தமிழ்நம்பி இயற்றிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
SMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11.10.24
30.8.24
8.12.23
வெள்ளி வீடியோ : இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும்.
அய்யப்பன் பாடல்கள் என்றாலே கே வீரமணியும், பெங்களூர் ரமணி அம்மாளும்தான்.
5.3.14
உள்பெட்டியிலிருந்து 3 2014
ஜோக்....ஜோக்...ஜோக்...!
வாத்தியார் : ஏண்டா டெய்லி என்னைப் பார்த்ததும் மட்டும் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கறே?"
மாணவன் : "டாக்டர்தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போடச் சொன்னார்!"
*******************************************************************
ச்சே.... என்ன கண்டுபிடிப்பு!
ச்சே.... என்ன கண்டுபிடிப்பு!
உலகம் எவ்வளவு வேகமாக வெளியே மாறுதலடைந்தாலும் அதைப் பகிர நாம் தேடுவதென்னவோ நம் பழைய நண்பர்களைத்தான் இல்லை?
******************************************************************
அடுத்த கண்டுபிடிப்பு!
ரசாயன ஆயுதத்தைவிடத் தீவிரமான ஆயுதம் நேசிப்பவர்களின் மௌனம்.
****************************************************************************
ச்ச்ச்சே.... என்ன உலகமடா....
நம்மை
விரும்புபவர்களை அலட்சியம் செய்கிறோம். அலட்சியம் செய்பவர்களை
விரும்புகிறோம். புன்படுத்துபவர்களை நேசிக்கிறோம். நேசிப்பவர்களை
புண்படுத்துகிறோம். விந்தையான உலகம்!
*********************************************************************
உச்சியிலிருந்த அழகிய ஒற்றை மலரைப் பறிக்க மரம்
ஏறியவன் தவறி விழுந்தானாம். கடவுளைச் சபித்தவண்ணம் கண்திறந்த போதுதான்
தெரிந்ததாம் அழகிய தாமரை மலர்களின் நடுவே விழுந்திருப்பது. நம்
விருப்பங்களைக் கடவுள் பறிப்பதில்லை. இன்னும் அதிகமான வாய்ப்புகளை அள்ளித்
தருகிறான்.
***********************************************************
வெள்ளைமனம்
ஆசிரியர் கரும்பலகையை அழிக்கும்போது குழந்தையும் தான் எழுதியதை ரப்பரால் அழிக்கிறது. குழந்தை மனம்!
*************************************************************
யாதோங் கீ பாராத்...
நினைவுகள்
விநோதமானவை. கூட்டத்திலிருக்கும்போது நம்மை அண்டுவதில்லை.
தனித்திருக்கும்போது ஒரு பொதுக்கூட்டம் போலவே சூழ்ந்து கொள்கின்றன.
******************************************************************
எது பாஸிட்டிவ்?
மிகச் சிறப்பான விஷயங்கள் நல்லதாக நடக்கவேண்டும்
என்று எதிர் பார்ப்பது பாஸிட்டிவ் எண்ணம் அல்ல. எது நடந்தாலும் ஏதோ
நல்லதுக்குத்தான் நடந்திருக்கிறது என்று எண்ணுவதே பாஸிட்டிவ் எண்ணம்.
*****************************************************************
அம்மாடி... இதுதான் காதலா...அட ராமா...
ஒரு இனிய சண்டைக்குப் பின்,
காதலன் : "எதற்காக எனக்கு பிளாங்க் மெசேஜாக அனுப்புகிறாய்?"
காதலி : "ஏனென்றால் நான் உன்னுடன் பேச மாட்டேன்!"
******************************************************************
ஆமாம்... கஷ்டமுங்கோ...
அன்பின் அளவை அளப்பது கடினம். அன்பின் காரணம் அறிவதும் கடினம்.
****************************************************************
டீலா?
