19.9.09

குழப்ப அழைப்புகள்!








சென்ற வாரம் - சன் டி வி இல் நினைத்தாலே இனிக்கும் பட - கலந்துரையாடலைப் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தேன். நடிகர்கள், நடிகை ப்ரியாமணி டைரக்டர் - எல்லோரும் அமர்ந்து - பழைய ஆனந்தவிகடன் பாணியில் - 'எனக்கு பிடிச்சிருக்கு - எனக்கும் பிடிச்சிருக்கு - எனக்கு கூட' என்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது போன் பண்ணிய ஒரு அம்மணி - "நான் அமுல் பேபி கிட்ட பேசணும்" என்றார்.  காமிரா முன் உட்கார்ந்திருந்த எட்டு பேரும் குழம்பிப் போனார்கள். பிறகு ஒருவாறாகச் சமாளித்த ப்ரியா மணி - மைக்கைக் கையில் வாங்கி - நானா? என்பது போல் கேட்டார். போனில் அழைத்த அம்மணி - 'இல்லைங்க' என்றார். உடனே மைக் ப்ரித்விராஜ் கைக்குச் சென்றது - அவருக்கு ப்ரியாமணி நம்பிக்கையில் பாதி கூட 'தான் ஒரு அமுல் பேபியாக இருக்கலாம்' என்பதில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பாக்யராஜ் தான் ஒரு அமுல் பேபி இல்லை என்று தீர்மானித்துவிட்டார் - எனவே அவர் மைக்குக்கு கை நீட்டவே இல்லை. அதற்குப் பிறகும் கூப்பிட்ட அம்மணி உங்களில் யார் அமுல் பேபி என்று நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி குழப்ப - கடைசியில் வேறு வழியில்லாமல் - மைக் அங்கு இருந்த வில்லன் (?) நடிகரைத்  தவிர்த்து  மீதி  இருந்த  ஷக்தியிடம்  கொடுக்கப்பட்டது. பிறகு அழைத்த அம்மணி அந்த (வழிச்சல்) உரையாடலைத் தொடர்ந்தார்.  என்  மனதில் ஓடிய சந்தேகங்கள் - 
1) போன் - இன் நிகழ்ச்சியில் கூப்பிடுகின்ற அழைஞர்கள் - 'எங்க ஊருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க' பாணியில் பேசாமல் ப்ளைன் பேச்சு பேசுபவர்களாக இருக்கக் கூடாதா?  
2) அவர்கள் ஊரில் இருக்கும் பேபிகள் - மீசை தாடியுடன்தான் காணப் படுவார்களா?
3) அழைத்தவர்  ஒருவேளை 'அமுல்' கம்பெனியில் விளம்பரப் பிரிவில் வேலை செய்பவரா?


4) உண்மையிலேயே ஷக்திக்கு பால் வடியும் முகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அதன் விளைவு - ஐயோ பயமா இருக்கு! --->



ஒரு தகவல் - அடுத்த சில வாரங்களுக்கு - சன் டி வி இல் டாப் டென் நிகழ்ச்சியில் நம்பர் ஒன் ஆக - இனி எந்த பாட்டு / படம் இடம்பெறும் என்பதை - சுலபமாக எந்த குப்பனும் சுப்பனும் அனுமானித்து விடலாம்!

2 கருத்துகள்:

  1. Ravichandran20/9/09 6:30 AM

    அழைஞர்'களெல்லாம் 'அலைஞர்'களாக இருப்பதுதான் பிரச்னை....முகம் தெரியா நிலையில் என்ன வேண்டுமானாலும் பேச மனம் துணிகிறார்கள்...அவர்தம் உறவினர்கள் நண்பர்கள் அதைக் கேட்க நேர்ந்தால் என்ன நினைப்பார்கள் என்று தோன்றும்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா21/9/09 4:14 PM

    Paal vazhivadhu enraal...it should come out from the side...udhadu vazhiyaaga niagara falls madhiri pottu..irundhalum sirandha karpanai !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!