சனி, 8 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 2/12 To

எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
+    +   +    +   +    +     +     +     +    +    +      +    +    +     +     +   +   +      +    +    +     +    +    +   +   +

1) சொந்தக்காரர்கள் இறந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உடலை தகனம் செய்வதோ புதைப்பதோ செய்து விடுகிறோம். அனாதையாக உயிரை விடுபவர்களுக்கு அவர்கள் உடலை ஏற்று அதற்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்ய எந்த பிரதிபலனையும் எதிர்பாராது செய்யும் சமூக சேவகர்களில் ஒருவர் சென்னைப் பாலவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். 1985 முதல் இந்தத் தொண்டைச் செய்து வரும் இவர் பற்றி இந்த வார தினமணிக் கதிரில் விவரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.கலியுகத்தில் அஸ்வமேத யாகத்துக்குச் சமம் என்று பெரியவர்கள் சொல்லியிருப்பதைக் குறிப்பிடும் இவர், ஓரிரண்டு நெகிழ்ச்சியான சம்பவங்களையும் சொல்கிறார்.

விஸ்ராந்தியைச் சேர்ந்த சாவித்திரி வைத்தி உட்பட 9 பேர் ட்ரஸ்ட் நிர்வாகத்தில் உள்ளனராம். சவ அடக்கம் மட்டுமின்றி ஈமக்கிரியைகள் செய்யக் கஷ்டப்படுவோருக்கும் உதவி செய்யும் இவர்களுக்கு ஸ்டேட் பேங்க் இந்தப் பணியைச் செய்ய இவர்களுக்கு ஒரு இறுதி யாத்திரை வேன் ஒன்று தந்து உதவி இருக்கிறதாம். இந்தக் கைங்கர்யச் சேவை ஆரம்பிக்குமுன் விஸ்ராந்தி, ஆனந்தம், காக்கும் கரங்கள், சாய் சரண் போன்ற இல்லங்களுக்கு இந்தப் பணியில் உதவிக் கொண்டிருந்தாராம். 'பிரேமாலயா' என்ற மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான
இல்லமும் இவர்கள் தொடர்பில் இருப்பதாகக் கூறும் இவர் இதுமாதிரி சேவைக்கு அழைப்புகள் வரும்போது தடை செய்யாமல் உடனே அனுப்பும் நல்ல உள்ளங்கள் கொண்ட, தான் வேலை செய்யும் அலுவலகம் பற்றியும்   சொல்கிறார்.

2) சென்னை 28, தமிழ்படம் போன்ற படங்களில் நடித்த சிவா நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதற்கு   முன்பிருந்தே ஆத்மார்த்தமாகச் செய்யும் செயல் 'வித்யாசாகர்' மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிக் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது பற்றிய செய்தியை மங்கையர் மலரில் படித்தேன்.
எதிர்பார்ப்பு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ரகசியத்தை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார். இரவு பகலாக அங்கேதான் இருப்பாராம். ஒருமுறை ஞானப்ரசன்னா என்ற 8 வயதுச் சிறுமியை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கேற்க அழைத்துச் சென்று, அதில் அந்தச் சிறுமி தங்கப்பதக்கம் வென்று நெகிழ வைத்ததைச் சொல்கிறார்.இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக DS என்று அறியப்படும் டவுன் சின்ட்ரோம் பற்றி மருத்துவர் ரேகா ராமச்சந்திரன் சில அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். டி  எஸ் உள்ளவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாதாம். அவர்கள் மகள் (என்று நினைக்கவைக்கும்) பப்ளி பாரத நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்திருப்பதையும் பெருமையாகச் சொல்கிறார். (சுப்பு தாத்தா... இது போன்ற கட்டுரைகளில் தொடர்பு கொள்ளும் எண்ணோ, முகவரியோ தருவதில்லைதான்)

3) அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார். தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.  இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சச்சின் தேவ், உடா மாகாண பல்கலைக்கழகத்தில் உடல் ஊனமுற்றோருக்கான மையத்தின் பொறுப்பாளராக கடந்த 2011ம் ஆண்டு முதல் பணியில் உள்ளார். இப்பதவிக்கு வருமுன் உடல் ஊனமுற்றோர் தொடர்பான பல்வேறு பணிகளில் பணி செய்த அனுபவம் சச்சின் தேவுக்கு உண்டு. (முகப்புத்தகம்)

                                      ஒபாமா அரசின் முக்கிய பதவியில் பார்வையற்ற இந்தியர் நியமனம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ளார் பராக் ஒபாமா. தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள் குறித்து ஒபாமா கூறுகையில், இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் நபர்கள், தற்போதைய புதிய பதவிகள் மூலம் அமெரிக்க அரசின் அனுபவங்களுக்கும் திறமைக்கும் சொத்தாக விளங்குகின்றனர். இப்புதிய பதவிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டவர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இனி வரும் காலங்களில் உங்களுடன் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் பணிபுரிய ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சச்சின் தேவ், உடா மாகாண பல்கலைக்கழகத்தில் உடல் ஊனமுற்றோருக்கான மையத்தின் பொறுப்பாளராக கடந்த 2011ம் ஆண்டு முதல் பணியில் உள்ளார். இப்பதவிக்கு வருமுன் உடல் ஊனமுற்றோர் தொடர்பான பல்வேறு பணிகளில் பணி செய்த அனுபவம் சச்சின் தேவுக்கு உண்டு.

