எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணம் எப்போதும் போல பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. கூட்டத்தைக் கண்டால்தான் கொஞ்சம் அலர்ஜி. வேறு வழியில்லாமல் ஒரு கூட்ட நாளில் பயணம் செய்த போது இரண்டு அனுபவங்கள்!
முதலில் ஏறும்போது கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. அப்புறம் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் நெரிக்கத் தொடங்கியது. வியர்வை நாற்றங்கள், தெரிந்த தெரியாத பௌடர் வாசனைகள், ஓவராக அடிக்கப் பட்ட, எரிக்கும் சென்ட் வாசனைகளுக்கு நடுவில் பயணம்.
"உள்ள போய் நின்னுக்கோ.. அங்க கூட்டம் கம்மியா இருக்கு பாரு.."
"நம்ம பசங்கதான.. இங்கேயே நில்லுடி.. கொஞ்சம் பட்டா குறைஞ்சு போய்ட மாட்டே.."
"மச்சி... ஏழாம் அறிவு சொதப்பிட்டாண்டா..."
"ஹலோ... ஹலோ...கேட்குதா...சைதாப்பேட்டை தாண்டிட்டேன்மா... வந்துடுவேன்..."
பயணங்கள் பலவிதம்... கிடைக்கும் அனுபவம் சிலவிதம்...
பதிலளிநீக்குசிலநேரங்களில் இப்படியான அரட்டைகள் எரிச்சல் என்றாலும் சுவாரஸ்யமும்தான் !
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் ஒரு "புதுக் கவி" மின்சார ரயில் பெட்டிகளில் இழந்த காதல குறித்து ஒரே கவிதை மயமாகா ஸ்கெட்ச் பேனாவினால் கலர் கலராக எழுதி ஒட்டி இருப்பார். அதைப் படித்து ரசிதததுண்டு. அவருடைய தொ. பே எண் கொடுக்கப் பட்டிருக்கும். ஒரு முறை " என்ன ரசிகர்களே வெறும் பாராட்டு மட்டும்தானா? " என்று 'பரிதாபமாக ' எழுதியிருந்தது மறக்க முடியாதது. அவர் மணி ஆர்டர் எதிர் பார்த்தாரோ என்னவோ. அல்லது ஒரு இளம் ரசிகை அவர் மேல் அன்பு கொண்டு தேடி வருவதாக கற்பனை செய்து கொண்டாரோ என்னவோ!
பதிலளிநீக்குஎனக்கு ஒரு திருப்தியான அனுபவம். ஒரு குடிகாரர் கண்ட மேனிக்கு உளறிக் கொண்டு வர அவரை நாலு அறை அறைந்து கிண்டியில் பலவந்தமாக கீழே தள்ளிவிட்டு வந்தார் ஒரு கணவன். வாழ்க அவர் வீரம்.
பதிலளிநீக்குஒரு சுறுசுறுப்பான பதின வயதுப் பையன் பலமதிரியான வியாபாரங்கள் செய்து கொண்டு வருவான் எண்பதுகளில். அவன் வண்டியிலிருந்து எட்டிப்பார்த்து சிக்னல் கம்பம் அடித்து செத்ததை ஊரே துக்கம் கொண்டாடியது மறக்க இயலாதது.
பதிலளிநீக்குபாவாடை சட்டை, தாவணி, புடவை திடீரென்று பளபளக்கும் தாலி என்று ஒரு வாயாடிப் பெண் பழ வியாபாரம் செய்து முன்னுக்கு வந்தது ஒரு சந்தோஷமான அனுபவம்.
பதிலளிநீக்குபுல்லாங்குழல் வித்வான், சினிமாப் பாடல் வித்தகர்கள், வரிசையாக கோல் பிடித்து வந்து வியாபாரம் அல்லது யாசகம் செய்யும் குருடர் என்று பல்சுவைக் கட்சிகள் மறக்க முடியாதவை.
