sangeedham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sangeedham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.4.10

சின்னஞ்சிறு கதை

உள்ளே போகும்போதே ஒரு கோயிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.  தம்புராவின் ஒலி சுஸ்வரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது. மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்ட சங்கீதப் புத்தகங்கள். சி. டி க்கள்.  சுவரில் மும்மூர்த்தியின் பிரபலமான ஓவியம்.  பாட்டு வாத்தியார் மனைவி புன்னகையுடன் வரவேற்றார். "அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று இனிமையாக சொல்லிவிட்டு உள்ளே போனார்.  அறையை ஒரு தடவை சுற்றி வந்தேன்.  மனம் ஆனந்தத்தால் விம்மியது. கண்ணீர் வந்துவிடும்போல் இருந்தது.  மாமி கையில் காப்பி டம்ளர் டபராவுடன் வந்து வினயமாக மேஜையில் வைத்து விட்டு " எடுத்துக்குங்கோ" என்று மீண்டும் மதுரக் குரலில் சொன்னார்.  மீண்டும் மும்மூர்த்தி படத்தைப் பார்த்துக் கொண்டு நின்றவாறு சொன்னேன். " இந்த வீட்டில் இருக்க அதிருஷ்டம் செய்திருக்கணும்.  சாக்ஷாத் சரஸ்வதி வாசம் செய்கிறாள் இங்கே ". இதை அவர் முகம் பார்த்து நேராகச் சொல்ல என்னை என்ன தடுக்கிறது? 

மாமி பதிலே சொல்ல வில்லை.

" நீங்க அவ கிட்டே பேசறதானா மூஞ்சியைப் பாத்து பேசணும்.  அவளுக்கு சுத்தமா காது ரெண்டும் கேக்காது "  என்று சொன்னவாறு பாட்டு வாத்தியார் பிரசன்னமானார்.