மணமறியும் திறனிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணமறியும் திறனிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.5.14

அனோஸ்மியா


                             
 
நமக்கு சாதரணமாக நிறைய விஷயங்களை அருமை தெரியாமலே அனுபவிக்கிறோம். பேச்சு, கண்பார்வை, ஊனமில்லா உடல்... ஏதாவதொன்று இல்லாமல் போகும்போதுதான் அதன் அருமை தெரியும்.


என் பதின்ம வயது நண்பர் ஒருவரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பயங்கரமாக இளைத்திருந்தார். அவ்வப்போது பார்த்துக் கொள்வதுதான். ஆனால் நீண்ட இடைவெளிகளில். 

சுவையான பிரியாணி தயாராகிறது. கலர்புல் ஸ்வீட் தயாராகிறது. ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே சாம்பார், குருமா தோசை, எண்ணெய் வாசனை மூக்கைத் துளைக்கிறது. சுவை நரம்புகள் தூண்டப்பட்டு ஆர்வப்பசி வருகிறது.

                                                              
 
ம்யூட் ஆன டிவி பார்த்திருக்கிறோம். காது கேளாதோருக்கு உலகமே ம்யூட்டில்தானே இயங்குகிறது. அது போல இந்த உணவுப்பொருள்களின் மணம் நம் நாசிகளுக்குத் தெரியாவிட்டால்...
                                                                 
                                       

என் நண்பர் முன்னரே சர்க்கரை வியாதிக்காரர் என்று தெரியும். கிட்னி பாதிக்கப்படப் போகிறது, கண்கள் பாதிக்கப்படப் போகிறது என்று எச்சரிக்கையாக அவப்போது சோதனை செய்துதான் வருகிறார்.


அவர் வந்த நேரம் வீட்டில் மணக்க மணக்க முருங்கைக்காய் வெந்தியக் குழம்பு வைத்திருந்தோம். அவரைச் சாப்பிடச் சொன்னதும் ஒன்றும் சொல்லாமல் கொஞ்சம் சாப்பிட்டார். பின்னர் பேச்சுவாக்கில்  குழம்பு வாசனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் தனக்கு கடந்த இரண்டு வருடங்களாக எந்த வாசனையுமே தெரிவதில்லை என்றார். 


அதிர்ச்சியாக இருந்தது. 

சாப்பாட்டின் மீதான ஆர்வமே குறைந்து, சும்மா பசிக்குச் சாப்பிட்டு வந்திருக்கிறார். எனவேதான் அநியாயமாக இளைத்திருக்கிறார். 
 


                  

குருமாவோ, சரவணபவன் சாம்பாரோ நாக்கில் படும்போதுதான் சுவை மணம் என்று நமக்குத் தோன்றும். ஆனால் வாசனையே தெரியாமல் என்ன சுவை இருந்து என்ன பயன்? சுவையே அறியாமல் போய்விடும்.
                                                    
                        
 
மருத்துவர்களிடம் சரியாகி விடுமா என்று கேட்டால், 'பார்ப்போம்' என்றும் மருத்துவம் பார்த்தாலும், இவருக்கு சர்க்கரை நோயினால் இந்நிலை வந்திருந்தாலும், இது கூட ஒரு முன்னோடி தான் சீக்கிரமே உங்களுக்கு பராலிட்டிக் அட்டாக் வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி பயமுறுத்தி இருக்கிறார்கள். 
 

 
 
 
மிக நெருங்கிய சிலர் தவிர மற்றவர்களுக்கு இவரின் இந்த பாதிப்பு தெரியாமல் வைத்திருக்கிறார்.

பஸ்ஸில் போனால், கூட்டத்தில் இருந்தால் வியர்வை நாற்றம், மற்ற வாயு நாற்றங்களினால் பாதிக்கப்பட மாட்டார் என்று பேசிக் கொண்டோம். அதே போல, வீட்டில் கேஸ் லீக்கானால் கூடத் தெரியாது என்பதும் உரைத்தது. 
 
 
                                                


மூக்கு என்பது சுவாசிக்க மட்டுமே... மற்றபடி பயனில்லை என்பது என்ன கொடுமை?