அமைதியான ஒரு அலுவலக வேலை நாள். சிறிய சலசலப்பான குரல்களுடன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.
திடீரென பக்கத்துக் கட்டத்திலிருந்து அழுகுரல் கேட்டது.
அதுவும் எங்கள் அலுவலகத்தின் பகுதிதான்.
"ஸார்....ஸார்... கேஷியர் பெஞ்சமின் செத்துப் போயிட்டார் ஸார்..." பியூன் கோவிந்த் ஓடிவந்து சொன்னான்.
எப்போதும் அவரைச் சுற்றி நாலு பேராவது இருந்து கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரியம்தான் போலும்.
மற்றவர்கள் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'நீங்கள் அப்படி எல்லாம் வாங்கித் தருவது இல்லை' என்ற மறைமுகக் குற்றச்சாட்டு இருக்கும்.
பெஞ்சமின்....
கலகலப்பாகப்
பேசுவார். பாக்கு மென்றுகொண்டே இருப்பார். யாரைப் பார்த்தாலும் சத்தமாக
அவர் பெயர் சொல்லி அழைத்து ஏதாவது குசலம் விசாரிப்பார். எல்லோர் குடும்ப
விவரமும் அவருக்கு அத்துபடி.
"வள்ளி! தீபாவளி முன்பணம் வேண்டாமா... நல்லது! நீ அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் எடுத்துக்கறேன். மாசா மாசம் தவணையை நான் உன் கையில் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே..."
இந்த
'யார் கிட்டயும் சொல்லாதே.. உனக்காகத்தான்' என்கிற மந்திர வார்த்தைகள்தான்
சம்பந்தப்பட்டவர்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க வைத்தது போலும்!
"நேற்றுதான் ஸார் 'பார்'ல வச்சு பெஞ்சமின் ஸார் கிட்ட பத்தாயிரம் வாங்கினேன். யாரும் இல்லை பக்கத்துல...இப்போ தர வேண்டியதில்லை பாருங்க!"
"என்ன சீனு... தப்பில்லை?"
"அவர் செஞ்சது...?"