வாசகர் பதில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசகர் பதில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.1.13

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 1 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  


==================================================================== 
    


1) குற்றங்கள் அதிகம் செய்வது படித்த மக்களா, படிக்காத மக்களா?
 
2) இலக்கியங்கள் எனப்படுவது சமூகத்தையோ, கலாச்சாரத்தையோ மாற்றும் என்று நம்புகிறீர்களா?



           
3) உங்கள் வாழ்வில் உங்களை மிக அதிகம் பாதித்த மரணம் எது? 



      


            


                       

27.12.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.
     
எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
====================================================================


1) ரொம்ப சுவாரஸ்யமான கேள்வி எது? சுவாரஸ்யமான பதில் எது?

2) கேட்கப்பட்ட கேள்வி (கேட்டபின்) யாருக்குச் சொந்தம்? கேட்டவருக்கா, கேட்கப்பட்டவருக்கா?
!

3) 2012ன் மிக நல்ல நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?  

                            

30.10.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10

           
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   

இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  

 ======
           

1) வீடுதோறும் சூரியசக்தி மின்சாரம் உபயோகப்படுத்தும்படி அரசாங்கம் சொல்கிறதே... அல்லது காற்றாலை மின்சாரம் தயாரிக்கவும் அறிவுறுத்தபடுகிறதே... இதனால் தேவை பூர்த்தியாகும் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு செலவு இதற்கு பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? மின்சாரம் தயாரிக்கக் காற்றாலைக்கு காற்றின் வேகம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்கவேண்டும்?
               
2) விடுமுறை இல்லாத விடுமுறை - இவர் பிறந்த நாளில் மாணவர்கள் எல்லோரும் பக்கெட்டும் கையுமாகச் சென்று பொது இடங்களை சுத்தம் செய்வார்கள். யாருடைய பிறந்த நாள் இது? 
           
3) அனுபவமின்மை காரணமாக இளைஞர்களும், விரைந்து  செயல்படமுடியாத முதியவர்களும் அரசியலை விட்டு விலகுவது நன்று என்று நினைப்பது பற்றி உங்கள் கருத்து....
                

28.9.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 09


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...


மூன்றுமே சுஜாதா பதில் சொன்ன கேள்விகள். 
நீங்களும் படித்திருக்கக் கூடும்! 
படித்திருந்தாலும் உங்கள் பதில்கள் எங்களுக்கு முக்கியம். 
வாசக நண்பர்களின் பதில்கள் வந்தவுடன் இந்தக் கேள்விகளுக்கான சுஜாதா பதில்கள் தனிப்பதிவில் தரப்படும்!!


1) விதியை நம்புகிறீர்களா?

2) கடவுளா.... விஞ்ஞானமா?


3) நம்பிக்கைத் துரோகியை மன்னிக்க முடியுமா?

                      

23.8.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 08


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 

இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...



1) நீங்கள் அழுது விட்டேன் என்று சொல்லக் கூடிய, அல்லது அழுகையே வந்தது என்று சொல்ல நேர்ந்த ஒரு சந்தர்ப்பம் ஒன்றைச் சொல்லுங்களேன்....
[உள் பெட்டியில் குழந்தையின் டைரிக் குறிப்பைப் பார்த்து அழுது விட்டேன் என்று சொல்லக் கூடாது!!  :)))...]

2) பிறரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் என்ன? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன?


3) ஐ.க்யூ அதிகம் இருப்பவர்களுக்கு பொதுவான குணங்கள் உண்டா?
(இது சுஜாதாவிடம் கேட்கப் பட்ட கேள்வி. அடுத்த பதிவு வெளியிடப் பட்டவுடன் சுஜாதா இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தருகிறேன் - அதுவரை யாரும் இந்தக் கேள்விக்குத் தங்கள் பதிலுடன் இதையும் சொல்லாவிட்டால்! )

20.12.11

வாசகர்களுக்குக் கேள்விகள் 1

                          
பத்திரிகைகளில் கேள்வி பதில் பகுதி வரும். வாசகர்கள் கேள்விகளுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் பதில் சொல்வார்கள்.
                
இங்கு ஒரு மாறுதல்.   
                
நீங்கள் பதில் சொல்ல இங்கு கேள்விகள்.
              
1)  இதுவரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இன்னும் பத்து வருடங்களில் வரும் என்று எதிர்பார்க்கும் அல்லது வரவேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்ன?
 
              
2) வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நபரும், அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்வியும்... (அல்லது கேள்விகளும்) 
          
3)  இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லாத ஆனால் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?