நேற்று அது மாதிரி ஒருநாள்! வீட்டின் மிக வயதான மெம்பர் வயிற்றுக் கோளாறால் கஞ்சி, மோர்சாத டயட்டுக்குப் போக, தடை நீங்கியது!
உரித்த சின்ன வெங்காயமும் உரித்த பூண்டும் எடுத்து இரண்டாய், நான்காய் நறுக்கிக் கொண்டோம். (முழுதாகப் போடுவதும் உண்டு. ஆனால் அப்போது வெங்காயம் பூண்டின் சுவை குழம்பில் இறங்காது என்பது என் மனப்ப்ரமை!)
வேக வைத்திருந்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து எடுத்துக் கொண்டு நறுக்கிய (கொஞ்சமாக) வெங்காயம், நறுக்கிய அல்லது நசுக்கப்பட்ட ஓரிரண்டு பூண்டுப் பல் (இதிலுமா!!) சேர்த்து வதக்கி (தாளிக்கிற பிசினஸ் எல்லாம் கிடையாது!) வாணலியிலிட்டு வதக்கி, வதங்கியதும் உருளைக்கிழங்கைப் போட்டுத் திருப்பிக் கொண்டு, உப்பு, காரப்பொடி (அல்லது சாம்பார்ப்பொடி) போட்டுத் திருப்பிக் கொண்டோம். இறக்கும் நேரத்தில் லேசாக மிளகுப் பொடி தூவி, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்து மல்லித் தழைகளைத் தூவி இறக்கி விட்டோம்.

