Humour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Humour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.8.10

தியான சுகம் .


தியானம் மெடிடேஷன் என்று இப்போது ஒரேயடியாக பிரபலம் ஆகி விட்டது. தியானத்தில் பல பிராண்டுகள் வந்து விட்டன தாடி வைத்த குரு, நெடுமுடி குறுந்தாடி, குறுமுடி நெடுந்தடி தரித்த குரு, தலைப்பாகட்டு சால்வை குரு, வயிற்றை எக்கியே கம்யூனிகேட் செய்யும் சிரித்த முகத்து குரு, ஒரு நாள் மழித்து ஒரு நாள் வளர்த்து வெரைட்டி காட்டும் சிநேகமான குரு, 'சொல்' என்பதை 'சொள்' என்றும் 'கொள்' என்பதை 'கொல்' என்றும் உச்சரித்து நம்மைக் குழப்பும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (இதுவரை மூன்றுதான் லிமிட். இது என்று ஐந்து ஆறு என்று பெருகப் போகிறதோ அப்போ இருக்கு நமக்கு ஆப்பு. ) சுவாமி என்று நமக்கு தியான / விளக்க சூப்பர் மார்க்கெட்டே இருக்கிறது.   
  
இப்படி பலமாதிரியான ஆசான்கள் நமக்கு தீட்சை அளிக்கத தயாராக இருக்கிறார்கள்.  
  
என் தியான மண்டபம் வேறு மாதிரியானது. என் குருவோ ஒரு நிஜமான கர்மயோகி அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது. ஆனால் தியானத்துக்கு மிகவும் ஏற்ற இடம். இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்து கொண்டே இருப்பார். அது போக 'ஞிஞய் சிசிர்' என்றோ, 'ஜிகு ஜிகு ஜிகு சட' என்றோ வாத்திய சங்கீதம் ஒரு ஆப்பிரிக்க இசை வடிவு போல வந்து கொண்டே இருக்கும். சில சமயம் தம்புரா சுருதி போல ஒன்று கேட்கும். 'தடக் தடக்' என்று ஒரு தாள ஜதி இழையும் எங்கேயோ எப்போதோ கேட்பது போல், 'சள சள' வென்று ஆனால் சன்னமான குரலில் ஒரு பேச்சு பேசுவது போல இருக்கும் ஆனால் இருக்காது. இந்த அபூர்வ சூழ்நிலை தினமும் வாய்க்காது. ஐம்பது அறுபது நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.  
    
ஆகா, மனம் ஒருமித்து நம் மூச்சை நாமே கவனிப்பதும், நம் எண்ண ஓட்டங்களை மிகச் சரியாக எடை போடுவதும் உலகின் நன்மை தீமைகளை சீர் தூக்கிப் பார்ப்பதுமாக நாம் ஆழ் நிலையில் அமிழ்ந்து போகும் போது திடீரென்று குருவின் குரல் நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வரும்:
   
"சார் ஷேவிங்(கும்) செய்யணுமா?"   
    

19.4.10

சாதிக்க விரும்புபவர்கள்





எல்லாமே எய்ட்டி : ட்வெண்டி ரூலில் அமையும் என்று வாதிட்ட 'எங்கள் பிளாக்' ஆசிரியர் குழுவைக் கூட சுனந்தாவின் அறுபத்து மூன்று : முப்பத்து ஏழு விகிதம்தான் - படித்த மக்களிடையே எடுக்கப்படும் வாக்கெடுப்புகளுக்கு சரியாக வரும் என்ற வாதமும், முடிவும் அசர வைத்தது, 


புள்ளிவிவர ஆர்வலராகிய சுனந்தாவிற்கு இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. 'எங்கள்' கல்லூரியில் அவர் எதிர்பார்த்த சம்பளம், படிகள் இத்யாதிகளுடன், வேலையில் சேர அழைப்புக் கடிதம் வந்தவுடன், அவருக்கு வானத்தில் பறக்கின்ற உணர்வு ஏற்பட்டது.


