹைஃபைவ் ஸ்ரீராம்!!!

    //இதோ... இப்போ டைப் செய்யும்போதும் அந்தக் குட்டிப்பூனை மானிட்டருக்கும், கீபோர்டுக்கும் நடுவே அமர்ந்து என் கைகளை விரும்புகிறது. தடவிக் கொடுக்கவேண்டுமாம். சொரசொரவென்று நக்கிக் கொடுக்கிறது!//

    ஐஸு ஐஸு..ஸ்ரீராம்..மொட்டைமாடிய வேற மாத்திட்டேனு சொன்னீங்க...எங்கனு கண்டுபிடிக்கவா இருக்கும்!! கேர்ஃபுல்....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. // இந்தக் கேஜிஜே தான் அந்த சிவப்பு எழுத்துக்காரர்//

    இல்லை கீதா...

    பதிலளிநீக்கு
  20. மானிட்டரில் தெரியும் மவுசுடன் ரவுசு செய்கிறது!//

    ஹா ஹா ஹா ஹா கமென்ட்ரி செம ஸ்ரீராம்!!! ரசிக்கறேன் நினைச்சு நினைச்சு!! பரவால்லியே பக்கத்துல வந்து உக்காந்துருக்கே பூனை...பெரிய விஷயம்!! அதுவும் தேடி வந்து...உங்க வீட்டுக்குள்ள...எனக்கென்னவே இது நேற்றைய மொட்டை மாடி விஷய்மாதான் இருக்கும்னு தோணுது ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. முதல் செய்தி.....தி ஜானகிராமன்? தானே ஸ்ரீராம்..?

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நடுவிலேயே ஸ்ரீலங்கா சென்று புத்த தரிசனம் செய்து வந்தேன். (முத்துச்சரம்)

    பதிலளிநீக்கு
  23. செய்தினு வந்துருச்சு ஸாரி....உங்க விவரணம்....

    மணிமாறன் .....தாத்தா நிகழ்வு மனதை நெகிழ வைத்துவிட்டது. இறுதியில் பாட்டியின் கைப்பிடி, அந்தச் சாவி கொடுத்த ஒரு ஃபீல் அப்படிஎன்றால் அந்தத் தாத்தாவின் உணர்வுகள் பிரதிபலிக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. மணிமாறன் செய்தது..... அங்கு வந்த கருத்துகளே எனக்கும் தோன்றியது ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அந்த தாத்தா படம் நம்ம கதை தாத்தா பாட்டியை நினைவுக்குக் கொண்டுவந்ததா கீதா?

    பதிலளிநீக்கு
  26. இடையில் திருப்பதியும் சென்று வந்து விட்டேன்! ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  27. கண்ணதாசனின் வரிகள் யதார்த்தம்...

    கவியரசரை யார் மறப்பார்கள் எல்லோர் நினைவிலும் இருக்கிறார் என்று அவருக்குச் சொல்வது எப்படி? என்று யோசிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கண்ணதாசனின் வரிகள் யதார்த்தம்தான்

    பதிலளிநீக்கு
  29. ஜானகிராமன் எழுத்து. மோகமுள், பாபு,யமுனா.
    இன்று நான் படித்த கதை ஒன்றில் பாலி என்ற திருமணமான பெண்ணுக்கும், அவள் கண்வரின் தோழனுக்கும் உண்டான உறவு உடைவது.

    பூனைகள் இரண்டும் அருமை. குழந்தைகள் போலத் தெரிகின்றன.

    உங்கள் மலரும் நினைவு வரிகளும் அருமை.
    இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கீதா,துளசிதரன்.

    அனைவரும் வாழ்க வளமுடன்.
    கண்ணதாசனை யார் மறப்பார்கள்.
    தேடித் தேடிப் படிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  31. வாங்க வல்லிம்மா. கீதாவும், நீங்களும் சொல்லி இருப்பது சரிதான். மீள்வாசிப்பின் சிறு பகிர்வு! இனிய மாலை / காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  32. காலை வேளையில் சோகச் செய்திகள்! நடுவில் வந்த பூனைக்குட்டிகள் மட்டும் கொஞ்சம் ஆறுதல்! தலைப்பே கலங்க அடிக்கிறது. மணிமாறனின் படங்களை நான் முகநூலில் பார்க்கவில்லை. அதுக்கு ரேவதி எல்லாம் கருத்துக் கூறி இருக்காரே! எப்போ வந்தது?

    பதிலளிநீக்கு
  33. பழசு கீதாக்கா... அங்கேயே தேதி இருக்கு பாருங்க...

    பதிலளிநீக்கு
  34. இப்போவும் சுமார் பத்து வருடங்களுக்குள்ளாக எங்களுக்குத் தெரிந்தவர்களின் பையர் அவரை விட எட்டு வயது மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்தின் போதே அந்தப் பெண்ணிற்கு 35 வயதோ என்னமோ ஆகி விட்டது. குழந்தை பிறக்கத் தாமதம் ஆகப் பின்னர் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். இதைத் தான் பூர்வ ஜென்ம பந்தம் என்பார்களோ! ஏனெனில் அந்தப் பையர் தமிழ்நாட்டுக்காரர். அந்தப் பெண் குஜராத்தி! அதுவும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த குஜராத்தி அல்ல!

    பதிலளிநீக்கு
  35. எல்லோருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  36. "மோகமுள்" சுதேசமித்திரனில் வந்ததுனு நினைக்கிறேன். இதைப் பத்திப் பசுபதி அவர்கள் ஒரு முறை சொல்லி இருக்கார். 40களின் கடைசியிலோ அல்லது ஐம்பதுகளின் ஆரம்பத்திலோ வந்திருக்குப் போல! நான் முதல்முறை படிக்கும்போது எனக்குப் பதினைந்து வயசு. படித்தது அப்பாவுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் புத்தகத்தையே கிழித்திருப்பார்! :) என் பெரியப்பா வீட்டில் உட்கார்ந்து (அன்று பெரியப்பா பெண்ணின் வளைகாப்பு) ஒரே நாளில் படித்து முடித்தேன். (நம்பினால் நம்புங்க) :) அதன் பின்னர் பல வருடங்கள் இந்தக் கதை மனதில் ஓடினாலும் புத்தகம் படிக்கக் கிடைக்கவில்லை. அப்போது மதுரை மீனாட்சி பதிப்பக வெளியீடோ? சரியா நினைவில் இல்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ஒரு முறை சென்னை--மதுரை வைகைப் பயணத்தின் போது மதுரையில் இருந்து திரும்புகையில் திருச்சியில் வரும் நூலகத்தில் வாங்கிப் படித்தேன். சென்னை செல்வதற்குள்ளாக முடிவுக்குச் சில பக்கங்கள் இருந்தவரை படித்து விட்டேன். அரை மனதாகப் புத்தகத்தைத் தாம்பர்த்தில் திரும்பக் கொடுத்தேன். இதெல்லாம் எண்பதுகளில் நடந்தது. அதன் பின்னர் இருமுறை முழுசும் படிச்சேன். இப்போ சமீபத்தில் போனவருஷம் என் தம்பி தான் வாங்கி இருப்பதாய்ச் சொல்லி பல்லவனில் படிக்கக் கொடுத்தான். முழுசும் படிக்கலை பல்லவனில். வீட்டுக்கூ வந்து மறுநாள் முடிச்சேன்.

    பதிலளிநீக்கு
  37. தாத்தாவின் உயிர் பிரஸ் சாவியில் அடங்கி விட்டது.

    பதிலளிநீக்கு
  38. பல்சுவைச் செய்திகள். சில சற்றே ஆழமாக மனதில் பதிந்தன.

    பதிலளிநீக்கு
  39. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொன்று தோன்றினாலும் கிட்டத்தட்ட நாற்பது வயசை நெருங்கி விட்ட யமுனாவைக் குழந்தையான பாபு /அதிலும் யமுனா தூக்கி வளர்த்த பாபு திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ள மனம் இன்னும் மறுக்கிறது. ஒரு வேளை இது தான் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸோ? அதன் அடிப்படையில் இந்தக் கதை வந்திருக்கலாமோ! பிரபல கர்நாடக சங்கீத வித்வான் ஒருத்தரும் தன்னை விட வயது அதிகமான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கார். மனைவியும் பாடகி தான். எங்க நண்பர் ஒருவரின் மகன் தன்னுடைய பெரியம்மா பெண், தன்னை விட ஐந்து வயது மூத்தவளைத் திருமணம் செய்து கொண்டார் நாற்பது வருடங்கள் முன்னரே!

    பதிலளிநீக்கு
  40. திரு. தி. ஜானகிராமன் அவர்களின் மோகமுள் கதையை மறக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  41. மணிமாறன் அவர்கள் தாத்தா, பாட்டி பற்றி படித்த போது மனம் கனத்து போனது.

    பதிலளிநீக்கு
  42. உறவினர் மரணக் கவிதை மனதை உலுக்கி விட்டது.

    பதிலளிநீக்கு
  43. உங்கள் வீட்டுக்கும் பூஸார்கள் வந்து விட்டார்களா?

    பதிலளிநீக்கு
  44. காலை வணக்கம்.

    நல்லதோர் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  45. மழை கவிதை அருமை.
    அழகர் கோவில் குரங்கார் கேட்பது நன்றாக இருக்கிறது.
    முருகன் இட்லி கடை போனதில்லை இனி போக எண்ணம் இல்லை.
    கண்ணதாசன் கவிதை சொல்வது உண்மை இல்லை. அவரை எல்லோரும் நினைவு வைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இதோ ஸ்ரீராம் கூட பகிர்ந்து இருக்கிறார் அவர் கவிதையை.

    பதிலளிநீக்கு
  46. கண்ணதாசன் சொல்வது போல் மரணம் ஏதோ வழியில் நிகழந்து தானே ஆகவேண்டும்.
    வந்தவர் எல்லாம் தங்கிவிட முடியாதே !

    பதிலளிநீக்கு
  47. அந்த தாத்தா படம் நம்ம கதை தாத்தா பாட்டியை நினைவுக்குக் கொண்டுவந்ததா கீதா?//

    யெஸ்ஸு யெஸ்ஸு....அதைச் சொல்ல வருவதற்குள் நம்ம கண்ணி வெளியில் செல்லும் நேரம் வந்துவிட்டதால் என்னை நகக்த் தொடங்கிவிட்டாள் அதான் ஓடிப் போய்ட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஒரு வேளை இது தான் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸோ? அதன் அடிப்படையில் இந்தக் கதை வந்திருக்கலாமோ!//

    கீதாக்கா ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்/எலெக்ட்ரா காம்ப்ளெஸ் இதில் இருப்பதாகத் தெரியலை வேண்டுமென்றால் தூக்கி வளர்த்ததால் என்று பார்த்தால் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது ஆனால் அம்மா அப்பா, மகன் மகள் சகோதரி சகோதரன் இடையில் வரும் இம்மாதிரியான உறவே ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று சொல்லப்படுகிறது.
    // பிரபல கர்நாடக சங்கீத வித்வான் ஒருத்தரும் தன்னை விட வயது அதிகமான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கார். மனைவியும் பாடகி தான். //

    டி எம் கிருஷ்ணா, சங்கீதா....

    //எங்க நண்பர் ஒருவரின் மகன் தன்னுடைய பெரியம்மா பெண், தன்னை விட ஐந்து வயது மூத்தவளைத் திருமணம் செய்து கொண்டார் நாற்பது வருடங்கள் முன்னரே!//

    எனக்குத் தெரிந்தும்... பெரியம்மா பையனையே விரும்பி கல்யாணம் செய்து கொண்டதும் நடந்திருக்கிறது 30 வருடங்களுக்கு முன்பே..

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஆஹா ஸ்ரீராம் பாருங்க இன்று இத்தனை ஸ்க்ரோல் செய்தும் மழைக்கான உங்கள் அருமையான கவிதை இப்பத்தான் கண்ணில் பட்டது....சென்னைக்கு மழை வரவிடாமல் காற்று, சூரியனார் தடுப்பது போல் உங்கள் கவிதையும் பூஸாரின் பின்னால் ஒளிந்து கொண்டுவிட்டது!!!

    கவிதை அருமை அதுவும் மழைச்சாரல் வரும் போது காற்று மடக்கி எடுத்துக் கொண்டு போகும் வரி ப்ளஸ் இறுதி வரிகள் ஒப்பீடு செம....ரொம்ப ரசித்தேன்.

