நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.5.25
வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே
வாலியின் பாடல்; வித்யாசாகர் இசை. ஹரிஹரன், சாதனா சர்கம் குரல்.
ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்...
விஜய் - சங்கீதா நடித்த 'கோயம்புத்தூர் மாப்பிளே' என்னும் திரைப்படம்.
எனக்குத் தெரிந்து அந்தப் படத்தில் இருக்கும் ஒரே நல்ல பாடல் இதுதான். SPB குரலில் ஜீவன் என் ஜீவன் என்றொரு பாடல் இருப்பதாக விக்கி சொல்கிறது. கேள்விப்படாத பாடல். பின்னர் கேட்டுப்பார்க்க வேண்டும். விஜய் திரைப்பட கேரியரில் இது முதல் ஹிட் படம் என்று சொல்கிறது விக்கி. அங்கேயே கீழேயே இன்னொரு பாரா அதை மறுத்து 'பூவே உனக்காக'வும் 'காதலுக்கு மரியாதை'யும்தான் பிளாக்பஸ்டர் என்கிறது!
எப்படியோ இருந்து விட்டு போகட்டும். நமக்குத் தேவை இந்தப் பாடல். ஹரிஹரனின் குரல், குழைவு.
படம் வெளியான ஆண்டு 1996.
ஹரிஹரன் : ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் சாதனா : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
ஹரிஹரன் : முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் வா வா எந்தன் வாழ்வே
ஹரிஹரன் : ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் ஹரிஹரன் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
சாதனா: பார்வை மீது உந்தன் பேரழகே மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி ஹரிஹரன் : நேரில் ஆடி வரும் தேன் அருவி இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி
சாதனா : கோடையிலும் இதழ் காய்வதில்லை ஆசையின் அலைதான் ஓய்வதில்லை ஹரிஹரன் : காதல் கதை என்றும் தோற்றதில்லை தேவனின் விதியில் மாற்றம் இல்லை
சாதனா : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான் எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்
ஹரிஹரன் : ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் சாதனா : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
குழு : …………………………………
ஹரிஹரன் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை சாதனா : ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை
ஹரிஹரன்: தாமரையே சிறு வான்பிறையே மார்பினில் வழியும் தேன் மழையே சாதனா : காதலனே இசை பாடகனே கீதங்கள் பொழியும் பாவலனே
ஹரிஹரன் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே
ஹரிஹரன் : ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் சாதனா : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
ஹரிஹரன் : முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் இருவர் : வா வா எந்தன் வாழ்வே
ஹரிஹரன் : ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் சாதனா : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
FaceBook லிருந்து திரு R. கந்தசாமி ஸார் பகிர்ந்திருந்த ஒன்று...
என் பெரியப்பா மகன் கே.என் சுப்பு ‘அவன்தான் மனிதன்’ என்ற படத்தை தயாரித்தார். நான் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உடன் இருந்தேன். படத்திற்கான பாடல் எழுத அப்பாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் வந்து விட்டார்கள்.
விஸ்வநாதன் ஒரு மெட்டை வாசித்து காட்டி, “இதுதான் இந்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு” என்றார்.
அப்பா உடனே, “டேய் அந்த உயரமான மனுஷன் வருவான் (திருலோகசந்தர் 6.2 அடி உயரம்). புத்தகத்தை படிச்சுக்கிட்டே எட்டிப்பார்த்து இந்த மெட்டு பிடிக்கலை, வேற மெட்டு போடுன்னு சொன்னான்னா, இந்த மெட்டுக்கு வேற கம்பெனியில நான் தான் பாட்டு எழுதுவேன். வேற யாருக்காவது இதை வித்துட்டே அவ்வுளவுதான்” என்றார்.
“இல்லண்ணே இந்த மெட்டுக்கு உங்களுக்குத்தான்” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அப்பா ஏன் இப்படி சொன்னார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.
ஏ.சி.திருலோகசந்தர் வந்தார். அப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் தரையில் மெத்தை விரித்து உட்கார்ந்து இருக்கிறார்கள். இயக்குனரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு நாற்காலி போடப்படுகிறது. உட்கார்ந்த வேகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்.