4) நம்மில் பலர் பள்ளிக்குச் செல்வதற்காகப் பாலத்தைக் கடந்து இருப்போம். ஆனால், டெல்லியில் பாலத்துக்குக் கீழே ஒரு திறந்தவெளிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தையே கூரையாகக்கொண்ட அந்தப் பள்ளியை நடத்திவருகிறார், 40 வயது ராஜேஷ் குமார் ஷர்மா. கூலித் தொழிலாளி, விவசாயி, ஆட்டோ டிரைவர் போன்றவர்களின் குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள்.
ஷாகர்பூர் என்ற ஊரில் மளிகைக் கடை நடத்திவரும் ராஜேஷ் குமார், தனது வறுமைநிலை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். தினமும் தனது கடைக்குச் செல்லும் வழியில் தெருவோரம் விளையாடும் சிறுவர்களைக் காணும்போது, 'இப்படி பள்ளிக்குச் செல்லாமல் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்களே’ என மனம் வருந்தினார்.
அவர்களின் பெற்றோரிடம், 'உங்கள் குழந்தைகளை என்னிடம் படிக்க அனுப்புங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படித் திரட்டிய மாணவர்களைக்கொண்டு, இரண்டு வருடங்களாகப் பாலத்துக்குக் கீழே, வாரத்துக்கு ஐந்து நாட்கள் பள்ளியை நடத்துகிறார். மளிகைக் கடையில் வேலை இருக்கும்போது, இவரது தம்பி பள்ளியைப் பார்த்துக்கொள்வார்.

இப்போது இந்தப் பள்ளிக்குத் தினமும் 50 மாணவர்கள் தவறாமல் வருகிறார்கள். காலையில் தரையைச் சுத்தப்படுத்துவது, கரும்பலகையைத் துடைப்பது போன்ற எல்லா வேலைகளையும் மாணவர்களே செய்கிறார்கள். இந்தப் பள்ளியைப் பற்றி தகவல் அறிந்த தன்னார்வலர்கள் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி உதவுகிறார்கள்.

''நம் நாட்டில் வறுமையால் எந்தக் குழந்தைக்கும் கல்வி கிடைக்காத நிலை இருக்கக் கூடாது. அதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். இங்கே படித்த 140 மாணவர்களில் 70 பேர் இப்போது வழக்கமான பள்ளிகளில் சேர்ந்துவிட்டார்கள்'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் ராஜேஷ் குமார்.

5) புதுவை மாநிலம் கூடப்பாக்கம் ஊரைச் சேர்ந்த, 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்ற விவசாயி வேங்கடபதி பற்றி தினமலர் சொல்கிறார்கள் பகுதியில். 'கேசுரியா ஜிங்குனியானா' என்ற வகைச் சவுக்கை எடுத்து, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர் வீச்சு செய்து, புதியவகை ஹைபிரிட் சவுக்கை உருவாக்கினாராம். நன்கு பலன் கொடுத்த அந்த சவுக்கின் இலைகளில் இருந்து கன்றை உருவாக்க ஆரம்பித்தாராம்.
 மண் பரிசோதனை செய்தபின் நடப்படும் இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் தரக் கூடியதாம். சாதாரணச் சவுக்கு போலல்லாமல் புயல் மழையிலும் விழாமல் நிற்கும் இந்தச் சவுக்கு கடும் வறட்சியிலும் தரிசு நிலங்களிலும் வளர்ந்து நல்ல பலன் தரக் கூடியதாம். ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாய் செலவில் 200 டன் மகசூல் கிடைக்குமாம். 1 டன் 2,500 ரூபாய்க்குச் சந்தையில் விற்கப்படுகிறதாம். இதற்காக அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்துள்ளது. ஹைபிரிட் சவுக்குக் கன்றுகளை வளர்த்து ஒரு கன்று 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறாராம். தொடர்புக்கு 9443226611.

6) பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் 10 அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று 48 மணி நேரத்தில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. 'சைனர்ஜி க்ரூப்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தச் சாதனையைச் செய்துள்ளது. 3 மாதங்களாக தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இரும்புக் கட்டமைப்புகள் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் மூலம் 25,000 ச.கிமீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த வியாழன் மாலை நிபுணர்கள் குழு 25 பேர், 200 பணியாளர்கள் 3 கிரேன்கள் உதவியுடன் பணியைத் தொடங்கி, 48 மணி நேரத்தில் முடித்துள்ளனராம். இது சுற்றுச் சூழல் பாதுகாப்பானது, குறைந்த அளவு மின்சாரத்தை நுகரக் கூடியது,  தாங்க வல்லது என்று சொல்லும் இவர்கள், தொழில் மற்றும்   மையம் இவர்கள் கட்டிடத்துக்குச் சாண்டளித்துள்ளத்தையும் சொல்கிறார்களாம். தினமலர்.

7) சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இயல் இசை வல்லபி, வானவன் மாதேவி. 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்னும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள். மனித உடலில் இறந்துகொண்டே இருக்கும் பல  செல்கள் புதிதாக உருவாகிக் கொண்டேயும் இருக்கும். ஆனால் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய செல்கள் உருவாகாது என்பதோடு  ஒவ்வொரு உறுப்பாக செயலாற்றுப் போகவும் ஆரம்பிக்கும். இவர்களுக்கு இந்நோய் இருப்பது இவர்களின் 10 வயதில்தான் தெரியத் தொடங்கியதாம். தனித் தனியாக டியூஷன் படித்து +2 முடித்து, தொலைதூரக்  டி சி ஏ  முடித்துள்ள இவர்களுக்கு ஐ ஏ எஸ், எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததாம். இதே போன்ற நோயால் பாதிக்கப் பட்டோருக்கு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று  ஆசைப் பட்டு, பெற்றோர் அனுமதியுடன், நன்கொடை தந்த சில நல்ல உள்ளங்கள் உதவியுடன், 2009 இல் 'ஆதவ்  ட்ரஸ்ட்' என்று தொடங்கி உள்ளனராம்.   ஏழைக்  இந்நோய் பாதித்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதோடு, இந்த ட்ரஸ்ட் மூலம் நோயாளிகளுக்கான விடுதியும் இந் நோய் குறித்த ஆராய்ச்சி மையமும்  கட்ட ஆசை என்று சொல்கிறார்கள்.ஆதரித்து நன்கொடை கொடுத்தவர்களின் ஆதரவில் ஒரு கம்பியூட்டர் சென்டரும், நூலகமும் வைத்துள்ளனராம். மொபைல் : 99763 99403

8) மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர். இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார். எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர். ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.  (முகநூல்)

உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.

                         கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.  பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை  தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.

இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். இந்த தினத்தில் உதயக்குமார் போன்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய உண்மையான திறனாளிகளை வாழ்த்துவோம்.

படத்தில் உதயகுமார்



9) கூடலூர் : கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் "சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, "சூரிய மின் சக்தி' மூலம் மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, கூடலூர் ஸ்ரீ மதுரை மேலம்பளம் மற்றும் மானிமூலா பனியர் காலனியில், தலா ஒரு யூனிட்டுக்கு ஒரு கிலோ வாட் சக்தி கொண்ட "சூரிய மின் சேமிப்பு நிலையம்' அமைத்து, அதிலிருந்து வீடுகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலம்பளம் கிராமத்தில் 28 வீடுகளிலும், மானிமூலாவில் 16 வீடுகளிலும் பயன் அடைந்துள்ளன.
                                          
தெரு விளக்குகள் மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை மட்டும் எரிந்து அணையும் வகையில், "சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில், பொதுவான ஓர் இடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்ட்டுள்ளது.

திட்டம் குறித்த ஆதிவாசி மக்கள் கூறுகையில், "இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; தொடர்ந்து பராமரிக்கவும், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் "டிவி' பயன்படுத்தும் வகையிலும், கூடுதல் மின் சப்ளை வழங்க வேண்டும்' என அப்பகுதியினர் தெரிவித்தனர். "இத்திட்டம் மின்சாரம் இல்லாத மற்ற ஆதிவாசி கிராமங்களிலும் விரிவு படுத்தப்படும்,' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10) பஸ் டிரைவருக்கு கடும் நெஞ்சுவலி: சாலையோரம் நிறுத்திய பின் மரணம்: பண்ருட்டி அருகே பணியின் போது, தனியார் ஆம்னி பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் இறந்தார். சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு, தனியார் ஆம்னி பஸ் பண்ருட்டி வழியாக நேற்று அதிகாலை, 4:15 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. தஞ்சாவூர் அடுத்த பாபநாசத்தைச் சேர்ந்த ரஞ்சித், 38, என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பண்ருட்டி அடுத்த மாம்பட்டு அருகே வந்தபோது, டிரைவர் ரஞ்சித்துக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சமார்த்தியமாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி, "ஸ்டியரிங்' மீது சாய்ந்தார். அதிர்ச்சியடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள், "108' அவசர ஆம்புலன்ஸ் மூலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், ரஞ்சித் இறந்து விட்டதாக, தெரிவித்தனர். உயிர் போகும் நிலையிலும், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, தங்களைக் காப்பாற்றிய பஸ் டிரைவரைப் பார்த்து, பயணிகள் கண் கலங்கினர்.