    மழையைத்தான் காணவில்லை இன்னும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  50. இன்று எபி யின் பிறந்தநாளாம்!! மக்களே! பிறந்த தேதி 28.06.2009

    வாழ்த்துவோம் எல்லோரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ஹாப்பி பர்த்டே டு யு எபி!!!!
    மே த குட் காட் ப்ளெஸ் யு எபி!

    இன்னும் பல அருமையான பதிவுகளைப் படைத்திட எபிக்கு எங்கள் எல்லோரது வாழ்த்துகளும்

    கீதா


    பதிலளிநீக்கு
  51. ஸ்ரீராம் கதம்பத்தில் அதையும் சேர்த்திருக்கலாமோ/மே

    கீதா

    பதிலளிநீக்கு
  52. செலிப்ரேஷன் அண்ட் விருந்து ஹால் இதோ இங்கே https://www.youtube.com/watch?v=_z-1fTlSDF0 அப்படியே
    http://www.spiceindiaonline.com/lunch-dinner-menu-2-south-indian-non-vegetarian-lunch-menu/

    எல்லோரும் இந்த லிங்க் போய் கொண்டாடி கேக் வெட்டி விருந்து சாப்பிட்டுவிட்டு வாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  53. கதம்பச் செய்திகள் அருமையாக இருந்தது.

    இந்தப் பிறவியில் இத்தனை அனுபவம் பெற்றிடவேண்டும், இத்தனை பாவங்களுக்கான அனுபவம் கிடைத்திடவேண்டும் என்றுதான் இருக்கும் எனத் தோன்றுகிறது. அதற்கேற்றவாறு வாழ்நாள் நீடிக்கும்.

    பதிலளிநீக்கு
  54. இன்று எபி யின் பிறந்தநாளாம்!..

    ஆகா... மகிழ்ச்சி...
    என்னையும் மீட்டெடுத்தது - எபி...
    மனமார்ந்த நன்றி என்றென்றும்!..

    இன்னும் பற்பல
    அருமையான பதிவுகளைப் படைத்திட வேண்டும்...
    எபிக்கு அன்பின் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  55. அட!..

    முதல் பதிவுக்கு முதல் வருகை - நம்ம மீசைக்காரர்!..

    ராசியான கை தான்!..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  56. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    பல புதுமைகளை படைத்து வரும் எங்கள் ப்ளாக் தளத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  57. உங்களது இருபத்தியெட்டு ஜூன் வரிசையாக வந்து சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  58. 'மோக முள்' என்னால் மறக்க முடியாத புத்தகம். நான் மஸ்கட்டில் இருந்த பொழுது நண்பர் ஒருவர் படிக்க கொடுத்தார். அவர் அந்த புத்தகத்தை யாருக்குமே இரவல் தந்தது கிடையாதாம், நான் ஒரு நல்ல வாசகி(ம்!ம்!) என்பதால் எனக்கு படிக்கத் தந்தார். சொக்க வைக்கும் நடை. அதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை படித்த ஞாபகம் இல்லை.

    என்னால் மறக்க முடியாதது "ஜமுனா அழகுதான்.." என்று தொடங்கி அவர் விவரித்திருக்கும் பகுதிகள்.

    ஜமுனாவை பாபு பீச்சில் முறையாக முத்தமிடுவதை அவர் எழுதியிருந்த விதம்.

    ரங்கண்ணா காலை வேளையில் கோழி எந்த ஸ்வரத்தில் கூவுகிறது என்று அறிய சப்தம் போடாமல் செடிகளுக்கு நடுவில் அமர்ந்து கவனிப்பாரே அது. இந்த விஷயத்தில் எனக்கு நேரடி அனுபவம் உண்டு. ஒரு நாள் கோழி, 'சென்னை செந்தமிழ் அறிந்தேன் உன்னாலே...' அல்லது 'மஹா கணபதிம் மனசா ஸ்மராமி .." ராகத்தில் கூவியது, அடுத்த நாள் வேறு ராகம்.

    கடைசியாக, "இந்த பிரபஞ்சத்திற்கு எதுவமே புதிது இல்லை" எண்ணம் அந்த முத்தாய்ப்பு!

    பதிலளிநீக்கு
  59. இது முறையா? சரியா?

    என் கணவரின் நண்பர் குடும்பத்தில் நிகழ்ந்தது. ஆறு பெண்கள் கொண்ட அந்த வீட்டில் இரண்டாவது பெண்ணின் மகன், தன் தாய்க்கு நிகரான சித்தியையே அதாவது அம்மாவின் கடைசி சகோதரியை மணந்து கொண்டான். இதற்கெல்லாம் என்ன சொல்ல முடியும்? இதுதான் அசல் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ். அசிங்கம்தான் ஆனால் என்ன செய்ய முடியும்? தி. ஜானகிராமன் சொன்னதையே பதிலாக்குகிறேன்.இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிது இல்லை!

    பதிலளிநீக்கு
  60. இப்போது சந்தோஷமாக இசை அமைத்து வரும் ஒரு இளம் இசை அமைப்பாளர், தன்னை விட பல வயது மூத்த ஒரு பெண்மணியை மணந்து கொண்டிருக்கிறார். அந்த இசையமைப்பாளரின் வயதை ஒத்த அவர் மகன் தாயின் இந்த செயல் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

    பதிலளிநீக்கு
  61. வருக வருக என்று பூசார்களை வரவேற்கிறேன். இப்படி நாலு கால் ஜந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனால், உங்கள் பாஸ்,"பால் வைத்திருக்கிறேன், பைரவரும், பூசார்களும் குடித்தது போக மிச்சமிருப்பதை நீங்கள் குடியுங்கள் என்று சொல்லிவிடப் போகிறார்."

    மழை வராத வருத்தத்தை அழகான கவிதையாக்கியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  62. கம்பீரமான அழகுதான் அனுஷ்கா. இப்படி ஒரு படம் ஏன்?

    பதிலளிநீக்கு
  63. இப்போது சந்தோஷமாக இசை அமைத்து வரும் ஒரு இளம் இசை அமைப்பாளர், தன்னை விட பல வயது மூத்த ஒரு பெண்மணியை மணந்து கொண்டிருக்கிறார். அந்த இசையமைப்பாளரின் வயதை ஒத்த அவர் மகன் தாயின் இந்த செயல் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். //

    பானுக்கா இப்படி குமுதம் கிசு கிசு மாதிரி எல்லாம் டிட்பிட்ஸ் போடக் கூடாது. கீதாக்கா கூட இப்படித்தான் பிரபல இசையமைப்பாளர்னு போட்டிருந்தாங்க.

    ஏன் எதனால்? நாகரீகம் கருதியா? அக்காஸ்? ஊரே அறியுது எல்லா பத்திரிகையிலும் வருகிறதே..ஒரு வேளை நாம் எழுதினால் தப்பாகிடுமோ? அதனாலா?

    கீதா

    பதிலளிநீக்கு
  64. எங்கள் பிளாகிற்கு பிறந்ததின நல்வாழ்த்துகள்.சிரஞ்ஜீவியாக இரு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  65. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது தலைப்புக்கு:).. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று:)) கரெக்ட் தானே? முந்தி நான் இதை எழுதி ஸ்ரீராம்தான் கரெக்ட் பண்ணி விட்ட நினைவு:) ஹா ஹா ஹா.. பூஸ் குட்டிகளைத் தலைப்பாக்காமைக்கு என் வன்மையான கண்டனங்கள்..:)..

    திருமணம் என்பது உடலோ அழகோ பணமோ சம்பந்தப்பட்டது அல்ல.. அது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டதே.. மனம் ஒத்திட்டால் சொர்க்கம் இல்லை எனில் நரகம் அவ்ளோதேன்:))..

    எங்கள் உறவில் கூட ஒரு பெண் தன் பெரியம்மாவின் மகனை விரும்பிட்டா.. இது விருப்பம் என ஆருக்கும் தெரியாது அவ சொல்லவில்லை.. ஏன் அந்த மகனுக்குக்கூட தெரியாது.. அவர் தங்கை என்று நல்ல ஒட்டாக இருந்தார்.. எல்லோரும் சொல்லுவார்கள் அவருக்கு அந்த தங்கையில அதிக பாசம் என... அந்தப் பாசத்தை அவ தப்பாக நினைச்சிட்டாவோ என்னமோ ஆனா வெளியில சொல்லவில்லை..[என்று சொன்னார்கள் உண்மை எனக்குத் தெரியாது.. ஒருவேளை அந்த மகனுக்கும் தெரியுமோ என்னமோ][அவ்ர்கள் குடும்பத்தில் இவ ரொம்ப அழகான பிள்ளை]

    பின்பு படிக்கும்போது, தன் நண்பிக்கு அறிமுகம் செய்திருக்கிறா இவர் என் அண்ணா என.. அது ட்ரக் மாறி ஹா ஹா ஹா நண்பிக்கும் அண்ணாவுக்கும் காதலாகி கசிந்துருகி கல்யாணமாச்சு.. இவ நண்பியோடும் கதைக்கவில்லை கலியாணத்துக்கும் போகவில்லை.. பின்புதான் கதை வெளியே வந்திருக்கு. பின்பு திருமணமே வேண்டாம் தங்கை தம்பிக்கு செய்து குடுங்கோ என இருந்திட்டா...

    32 வயதாகிட்டுது பெற்றோருக்கு ஒரே கவலை.. வசதியானவர்கள்.. பின்பு எல்லோரும் குழை அடிச்சு கெஞ்சி மன்றாடி கூத்தாடி ஓகே பண்ண வச்சு ஒருவருக்கு நிறைய செலவு செய்து கிராண்ட்டா திருமணம் முடித்துக் குடுத்தார்கள்... ஒரு மாதத்தில் விட்டிட்டு வந்திட்டா .. உடனே டிவோஸ் க்கும் அப்ளை பண்ணியாச்சாம்.. இதை என்ன என்று சொல்வது..

    மனம்தானே காரணம்.. என்னால் அவவைக் குறை சொல்ல முடியவில்லை.

    //கண்ட இடத்தில் கண்டதை வாங்கி தின்னக் கூடாது. ஆகாரம்தான் மனதை உருவாக்குகிறது. ஆகாரத்திற்குத் தகுந்தாற்போல் மனதும் மாறும்.//

    பலரும் சொல்கிறார்கள்தான் ஆனா எனக்கு இதில் பெரிதாக நம்பிக்கை வரவில்லை... நாமும் கண்ட இடத்தில் கண்டதையும் வாங்கும் பேர்வழி:)).. அப்பாவோடு இருந்த காலத்தில் கோதுள்ளவை தவிர[கச்சான் போன்றவை:)] வேறு எதுவும் வெளியே வாங்கித் தர மாட்டார்.. திருமணத்தின் பின்புதான்.. ரெயினில அவிச்ச சோளன் வடை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்ன்.. கை காட்டினால் கணவர் வாங்கித் தந்திடுவார் ஹா ஹா ஹா அப்பாவும் நம்மோடு வந்தால் ஒரு முறைப்போடு இருப்பார் அப்பா.. முகத்தைப் பார்க்க சிரிப்பு வரும் எனக்கு ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டார்ர் ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  66. // இப்போவும் சுமார் பத்து வருடங்களுக்குள்ளாக எங்களுக்குத் தெரிந்தவர்களின் பையர் அவரை விட எட்டு வயது மூத்த பெண்ணை//

    ஆமாம் கீதா அக்கா.. நிறைய உதாரணங்கள் இருக்கு.

    பதிலளிநீக்கு
  67. நான் வாங்கி இருப்பது ஐந்தினைப் பதிப்பகம் கீதா அக்கா. தி.ஜா புத்தகம் எல்லாம் அப்பதிப்பகத்தில்தான் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  68. வாங்க கில்லர்ஜி. நெகிழ்ச்சி, இல்லை?

    பதிலளிநீக்கு
  69. வாங்க கோமதி அக்கா.. நீங்கள் எல்லாம் சரியாகக் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று எனக்குத்தெரியும்!

    மணிமாறன் தாத்தா பாட்டி பழைய கதை. கவிதைகளை ரசித்ததற்கு நன்றி.

    பூனைகள் வந்ததோடு இல்லாமல் இம்முறை என்மேல் பாசமழை!

    பதிலளிநீக்கு
  70. கோமதி அக்கா.. முருகன் இட்லி கடை வேஸ்ட். நல்லாவும் இல்லை, விலையும் அதிகம். இப்போ எப்படியோ...

    கண்ணதாசனுக்கே இந்த சந்தேகம் வந்ததென்றால்...!

    // இதோ ஸ்ரீராம் கூட பகிர்ந்து இருக்கிறார் அவர் கவிதையை. //

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  71. கீதா அக்கா..

