Chennai Book Fair லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Chennai Book Fair லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.12.10

புத்தகத் திரு விழா...வாசகர்களுக்கு ஒரு கேள்வி...




முப்பத்தி நான்காவது புத்தகத் திருவிழா ஜனவரி நாலாம் தேதி முதல் தொடங்குகிறது.

போனவருடம் பொங்கலுக்கு முன்னாலேயே முடித்து விட்டார்கள் என்று ஞாபகம். இந்த முறை ஜனவரி பதினேழு வரை இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷம். பொங்கல் விடுமுறையில் கொஞ்சம் மேயலாம்.

"போன வருஷம் வாங்கிய புத்தகங்கள் எல்லாம் படிச்சாச்சா"

இல்லைதான். பல புத்தகங்கள் ஏற்கெனவே தொடராக் வந்த போது படித்தவை. நம் கையிருப்பில் இருக்கட்டுமே என்று வாங்கி வைத்தவை.


"ஏற்கெனவே படித்ததை ஏன் வாங்க வேண்டும்?"

ஏற்கெனவே படித்து நல்லாயிருக்கு என்று தெரிந்ததாலும் அவ்வப்போது மீண்டும் படித்து இன்புறவும்...! புத்தகம்தானே? கெட்டா போகப் போகிறது?


படிக்காத புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டும். அதற்காக இந்த வருடம் புத்தகங்கள் வாங்காமல் இருக்க முடியுமா? இது ஒரு போதை...


சென்ற வருடம் பதிப்பகங்கள் தந்த லிஸ்ட்டை செக் செய்து பார்க்கலாம் அவர்கள் ஏதாவது ஒரு மொத்த லிஸ்ட் தருகிறார்களா தெரியவில்லை.

இந்த வருடம் என்னென்ன புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு லிஸ்ட் போட வேண்டும்.

இதில்தான் வாசகர்களையும் கலந்து கேட்கலாம் என்பது எங்கள் எண்ணம்.

நண்பர்களே,

நீங்கள் ஒரு லிஸ்ட் இந்த வருடம் வாங்க தயாராக இருப்பீர்கள். உங்கள் லிஸ்ட் என்ன? இங்கு பகிர்ந்து கொண்டால் எல்லோருக்குமே ஒரு பகிர்தல் கிடைத்து நம் எல்லோருக்குமே சில புத்தகங்கள் நம் லிஸ்ட்டில் சேர்க்க முடியும். நிறைய பேர் நாஞ்சில் நாடன் புத்தகம் வாங்குவார்கள் என்று நம்பலாம். அதுபோல நேற்று ஞாயிற்றுக் கிழமை வெளியிடப் பட்ட கீழைக் காற்றின் எட்டு நூல்களில் ஏதாவது இடம்பெற்றிக்கலாம். மற்ற சக பதிவர்கள் ஏதாவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.


எங்கள் லிஸ்ட்டில் வண்ண நிலவன் சிறுகதைகள், அசோகமித்திரன் சிறுகதைகள் சேர்க்க சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாஞ்சில் நாடன் புத்தகம், சென்ற முறை சாரு புத்தகம் இரண்டு வாங்கியதால் இந்த முறை அவரின் ஸீரோ டிகிரி...

கண்ணதாசன் கவிதைகள் வாங்க வேண்டும்...திரைப் பாடல்கள் அனைத்தும் சேர்ந்து இருக்கிறதா என்று பார்த்து. வைரமுத்து கவிதைகள் சினிமாப் பாடல்கள் சேர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அறுநூறு ரூபாயாம்...ஐயோ...

உடன் வரும் நண்பர்களில் இரண்டு வகை உண்டு... ஒருவகை நண்பர்கள் "அதே புத்தகங்கள்....புத்தகம் புத்தகம் புத்தகமாய்..." என்று சொல்லியபடி முதுகில் கை வைத்து நெம்பி வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்...ஓரிரு புத்தகமும், ரவா தோசையும் பஜ்ஜியும்தான் செலவு!

இரண்டாவது வகை நம்மை விட அதிக ஆர்வம் பிடித்தவர்கள். வாங்கிய புத்தகங்களை தூக்க ஆள் அழைத்து வருபவர்கள்...


கம் ஆன்... உங்கள் தெரிவுகளை அள்ளி விடுங்கள்...


படங்கள் : நன்றி கூகிள், மூவிகேலரி.இன், கனெக்ட்.இன்.,