11) விளக்கம், செய்தி தேவையில்லை....!

முதல் படம்....
 


இரண்டாவது..
                              
12) பேப்பர் கப் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றியைச் சந்தித்துள்ள தேவகி, முன்னதாக டிகிரி முடித்ததுமே திருமணம் ஆகி விட, வெட்டிப் பொழுது போக்க விரும்பாமல் கணவரின் உதவியுடன் முதலில் ஐஸ் க்ரீம் பார்லர் தொடங்கி, சரியாக வராத நிலையில் இவரின் பேச்சுத் திறமை பார்த்து நண்பர் சொன்ன யோசனையின் பேரில் எல் ஐ சி முகவராகி கணவரின் உதவியுடன், ஆதரவுடன் தேர்வெழுதி, வெற்றி பெற்று 5 வருடங்களில் மாதம் 40,000 ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினாலும், சுய தொழில் ஆசையில் மீண்டும் முயற்சி செய்து, பேப்பர் கப் தயாரிப்பில் இறங்க, கணவர் உதவ மறுத்து விட்ட நிலையிலும் வங்கியில் கடன் வாங்கி 7 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கி இன்று வெற்றிகரமான சிறு தொழிலதிபராகவும் வலம் வருகிறார் என்ற செய்தியைச் சொல்கிறது தினமலர்.
                                               

                                                         

13) மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

நேற்று வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால்
இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். ஆம் , கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .

மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர் . தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிருவோம்.
                  

படத்தில் - மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்.  (முகநூலிலிருந்து)

14) பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல் பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஹெச்ஐவி புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலஸ்ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள கிரீமில் எய்ட்ஸ் வைரசை தாக்கி அழிக்கும் பக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும், இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது. எய்ட்ஸ் நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பால் கிரீம் கட்டுப்படுத்துகிறது, எவ்வளவு கிரீம் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர். (முகநூலிலிருந்து)
                                                                                                                                                                                                 

14 கருத்துகள்:

  1. ஆறுதல் அளிக்கும்
    பாசிட்டிவ் செய்திகள்
    பகிர்வுகளுக்குப்
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. முக்கியமான நல்ல செய்திகளைத் தந்திருக்கிறீர்கள். நம் மீனவர்கள் டால்ஃபினைக் காப்பாற்றியதுதான் மிகச் சிறந்த சம்பவம்.

    பலன் எதிர்பாராமல் அநாதை சம்ஸ்காரம் செய்பருக்குப் புண்ணியங்கள் பெருகட்டும்.

    தொழிலதிபர் தேவகீக்கு நம் வாழ்த்துகள
    தலைப்பிடாத படங்கள் வெகு சூப்பர்.
    நன்றி எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான செய்திகள். தில்லி செய்தி மகிழ்ச்சி தந்தது. நானும் உதவி செய்ய முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. முதல் நான்கும், ஒன்பதாவதும் தெரிந்தவை. மற்றவை குறித்து இப்போது தான் தெரியும். அருமையான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமையான செய்திகள்! சிலது படித்தவை! சிலது புதிது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  7. பாஸிடிவ் அனுபவங்களை படித்தப் பின்
    நமக்குள்ளும் பாஸிடிவ் எண்ணங்கள் தானாக
    ஊற்றெடுக்கிறது,பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீதர் பாராட்டுக்குரியவர் நம்பர் நோட் பண்ணிக்குறேன்

    சிவாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா

    ஒபாமாவை நிச்சயம் பாராட்டனும்

    இம்முறை ஏராள நல்ல செய்திகள்

    பதிலளிநீக்கு
  9. அனைத்துச் செய்திகளுமே அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மனதிற்கு தெம்பையும், நிறைவையும் கொடுக்கும் செய்திகள். நம்மையும் ஒரு சிறு உதவியாவது அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை
    கொடுக்கும் செய்திகள்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. கண்ணில் பட்ட நல்ல செய்திகளை எல்லோருக்கும் சொல்லும் பதிவு அருமை.
    நல்லதே எண்ண வேண்டும். நல்லதே செய்ய வேண்டும், நல்லதே பார்க்க வேண்டும்.

    பிற உயிர்களுக்கும் உதவும் ச்ய்தி அருமை.
    கல்வி கண் கொடுத்த ராஜேஷ் வாழ்க.

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சியான (இந்த )வாரம்

    இப்படி பெயர் வைக்க முடியுமா பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல இதயம் படைத்தோர்களை வாழ்த்துவோம்.

    நல்ல செய்திகளின் தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!