    // கிட்டத்தட்ட நாற்பது வயசை நெருங்கி விட்ட யமுனாவைக் குழந்தையான பாபு /அதிலும் யமுனா தூக்கி வளர்த்த பாபு திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ள மனம் இன்னும் மறுக்கிறது.//

    அதேதான்... அதேதான்... அறிமுகம் ஆகாத பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை!

    // எங்க நண்பர் ஒருவரின் மகன் தன்னுடைய பெரியம்மா பெண், தன்னை விட ஐந்து வயது மூத்தவளைத் திருமணம் செய்து கொண்டார் நாற்பது வருடங்கள் முன்னரே! //

    உறவிலேயே அக்கா முறை இல்லையோ...

    பதிலளிநீக்கு
  72. வாங்க தனபாலன்... எந்த மரணப்பதிவு? ரெண்டு மூணு இருக்கு போலிருக்கே!!!

    பதிலளிநீக்கு
  73. வாங்க கீதா ரெங்கன்.. கவிதையை ரசித்ததற்கு நன்றி. இன்னும் இதுவரை வேறு ஒன்றைப்பற்றி யாரிடமிருந்தும் கமெண்ட் வரவில்லை!!!

    பதிலளிநீக்கு
  74. கீதா..

    எபியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னவர்க்கும், சொல்லப்போகிறவர்களுக்கும் நன்றி. கதம்பத்தில் சேர்க்க நினைவில்லை. கதம்பம் முன்னாலேயே தயார் செய்யப்பட்டது!

    பதிலளிநீக்கு
  75. வாங்க நெல்லைத்தமிழன்,

    நீங்கள் சொல்வதைத்தான் ஜவர்லாலும் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  76. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வாழ்த்துகளுக்கு நன்றி. சேர்ந்து வளர்வோம்.

    // முதல் பதிவுக்கு முதல் வருகை - நம்ம மீசைக்காரர்!..//

    புரியவில்லை. மெயிலில் படிப்பதால் புரியவில்லை என்று நினைக்கிறேன். அங்கு வந்து பார்த்தால் புரியலாம்.

    பதிலளிநீக்கு
  77. கோமதி அக்கா... வாழ்த்துகளுக்கு நன்றி. சேர்ந்து வளர்வோம்.

    பதிலளிநீக்கு
  78. வாங்க ஏகாந்தன் ஸார்.. வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  79. வாங்க பானு அக்கா...

    // ஒரு நாள் கோழி, 'சென்னை செந்தமிழ் அறிந்தேன் உன்னாலே...' அல்லது 'மஹா கணபதிம் மனசா ஸ்மராமி .." ராகத்தில் கூவியது, அடுத்த நாள் வேறு ராகம். //

    காலை நடைப்பயிற்சியின்போது தர்காவிலிருந்து ஒலிக்கும் துஆ எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகத்தில் தெரியும். சில நாட்களில் சௌராஷ்டிரம், சில நாட்களில் வேறு ராகம்...

    பதிலளிநீக்கு
  80. பானு அக்கா..

    அது ஜமுனா இல்லை, யமுனா! ஜெவுக்கு பதில் ய வருவதிலேயே ஒரு அழகு!

    // ஜமுனாவை பாபு பீச்சில் முறையாக முத்தமிடுவதை//

    முறையில்லாத ஒரு செயலை கூகிள் முறை என்று அங்கீகரித்து விட்டது!! சித்தியையா? கஷ்டம்தான்! அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூலம் வரும் உறவுகள் கன்னாபின்னா என்று ஆகிவிடாது.. அபூர்வராகங்கள் மாதிரி, அல்லது அதைவிட குழப்பமாக...? தன் பையன் தனக்குத் தம்பியாக...!!

    பதிலளிநீக்கு
  81. பானு அக்கா...

    // இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிது இல்லை! //

    தி.ஜாவின் நொ.சா?!!!

    இப்போதைக்கு பூஸார்கள் ஸ்பூன் அளவில்தான் பால் குடிக்கின்றன. அதைவிட ஆச்சர்யம் இங்கே இருக்கும் நாய் ஒன்றை பயப்பாடாமல் எதிர்த்து நின்று சீரிய பிறகு அதன் அருகிலேயே ஒய்யாரமாகப் படுத்து போஸ் தருகின்றன. கவிதையை ரசித்ததற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  82. பானு அக்கா..

    // கம்பீரமான அழகுதான் அனுஷ்கா. இப்படி ஒரு படம் ஏன்? //

    அப்போ முக நூலில் பகிர்ந்தது. அனுஷ் பற்றி முதல் கமெண்ட்!!! மழை பற்றிய கவிதைக்கு மழையில் நனையும் அனுஷ் படம் பாகிர்ந்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மழை பற்றிய கவிதைக்கு
      மழையில் நனையும் அனுஷ்!... //

      அப்போ -
      யாருக்கு சளி பிடித்ததோ தெரிய வில்லை...

      அதிலும், அனுஷ்!...
      என்ன லாவண்யம் பாருங்களேன்!.

      நீக்கு
  83. கீதா...

    // பானுக்கா இப்படி குமுதம் கிசு கிசு மாதிரி எல்லாம் டிட்பிட்ஸ் போடக் கூடாது. //

    அதுதான் அவர் க்ளூ கொடுத்திருக்காரே... " சந்தோஷமாக"...! காலா, கபாலிக்கு யார் இசை?

    பதிலளிநீக்கு
  84. வாங்க காமாட்சிம்மா.. நமஸ்காரங்கள். வாழ்த்துகளுக்கு அநேக கோடி நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  85. வாங்க அதிரா..

    தலைப்பு சற்றே யோசித்து விட்டுத்தான் வைத்தேன். வேறு கேட்சி தலைப்பு அம்புடவில்லை. அப்புறம் பார்த்தால் இன்று எபியின் பிறந்தநாள்... அப்புறம் மாற்றி பயனில்லை என்று அப்படியே விட்டு விட்டேன்!

    பதிலளிநீக்கு
  86. அதிரா...

    // பூஸ் குட்டிகளைத் தலைப்பாக்காமைக்கு //

    கூட்டம் சட்டென வராதே...!!!

    நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவமும் ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை எத்தனை கதைகள்...!

    சாப்பிடும் ஆகாரத்துக்குத் தக்கவாறு குணம் கொஞ்சமாவது இருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு.

    பதிலளிநீக்கு
  87. ஸ்ரீராம் இப்பத்தான் முருகன் இட்லி கண்ணில் பட்டது...எனக்குத் தெரிந்து அது வேஸ்ட். அத்தனை சுவை இல்லை. எனக்குச் சுவை தெரிந்த போது உறவினர் அம்பேரிக்கா காரர்கள் இங்கு வந்த போது அழைத்துச் சென்றார்கள். ஹூம் என்ன சொல்ல....

    நான் முருகன் இட்லி கடை ஆரம்ப் நிலையில் நீங்க சொல்லிருக்கும் சிங்கத்தின் குகை அது அப்போ மதுரையில் மிக மிக மிக மிகச் சிறிய கடை. ஆரம்பித்த புதிது என நினைவு. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேல் என்று நினைக்கிறேன். பாதையோரத்தில் ஒரு சிறிய கடையாக....மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு 8 10 பேர்அமர்ந்து சாப்பிடடலாம் அப்போது என் கஸின் (ஊர் சுற்றும் கசின் மெடிக்கல் ரெப்)ஏதோ ஒரு விசேஷத்துக்குப் போயிட்டு என்னை ஊர் சுற்ற அழைத்துச் சென்றான் அப்போ இந்தக் கடையில் இட்லி செமையா இருக்கும் என்று அழைத்துச்க் சென்றான் நிஜமாகவெ ரொம்ப நன்றாகவே இருந்தது தொட்டுக் கொள்ள பல சட்னிகள், மிளகாய் பொடி என்று செமையா இருந்தது.

    அதே சென்னையில் வந்தப்ப அந்த அமேரிக்க்கா உறவினர் அழத்டுச் சென்றது...நல்லால்ல...ஸ்ரீராம். அதற்கப்புறம் மதுரையில் சாப்பிடும் வாய்ப்பும் கிடைக்கல. நீங்க சொல்லிருப்பதைப் பார்த்தால் தரம் இல்லைனு தோனுது

    கீதா

    பதிலளிநீக்கு
  88. அதுதான் அவர் க்ளூ கொடுத்திருக்காரே... " சந்தோஷமாக"...! காலா, கபாலிக்கு யார் இசை?//

    ஸ்ரீராம் சந்தோஷ என்பதை வைத்துத் தெரிந்து கொண்டுவிட்டேன்!!!! இப்போ...சந்தோஷ் நாராயணன் என்று...முதலில் ஸ்ட்ரைக் ஆகலை...அப்புறம் ஆகிடுச்சு. அதுக்குள்ள தும்மல்.....தொடர்ந்து ஜல்பு....தலைவலி...சைன்யுஸ் ட்ரபுள்....போய்ட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  89. முதல் மூன்று கவிதைகளில் இரண்டாவதில், ‘ஆனால் அவரே’ அவசியமில்லை.

    பதிலளிநீக்கு
  90. திருமணம் என்பது உடலோ அழகோ பணமோ சம்பந்தப்பட்டது அல்ல.. அது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டதே.. மனம் ஒத்திட்டால் சொர்க்கம் இல்லை எனில் நரகம் அவ்ளோதேன்:))..//

    ரொம்ப ரொம்ப கரீக்டு அதிரா!! ஹைஃபைவ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  91. // ஸ்ரீராம். அதற்கப்புறம் மதுரையில் சாப்பிடும் வாய்ப்பும் கிடைக்கல. நீங்க சொல்லிருப்பதைப் பார்த்தால் தரம் இல்லைனு தோனுது//

    கீதா... நான் மு இ க படம் போட்டிருப்பது மதுரையில்தான். நீங்கள் சாப்பிட்டது ஆரம்பகால இட்லிக்கடையாக இருக்கலாம். இப்போது ஆடம்பரமும் அலட்டலும்தான் அதிகம் இருக்கிறது.. இதில் பழைய கடையையா, புதிய கடையையா எதை சுப்பிரமணியம் சுவாமி பூட்டை உடைத்துத் திறந்து வைத்தார் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  92. வாங்க ஏகாந்தன் ஸார்.. நல்ல திருத்தம். எனக்கும் தோன்றியது. நான் எழுதியதால் எடுக்க மனம் வரவில்லை!

    பதிலளிநீக்கு
  93. கீதா ரங்கன்- சென்னை to பெங்களூர் வழியில் முருகன் இட்லி ச.பொங்கல் ரொம்ப நல்லா இருந்தது. பெரம்பூர் முருகன் இட்லி எல்லாமே நல்லா இருந்தது. என்ன ஒண்ணு, இரண்டு நாளில் மூன்றாவது தடவையா போன போது சுவை படு போர் அடித்துவிட்டது. கடற்கரை அருகே இருக்கும்கடையில் சைகலாஜிகலா எனக்கு மீன் வாசனை வருவதுபோல் இருப்பதால் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  94. அழுதழுது
    பெரும் கூட்டத்தினருடன்
    அந்திமக் கிரியைகள்
    செய்தாலும்
    அடுத்தநாள் காலை
    அவர்கள் மட்டும்
    தனியாகத்தான்
    அந்த வீட்டில்
    இருக்கவேண்டும்.//

    ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். உண்மைதான்...கூட்டம் போன பிறகு அந்தத் தனிமை கொடுமை! நான் எங்கள்வீட்டில் என் அத்தைகள் அம்மா என்று ஒவ்வொரு மரணத்தின் போதும் இதை உணர்ந்திருக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  95. நெல்லைத்தமிழன்.. சில மு இ க களில் இட்லி, தோசை, ஊத்தப்பம் தவிர எதுவுமே இருக்காது!

    பதிலளிநீக்கு
  96. கீதா..

    // உண்மைதான்...கூட்டம் போன பிறகு அந்தத் தனிமை கொடுமை! //

    சில வீடுகளில் அங்கு ஏற்கெனவே வசித்து வந்த ஓரிருவரைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் துணை தேவையாய்க் கூட இருக்கலாம். ஆனால் நம்மால் அதற்கு நேரம் செலவிட முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  97. அவரே அஸ்தியாக //

    சூப்பர்!!! இதுதான் யதார்த்தம் இல்லையா...