பதிலளிநீக்குகுரோம்பெட்டையிளிருந்து பார்க் வரை கூட்டத்தை ஒழுங்கு படுத்தி இறங்குவோர் ஏறுவோருக்கு உதவி யாக உரத்த குரலில் சமாளித்து வந்த அந்த நபர இன்னும் இருக்கிறாரா? தெரியவில்லை.
பதிலளிநீக்குகாஞ்சிபுரம் வண்டியில் கூட்டமாக உட்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிவரும் கூட்டம், ரம்மி ஆடும் விடலைகள் மாலை வண்டியில் காய் திருத்தியவாறே வீடு செல்லும் அக்காக்கள் , என்ன ஒரு வெரைட்டி.
பதிலளிநீக்குடிக்கெட் இல்லாதவர்களைப் பிடிக்க அல்சேஷன் நாய்கள் சகிதம் செக்கிங் வரும் ரயில்வே ஊழியர் பட்டாளம் இறங்கி ஓடும போக்கிரிக் கும்பல், ரயிலில் அடிபட்டு அனதையாகக் கிடக்கும் சவம், கனமழை காலங்களில் சாலை, பாலங்களில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த படி பயணிக்கும் திரில் எல்லாமே நினஈல் நிற்பவைதான்.
பதிலளிநீக்குரயில் பெட்டியில் ஒட்டியுள்ள காதலர் காதலி விபரங்கள், பரீட்சை எண்கள். மூலம் பவுந்திர மருத்துவர்கள், வேளை வாய்ப்பு ஏய்ப்புகள், கர்த்தருக்கு விளம்பரம் அல்லது விண்ணப்பம் புரட்சி இலக்கிய வரிகள், பொதுவுடமைப் பிரசாரம் இதெல்லாம் ஒரு தனி டேஸ்ட்.
பதிலளிநீக்குபதிவைவிட அனானியின் பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. ஒரு திரைக் கதையே எழுதலாம் போலிருக்கே அனானி
பதிலளிநீக்குஎலெக்ட்ரிக் ட்ரெயினில் போய் வருடங்கள் ஆகின்றன.
பதிலளிநீக்குஉங்கள் பதிவும் அன்னானி பின்னூட்டம் வெகு சுவை.
'உள் பெட்டியிலிருந்து' போல இது 'ரயில் பெட்டியிலிருந்து', சரியா ?
பதிலளிநீக்குதமிழ் உதயம் சொன்னது போல் பயணங்கள் பலவிதம். அதில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் பல ரகம்.
பதிலளிநீக்குநானும் நெடும்பயணம் தவிர்த்து ரயில்பெட்டி அனுபவம் அதிகமில்லை. 20வருடம் முன் மும்பையின் தானே டு வி.டி பயணித்ததுண்டு அங்கிருந்த 2 வருடங்களில்.
இந்த மாதிரி பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டு,யூனிட் டிரெயின்ல போய் ரொம்ப நாளாச்சு.உங்க பதிவ படிச்சதும் உடனே அதில பயண போகணும் போல இருக்கு.
பதிலளிநீக்குசுவரசியமான பயண அனுபவம்.
அசத்தலான பயணானுபவம், சென்னைவாசிகள் தினம் தினம் ரசிக்கும்,சகிக்கும், வெறுக்கும் நிகழ்வுகளை அளித்த விதம் அருமை.
பதிலளிநீக்குமும்பையின் ரயில் பயணங்களும் இதை மாதிரியே சுவாரஸ்யமா இருக்கும் :-)
பதிலளிநீக்குகசங்கிய லுங்கி!! அற்புதம். லாஸ்ட் டச்! :-)))
பதிலளிநீக்குபார்த்து மனசில் பதிந்தவற்றை நன்றாக நேரேட் பண்ணியிருக்கிறீர்கள். அதிலும் தேர்ந்தெடுத்து மெருகூட்டியிருப்பதையும் சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்கு