பாடி முடித்ததும் “டைரக்டர் சார் உங்களுக்கு ஓகே வா?” என்று கேட்கிறார்.
சிறிது யோசனைக்குப் பிறகு டைரக்டர் ‘ஓகே’ என்கிறார்.
‘அப்பாடா’ என்று விஸ்வநாதன் முகத்தில் ஒரு சிரிப்பு. அப்பா பாடல் வரிகளை சொல்லத் தொடங்குகிறார்...
“அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே”
இராம.கண்ணப்பன் வரிகளை எழுதி விஸ்வநாதனிடம் தருகிறார்.
அவர் அந்த வார்த்தைகளுடன் மெட்டைப் பாடிப் பார்க்கிறார். பிறகு “அண்ணே அளவு சரியா இருக்கு” என்கிறார்.
இது நடக்கும்போது ஏ.சி.திருலோகசந்தர் புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்.
“சார் பல்லவி கேளுங்க” விஸ்வநாதன் அவரிடம் சொல்கிறார். புத்தகத்தில் இருந்து தலையை தூக்கி பல்லவி பாடப்படுவதை கேட்கிறார். பிறகு அப்பாவிடம் “அது என்ன அன்பு நடமாடும் கலைக்கூடம்?” என்று கேட்கிறார். “கதைப்படி கதாநாயகனுக்கு கால் உடைந்து போய் விடுகிறது. கதாநாயகி அவனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறாள். அப்படி வரும்போது ஆறுதலாக ஒரு பாட்டுப்பாடுகிறாள். இதுதானே சிச்சுவேஷன்.
உன்னால் நடக்க முடியாமல் போனால் என்ன? நீ வருத்தப்படாதே, நீயே ஒரு அன்பு நடமாடும் கலைக்கூடம்னு அவனுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி சொல்லி இருக்கேன். வேணாம்னா மாத்தி தரேன்”.
“இல்லை... இது நல்லாதான் இருக்கு” மீண்டும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறார்.
ஏ.சி.திருலோகசந்தரின் சொந்த நிறுவனமான சினி பாரத், தயாரித்த எந்தப் படத்திற்கும் அப்பா பாடல்கள் எழுதியது இல்லை.
ஆனாலும் திருலோகசந்தர் இயக்கிய வீரத்திருமகன், நானும் ஒரு பெண், ராமு, தங்கை, என் தம்பி, அன்பளிப்பு, தெய்வமகன், எங்க மாமா, அவன் தான் மனிதன் போன்ற பல வெற்றிப் படங்களில் அப்பாவின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இது ஒரு விசித்திரமான காம்பினேஷன்.
'இனியவளே' திரைப்படம். சீமான் இயக்கம். 1998 ல் வெளிவந்த திரைப்படம்.
ஹரிஹரன், ஸ்வர்ணலதா குரலில் பாடல்.
உயிரே உயிரே என்னும் பாடல். சீமான் படம் என்பதால் கதாநாயகன் பிரபு பெயர் பிரபாகரன்! இந்தப் பாடலை எழுதியிருப்பவர் அறிவுநம்பி.
சரணத்தில் முடியும் இடத்தில் 'என் ஜீவனே.... என் ஜீவனே' என்று வரும் இடத்தில் உயரத்துக்கு செல்லும் இடங்களில் பெண் குரல் அவ்வளவு சுகமில்லை. ஹரிஹரன் சமாளித்து விடுகிறார்! இந்தப் பாடலின் சரணம் கேட்கும்போது என்ன பாடல் நினைவுக்கு வருகிறது?
நல்ல இனிமையான பாடல். இசை தேவா. கன்றாவியான அந்த ஆரம்ப ஹம்மிங்கை கேட்டு பாடலைக் கேட்காமல் விட்டு விடாதீர்கள். நாராச ஹம்மிங் முடிந்த உடனேயே இனிய இசை ஆரம்பித்து விடும்!
உயிர் என்ன வெற்றிலையா, மடித்துக் கொடுக்க!