முதல் நாள், முதல் வகுப்பிலேயே - தன்னுடைய புள்ளிவிவர நிபுணத்துவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், மாணவர்களை அசத்த வேண்டும்  என்கிற ஆர்வம அவருக்கு ஏற்பட்டது. அதற்கு உதவியாக தான் சமீபத்தில் அலசி ஆராய்ந்த 'எங்கள் பிளாக்' எல்டாம்ஸ் ரோடு வாக்கெடுப்பு விவரங்களை, குறிப்பெடுத்துக் கொண்டார். மனத்திலும் பல்வேறு வகையில் - ஒவ்வொரு நாளும் எவ்வளவு வாக்குகள் பதிவாயின, 'ஆஹா' எவ்வளவு 'சீச்சீ' எவ்வளவு என்பது போன்ற விவரங்களை, தன்னுடைய குறிப்பேடு உதவியோடு அசை போட்டுக் கொண்டார். 


சுனந்தா கல்லூரி வகுப்பினுள் நுழைந்தார். வருகைப் பதிவேட்டை நோட்டமிட்டார். என்ன ஆச்சரியம்! அந்த வகுப்பில் மொத்தம் நாற்பத்து இரண்டு பேர். (எங்கள் பிளாக் வாக்காளர்களில் பாதி எண்ணிக்கை). அதில் இருபத்தொன்பது ஆண்கள், பதின்மூன்று பெண்கள்.  எல்லோருமே அன்று கட் அடிக்காமல் வந்திருந்தனர். புதியதாக வரும் சுனந்தா எப்படி இருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கே எல்லா மாணவர்களும் வந்திருந்தார்கள் போலிருகிறது. 


சுனந்தா ஒரு துண்டுச் சீட்டை எடுத்து அதில் எழுதினார் - வாக்கெடுப்பு முடிவு = 63:37 (one side 27 +/- 1 , other side 15 +/- 1). அறிமுக உரையாடல்கள் முடிந்தவுடன், அவர் மாணவர்களைப் பார்த்துக் கூறினார். "நீங்க எல்லோரும் எய்ட்டி : ட்வென்டி விகித கணக்கு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் ஒரு புதிய தியரி கண்டு பிடித்துள்ளேன் அது, படித்த மக்களிடையே, எய்ட்டி :ட்வென்டி விகிதம் எடுபடாது, வேறு ஒரு விகிதம் எடுபடும். நான் அதை இங்கே நிரூபிக்கப் போகிறேன். இதோ இந்தத் துண்டுச் சீட்டில், நான் நடத்தப் போகிற வாக்கெடுப்பின் முடிவை முன் கூட்டியே எழுதி வைத்துவிட்டேன்."


"ஒரு சிறிய, எளிய கேள்விதான். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்க எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்புவீர்கள். இல்லையா? அப்படி சாதிக்க விரும்புபவர்கள் எத்தனை பேர்?"


இருபத்தெட்டுப் பேர்கள் கையை உயர்த்தினார்கள். வகுப்பில் இருந்த எல்லா (13) மாணவிகளும் + பதினைந்து பையன்களும் சேர்ந்து இருபத்தெட்டு. 


தன கணக்கு சரியாக இருந்தது என்றாலும் சுனந்தா, மீதி இருந்த பதினான்கு மாணவ மணிகளையும்  பார்த்து, "நீங்க சாதிக்க விரும்பலையா? ஏன்?" என்று கேட்டார். ஒரு மாணவனைத் தவிர மீதி பதின்மூன்று மாணவர்களும் எழுந்து, ஒரே குரலில் - 'இங்கே இருக்கற பொண்ணுங்க எல்லோரும் சாதிக்க விரும்புவதால் நாங்க சாதிக்க விரும்பவில்லை.' என்றனர்.


இதென்னடா விசித்திரமாக உள்ளதே என்று நினைத்த சுனந்தா, மீதி இருக்கின்ற ஒற்றை மாணவனை நோக்கி, "அப்போ நீ?" என்று கேட்டார்.


அந்த மாணவன் எழுந்திருந்து, அமைதியாகச் சொன்னான், " நான்தான் சாதிக்."