சனி, 19 அக்டோபர், 2019

"நான் என்ன பெரிசா பண்ணிட்டேன்?" + புத்தக அறிமுகம் – நெல்லைத்தமிழன் - “இமயத்து ஆசான்கள் – சுவாமி ராமா”


1)  ’தேவை’யே கண்டுபிடிப்புகளின் தாய்’ (Necessity is the mother of all inventions) என ஒரு பழமொழி உண்டு. அந்த வழியில், விவசாயிகளின் வியூகங்கள் !






2)  அவரது ஆட்டோவில் பயணம் செய்த மாலத்தீவு உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். பணம் கொடுப்பதற்கு வங்கி கணக்கு எண்ணை கேட்ட சிலரிடம் மறுத்து விட்டார்..... 

கேரளா, மூணாறு அருகே ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை மீட்ட ஆட்டோ டிரைவர் கனகராஜ்.




=========================================================================================================================



புத்தக அறிமுகம்  – நெல்லைத்தமிழன் - 

 “இமயத்து ஆசான்கள் – சுவாமி ராமா”








இளைய துறவியாக சுவாமி ராமா.  முதிர்ந்தபிறகு ஆசானாக அமெரிக்காவில்

நான் புத்தகப் பிரியன். சிறிய வயதிலிருந்தே நிறைய வாசிப்பவன். 6வது படிக்கும்போது முதல் முதலாக எங்கள் பள்ளிக்கு லைப்ரரி வந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரான என் அப்பா, எல்லோருக்கும் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று, மாணவர்கள் சிலருக்கு ‘லைப்ரரி மெம்பர், புத்தகத்தை இரவலாக எடுத்துச் செல்லுதல், படித்த பிறகு பள்ளி லைப்ரரியில் புத்தகத்தைத் திருப்பித் தருதல்’ என்பதை அறிமுகப்படுத்தினார்கள். நான் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த விருப்பம் உடையவன் என்பதை அறிந்திருந்த என் அப்பா, எனக்கு ‘ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தை தமிழில் ‘கழுதையின் காதல்’ (சரியாக நினைவில் இல்லை) என்பதாக வெளியிடப்பட்டிருந்த புத்தகத்தைக் கொடுத்தார்.  நான் அப்போதெல்லாம் கல்கியில் அப்போதுதான் வெளிவந்துகொண்டிருந்த சிவகாமியின் சபதம் தொடரை விரும்பிப் படிக்க ஆரம்பித்திருந்தேன் (எங்க அப்பா கல்கி வாங்கலை. அந்தத் தெருவில் இருந்த என் டீச்சர் வாங்கிக்கிட்டிருந்தாங்க. அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வருவேன். அப்போதுதான் அந்த ஓவியங்களை தனியாக தொடரின் இடையில் முழு வண்ணத்தில் வெளியிடுவார்கள்).  என்னவோ அந்த ஷேக்ஸ்பியரின் நாடகம் அப்போ என்னைக் கவரவில்லை. அதுக்குக் காரணம் அந்த கலாச்சாரம் நம்முடையது இல்லை என்பதால் இருக்கலாம்.  இந்த ‘புத்தகப் பைத்தியம்’ எப்படி என் பள்ளி/கல்லூரிப் படிப்பைக் கெடுத்தது என்பதையெல்லாம் இங்கு எழுதப்போவதில்லை. வேலைக்குப் போக ஆரம்பித்ததும் சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். அவ்வப்போது அவை தொலைந்துபோகும். பஹ்ரைனில் இருந்தபோது என்னிடம் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் சேர்ந்திருந்தன. அனேகமாக அனைத்தையும் அங்குள்ள தமிழ் மன்றத்திற்குக் கொடுத்துவிட்டேன்.  அந்தக் கதையை இங்கு எழுதினால் ‘புத்தக அறிமுகம்’ செய்ய இடம் இருக்காது.

எனக்கு “இமய குருவின் இதய சீடன்” என்ற ஸ்ரீ. எம். என்பவரின் புத்தகம், ஒரு புது வசீகரமான வாசலைக் காட்டியது. அதற்கு முன்பாக நான் படித்திருந்த “ஒரு யோகியின் சுய சரிதை” என்ற புத்தகம் எனக்கு யோகம், தியானம் போன்றவற்றில் சிறிது ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது.  அதன் ஆசிரியர், தான் கடவுளைக் கண்டதாக அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தார்.  ‘இமய குருவின் இதய சீடன்’ புத்தகத்திற்குப் பிறகு, சென்னை விமான நிலையத்தில் ‘இமயத்து ஆசான்கள்’ என்ற இந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தேன்.

இமயமலைப் பள்ளத்தாக்கில் பிறந்த ஒருவரை, அவரது முன் வினைப் பயனாக, குரு சின்ன வயதிலேயே தன்னுடன் எடுத்துச் செல்கிறார். குருவின் அரவணைப்பிலேயே வளரும் சீடன், இமயமலைப் பள்ளத்தாக்கில் பல்வேறு சாதுக்களிடம் பயிற்சியும், அனுபவங்களையும் பெற்று சுவாமி இராமா என்ற நிலைக்கு உயர்கிறார். சுவாமி இராமா தன் அனுபவங்களையும் சந்தித்த யோகிகள், அவர்கள் மூலம் தான் கற்றுக்கொண்டவை போன்றவற்றை சின்னச் சின்ன அத்தியாயங்களாக எழுதியுள்ளார். இது முதலில் “Living with the Himalayan Masters” என்ற புத்தகமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு அவருடைய சீடரின் மூலமாக ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.  நான் வாங்கிய தமிழ்ப்பதிப்பு, ஆங்கில மூலத்திலிருந்து புவனாபாலு என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு கண்ணதாசன் பதிப்பகத்தால் 2011ல் வெளியிடப்பட்டது.

பொதுவாக ஆன்மீகப் புத்தகங்கள், அதிலும் ஒருவரது சுய சரிதம், அவருடைய அனுபவங்கள் மற்றும் சாதனைகள் நமக்கு அப்பாற்பட்டவை என்று நம்மைச் சிந்திக்க வைக்கும். ஆனால் சுவாமி இராமா இந்தப் புத்தகத்தில் தானும் நம்மைப் போன்ற குறும்புக்காரனாகவும், விடலைப் பருவத்தின் துணிவும் கொண்டிருந்த, பல நேரங்களில் தன் குருமார்களிடம் இளமை வேகத்தில் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டதை, பலவீனங்களை எல்லாம் எழுதுவதன் மூலம், அவர் நம்மில் ஒருவராக இருந்து தன் நிலையில் மேம்பட்டவர் என்பதை உணர வைக்கிறார்.  இதுதான் நம்மை இந்தப் புத்தகத்தில் ஒன்றிட வைக்கிறது.

அவரது சீடரான, இந்தப் புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்கம் எழுதிய பண்டிட் ராஜ்மணி திகுநாயத் என்பவர், தான் சுவாமிஜியிடமிருந்து நேரடியாகப் பெற்ற அனுபவங்களும், அவருடன் பயணம் செய்து கற்றறிந்த விஷயங்களும் தனக்கு அளித்த தன்னம்பிக்கையின் பலத்தில் இந்த மாபெரும் பனிமலையின் ஒரு சிறு நுனியைத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் பிரதிபலிக்கின்றன என்று கூறுகிறார்.

சமீபத்தில் என்னிடம் பிரபல மூத்த பதிவரான ஜி.எம்.பாலசுப்ரமணியம் சார், அவர் எழுதிய முதல் நாவலான “நினைவில் நீ” என்ற மின்னூலை பகிர்ந்துகொண்டிருந்தார். அந்த நாவலின் விமர்சனத்தை எங்கள்  பிளாக், சனிக்கிழமைக்கு புத்தக விமர்சனமாக  எழுதலாமே என்று நினைத்தேன். அதற்கு அவரின் அனுமதி கிடைக்கலை. அதனால் டிராஃப்டில் வைத்திருந்த ‘இமயத்து ஆசான்கள்’ என்ற புத்தக அறிமுகத்தை இந்த வாரத்துக்காக எங்கள் பிளாக்குக்கு எழுதி அனுப்பினேன். 

சரி..இப்போ புத்தக அறிமுகத்துக்கு வருகிறேன்.

சுவாமி இராமா, தன்னுடைய இந்தப் புத்தகம் வாழ்க்கைச் சரிதமல்ல, ஆனால் இமயத்து யோகிகளிடமிருந்தும் அன்புக்குரிய ஆசான்களிடமிருந்தும் தான் பெற்ற அனுபவங்களின் பரிசு என்கிறார். 

சுவாமி இராமாவின் தந்தை உயர்ந்த ஆன்மீக வாதியாகவும் பண்டிதராகவும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நிலச்சுவாந்தாராக வாழ்ந்தார். அவர் ஆன்மீகப் பயிற்சி மேற்கொள்ள தனிமையை நாடி ஆறுமாதம் ஹரித்துவார் அருகிலுள்ள மானஸா தேவிக் கோவில் காடுகளில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஒரு யோகி அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் சுவாமி இராமாவின் தந்தைக்கு அவர்தான் தனக்குரிய குருநாதர் என்பதை உணர்ந்துகொண்டார்.  அந்த யோகி, அங்கே ஒரு வாரம் தங்கியிருந்து சுவாமி இராமாவின் தந்தைக்கு வழிகாட்டி, அவரை உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அவரது வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொன்னார். அப்போதே சுவாமி இராமாவின் தந்தைக்கு வயது அதிகமாக ஆகியிருந்தது.  வீடு திரும்பியவர், தன் மனைவியிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தான் ஒரு குருநாதரைச் சந்தித்ததையும் அவர் தங்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும் அவன், தன்னையே பின்பற்றுவான் என்று அருளியதையும் பகிர்ந்துகொண்டார்.

இதனை சுவாமி இராமாவின் மொழியிலேயே படித்தால்தால்தான், எப்படி சுவாமி இராமாவின் வாழ்க்கை தொடங்கியது என்று தெரியும்.



இரு வருடங்களுக்குப் பிறகு எனது குருநாதர் இமய மலையிலிருந்து எனது பெற்றோரின் கிராமத்துக்கு வந்து அவர்களைச் சந்தித்தார். அப்போது என் தந்தை இரவு உணவு அருந்திக்கொண்டிருக்க, என் தாயார், கதவைத் திறந்து, வந்தவர் யாரென்று அறியாமல் அவரைக் காத்திருக்கும்படிக் கேட்டுக் கொண்டார். விருந்தினர் வருகை அறிந்து என் தந்தை உணவைப் பாதியில் விட்டு வாசலுக்கு விரைந்தார். “உங்கள் வீட்டில் உணவருந்தவோ, உபசரிப்பை ஏற்கவோ நான் வரவில்லை. நீங்கள் எனக்கு ஏதாவது தரவேண்டும்” என்றார் குருநாதர். 

“என்னிடம் உள்ளது எதுவும் தங்களுடையதே என்று பதிலளித்தார் என் தந்தை.

“எனக்கு உன் மகன் வேண்டும்” என்று குருநாதர் கேட்க,

“இத்தனை வயதான பிறகு ஒரு பிள்ளைப்பேறு என்பது எங்களுக்கு அதிசயமானதே. ஆனால் அவ்வாறு நேர்ந்தால் என் மகன் உங்களுக்கே சொந்தமாவான்” என்று என் பெற்றோர் உறுதியளித்தனர். இந்தச் சந்திப்பிற்குச் சரியாக 18 மாதங்களுக்குப் பிறகு நான் பிறந்தேன்.

நான் பிறந்த அன்றே என் குருநாதர் குழந்தையைத் தன்னிடம் கொடுக்கும்படிக் கேட்டாராம். தாய்மைக்கே உரிய மனோபாவத்தில் என் தாய் முதலில் மறுத்தாலும், என் தந்தையின் கட்டளையின்படி என்னை அவரிடம் கொடுத்தார். அவர் சிறிது நேரம் என்னைத் தன் கரங்களில் வைத்திருந்துவிட்டு, “அவனைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் பின்னர் மறுபடியும் வந்து அவனைக் கூட்டிச் செல்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

3 வருடங்களுக்குப் பிறகு எனது குருநாதர் எனது வலது காதில் ஏதோ ஒரு மந்திரத்தை ஓதினார். “எனக்கு அந்த மந்திரம் நினைவில் உள்ளது” என்று நான் சொன்னதற்கு, “எனக்குத் தெரியும்.. ஆனாலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்” என்றார்.

தன் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, தன் குருநாதரை வந்தடைந்தவர், அவருடனே தன் வாழ்க்கையைச் செலவழித்தார். குருநாதர், இவரை பல்வேறு சாதுக்களிடம் அனுப்பி ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ளவைத்து சுவாமி இராமாவை உருவாக்கினார்.




இமயமலையின் இயல்பு, அங்குள்ள மக்களின் இயல்பு, அவர்களுடைய வாழ்க்கை, அங்கிருக்கும் சாதுக்கள், இந்த வழியில் அவர் சந்தித்த தாந்திரீக குருக்கள்,  மாந்திரீகர்கள், அவர்களின் மாயவித்தை என்று பல்வேறு கூறுகளை சுவாமி இராமா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

அதில் ஒரு இஸ்லாமிய மெளல்வி, தாந்திரீக முறையில், கோழிக்குஞ்சின் உயிரை வாழை மரத்துக்கு மாற்றி கோழியை இறக்கச் செய்து பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வாழை மரத்திலிருந்து உயிரை மீண்டும் கோழிக்குக் கொண்டு செல்லும் மாயவித்தை காண்பித்ததையும், இது போன்ற பல வித்தைகளைத் தான் பார்த்ததையும், அதற்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இத்தகைய வசீகர மாயவித்தையில் நம் மனம் சென்றால், ஆன்மீக முன்னேற்றம் நிகழாது எனவும், அது மேலும் நம் கர்ம வினைகளை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

ஆன்மீகத்துக்கும் குறிப்பிட்ட மதத்திறும் சம்பந்தம் இல்லை. கடவுளை அறிய அது ஒரு வழி என்று குறிப்பிடும் சுவாமி இராமா, இமயத்தில் தான் சந்தித்த கிறித்துவ யோகி பற்றியும் குறிப்பிடுகிறார். கருணையும் அன்பும் கொண்டிருந்த சாது சுந்தர்சிங் அவர்கள் மிகச் சிறந்த ஆன்மா எனவும் அவர் பைபிளையும் பகவத்கீதையையும் ஒப்பிட்டுச் சொன்னதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

காலையில் அளிக்கப்பட்ட ஞானம் பகவான் கிருஷ்ணருடையது; நண்பகலில் புத்தருடையதும் மாலையில் இயேசு கிறிஸ்துவுடையதும் என்பதே அன்றி இந்தப் போதனைகளில் எந்த விதமான வேறுபடும் இல்லை. கருணையின் வடிவான இயேசு, ஞானப் பழமான புத்தர் மற்றும் பூரணமான பகவான் கிருஷ்ணரும் அவரவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப, அதைப் பின்பற்றும் அக்களுக்குத் தேவையான போதனைகளை வழங்கினர். பல்வேறு வடிவங்களைக் கொண்டு அவசியமானபோது மானுடத்தை வழிநடத்துவதற்காகத் தோன்றும் அந்த ஒரே மெய்ப்பொருளின் பிரதிநிதியாகத் திகழ்பவர்கள்தான் இந்த மகான்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களின் மீதும் யோகிகள் பரம்பரை பரம்பரையாக மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவாமி ராமா எழுதுகிறார்.


  
இந்தப் புத்தகத்தில் அவரது அனுபவங்கள், அதன் மூலம் நமக்கு அவர் சொல்லவரும் செய்தி என்னை மிகவும் வசீகரித்தது. முடிவாக சுவாமி இராமாவுக்கு அவர் சந்தித்த சக்கரவர்த்தி யோகி என்பவர் சொன்ன செய்தியுடன் இதனை முடிக்கிறேன்.