    இப்போது
    நமக்குத் தெரியும்
    அவரின் பல நல்ல குணங்கள்
    முன்னாலேயே
    அவரிடம் இருந்ததுதான்.//

    இதை நான் டிட்டோ செய்து மிகவும் ரசிக்கிறேன் ஸ்ரீராம் நான் அடிக்கடிச் சொல்லி வருவது...போன பிறகு நல்ல குணங்களைப் பேசுவதை விட இருக்கும் போதே அவரிடமே சொல்லி சந்தோஷப்படுத்தலாமே இல்லையா...?! உயிருள்ள போதே பாராட்ட வேண்டும். நல்லதைச் சொல்லி. நாம் அதைச் செய்வதில்லை...பிறரைப் பாராட்டல் என்பது மிக நல்ல விஷயம்.

    சிலர் ஒருவர் இறந்த பிறகு கூட அவரைப் பற்றி பழி குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அதையும் பார்க்கிறேன். இறந்த பின்னும் ஏன் குறை சொல்ல வேண்டும்?

    அருமையான வரிகள் ஸ்ரீராம்..

    கவிதைகள் எல்லாமே ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  98. கவிதைகளை ரசித்ததற்கு நன்றி கீதா...

    // இருக்கும் போதே அவரிடமே சொல்லி சந்தோஷப்படுத்தலாமே இல்லையா...?//

    வல்லிம்மா இதை அடிக்கடி சொல்வாங்க...

    பதிலளிநீக்கு
  99. சில வீடுகளில் அங்கு ஏற்கெனவே வசித்து வந்த ஓரிருவரைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் துணை தேவையாய்க் கூட இருக்கலாம். ஆனால் நம்மால் அதற்கு நேரம் செலவிட முடிவதில்லை.//

    ஆம்! அப்படியாகிப் போனது இப்போதைய வாழ்க்கை. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்த போது இது அவ்வளவாகத் தெரிந்திருக்காது.

    என் மாமா இறந்ததும் மாமி அப்புறம் தனியாகவேதான் வாழ்ந்து வருகிறார். அன்று கூட்டம் போனதும் மாமி மட்டுமே ஸ்ரீராம். நான் அப்போது அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தேன். அப்புறம் மாமிக்குத் தனிமை பழகிவிட்டது. இப்போதும் தன் நேரத்தை அழகாக மனோதைரியத்துடன் சந்தோஷமாகச் செலவிடுகிறார். ஸ்பெஷல் குழந்தைகள் பள்ளியில் வாலண்டியராக இருக்கிறார். எனக்கு இந்த மாமி மிகப் பெரிய ரோல்மாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  100. வல்லிம்மா இதை அடிக்கடி சொல்வாங்க...//

    வல்லிமா ஹைஃபைவ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  101. தாத்தா கதை நெஞ்சை உருக்கி விட்டது.. நமக்குத் தெரியாமல் இப்படி எத்தனை கதைகள் இருக்கலாம். கொடுத்து வைத்த தாத்தா.

    இங்கு எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது... கொஞ்சம் சிரிப்பாக இருப்பினும் பாவம் அந்த பாட்டி.. இதை முன்பு என் பக்கத்தில் எழுதியதாக நினைவு.
    --------------------------------

    ஊரிலே உங்களுக்குத் தெரியும்தானே ஒரு சமயம்.. தமிழர் கட்டுப்பாட்டில் வட மாகாணம் இருந்தது.. அதனால அரசாங்கத்தால் உள்ளே நுழைய முடியவில்லை.. ஒரே பொம்பர் வந்து குண்டு போடுவதும்.. சனத்திரளைக் கண்டால் ஹெலி வந்து சுடுவதுமாக வானத்தால மட்டுமே தம் வீரத்தைக் காட்டிக்கொண்டிருந்த காலம்.

    அப்போ இடைக்கிடை ஷெல்களும் அடிப்பார்கள்.. இதனால ஒவ்வொரு வீட்டிலும் பங்கர் வெட்டப்பட்டு அழகாக கட்டியிருந்தார்கள்.. தூர பொம்பர் இரையும் சத்தம் கேட்டாலே எல்லோரும் குரல் குடுப்பார்கள் ஓடுங்கோ என.. அச் சத்தத்துக்கு ஆரும் ஆரையும் பார்ப்பதில்லை எல்லோருக்கும் தெரியும் ஓடிச்சென்று பங்கருக்குள் இறங்கி அங்குதான் எல்லோரும் வந்திட்டினமோ என செக்கிங் நடக்கும்:)..

    இப்படியான ஒரு கட்டத்தில்... ஒரு 80/85 வயதை தாண்டிய தாத்தா இறந்து விட்டார்.. அருகில் பாட்டியோ ஓயாமல் ஒரே அழுகையாம்.. நல்ல ஒட்டான தம்பதிகள்போலும்.. கஸ்டம்தானே வயசில என்ன இருக்கு எல்லாம் அன்பும் மனமும்தானே..

    அப்போ பாட்டி சாப்பிட மாட்டேன் படுக்க மாட்டேன் என ஒரே அழுகை.. என்ன இந்த வயதிலும் இப்படி அழுகிறாவே என மக்கள் முணுமுணுத்தார்களாம்...

    திடீரென வானத்தில ஹெலி வந்ததாம் சுடத்தொடங்கினார்களாம்... [தொடர்ந்து செய்ய மாட்டார்கள் இடையிடையே இப்படி அடிப்பார்கள்].. எல்லோரும் தாத்தாவை விட்டுப்போட்டு ஓடிப்போய் பங்கருக்குள் குதிச்சிட்டினமாம்.. இந்தப் பாட்டியும்...

    அந்தப் பாட்டிக்கோ பொம்பர், ஹெலி எனில் கை கால் நடுங்குமாம் அவ்ளோ பயமாம்.. அதனல, அன்று அவசர அவசரமா தாத்தாவை அடக்கம் செய்ய கிரியைகள் நடந்ததாம்.. பாட்டி பங்கரை விட்டு வெளியே வரமாட்டேன் என்றிட்டாவாம்.. எவ்ளோ கூப்பிட்டும் மாட்டேன் என நடுங்கத் தொடங்கிட்டாவாம்.. பாவம் பாட்டி இருக்கட்டும் என விட்டு விட்டு தாத்தாவை தூக்கிச் சென்றனராம்...

    இந்தப் பாவம் எல்லாம் ஆரைப்போய்ச் சேரும்.. சில சமயம் அனைத்தையும் தாண்டி பயம்தானே முன்னே நிற்கும்... இப்போ யானையின் கால்களுக்குள் போய் வா என்றால்.. நான் உயிர் போனாலும் போக மாட்டேன் யாரையும் போகவும் விட மாட்டேன் அவ்ளோ பயமெனக்கு.. அப்படித்தான் பாட்டிக்கும் ஹெலி பொம்பர் எனில் பயம்போல.. :(.

    பதிலளிநீக்கு
  102. ///அழுதழுது
    பெரும் கூட்டத்தினருடன்
    அந்திமக் கிரியைகள்
    செய்தாலும்
    அடுத்தநாள் காலை
    அவர்கள் மட்டும்
    தனியாகத்தான்
    அந்த வீட்டில்
    இருக்கவேண்டும்.//

    ஹைக்கூ மனதை என்னமோ செய்கிறது... உண்மைதான், ஊரில் எனில் 30 நாட்களும் உறவினர் வந்து சேர்ந்து படுப்பார்கள்.. வெளிநாடுகளில் குறைஞ்சுபோச்சு... அதிலும் வெள்ளைகளின் நிலைமை, பிள்ளைகள் கூட சேர்ந்து படுக்க மாட்டார்கள்.. தாய் தந்தை தனி வீட்டில் இருப்பார்கள்.. ஒருவர் இறந்திட்டால் மற்றவர் கடசிவரை தனிமைதான்[பிள்ளைகள் பகலுக்கு மட்டும் வந்து பார்ப்பார்கள் அல்லது ஏதும் விசேட நாட்களில் வந்து தங்குவார்கள்]... அதனல்தான் இங்கு வயது இல்லாமல்.. துணை தேடி விடுகின்றனர்.. பிள்ளைகளுக்கும் அதனால் தொல்லை இல்லை.

    பதிலளிநீக்கு
  103. //வீட்டில் மறுபடியும் ஒரு, இல்லை இல்லை இரண்டு புதிய விருந்தினர்கள். அதிரா, ஏஞ்சல், கீதா ரொம்பவே ரசிப்பார்கள்!///

    ஆங்ங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊஊஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ் நல்லவேளை கீதா ரசித்து விட்டு ஓடிவிட்டா.. நான் எல்லாம் ரசிக்கவே மாட்டேன்ன்...

    இரண்டையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறேன்ன்ன்.. அவ்வ்வ்வ் இனி என் செக்:) எப்பூடித்துரத்தினாலும் என்னைப் பிடிக்க முடியாதூஊஊஊஊஊஉ:)) பிக்கோஸ்ஸ் மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:)).

    ///இரட்டை வேஷமா? சிறு வித்தியாசம்தான்! முதல் நாள் ஒன்று மட்டும் வந்தது. மறுநாள் காலை கதவு திறக்கும்போது இரண்டாய் நின்று கொண்டிருந்தது!//

    ஹா ஹா ஹா முதல்நாள் வந்தவர் இரண்டாம் நாள் வந்தவரை மிரட்டுறார்ர்.. ஸ்ரீராம் எனக்குத்தான் சொந்தம் நீ ஓடிடு என ஹா ஹா ஹா:)) என்னா வில்லத்தனம் பாருங்கோ...

    பதிலளிநீக்கு
  104. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  105. ஆஆஆஆஆஆ மேலே கொஞ்சம் அஞ்சுபற்றி உளறிட்டேனா அதனால டிலீட் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் வெரி சோரி:)) அவ இன்னும் துய்ல் எழும்பாமையால் படிச்சிருக்க வாய்ப்பில்லை:)) அப்பாடா மீ சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்:))

    பதிலளிநீக்கு
  106. //"திறந்துட்டாங்க கதவை... இப்போ பால் ஊத்துங்க.. இரு.. " //

    வசனத்தில் பொருட்பிழை உள்ளது ஸ்ரீராம்:)).. இப்போ பால் ஊத்துவாங்க.. இரு எனத்தானே வரோணும்:))..

    இருப்பினும் பால் ஊத்துவாங்க எனப் போட்டமைக்கு என் வன்மையான கண்டனங்கள்.. பால் தருவாங்க எனத்தான் வரோணும்.. உயிரோடிருக்கும் குட்டிப் பூஸாருக்கு எதுக்கு “பால் ஊத்தோணும்”:) கர்ர்ர்ர்ர்ர்:)).

    முகம் குழந்தையாக இருக்கு ஆனா எப்படியும் 4 மாதத்துக்கு மேற்பட்ட குட்டியாக இருக்கும்போல இருக்கு.. ஏன் சாப்பிடவில்லை?.. பூச்சி வயிற்றில் இருக்கும்போல இருக்கு முகத்தைப் பார்க்க.

    //மானிட்டரில் தெரிந்த மவுஸை துரத்துத் துரத்து என்று துரத்திய பிறகு அப்படியே ஓய்வெடுத்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறது.
    ///

    ஹா ஹா ஹா இப்போ புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்:)) இது ஸ்ரீராமின் பொஸ்:) இன் தூதுவராகத்தான் இருக்கும்.. அவவுக்கு அருகில் நின்று கவனிக்க ரைம் இல்லாததால் பூஸாரை அனுப்பி இருக்கிறா.. போய்க் கவனி இவர் எங்கெல்லாம் போகிறார்.. ஆரோடெல்லாம் பேசுகிறார் என பார்த்து வந்து சொல் என ஹா ஹா ஹா.. பூஸ் குட்டியும் குடிச்ச பாலுக்கு வேர்க் பண்ணுதே:)) பாருங்கோ என்ன மாதிரி அவதானிக்கிறார்:))

    பதிலளிநீக்கு
  107. வணக்கம் சகோதரரே

    காலையிலேயே மனம் வருந்தும் படியான கதைகளாக... ஏன் இப்படி என யோசிக்கும் வேளையில் உறவின் பிரிவு குறித்த பாதிப்பு கவிதைகளாக வந்திருக்கிறது. கவிதைகள் மனதை கனக்கச் செய்து விட்டன.

    /இப்போது
    நமக்குத் தெரியும்
    அவரின் பல நல்ல குணங்கள்
    முன்னாலேயே
    அவரிடம் இருந்ததுதான்/

    உண்மையான வார்த்தைகள்.ஒரு மனிதரின் மறைவுக்குப் பின்தான் அவரது நல்ல குணங்கள், நம் நினைவுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியபடி வந்து அமர்ந்து கொள்கின்றன.

    நான் இப்போதுதான் அனைத்தையும் படிக்கிறேன். நான் இன்னமும் இந்த கதை படித்ததில்லை. பதிவின் மூலமும், கருத்துக்கள் மூலமுமாக கதைச் சுருக்கத்தை ஒரளவு புரிந்து கொண்டேன்.

