மயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.4.13

ஞாயிறு 196:: ஆடாத மனமும் உண்டோ?


               
எதைக் கண்டு ஏங்குகிறாய் 
மயிலே..?
வெளியிலிருக்கும் 
வெப்பத்துக்கு 
தாகத்துக்குக் கூட 
நீரில்லை 
சிறையாயிருந்தாலும் 
உள்ளேயே வந்து விடுகிறேன் 
என்று 
ஒற்றைக் கால் தவமோ...?

  
=========================================

மானே...
உள்ளே என்ன செய்கிறாய்?
நீயும் வாயேன்.
மானாட, மயிலாட 
என்று ஆடலாம்!


=========================================

வானிலை அறிக்கையைக் 
கொஞ்சம் 
சத்தமாக வையுங்கள் 
ரமணன் சொல்கேட்டு 
மழை வரும் நாள் 
அறிந்து 
ஆடுகிறேன்..


=========================================

இந்த மயில் 
ஆட 
வேண்டுமென்றால் 
எங்கள் ப்ளாக் 
ஆ'சிரி'யர்கள் 
பாட வேண்டும்...

       
எங்கள் ப்ளாக் ஆ'சிரி'யர்கள் 
பாடினால், 
எங்கள் ப்ளாக் வாசகர்கள் 
ஓடிவிடுவார்களே!!