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் விஷயங்களும் பூஜ்ஜியத்தைப் போலவே. ‘ஒன்றாகிய’ மெய்ஞானத்தை உணராது போனால் மதிப்பில்லாது போய்விடும். அந்த ஒரு பரம்பொருளை நாம் கவனத்தில் வைத்துக்கொண்டால் அதன் பிறகு நம் வாழ்க்கை மேம்பட்டிருக்கும். இல்லையெனில் அது பெருஞ்சுமையாகிவிடும்”
என்னை மிகவும் வசீகரித்த இந்தப் புத்தகத்தை உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். வாங்கிப் படித்துப் பயனடைவீர்.

இமயத்து ஆசான்கள் – Living with The Himalayan Masters
ஆசிரியர் - சுவாமி ராமா
தமிழாக்கம் புவனா பாலு
கண்ணதாசன் பதிப்பகம்
விலை – 280 ரூ  (2015ல் நான் வாங்கியபோது.)


பின்குறிப்பு:  புத்தக மேலட்டை மற்றும் சுவாமி ராமா படங்கள் தவிர மற்றவை எனது பயணங்களில் எடுக்கப்பட்ட படங்கள்.

158 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    ஸ்வாமி ராமா!! நம்ம வீட்டுல இந்தப் புஸ்தகம் எல்லாம் இருக்கு ஆனா நான் எதுவும் வாசித்ததில்லை ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.  வாங்க...   

      நீக்கு
    2. என்னிடம் இந்தப் .புத்தகம் இல்லை.  வாங்கலாமா என்று யோசனை...

      நீக்கு
    3. அனைவருக்கும் வணக்கம்.

      நாம ஒரு விசேஷத்துக்குப் போகும்போதோ இல்லை ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போதோ தேவையில்லாதவற்றை பரிசுகள் என்ற பெயரில் வாங்கிச் செல்கிறோம். சில சமயங்களில் பொக்கே. இவை முதலில் இடத்தை அடைக்கும். தேவையில்லாத குப்பைகளில் ஒன்றாகும்.

      நான் எப்போதும் நினைப்பது, எதையாவது வாங்கிச் செல்லணும் என்றால், பழங்கள் அல்லது இனிப்பு அல்லது ஒரு புத்தகம் வாங்கிச் செல்லலாம். பழங்களோ 120-150 ரூபாய், இனிப்பு 200-250 ரூபாய், நல்ல புத்தகம் 200-400 ரூபாய் (அதுக்காக காதலில் நீ, வாழ்க்கை மலரும் என்று ஏதோ தலைப்பில் கவைக்குதவாத நாவல்கள் அல்ல) வாங்கிக் கொடுக்கலாம். அல்லது ஒன்றுமே வாங்கிச் செல்லாமல் மனமகிழ்ச்சியோடு செல்லலாம் சிலர் இதுக்கெல்லாம் நேரமில்லாமல் வேறொருவர் கொடுத்த பரிசைத் தள்ளிவிடுஙதும் நடக்கிறது. என்னைப் பொருத்த வரையில் கடவுள் படங்கள், தெய்வ உருவங்கள், படங்கள் போன்றவை நல்ல பரிசுகள் அல்ல. . Presence itself is a big gift, as one spends his time and money on commutatiom.

      இதை எல்லோரும் மனதில் வச்சுக்கணும். இல்லைனா என்ன வாங்கிச் செல்வது என்பதே பெரும் பிரச்சனையாகி விடுகிறது. நான் அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் நல்ல பரிசாக அமையும்.

      நீக்கு
    4. வணக்கம் நெல்லைத்தமிழன்.

      உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.  புத்தகங்கள் கொடுக்க நினைக்கும்போது வாங்குபவர்கள் இன்டரஸ்ட் தெரிந்துகொள்வது நல்லது. என் அப்பா 'கீரையின் உபயோகம்',  'விவேகானநாதர் பொன்மொழிகள்' என்றெல்லாம் புத்தகங்கள் வாங்கி (எனக்கு உட்பட) பரிசளிப்பார்.  நான் நினைக்கும் புத்தகத்தை நான்தான் வாங்கிக்கொள்ளவேண்டியிருக்கும்!

      நீக்கு
    5. ஸ்ரீராம் இதையேதான் நான் சொல்ல வந்தேன். நெல்லையின் கருத்து நல்ல கருத்து. நானும் அதை ஆதரிப்பேன் ஆனால் நாம் கொடுப்பவர்களின் இன்ட்ரெஸ்ட் பாத்து கொடுக்க வேண்டும். சிலர் புத்தகங்களே பிடிக்காதவர்கள் எனில் பரிசளிக்கவும் முடியாதே.

      கீதா

      நீக்கு
    6. தில்லையகத,து கீதா ரங்கன்.. நான் உங்க வீட்டுக்கு வந்தால் பழம் மட்டும்தான். இனிப்பு நீங்க சாப்பிட மாட்டீங்க. பொக்கிஷமா சுவாமி ராமா புத்தகம் இருந,தும் நீங்க எடுத்துப் படிக்கலை. ஹாஹா

      நீக்கு
    7. ஶ்ரீராம்... உங்க பாயின்ட் அர்த்தமுள்ளது. எனக்கும், கீதையின் பாதையில், மனசே மந்திரச் சாவி, இல்லைனா சிறுகதைத் தொகுப்பு/நாவல்கள் என்றெல்லாம் புத்தகங்கள் கொடுத்தால் பிடிக்காது. நாம எந்தப் புத்தகத்தைக் கொடுக்கணும்னா, அதை நாம் மிகவும் விரும்பும் புத,தக பொக்கிஷமாக இருக்கணும், அதை அடுத்தவர் ஆர்வமா படிப்பார்னு நம்பணும்.

      உதாரணமா "பரமாச்சார்யரிடம் என் அனுபவங்கள்' புத்தகத்தை ஜி.எம்.பி சாருக்கும், "சாதிகளற்ற சமுதாயம் கட்டமைப்பது எப்படி" புத்தகத்தை. வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கும் பரிசளித்தால் புத்தகம் எங்கு போகும்னு நாம அனுமானிக்கலாம். ஹா ஹா

      நீக்கு
    8. இப்போது புரிகிறது. சிலர் பரிசாக வந்தவைகளையே பரிசாக இன்னொரு இடத்தில் ஏன் கொடுத்துவிடுகிறார்கள் என்று! அவர்களும் எத்தனை நாட்களுத்தான் வைத்துக்கொண்டு கஷ்டப்படுவார்கள்..

      நீக்கு
    9. //என்னைப் பொருத்த வரையில் கடவுள் படங்கள், தெய்வ உருவங்கள், படங்கள் போன்றவை நல்ல பரிசுகள் அல்ல.// கொடுப்பவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைத்தே கடவுள் உருவங்கள், படங்கள் போன்றவையும் பரிசளிக்கப்படுகின்றன. பலரும் பூஜை அறையில் வைத்து வணங்குகின்றனர். நான் உங்களுக்குக் கொடுத்த ஸ்ரீராமர் பட்டாபிஷேஹப்படம் உங்களுக்கு நல்ல பரிசாக இருக்கவில்லை என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். ஆனாலும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். கோமதி அரசுக்கும் ராமர் பட்டாபிஷேஹப்படமே அளித்தேன். அவங்க இப்போதும் நினைவு கூர்கிறார்கள். பெரும்பாலும் அப்படித் தான் கொடுத்து வருகிறேன்/வருவேன்! :))))))))))))) இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    10. @கீதா சாம்பசிவம் மேடம் - உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் அப்படி நினைத்து அதனை எழுதவில்லை. ஸ்ரீராம பட்டாபிஷேகம் கிடைத்த போது என் (எங்கள்) மனம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை. (சுந்தரகாண்ட பாராயணம், ரகுவீரகத்யம் சொல்லும்போது வேண்டும் அல்லவா) எங்கள் சன்னிதியில் லக்‌ஷ்மி (என் திருமணத்தின்போது என் மாமனார்/மாமியார் வாழ்க்கை தொடங்கிய அறையில் வைத்த படம்), என் குலதெய்வம் வெங்கடாசலபதி, அடுத்து நீங்கள் கொடுத்த ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஆகியவை இருக்கின்றன. தினமும் அவற்றிர்க்கு மாலை/பூ உண்டு.

      ஆனால் நான் குறிப்பிட விரும்பியது, ஏகப்பட்ட படங்கள் வீட்டில் சேரும்போது அவற்றை எங்கு வைப்பது என்பதில் பெரிய குழப்பம் வரும். இன்னொன்று, ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் உண்டு. வித வித சைஸில் படங்கள் இருந்தால், அதை மாட்டாவிட்டாலும் கொடுத்தவருக்கு மனவருத்தம், மாட்டினாலோ சன்னிதியின் அழகு கெட்டுவிடும் என்று மனதில் தோன்றும். நான் முன்பு நங்கநல்லூர் கோவிலில் எனக்குக் கொடுத்த ஆஞ்சநேயர் படம்-பெரியது, சிறிய சைஸில் இருந்த ரங்கநாதர், கிருஷ்ணன் என்று பல படங்களை எங்கு வைப்பது என்றே தெரியவில்லை. அதைத்தான் குறிப்பிட்டேன்.

      இப்போது பெங்களூரில் இருக்கும் சன்னிதியில் (புது இல்லத்தில்-அடுக்குக் குடியிருப்பு) 3 அடி X 4 அடிக்கு ஒரு வெங்கடாசலபதி படமும், சன்னிதியின் இரு பக்கங்களில் இரண்டு இரண்டு படங்களாக, மஹாலக்‌ஷ்மி, நீங்கள் கொடுத்திருந்த ஸ்ரீராம பட்டாபிஷேகம், மற்றும் இரண்டு படங்கள் (அகலம் 25 செ.மீ, உயரம் 30-40 இருக்கலாம்) வைத்துக்கொள்வோம் என்று நினைத்திருக்கிறேன். இது தவிர எங்கள் ஆச்சார்யர் படம் ஒன்று.

      இதில் இன்னொன்றும் குறிப்பிட நினைக்கிறேன். சில தெய்வ உருவங்கள்தான் எனக்கு மனதிற்குப் பிடிக்கும் (அதாவது மனதில் நினைத்தவுடன் தோன்றும் உருவம்). வெங்கடாசலபதியே பல வடிவங்களில் பலவிதமான படங்கள் இருக்கின்றன. ரங்கநாதரும் அப்படியே. ஆனால் எனக்கு குறிப்பிட்ட ஓவியம்/படம் மட்டும்தான் மனதிற்கு உவப்பாக இருக்கும்.

      நீக்கு
    11. @கீசா மேடம் - //அதாவது மனதில் நினைத்தவுடன் தோன்றும் உருவம்// - இது புரியும்படி எழுதியிருக்கேனா என்ற சந்தேகம் வந்தது. இராமர் பட்டாபிஷேகம் அல்லது இராமர் என்று என் மனதில் நினைத்தவுடன் வரும் உருவம், நீங்கள் தந்த பட்டாபிஷேகப் படத்தில் உள்ள இராமர் உருவம் (நீங்கள் தருவதற்கு முன்னாலேயே அந்த உருவம்தான் மனதில் தோன்றும்). உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் தஞ்சாவூர் பாணி ஓவிய இராமர் அல்ல. அதுபோல வெங்கடாசலபதி என்பது என் வீட்டில் இருக்கும் படத்தில் உள்ளதுபோல இருக்கணும். நிறையபேர் கண், வாய் இவைகள் தெரியும்படி வரைந்துவிடுகிறார்கள், அது என் மனதில் தோன்றாது.

      நீக்கு
  2. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!! இதை நான் அப்படியே டிட்டோ செய்வேன்! எல்லா த்துக்குமே...தேவைகள் கேள்விகள் வரும் போதுதான் பல விஷயங்கள் புதிதாய் வருகின்றன...இங்கு வந்திருக்கும் செய்தி நல்ல தேவை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!!// - இதுல பெண்களுக்கு சந்தேகம் வருமா? அவங்கதான் கொஞ்சம் தோசை மாவு அல்லது இட்லி மாவு மிஞ்சினால், அதனையும் சேர்த்து ரவா தோசை செய்துவிடுவார்களே... நான்கூட சென்ற வாரம், அரிசி மாவுக்குப் பதில் ரெண்டு கரண்டி தோசை மாவை உபயோகப்படுத்தி குடமிளகாய் பஜ்ஜி செய்தேன். மிக அருமையாக வந்தது.

      நீக்கு
  3. சொட்டு நீர்ப்பாசனம் நல்ல ஐடியா...பாராட்டுகள் சக்திகுமார் அவர்களுக்கு!

    எனக்கு நான் அறிந்த வகையிலிருந்து இந்தச் சொட்டுநீர்ப்பாசனம் பற்றி நான் கல்லூரியில் பிஏ படிக்கும் காலத்தில் இருந்தே கிசான் வேர்ல்ட் வேளாண்மை இதழ்ல தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் டாக்டர் சிவனப்பன் எழுதிக் கொண்டு வந்தார். இப்போதும் அவர் நிறைய அதைப் பற்றி பேசி வருவது தெரிகிறது..பல நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இப்போதேனும் விழிப்புணர்வு வந்து இம்முறை அதிக அளவில் வந்தால் நல்ல விஷயம்..வருவதும் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கனகராஜ் அவர்களுக்கு ப் பாராட்டுகள் நல்ல உள்ளம். பணம் வாங்க மறுத்தது...இப்படித்தான் சில சமயங்களில் செய்வது ஒருவர், பெயர் மற்றொருவருக்கு என்று ஆகிவிடும். நல்லகாலம் இவரைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்ததும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    அவருக்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக மலர்ந்து மணம் வீச இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இன்றைய இரு செய்திகளும் அருமை. விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் சொட்டு நீர் பாசனம் பற்றி விபரமாக அறிந்து கொண்டேன். விவசாயத்தை நல்ல முறையில் பேணி வருபவருக்கு வாழ்த்துக்கள்.

    குழந்தையை மீட்டு தந்தவருக்கு பாராட்டுக்கள். அவரின் நல்ல செய்கைகள் வியக்க வைக்கிறது.தவற விட்ட குழந்தை கிடைத்ததும் குழந்தையின் தாய் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்கள் அனைவரும் நலம் பெற பிராத்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நீங்கள் எழுதி இருக்கும் 3 புத்தகங்களையும் என் வாழ்நாளில் படிக்கக் கிடைக்குமா தெரியலை. என்றாலும் மனதளவில் ஆசை என்னமோ இருக்கு. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...    நல்வரவும், வணக்கமும், நன்றிகளும்.

      நீக்கு
    2. கீசா மேடம்... ஆசை இருந்தால் அவைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இமயமலையின் இதய குரு-ஸ்ரீ எம், இமயத்து ஆசான்கள்-சுவாமி ராமா, ஒரு யோகியின் சுய சரிதை - இந்த வரிசையில்தான் நீங்க படிக்கணும்னு நினைக்கிறேன். அருமையான புத்தகங்கள்

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் அறிமுகப்படுத்திய "இமயத்து ஆசான்கள்" என்ற இன்றைய புத்தக விமர்சனம் படித்தேன். அழகான விமர்சனம். ஆழமான கருத்துக்களை உடையவனாக உள்ளது. படிக்கும் போதே நல்ல சுகானுபவம் உண்டாகிறது. நம்மை நல்வழி படுத்த இது போல் தெய்வ சங்கல்பம் வேண்டுமே எனவும் தோன்றுகிறது. இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் பிறக்கும் போதே இது போன்ற உணர்வுகள் தோன்ற சாத்தியமாவதில்லையே!

    ஸ்வாமி ராமரின் உபதேசங்களை படித்துப் பார்க்கும் சந்தர்ப்பங்களை தர வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

    பனி மூடிய இமயத்தின் படக் காட்சிகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அவர் இதற்குமுன் அறிமுகப்படுத்திய புத்தகமும் ஆன்மீக புத்தகம் - ஒரு யோகியின் சுயசரிதை.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... உங்களுக்கு அந்தப் புத்தகங்கள் மீது ஆசை இருந்தால் அவை உங்களை ஒருநாள் வந்தடையும்.

