சனி, 16 ஏப்ரல், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்




1)  விட்டு விடவில்லை ஸ்ரீக்காந்த் போல்லா...



 

2)  "இந்த பேட்டரி காரில் மொத்தம் எட்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பேனலிலும் தலா 50 வாட்ஸ் சோலார் மின்சாரம் தயாராகி பேட்டரியில் சேமிப்பாகும்.  பின், 400 வாட்ஸ் மின்சாரத்தைக் கொண்டு மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் கார் இயங்கும். இதற்காக 1,500 ஆர்.பி.எம்., திறன் உள்ள மின் மோட்டார் மூலம் கார் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டது." -  திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.





3)  மனித நேயமிக்க் பத்மாவதி-நாராயண மூர்த்தி தம்பதியினர்.





4)  நான் எப்படி, என்ன சேவை செய்வது என்று யோசிப்பவர்கள் அங்கிதா சித்ராவைப்போல தங்கள் தொழில் சார்ந்தே சேவை செய்யலாம்.




5)  சபாஷ்!   இப்படி ஒரு நடவடிக்கை நம்மூரிலும் தேவை.




6)  பங்கஜாக்ஷி அம்மா.




7)  அப்துல் கஃபரசாப் முல்லா.  தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொடுக்கும் தயாள குணம்.




8)  சிறுதுளி பெருவெள்ளம்.  இப்படியும் சிந்திக்கலாம்.  இப்படியும் உதவலாம்.  நகின்பாய்.  வயது 86.






 

9)  ..... இதையடுத்து, மாணவனின் கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து, வினியோகிக்க, பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முகுந்த் வெங்கடகிருஷ்ணன்.





10)  என்ன காரியம் செய்தார் ஷஷாங்க் சிங்!



18 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. பாசிட்டிவ் செய்திகள் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. செய்திகளைத் தெரிவு செய்து தரும் உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. எல்லா செய்திகளும் அருமை.
    புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் அரசு.
    மனிதநேயத்துடன் சேவை செய்பவர்களுக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஓவ்வொன்றும்...அருமை. வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  6. இப்படி ஒரு நடவடிக்கை இது நமது தமிழ் நாட்டுக்கு கண்டிப்பாக வரவேண்டும் நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. #.'வாட்ஸ் ஆப்'பில் மானம் கப்பலேறும்!:#
    கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ,நடைமுறையில் சாத்தியமா :)

    பதிலளிநீக்கு
  8. வழக்கம்போல இதும் பல்சுவைக் கதம்பமே!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. அட அந்த ஸ்ரீகாந்த் முன்னாடி வந்தவரோ பாசிட்டிவ் செய்திகளில்...?!!! ம்ம் இந்த மாதிரி எல்லாம் நம்ம நாட்டுல நடந்தா அதான் இளைஞர்கள் வேறு இடம் தேடிப் போவது....ஐஐடி செய்தது மிகவும் மோசமான ஒன்று. கேவலம்...

    ரொம்பப் பிடித்த நியூஸ் பத்மாவதி....வாழ்க வளர்க. உண்மையாகவே நாலுகால் செல்லங்களுக்கு சந்தோஷபுரம்தான்!!!!! நான் சென்று பார்த்துவிடுவேன்....அந்தச் செல்லங்கள் அழகோ அழகு!!!

    மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அருமை. அந்த பேட்டரி கார் வந்தால் நல்லது. முகுந்தின் காது கேட்கும் கருவி எப்போது இங்கு வரும்? எனக்கு ஒன்று வேண்டும்....அதானே பார்த்தேன் இங்குள்ள கம்பெனிகளா இல்லை அமெரிக்க கம்பெனிகளா ?!! 4000 ருப்பாய் என்றால் செம சீப். எனது மெஷின் அல்ரெடி தகறாறு பண்ணுகின்றது....ம்ம்ம் முகுந்துடையது சீக்கிரம் சந்தைக்கு வர வேண்டும்..மிக நல்ல உபயோகமான ஒன்று

    கேரள நடவடிக்கை தமிழ்நாட்டில் வருமா...வந்தால் நல்லது...அதுவும் எங்கள் வீட்டிற்குள் வரும் அளவிற்கு தீபாவளி பாம் வெடிப்பார்கள் சாவு நடக்கும் போது, தீபாவளியின் போது என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஹப்பா ஒரு வழியா தமிழ்மணம் சுத்தி சுத்திப் போட்டுருச்சு!!! சுத்திப் போட்டுருச்சு??!! ம்ம்ம் அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் "எங்கள் ப்ளாகிற்குத்" திருஷ்டி விழாமல் இருக்க ஹிஹிஹிஹி...வாக்கு போட்டுருச்சு!!!

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீக்காந்த் போல்லா அவர்களின் முயற்சி
    புகை கக்கும் ஊர்திகளுக்கு
    மாற்றீட்டு முயற்சி!

    இவ்வாறான அறிஞர்கள்
    நாளைய தலைமுறையின்
    வழிகாட்டிகள்!

    எல்லோருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. அடிக்கிற வெயிலுக்கு சோலார் கார் ராக்கெட் வேகத்தில போகும்ன்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  14. அடிக்கிற வெயிலுக்கு சோலார் கார் ராக்கெட் வேகத்தில போகும்ன்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  15. தன்னம்பிக்கை, தியாகம், அன்புள்ளம், சமூக நலன் என பலவகையிலும் சமூகத்துக்கு சேவையாற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். அற்புதமான மனிதர்களை அடையாளங்காட்டும் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துபவர்களுக்கு தண்டனை வழங்குமுன் அம்மக்களுக்குப் போதுமான கழிவறை வசதியும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வூட்டலும் அவசியம். தானாக உணர்ந்து திருந்தினால் என்றைக்கும் பலனுண்டு. பயந்துகொண்டு திருந்துவதாக பாவனை செய்பவர்கள் அந்த பயம் போனதும் மறுபடியும் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  16. மிகவும் பாராட்டுக்குரியவர்கள் . நன்றி எ. பி !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!