ரொம்ப சிம்பிள் ஊறுகாய் இதுதான்.
குறுகிய நேரத்தில் தயாரிக்கலாம்; ஒன்றிரண்டு நாட்களுக்குள் உபயோகித்து விடுதல் நலம்.
காரட் கால் கிலோ.
குருத்து இஞ்சி ஐம்பது கிராம்.
எலுமிச்சம்பழம் அரை மூடி.
பிஞ்சு பச்சை மிளகாய் பதினைந்து.
நல்ல காரட், தலைப்பக்கம் பச்சை இல்லாமல், தலைப்பகுதி பருத்தும், நுனி வரை சீராகக் குறுகியும் இருக்கும். நல்லா ஆரஞ்சு வர்ணத்தில் இருக்கும். காரட்டை நன்றாக ஓடுகின்ற தண்ணீரில் சுத்தமாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும்.
நறுக்கிய காரட் துண்டுகளில், உப்புத்தூள் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை இட்டுக் கலக்கி, எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழியவும். தேவையானால், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்க்கலாம்.
குருத்து இஞ்சி கிடைத்தால், அதை அப்படியே கழுவி, சிறு துண்டுகளாக செய்து கொள்ளலாம். சாதாரண இஞ்சிதான் கிடைத்தது என்றால், அதைக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
பச்சை மிளகாய்களையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இஞ்சி + பச்சை மிளகாய் துண்டுகளை, காரட் துண்டுகளோடு சேர்த்து ஊறவிடவும்.
(சிலர், இதோடு சாம்பார் வெங்காயத்தை உரித்து, சிறு துண்டுகளாக செய்து சேர்ப்பார்கள்)
சுவையான ஊறுகாய் தயார்.