      எனக்கு நாவல்கள் படிப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. சுய வரலாறு, வரலாற்று சம்பந்தமான புத்தகங்கள், அனுபவங்கள், இந்த மாதிரி ஆன்மீக அனுபவங்கள் என்று என் ஆசையின் வீச்சு குறைவு.

      நீக்கு
  9. சொட்டு நீர்ப்பாசனம் பற்றி வந்திருப்பதையும் படித்திருக்கிறேன். ஆட்டோ டிரைவர் பற்றியும் படித்தேன்.உயர்ந்த உள்ளங்கள். அந்தத் தாயின் மகிழ்ச்சி விலை மதிக்க முடியாதது. கிடைக்காது என நினைத்த குழந்தை கிடைத்தது எனில்! அதை விட வேறு என்ன வேண்டும்!

    பதிலளிநீக்கு
  10. நாம் மறைந்தாலும் நம்மால் வளர்க்கப்படும் மரங்கள் நம்ம பேரைச் சொல்லும்’’ என்றார் மகிழ்ச்சிப் பொங்க.//
    சொட்டுநீர் பாசனத்தில் மரங்களை வளர்த்து வரும் அன்பர்கள் வாழ்க !
    அவர்கள் பல்லாண்டு வாழ்க!
    விவசாயிகள் தேவை அறிந்து பயிர்களுக்கு உணவு கொடுக்கும் தாய் போல் தான்.
    ந்ல்ல செய்தி பகிர்வுக்கு உங்களுக்கும், ஏகாந்தன் சாருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஜிஎம்பி அவர்களின் புத்தக விமரிசனம் எழுத அவரைக் கேட்க வேண்டும் என்பதில்லை. நாம் எழுதினாலே அவர் சந்தோஷப்படுவார். இமயத்துக்குத் தான் எங்கள் ஆசானும் போயிருக்கார். எப்போ வருவாரோ, எங்கள் ஆதங்கத்தைத் தீர்ப்பாரோ எனக் காத்திருக்கோம். நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கையில் அவரைக்குறித்தே பேசிக்கொள்கிறோம். அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் என்றும் மனப்பூர்வமாக நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆசான் உங்களுக்கு சீக்கிரம் காட்சியளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அக்கா.

      நீக்கு
    2. கீதா சாம்பசிவம் மேடம் - இந்தப் புத்தகங்களிலேயே அவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். 'ஆசான்' எப்போது தேவையோ அப்போது அவர் நம்மிடம் வந்து நம் சந்தேகங்களைத் தெளிவிப்பார். அதற்கு ஸ்தூல சரீரத்தில்தான் வரணும் என்று அவசியமில்லை, சூக்கும சரீரத்திலும் வந்து அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

      'எப்போ வருவாரோ... எந்தன் கலி தீர' என்ற பாடலைத்தான் உங்கள் வரிகள் நினைவுபடுத்துகின்றன. எனக்குப் ப்ராப்தம் இருந்தால், நான் உங்கள் வீட்டிற்கு வரும்போது அவர் வருவாரோ? யாரே அறிவர்?

      நீக்கு
  12. குழந்தையை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் கனகராஜ் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. //“காலையில் அளிக்கப்பட்ட ஞானம் பகவான் கிருஷ்ணருடையது; நண்பகலில் புத்தருடையதும் மாலையில் இயேசு கிறிஸ்துவுடையதும் என்பதே அன்றி இந்தப் போதனைகளில் எந்த விதமான வேறுபடும் இல்லை. கருணையின் வடிவான இயேசு, ஞானப் பழமான புத்தர் மற்றும் பூரணமான பகவான் கிருஷ்ணரும் அவரவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப, அதைப் பின்பற்றும் அக்களுக்குத் தேவையான போதனைகளை வழங்கினர். பல்வேறு வடிவங்களைக் கொண்டு அவசியமானபோது மானுடத்தை வழிநடத்துவதற்காகத் தோன்றும் அந்த ஒரே மெய்ப்பொருளின் பிரதிநிதியாகத் திகழ்பவர்கள்தான் இந்த மகான்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களின் மீதும் யோகிகள் பரம்பரை பரம்பரையாக மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவாமி ராமா எழுதுகிறார்.//

    தன் மதம் என்று குறுகி போகாமல் அனைத்து மதங்களின் மீதும் யோகிகள் மதிப்பும் மரியாதை வைத்து இருப்பதுதான் அவர்கள் மகான்கள் ஆகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் மதிக்கப்படுகிறது.


    நெல்லைத்தமிழன் அவர்களின் புத்தக விமர்சனம் புத்தகம் படிக்கும் ஆவலை தருகிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தன் மதம் என்று குறுகி போகாமல் அனைத்து மதங்களின் மீதும் யோகிகள் மதிப்பும் மரியாதை வைத்து இருப்பதுதான் அவர்கள் மகான்கள் ஆகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் மதிக்கப்படுகிறது.//

      உண்மை அக்கா...     மற்றவர்கள் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும்.

      நீக்கு
    2. அதுபோல -
      நம்மையும் நமது இறையுணர்வுகளையும் புண்படுத்துபவர்களை ஒதுக்கி வைப்பதும் சரிதானே!...

      நீக்கு
    3. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.... குறுகிய பார்வை விரிய விரிய நாம் இன்னும் பெரியனவற்றை உணர்வோம். அப்படிச் சொல்லும்போது, சிலவற்றில் குறுகிய பார்வை கொண்ட என் குணமும் நினைவுக்கு வருகிறது.

      இறையை உணரும்போது...... மதம் ஒரு கருவிதான் என்று அவர்கள் புரிந்துகொள்கின்றனர். நாம் ஒரு நோயைப் பற்றி நினைப்பதற்கும், மருத்துவர் நினைப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் இது. அவர்களது அறிவுக்கண், பெரியனவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை அவர்களுக்குத் தருகிறது.

      வாய்ப்பு கிடைக்கும்போது படியுங்கள்.

      நீக்கு
    4. @ துரை செல்வராஜு சார் - //நம்மையும் நமது இறையுணர்வுகளையும் புண்படுத்துபவர்களை ஒதுக்கி வைப்பதும் சரிதானே!...// - அப்படிப் பேசுபவர்கள், புண்படுத்துபவர்கள், நாம் போகும் பாதையில் நம்மை முன்னேற விடாமல் ஊறு விளைக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டு, அவர்களைப் புறம் தள்ளுவது சரியான செயல்தான் என்று நினைக்கிறேன்.

      அதை விட்டுவிட்டு, அவர்களிடம் விவாதம் செய்வதினால் நமக்குப் பயனில்லை, பின்னடைவுதான் ஏற்படும். ஆனால் சந்தேகம் தெளிந்தால் புரிந்துகொள்ளக்கூடியவர்களிடம் விளக்கம் சொல்வதில் தவறில்லை.

      நீக்கு
  14. சக்திகுமார், கனகராஜ் இருவரையும் வாழ்த்துவோம்.

    விமர்சனம் பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. குழந்தையை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் எதுவித உபகாரமும் எதிர்பார்காமல் , பாராட்டுகள்.
    புத்தக அறிமுகம்,சொப்டுநீர்பாசனம் பிரயோசனமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  16. நெல்லை இப்புத்தகம் நம் வீட்டில் ஆங்கிலத்தில் உள்ளது.

    உங்களுக்குத் தெரிந்ததுதான் இவர்களது ஆச்ரமம் மருத்துவமனை Himalayan institute of higher consciousness ரிஷிகேஷில் உள்ளது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... இதை நீங்கள் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். தமிழில் நான் மிகவும் ரசித்தேன். (பொதுவா ஆங்கிலத்தில் கொஞ்சம் அந்நியத்தன்மையை நான் உணர்வேன் ஹா ஹா)

      நீக்கு
  17. ஏகாந்தன் அண்ணாவுக்கு நன்றி சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய செய்திக்கு...அதை இங்குப் பகிர்ந்த உங்களுக்கும் ஸ்ரீராம்.

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜெக்ட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொட்டுநீர்ப்பாசனம் - நன்றி போய்ச்சேரவேண்டிய இடம் விகடன் !

      நீக்கு
  18. நெல்லை எனக்கும் ஜி எம் பி ஸார் அனுப்பியிருக்கிறார். வாசித்துக் கொண்டிருக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக...நீங்கள் எழுதலாமே...அவர் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவார் எதற்கு இதற்கு அனுமதி? அவருக்கு அது சந்தோஷத்தைத்தானே தரும்...எழுதுங்கள் நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்லப் போனால் அவருக்குத் தன் புத்தகங்கள், எழுத்துகளுக்கு விமரிசனம் வருவதில்லையே என்ற குறை உண்டு. அதைப் பதிவிலும் சொல்லியிருக்கிறார். எனவே நெல்லை அதை நீங்கள் விரைவில் கொடுங்கள்.

      நான் படித்து முடிக்க நாட்கள் ஆகும்.!!!!!!!!!!! இப்போதுதான் கணினியில் அதைக் காப்பி செய்து கொண்டு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்!!!

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி கீதா ரங்கன். நான் ஜி.எம்.பி. சாரின் நாவலுக்கு விமர்சனம் எழுதினேன். ஆனால் அவரிடம் பகிர்ந்துகொள்ளவில்லை.

      ஆனால், சனிக்கிழமை எ.பி.ல வெளிவந்தால் அதற்கு ரீச் இருக்கலாம் என்று நினைத்தேன். அவரிடம் அனுமதி கேட்டேன். அவர் சரி என்று சொன்னால் மட்டும் எ.பி.க்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். (ஸ்ரீராம்... புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துபவர். அதனால் புத்தக அறிமுகம், விமர்சனம் எழுதினால் தடை சொல்ல மாட்டார் என்பது என் நம்பிக்கை) ஆனால், ஜி.எம்.பி. சார், என் விமர்சனம் எ.பி.யில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்குக் காரணமாக, அந்த நாவல், எங்கள் பிளாக்கில் எழுதப்படவில்லை, அதனால் அங்கு விமர்சனம் வெளியாவதை விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்.

      விமர்சனம் என்று வரும்போது அதை என் மனசாட்சிக்கு ஒப்பத்தான் செய்வேன். அது நீங்கள் எழுதினாலும் சரி, ஸ்ரீராம், வல்லிம்மா, கீசா மேடம்... என்று யார் எழுதிய புத்தகமானாலும் சரி.

      நீக்கு
  19. இது போன்ற பல வித்தைகளைத் தான் பார்த்ததையும், அதற்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இத்தகைய வசீகர மாயவித்தையில் நம் மனம் சென்றால், ஆன்மீக முன்னேற்றம் நிகழாது எனவும், அது மேலும் நம் கர்ம வினைகளை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

    ஆன்மீகத்துக்கும் குறிப்பிட்ட மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.//

    அருமையான கருத்து. அதே அதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன்... ஆன்மீகத்தில் இறங்குபவர்கள் (தியானம் போன்றவற்றில்) எல்லா மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் போதனைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

      இமயத்தில் இதய குரு புத்தகத்தில், ஆசிரியர் ஸ்ரீ.எம். தனது ஆசானிடம், 'பத்ரிநாராயணர் கோவில்' முன்பு புத்தர் கோவிலாக இருந்து, அவதூதரைத்தான் ஆதிசங்கரர் பத்ரிநாராயணராக மாற்றி, கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளிடம் கோவிலில் பூஜை செய்ய நியமித்தார் என்கிறார்களே என்றதற்கு, அந்த அரசியலுக்கும் நாம் போகவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் அவர் ஆசான்.

      நீக்கு
  20. “காலையில் அளிக்கப்பட்ட ஞானம் பகவான் கிருஷ்ணருடையது; நண்பகலில் புத்தருடையதும் மாலையில் இயேசு கிறிஸ்துவுடையதும் என்பதே அன்றி இந்தப் போதனைகளில் எந்த விதமான வேறுபடும் இல்லை. கருணையின் வடிவான இயேசு, ஞானப் பழமான புத்தர் மற்றும் பூரணமான பகவான் கிருஷ்ணரும் அவரவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப, அதைப் பின்பற்றும் அக்களுக்குத் தேவையான போதனைகளை வழங்கினர்.

    உலகிலுள்ள அனைத்து மதங்களின் மீதும் யோகிகள் பரம்பரை பரம்பரையாக மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்” //

    அதே அதே!!! ஆனால் பக்குவப்படாத மனிதர்கள் தான் இதை எல்லாம் பிரச்சனை ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் கீதா ரங்கன்... அந்தப் பக்குவம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வருவது மிகக் கடினமல்லவா?

      நீக்கு
  21. நல்ல விமர்சனம் நெல்லை. எது மிக மிகத் தேவையோ அதை ஹைலைட் செஞ்சு சொல்லிட்டீங்க. சூப்பர்.

    படங்கள் அத்தனையும் அட்டகாசம் நெல்லை மிகவும் ரசித்தேன். இயற்கை இயற்கைதான் அதனை விஞ்ச யாரால் முடியும்!!!!!!! கண்ணையும் மனதையும் கவர்ந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹெலிகாப்டரில் இமயமலை மீது பயணம் செய்தபோது அதன் பனிச்சிகரங்களைப் பார்த்துப் பரவசமடைந்தேன். அப்போ கேமரா கொஞ்சம் சுமார்தான். இருந்தும் நிறைய படங்கள் எடுத்தேன். இனி ஒரு வாய்ப்பு அப்படி அமையுமா? அமையணும் என்று விரும்புகிறேன்.

      நீக்கு
  22. ஆன்மீகத்துக்கும் குறிப்பிட்ட மதத்திறும் சம்பந்தம் இல்லை. கடவுளை அறிய அது ஒரு வழி என்று குறிப்பிடும் சுவாமி இராமா, இமயத்தில் தான் சந்தித்த கிறித்துவ யோகி பற்றியும் குறிப்பிடுகிறார். கருணையும் அன்பும் கொண்டிருந்த சாது சுந்தர்சிங் அவர்கள் மிகச் சிறந்த ஆன்மா எனவும் அவர் பைபிளையும் பகவத்கீதையையும் ஒப்பிட்டுச் சொன்னதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.//

    உண்மைதான். மதங்களை பின்பற்றுபவன் அல்ல இறைவனை பின்பற்றுபவனே ஆன்மீகவாதி.

    புத்தக விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோசப் சார்.... ஒவ்வொரு ஆன்மாவும் அதன் தேடலுக்குத்தான் முயற்சிக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் நம்பும் வழியில் பயணிக்கவேண்டும். அப்படிப் பயணிக்கும்போது, அடுத்தவரின் பாதை சரியில்லை என்று சொல்லும் யோக்கியதை யாருக்கும் கிடையாது என்று நான் நம்புகிறேன். எல்லாருமே இறைவனை நோக்கித்தான் பயணிக்கிறோம். அதில் மதத்தைப் பிடித்துத் தொங்குவது சரியான முறையல்ல என நினைக்கிறேன்.

      நீக்கு
  23. ரீராம்! பதிவு முழுவதும் bold type font இல் இருப்பதைக் கொஞ்சம் மாற்றுங்களேன்! பாசிட்டிவ் செய்திகள் சிலவரிகளில் இருப்பதால் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் புத்தக அறிமுகமாக வந்திருக்கிற பகுதியை மாற்றினால் நலம்.

    அன்புள்ள நெ.த.! புத்தக அறிமுகம் மிகச் சுருக்கமாக இருக்கிறது. உங்களிடம் புத்தகம் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணமூர்த்தி சார்.. போல்ட் எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்தாண்டவை.

      இந்த மாதிரியான புத்தகங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவரவர் எடுத்துக்கொள்வதைப் பொறுத்து இருக்கிறது.

