வெள்ளி, 9 டிசம்பர், 2011

படப் புதிர் (அல்லது மரப் புதிர்)


இது என்ன மரம்?


சரியான பதில் பதிவோருக்கு பாயிண்டுகள் உண்டு. 


க்ளூ: இதிகாசம். 
      

27 கருத்துகள்:

  1. முதலில் செங்கொன்றை மரம் என்று நினைத்தேன், பிறகு இலைகள் வித்தியாசமாய் பட்டது, அதனால் நான் நினைத்தது தவறு என்று தெரிந்து கொண்டேன். உண்மையான பதிலை தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன்

    பதிலளிநீக்கு
  2. தெரியவில்லை.தெரிந்து கொள்ள ஆர்வம்

    பதிலளிநீக்கு
  3. ஹிஹிஹி, எங்க வீட்டிலே இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. பரிசு உண்டா? பழங்கள் நாவல்பழம் போல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் நிறைய பதில்களுக்காக வெயிட்டிங் ...... !! அதுவரை நாங்க ஒண்ணும் சொல்ல மாட்டோம்.

    பதிலளிநீக்கு
  6. அசோகமித்திரன் என்கிற பெயரின் காரணம் விளங்கிற்று.

    பதிலளிநீக்கு
  7. அசோகமித்திரன் என்கிற பெயரின் காரணம் விளங்கிற்று.//

    :))))))

    பதிலளிநீக்கு
  8. ஜீவி சார், இப்போத் தான் கவனிச்சேன், நன்றி சப்போர்ட்டுக்கு! :)))))))

    பதிலளிநீக்கு
  9. சரக்கொன்றை மரம் என்று நினைக்கிறேன். சரிதானா கெளதமன் சார்...

    பதிலளிநீக்கு
  10. இது கொன்றை இல்லை என்பது மட்டும் நிச்சயமாய் தெரியும். ஏனெனில் கொன்றை குல்மொஹர் இரண்டையும் வரிசையாக வித்தியாசப்படுத்தி ஃப்ளிக்கரில் நண்பர்கள் நாங்கள் ஒருசமயம் தொடர்ந்து படங்கள் பதிந்தோம். என்னுடையவற்றைத் தொகுப்பாக்கி ட்ராஃப்டில் அப்படியே உள்ளது. விரைவில் பகிர்கிறேன்.

    இது என்ன பூ என அறிய நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. பன்னீர் மரம்.

    திருசெந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசித்தி பெற்றது..

    பன்னீர் இலையில் இருக்கும்
    பன்னிரண்டு நரம்புகளும் முருகனின்
    பன்னிரு கரங்களாக
    பரிவுடன் காக்கும் என்பது ஐதீகம்..

    பதிலளிநீக்கு
  12. பன்னீர் பழம் பெங்களூருவில் சாப்பிட்டுப்பார்த்தேன் அதன் இனிய பெயருக்காவே....

    பதிலளிநீக்கு
  13. வ்ருக்ஷி பூ மரம் என்று நினைக்கிறேன். சிவப்பு கலரில் நான்கு இதழ்களுடன் நீளக் காம்புடன் இருக்குமே. அந்தப் பூதானே படத்தில் இருப்பது

    பதிலளிநீக்கு
  14. இது அசோக மரம் என்பது சரியான விடை. சரியான விடை பதிந்த கீதா சாம்பசிவம் அவர்களுக்கு, ஆயிரம் பாயிண்டுகள் அளிக்கின்றோம். இலங்கையில், நுவேர இலியா பகுதியில் இருக்கின்ற அசோக வனம் பற்றி கூகிளில் தேடியபோது கிடைத்த படம் இது. இந்த மரத்திற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு என்பதையும், மேற்படி தேடலின்போது தெரிந்துகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  15. கொஞ்சம் லேட்.ஆனா என்ன மரம்ன்னு தெரிஞ்சுடுத்து.

    பதிலளிநீக்கு
  16. இலைகளைப் பார்த்ததும் தெரிஞ்சுடுச்சு. ஆனா, அசோகமரம் பூத்திருக்கறதை இப்பத்தான் பார்க்கிறேன். அறியத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அமைதி, பூவைப் பார்த்ததுமே அசோகா தான்னு தெரிஞ்சது. குல்மொஹர் வேறு விதமாய் இருக்கும். குல்மொஹரிலேயே பல விதமான பூக்களும் உண்டு. அதனால் நிச்சயமாய் குல்மொஹர் இல்லை/ அசோகாதான் என்றும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  18. ஆயிரம் பொற்காசுகள் இல்லையா? :(

    பதிலளிநீக்கு
  19. நான் பிந்திட்டேன்.எனக்கொரு சந்தேகம்.புத்தர் ஞானம் பெற்ற மரமென்கிறார்கள் அசோகமரத்தை.ஆனால் புத்தர் இப்போ இருப்பதெல்லாம் அரசமரத்தடியிலல்லோ !

    பதிலளிநீக்கு
  20. ஹேமா, புத்தர் ஞானம் பெற்றது அசோக மரம் இல்லை. மீண்டும் ஒரு முறை சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அரச மரம் தான் பெளத்தர்களுக்கும் விசேஷமானது. அரசமரத்தடியில் தான் ஞானம் பெற்றதாகவும் சொல்வார்கள். போதி விருக்ஷம் என்பதும் அரச மரமே.

    பதிலளிநீக்கு
  21. நன்றி கீதா.உண்மையில் இதன் விளக்கம் தேடிப் படிக்கவேணும் !

    பதிலளிநீக்கு
  22. இராமாயணம் என்றதும் அசோக மரம் என்று தான் நினைத்தேன்.
    அதைப் பற்றி இவ்வளவு விவரம் பின்னூட்டங்கள் வழியாகவே தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!