ஹரிஹரன் : உயிரே உயிரே நலம் தானா சம்மதம் தானா…..நிஜம் தானா…..நிம்மதி தானா….. அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி ரசித்திடவா…..ஆ…..
ஸ்வர்ணலதா : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே தொடுவானைத் தொட்டுவிட்டேனே அன்பே...... நிலவைப் பிடித்து உயிரை மடித்து கொடுத்திடவா…
ஹரிஹரன் : உயிரே உயிரே…..
ஹரிஹரன் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க
ஸ்வர்ணலதா : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க மிச்ச இடம் கோபப்பட்டு தான் பார்க்க
ஹரிஹரன் : மின்மினியே இதோ இதோ தான் கண்களும் பேசும் காதல் விழாதான் சந்தனமே இதோ இதோதான் குங்குமம் பூசும் காதல் விழாதான்
ஸ்வர்ணலதா : என் ஜீவனே…….என் ஜீவனே….. உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை
ஹரிஹரன் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே உன்னை மூடி நனைந்தேனே அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து அனுப்பிடவா….ஆ…..
ஸ்வர்ணலதா : உயிரே உயிரே…….
ஹரிஹரன் : …………………………..
ஸ்வர்ணலதா : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட
ஹரிஹரன் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமை போலே சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே
ஸ்வர்ணலதா : வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே
ஹரிஹரன் : என் ஜீவனே…….என் ஜீவனே….. கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்
ஸ்வர்ணலதா : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே உடைப்போலே அணிந்தேனே அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில் மறைத்திடவா…
FaceBook லிருந்து திரு R. கந்தசாமி ஸார் பகிர்ந்திருந்த ஒன்று...
கண்ணதாசன் பாட்டு எழுதிய அதே மெட்டு; வாலி வரிகளில் செம்ம ஹிட்டு!
கண்ணதாசன் பாடல் எழுதிய ஒரு டியூனுக்கு வாலியும் பாடல் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் பல்லவி நீளமாக இருந்ததால் படத்தில் வைக்கப்படாத நிலையில், அதே டியூனுக்கு கவிஞர் வாலி தனது ஸ்டைலில் பாடல்கள் எழுதி ஹிட் அடித்துள்ளார்.
1964-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பச்சை விளக்கு. சிவாஜி எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாகேஷ் கவுக்கார் ஜானகி, விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தை அரங்கண்ணல் என்பவர் தயாரித்திருந்தாலும், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்துள்ளார்
இந்த படத்திற்கான பாடல் பாடல் கம்போசிங்கின்போது, எம்.எஸ்.வி ஒரு டியூன்போட அதை கேட்ட கண்ணதாசன், ரொம்ப மென்மையாக சூப்பரா இருக்கு என்று சொல்லிவிட்டு பாடல் எழுதியுள்ளார். பொன் மலர்செண்டு முகமாக, இரு வண்டு விழியாக, என்று எழுதிய இந்த பாடல் அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் பாடலை கேட்ட, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், பல்லவி நீளமாக இருக்கிறது. ரசிகர்களை கவராது என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன், டியூனுக்கு தான் பாடல் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல, நான் டியூன் பாடல் இரண்டையுமே குறை சொல்லவில்லை. ஆனால் பல்லவி நீளமாக இருக்கிறது என்று கூறி வேண்டாம் என கூறியுள்ளார். அதன்பிறகு அடுத்த பாடலுக்கான டியூன் போட்டு பாடல் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட படத்தில் வைக்கப்பட்டள்ளது. ஆனால் கண்ணதாசனுக்கு பொன் மலர் செண்டு பாடல் மறக்க முடியாமல் இருந்துள்ளார்.
