வியாழன், 22 டிசம்பர், 2011

மூன்று கேள்விகளுக்கான முத்தான பதில்கள்....

                          
முந்தைய பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முத்தான பதில்களைத் தந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அப்பாதுரை, கீதா சாம்பசிவம். முதலில் கேள்விகளுக்குக் கீழேயே பதில்கள் வர வர சேர்த்து விடுவதாக யோசித்து,  பழசாகி விட்ட பதிவை யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால்தான் இந்த பதில்களை தனிப் பதிவாகப் போடுகிறோமே தவிர, ஒரு பதிவைத் தேத்தும் எண்ணம் ஹி.... ஹி... நிசமா இல்லீங்க.... நம்புங்க! 

கேள்விகளையும் தந்து அதற்குரிய பதில்களையும் யார் சொனது என்று பெயருடன் வெளியிட்டுள்ளோம். படித்து பிடித்தவர்கள் பரிசுகளை எங்களுக்கு(ம்) அனுப்பினாலும் சரி, சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பினாலும் சரி... சந்தோஷமே...!
*** ***
சென்னைப்பித்தன் எனக்குக் கேள்வி கேட்கவும் தெரியாது.பதில் சொல்லவும் தெரியாது!
*** ***
==============================================
1)  இதுவரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இன்னும் பத்து வருடங்களில் வரும் என்று எதிர்பார்க்கும் அல்லது வரவேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்ன?

சண்முகவேல் : தொப்பையை குறைக்கும் எந்திரம். 

ஹேமா : மனித மனங்களை அறிய ஒரு இயந்திரம்

கீதா சாம்பசிவம் :   நீங்க பதிலே சொல்றதில்லை. நாங்க மட்டும் கேள்வி கேட்கணுமாக்கும்! முடியாத், போங்க 1. எரிபொருள்-மாற்றுக் கண்டுபிடித்தே தீரணும். ஏற்கெனவே விலை ஏற்றம் அதிகம். 

கணேஷ் : மற்றவர்களின் எண்ணங்களை அறியச் செய்யும் ஒரு மிஷின் 

ஹுஸைனம்மா : //ஹேமா said...
மனித மனங்களை அறிய ஒரு இயந்திரம்,//
//கணேஷ் said...
1. மற்றவர்களின் எண்ணங்களை அறியச் செய்யும் ஒரு மிஷின்.//
இதோ வந்துகிட்டேயிருக்கு!!

பத்து வருஷம் கழிச்சு இல்லை, இப்பவே வேணும். நான் மனசுல நினைக்க நினைக்க, கண்ணுக்குத் தெரியாத அளவு சின்னதா இருக்கிற அந்த மெஷின் டைப் பண்ணிகிட்டே இருக்கணும் - பதிவுகளை. 

வேலைகள் செஞ்சுகிட்டிருக்கும்போது இத எழுதலாமே, அத எழுதலாமேன்னு மனசுல ஓடுது.. ஆனா, கீ போர்ட் முன்னாடி உக்காந்தா... வார்த்தை வரமாட்டேங்குது... எக்ஸாம் ஹால்ல உக்காந்த மாதிரி. :-(((

(ஆடியோ ரிகார்டர் வெச்சுக்கலாமேன்னு கேக்காதீங்க... வேல செஞ்சுகிட்டே சம்பந்தமில்லாம எதாவது பேசிகிட்டிருந்தா, கூட இருக்கவங்க நம்மளை.. ஸாரி, என்னை, “லூஸு”ன்னு டவுட்டை கன்ஃபர்ம் பண்ணிட மாட்டாங்க? அதான் சத்தமில்லா இனிமை கேட்டேன்... :-)) 

ராமலக்ஷ்மி : கொடிய நோய்களைத் தீர்க்க வல்ல இயந்திரம்.
ராமன் : அதிசய கண்டுபிடிப்பு அல்ல, அவசிய கண்டு பிடிப்பு.. சூரிய சக்தியில் ஓடும வண்டிகள், சூரிய ஒளியில வீட்டுக்கு மின்சாரம்.

