நாங்க திருநெல்வேலி போயிருந்தபோது, நவதிருப்பதிலாம் சேவித்துவிட்டு இரவு நெல்லையப்பர் கோவிலை நோக்கி டாக்சியில் சென்றோம். நெல்லை டவுன் ஆர்ச்சைத் தாண்டும்போது என் பெண் போன் செய்தாள். அவள் ஆபீஸுக்கு எவ்வளவு ‘இருட்டுக்கடை அல்வா வாங்கணும், வேற மிக்சர்லாம் வேணுமா’ என்று கேட்டு அவள் சொன்னதைக் குறித்துக்கொண்டேன். நல்லவேளை, சரியான சமயம் போன் பண்ணினாளே என்று எனக்கு மகிழ்ச்சி. (இல்லைனா, எனக்குன்னு வாங்கினதுலேர்ந்துனா நான் அவள் ஆபீஸுக்குக் கொடுக்கணும்).