இதன்பிறகு சில நாட்கள் கழித்து வேறு படத்திற்கு கம்போசிங் போகும்போது, எம்.எஸ்.வியிடம் 'புதிதாக டியூன் போடாதே, ஏற்கனவே போட்ட அந்த பொன்மலர் செண்டு டியூன் போடு' என்று சொல்ல, எம்.எஸ்.வி தயங்கியபடி, 'இல்லண்ணே முக்தா சீனிவாசன் தயாரிக்கும் பூஜைக்கு வந்த மலர் படத்திற்காக அந்த டியூனை கொடுத்துவிட்டோம்' என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் 'பாடல் எழுதியாச்சா' என்று கேட்க, எ'ழுதியாச்சு வாலிதான் எழுதியிருக்கார்' என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.
‘’மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட’’ என்ற இந்த பாடலை கேட்ட கண்ணதாசன் 'ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறான்' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு போய் கவிஞர் வாலிக்கு போன் செய்து ரொம்ப 'அருமையாக எழுதியிருக்கிறாய்' என்று பாராட்டியுள்ளார். அதன்பிறகு பொன்மலர் செண்டு என்பதை மறந்த கண்ணதாசன் மையேந்தும் விழியாட என பாட தொடங்கியதாக அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியிருந்தார்.
'ஆஹா' திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கம். ராஜீவ் கிருஷ்ணா, சுலேகா ஆகிய புதுமுக நாயக நாயகியருடன் அனுபவ ரகுவரன், பானுப்ரியா, சுகன்யா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், விஜயகுமார் நடித்த இனிமையான திரைப்படம்.
அண்ணாமலை, சத்யா, பாஷா என்று ஆக்ஷனில் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்த சுரேஷ் கிருஷ்ணா, அனந்துவின் ஆலோசனையின்பேரில் எடுத்த மென்மையான காதல் கதை. எத்தனைமுறை வேண்டுமானாலும் படத்தை ரசிக்கலாம்.
அதில் எனக்குப் பிடித்த ஒரே நல்ல பாடல் ஹரிஹரன் பாடிய 'முதன்முதலில் பார்த்தேன்'. தேவாவின் இசை. பாடலை எழுதியவர் யாரோ த்யாகராஜாவாம்! பாடல் ஹிந்தி "ஸோச்சேங்கே துமே ப்யார்..." பாடலின் தழுவல் என்று அவர்களே சொல்லி விடுகிறார்கள். ஹிந்தியில் 'தீவானா' படத்தில் ரிஷியின் நடனமும், இசையும், பாடலும் அற்புதமாக இருக்கும். தமிழிலும் குறைவின்றி இனிமையாக பாடலை உருவாக்கி இருக்கிறார் தேவா.
இன்டர்லூட் எனப்படும் இடை மெல்லிசையும் கேட்க மென்மையாக, ரசனையாக இருக்கும்.
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ
நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ
ஆஆ உத்தரவே இன்றி உள்ளே வா நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன் உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம் உன் ஞாபகம்
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
ஆமாம். இதே அன்பு நடமாடும் பாடலுக்கு வேறு விளக்கம் கொடுத்த சம்பவமும் படித்திருக்கிறேன். கண்ணதாசனை பிடிக்கவே முடியவில்லையாம். விச்சு அவரிடம் 'படம் மே மாதம் ரிலீஸ். அதற்குள்ளாவது பாடலை எழுதி விடுவீர்களா' என்று கேட்டதாகவும் கண்ணதாசன் பாடலை மே மே என்றே முடியும் வண்ணம் எழுதிக் கொடுத்ததாகவும் படித்திருக்கிறேன். இப்போது சொல்லி இருப்பது கண்ணதாசன் மகன் என்பதால் இதைக் கொஞ்சம் நம்பலாம்!
ஸ்ரீராம் இந்தப் படம் ஹிட் எல்லாம் இல்லை. ப்ராஃபிட் கிடைத்திருக்கலாம் ஆனால் ப்ளாக் பஸ்டர் என்றால் காதலுக்கு மரியாதையும் பூவே உனக்காகவும்தான் நீங்க சொல்லியிருக்கும் இந்தத் தகவல்தான் சரி.