"நீங்கள் தூங்குமுன் உங்களைப் புண்படுத்திய
எல்லோரையும் மன்னித்து விட்டால், நீங்கள் விழித்து எழுமுன் உங்களை நான்
மன்னித்து விடுவேன்" - சாய்ராம்.
***************************************************************
தவறில்லை...
தவறுகள் வெற்றியின் ரகசியக் கதவு. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கின்றன. அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கின்றன.
*******************************************************************
பலரும் சிலரும்!
*************************************************************
30.10.13
உள்பெட்டியிலிருந்து 10 2013
அன்பு மனித பலவீனத்தைக் காட்டுகிறது. சூழ்நிலை உண்மை மனிதனைக் காட்டுகிறது!

சிரிப்பைவிடக்
கண்ணீரின் மதிப்பு எப்போது தெரியும்? எல்லோருக்கும் முன்னால் சிரிக்க
முடியும். ஆனால் நெருக்கமானவர்கள் முன்னே மட்டுமே அழ முடியும்!
இவருக்கு இப்படி ஒரு ஆதங்கம்!
புதிய மனிதர்களுடன் பேசாதே என்று அறிவுரை கூறும் அதே பெற்றோர்கள்தான் காதல் திருமணத்தை எதிர்த்து, நிச்சயிக்கப்படும் திருமணத்தை ஆதரிக்கிறார்கள்.
உங்கள் கண்ணீரைத் துடைப்பவரா? அவர் நினைவினாலேயே கண்ணில் நீரை வரவைப்பவரா? இருவரில் யார் உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்?
நிரூபிக்க முடியாவிடில் குற்றம் சாட்டாதீர்கள்.
மன்னிக்க முடியாவிட்டால் குறை சொல்லாதீர்கள்.
மறக்க முடியாவிட்டால் மன்னிக்காதீர்கள்.

எந்தச் செல்வத்தினாலும் வாங்க முடியாதது நேரம். அந்த நேரத்தை உங்களுக்காகச் செலவழிப்பவர்களைப் புண்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களிமேல் வைத்திருக்கும் மதிப்பைப் புரிந்துகொள்ளுங்கள்.
சினிமாத் திரை எல்லா கேரக்டர்களையும் பிரதிபலித்தாலும் வெண்மையாகவே இருப்பது போலவே நம் மனதையும் வைத்துக் கொள்ளலாமே...!

நீங்கள் அறிந்ததற்கும், நீங்கள் உணர்வதற்கும் நடக்கும் யுத்தமே பெரிய யுத்தம்!
நெருக்கம் மறையும்போது சம்பிரதாயங்கள் பிறக்கின்றன.
வசதியான வரவைவிட உள்நுழைவைவிட வெற்றிகரமான
வெளியேற்றம் நல்லது. பிரவேசிக்கும் பொழுதின் கைத்தட்டலை விட, வெளியேறிய
பின்னும் நாம் நினைக்கப்படுவது சிறந்தது.
உங்கள்மேல் ஒருவர் கோபம் கொள்வது குறைந்து வருகிறது என்றால்
நிச்சயம் அவரது வாழ்வில் உங்களுக்குள்ள முக்கியத்துவம் குறைகிறது என்று
பொருள்!

சரியான மனிதர்களுடன் ஒத்துப் போவது எப்போதுமே தவறான மனிதர்களுடன் விவாதிப்பதைவிடச் சிறந்தது. பொருளில்லா வார்த்தைகளைவிட, அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.
24.9.13
உள் பெட்டியிலிருந்து 9 2013
<> எது இழப்பு?
மரணம் என்பது பெரிய இழப்பில்லை. உயிரோடு இருக்கும்போதே உறவுகள் பிரிவதுதான் பெரிய இழப்பு.
<> பொறுப்பான பதில்!
பதிலெதுவுமே சொல்லாமலிருப்பதுகூட ஒரு பதில்தான்! நாம் செய்யாமலிருக்கும் ஒரு செயலுக்குக் கூட நாமே பொறுப்பு!