கீதா சந்தானம் : தண்ணியில்லாமல் துணி துவைக்கும் இயந்திரம்/ பெட்ரோலுக்கு மாற்று சக்தி. 

அப்பாதுரை :வரும் என்று எதிர்பார்ப்பது பக்கவிளைவில்லாத பசியடக்கும் என்சைம்.
வரவேண்டும் என்று விரும்புவது குறைந்த செலவில் அதிகமாகத் தயாரித்து வினியோகிக்கக் கூடிய செயற்கை அரிசிக்கான என்சைம்.

வரும் என்று எதிர்பார்ப்பது இணைய வர்த்தகத்துக்கானப் பொதுப் பணம்.
வரவேண்டும் என்று விரும்புவது இணைய வழியே உலகத்தரக் கல்வி.

வரும் என்று எதிர்பார்ப்பது தண்ணீர் தேவைப்படாத சலவை எந்திரம்
வரவேண்டும் என்று விரும்புவது சலவை தேவைப்படாத துணி.

வரும் என்று எதிர்பார்ப்பது தினசரி உபயோகத்துக்கான வயர்லெஸ் மின்சாரம்.
வரவேண்டும் என்று விரும்புவது தினசரி உபயோகத்துக்கான மின்சாரம்லெஸ் சாதனங்கள்.

வரும் என்று எதிர்பார்ப்பது கேன்சருக்கு சிங்கில் டோஸ் மருந்து.
வரவேண்டும் என்று விரும்புவது தலைவலிக்கு சிங்கில் டோஸ் மருந்து.
==============================================
2) வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நபரும், அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்வியும்.. (அல்லது கேள்விகளும்)  
சண்முகவேல் : ஆங் சான் சூகி .கேள்வி:எப்படி உணர்கிறீர்கள்?  
ஹேமா : கடவுளைக் காண ஆசை.
A R ராஜகோபாலன் : RAJARAJAN CHOZHAN &
கீதா சாம்பசிவம் கடவுள்-- எப்படி இப்படில்லாம்???????
விலைவாசி, பத்துவருடங்களிலாவது குறையுமா?
கடவுள், அரசியல்வாதிங்க நேர்மையா எப்போ மாறுவாங்கனு கேட்பேன். பாவம் நல்லா மாட்டிப்பார். சும்மாப் பிச்சு உதறிட மாட்டோமா!
பத்துவருடங்களுக்குப் பின்னரும் இதே கூட்டணி அரசுதான் தொடருமா?
கடவுள், அதுக்குள்ளே என்னைக் கூப்பிட்டுக்கோப்பா!
பத்து வருடங்களிலாவது எங்க காலனியிலே சாலைகள் போடப்படுமா?
பாதாளச் சாக்கடைத்திட்டம் அடுத்த பத்துவருடங்களிலாவது செயல்படுமா? அதைப் பார்க்க நான் இருப்பேனா?  
கணேஷ் : ஐரோம் ஷர்மிளா: கேள்வி: உங்களால் எப்படி சாத்தியமானது?
ராமன் : ஊழல பெருச்சாளிகளில் ஒருவரை நேரில் பார்த்து கேட்க விரும்பும் கேள்வி: இவ்வளவு பணத்தையும் எப்படி செலவிடுவீர்கள்? இன்னும் ஏன் சம்பாதிக்க ஆசை? 
அப்பாதுரை : ஒரு முறையாவது சந்திக்க எண்ணும் நபர்: பில் கேட்ஸ். கேட்க விரும்பும் கேள்வி: ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?
==============================================
3)  இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லாத ஆனால் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன? 
சண்முகவேல் : வாசிப்புப் பழக்கம்.