      நான் அறிமுகப்படுத்திய இரண்டு புத்தகங்களை நான் 94ல் வாசித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து 40களில் இமயமலை நோக்கி நிரந்தரமாகப் பயணித்திருக்கலாம், இல்லை தீவிர தேடல் காரணமாக தகுந்த குரு வாய்க்கப்பட்டு வாழ்க்கை மேம்பட்டிருக்கலாம். எங்கே சென்றிருக்கும் இந்தப் பாதை... யாரோ யாரோ அறிவாரோ?

      நீக்கு
    2. நல்லகதை! என்னுடைய சிறுவயதிலேயே சுத்தானந்த பாரதியாருடைய ஆத்ம சோதனை ( இப்போது சோதனையும் சாதனையும் என்ற புத்தகமாக) முதற்கொண்டு பல ஆன்மீகப்பெரியவர்களுடைய நூல்களை வாசித்தேன் என்பதற்காக, நானும் சன்யாசியாகி இருக்கலாம் என்று இப்போது சொல்லிக் கொள்ளலாமா? அதற்கெல்லாம் ஜாதக விசேஷம் இருக்கவேண்டுமாக்கும்! சந்தேகமிருந்தால் தி ஜானகிராமன் எழுதிய மலர்மஞ்சம் நாவலில் வருகிற சிரகாரி கதையைப் படித்தோ அல்லது RP ராஜநாயஹம் பதிவுகளிலோ வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்! :-)))

      இளம் வயதிலேயே ராம கிருஷ்ண மடத்தில் ஈடுபாடு அதிகமாகி சந்நியாசம் வாங்கி கொள்ளப்போனார் ஒரு நண்பர்! குடும்பமே சென்னை மடத்துக்குப் போய் அவரை மீட்டுக் கொண்டு வந்த கதையை இப்போது மதுரை சில வருடங்களுக்கும் முன்னால் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனில் சுவாமி கமலாத்மானந்தா சொன்னபோது கேட்டு வியந்திருக்கிறேன். அந்த நண்பர் அரிஸ்டாடில், பிளேட்டோ, அயன் ராண்ட் என்று 360 டிகிரியிலும் வாசித்தவர். அவரளவுக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் கொண்டவரை இதுவரையிலும் நான் காணேன்! காஷாயம் வாங்கி கொள்ளவில்லையே தவிர கதர்ச்சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டுமாக இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் அமைதியாக எதுவும் எழுதாமல் அமைதியாக இருக்கிறார். அவர் பெயரை நீங்களும் கேள்விப்பட்டிருக்கக் கூடும்! ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கன்!

      நீக்கு
    3. @நெல்லைத்தமிழரே! என் சித்தப்பாவும் ராமகிருஷ்ணா மிஷனில் ஈடுபாடு கொண்டு 30 வயது வரை திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆனால் அவர் வாழ்க்கை வேறு விதமாக மாறியது அல்லவா? ஆகவே சந்நியாசி ஆகணும்னு நினைப்பவர் எல்லாம் ஆக முடியாது. அந்த யோகம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே திட மனது வேண்டும். எங்க குருநாதர் வீட்டுக்கு மூத்த பிள்ளை. பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். சில வருடங்கள் வேலைக்கும் போயிருக்கிறார். ஆனாலும் பத்து வயதிலிருந்தே அவர் தந்தையை குருவாகக் கொண்டு ஆன்மிக சாதனைகளை/பயிற்சிகளையும் செய்து வந்திருக்கிறார். இம்மாதிரி இளம் வயதில் இருந்தே அந்தத் தேடல் இருக்க வேண்டும்.

      நீக்கு
    4. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நான் எளிதாகச் சொல்லிவிட்டேன். அததற்கு ப்ராப்தம் (இந்த வார்த்தை தவறு.. அதற்கான முன்வினைப் பயன் இருந்தால் மட்டும்) இருந்தால்தான் வாழ்க்கை அந்த அந்த வழிகளில் செல்லும்.

      என் யோகா மாஸ்டர் சிலருக்கு தியானம் கற்றுத்தந்தார். எனக்கு ரொம்ப மெதுவாக, சுமாராகத்தான் லபித்தது (அட..இது துளசி டீச்சர் வார்த்தை). சிலருக்கு உடனேயே ஆழ்நிலைக்குச் செல்ல முடிந்தது (நெற்றியில் அவர்களால் ஒளியைப் பார்க்க முடிந்ததாம்)... ஆனால் யோகா மாஸ்டர் என்னிடம், நீங்க 45 நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய முயல்றீங்க. அதுவே பெரும்பாலானவர்களுக்கு வராது. தொடர்ந்து அந்த வழில போங்க. எப்போ கைகூடும்னு சொல்ல முடியாது. அது ஒரு புகை படிந்த பழைய கண்ணாடி மாதிரி. தியானம் வழியில் போகப் போக புகை விலகும். ஒரு நாள் கண்ணாடி பளிச் என்று தெரியும். அந்த வழியிலேயே போங்க என்றார்.

      என் மனைவிக்கோ.... 'இந்த ஆளு இது என்ன தியானம்னு உட்காருகிறாரே' என்று எண்ணம். அப்போ அப்போ.. இது நம்ம வழியில்லை. நமக்கான வழி வேறு என்று தூபம் போட்டுக்கொண்டே இருப்பாள்...ஹா ஹா. அப்படி தியானம் செய்வது ஒருநாள் நின்றுவிட்டது.

      இளம் வயதுத் தேடலுக்கும் வினை இருக்க வேண்டும் அல்லவா?

      நீக்கு
    5. @கிருஷ்ணமூர்த்தி சார் - //நூல்களை வாசித்தேன் என்பதற்காக, நானும் சன்யாசியாகி இருக்கலாம்// - புத்தகத்தை வாசிப்பவர்கள் எல்லோருக்கும் இந்த எண்ணம் வராது. என்னை இமயமலை... பத்ரிநாத் தொடங்கி மேலே மேலே சென்று பல கோவில்களின் தரிசனம் கிடைக்கணும், ஆங்காங்கே தியானம் செய்ய முயற்சித்து அந்த வழியில் செல்லணும் என்ற ஆசை உண்டு. அதுனால, சும்மா புத்தகத்தை வாசித்து உடனே சன்யாசியாக மாறிடணும் என்று எண்ணவில்லை.

      /ஈடுபாடு அதிகமாகி சந்நியாசம் வாங்கி கொள்ளப்போனார் // - நான் படித்த புத்தகங்களிலும், அப்படி வீட்டை விட்டு துறவறம் சென்று, தியானம் பழகுகிறேன் என்று இமயமலையில் உள்ள ஆசிரமங்களில் ஒன்றில் வாழ்க்கையைச் செலவழித்து தியானத்தையும் அடைய முடியாமல், திரும்ப வீட்டிற்குச் செல்ல சாத்தியமில்லாமல், வயதாகி, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தகுந்த குரு அவரிடம் என்ன செய்யணும் என்று உபதேசிக்கிறார். (குருவிடம், தன் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுவிட்டது.. நான் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்று சொன்னபோது அவர் அதற்கான வழியைச் சொல்லித்தருகிறார்). குரு, புத்தக ஆசிரியரிடம், அந்த வயதானவரின் அடுத்த பிறப்பு அவர் இந்தப் பிறப்பில் அடையாததை நோக்கி இருக்கும் என்று சொல்கிறார்.

      தேடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தேடல், இந்தப் பிறப்பில் கிடைக்காவிட்டாலும், அடுத்த ஜென்மாவிலாவது அதனை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    6. மோகனரங்கன் அவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர் என் நெருங்கிய தோழியின் சகோதரர். நான் அவருடைய ப்ளாகுகளை வாசித்திருக்கிறேன். அவர் குடும்பத்தில் எல்லோருமே level headed. 

      நீக்கு
    7. மோகனரங்கன் எங்களுக்கும் நெருங்கிய நண்பர். சுமார் பத்துவருடங்களாக!இணையத்தின் மூலம் தான் அறிமுகம். தற்போது ஸ்ரீரங்கம்வாசியாக ஆனபின்னர் வீட்டுக்கு அவ்வப்போது வருவார். சில மணி நேர சத்சங்கம் பேசி முடித்த பின்னர் காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விடுவார். அவர் அம்மா, சகோதரர் எல்லோரும் சென்னையில் தான் இருக்கின்றனர். அவ்வப்போது சென்னை செல்லுவார்.

      நீக்கு
  24. ஸ்ரீராம் என்றழைத்ததில் எழுத்துப்பிழை! பொறுத்தருள வேண்டும்!

    பதிலளிநீக்கு
  25. இரண்டு செய்திகளும் அருமை... நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    புத்தக அறிமுகத்துக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். உங்களை ரொம்ப நாட்களாக இந்தப் பக்கம் காணவில்லையே... நலமா?

      நீக்கு
  26. // புத்தக அறிமுகம் – நெல்லைத்தமிழன் //

    அதற்கு கீழுள்ள அனைத்தும் "bold" நெருங்கிய வரிகளில்...

    அப்போது, பதிவை Ctrl-யை அழுத்திக் கொண்டு + (plus) key-யை இருமுறை சொடுக்கி வாசித்து விட்டேன்...

    தீர்வு : நெல்லைத்தமிழன் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய இந்த தகவலை, அப்படியே "copy" செய்து உங்கள் தளத்தில் "paste" செய்து இருப்பீர்கள்... அல்லது "Ms-word"-ல் அனுப்பியதை "copy" செய்து உங்கள் தளத்தில் "paste" செய்து இருப்பீர்கள்...

    அதற்கு முன் அவ்வாறு வரும் தகவல்களை இங்கே -->https://translate.google.com/<-- சென்று முதல் பெட்டியில் just "copy" செய்து உங்கள் தளத்தில் "paste" செய்யவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  27. முற்றும் கசந்ததென்று...
    பற்றறுத்து வந்தவருக்கு...
    (புத்தக விமர்சனம் எல்லாம் சரி... என்ன நெல்லைத்தமிழன் ஐயா... எந்த நிலையில் இப்போது உள்ளீர்கள்....?)
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்...
    அவனை தொடர்ந்து சென்றால்...
    அவன் தான் இறைவன்...

    பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
    ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன்...
    அவனை புரிந்து கொண்டால்
    அவன் தான் இறைவன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி சிந்திக்கிறார்கள் இல்லையா திண்டுக்கல் தனபாலன்?

      நீக்கு
    2. சிந்திப்பவரெல்லாம் சந்திப்பதில்லை.

      நீக்கு
    3. சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை... தந்துவிட்டேன் என்னை

      என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வருது.... ஸ்ரீராமுக்கு இந்த வரி தெரியுமா?

      நீக்கு
  28. இந்தப்பதிவினை முழுவதுமாக ’தலையோடு கால்’ படித்து விட்டேன். வழக்கம்போல ஓர் எழுத்துப்பிழை என் கண்களில் பட்டு உறுத்தி வருகிறது. அதை முதலில் சரி செய்து விடுங்கோ, ஸ்வாமீ.

    கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படங்களுக்கு மேல் உள்ள பத்தி (பத்தி=Paragraph), வரி எண்: 4 கடைசியாக உள்ள வார்த்தை ”அக்களுக்குத்”.

    முதலில் ’அக்குளுக்குள்’ என இருக்குமோ எனப் பொருத்திப் படித்துப் பார்த்தேன். (அக்குள் = கைக் கிடுக்கில் முடி வளரும் இடம்). அது சரியாக வரவில்லை.

    அதனால் ”அதைப் பின்பற்றும் ’ம க் க ளு க் கு த்’ தேவையான போதனைகளை வழங்கினர்.” என இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சரியா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோபு சார்... பல வருடங்களாக வராமல் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ மாதிரி வந்திருக்கீங்க. என்னவோ தகிடுதத்தம் செய்துதான் உங்களை இணையத்துக்கு அழைத்து வர வேண்டியிருக்கிறது.

      நீங்கள் சொன்னது சரிதான். என்னுடைய தட்டச்சுப் பிழை. கடைசி நேரத்தில் அனுப்பி இந்த மாதிரி சங்கடங்களை எ.பிக்குக் கொடுத்துவிடுகிறேன்.

      நீங்க சரியாக் கண்டுபிடிச்சதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் நிச்சயமாத் தெரிந்துவிட்டது. உங்க கண்பார்வை மிகக் கூர்மையா இருக்கு என்று. வீட்டிலிருந்தே மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலை (அதையா இல்லை அதை நோக்கிச் செல்பவர்களையா என்பதில் எனக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு) தினமும் பார்ப்பதால் கண் பார்வை ரொம்ப ஷார்ப்பாக இருக்கு போலிருக்கு.

      அது சரி..கோவிலை மறைக்கும் விதமா (உங்க வீட்டிலிருந்து) புதிது புதிதாக பெரிய கட்டிடங்கள் எழும்புகிறதே தற்போது....

      நீக்கு
  29. இந்த முறை சரஸ்வதி பூஜையன்று என்னிடம் சேர்ந்துள்ள ஏராளமான புஸ்தகங்களை தூசித்தட்டி எடுத்துப் பார்த்தேன். 
    அவற்றில் சிலவற்றை மட்டுமே நான் படித்துள்ளேன். பலவும் நான் இதுவரை படிக்காதவை + படிக்க விரும்பாதவைகளும் கூட. 
    புஸ்தகம் படிப்பதில் உள்ள ஆர்வம் எனக்கு, இப்போதெல்லாம் வெகுவாகக் குறைந்து போய் விட்டது. காரணம் ...... அதிலுள்ள பொடிப்பொடியான எழுத்துக்கள் + ஒரு பக்கம் படித்து முடிப்பதற்குள் வந்துவிடும் மிக அருமையான தூக்கம் + அந்த அளவுக்கு விறுவிறுப்பாக எழுதிவரும் நமது எழுத்தாளர்கள்.  :)) 
    புஸ்தகப்பிரியரான தங்களை அடியேன் அடுத்தமுறை சந்திக்க நேர்ந்தால் சுமார் 25 புஸ்தகங்களுக்குக் குறையாமல், அன்பளிப்பாகக் கொடுத்துவிட மிகவும் ஆர்வமாக உள்ளேன்.  சீக்கரமாக வருகை தந்து வாங்கிச் செல்லவும். 
    புஸ்தக தானம் அளிக்கும் புண்ணியத்தைவிட, அடியேன் வீட்டின் அடசல்கள் வெகுவாகக் குறைந்து, காலியான வெற்றிடம் அதிகரிக்குமே என்ற சுயநலம் மட்டும்தான் தலைதூக்கி நிற்கிறது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சரஸ்வதி பூஜை அன்று' என்று எழுதினபிறகு கமா போடாததால், முதலில் எனக்கு, யாரு சரஸ்வதி பூஜை அன்று கோபு சாருக்கு இவ்வளவு புத்தகங்கள் பரிசளித்தது என்று யோசித்தேன்.

      நீங்களே இத்தனை வருடங்களில் அவற்றைப் படிக்கவில்லை என்றால், புத்தகங்கள் எவ்வளவு இண்டெரெஸ்டிங் ஆக இருக்கும்னு எனக்குப் புரியுது. உங்களுக்குத்தான் என்மேல் எத்தனை அன்பு......... சைஸ் குறைவான, நிறம் சுமாரான, துணி தரம் சாதாரணமான ரவிக்கைத் துண்டுகளை, எப்படா நவராத்திரி வரும், அல்லது வேறு விசேஷம் வரும்,... வீட்டிற்கு வருபவர்களுக்குத் தள்ளிவிட்டு, நாம புண்ணியத்தைக் கட்டிக்கலாம் என்று காத்திருக்கும் பெண்கள்போல், நீங்களும் என் வருகைக்குக் காத்திருக்கிறீர்கள் போலிருக்கு.