<> வேண்டாமே...!
முழு புரிதல் உணர்வு இல்லாமல் ஒரு உறவை நெருக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம். சிறு சச்சரவில் ஒரு உறவை முறித்துக் கொள்ளவும் வேண்டாம்.
<> ஜோக் ஜோக்!
பேஷன்ட் : "நீண்டநாள் உயிர் வாழ வழி ஏதும் இருக்கா?"
டாக்டர் : "கல்யாணம் செய்துகொள்!"
பேஷன்ட் : "அது உதவுமா?"
டாக்டர் : "இது மாதிரி விபரீத எண்ணங்களைத் தடுக்கும்"<> நட்பு பற்றி இரண்டு விஷயம்!
1) நட்பு என்பதைப் பற்றி எல் கே ஜி மாணவன் சொன்னது : டை இல்லாமல் நான்
ஸ்கூல் சென்றபோது என் நண்பன் தான் அணிந்திருந்த டையை அவிழ்த்து எடுத்து
பைக்குள் வைத்துக் கொண்டதுதான் நட்பு!
2) உலகின் வெற்றிகரமான. சந்தோஷமான நண்பர்களுக்கிடையே
ஒத்த உணர்வு இருப்பதில்லை. ஆனால் தங்களிடையே இருக்கும் வித்தியாசங்களைப்
பற்றிய புரிதல் இருக்கிறது.
<> உண்மைதாங்க...
புன்னகையும் தூக்கமும் மனிதனின் மகிழ்ச்சிக்கு செலவில்லாத மருந்துகள். நிம்மதியாய்த் தூங்கிப் புன்னகையுடன் எழுவோம்.
நம்முடன் ஒத்துப் போகிறவர்களுடன் வாழ்வது நமக்கு
வசதியாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் நாம் வளர்வது எதிர்மறைக் கருத்து
கொண்டவர்களுடன் பழகும்போதுதான்.<> குழப்பாதீங்க...!
"கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி நம்புகிறீர்கள்?"
இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியின்மை இல்லை என்பதற்கான அத்தாட்சியில்லை"
<> சக்களத்தி!
சிலசமயங்களில் மூளை ஏற்கெனவே அறிந்ததை ஒத்துக்கொள்ள இதயத்துக்கு/மனதுக்கு சற்று அதிக நேரம் பிடிக்கிறது.
சிலசமயங்களில் மூளை ஏற்கெனவே அறிந்ததை ஒத்துக்கொள்ள இதயத்துக்கு/மனதுக்கு சற்று அதிக நேரம் பிடிக்கிறது.
<> சில அறிவுரைகள்..
வெற்றிக்கான ஒரு வரி! "உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே!" அல்லது "உன்னிடமே நீ பொய் சொல்லாதே!"
மனதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது
சிறந்த தத்துவம். வெற்றி மகிழ்ச்சி தருமோ, தராதோ.. மகிழ்ச்சியான மனநிலை
நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்.

பல்லிருக்கும் வரை வாய்விட்டு நகைத்து விடுங்கள். புன்னகையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
26.6.13
உள்பெட்டியிலிருந்து 62013
தத்துவம் நம்பர்........
- நிலையில்லா நம் வாழ்வில், எதையும் நிரந்தரமாக அடைய ஆசைப்படுகிறோம்!
- தற்காலிகக் காரணங்களுக்காக நிரந்தர உறவுகள் உடைவதில்லை!
- உங்கள் சந்தோஷத்தை மனம் விட்டுச் சொல்லுங்கள். உங்கள் கஷ்டத்தை உங்கள் மனதில் உள்ளவரிடம் சொல்லுங்கள்.
- கனவுக்கு முயற்சியில்லா உறக்கம் தேவை. இலக்கை அடைய உறக்கமில்லா முயற்சி தேவை.
