ஞாயிறு படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.4.14

ஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்


சிறு மரநிழலின் பின்னணியில் கோவில். சிறு மர நிழலில் ஓய்வெடுக்கும் ஜீவன் தெரிகிறதா?

13.4.14

ஞாயிறு 249 ::

             
இராசராசசோழன் : "யப்பா... என்ன வெய்யில்? என்ன வெய்யில்? மாமன்னனாய் இருந்தாலென்ன? எனக்கும் தாகம் இருக்கும்தானே? பானைகளில் தண்ணீரும். குளிர்சாதனப்பெட்டியும் அருகில் நான் வைத்திருப்பதில் உங்களுக்கென்ன ஆட்சேபணை? கும்பிடறேன். போய் ஜோலியைப் பாருங்கப்பா..."    
 


     

6.4.14

ஞாயிறு 248:: சொல்லுங்க !



ஒளிந்து கொண்டிருப்பது வெட்கத்திலா, யாரும் கவனிப்பாரற்ற வேதனையிலா?


(நிற்க. இன்றைய பதிவில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அதை சரியாகக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு பாயிண்டுகள் உண்டு!)  
             

7.4.13

ஞாயிறு 196:: ஆடாத மனமும் உண்டோ?


               
எதைக் கண்டு ஏங்குகிறாய் 
மயிலே..?
வெளியிலிருக்கும் 
வெப்பத்துக்கு 
தாகத்துக்குக் கூட 
நீரில்லை 
சிறையாயிருந்தாலும் 
உள்ளேயே வந்து விடுகிறேன் 
என்று 
ஒற்றைக் கால் தவமோ...?

  
=========================================

மானே...
உள்ளே என்ன செய்கிறாய்?
நீயும் வாயேன்.
மானாட, மயிலாட 
என்று ஆடலாம்!


=========================================

வானிலை அறிக்கையைக் 
கொஞ்சம் 
சத்தமாக வையுங்கள் 
ரமணன் சொல்கேட்டு 
மழை வரும் நாள் 
அறிந்து 
ஆடுகிறேன்..


=========================================

இந்த மயில் 
ஆட 
வேண்டுமென்றால் 
எங்கள் ப்ளாக் 
ஆ'சிரி'யர்கள் 
பாட வேண்டும்...

       
எங்கள் ப்ளாக் ஆ'சிரி'யர்கள் 
பாடினால், 
எங்கள் ப்ளாக் வாசகர்கள் 
ஓடிவிடுவார்களே!! 
              

17.2.13

ஞாயிறு - 189 :: வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்!


 

 
 
மேலே உள்ள படத்திற்கும், அதற்கும் மேலே உள்ள படத்திற்கும் குறைந்த பட்சம் 7 வித்தியாசம் உள்ளன.
கண்டுபிடியுங்கள்.
கருத்துரை பதியுங்கள்!