இந்தப் படல் பாடல்கள் கேட்டதே இல்லை, இருங்க பாட்டு என்னன்னு கேட்டு வரேன்
அருமையான பாடல் செமையா போட்டிருக்கிறார் வித்யாசாகர். யமன் கல்யாணியில்!!! வித்யாசாகரும் நிறைய பாடல்கள் மெலடிஸ் கொடுத்திருக்கிறார. ஹரிஹரன் குரல், சாதனா குரல் சூப்பர். சொல்லணுமா என்ன?
அன்பு நடமாடும் கலைக்கூடமே - இந்த மெட்டு பிடிக்கலைனு திரு லோகச்சந்தர் சொல்லியிருந்தா தான் வியப்பாகப் பார்க்க வேண்டும்.
அருமையான வாசந்தி ராகம். எம் எஸ் வி அவர்களின் திறமை என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தும். அவருக்குப் பிறவியிலேயே ஜீன் லயே இந்த ராக பந்தம் இருந்திருக்க வேண்டும். கண்டிப்பாக. இல்லைனா எந்த ஒரு வித பின் புலமும் இல்லாமல் இந்தக் கலை வர வேண்டும் என்றால்....அவருடைய பல பாடல்களின் ராகம் மெட்டு என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு.
ரெண்டாவது பாட்டு கேட்டதே இல்லை, ஸ்ரீராம். பாடல் வரிகள் நல்லா இல்லை. ஆனால் இசை தூக்கி நிறுத்தி அதை பின்னுக்குத் தள்ளி விடுகின்றது. தேவாவுக்கு மோஹனம் ரொம்பப் பிடிக்குமோ? வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் நினைவுக்கு வருகிறது. சில இடங்கள் அந்தப் பாட்டை நினைவுபடுத்துகிறது.
சூப்பர் பாடல். இதில் கண்ணதாசன் அவர்களின் வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தேன்.
//பொன் மலர்செண்டு முகமாக// இந்த வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குது ஆனா அடுத்த 'இரு வண்டு விழியாக' கரெக்ட்டா அளவு சரியாக இருக்கிறது. முதல் வரியில் பொன் மலர் முகமாக அல்லது மலர் செண்டு முகமாக.....அளவு சரியா இருக்கு.
இந்தப் பல்லவி நீளமா? ம்ம்ம்ம் எனக்கு எப்படி என்று புரியவில்லை.
இன்றைய பாடல்கள் எதையும் நான் கேட்ட நினைவில்லை.
பதிலளிநீக்குகந்தசாமி சார் பகுதி மிகவும் நன்றாக இருந்தது. அரங்கனால்-அரங்கண்ணல்.
வாங்க நெல்லை. மூன்று பாடல்களில் ஒரு பாடலைக் கூட கேட்டதில்லையா? உண்மையில் மூன்றாவது பாடலை நானே இங்கு முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.
நீக்குஅரங்கண்ணல் அவர் அங்கு காபி பேஸ்ட் செய்திருந்ததை நானும் அப்படியே செய்து விட்டேன்!!
கண்ணதாசன் பாடல் பிறந்த கதை, மற்றும் பல நிகழ்வுகளில், எழுதுபவர்களின் கற்பனை அதீதமாக இருப்பதாக எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குஆமாம். இதே அன்பு நடமாடும் பாடலுக்கு வேறு விளக்கம் கொடுத்த சம்பவமும் படித்திருக்கிறேன். கண்ணதாசனை பிடிக்கவே முடியவில்லையாம். விச்சு அவரிடம் 'படம் மே மாதம் ரிலீஸ். அதற்குள்ளாவது பாடலை எழுதி விடுவீர்களா' என்று கேட்டதாகவும் கண்ணதாசன் பாடலை மே மே என்றே முடியும் வண்ணம் எழுதிக் கொடுத்ததாகவும் படித்திருக்கிறேன். இப்போது சொல்லி இருப்பது கண்ணதாசன் மகன் என்பதால் இதைக் கொஞ்சம் நம்பலாம்!
நீக்குஅதே ' மே ' கதை, கர்ணன் படத்தில் இடம் பெற்ற 'இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலுக்கும் சொல்லப்படுவது உண்டு!