- நீங்கள் ஒரு நல்ல சந்தோஷமான நாளைப் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஏனெனில் உங்கள் சந்தோஷம் உங்களைச் சேர்ந்த எல்லோரையும் சந்தோஷத்தில்
வைக்குமே...
- மனிதர்கள் நேசிக்கப்படவும், பொருள்கள் உபயோகிக்கப்படவும் படைக்கப்படும் இவ்வுலகில் அப்படியே மாற்றி நடப்பது விந்தைதானே?
- நீங்கள் ரோஜாவைப் போல மலர்ந்து மணம் பரப்ப விரும்பினால் முட்களுடன் அனுசரித்து வாழும் கலையைப் பயில வேண்டும்.
மாணவ சக்தி!
15 மதிப்பெண் கேள்வியாக வந்திருந்தது "எறும்பை எப்படிக் கொல்வது?" என்ற கேள்வி. மாணவன் எழுதினான்.
சர்க்கரையுடன்
மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். எறும்பு வசிக்கும் இடத்துக்கு அருகில் அதை
வைக்கவும். அதை அந்த எறும்பு சாப்பிட்டதும் தண்ணீரைத் தேடி அலையும்.
தண்ணீர்த் தொட்டி அருகே அதை விடவும். அது குடிக்கப் போகும்போது அதை அந்தத்
தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளி விட்டு விடவும். நனைந்த எறும்பு தன்னைக் காய
வைத்துக் கொள்ள நெருப்பின் அருகே செல்லும்போது அதை நெருப்புக்குள் தள்ளி
விட்டு விடவும். உள்ளே ஒரு வெடிகுண்டையும் போடவும். காயம் பட்ட எறும்பை
ஆஸ்பத்திரியில் சேர்க்கவும். அங்கு சிகிச்சையில் இருக்கும் எறும்பின்
'ஆக்சிஜன் மாஸ்க்'கைக் கழற்றி விட்டு விடவும். எறும்பு செத்து விடும்.
(மாணவர்களுடன் விளையாடாதீர்கள்! நாங்கள் 15 மதிப்பெண்ணுக்கும் எறும்பைக் கொல்வோம்)
என்ன கஷ்டம்டா சாமி!
அன்பைச் சொல்லிவிட ஒரு நொடி போதும்; ஆனால் அதை நிரூபிக்க ஒரு ஆயுள் வேண்டும்!
பொய்தானே....!
மனசுக்கு ரொம்பப் பிடித்தவர்களிடமிருந்து மெசேஜ் / மெயில் வந்தால் அதை அவர்கள் குரலிலேயே நம் மனம் வாசிக்கும்!!
அடச்சே.... ரொம்பப் பழைய ஜோக்குங்க....!
ஒரு ப்ரெஷர் குக்கர் 15 வது மாடியிலிருந்து விழுந்தும் ஒன்றும் ஆகவில்லை. ஏன் தெரியுமா? அது பட்டர்ஃப்ளை குக்கர்.
அப்படியே அசத்திடுவோம்ல.....
யாராவது என்னை 'உங்கள் வாழ்வில் உங்களுக்கு மிக முக்கியமானவர் யார்?' என்று
கேட்டால் 'யார் என்னை அடுத்தவர்களுக்காகத் தவிர்க்காமல் இருக்கிறாரோ
அவர்தான்' என்று சொல்வேன்!
ஏற்கெனவே சொல்லியாச்சோ...
ஆழமான அன்பு வைத்திருப்பவர்களால்தான் அதிகமான வலியும் ஏற்படுகிறது.
கவித...கவித..
1) காற்றுக்கும்
மாணவனுக்கும் ஒரே குணம்!
படிக்கப்படாமலேயே
புத்தகத்தின் பக்கங்கள்
புரள்கின்றன...
2) இரண்டு மிருகங்கள்
எப்போதும்
மனதில்
ஒன்றுக்கொன்று
முட்டிக் கொண்டே இருக்கின்றன.
நல்லது ஒன்று, தீயது ஒன்று!