கக்கு - மாணிக்கம் :இன்றுள்ளவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் சுத்தமாக அற்றுப்போனது. அவர்களுக்கு மீண்டும் வாசிக்கும் பழக்கம் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன்

ஹேமா : இன்றைய தலைமுறையினருக்கு பெரியவர்களை மதிக்கும் குணம் வேண்டும்.  
கீதா சாம்பசிவம்  :  இளைய தலைமுறைக்கு மாரல் சைன்ஸும், சிவிக் சென்ஸும் தேவை. 
அது எப்படிங்க சினிமா ஷ்டாருங்களைப் பத்தின உடனே பதில் வேகமா வருது! மத்ததுக்கெல்லாம் பதிலே வரதில்லை? :P 
இளையதலைமுறையே, உங்களை நீங்களே பார்த்துண்டாத் தான் உண்டு 
இளைய தலைமுறைக்காவது இந்த வசதியெல்லாம் கிட்டி சந்தோஷமா இருக்குமா? இளைய தலைமுறை அதற்கேற்றவாறு சுத்தமும், சுகாதாரமும் கற்குமா? 
கணேஷ் : நேரத்தை மதிக்க வேண்டும். நேர நிர்வாகம் என்ற ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
ஹுஸைனம்மா : அம்மா, அப்பா சொல்றதை, (சாப்பிட வான்னு சொன்னாகூட) ஆர்க்யூ பண்ணிகிட்டேஏஏஏஏ இருக்காம, புரிஞ்சு ஏத்துகிட்டு நடக்கிற நல்ல புத்தி.
(நான் குழந்தையா இருக்கச்சே, எங்கம்மாவும் இதத்தான் 
.... கேட்டிருப்பா... !!!!) 
ராமன் :  இளைய தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினர் பால் சற்று பொறுமை வேண்டும் என்று எண்ணுகிறேன் 
கீதா சந்தானம் :   புத்தகம் படிக்கும் வழக்கம். 
அப்பாதுரை  இளைய தலைமுறையினரிடம் இல்லாத, ஆனால் இருக்க வேண்டும் என்று விரும்புவது: மூத்த தலைமுறையின் தவறுகளை அறியும் திறன், மூத்த தலைமுறையின் குறைகளை மன்னித்து மறக்கும் பக்குவம்.  
                       

15 கருத்துகள்:

  1. இத்தனை பேரின் கருத்துக்களை வரவழைத்ததுமின்றி அழகாய் தொகுத்தும் வழங்கிய உங்களுக்கே பரிசு:)!

    பதிலளிநீக்கு
  2. அட? இந்த ஐடியா தோணவே இல்லையே? எத்தனை பதிவு தேத்தி இருக்கலாம்? :P:P:P:P

    பதிலளிநீக்கு
  3. இப்படி கேள்விகளையும் பதிலையும் பதிவா படிக்கிறது நல்லாத்தான் இருக்கு. (எப்படி இப்டில்லாம் தோணுது உங்களுக்கு ஸ்ரீராம் சார்!)

    பதிலளிநீக்கு
  4. எங்கள் Blogக்கு நிகர் எங்கள் Blog தான்.

    பதிலளிநீக்கு
  5. வித்யாசமான தொகுப்பாய் இருக்கே!!

    பதிலளிநீக்கு
  6. நல்ல கேள்விகள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  7. எங்ப பதில்களைப் பதிப்பிப்பதற்கு எங்களிடம் முறையாக அனுமதிதான் கேட்கவில்லை, போகட்டும். நெருங்கிய நட்பு என்பதால் உரிமையோடு போட்டிருப்பீங்க. ஆனா, ராயல்டியையும் அப்படி நினைச்சு விட்டிரக்கூடாது. (ஒரு ஆறுதல் பரிசாவது... ப்ளீஸ்!!)

    பதிலளிநீக்கு
  8. ஹூசைனம்மா, வாழ்க, வளர்க! குறஞ்ச பக்ஷமாக 100 டாலராவது அனுப்பி வைக்கலாம். :))))))

    பதிலளிநீக்கு
  9. என்ன? நூறு டாலரா? அய்! ஆசை தோசை அப்பளம் வடை!

    பதிலளிநீக்கு
  10. அப்பாத்துரையின் பதில்கள் சிந்திக்க வைத்தன,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!