நமக்கு
சாதரணமாக நிறைய விஷயங்களை அருமை தெரியாமலே அனுபவிக்கிறோம். பேச்சு,
கண்பார்வை, ஊனமில்லா உடல்... ஏதாவதொன்று இல்லாமல் போகும்போதுதான் அதன்
அருமை தெரியும்.
ம்யூட் ஆன டிவி பார்த்திருக்கிறோம். காது கேளாதோருக்கு உலகமே ம்யூட்டில்தானே இயங்குகிறது. அது போல இந்த உணவுப்பொருள்களின் மணம் நம் நாசிகளுக்குத் தெரியாவிட்டால்...
சாப்பாட்டின் மீதான ஆர்வமே குறைந்து, சும்மா பசிக்குச் சாப்பிட்டு வந்திருக்கிறார். எனவேதான் அநியாயமாக இளைத்திருக்கிறார்.

மருத்துவர்களிடம் சரியாகி விடுமா என்று கேட்டால்,
'பார்ப்போம்' என்றும் மருத்துவம் பார்த்தாலும், இவருக்கு சர்க்கரை நோயினால்
இந்நிலை வந்திருந்தாலும், இது கூட ஒரு முன்னோடி தான் சீக்கிரமே உங்களுக்கு
பராலிட்டிக் அட்டாக் வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி பயமுறுத்தி
இருக்கிறார்கள்.
மிக நெருங்கிய சிலர் தவிர மற்றவர்களுக்கு இவரின் இந்த பாதிப்பு தெரியாமல் வைத்திருக்கிறார்.