எது ஜெயிக்கும்?
எதற்கு நாம்
உண(ர்)வூட்டி வளர்க்கிறோமோ
அதுதான்!
மழலை இன்பம்
அம்மா : "கண்ணா... அப்பாவைக் கூப்பிடு"
குழந்தை : "அப்பா...இங்கே வாடா"
அம்மா : "கண்ணா... அப்பாவை மரியாதையாக் கூப்பிடணும்"
குழந்தை : "அப்பா... இங்கே மரியாதையா வாடா..."
தத்துபித்துவம்
உங்களையே நீங்கள் அணைத்துக் கொள்ள முடியுமா? உங்கள் தோளில் நீங்களே சாய்ந்து அழ முடியுமா? வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வதுதான்!
நாம் நமது தோற்றத்தைப் பற்றி மிகவும் கவலைப் படுகிறோம். உண்மை என்னவென்றால் நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் அது தேவை இல்லை. நம்மைப் பிடித்தவர்களுக்கும் அது தேவை இல்லை!
30.4.13
உள் பெட்டியிலிருந்து 4 2013
ஜோக்க்காம்...
1) இண்டர்வியூ எடுப்பவர் : "எந்த உயிரினம் வானில் பறந்தாலும் பூமியில் குழந்தை பெறும்?"
மிஸ்டர் எக்ஸ் : [பதில் தெரிந்த உற்சாகத்துடன் சத்தமாக] "ஏர்ஹோஸ்டஸ்"
2) பார்ட்டி முடிந்து வழக்கம்போல லேட்டாகத் திரும்பிய கணவனிடம் மனைவி, "என்னை நாலு நாளுக்குப் பார்க்க முடியலைன்னா என்ன பண்ணுவீங்க?"
எதிர்பாராமல் ஒரு பரிசா..கணவன் குதூகலமாக "நன்றாயிருக்குமே" என்றான்.
திங்கள் கடந்து செவ்வாய் புதன் வியாழன் என்று தாண்ட இப்போது கணவன் முகத்தில் இருந்த வீக்கம் சற்றே மறைய, ஆம்... 4 நாட்களுக்குப் பின் இன்று அவனால் மனைவியை ஓரக் கண்ணால் பார்க்க முடிகிறது!
3) மனைவி சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருப்பது என்பது நெட்டில் Terms and conditions படிப்பது போன்றது. புரிகிறதோ, இல்லையோ 'I agree' தான்!
4) எனக்கும் அவளுக்கும் நட்பு இல்லை, பகை இல்லை, காதல் இல்லை, மோதல் இல்லை, உறவு இல்லை, பிரிவு இல்லை, அன்பு இல்லை, கோபம் இல்லை,... ஆனால் நான் யாரிடமும் பேசுவதற்கு அவள் விடுவது இல்லை! "your account balance is too low. You are not allowed to make a call"நு சொல்கிறாள். என்ன செய்ய?!
5)அமெரிக்கா : "நாங்கள்தான் நிலவில் முதலில் கால் வைத்தோம்"
ஆஸ்திரேலியா : "வீனஸ்ல நாங்கள்தான் முதல்"
இந்தியா : "சூரியன்ல நாங்கள்தான் முதல்"
ஆஸ்த்., அமெரிக்கா : "பொய் சொல்லாதீங்க... எரிஞ்சி போயிருப்பீங்க"
இந்தியா :"இது தெரியாதா... நாங்கள் ராத்திரில இல்லை காலை வச்சோம்"
========================
குழப்பமான ஓட்டத்தை விட நம்பிக்கையான மென் நடை எவ்வளவோ நல்லது. யாரையும் பின்பற்ற வேண்டாம், ஆனால் எல்லோரிடமிருந்தும் பாடம் கற்போம்.
நம்முடைய, புன்னகையின் பின்னால் இருக்கும் சோகம்,
கோபத்தின் பின்னால் இருக்கும் அன்பு,
மௌனத்தின் பின்னே இருக்கும் அர்த்தம்
இவற்றை அறிந்தவனே நம் நண்பன்.