    பொக்கிஷம் மனதை வருத்தியது. ஒவ்வொருவருக்கும் பற்று என்பது வெவ்வேறு விதத்தில் உள்ளது. மரணம் உறுதி என்பதை உணர்ந்த போதும், நினைவுகள் நல்ல நிலையில் இருக்கும் போதே பற்றை விட முடியவில்லை. மனித வாழ்வில் இது ஒன்றாயினும், இந்த மாதிரி படிக்கும் போது மனம் "என்ன வாழ்விது" என சஞ்சலப்படுகிறது.

    கவியரசரை எப்படி மறக்க முடியும். நம் வாழ்வின் அனுபவங்கள், அவர் எழுதிய வார்த்தைகளோடு இரண்டற கலந்ததாயிற்றே...

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  108. ஹா ஹா ஹா போனதடவை என் பக்கம் குண்டு அனுக்கா:) என்பதனால, ஸ்ரீராம் தன்னைக் கைவிட்டுவிடப்போறார் எனும் பயத்தில இம்முறை கவர்ச்சியாக இங்கு வந்திருக்கிறா போலும் ஹா ஹா ஹா ஹையோ ஹையோ...

    இருப்பினும் தமனாவை ஓவரா கொப்பி பண்ணுறா அனுக்கா:)) ஒழுங்கா பொட்டு வச்சவ இம்முறை வைக்கவில்லையே:)) ஹா ஹா ஹா.. நெ.தமிழன் காட்டில இப்போ ஒரே மழை:)).. அவருக்குத்தான் செவ்வாய் மாற்றம் நல்லா வேர்க் பண்ணுதுபோல:))
    ----------------

    சென்னைக்கு வெயில் புதிதல்லவே.. ஆனா ஸ்கொட்லாந்துக்கு வெயில் புதுசு... எப்பவும் 20 ஐ தாண்டாது வெப்பநிலை கோடையில்... ஆனா இம்முறை 30..32 க்கு போகிறது.

    நேற்று என் தோட்டப்பயிர்களுக்கு [உருளை, வெங்காயம், பீன்ஸ், கபேஜ்,தக்காழி, மிளகாய்.. இருப்பதை சொல்லிக்காட்டோணும் எல்லோ:) எனக்காக அடுத்தவங்களோ வந்து புகழ்வீனம்?:)) ஹா ஹா ஹா] தண்ணி ஊத்தும்போது சொன்னேன்.. “நான் கனவிலும் நினைச்சிருக்கவில்லை ஸ்கொட்லாந்தில் பயிருக்கு தண்ணி ஊத்துவேன் என”.. என்று:)).. எப்பவும் மழையாக நிலம் ஈரமாவே இருக்கும்... இம்முறை காய்ந்து வரளுது... இங்கு ஃபான் கூட இல்லை யாருக்கும் தேவைப்படுவதில்லை.. ஆனா இதே ரேஞ்சில போனால் தேவைப்படும்

    பதிலளிநீக்கு
  109. //ஞானி:) athira said...
    This comment has been removed by the author.
    June 28, 2018 at 2:11 PM
    ஞானி:) athira said...
    ஆஆஆஆஆஆ மேலே கொஞ்சம் அஞ்சுபற்றி உளறிட்டேனா அதனால டிலீட் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் வெரி சோரி:)) //


    கர்ர்ர்ர்ர் :) எனக்கு 5 நிமிஷத்தில் என்ன போட்டீங்கன்னு ஸ்ரீராம் சொல்லிடுவார் இல்லைனா இல்லைன்னா இல்லைன்னா :) அனுஷ்க்காக்கு 10 கிலோ வெயிட் ஏறிடும் இன்ஸ்டன்ட்டா :)))))))))))

    பதிலளிநீக்கு
  110. ஆவ்வ்வ் என் கிரேட் குரு என்ன அயகா மோட்டபைக்கில் இருக்கிறார்:) என் செக்குக்குகூட இவ்ளோ அழகா இருக்கத் தெரியாதே:)).

    யேஸ் கண்ணதாசன் அங்கிளின் பிறந்ததினம், அவருக்காக போஸ்ட் போட்டு .. பரமசிவன் கழுத்திலிருந்து .. அவர் பாடிய வீடியோவைப் போடலாம் என நினைச்சிருந்தேன் .. நேரம் இடம் கொடுக்கவில்லை:(..

    அதுதானே காந்தித்தாத்தா நேருப் பெரியப்பா கண்ணதாசன் அங்கிளை எல்லாம் மறந்துவிட்ட மக்கள்.. அதிராவை மட்டும் என்ன நினைவில் வச்சிருப்பார்களோ??:))

    பதிலளிநீக்கு
  111. //கர்ர்ர்ர்ர் :) எனக்கு 5 நிமிஷத்தில் என்ன போட்டீங்கன்னு ஸ்ரீராம் சொல்லிடுவார் இல்லைனா இல்லைன்னா இல்லைன்னா :) அனுஷ்க்காக்கு 10 கிலோ வெயிட் ஏறிடும் இன்ஸ்டன்ட்டா :)))))))))))//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா.. ஸ்ரீராம்.. நான் சொன்னனே.. அடிச்சுக் கேட்பா.. மிரட்டிக் கேட்பா.. அழுது கேட்பா.. குடுத்திடாதீங்க:)) குடுத்தீங்களெண்டால்.. பிறகு அடுத்த போஸ்டிலும் குண்டு:) அனுக்கா படமாப் போடுவேன்ன் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  112. மறைந்த உயிருக்கு அஞ்சலிகள்

    //அவர்கள் மட்டும்
    தனியாகத்தான்
    அந்த வீட்டில்
    இருக்கவேண்டும்//

    நிதர்சனமான உண்மை :(
    இருக்கும்போது எதுவும் தோன்றாது :( நமக்கு

    பதிலளிநீக்கு
  113. மரணம் இப்படித்தான் நிகழும் எனில், நாம் அதைத்தடுக்கும் வழி தேடுவோமெல்லோ மேலும் அந்த இடத்துக்கு போக மாட்டோம்ம்.. மிகக் கவனமா இருப்போம்:)) அப்போ எமன் அங்கிள் எப்படி நம்மைப் பறிக்க முடியும்:)) அவர் வேலை பறி போயிடுமெல்லோ:) அதனாலதான் எப்படி மரணம் வருமெனத் தெரியாமல் வாழ்கிறோம்ம்.. எப்பூடி என் கிட்னியா?:)).

    .........................

    ஆஆஆஆ இன்று ஏ அண்ணனின் ஹெட் தெரியுதே.. ஆனா வேல்ட்கப் நடந்துகொண்டுதானே இருக்குது:) எப்படி இடைவேளை எடுத்து இங்கு வந்தார்ர்?:)

    பதிலளிநீக்கு
  114. ஆவ் பூஸ் கியூட்டீஸ் :) கொஞ்சம் மெலிவா இருக்காங்க .உங்க வீட்டுக்கிட்ட வெட் இருந்தா கொண்டு போங்க .பூச்சி மருந்து கொடுப்பாங்க .
    பால் மட்டும் போதாது பருப்பு சாதம் வித் நெய் தளர பிசைஞ்சி வச்சி பாருங்க சாப்பிடும் .
    அதெப்படி ஒருத்தர் இன்னொருத்தரை கூட்டி வந்திருக்கார் ?? :)

    பதிலளிநீக்கு
  115. அந்த ஸ்டோரி :) தி.ஜா .வின் மோகமுள் .நான் தேசிய ஒளிபரப்பில் திரைப்படமாகத்தான் முதலில் பார்த்தேன்
    பிறகு லண்டனில் லைப்ரரியில் புத்தகத்தை வாசித்தேன் .
    மனதில் அந்த ஹீரோயினும் அவரது கண்களும் யமுனாவை கொன்டு வந்து நிறுத்தியது

    பதிலளிநீக்கு
  116. இன்னொன்று, ஸ்ரீராம் அக்குட்டிகள் போய் விட்டினமோ? இல்ல இன்னும் இருக்கினமோ உங்களோடு? இருந்தால் வவுங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. ஒன்றுக்கு அனுக்கா:) மற்றது தமனா:) எனப் பெயரிட்டு:) ஹா ஹா ஹா..

    ------------------------------
    எங்களுக்கு இன்றோடு விடுமுறை.. விடுமுறை.. விடுமுறை.....

    சின்ன வயசுப் பாடல் நினைவுக்கு வருது...

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..
    கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்..
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே...

    ஆனா ஆடிப்பிறப்புக்கு நாள் இருக்கு:).

    பதிலளிநீக்கு
  117. //வவுங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்//
    அது வளருங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)

    பதிலளிநீக்கு
  118. //ஆனால் அம்மா அப்பா, மகன் மகள் சகோதரி சகோதரன் இடையில் வரும் இம்மாதிரியான உறவே ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று சொல்லப்படுகிறது.// இது தெரியும் கீதா! ஆனால் அந்தக் காலங்களில் பத்து வயதுக்குள் திருமணம் ஆகிப் பதின்மூன்று வயதில் பிள்ளை பெற்றவர்கள் இருந்திருக்கின்றனர். எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் பலரும் அம்மாவைப் பெயர் சொல்லியோ அல்லது என்னடி அம்மானு கூப்பிட்டோ பார்த்திருக்கேன். அறுபதுகளின் கடைசி வரை அந்தப் பழக்கம் இருந்திருக்கு. இப்போவும் எனக்கு மிகவும் நெருங்கிய இணைய நண்பர் ஒருத்தர் அவர் அம்மாவை என்னடினு பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார். அவரே சொல்லி இருக்கார். பெரும்பாலும் திருநெல்வேலிப் பக்கத்தில் இது ஜகஜம்! :))))) ஆகவே அதனால் இங்கே யமுனாவை அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தேன். :))))))

    பதிலளிநீக்கு
  119. தி/கீதா, எல்லோருக்கும் தெரிஞ்சிருந்தாலும் அவர்கள் சம்பந்தப்படாத ஒரு பொதுவான பதிவில் அவர்கள் பெயரைச் சொல்லவேண்டாம் என்றே தவிர்த்தேன். :))))

    பதிலளிநீக்கு
  120. //நான் வாங்கி இருப்பது ஐந்தினைப் பதிப்பகம் கீதா அக்கா. தி.ஜா புத்தகம் எல்லாம் அப்பதிப்பகத்தில்தான் கிடைக்கும்.// நீங்க

    @ ஶ்ரீராம், நீங்க இப்போ மிகச் சமீபத்தில் வாங்கி இருப்பீங்க! நான் சொல்வது அறுபதுகளில் கிடைத்த பதிப்பைப் பற்றி! அப்போது இந்த அளவுக்குப் பெரிய அளவிலும் புத்தகம் இல்லை. சின்னதாய்க் குமுதம் அளவிலேயே இருந்தது. தி.ஜா.வின் "மலர் மஞ்சம்" நாவலும் அப்போதைய கால கட்டத்தில் தான் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  121. உங்கள் கவிதையைப் படிச்சேன். சென்னையில் நல்லபடியாக மழை வரப் பிரார்த்தனைகள். இரண்டு குட்டிப் பூஸார்கள் வந்திருப்பதையும் பார்த்தேன். அது என்னமோ தெரியலை, அனுஷ்காவை எத்தனை முறை பார்த்தாலும் மனசிலே நிற்கவே இல்லை. இந்த அனுஷ்கா, தமன்னா, சமந்தா, ஹன்சிகா இவங்க எல்லாம் ஒரே மாதிரியாத் தெரியறாங்க எனக்கு! :))) காஜல் அகர்வால் மட்டும் கொஞ்சம் புரியும். கார்த்திக்கோட காஃபி விளம்பரத்தில் வரதுனாலேயோ என்னமோ! :)))) சமீபத்திய வரவான கீர்த்தி சுரேஷைக் கூடக் கண்டு பிடிக்க முடியுது! இந்த அனுஷ்காவை! ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  122. தாத்தாவும் பாட்டியும் மனசை உருக்கினார்கள். ஆனால் இன்றைய பதிவே சோகப் பதிவாக மாறியது கொஞ்சம் வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு
  123. தி.ஜானகிராமனின் சிறுகதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேனே தவிர, நாவல் பக்கம் சென்றதில்லை. மோகமுள்ளையும், அம்மா வந்தாளையும் பலர் சிலாகிக்க, சிலர் நைஸாக ஓசி வாங்கிச்சென்று, அல்லது டெல்லி லைப்ரரிகளிலிருந்து எடுத்துச்சென்று, ஒருவித ரகசிய ஆனந்தத்தில் படிப்பதையும் கவனித்திருக்கிறேன். இவைகளோடு அவருடைய மரப்பசுவையும் நிதானமாகப் படிக்க விரும்புகிறேன். இதுபோலவே ஜெயகாந்தனின் ரிஷிமூலம். எப்போது வாய்க்கும் எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  124. ஒன்பது வயது முடிஞ்சு பத்தாவது வயதில் காலெடுத்து வைத்திருக்கும் எங்கள் ப்ளாகுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் சேவையைச் செய்ய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். (ஹிஹிஹி, இங்கே சேவைனு சொன்னது "திங்க" இல்லை!)