      என்னுடைய ஒரு குணத்தை உங்கள்ட சொல்லலை. நான் எப்போவும் எது யார் தந்தாலும் (இனிப்புகள்னாலும் சரி, பழங்கள்னாலும் சரி, புத்தகங்கள்னாலும் சரி...எதுவானாலும்) அது எனக்கு உபயோகமா என்று பார்த்து, தேவை என்றால்தான் ஏற்றுக்கொள்வேன். இல்லைனா மரியாதையாக மறுத்துவிடுவேன்.

      இப்படித்தான் கொஞ்சம் வாடின, இல்லை புதிதாக இருந்தாலும் சாத்துக்குடி பழங்கள் தந்தால்.... அதை யார் உரித்துச் சாப்பிடுவது என்ற எண்ணத்தில் வாங்கிக்கொள்ளவே மாட்டேன். வாழைப்பழமும் ஒன்றுக்குமேல் வாங்கிக்கொள்ள மாட்டேன்.

      அதுனால.... உங்க கடைசி இரண்டு வரிகளைப் படித்த பிறகு, ஸ்ரீரங்கம் செல்வதற்கு, திருச்சி பக்கமே வராம ஏதாவது பை-பாஸ் ரோடுகள் இருக்கா என இப்போவே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

      நீக்கு
  30. //"சாதிகளற்ற சமுதாயம் கட்டமைப்பது எப்படி" புத்தகத்தை. வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கும் பரிசளித்தால் புத்தகம் எங்கு போகும்னு நாம அனுமானிக்கலாம். ஹா ஹா //

    ஸ்வாமீ,

    ’சாதி’ என்றால் என்ன? [ என் பொஞ்’சாதி’ மட்டுமே நான் அறிவேன் ]

    ’சமுதாயம்’ என்றால் என்ன? 

    ’கட்டமைப்பது’ என்றால் என்ன? [ கட்டி அணைப்பதா? ]

    ஒன்றுமே புரியலே ..... உலகத்திலே .... என்னவோ நடக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது கோபு சார்.... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னா.... 'சாதிகளற்ற சமுதாயம் கட்டமைப்பது எப்படி' என்று புத்தகம் வெளிவந்திருந்தால், தயவு செய்து எனக்குப் பரிசளியுங்கள். நான் அதனைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறீர்கள்.

      இதைப் படிப்பவர்கள் அவர்கள் நினைவில் வைத்திருக்கட்டும்.

      ஆனா பாருங்க... நீங்க நெல்லிக்காய் தொகையல் செய்து சிறிது டேஸ்ட் பார்க்க உங்க வீட்டுக்கு வந்த எ.பி. ஆசிரியர்களுக்குக் கொடுத்தீர்களோ? அதற்குப் பிறகு அவங்க திருச்சி பக்கமே எட்டிப் பார்க்கலை போலிருக்கே. அதிகக் காரமோ?

      //என் பொஞ்’சாதி’ மட்டுமே நான் அறிவேன்// - எதுக்கு சார்... புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமைல (இப்படி காலைல ஒருத்தர் சொன்னார். நான் அவர்ட்ட துலா மாசம் வந்தாச்சே என்றேன். அதற்கு அவர்..அதனாலென்ன, இது ஐந்தாம் சனிக்கிழமைதானே என்றார்) எதுக்கு இந்த டூப்பு.....

      நீக்கு
  31. //..ஒரு பக்கம் படித்து முடிப்பதற்குள் வந்துவிடும் மிக அருமையான தூக்கம் + அந்த அளவுக்கு விறுவிறுப்பாக எழுதிவரும் நமது எழுத்தாளர்கள். //

    அத்தகைய எழுத்தாளர்கள் முக்கியமான சமூகசேவையில் ஈடுபட்டுவருகிறார்கள் போலிருக்கிறது. இன்ஸோம்னியா-வினால் கஷ்டப்படுபவர்கள் இவர்களின் புஸ்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டினால் .. சொக்கி விழுந்துவிடுவார்களே தூக்கத்தில்! டாக்டர் செலவும் மிச்சம்.
    Priceless books! ஆள்பார்த்துப் பரிசளிக்கவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... விகடன் பிரசுரத்தில் ஒரு புத்தகம் (நேருவைப் பற்றிய புத்தகம், அதனை தமிழக எம்.பி ஒருவர் தமிழாக்கம் செய்திருந்தார்) நம்பி வாங்கினேன். ஒரு அத்தியாயம் படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஏந்தான் மொழியாக்கம் செய்யத் தெரியாதவர்கள் இத்தகைய வேலையில் கையை வைக்கிறார்களோ... அதையும் விகடன் பிரசுரித்து தன் பெயரைக் கெடுத்துக்கொள்கிறது. கொடுத்த பணம் வேஸ்ட்.

      பெரும்பாலும் நகைச்சுவைப் புத்தகங்கள், அனுபவங்கள், தன் வரலாறு போன்றவை படிக்க ரசனையாக இருக்கும்.

      ஸ்ரீராம் சொல்லியிருப்பதுபோல், 'கீரைகளில் பலவித வகைகள்', 'தனக்குத்தானே வைத்தியம்-நன்றாகப் படித்துப் பாருங்கள்..பைத்தியம் என்று எழுதவில்லை' போன்ற தலைப்பில் வரும் புத்தகங்கள், சும்மா நானும் புத்தகம் பிரசுரித்தேன் என்ற வகையில் வரும்.

      எனக்கு ஒருவர் 'வள்ளலாரின் வாழ்க்கை நெறி' போன்ற ஒரு தலைப்பில் பெரிய புத்தகத்தைப் பரிசளித்தார். எனக்கு படிக்க அவ்வளவாக ஆர்வமே இல்லை. ஒரு மருத்துவர், துபாயில், தான் வைத்திருந்த 3 சிறிய புத்தகங்களைக் காண்பித்தார்...அதில் ஒன்று சிவவாக்கியர்-திருமழிசை ஆழ்வார் வரலாறு மற்றும் பாடல்கள் என்பது. என்னை மிக மிகக் கவர்ந்தது அந்தப் புத்தகம். எல்லாப் புத்தகங்களுமே எல்லாரையும் கவராது.

      நீக்கு
    2. நெல்லைஜி! நீங்கள் சொல்வது சரி.

      இப்போது வரும் புத்தகங்கள் படிக்கும்படியாக பெரும்பாலும் இல்லை. ஒரு தேர்ந்த வாசகனுக்குரியவை அல்ல அவை. ஏனெனில் எல்லோரும் எழுதிப் பார்க்கிறார்கள் - என்னத்தைப் பார்க்கிறார்கள்? நாம் எழுதியிருக்கிறோமே ஒரு புத்தகம் , அதனால் இந்த உலகம் பெரும் மாறுதலை அடைந்துவிட்டதோ என்றுக் கூர்மையாக இடது வலதாகப் பார்க்கிறார்கள். இது அவர்களின் ’படைப்புத் திறனை’,நம்பிக்கையைக் காண்பிக்கவில்லை. அவர்களின் அசட்டுத்தனத்தை அண்டர்லைன் செய்கிறது.

      நல்ல வாசகனாக இருப்பதற்கே ஒரு யோக்யதை இருக்கவேண்டும், ரசனை, தேர்வு போன்ற சில.. அதனைத் தாண்டிய நிலை - ’எழுத்து’ அல்லது ’படைப்பு’ . எல்லோருக்கும் நிகழுமானால் அது எழுத்தல்ல - நான் இங்கு இலக்கியப் படைப்பை, அல்லது அதனை ஒத்த தரமான வேறு வகைமைப் புத்தகங்களைக் குறிப்பிடுகிறேன். தமிழ்நாட்டில் ’படைப்பு’ அல்லது ‘எழுத்து’ என்பதை வாயால் வடைசுடுவதுபோல், அச்சிலும் சுட்டுவிடலாம் என நினைத்துப் போடுகிறார்கள் புத்தகங்களை - ஆடு புழுக்கை போடுவதுபோல. அவை அவற்றிற்கே உரிய விதியை விரைவில் சந்திக்கும். We can't help it. There is trash everywhere.. and trash will soon reach its final destination.

      நீக்கு
    3. @ ஏகாந்தன் சார் - //நாம் எழுதியிருக்கிறோமே ஒரு புத்தகம் , அதனால் இந்த உலகம் பெரும் மாறுதலை அடைந்துவிட்டதோ// - புத்தகம் என்பது, 'ஏப்பம்' மாதிரி வெளிவந்துகொண்டே இருந்தால் அவை யாரிடமும் எந்தவித மாற்றத்தையும் தோற்றுவிக்காது. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை, தமிழ்வாணன்... என்று பெரிய லிஸ்ட் எழுத்தாளர்களின் நாவல்கள் ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆக படிக்கமுடியும். படித்து முடித்த பிறகு திரும்பப் படிக்க அதில் வேலையில்லை. பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் 'கொட்டாவியை' வரவழைக்கும் என்பதைவிட, இப்போதெல்லாம் 'ஏன் இதைப் படித்து நேரத்தை வீணாக்குகிறோம்' என்று தோன்றும். சில புத்தகங்கள்தாம், பலதடவை படித்து, அதில் சொல்லப்பட்டுள்ளவற்றை உள்வாங்கி, மீண்டும் படிக்கத் தோன்றும் புத்தகங்கள்.

      சாதாரண முகலாயர் வரலாறே எனக்கு அத்தகைய 'மீண்டும் படிக்கவேண்டும்' என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. சமீபத்தில் அக்பர் கோட்டை, ஆக்ரா கோட்டை, தாஜ்மஹல் இவற்றைப் பார்த்தபோது, நான் படித்த புத்தகங்களில் இருந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. இங்கு வந்த பிறகு மீண்டும் அதனைப் படிக்க அந்தப் புத்தகத்தை இன்னும் தேடுகிறேன். ஆனால் இவற்றில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும்னு சொல்ல முடியாது. எனக்குத் தோன்றியது,

      இந்த ஷாஜஹானுக்கு தன் மாளிகையிலிருந்து பார்க்கும் தூரத்தில் (2 1/2 கிலோமீட்டர்) தன் மனைவியின் சமாதியை மிகவும் செலவழித்து அமைக்கவேண்டும், அதன் அருகிலேயே தன் சமாதியும் அமையவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஷாஜஹானின் தந்தைக்கு, அவர் ஆக்ராவிலிருந்து அரசாண்டிருந்த போதும், அவரது சமாதி லாகூரில் அவரது மனைவி நூர்ஜஹானால் கட்டப்பட்டது. அது ஏன் என்று என் மனசில் தோன்றி, காரணம் கண்டுபிடிக்க, அனுமானிக்கத் தோன்றும்... அதற்குக் காரணம், ஷாஜஹான் அரசாட்சியை மேற்கொண்டபோது, நூர்ஜஹானுக்கு ஓய்வளித்து அவருக்கு வருடத்துக்கு 2 லட்சம் ஓய்வூதியம் கொடுக்கிறான். நூர்ஜஹான், ஜஹாங்கீர் அரசனாக இருந்தபோது, அரசியலில் மிகவும் மூக்கை நுழைத்து, ஜஹாங்கீரையே தான் நினைத்தவற்றைச் செய்யுமாறு செய்யும்படியான அதிகாரத்தை ருசித்திருக்கிறாள். அதனால் ஷாஜஹான் அரசாட்சியைக் கையில் எடுத்தபோது, நூர்ஜஹானின் சகோதரனை (ஷாஜஹான் மாமனார்) தன் அரசவையில் அமைச்சராக வைத்தபோதும், நூர்ஜஹானை லாஹூருக்கு, அரசியலிலிருந்து வெகுதள்ளி இருக்கும்படியாக அனுப்பிவிடுகிறான் என்றே தோன்றியது.

      இதைப்போலவே நான் மற்ற தமிழக வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கும்போதும் அது சம்பந்தமான வரலாற்று நிகழ்ச்சிகளை அவதானிப்பதில், புரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவேன்.

      எனக்கு ஒருவர், முகம்மது நபி (PBUH) வாழ்க்கை வரலாறு (இது செளதிய அரசால் அதிகாரபூர்வமானது என்று சொல்லி பதிப்பிக்கப்பட்டது) கொடுத்தார். வெகு இண்டெரெஸ்டிங். அதுபோல சென்னையில் ஒருவர், ஹதீஸ் எனப்படும் நூல்களில் ஒன்றைக் கொடுத்தார். அது முகம்மது காலத்தில் அவருடன் பழகியவர்கள் முகம்மது சொன்னதாக எழுதிவைத்தது. அதுவும் வெகு இண்டெரெஸ்டிங்.

      மற்றபடி, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எனக்குப் பிடிக்காமல் இருந்துவிடலாம். இது ஒவ்வொருவர் ரசனையைப் பொருத்தது.

      நீக்கு
  32. இன்றைய நற்செய்திகள் அனைத்தும் மிகச் சிறப்பான செய்திகள்.
    குழந்தையை மீட்டவருக்கு நன்றிகள். அது விழுந்த வேகத்தில் எப்படி பயந்திருக்குமோ.
    அதன் அதிர்ஷ்டம் கடவுள் கிருபையில் கனகராஜ் வந்திருக்கிறார்.

    உயிரை மீட்டவரை எப்படிப் பாராட்டினாலும் தகும்..என்னாளும் வளமாக வாழட்டும்.


    சொட்டு நீர் பாசனத்தை அருமையாகச் செயல் படுத்தி மண்வளம் காக்கும் சக்தி குமாருக்கும்,
    க்ளூகோஸ் பாட்டில்கள் வைத்து மரக்கன்றுகளைப் பேணும் கிராமத்தாருக்கும்

    மனம் நிறை வாழ்த்துகள்.. செய்திகளைப் பகிர்ந்த ஏகாந்தன் சாருக்கும்
    ஸ்ரீராமுக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  33. நெல்லையின் புத்தக விமரிசனம்

    பளிச்சென்று
    உண்மையான துறவறத்தையும் ,நல்லிணக்கத்தையும் அறிமுகப் படுத்துகிறது.
    அவர் ரசித்தபடியே அப்படியே மாறாத உணர்வுகளோடு கொடுத்திருக்கிறார்.

    நல்ல தமிழில் கேட்பவரின் இதயங்களை அடையுமாறு
    எழுதி இருக்கிறார்.

    இன்னும் மனம் முதிர்ச்சி அடையாத நிலையில் பெரிய புத்தகங்களைப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... இந்தப் புத்தகங்கள் ரொம்பவே இண்டெரெஸ்டிங் ஆக இருக்கும். இதுக்கும் நம் நிலைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் இவற்றைப் படிக்கும்போது, 'அட இந்த மாதிரிலாம் இருக்கே... இவ்வளவு பரந்து விரிந்திருக்கா' என்றெல்லாம் தோன்றும். கட்டாயம் படித்துப் பாருங்கள். ஆனா நீங்க புத்தகங்களையெல்லாம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முடியுமான்னு தெரியலை.

      நீக்கு
  34. குழந்தையை காப்பாற்றியதோடு நில்லாமல் அதற்கான வெகுமதிகளை ஏற்க மறுத்த ஆட்டோக்காரர் கவர்ந்தார் என்றாலும், காலத்திற்கு ஏற்றாற்போல் சொட்டு நீர் பாசனத்தை வெகு எளிமையான உபகரணங்களோடு செயல்படுத்தி வருபவர்களை பாராட்ட தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
  35. 'Living with the Himalayan Masters' புத்தகம் என் மகனிடம் இருக்கிறது. அவன் வாசித்த விட்டான். ஆனால் நெல்லைத் தமிழன் போல் எனக்கும் இப்படிப்பட்ட புத்தகங்களை தமிழில் வாசிக்கவே விருப்பம் என்பதால் அதை இன்னும் படிக்கவில்லை. மொழி பெயர்ப்பு எத்தனை தூரம் யோக்கியமாக இருக்கும் என்றும் ஓர் சந்தேகம். ஆங்கிலத்திலேயே படித்து விடுகிறேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன். மொழிபெயர்ப்பு நன்றாகவே இருக்கிறது. சுவாமி ராமா நம்மிடம் சொல்வதுபோலவே இருக்கிறது.