நேற்றைய பொழுதில் நாம்தான் அவர்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்ற நிலையிலிருந்து இன்று நாம்தான் அவர்கள் வாழ்வில் மிக வேண்டப் படாதவர்கள் என்ற நிலை வந்தால் வாழ்வின் மிகக் கடினமான தருணம் அதுதான்.
சரியான முடிவு உங்கள் நம்பிக்கையையும், தவறான முடிவு உங்கள் அனுபவத்தையும் அதிகரிக்கிறது.
ஒரு புதிய உறவு நம் வாழ்வை அழகாக்கினாலும் நாம் இழந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை அது நிச்சயம் நிரப்புவதில்லை.
காதல்
"நீ என்னைக் காதலிக்கிறாயா?"
"ஆம்"
"எவ்வளவு?"
"நிறைய...நிறைய"
"நான் என்ன சொன்னாலும் கேட்பாயா?"
"ஆம்... நிச்சயமாக"
"அப்போ இந்த மாடியிலிருந்து குதி"
"சரி,," விளிம்பு வரை நடந்தவன் திரும்பினான். "வா... வந்து என்னைத் தள்ளி விடு"
நம்பிக்கை.
=======================
பிரார்த்தனை செய்வதற்குமுன் நம்புங்கள்.
பேசுமுன் கேளுங்கள்.
செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்.
எழுதுமுன் யோசியுங்கள்.
கைவிடுமுன் முயற்சி செய்யுங்கள்.
==============================
மனிதன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சம்பாதிக்கிறான். பின்னாளில் சம்பாதித்ததை அந்த உடல்நலத்தைக் காக்கவே செலவிடுகிறான்!
கதவு மூடியிருக்கிறதே என்று தயங்கி நிற்காதீர்கள். சில பூட்டாத கதவுகள் உங்கள் முயற்சி என்னும் சிறு தள்ளலுக்காகக் காத்திருக்கின்றன.
நேற்றைய சண்டை இன்றைய உறவை / நட்பை பாதிக்காத நட்பே சிறந்த நட்பு.
குற்ற உணர்வு கடந்த காலத் தவறுகளை சரி செய்வதுமில்லை. கவலைகள் எதிர்காலத்தை வளமாக்குவதும் இல்லை. வாழப் பழகுவோம்!
அசாதாரணமான விஷயங்களைச் சாதாரணமாகச் செய்யத் தேவையில்லை. சாதாரண விஷயங்களை அசாதாரணமாக செய்தால் போதும்.
ஒரு பொய் சொல்லி ஒரு நட்பை இழப்பது எளிது. அந்த நட்பை மீண்டும் பெற 1000 உண்மைகள் கூட உதவுவதில்லை.
"நானழகா நிலவழகா" காதலி கேட்டாள்.
"தெரியாது... ஆனால் உனைப் பார்க்கும்போது நிலவின் நினைவு வருவதில்லை. நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வருகிறது"
கண்களால் காணும்போதும் புரியவில்லை!
கைகளால் எடுத்தும் தெரியவில்லை!!
யோசித்தாலும் விளங்கவில்லை!!!
இது என்ன என்ன? அன்பா, நட்பா காதலா?
அடப் போங்கப்பா... பரீட்சை வினாத்தாள்!
மனித மனங்கள் வினோதம்தான். அவர்கள் அறிவைப் பற்றி கர்வம் இருக்கும் அளவு அவர்களின் கர்வம் பற்றிய அறிவு இல்லை!
வெற்றியை நோக்கி..
முடிவே தெரியாத
பாதையில்
பயணிக்கிறேன்...
முடிவில் நீ இருப்பாய்
என்று நம்பி!
பாதையில்
பயணிக்கிறேன்...
முடிவில் நீ இருப்பாய்
என்று நம்பி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)