    பதிலளிநீக்கு
  125. "மோகமுள்" படம் சுமாராக இருந்தது. பாபு ரோலுக்கு அபிஷேக் பொருந்தவில்லை. யமுனா ரோலுக்கு அர்ச்சனா நன்றாகவே பரிமளித்தார் என்றாலும் நடிப்பு என்று பார்த்தால் சுமார் தான்! அதே அர்ச்சனா ஹிந்தி, மராட்டித் தொலைக்காட்சித் தொடர்களில் பிச்சு வாங்கி இருப்பார். இங்கே அநேகமாய் மொழிப் பிரச்னை, கதைக் கருவை உள்வாங்கிக் கொள்ளாமை ஆகியவை காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  126. Happy birthday to dear "Engalblog"...

    http://www.pethealthinfo.org.uk/uploads/images/Site_Articles/iStock_000005206292_Medium.jpg

    பதிலளிநீக்கு
  127. வணக்கம் சகோதரரே

    தங்கள் மழைக்கவிதை வெகு இயல்பாய் வந்திருக்கிறது. அழகான கவிதை. இதை பாராட்ட விரைவில் வருண பகவான் வாயு பகவானை காணாமல் விரட்டி அடித்து விட்டு கண்டிப்பாக வருவார்.

    பூனைகள் மிக அழகாய் இருக்கின்றன. தங்கள் வளர்க்கப் போகிறீர்களா? பூனையின் ஒவ்வொரு படங்களும் அருமை.

    வாழைப்பழம் வாங்க டிரைவரை தேடும் குரங்கார் மிகவும் அழகாக போஸ் தந்துள்ளார். முன்பு இந்த மாதிரி குரங்கார் அதிகம் இருந்த இடத்திற்கு உறவினர்களுடன் சென்றிருந்த போது, "குடி நீர் பைப்பை திறந்து இரு குரங்கார் களில் ஒருவர் தண்ணீர் குடித்து விட்டு மூடாமல் செல்வதும், மற்றொருவர் வந்து கொஞ்சம் குடித்து விட்டு மூடி விட்டு செல்வதும், மறுபடியும் முதலாமவர் வந்து திறப்பதும், மறுபடியும் இரணடாமவர் வந்து மூடுவதுமாக அரைமணி நேரம் அலுக்காமல் சலிக்காமல் இதே விளையாட்டு". நாங்களும் அலுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என்னிடம் போட்டோ எடுக்கும் வசதியுடன் ஃபோன் இல்லை. இன்று இவர் அமர்ந்திருக்கும் தோரணை பார்த்ததும் நான் ரசித்த காட்சி நினைவுக்கு வந்தது.

    முருகன் இட்லி கடை இட்லி நல்லாயிருக்குமென்று மாம்பலத்தில் உறவினர் வீட்டுக்கு போகும் போது சாப்பிட்டிருக்கிறேன். சுமாராகத்தான் இருந்தது. அப்போது நல்ல பசி வேறு...
    பசி ருசியறியாது... ஹா ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  128. பூஸார் கொடுத்த சிவப்பு ரோஜா அழகு! மதுரையில் முருகன் இட்லிக்கடை தளவாய் அக்ரஹாரத்தில் ஒண்ணு இருந்தது. சுமாரா இருக்கும். ஆனால் அங்கே ஊழியர்கள் யாராக இருந்தாலும் சாப்பிட வருபவர்கள் ஏதோ பிச்சைக்காரர்கள் என நினைப்பார்கள். ஆகவே அங்கே ஒரு முறை தம்பி அழைத்துப் போனதால் போனோம்.அப்புறம் போனதே இல்லை!

    பதிலளிநீக்கு
  129. ஆமாம் .தி ஜெயாவின் மரப்பசுவையும் அவர் முதல் கதை அமிர்தம் கூட படிச்சேன் .
    மரப்பசுவில் கோபாலியை நினைவுபடுத்திவிட்டீர்கள்

    இப்போ தன செக் பண்ணேன் லாசரா வின் அபிதா லிங்க் வந்திருக்கு மெயிலில் :) படிக்கணும்

    பதிலளிநீக்கு
  130. செத்த பினத்தின் முன் //

    கவியரசரின் கவிதை
    எடுத்து எழுதும்போது ண /ன வாகிடுச்சா :)

    மரணம் பிரிவு சோகம்தான் .கொஞ்சம் கனமாக இருந்தது தாத்தாவின் பிரிவை பாட்டி எப்படி தாங்கினாரோன்னு

    பதிலளிநீக்கு
  131. பாபு அண்ட் யமுனா வாக இருக்கட்டும் இல்லை இங்கே கிகிகிக்கப்பட்ட :) அந்த இசையாக இருக்கட்டும் ஏதோவொரு புள்ளி அவர்களை ஈர்த்து இணைத்திருக்கு .இவற்றை ஏற்றுக்கொள்ள நாம் நம் மனதை தயார் செய்து கொள்ளணும் .ஒரு குறும்படம் அமெரிக்காவில் வாழும் தம்பதியரின் மகன் தந்தையிடம் தான் காதலிப்பதாக சொல்ல அதை தாயிடம் சொன்னவுடன் தாய் //ஏங்க பொண்ணுதானே என்று கேட்டு திருப்தியடைவார் //
    அப்படிப்பட்ட சூழலில் தான் வெளிநாட்டு பெற்றோரின் வாழ்க்கை :)

    அந்த இசையின் மனைவியின் மூத்தமகன் செய்தது தவறு .அந்த தாய்க்கும் உணர்வுகள் இருக்கும் அதை புரிந்த காலம் வரும் மகனுக்கும் .

    பதிலளிநீக்கு
  132. வணக்கம் சகோதரரே

    இன்று பிறந்த நாள் காணும் "எங்கள் ப்ளாக்"கிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    அனுஷ்காவும் எ. பியின் பிறந்த நாளை தலைசாயத்து ஆமோதித்து மனதுக்குள் ரசித்து புன்னகையில் தன் மகிழ்வை வெளிப்படுத்துகிற மாதிரி உள்ளதே...
    பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  133. Happy Birthday Engal Blog :)

    http://img.kimensajes.com/celebraciones/379.gif

    முதல் பதிவிலும் விஷ் செஞ்சாச்சு :)

    பதிலளிநீக்கு
  134. http://img.kimensajes.com/celebraciones/379.gif ////

    இதில இடது தொங்கலில் இருப்பது நான்ன்ன்ன்ன்ன்ன்:) அதிசரி அந்த இரண்டு போய்ஸ் உம் ஆரூஊஊஊ ஒருவருக்கு தலைகூட நரைச்சிட்டுதுபோல ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  135. @கீதாக்கா ..எங்களுக்கு புக்ஸெல்லாம் தடா தான் விகடன் குமுதம் கூட படிச்சதில்லை கல்லூரி நாட்கள் வரை .
    நான் நினைக்கிறன் எனக்கு கேள்வி கேட்கும் குணம் இருப்பதாலோ அதை தடை செஞ்சிருப்பாங்க :)
    மாமா ஒருவரின் ஜுனியர் விகடன் நக்கீரனெல்லாம் ஒளிச்சி பபடிச்சிருக்கேன் :) கல்லூரி நாட்களில்
    லண்டன் லைப்ரரில பாலகுமாரன் சுஜாதா இந்துமதி தி.ஜா பிரபஞ்சன் எல்லா புக்ஸும் ஒரு மூச்சில் முடிச்சிட்டேன் .

    பதிலளிநீக்கு
  136. பாபு கேரக்ட்டர் அபிஷேக்குக்கு பொருத்தமில்லை// ஆமாம் கீதாக்கா இதை கதையை படிக்கும்போது தான் உணர்ந்தேன் ,. ஆனால் யமுனைவாக நடித்தவர் அழகு

    பதிலளிநீக்கு
  137. 2011ல முருகன் இட்லி கடைக்குப்போய் தெரியாம நெய் ரோஸ்ட் கேட்டேன் :) ஹாஹா எனக்கெப்படி தெரியும் இந்த ஷாப்ஸ் பற்றிலாம் ஐயா நான் ஊருக்கு வரதே எப்பவோதான் ரெண்டு வருஷத்தில் நிறைய மாற்றமானதும் அப்புறம் பணியாளர் சொன்னார் அது ஒன்லி இட்லி விற்கும் கடை கூட ஜிகர்தண்டா வும் பேமாஸ்னு :)என்னஇருந்தாலும் பாய் கடை பால் சர்பத்தின் சுவைக்கு ஜிகர்தண்டா நெருங்க முடியாது

    பதிலளிநீக்கு
  138. ஞானி:) athira said...
    ஆவ்வ்வ் என் கிரேட் குரு என்ன அயகா மோட்டபைக்கில் இருக்கிறார்:) என் செக்குக்குகூட இவ்ளோ அழகா இருக்கத் தெரியாதே:)).//



    ஹலோவ் உங்க குரு மாதிரிலாம் நான் நிச்சயம் செய்ய முடியாது :)
    அதுக்குதான் நீங்க இருக்கீங்களே :) அதே ஸ்டைல் போட்டோ ஒன்னு போடுங்க :)

    பதிலளிநீக்கு
  139. வாங்க அதிரா..

    நீங்கள் சொல்லி இருக்கும் தாத்தா பாட்டி கதை புன்னகையையும் வரவழைத்தது. தன் உயிர் தனக்கு வெல்லம்!!

    // ஹைக்கூ மனதை என்னமோ செய்கிறது...//

    இது ஹைக்கூ இல்லை. பொய்க்கூ! ஹைக்கூ இரண்டே வரிகளில் முடியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  140. வாங்க துரை செல்வராஜூ ஸார்..

    // அதிலும், அனுஷ்!...
    என்ன லாவண்யம் பாருங்களேன்!.//

    ஹி.... ஹீ... ஹீ... ஹீ...ஹீ...

    பதிலளிநீக்கு
  141. வாங்க அதிரா..

    பூஸ் குட்டிகள் இரண்டும் பகலில் எங்கோ பொருக்கி விட்டு இரவு முதல் விடிகாலை வரை இங்கு வாசம் செய்கின்றன.

    // இரண்டையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறேன்ன்ன்.. அவ்வ்வ்வ் இனி என் செக்:) எப்பூடித்துரத்தினாலும் என்னைப் பிடிக்க முடியாதூஊஊஊஊஊஉ:)) பிக்கோஸ்ஸ் மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:)).
    //

    ஹா... ஹா.. ஹா.. மெயிலில் அவங்களுக்கும் அனுப்பிட்டேறீங்க இல்லே?!!

    // ஆரும் சொல்லிடாதீங்கோ அடிச்சுக் கேட்டாலும் குடுக்காதீங்கோ //

    சேச்சே... நான் சொல்ல மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  142. அதிரா..

    //இப்போ பால் ஊத்துங்க.. இரு.. " // வசனத்தில் பொருட்பிழை உள்ளது ஸ்ரீராம்:))//

    ஆமாம். மாற்றுகிறேன். பொறுத்தருள்க!

    பதிலளிநீக்கு
  143. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..

    நீங்கள் வருந்தும்படி ஒரு பதிவு போட்டு விட்டேனோ... மன்னிச்சுக்குங்க... காலையில் இப்படி எல்லாம் போடுவதும் தப்புதானே?

    நீங்கள் மோகமுள் படித்ததில்லையா? என்ன ஆச்சர்யம்! நீங்கள் எல்லாம் அந்தக் காலத்து ஆள்.. எங்களை மாதிரியா...?

    பற்று பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  144. வாங்க அதிரா...

    // என் பக்கம் குண்டு அனுக்கா:) என்பதனால, //

    அதெல்லாம் இல்லை அதிரா... இது எப்போ ஷேர் செய்தது பாருங்க... சில வருடங்கள் ஆகிவிட்டன! அனுஷோட பொட்டு மழையில கரைஞ்சிருக்காக்கும்... தமன்னா போல எல்லாம் இல்லை.