      நான் ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழில் படிப்பதை மிகவும் விரும்பினேன். இமயத்தில் இதய குரு புத்தகம் ஆங்கிலத்திலும் பார்த்தேன். தமிழ் மிக நெருக்கமாக இருந்தது.

      எப்படி இருந்தாலும் படித்துவிடுங்கள். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
  36. உங்கள் மனம் கவர்ந்த புத்தகத்தைப் பற்றி பிரமிப்புடன் எழுதியிருக்கிறீர்கள், நெல்லை. சனிக்கிழமை புத்தக விமரிசனம் இல்லையே என்ற குறை இந்த வாரம் இல்லாமல் போயிற்று. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள், நெல்லை.

    அடிக்கடி இந்த மாதிரியான வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அது முழுமையான மனிதர்களை உருவாக்கத் துணை புரியும் என்பதினால். நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... அடிக்கடி இந்த மாதிரி புத்தக விமர்சனம் எழுதறேன். என்ன ஒரு வருத்தம்னா, நான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை பஹ்ரைனிலேயே கொடுத்துவிட்டதுதான். இருந்தால், அந்தப் புத்தகங்களில் நல்லது கெட்டது பற்றி 'புத்தக அறிமுகம்' செய்திருப்பேன்.

      புத்தகங்கள் சிறந்த ஆசான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. நமக்காக ஒருவர் வாழ்வின் அனுபவத்தில் கண்டதை நமக்கு சில மணிநேரங்களிலேயே கொடுத்துவிடுகிறார் அல்லவா?

      நீக்கு
  37. இரண்டு செய்திகளும் சிறப்பு.

    புத்தக அறிமுகம் - நல்ல விஷயம். எடுத்துக் காட்டிய விஷயங்கள் சிறப்பாக இருந்தது நெல்லைத் தமிழன். வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.... வாய்ப்பு இருக்கும்போது படிங்க..இல்லை ஆதி வெங்கட்டை லைப்ரரில கிடைத்ததுனா வாங்கிப் படிக்கச் சொல்லுங்க. மிகுந்த மனநிறைவைத் தந்த புத்தகம்.

      நீக்கு
  38. சொட்டு நீர்ப்பாசனம் மிக அருமையான விஷயம்தான் .அதுவும் செம்மண் நிலத்தில் மிக அருமையான பயன்பாடு  இதுபோல் வீணே கடலில் கலப்பதையும் முறையா சேமிக்க ஒரு வழிமுறை இந்தோனேசியாவில் செய்றாங்க .
    மூணாறில் ஜீப்பில் இருந்து விழுந்த குழந்தை ..அதிர்ச்சியா இருக்கு ..திறந்த வாகனமா ? சீட் பெல்ட் போடல்லையா ..ஆனாலும் குழந்தையை பத்திரமா மீட்டவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 

    பதிலளிநீக்கு
  39. @நெல்லைத்தமிழன்  இது இமயத்து ஆசான்கள் பதிவின் படங்களுக்கு ..அழகாய் வெள்ளி பனி மூடிய சிகரங்கள் என்பதை படமெடுத்திருக்கிங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சலின். எனக்கு அப்படியே அங்க இறங்கி, பனில நடக்கணும், அந்தக் குளிரை அனுபவிக்கணும்னு ஆசை (ஆனா அது சாத்தியமே இல்லை... இருந்தாலும் அந்த அழகு... நாம பார்த்தாத்தான் தெரியும்)

      நீக்கு
  40. //நம்மில் ஒருவராக இருந்து தன் நிலையில் மேம்பட்டவர் என்பதை உணர வைக்கிறார்.  இதுதான் நம்மை இந்தப் புத்தகத்தில் ஒன்றிட வைக்கிறது.//உண்மைதானே ..எந் தவறும் சிறு குறும்பும் செய்யாதவங்கன்னு யாருமே இல்லை .அப்படி செய்யவேயில்லைனா அவர்களில்  கட்டாயம் குறை அல்லது தவறு செய்ய சந்தர்ப்பம் வாய்க்கவில்லைன்னு அர்த்தம் ..உண்மையை சொல்லும் பொது அட இவரும் நம்மைப்போல் என்று ஒன்றிவிடுவோம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அந்த வயசுல அந்த அந்த மாதிரித்தான் எல்லோரும் நடந்துக்குவாங்க. பாருங்க, சில காணொளிகள்ல, 10 வயசுப் பையன் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவது, பிரவசனம் பண்ணறதுலாம் எனக்குப் பார்த்தா, நாடகம் மாதிரி இருக்கும். அந்த வயசுல அப்படி அப்படி இருந்தால்தான் அது மனித வளர்ச்சி

      நீக்கு
    2. //10 வயசுப் பையன் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவது//
      ஹா ஹா ஹா அடிக்கோணும் போலத்தான் வரும்:))

      நீக்கு
  41. சுவாமி ராமா சாது சுந்தர்சிங்கை சந்தித்திருக்கிறாரா ? நான் சாது அவரை பற்றி முன்பு சண்டேஸ்கூலில் படித்திருக்கின்றேன் ..மிக அழகா விமர்சனம் செய்திருக்கிங்க .சிலர் ரிவ்யூ என்ற பெயரில் எல்லாத்தையும் சொல்லிடுவாங்க ஆனா உண்மையில் இப்படிப்பட்ட விமரிசங்கள்தான் புத்தகத்தை வாங்கி படிக்க தூண்டும் .தாமதமா வந்ததற்கு மன்னிக்கவும் .என் வேலை நேரம் மாறுகிறது .அதனால் எப்போ வருவேன் எப்படி வருவேன் எங்கே வருவேன்னு எனக்கே தெரியாது ஆனாலும் வருவேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சலின்.....

      //அதனால் எப்போ வருவேன் எப்படி வருவேன் எங்கே வருவேன்னு எனக்கே தெரியாது ஆனாலும் வருவேன்// - ஐயையோ... நானெல்லாம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா வோட ரசிகன். அவங்களுக்கு முந்தைய தலைமுறை விஜய்/அஜீத். அதற்கும் முந்தைய தலைமுறை ரஜினி/கமல். அவங்களோட சினிமா வசனம் எதையோ காப்பியடிச்சு எழுதியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அந்தக் காலத்துலலாம் நீங்க பிறந்துட்டீங்களா?

      நீக்கு
    2. இந்த யோகிகள் புத்தகங்களைப் படிக்கும்போது, அவங்க மதம் என்பதை வைத்து யாரையும் வித்தியாசப்படுத்துவதில்லை. ஒரு யோகி, தர்கா, கிறிஸ்துவ ஆலயங்கள், சாதுக்கள், பெளத்த/சமண ஆலயங்கள் என்று எல்லாவற்றிர்க்கும் போகிறார்கள், அந்த அந்த சமயத்தின் சாரத்தைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டறாங்க.

      சாதாரண ஜனங்களான நாமதான் கட்சி சேர்த்துக்கிட்டு கொடி பிடிக்கிறோம் (பொதுவா)

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் நேற்று ஒரு காணொளி தெரியாம பார்த்துட்டு அதுவும் அதில் கமெண்ட்ஸையும் வாசிச்சு தொலைச்சேன் .ஒரு அறிவிலி கேக்குது அந்த பிரசங்கியார்கிட்ட /பிரதர் நானா எங்கள் மூன்றாவது வீட்டிலுள்ள இந்துக்கள் வீட்டு விசேஷத்துக்கு போகலாமா ? அவர்கல் வேற்று மதம் ..//அப்படியே லேப்டாப்பை உடைக்கலாம் போலிருந்தது .யாரிவங்களுக்கு இவ்வளவு சந்தேகத்தை ஊட்டிவிட்டிருப்பார்கள் ..ஆனா அந்த கேள்விக்கு ஒருவர் தாராளமாக செல்லலாம்னு பதில் சொல்லியிருந்தார் .அதனால் விட்டேன் ..எல்லா மதமும் அன்பைத்தானே போதிக்குது அன்போடு தரும் எதையும் சாப்பிடணும் ஏற்கணும் ..சிலர் அறியாமல் சில விஷயங்களை இதுதான் உண்மையென்று நம்பிடறாங்க .சரியான நல்மேய்ப்பன் எல்லாருக்கும் தேவை 

      நீக்கு
    4. ஏஞ்சலின்... நாம எல்லாருமே (அனேகமா) கருத்துக்களின் நோக்கத்தை விட்டுவிட்டு கருத்துக்களைச் சொன்னவங்களைப் பிடித்துக்கிட்டிருக்கோம். நான் 'கோயிலுக்குள்ள வரமாட்டேன்', 'கோவில் பிரசாதம் சாப்பிடமாட்டேன்' என்றெல்லாம் ரொம்ப தீவிரமாயிடறாங்க. நான் சொல்றது எல்லா சமயங்களிலும் (சைவம், வைணவம்... இதிலெல்லாம்கூட) உள்ளவர்களும் இதுபோல நடந்துக்கறாங்க.

      அவங்க நினைக்க மறப்பது, நான் கடவுள் என்று வழிபடறவர்தானே அவங்களையும் படைச்சிருக்கணும், அப்போ அவருக்குத் தெரியாதா என்ன செய்யணும் என்று, நான் ஏன் கட்சிக்குக் கொடி பிடிப்பதுபோலச் செய்யணும்? என்று நினைக்க மறந்துடறாங்க.

      என்னைப் பொறுத்தவரையில், கடவுள் வழிபாடு என்பதில், 'உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.... ஆனால் அதற்கும் நாம் மனிதர்களாகப் பழகுவதற்கும் சம்பந்தமில்லை' என்பது. என்னுடைய செண்டிமெண்ட்ஸில் குறுக்கீடு செய்யாத வரை, உன்னுடைய செண்டிமெண்ட்ஸில்/நம்பிக்கையில் நான் குறிக்கீடு செய்யாதவரை, நம் நட்பை இது பாதிக்கக்கூடாது என்பதுதான்.

      சரி..சரி..விஷயம் ரொம்ப சீரியஸா போகுது... பூஸார் வரட்டும்.... ஹா ஹா

      நீக்கு
    5. ஆவ்வ்வ்வ்வ் இதில இன்னொரு விசயம் சொல்லோணும்.. இஞ்கு ஒரு குறூப்பை பின்பற்றும் கிரிஸ்தவ குடும்பம் முன்பு இருந்தார்கள்.. அவர் எப்பவும் தம் சமயம்தான் மேன்மையானது.. தம் சமயத்தைப் பார்த்துத்தான் இந்துசமயம் வந்தது என்றெல்லாம் எனக்கு போதிப்பார்.. நான் இதுக்கெல்லாம் வாதிடுவதில்லை ஒரு ஸ்மைல் உடன் கேட்டுக்கொண்டிருப்பேன்ன் ஏனெனில் நாம் அனைத்தையும் மதிக்கிறோம்... கடவுள் என்றால் ஒன்றுதான் என நாங்களும் சொல்லுவோம்.. நம்மை மீறிய ஒரு சக்தி உண்டு.. அதையே கடவுள் என்கிறோம்ம்.. அதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதை வச்சு வழிபடுகின்றனர் எனத்தான் நான் நினைக்கிறேன்.

      அவரிடம் ஒருதடவை சொல்லிட்டேன்ன்.. பிரான்ஸ் லூட்ஸ் மேரி மாதா போய் அங்கு புனித நீரில் தோய்ந்து வந்தோம் என.. உடனே பதறிட்டார்.. ஆஆஆஆஅ அப்போ நீங்களும் ஞானஸ்தானம் பெற்றுவிட்ட்டீங்க.. அப்போ உங்களுக்கு நிட்சயமாக நம் மோட்சத்தில்தான் இடம் கிடைகப்போகிறது என்றார்ர்.. அவருக்கு ஒரு ஆசை தம் குறூப்பில் நம்மைச் சேர்க்க..

      கண்ணை மூடியபின் எங்கு இடம் கிடைச்சால் எனக்கென்ன.. தெரியவா போகிறது...
      இதை இப்படி பப்பிளிக்கில் பேசவும் எனக்குப் பயம்..

      நீக்கு
    6. ///கண்ணை மூடியபின் எங்கு இடம் கிடைச்சால் எனக்கென்ன.. தெரியவா போகிறது...
      இதை இப்படி பப்பிளிக்கில் பேசவும் எனக்குப் பயம்..//
      எனக்கே பயம்தான் ..எவ்ளோ சேர்ந்து செஞ்சிட்டோம் இதுக்கும் சேர்ந்தே அடி வாங்கிப்போம் என் முன்னாடி நின்னுக்கோங்க நான் உங்க ஷோல்டர்ட்ஸை கெட்டியா பிடிச்சிக்கிறேன் :)
      சரி சரி இதை இப்படியே விடுவோம் நம்ம பொல்லாத நேரம் ஏதாவது கல்லு வந்து விழும் 

      நீக்கு
    7. ஹா ஹா ஹா அஞ்சு என் சோல்டரை அமுக்காதீங்க மீ ரொம்ப மெலிஞ்சதால நோகுது உங்கட வெயிட் பட்டு:)) ஹா ஹா ஹா... இல்ல இங்கு எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தவிர வேறு எதிரிகளே கிடையாது ஹா ஹா ஹா:))

      நீக்கு
    8. /உங்களுக்கு நிட்சயமாக நம் மோட்சத்தில்தான் இடம் கிடைகப்போகிறது என்றார்ர்.. அவருக்கு ஒரு ஆசை தம் குறூப்பில் நம்மைச் சேர்க்க// -- ஹா ஹா... மக்களுக்குத்தான் என்ன என்ன நம்பிக்கை.

      பக்கத்து வீட்டில் யார் யார் இருக்காங்கன்னே தெரியாது. இதுல செத்துப்போன பிறகு என்ன என்ன நடக்கும், எங்க எங்க வீடு தருவாங்க, என்ன என்ன செளகர்யம்லாம் இருக்கும்னெல்லாம் சொல்றாங்களே...

      நீக்கு
  42. இது ஸ்ரீராமிம் திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈஈஈஈ:)).. அதிரா பிஸியாகிறேன் என ஜொன்னதாலயே இப்பூடிப் பண்ணிட்டார்ர்ர்ர்ர்ர்:))).. ஹா ஹா ஹா பழியைத்தூக்கி ஆர் மேலயாவது போட்டுவிட்டு, நான் நல்லபிள்ளை எனும் பெயரெடுக்கோணும் எல்லோ:))..

    இருந்தாலும் நெல்லைத்தமிழன் ஒன்றும் குறை எடுக்க மாட்டார்ர்.. விமர்சனம் படிச்சுப் போட்டு பதில் போடுவேன் நெ.தமிழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுனால என்ன அதிரா... சனி, ஞாயிறு நீங்க பிஸின்னு நிறைய தடவை சொல்லியிருக்கீங்களே. ஏஞ்சலின் கூட எங்கேயோ எழுதியிருந்தார், நீங்க புதுச் சமையல்லாம் வெளில யார்கிட்டயோ கத்துக்கறீங்க என்று. யோகா, நீச்சல் போன்று எல்லாம் கத்துக்கிட்டு மெயின் கதவைத் திறக்காமல், அந்த இடுக்கு வழியாகவே உள்ள போகும் அளவு ஸ்லிம் ஆக ஆகணும்னு மெனக்கெடறீங்களாம். வாழ்த்துகள்

      நீக்கு
    2. //அந்த இடுக்கு வழியாகவே உள்ள போகும் அளவு ஸ்லிம் ஆக ஆகணும்னு மெனக்கெடறீங்களாம்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதுக்காக இல்ல:) ஆராவது கலைச்சால் ஸ்பீட்டா தப்பி ஓடுவதற்காகத்தான் இவ்ளோ பாடு:)).. என்னிடம் தான் பலர் சமையல் கற்கினம்:)) உப்பூடிச் சொல்லி ஒரு சமையல் வித்தகியை[என்னைச் சொன்னேன்:)] மானபங்கப்படுத்தக்குடாதாக்கும் கர்ர்:))..

