சில கேள்விகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில கேள்விகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.1.15

புத்தகங்கள் - . தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.


வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு சில கேள்விகள்:  தயவு செய்து உண்மையாக பதிலளியுங்கள்.
 
         
                                                           
 
1)  நீங்கள் வாங்க விரும்புவது கதைகள் / கட்டுரைகள் / வரலாறு / அறிவியல் எது அதிகம்? அல்லது நீங்கள் அதிகம் நாடும் துறை எது?
 
2)  கதைகள் என்றால் யார் படைப்பு?
 
3)  கட்டுரைகள் என்றால் என்ன வகைக் கட்டுரைகள்? யார் எழுதியவைகளை வாங்க விருப்பம்?
 
4)  வரலாறு என்றால் கட்டுரையா, கதைகளா?  எந்த எழுத்தாளர்?
 
5)  இன்னமும் பழைய, பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள்தான் அதிகம் வாங்குகிறீர்களா?
 
6)  தற்போதைய எழுத்தாளர்களில் யாருக்காவது தனித்துவமான நடை என்று இருப்பதாக நினைக்கிறீர்களா?


                                                         

 
7)  எதை வைத்து நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களைத் தெரிவு செய்கிறீர்கள்? விமர்சனங்களா? நண்பர்களின் படைப்பு என்பதாலா? பிரபலமானவர்கள் எழுதியது என்பதாலா?
 
8)  நீண்ட நாட்களாய்த் தேடியும் கிடைக்காத புத்தகம் என்று எதாவது உண்டா?  இதை வாங்கக் கூடாது என்று எந்தப் புத்தகம் பற்றியாவது எண்ணம் உண்டா?
 
9)  மாதொரு பாகன் படைப்புக்கான எதிர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெருமாள் முருகனின் எதிர்வினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

10)  புதிய எழுத்தாளர்களில் யார் யாருடைய படைப்புகளை வாசித்திருக்கிறீர்கள்? யார் நன்றாக எழுதுகிறார் என்று நினைக்கிறீர்கள்?
 
11)  புத்தகத்தின் விலை உங்களைப் பாதிக்கும் தருணம் எது?  விலை பற்றிக் கவலைப் படாமல் படைப்புக்காக நீங்கள் வாங்கிய புத்தகம்?
 
12)  வாங்கியபின், அல்லது படித்தபின் வாங்கியிருக்க வேண்டாம் என்று நினைக்க வைத்த புத்தகம்?
13)  புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது 
 
அ. உண்மையான ஆர்வம் 
ஆ. எல்லோரும் வாங்கும் ஒரு பரபரப்பான ஆர்வத்தில் 
இ. சும்மா எல்லோரும் சொல்கிறார்களே என்று!
 
14)  வாங்கிய புத்தகங்களில் எல்லாவற்றையும் படித்து முடித்திருக்க முடியாதுதான். ஆனால் வாங்கியது 100 சதவிகிதம் என்று வைத்துக் கொண்டால் எத்தனை சதவிகிதம் இதுவரை படித்து முடித்திருக்கிறீர்கள்?


                                                                               

15)  எல்லாப் புத்தகங்களுமே படித்து முடித்தபின் அந்தப் புத்தகங்களை வைத்துப் பாதுகாப்போம் என்று தோன்ற வைக்கிறதா?  இல்லை, நண்பர்களுக்குக் கொடுத்து விடலாம், போற்றிப் பாதுகாத்து வைக்க இதில் ஒன்றுமில்லை என்று ஏதாவது புத்தகங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?
 

                                                                                 
 
16)  புத்தகக் கண்காட்சியில் நீங்கள் காணும் முக்கியக் குறை(கள்) என்ன?
 
17) புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருந்து புத்தகம் வாங்குகிறீர்களா?  அல்லது புத்தகம் தேவைப்படும்போது உடனே பதிப்பகத்துக்கோ, கடைகளுக்கோ, அல்லது NHM வாயிலாகவோ உடனுக்குடன் வாங்கி விடுகிறீர்களா?
 
18)  பு. க. காட்சிக்குச் செல்வதால் நிர்ப்பந்தத்துக்குப் புத்தகம் வாங்குகிறீர்களா?

19)  சாகித்ய அகாடமி போன்ற விருது வாங்கிய புத்தகங்களை வாங்குகிறீர்களா?