    ஸ்கொட்லாந்தில் வெயிலா? அது அங்கு புதிதா...ஐ...........யையோ...!

    பதிலளிநீக்கு
  145. வாங்க ஏஞ்சல்...

    // கர்ர்ர்ர்ர் :) எனக்கு 5 நிமிஷத்தில் என்ன போட்டீங்கன்னு ஸ்ரீராம் சொல்லிடுவார் //

    நாள் சொல்ல மாட்டேன்பா... அதிரா திட்டுவாங்க...

    // நிதர்சனமான உண்மை :(
    இருக்கும்போது எதுவும் தோன்றாது :( நமக்கு //

    ஆமாம்.

    பதிலளிநீக்கு

  146. வேற யாரோ இங்கே என்னைப்பற்றி பேசின மாதிரி இருந்ததே !!??

    கீதா ரெங்கன் ..எஸ்

    //பாவமாக உட்கார்ந்திருப்பது அவங்க செக் தானே ஏஞ்சல்தானே அது//

    ஆமாம் கீதா சரியா கண்டுபிடிச்சிட்டீங்க

    பதிலளிநீக்கு
  147. ஏஞ்சல்...

    // கொஞ்சம் மெலிவா இருக்காங்க .உங்க வீட்டுக்கிட்ட வெட் இருந்தா கொண்டு போங்க .//

    ஐயோ... எங்கேயோ போகவேண்டும்... நான் எங்கே அழைத்துச் செல்லப்போகிறேன்?

    பருப்பு சாதமா? நெய் விட்டு தளரவா? பாஸ் என்னைக் கொண்டேபுடுவார்!

    பதிலளிநீக்கு
  148. ஏஞ்சல்...

    மோகமுள் திரைபபடமாகப் பார்த்த்த்தீர்களா? ரொம்பப் பொறுமைதான் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  149. அதிரா..

    // பரமசிவன் கழுத்திலிருந்து .. அவர் பாடிய வீடியோவைப் போடலாம் என நினைச்சிருந்தேன் .//

    அடடே... நாளை போட்டுடலாமா?

    // இன்று ஏ அண்ணனின் ஹெட் தெரியுதே.. ஆனா வேல்ட்கப் நடந்துகொண்டு//

    ஆட்டத்தின் நடுவில் டீ குடிச்சுட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்களாம்!

    பதிலளிநீக்கு
  150. அதிரா...

    // கொஞ்சம் மெலிவா இருக்காங்க .உங்க வீட்டுக்கிட்ட வெட் இருந்தா கொண்டு போங்க .பூ//

    இரண்டுமே தமன்னா போல ஒல்லியாய்த்தான் இருக்கின்றன அதிரா.. விடுமுறையைக் கொண்டாடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதியா தியானத்தில் இருக்கற என்னை ஏன் ஶ்ரீராம் வம்புக்கு இழுக்கறீங்க?

      நாளைக்காவது நல்ல பாட்டு போடுங்க (பரமசிவன் கழுத்தில் - இது தொடர்பா ஒரு செய்தி சொல்றேன்)

      நீக்கு
  151. வாங்க கீதாக்கா.. எனக்குத் ஹெரிந்த தாயொருவர் கூட அவர் அம்மாவை வாடிப்போடி என்று கூப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.


    // ஶ்ரீராம், நீங்க இப்போ மிகச் சமீபத்தில் வாங்கி இருப்பீங்க! //

    கரெக்ட்... புரிஞ்சுக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  152. கீதாக்கா..

    // உங்கள் கவிதையைப் படிச்சேன். சென்னையில் நல்லபடியாக மழை வரப் பிரார்த்தனைகள்.//

    நன்றி. என்னவோ இரண்டு நாட்களாய் வெக்கை தணிந்திருக்கிறது! அனுஷ் மனசில் நிற்கவில்லையா? ஹா... ஹா.. ஹா..!

    // ஆனால் இன்றைய பதிவே சோகப் பதிவாக மாறியது கொஞ்சம் வருத்தம் தான். //

    எதேச்சையாய் அமைந்ததுதான். நானே அப்புறம்தான் கவனித்தேன். எபியின் பிறந்தநாள் இன்று என்பதையும் பதிவு வெளியானதும் தாமதமாகவே உணர்ந்தேன்... போனாப்போகுது விடுங்க!!

    பதிலளிநீக்கு
  153. கீதாக்கா...

    பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றிகள். சேர்ந்தே வளர்வோம்.

    நல்லவேளை நான் மோகமுள் படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  154. பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு அன்றி அதிரா... சேர்ந்தே வளர்வோம்.

    பதிலளிநீக்கு
  155. மீள் வருகைக்கு நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்..

    கவிதை, குரங்கார் படம் ஆகியவற்றை ரசித்ததற்கு நன்றி. பசி ருசி அறியாது என்கிற வார்த்தை எங்கள் வீட்டில் ரொம்பப் பிரபலம். பாஸுக்கு கோபம் வரும்! 9சும்மா விளையாட்டுக்கு)

    பதிலளிநீக்கு
  156. கீதாக்கா.. தளவாய் அக்கிரஹாரம் கதையைத்தான் சுசா உடைத்துத் திறந்தார். மாவீரன் போட்ட பூட்டு! நாங்கள் சாப்பிட்ட கடை மேலமாசி வீதியில்!

    பதிலளிநீக்கு
  157. ஏஞ்சல்... உண்மையைச் சொல்லனும்னா சமீபத்தில் லாசரா கதை எதுவுமே படிக்கவில்லை. எப்பவோ ஏதோ ஒரே ஒரு கதை படிச்சுருக்கேன். அதுவும் ஏதோ ஒரு வாராந்தரியில்!

    // கவியரசரின் கவிதை
    எடுத்து எழுதும்போது ண /ன வாகிடுச்சா :)//

    ஆமாம்... ஜெபிஜி இமேஜில் திருத்தம் செய்ய முடியாதே... நானும் கவனித்தேன்.

    பதிலளிநீக்கு
  158. ஏஞ்சல்...

    // ஏங்க பொண்ணுதானே என்று கேட்டு திருப்தியடைவார் ////

    ஹா... ஹா.. ஹா.. அது சரி... இருகோடுகள் தத்துவம்!

    எபியின் பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி. சேர்ந்தே வளர்வோம்.

    // அது ஒன்லி இட்லி விற்கும் கடை கூட //
    இப்போ தோசை, ஊத்தப்பம் போன்றவையும் தருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  159. அதிரா...

    எபியின் பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி. சேர்ந்தே வளர்வோம்.

    பதிலளிநீக்கு
  160. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்,

    எபியின் பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி. சேர்ந்தே வளர்வோம்.

    பதிலளிநீக்கு
  161. வாங்க ஏகாந்தன் ஸார்... திஜாரா சிறுகதைகள் இரண்டு பாகம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கவேண்டும். லாசரா கதைகள், ந பிச்சமூர்த்தி கதைகள், எம்விவி கதைகள், சமீபத்தில் சுப்ரமணிய ராஜு கதைகள்.... எல்லாம் வெயிட்டிங்கில்!

    பதிலளிநீக்கு
  162. // அமைதியா தியானத்தில் இருக்கற என்னை ஏன் ஶ்ரீராம் வம்புக்கு இழுக்கறீங்க?

    நாளைக்காவது நல்ல பாட்டு போடுங்க (பரமசிவன் கழுத்தில் - இது தொடர்பா ஒரு செய்தி சொல்றேன்) //

    ஹா... ஹா... ஹா... நெல்லைத்தமிழனின் தியானம் கலைகிறது! தொடர்பான செய்தி எப்ப, நாளைக்குதான் சொல்வீர்களா!

    பதிலளிநீக்கு
  163. நாளைக்கு பரமசிவன் கழுத்தில் பாட்டு வேணும்ம்ம்ம்ம் எனக்காக அல்ல:) கண்ணதாசன் அங்கிளுக்காக.
    இல்லை எனில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்:)).

    என்னாது நெல்லைத்தமிழன் தியானத்தில் இருக்கிறாரோ? ஆரோட எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்ல முடியுமோ ஸ்ரீராம்?:)

    பதிலளிநீக்கு
  164. // நெல்லைத்தமிழன் தியானத்தில் இருக்கிறாரோ? ஆரோட எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்ல முடியுமோ ஸ்ரீராம்?//

    கூட்டுப்பிரார்த்தனை தெரியும்.. கூட்டு தியானம் உண்டோ அதிரா?!!!!

    பதிலளிநீக்கு
  165. இருக்கு ஸ்ரீராம் இருக்கு.. ஆனா கூட்டு அல்ல டபிள்ள்ள்:)) அதாவது இருவராக சேர்ந்து செய்வது:).

    ஊசிக்குறிப்பு:
    சமீபத்தில் வீரகேசரியில் படிச்சேன், இப்போ தமனாக்காவும்:) தியான வகுப்புக்களுக்குப் போகத் தொடங்கியிருப்பதாக:)...

    பதிலளிநீக்கு
  166. // இப்போ தமனாக்காவும்:) தியான வகுப்புக்களுக்குப் போகத் தொடங்கியிருப்பதாக:)... //

    எனக்குத் தெரிஞ்சு ரஞ்சிதா ரொம்ப நாளா தியானத்தில் இருக்காங்க... கூட்டு, குழம்பு எல்லா தியானத்திலும் இருக்காங்க!

    பதிலளிநீக்கு
  167. //ஹா... ஹா.. ஹா.. மெயிலில் அவங்களுக்கும் அனுப்பிட்டேறீங்க இல்லே?!!

    // ஆரும் சொல்லிடாதீங்கோ அடிச்சுக் கேட்டாலும் குடுக்காதீங்கோ //

    ? என்னது என்ன என்னா என்னனென்ன ?
    எனக்கொண்ணும் புரிலயே ???

    பதிலளிநீக்கு
  168. // என்னது என்ன என்னா என்னனென்ன ?
    எனக்கொண்ணும் புரிலயே ???//

    ஆமாம்.. எனக்கும் புரியவில்லை!!

    பதிலளிநீக்கு
  169. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் டிலீட் பண்ணிய கொமெண்ட்டை மெயிலில அனுப்பிட்டாரோ ஸ்ரீராம், அஞ்சுவுக்கு:) நோஓஓஓஓஓஓஓ விட மாட்டேன் இப்போ எனக்கு அஞ்சுவின் ஐடியும் பாஸ்வேர்ட்டும் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  170. @ஸ்ரீராம் :) நான் சிவகுமார் ஜெயபாரதி நடிச்ச மறுபக்கம் மூவி கூட தேசிய ஒளிபரப்பில்தான் பார்த்தேன் .எப்பவும் அந்த நேஷனல் மூவீஸ் பார்க்க தவறுவதில்லை அப்போல்லாம் :) பெங்காலி படங்கள் கூட விட்டதில்லை

    பதிலளிநீக்கு
  171. //Angel said...
    @ஸ்ரீராம் :) நான் சிவகுமார் ஜெயபாரதி நடிச்ச மறுபக்கம் மூவி கூட தேசிய ஒளிபரப்பில்தான் பார்த்தேன் .எப்பவும் அந்த நேஷனல் மூவீஸ் பார்க்க தவறுவதில்லை அப்போல்லாம் :) பெங்காலி படங்கள் கூட விட்டதில்லை///

    ஓ நான் நினைச்சேன் நினைச்சேன்ன் நைன்ரீன்ன் சிக்ஸ் சீறோக்கு முன்பு பிறந்திருப்பா என.. அது கரீட்டுட்தேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  172. அதிரா...

    // என் டிலீட் பண்ணிய கொமெண்ட்டை மெயிலில அனுப்பிட்டாரோ ஸ்ரீராம், அஞ்சுவுக்கு:) //

    கர்ர்ர்.... நீங்க ரெண்டு பெரும் சேர்த்து எங்களை ஏமாத்தப் பாக்கறீங்களா? நீங்கதான் அஞ்சுவுக்கு அனுப்பி இருப்பீங்க!!!

    // ஓ நான் நினைச்சேன் நினைச்சேன்ன் நைன்ரீன்ன் சிக்ஸ் சீறோக்கு முன்பு பிறந்திருப்பா என.. அது கரீட்டுட்தேன்ன்ன்://

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  173. ஏஞ்சல்..