      நீக்கு
    3. /என்னிடம் தான் பலர் சமையல் கற்கினம்:)) // - உண்மைதான் அதிரா. எனக்கு இன்னும் கேக் மாதிரி கேசரி பண்ணத் தெரியலை.

      'சங்கமித்திரை' யாரு? உடனே தமிழினத்திலிருந்து சிங்கள இனத்துக்கு மாறிட்டீங்க போலிருக்கே. (அவங்கதானே இலங்கைல பெளத்த மதத்தைப் பரப்ப ஆரம்பித்தது.. அதுதானே சிங்களவர்களின் பெரும்பான்மை மதமாக ஆகிவிட்டது)

      நீக்கு
    4. //(அவங்கதானே இலங்கைல பெளத்த மதத்தைப் பரப்ப ஆரம்பித்தது.. அதுதானே சிங்களவர்களின் பெரும்பான்மை மதமாக ஆகிவிட்டது)//

      ஆஆஆஆஆஆ சத்தியமா?.. எனக்கிந்த விபரம் தெரியாதே.. இப்பெயர் டக்கென மனதில் உதித்ததும் ஏதோ சரித்திரப் பெயர் என மட்டும் தெரியும்.. அதனால எழுதிட்டேன்:)), பின்பு கூகிள் பண்ணிக் கண்டுபிடிப்போம் என நினைச்சேன்:) ஹா ஹா ஹா ஹையோ இந்தப் பதில் அஞ்சு கண்ணில பட்டிடக்கூடா ஜாமீஈஈஈஈஈஈ:))

      நீக்கு
    5. //ஸ்பீட்டா தப்பி ஓடுவதற்காகத்தான் // - கலாய்த்தேனே தவிர.... ஜிம், உடல் நிலைல கவனம் வைப்பது, நடப்பது இதிலெல்லாம் பெண்கள் கண்டிப்பா ஈடுபடணும். சும்மா 40-50 ஆனவங்கள்லாம் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைப்பதும், வீட்டில் எது மிஞ்சினாலும் வீணாக்கக்கூடாது (நல்ல எண்ணம்தான் ஆனால் சரியல்ல) என்று சாப்பிடுவதும் சரியான நேரத்துக்குத் தூங்காமல், சும்மா கிச்சன் மற்ற வேலைகளிலேயே காலத்தைக் கழிப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை. ஒவ்வொருவரும் முடிந்த வரை தங்களை ஃபிட் ஆக வைத்துக்கொள்ளணும். (நானும் முயல்கிறேன்.... முடியாவிட்டாலும்). நீங்க தொடர்ந்து ஜிம், யோகா போன்றவற்றைத் தொடருங்க. வாழ்த்துகள்

      நீக்கு
    6. டங்கு நெ தமிழன் டங்கு.. நான் முன்பும் போனேன் இடையில கொஞ்சம் விட்டிருந்தேன் இப்போ மீண்டும்...

      இதையேதான் நானும் அனைத்துப் பெண்களுக்கும் சொல்வேன்ன்.. இங்கு ஜிம்மில் ஒரு பாட்டி வருவா.. எப்படியும் 75+ வயசு இருக்கும்.. ஆனா என்னா ஃபிட் தெரியுமோ.. ஒரு மெசின் இருக்கு அதில் படிகளில் ஏறி நம் தலை அளவு உயரம் ஏறி, அங்கு சைக்கிள் கண்டில் போல ஒன்றைப் பிடிச்சுக் கொண்டு தொங்கி, காலுக்கு ஒரு படி இருக்கும்.. மேலேறி கீழிறங்க வேண்டும்.. அதில் டெய்லி தொங்குதே மனிசி ஹையோ ஹையோ.. எனக்கு அந்த மெசின் பழக்கமில்லை, நான் நோட் பண்ணிக்கொண்டிருந்து, அவவுக்குப் பின்னால ஏறபோனேன்.. உடனே என்னைப் பார்த்து அவவுக்கு கொஞ்சம் வெக்கம்.. என்ன வெக்கம் எனில், தான் அதிகம் தொங்குவதில்லையாம் கொஞ்சம் கார்ட்டா இருக்காம் என சொன்னா ஹையோ ஹையோ.. அதில் ஏறவே தெம்பு வேணும் நமக்கு.. ஹா ஹா ஹா

      நீக்கு
    7. //மேலேறி கீழிறங்க வேண்டும்.. அதில் டெய்லி தொங்குதே மனிசி// - இந்த மெஷினில், காலை மடித்து வைத்துக்கணும். நானும் இவற்றில் இரு வருடங்களுக்கு முன்பு நிறைய ப்ராக்டிஸ் செய்திருக்கிறேன் (அதாவது 12 தடவை, மூன்று முறை). இது கைகளுக்கு, புஜத்துக்கு வலிமை கொடுக்கும். இதிலும், நிறைய லெவல் செட் பண்ணிக்கலாம். நானெல்லாம் ஆரம்ப நிலையில்தான் இதனை இயக்க முடியும்.

      நீக்கு
  43. //6வது படிக்கும்போது முதல் முதலாக எங்கள் பள்ளிக்கு லைப்ரரி வந்தது.//

    அதாவது 73/74 ஆண்டுகளில் எனச் சொல்றீங்க:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. வருடங்கள் தவறு. நான் இன்னும் சின்னப் பையன்... ஹா ஹா (உண்மையா)

      நீக்கு
    2. அஞ்சூஊஊஊஊஊ எங்கட கணக்கு எங்கோ மிஸ்சாகிட்டுதோ?:)) சரி சரி பொறுமையாக இருப்போம்ம்.. தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு எழுதும்போது எங்காவது தூவிவிட்டுப் போயிடுவார் விசயங்களை நெல்லைத்தமிழன்:)).. அப்போ லபக்கெனப் பொறுக்கிடலாம்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. எழுதறதுல எதுக்கு உணர்ச்சி வசப்படணும். வயசு என்பது வாழ்ந்த வருடங்கள்தானே. அதைக் குறைத்துச் சொல்லி, நானென்ன மேட்ரிமோனியலுக்கா அப்ளை பண்ணப்போறேன்?

      கீசா மேடம், தன்னைக் குழந்தைனு சொல்லிக்கறாங்க. அப்பன்னா, நான் இன்னும் போன ஜென்மத்தில் இறக்கவில்லை என்று நினைத்துக்கொள்வேன். நீங்க பதினாறு வயசு என்று எழுதும்போது, அப்போ எனக்கு, 11 வயசுன்னு நினைத்துக்குவேன். எல்லாம் ரிலேடிவ்வாக நினைப்பதுதானே.

      ம்ம்ம்ம் உடனே கோபப்படாதீங்க. ஒரு நிமிட கோபம் ஒரு வருஷ சந்தோஷத்தை இழக்கவைக்கும் என்று புலாலியூர் பூசானந்தா சொல்லியிருப்பதாக நீங்க ஒரு இடுகைல எழுதியிருந்தீங்களே... ஹா ஹா

      நீக்கு
  44. //சிவகாமியின் சபதம்//

    எனக்கும் இதுவும் பார்த்தீபன் கனவும் படிக்கோணும் என ஆசை.. படிச்சிடுவேன்:)).

    //இத்தனை வயதான பிறகு ஒரு பிள்ளைப்பேறு என்பது எங்களுக்கு அதிசயமானதே. ஆனால் அவ்வாறு நேர்ந்தால் என் மகன் உங்களுக்கே சொந்தமாவான்” என்று என் பெற்றோர் உறுதியளித்தனர். இந்தச் சந்திப்பிற்குச் சரியாக 18 மாதங்களுக்குப் பிறகு நான் பிறந்தேன்//

    ஹா ஹா ஹா எனக்கு இதைப் படிச்சதும் ஒரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வருது.

    அந்நாளில், ஒரு தாத்தா பாட்டிக்கு பேரன் பிறந்தாராம். அந்த தாத்தா பாட்டிக்கு மகன் இல்லை 6 பெண் குழந்தைகளாம். அப்போ மூத்த பேரன் பிறந்திட்ட மகிழ்ச்சியில், ஒரு நல்ல நம்பிக்கையான சாத்திரக்காரரைக் கூப்பிட்டு பேரனின் ஒரு மாத துடக்கு கழிவின்போது ஜாதகம் பார்த்தார்களாம்.

    அப்போ ஜாதகத்தைப் பார்த்துப்போட்டு சாத்திரக்காரர் கேட்டாராம் , இக்குழந்தைக்கு தாய் மாமன் இருக்கிறார்தானே என, இல்லை என்றார்களாம்..

    உடனே சாத்திரக்காரர் சொன்னாராம்.. இருக்கிறார் தாய் மாமான், இல்லை எனில் இனிப்பிறப்பார் என.. உடனே அந்தப் பாட்டி கூச்சத்தில் விளக்குமாறு எடுத்து அடிச்சு அடிச்சுக் கலைச்சு ஓடப்பண்ணிப்போட்டாவாம்ம்.. இது உண்மையில் நிகழ்ந்தது.

    ஆனா பார்த்தால் அப்பவே பாட்டி வயிற்றில் ஆண்கரு இருந்திருக்கு.. பத்து மாதம் கழிச்சு தாய்மாமன் பிறந்தாராம்.. ஹா ஹா ஹா.

    ஆனா பாருங்கோ.. அக்காலச் சாத்திரம் எவ்ளோ நம்பிக்கையாக சொல்லுவார்கள்.

    மிகுதிக்கு நைட் வருகிறேன்ன்.. இப்போ அவசர அலுவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உடனே சாத்திரக்காரர் சொன்னாராம்.. இருக்கிறார் தாய் மாமான், இல்லை எனில் இனிப்பிறப்பார் என.. உடனே அந்தப் பாட்டி கூச்சத்தில் விளக்குமாறு எடுத்து அடிச்சு அடிச்சுக் கலைச்சு ஓடப்பண்ணிப்போட்டாவாம்ம்.. இது உண்மையில் நிகழ்ந்தது.//

      அநேகமா பின்னாளில் ஜோசியங்க கொஞ்சம் பொய் சொல்ல ஆரம்பிச்சதுக்கு இதுதான் காரணமா இருந்திருக்கும் :)ஹ்ஹா உண்மையை சொல்லி விளக்குமாற்றில் வாங்கறதை விட பொய் சொல்றதே மேலுன்னு நினைச்சிருப்பாங்க :))
      ஆனா பொதுவாவே உண்மையை மனசு ஏத்துக்காது :) ஹையோ ஹையோ

      நீக்கு
    2. எனக்கு சிவகாமியின் சபதம் கடைசிப் பகுதிகள் பிடிக்கலை. 'சிவகாமி' என்ற பாத்திரமே பிடிக்கலை.

      பார்த்திபன் கனவு - ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் கொஞ்சம் சோகக் கதைதான். சரித்திரம் எழுதும்போது உண்மையைத்தானே எழுதணும்.

      நீங்க சொன்ன உண்மைச் சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. இந்த மாதிரி விஷயங்களை, அனுபவங்களி நீங்க எழுதுங்க. நல்லா இருக்கும்.

      பழைய காலத்துல எப்போ யாருக்கு குழந்தை பிறக்கிறது என்பது பெரிய விஷயமில்லை. வீட்டுல மத்த குழந்தையோடு குழந்தையா வளர்த்துடுவாங்க. இப்போ 1 அல்லது 2 பெத்துக்கிட்டாலே அதிசயம்தான். பெற்றோரும் தனிக் குடும்பமா இருப்பதால், ரெண்டை பெத்தோமா, வளர்த்தோமா.. அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டாங்களா, 50-60க்கு மேல நாம நிம்மதியா இருந்தோமான்னு இருக்க நினைக்கறாங்க.

      நானும் பத்திரிகையில் படித்தது. ஒருத்தர் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்க வந்தாராம். பள்ளியில் உள்ள அலுவலர், பேரனுடைய பேர் என்ன, வயசு என்ன என்றதும், அவர், அந்த அலுவலரைத் தாக்கப் போயிட்டாராம். என் மகனைப் பார்த்து, என் பேரன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன துணிச்சல்னு. ஹா ஹா.

      நிறைய நேரத்துல, இந்த ஜோசியக்காரங்க சொல்வது அப்படியே நடக்கும். அது 'காக்கை உட்கார பனம்பழம்' விழுந்த கதை கிடையாது.

      நீக்கு
    3. //எனக்கு சிவகாமியின் சபதம் கடைசிப் பகுதிகள் பிடிக்கலை. 'சிவகாமி' என்ற பாத்திரமே பிடிக்கலை.

      பார்த்திபன் கனவு - ரொம்ப நல்லா இருக்கும்.//

      ஓ அப்போ சிவகாமியின் சபதம் படிக்கும் ஆசையை விட்டிட வேண்டியதுதான்.. பார்த்தீபன் கனவு படிகிறேன். முன்பு கொஞ்சம் படிச்சேன்.. அது மறந்து போச்ச்ச்ச் கர்:)) திரும்ப படிக்கோணும்:))..

      //நீங்க சொன்ன உண்மைச் சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. இந்த மாதிரி விஷயங்களை, அனுபவங்களி நீங்க எழுதுங்க. நல்லா இருக்கும்.//

      ஹா ஹா ஹா இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கு நெல்லைத்தமிழன், என்பக்கத்தில் “மியாவ்பெட்டி” எனும் லேபலில் கொஞ்சம் முன்பு எழுதியிருக்கிறேன் உண்மைச் சம்பவங்கள்.. இன்னும் எழுதுவேன்:))

      நீக்கு
    4. ///என் மகனைப் பார்த்து, என் பேரன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன துணிச்சல்னு. ஹா ஹா.//

      ஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழன் இப்போ 2 மாதம் முன்பு இங்கு நடந்த ஒரு சம்பவம் சொல்லுகிறேன்:)) அதுக்கு முதல்ல அஞ்சுவைக் கொஞ்சம் பிடிச்சு வையுங்கோ:)) நான் சொல்லிப்போட்டு ஓடியபின் அவிட்டு விடுங்கோ ஹா ஹா ஹா:))..

      மகனுடன் ஒரு தமிழ்க்கடைக்குப் போயிருந்தேன், எனக்கு தெரியாது அது தமிழரின் கடை என்பது, கவுண்டரில் நின்றவர் நீங்கள் தமிழோ என்றார்.. என்றிட்டு ஒருதடவை என்னையும் மகனையும் மாறி மாறிப்பார்த்துப்போட்டு பயந்து பயந்து கேட்டார்ர்.. நீ..நீ..நீ .. ந்க்..க.. இவரின் அம்மாவோ என:)) ஹா ஹா ஹா அக்காவா இருக்குமோ என நினைச்சுட்டார்ர்:))..ஆஆஆஆஆஅ அஞ்சு கயிறை அவிக்கிறா விட்டிடாதீங்கோ பிளீஸ்ஸ்:)).. இன்னும் சொல்லப் போறேன்:)).. ஹா ஹா ஹா.

      ஆனா இதில இன்னொன்றும் இருக்கு... பெற்றோர் அழகா ஜங்காக இருக்கோணும், ஆனாலும் வயசுக்கேற்றபடி இருக்கோணும்[உடுப்பு நடப்பில்] என்பது என் கருத்து.

      ஏனெனில் என்னோடு படிச்ச ஒரு டோளி:).. மிக மெல்லிசு உயரமாக இருப்பா பெயர் கிரி... அவவுக்கு அப்போ போய் ஃபிரெண்ட் ஆரும் இல்லை.. அந்நேரம் ஒருநாள் ஸ்கூலில் இன்னொரு வகுப்புத்தோழி.. தோழி அல்ல தெரிஞ்சவ.. வந்து கிரியிடம் கேட்டா.. நேரடியாக .. நேற்று உன்னைப்பார்த்தேனே உன் ஃபோய் ஃபிரெண்டோ அது? சைக்கிளில் ஜோடியாகப் பேசிக்கொண்டு போனீங்களே என..