நீக்குஆனால் இரண்டு படங்களு'மே' மே வெளியீடு இல்லை என்பது ஆச்சரிய'மே!' அ ம = ஏப்ரல் 1975. க = ஜனவரி 1964.
நீக்குஅதில்தான் மாட்டிக் கொள்கிறார்கள், கதை விடுபவர்கள்! கண்னதாசன் பணக்கஷ்டத்தில் இருந்தாராம். சகோதரர்களிடம் கூட கேட்டுப் பார்த்தாராம் யாருமே கொடுக்கவில்லையாம். பழனி படத்துக்கு பாட்டெழுத கூப்பிட்டார்களாம். "அண்ணன் என்னடா தம்பி என்னடா" பாட்டை எழுதினாராம்!
நீக்கு// அ ம = ஏப்ரல் 1975 //
நீக்குஅதுதான் பாடல் வந்து விட்டதே என்று ஒரு மாதம் முன்னரே வெளியிட்டு விட்டார்களோ!
:))))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா சரணம். வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஅன்பு நடமாடும் கலைக் கூடமே..
பதிலளிநீக்குஆசை மழை மேகமே..
அவன் தான் மனிதன்..
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
நீக்குகன்னித் தமிழ் மன்றமே
சிறப்பு..
பதிலளிநீக்குசிறப்பு..
உண்மை. உண்மை.
நீக்குஸ்ரீராம் இந்தப் படம் ஹிட் எல்லாம் இல்லை. ப்ராஃபிட் கிடைத்திருக்கலாம் ஆனால் ப்ளாக் பஸ்டர் என்றால் காதலுக்கு மரியாதையும் பூவே உனக்காகவும்தான் நீங்க சொல்லியிருக்கும் இந்தத் தகவல்தான் சரி.
பதிலளிநீக்குஇந்தப் படல் பாடல்கள் கேட்டதே இல்லை, இருங்க பாட்டு என்னன்னு கேட்டு வரேன்
கீதா
அது எப்படியோ எவ்வளவு பீத்த படம் வந்தாலும் அதில் நல்ல பாடல்களை தேடினால் அது என் காதை வந்து அடைந்து விடுகிறது.
நீக்குமுதலாவது பாடல் ஓரிரு தடவை கேட்டிருக்கிறேன் ஆற்றலும் காட்சி நன்றாக இருக்கும் . படம்பார்த்ததில்லை.
பதிலளிநீக்குஇரண்டாவது இப்பொழுதுதான் கேட்டேன்.
மூன்றாவது பாடல் கேட்டு இருக்கிறேன் நல்ல பாடல்.
பாடல்கள்அருமை . நன்றி.
நன்றி மாதேவி.
நீக்குஆற்றல் அல்ல ....ஆற்று ஓரம் என வரவேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான பாடல் செமையா போட்டிருக்கிறார் வித்யாசாகர். யமன் கல்யாணியில்!!! வித்யாசாகரும் நிறைய பாடல்கள் மெலடிஸ் கொடுத்திருக்கிறார. ஹரிஹரன் குரல், சாதனா குரல் சூப்பர். சொல்லணுமா என்ன?
பதிலளிநீக்குகீதா
ஆமாம். ஹரிஹரனின் இனிமையான பாடல்களில் ஒன்று.
நீக்குவீடியோ பாடல் காட்சிகளும் நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
விஜய் பாட்டையா சொல்கிறீர்கள்?
நீக்குஆமாம் ஸ்ரீராம்
நீக்குகீதா
அன்பு நடமாடும் கலைக்கூடமே - இந்த மெட்டு பிடிக்கலைனு திரு லோகச்சந்தர் சொல்லியிருந்தா தான் வியப்பாகப் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான வாசந்தி ராகம். எம் எஸ் வி அவர்களின் திறமை என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தும். அவருக்குப் பிறவியிலேயே ஜீன் லயே இந்த ராக பந்தம் இருந்திருக்க வேண்டும். கண்டிப்பாக. இல்லைனா எந்த ஒரு வித பின் புலமும் இல்லாமல் இந்தக் கலை வர வேண்டும் என்றால்....அவருடைய பல பாடல்களின் ராகம் மெட்டு என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு.