    // ஸ்ரீராம் :) நான் சிவகுமார் ஜெயபாரதி நடிச்ச மறுபக்கம் மூவி கூட தேசிய ஒளிபரப்பில்தான் பார்த்தேன் //

    அப்போ மோகமுள் பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  174. //அப்போ மோகமுள் பார்க்கவில்லையா?//

    //மூவி கூட தேசிய ஒளிபரப்பில்தான் பார்த்தேன் //
    garrrrr

    https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR5p9KyS5U-9QH6ovEaapb4gSOuQe6Uo6NAksJYR91KDq0FSXII

    பதிலளிநீக்கு
  175. ஹலோவ் மியாவ் சந்தடி வாக்கில் உங்க பிறந்த வருஷத்தை உளறிட்டிங்க :) 1960 னு :)

    மறுபக்கம் Marupakkam (English: The Other Side) is a 1991 Indian Tamil-language drama film directed by K. S. Sethumadhavan. It is based on the Tamil novel, Uchi Veyyil written by Indira Parthasarathy. T

    மோகமுள் ..Mogamul is a 1995 Tamil language film directed by Gnana Rajasekaran based on a novel written by Thi. Janakiraman. The film features Archana Joglekar, Nedumudi Venu and Abhishek in lead roles whilst

    ஆனா இது ரெண்டையும் ஒரு வருஷத்தில் ரிபீடடா போடுவாங்க தூர்தர்ஷன் ..தொடர்ந்து பல வருஷம் போட்டாங்க

    பதிலளிநீக்கு
  176. ஏஞ்சல்... நான் ரெண்டையுமே பார்க்கவில்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  177. ஆங் ஓகே ஓகே :)

    உங்க ஆஸ்தான அபிமான ஹீரோவாச்சே அதான் கேட்டேன் பார்த்திருப்பீங்கன்னு :)
    ஓகே கமிங் டு தி பாயிண்ட் .
    பருப்பு நெய்யோடு சத்தம் ஒரு கவளம் கொடுக்க சொன்ன காரணம் பருப்பில் பூண்டு மஞ்சள் சேர்ப்போமில்லையா அது மஞ்சள்தூள் நேச்சுரல் டி wormer .

    பதிலளிநீக்கு
  178. ஏஞ்சல்...

    // உங்க ஆஸ்தான அபிமான ஹீரோவாச்சே அதான் கேட்டேன் பார்த்திருப்பீங்கன்னு :)//

    கர்ர்ர்.... வரவர என்னையும் அதிகமாகவே கர் சொல்ல வைக்கறீங்க...

    // பருப்பு நெய்யோடு சத்தம் ஒரு கவளம் கொடுக்க சொன்ன காரணம் பருப்பில் பூண்டு மஞ்சள் சேர்ப்போமில்லையா அது மஞ்சள்தூள் நேச்சுரல் டி wormer .//

    நாங்கள் சேர்க்க மாட்டோமே... வெறும் பருப்பு மட்டும்தான்!

    பதிலளிநீக்கு
  179. நானும் மோக முள் படம் பார்த்தேன்(தலையெழுத்து!!). ஞான ராஜ சேகரன் இயக்கியது. அவருடைய முதல் படம் என்று நினைக்கிறேன். நான் இதைப் படமாக எடுத்தால் யமுனா பாத்திரத்திற்கு லட்சுமி அல்லது கீதாதான் பொருந்துவார்கள் என்று நினைத்திருந்ததாலோ என்னவோ, அர்ச்சனாவை பொருத்திப் பார்க்க முடியவில்லை. பாபு பாத்திரத்திற்கு அபிஷேக் ஸோ! ஸோ!

    ரெங்கண்ணா பாத்திரத்திற்கு நெடுமுடி வேணு தன்னால் இயன்ற அளவு ஜஸ்டிஸ் செய்திருந்தார். ராஜமாக விவேக்! என்ன கொடுமை சரவணா இது? என்று தோன்றியது.

    அந்த கதையில் ஒரு இடத்தில், "நான் சொன்னதற்கு ராஜம் சிரித்தான், அந்த சிரிப்புக்கு நான் தாஜ் மஹாலைத் தரலாமா?" என்று பாபு நினைத்துக் கொள்வது போல ஒரு இடம் வரும். தாஜ் மஹாலைத் தரலாமா என்று நினைக்கும் அளவிற்கு அழகாக சிரிக்க கூடிய நடிகர் இங்கே யார்? மாதவன்? அஜித்? மோஹன் லால்?

    பதிலளிநீக்கு
  180. வாங்க பானு அக்கா...

    எண்ணெய் பொறுத்தவரை கதையாகப் படித்த எந்த நாவலையும் சினிமாவாகப் பார்த்தால் பொருந்தாது.. தில்லானா மோகனாம்பாளையே எடுத்துக் கொள்ளுங்கள். கதையாகப் படித்த கீதாக்கா போன்றோருக்கெல்லாம் படம் பிடிக்காது (இல்லா விட்டாலும் அவர்களுக்குப் பிடிக்காது! ஜிவாஜியாச்சே!)

    எனவே யமுனா, பாபு பாத்திரங்களுக்கெல்லாம் எந்த ஆட்களும் பொருந்த மாட்டார்கள்!

    // ராஜமாக விவேக்! என்ன கொடுமை சரவணா இது?//

    ஆ......!

    பதிலளிநீக்கு
  181. // இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிது இல்லை! //

    தி.ஜாவின் நொ.சா?!!!

    இல்லை ஸ்ரீராம். 100% உண்மை. நீங்கள் வினோதம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை யாரிடமாவது சொல்லுங்கள், உடனே, "இதே மாதிரி.." என்று அவர் ஆரம்பிப்பார். அதனால்தான் நிறைய அனுபவங்கள் கொண்டவர்களும், அறிவு முதிர்ந்தவர்களும் யாரையும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  182. @பானுக்கா
    //தாஜ் மஹாலைத் தரலாமா என்று நினைக்கும் அளவிற்கு அழகாக சிரிக்க கூடிய நடிகர் இங்கே யார்? மாதவன்? அஜித்? //

    இன்னொருவரையும் லிஸ்டில் சேர்க்கலாம் :) அரவிந்த்சாமி .

    பதிலளிநீக்கு
  183. அக்கா பிரித்விராஜ் சுகுமாரனும் சேர்க்கலாம் ஆனாஅந்த சிரிப்புக்கு அஜித் மாதவன் தான் 100 % பொருத்தம்

    பதிலளிநீக்கு
  184. மனம் ஒத்துப் போனால்தான் திருமணம் சொர்க்கம், இல்லாவிட்டால் நரகம் என்று அதிரா சொல்லியிருக்கிறார். இதற்கு கீதா ரங்கன் high five வேறு. இரண்டு பேரும் ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள், மனம் என்று ஒரு விஷயமே கிடையாது. நம் எண்ணங்களின் தொகுதிதான் மனம்.
    அப்படியே இருந்தாலும் அது ஒரு குரங்கு. அதை நல்ல பழக்கங்கள் என்னும் கோலெடுத்து அடக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  185. // அது ஒரு குரங்கு. அதை நல்ல பழக்கங்கள் என்னும் கோலெடுத்து அடக்க வேண்டாமா? //

    அதைத்தாவ விட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மைப் பாவத்தில் தள்ளி விடும்...!

    // அதனால்தான் நிறைய அனுபவங்கள் கொண்டவர்களும், அறிவு முதிர்ந்தவர்களும் யாரையும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிக்க மாட்டார்கள். //

    உண்மை.

    நன்றி பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  186. // இன்னொருவரையும் லிஸ்டில் சேர்க்கலாம் :) அரவிந்த்சாமி .//

    அரவிந்த்சாமி அழகுதான்.. ஆனால் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்கமாட்டார் ஏஞ்சல்!

    பதிலளிநீக்கு
  187. @ஸ்ரீராம் :) ஹாஹாஆ ஓகே ஓகே :)

    பதிலளிநீக்கு
  188. அதிரா -- //நெல்லைத்தமிழன் தியானத்தில் இருக்கிறாரோ? ஆரோட எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்ல முடியுமோ ஸ்ரீராம்?://

    எல்லாம் சன் தொலைக்காட்சியில் "கதவைத் திற காத்து வரட்டும்" பார்த்த எஃபக்டா.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    ஶ்ரீராம், தமன்னாவைக் குறிப்பிட்டால் அவரது ரசிகன் எப்படிச் சும்மா இருக்கமுடியும்?

    இந்த ஊருக்கு வந்தப்புறம் 9 மணிக்குள் தூங்குவது தடைபட்டுவிடுகிறது. சமயத்தில் 9:30-10 மணி ஆயிடுது. அதனால்தான் இப்போது எழுத முடியுது.

    ஏஞ்சலின் கேட்கிற சினிமா சம்பந்தமான கேள்விகளைப் பார்த்தால் அவர் "ஆன்ரி" இல்லை.. அதுக்கும் மேல (ஐ பட ஸ்டைல்)

    பதிலளிநீக்கு
  189. Bhanumathy Venkateswaran said...
    // நம் எண்ணங்களின் தொகுதிதான் மனம்.
    அப்படியே இருந்தாலும் அது ஒரு குரங்கு. அதை நல்ல பழக்கங்கள் என்னும் கோலெடுத்து அடக்க வேண்டாமா?..///

    ஆங்ங்ங் விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே ஆரும் ஜண்டைக்குக் கூப்பிடல்லியே என நினைச்சேன்ன் அவ்வ்வ்வ்:)).

    பானுமதி அக்கா.. சில விசயங்கள் சொல்லி விடுவது இலகு, ஆனா பிறக்டிக்கலா சிந்திக்கோணும் அது சாத்தியப்படுமோ என, இன்னொன்று நம்மை மட்டும் வைத்து உலகை எடை போட்டிடக் கூடாது... உலகிலே எவ்வளவோ பிரச்சனைகள் இப்போ நடக்கிறதே..

    ஒவ்வொருவரின் பிரச்சனையும் ஒவ்வொருமாதிரி இருக்கும்... மனதை அடக்குவதுக்கும் ஒரு எல்லை உண்டுதானே? எத்தனையொ சம்பவங்கள் அறிகிறோமே... உலகில் எத்தனையோ குடும்பங்கள் வேறு வழியின்றி உலகுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழ்கிறார்களே[நீங்கள் சொன்னதைப்போல மனதை அடக்கி,] அது என்ன சொர்க்க வாழ்க்கை ஆகிடுமோ?.. அப்படி மனதை அடக்கும் இடங்களில்தான்.. ஒரு எல்லையில் சூசைட்களும் நடக்கின்றன.

    இன்னொன்று பானுமதி அக்கா, மனம் கெட்ட வழியில் போவதனால்தான் பிரச்சனை வருகிறது.. அதை அடக்கினால் வராது என்பதுபோல எண்ணுறீங்க அப்படியில்லை இது.... இருவரும் மிக மிகத் தங்கமானவர்களாக இருப்பார்கள் ஆனா அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது அப்போ அவர்களை என்ன சொல்வீங்க?..

    ஒருவருக்குப் பிடிக்காத ஒரு உணவைக் கொடுத்து.. சாப்பிடு சாப்பிடு மனதை அடக்கி மூக்கைப் பொத்திக் கொண்டு சாப்பிடு என்றால்.. எல்லோரும் சொல்கிறார்களே என்பதற்காக ஒருநாள் இல்ல இருநாள் இல்ல ஒருவாரம் சாப்பிடலாம் ஆனா வாழ்க்கை முழுக்கச் சாப்பிடுவதென்பது அது நரகமெல்லோ.. அதைத்தான் சொன்னேன்.

    மனங்கள் கடவுள் அருளால் தானாக பொருந்தி விட்டால் சொர்க்கம் ..வற்புறுத்தலில் பொருத்தி விட்டால் அது நரகமாகிடும்..

    “கனி தானாகக் கனிய வேண்டும், தடியால் அடிச்சுக் கனிய வைக்கக்கூடாது”.. கண்ணதாசன் அங்கிள்:))

    பதிலளிநீக்கு
  190. ///ஏஞ்சலின் கேட்கிற சினிமா சம்பந்தமான கேள்விகளைப் பார்த்தால் அவர் "ஆன்ரி" இல்லை.. அதுக்கும் மேல (ஐ பட ஸ்டைல்)////

    ஓஓஓஓஓஓஓஓஓஒ லலலாஆஆஆஆஆஅ ஓ லலலாஆஆஆஆஆஆஅ சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் கண்ணில பொயிங்குதே.. ஆவ்வ்வ் இந்த நேரம் பார்த்து சிட்டுவேசன் சோங் பிபிசில போகுதூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)).

    ஊசிக்குறிப்பு:
    பத்து மணிவரை முழிச்சிருந்தது நல்லதாப்போச்சு நெ.தமிழன் இல்லாட்டில் இப்படி ஒரு இனிமையான தருணம் எனக்கு இன்று வந்திருக்காது:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!