      இவ பதறிப்போயிட்டா, இக்காலத்தில் இப்படி கேட்டால் அது ரேக் இட் ஈசி, ஆனா அப்போ இப்படி கேட்டால் ஏதோ தீயில மிதிச்சது போலாகிட்டா கிரி. இல்லையே நீங்க ஆரைப்பார்த்தீங்க என பதறினா, அவவோ விடவில்லை.. அது நீங்கதான், இரண்டு சைக்கிளில் இருவரும் அருகருகே ஓடிக்கொண்டு பேசிக்கொண்டு போனதைப் பார்த்தேன் என்றா.. இடம் நேரம் எல்லாம் கேட்டபின்னர்தான் கிரி சொன்னா அது என் அப்பாவுடன் போனேன் என ஹையோ ஹையோ.. அதனால அப்பாவுடன் போக கிரிக்கு வெட்கம் ஹா ஹா ஹா ஏனெனில் அப்பாவும் மெல்லிசா உயரமா சின்னப்பெடியனைப்போல இருப்பாராம் ஹா ஹா ஹா...

      நீக்கு
    5. //அநேகமா பின்னாளில் ஜோசியங்க கொஞ்சம் பொய் சொல்ல ஆரம்பிச்சதுக்கு இதுதான் காரணமா இருந்திருக்கும் :)ஹ்ஹா உண்மையை சொல்லி விளக்குமாற்றில் வாங்கறதை விட பொய் சொல்றதே மேலுன்னு நினைச்சிருப்பாங்க :))//

      ஹா ஹா ஹா பின்னாளில் ஜோசியம் என்பது தொழில், பணம் என மாறிவிட்டது அஞ்சு.. சாஸ்திரம் என்பதும் ஒரு தெய்வீகக்கலை.. அதனை பொய் பித்தலாட்டம் இல்லாமல் பயபக்தியோடு பண்ணோணும், அது இப்பொழுது மிகவும் குறைந்துவிட்டது.. இப்பொழுது சார்ட் பார்த்துச் சொல்வது.. படிச்சு சொல்லுகின்றனர் அது கொஞ்சம் ஓகேயா வரும் ஆனா அதுக்கும் சரியான நேரம் திகதி குடுத்தால்தானே சரியா வரும்... சிலர் குழந்தை பிறந்து பல காலத்தின் பின்பு ஒரு குத்து மதிப்பில் சார்ட் எழுதுவோரும் உண்டாம் ஹா ஹா ஹா.

      ஆனா இப்போதெல்லாம் ரேகை பார்த்து சொல்வது, நினைச்ச காரியம் சொல்வது என்பதெல்லாம், கலை இல்லாமல் சும்மா சொல்கிறார்கள்..

      நீக்கு
    6. //இவரின் அம்மாவோ என:)) ஹா ஹா ஹா அக்காவா இருக்குமோ என நினைச்சுட்டார்ர்:))..//ஹலோ இப்பவும் நெல்லைத்தமிழன்  வாட்ஸாப்பில் சொன்னார் //ஏஞ்சல் அன்னிக்கு உங்களை ஹாஸ்பிடலில் மெடிசின் படிக்கிற ஸ்டூடண்ட்டான்னு கேட்டாங்களே அதை உடனே சொல்லுங்க அதிராகிட்டான்னு ..சொல்லிட்டேன் அது உங்களை அக்கான்னுதானே நினைச்சார் கடைக்காரர் ஆனா என்னை ஸ்டூடண்டான்னு கேட்டாங்க தெரியுமோ ஹ்ஹ்ஹா :)
      ஜோக்ஸ் அபார்ட் ..உண்மைதான் அதிரா மனசு சந்தோஷமா இருக்கணும் எப்பவும் நல்லா ட்ரஸ் பண்ணனும் பொருந்துறமாதிரி இருக்கணும் :) 

      நீக்கு
    7. ஹையோ ஹையோ.. அஞ்சுப்பிள்ளையின் ஓவர் பில்டப்பை நம்பி ஏமாந்திடாதிங்க நெ.தமிழன்:)) அது இங்கின பலபேர் முதியோர் கல்வி முறையில மெடிசின் எக்கவுண்டிங் படிப்போரும் இருக்கினம்:) அப்பூடி நினைச்சுக் கேட்டிருக்கிறாங்க:))..

      ஹா ஹா ஹா ஹையோ கட்டை அவிட்டிடாதீங்க பிளீஸ்ஸ் நான் இன்னும் சிரிச்சு முடியேல்லையாக்கும்:))

      நீக்கு
    8. ஹலோ உங்களுக்கு போர்ராமை :) உங்களை மெடிக்கல் ஸ்டூடண்டான்னு யாரும்  கேக்கலைன்னு :)

      நீக்கு
    9. @நெல்லைத்தமிழன்  உண்மை வருது பாருங்க  நான்  சொல்லலை :) சங்கமித்ரை accelerated அக்கவுண்டன்சியை இந்த வயசு போன நாளில் படிச்சிருக்கு :) உண்மை வருதே :))

      நீக்கு
    10. நான் இப்பொ டொக்டருக்குப் படிக்கப் போகிறேன் அஞ்சு:)).. என்னைத் தடுக்காதீங்கோ:), ஆனா ஒரு கண்டிஷன்.. என் முதல் பேசண்ட்டாக அஞ்சுதான் என்னிடம் வரோணும்:))

      ஹா ஹா ஹா குட்டியாக இருந்தபோது எங்கட மூத்தவர் என்னிடம் கேட்டார்ர்... ஏன் அம்மா நீங்களும் அப்பா போல டொக்டராக வேர்க் பண்ண முடியாதோ என:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    11. குழந்தையோட ஆசையை  இந்த தள்ளாத வயதிலும் நீங்கள் நிறைவேற்றலாம் :) கோ அஹேட் :)
      நான்  வெட்னரிக்கு படிக்கப்போறேன் நீங்க எனக்கு முதல் பேஷண்ட் deal :))

      நீக்கு
    12. /இப்போ 2 மாதம் முன்பு இங்கு நடந்த ஒரு சம்பவம்// - ஹா ஹா ஹா. நான் யாரிடமும் இந்த மாதிரி (உங்க குழந்தையா...படுசுட்டி,... அவங்கதானே உங்க மனைவி என்றெல்லாம்) கேள்விகளே கேட்கமாட்டேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன... உணவைச் சாப்பிட்ட பிறகு, இந்தக் குழம்பு நல்லா இருந்தது என்றுகூட சொல்லமாட்டேன்.

      நான் அப்பாவி மாதிரி, பறங்கிக்காய் சாம்பார் சூப்பர் என்று சொல்ல, அவங்க, இன்னைக்கு கத்தரிக்காய் கொத்ஜுனா செய்திருந்தோம் என்று யோசித்தால்... அன்னைக்குப் பாருங்க... உங்க சன்னிதில தட்டில் 'குழைசாதம்' வைத்து கடவுளுக்கு வைத்திருக்கிறீர்களா என்று கேட்கவில்லை. நீங்கதான் யாருக்கோ, அது சக்கரைப்புக்கை என்று எழுதியிருந்தீங்க. ஒருவேளை நான் நினைத்ததை எழுதியிருந்து உங்களைப் பாராட்டுவதாக நான் நினைத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

      நீக்கு
  45. //கூகிள் பண்ணிக் கண்டுபிடிப்போம் என நினைச்சேன்:) ஹா ஹா ஹா ஹையோ இந்தப் பதில் அஞ்சு கண்ணில பட்டிடக்கூடா ஜாமீஈஈஈஈஈஈ:))//
    நானா பார்த்துட்டேன் சங்கமித்ரா  :)  சங்கமித்ரா மஹிந்தவின் சகோட ரியாம் :) இந்த வராங்க எல்லாரும் மான்சீ கோவை எல்லாம் ஹஹஹஹ 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///சங்கமித்ரா மஹிந்தவின் சகோட ரியாம் :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ ஜாமீ:)) இனி நன் எப்பூடி ஊருக்குப் போவேன்ன்:)) ஆனாலும் நான் போட்டிருப்பது மித்திரை ஆக்கும்:))

      நீக்கு
  46. படிச்சுவிட்டேன், அழகிய சுயசரிதை தான் இப்புத்தகம், சோட் அண்ட் சுவீட்டாக முடிச்சிட்டீங்க.. இப்படியான விசயங்கள் படிக்கும்போது மிக நன்றாக இருக்கும் ஆனா எழுதும்போது ஓவராக எழுதினால் படிப்பவருக்கு ஒரு மாதிரி ஆகிடும்.. கறிக்கு உப்பிடுவதைப்போல கரெக்ட்டாச் சொல்லியிருக்கிறீங்க போறிங் வந்திடாமல்.

    படங்கள் அழகாக இருக்கு.. ஒரு தடவை போய் இந்தப் பனிமலையை வெறும் பஞ்சகச்சம் மட்டும் கட்டிக்கொண்டு ஏறி வரலாமே ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கமித்திரைக்கு என் மீது எவ்வளவு அன்பு. நீங்கள் சொல்வதுபோல நான் பனிமலையில் ஏறி வந்தால் (எங்க திரும்பி வர்றது), என் ஸ்காட்லாந்து, லண்டன் இரசிகர்களுக்கு (ஏஞ்சலிந்தான் இந்த மாதிரி பீத்திக்கணுமா?) என்னால் எங்கள் பிளாக் திங்கள் கிழமை உணவுப் பதிவு எழுதமுடியாதே என்பதால்தான் யோசிக்கிறேன்.

      நீக்கு
    2. அதுமட்டுமில்ல நெ.தமிழன் என் குழை ஜாஆஆஆதம் செய்யாமல் இமயத்தைத் தொட்டிடாதீங்க:) தெய்வக்குத்தமாகிடுமாக்கும்:))

      நீக்கு
  47. சுகிசிவம் அங்கிள் சொன்னார், இந்த இமய மலைச் சாரலில் இந்தக் குளிரில், ஞான உபதேசம் எடுக்கும் சீடர்கள் அமர்ந்திருக்கோணுமாம் வெறும் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு சேட் எதுவும் போடாமல், அப்படி தியானத்தில் இருந்து உடலை வியர்க்க வைக்கோணுமாம், அப்படி வரும் வியர்வையை ஒரு வேஸ்டி கொண்டு ஒற்றி எடுத்துப் பிழிந்து பார்ப்பார்களாம்.. அப்படிப் பார்க்கையில் யாருடைய வேஸ்டியிலிருந்து அதிகம் வியர்வை பிழிந்து வருகிறதோ அவர்தான் முதல் சீடனாவாரோ என்னமோ என சொன்னார்.. அது எப்படி சாத்தியம்.

    ஆனா இதனாலதான் சொல்கிறார்கள் அனைத்துக்கும் காரணம் மனமே அன்றி உடலல்ல என.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப்பற்றி நானும் படித்திருக்கிறேன். (இதற்கு முந்தைய புத்தகத்தில்).

      கடும் பனிப்பொழிவு இருக்கும் இமய மலைகளில் யோகிகள் இருக்கும்போது, பிராணாயாமத்தில் ஒரு கிரியா தொடர்ந்து செய்வதன்மூலம், தொப்புள் பகுதியில் சூடு அதிகமாகி உடலெங்கும் பரவி, குளிரைக் குறைத்துவிடும் என்று. நீங்கள் சொல்லியதுபோல இது தியானத்தில் கிடையாது. மனம் ஒரு பகுதியில் ஒன்றி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யும்போது நடப்பது.

      நீக்கு
  48. @ ஸ்ரீராம் இந்த சங்கமித்ரை உங்களோட சாட்டர்டே போஸ்டை படிக்கவேயில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் 

    ஹப்பா :) இப்போ தான் மனசுக்கு திருப்பதி :) ஹாஹ்ஹா திருப்தி 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///@ ஸ்ரீராம் இந்த சங்கமித்ரை உங்களோட சாட்டர்டே போஸ்டை படிக்கவேயில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் ///

      நான் ஜொன்னனே எனக்கு எடிரி:)) வெளியில இல்ல:)))

      https://thumbs.dreamstime.com/z/orange-tabby-cat-running-across-red-sand-27250314.jpg

      நீக்கு
  49. ஸ்வாமீ...... அதெல்லாம் கிடக்கட்டும். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

    இந்த ’ஜ ங் க மி த் தி ரை’ யாரு ஸ்வாமீ?

    புதுச்ச்சா அல்லது பழையதா (பழேதா) ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தியமாக இப்போ 3,4 நாட்களாக கோபு அண்ணனை எங்கும் காணமே மெயில் போடுவமே என நினைச்சுக் கொண்டிருந்தேன், இங்கு நீங்க ஏற்கனவே வந்ததைக்கூட கொமெண்ட்ஸ் படிக்க நேரமில்லை, இப்போ தான் கண்டுகொண்டேன்.. உபயம் என் செக்:)) ஹா ஹா ஹா. சரி அது போகட்டும் நலம்தானே நீங்கள் மகிழ்ச்சி.

      நீக்கு

    2. ஆஆஆஆஆஆஆ கோபு அண்ணன் ஸ்ஸுனாமியை இப்போ எதுக்கு டிசுரேப்புப் பண்ணுறீங்க:)) அவருக்கு 2 மணித்தியாலத்துக்குக் காது கேய்ககாதாம் :))..

      ///இந்த ’ஜ ங் க மி த் தி ரை’ யாரு ஸ்வாமீ?

      புதுச்ச்சா அல்லது பழையதா (பழேதா) ?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புதுச்சூஊஊஊஊ தேன்ன்ன் ஹா ஹா ஹா.. இதில ஒரு உண்மை ஜொள்ளட்டோ.. என் செக்:) அவசரமா ஓடிப்போய் ஆராட்சி பண்ணிப்போட்டு வந்து சொன்னா.. சங்கமித்ரா உங்க நாட்டு மகிந்தவின் சகோதரியாம் என:)).. அதைக் கேட்ட நேரம் தொடங்கி, இனி எதுக்கு நான் வேறு ஆராட்சி பண்ணோனும் என, பயத்தில அதை நெம்ம்ம்பி முக்காட்டுடன் திரிகிறேன்:)).. நல்லவேளையா கோமதி அக்காவின் மாசாணி அம்மன் என்னைக் காப்பாத்திப்போட்டா பாருங்கோ:))

      கோமதி அக்கா சொன்னா, அது அசோகர் மன்னரின் சுவீட் 16 மகள் இளவரசியாம்ம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..

      அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ நோட்டிபிகேசன் இருக்குதோ?:)) இதை எல்லாம் வந்து படிக்க மாட்டாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      நீங்க இன்று வந்து கொமெண்ட் போட்டிருக்காட்டில் உங்கள் வருகை தெரிஞ்சிருககது கோபு அண்ணன்.

      நீக்கு
    3. Yes //அசோகர் மன்னரின் சுவீட் 16 மகள் இளவரசியாம்ம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))///
      Also mahindas beloved sister

      நீக்கு
    4. /இந்த ’ஜ ங் க மி த் தி ரை’ யாரு ஸ்வாமீ? // - வாங்க கோபு சார்....

      இப்போல்லாம் நீங்க ரொம்பவே ரெஸ்ட் எடுக்கறீங்க. அதிரா 'சங்கமித்திரை' என்ற டைட்டிலைப் போட்டுக்கொண்ட உடனேயே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாமே...இவ்வளவு நாள் கழிச்சுக் கேட்கறீங்களே. அதுக்குள் அதிரா 'சாருமதி அதிரா' என்று பெயர் மாத்திக்கிட்டிருப்பாங்களே.

      கோபு சார்... இணையத்துக்கு நிறைய தளங்களுக்கு அடிக்கடி வாங்க. ஜோதில ஐக்கியமாகுங்க. நீங்களும் எழுதுங்க.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!