கீதா
ஓ.. வாசந்தி ராகமா?
நீக்குரெண்டாவது பாட்டு கேட்டதே இல்லை, ஸ்ரீராம். பாடல் வரிகள் நல்லா இல்லை. ஆனால் இசை தூக்கி நிறுத்தி அதை பின்னுக்குத் தள்ளி விடுகின்றது. தேவாவுக்கு மோஹனம் ரொம்பப் பிடிக்குமோ? வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் நினைவுக்கு வருகிறது. சில இடங்கள் அந்தப் பாட்டை நினைவுபடுத்துகிறது.
பதிலளிநீக்குகீதா
மோகனராகமாக்கும்! வரிகள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் எனக்கு பிடித்த பாடல். ஹரிஹரன் குரலுக்காகவும் அந்த ஒரு வகையான டியூனுக்காகவும்.
நீக்குஅதேதான் ஸ்ரீராம். மோஹனமே......பாடல் நன்றாக இருக்கிறதுன்னு சொன்னேன். ஹரிஹரன் குரல் சொல்லணுமா...ட்யூன் யெஸ்
நீக்குகீதா
பாடலுடன், கூடவே, பாடல்க பற்றிய சம்பவங்கள் கந்தசாமி சார் பதிவுகள் பகிர்வது என்று வித்தியாசமாக வெள்ளி!!!
பதிலளிநீக்குகீதா
ஏதோ ஒரு சிறு மாற்றம். ஒரு முயற்சி.
நீக்குமையேந்தும் விழியாட//
பதிலளிநீக்குசூப்பர் பாடல். இதில் கண்ணதாசன் அவர்களின் வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தேன்.
//பொன் மலர்செண்டு முகமாக// இந்த வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குது ஆனா அடுத்த 'இரு வண்டு விழியாக' கரெக்ட்டா அளவு சரியாக இருக்கிறது. முதல் வரியில் பொன் மலர் முகமாக அல்லது மலர் செண்டு முகமாக.....அளவு சரியா இருக்கு.
இந்தப் பல்லவி நீளமா? ம்ம்ம்ம் எனக்கு எப்படி என்று புரியவில்லை.
கீதா
இந்த சந்தேகங்கள் உங்களுக்கு இந்நேரம் தீர்ந்திருக்கும்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் தீர்ந்தது...பாடியும் பார்த்துவிட்டேன். பொன்மலர் செண்டு முகமாக...பொன்மலர் எடுக்கும் போது டக்கென்று இணைத்து எடுப்பது புரிந்தது.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
ஆஹா!!! படம் ஆஹா!!! வேதான். பிடித்த படம். ரசித்த படம்.
பதிலளிநீக்குமுதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது....பாட்டு அருமையான பாட்டு மெட்டு. ரசித்த பாடல், ஸ்ரீராம். அருமையான கல்யாணி ராகம்!
ஆரம்ப இசையும் நன்றாக இருக்கும்....ஹரிஹரனின் குரல் செமை....
கீதா
அருமையான பாடல். இதன் ஹிந்தி வெர்ஷனும் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீக்குஹிந்தி வெர்ஷனும் கேட்டிருக்கிறே ந், ஸ்ரீராம்.
நீக்குகீதா
இன்டெர்லூட் இசை முடியும் முன் டன்டன்டன டன்டன்டன - இந்த பிட் வேறு ஒரு கமர்ஷியலில் இல்லைனா ம்யூஸிக் லூப்சில் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
அப்படியா? என்ன விளம்பரம்?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஎல்லா பாடல்களையும் கேட்டேன், ஆனால் எனக்கு கடைசி பாடல் மட்டுமே பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஓ... முதல் இரண்டு பாடல்கள் உங்களை கவரவில்லையா?
நீக்கு//அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே
பதிலளிநீக்குகண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே”//
நல்ல பாடல் பாடல் பிறந்த கதை அருமை.
நன்றி கோமதி அக்கா.
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்கு