ஏப்ரல் பத்தாம் தேதி. அயோத்தி வந்து விட்டது என்று சொன்னார்களே தவிர, தங்குமிடம் அவ்வளவு எளிதாக வரவில்லை. என்ன காரணமோ... குறுகலான தெருக்களோ, இரவு நேரம் தொந்தரவு இருக்கக்கூடாது என்கிற காரணமோ.. எங்கள் பஸ் ரிவர்ஸிலேயே மெ......து.....வா....ய் தெருத் தெருவாய் நகர்ந்து பொறுமையை சோதித்த வண்ணம் தங்குமிடம் அடைந்த பொழுது இரவு ஒரு மணி ஆனாலும், அறையை அடைந்த பொழுது ஒன்றே முக்கால். பஸ்ஸிலேயே நீண்ட நேரம் அமர்ந்து காத்திருந்தோம், எங்கள் அறையை அறிவதற்கு! ராமனின் பொறுமை தேவைப்பட்டது!