24.7.26

கொஞ்சமாக இலக்கியம், கொஞ்சம் சினிமா அரட்டை....

 

கொஞ்சம் சினிமா அரட்டை....

பராசக்தி, பாசமலர், தங்கை,  தங்கைக்காக, அண்ணன் ஒரு கோவில்,  மன்னவன் வந்தானடி என்று தங்கை சீரிஸ் படங்களில் அதிகமாக நடித்தது சிவாஜிதான். லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். 

தங்கை என்று பார்க்காமல் அண்ணனாக சிவாஜி என்று பார்த்தால் இதனோடு பழனி, படிக்காத மேதை, குலமா குணமா, ராஜபார்ட் ரங்கதுரை என்று இன்னும் சில படங்கள்..

ஆக,  பராசக்தி, பாசமலர், தங்கை,  தங்கைக்காக, அண்ணன் ஒரு கோவில்,  மன்னவன் வந்தானடி,  உத்தம புத்திரன், பழனி, படிக்காத மேதை, குலமா குணமா, ராஜபார்ட் ரங்கதுரை, என் தம்பி  என்று இத்தனைக்கு படங்களில் சிவாஜி அண்ணனாக நடித்துள்ளார். நான் மறந்து விட்டு விட்டது கூட இன்னும் இருக்கலாம்.

அறிமுகமான பராசக்தியின் அதகளம் செய்து அது பெரிய ஹிட் படம் என்றால் அண்ணன் தங்கை பாசத்துக்கு இன்றளவும் உரைகல் பாசமலர்தான்.  இப்படி ஒரு அந்தஸ்தை அது பெறும் என்று அதன் தயாரிப்பாளர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.  காலங்கள் கடந்தும் தசாப்தங்கள் கடந்தும் இன்றளவும் பாசமலர்தான் அண்ணன் தங்கைக்கு உதாரணமாக சொல்லப்படும் படம்.  அந்தப் படம் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இருக்க மாட்டார்கள் - கீதா அக்கா, அப்பாதுரை தவிர!!

குலமா குணமா படத்தில் ஜெய்சங்கருக்கு அண்ணனாக அவர் கிளைமேக்ஸ் காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று.  அதே போல ஸ்ரீகாந்துக்கு அண்ணனாக ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பெரிய பணக்காரராக தம்பி மாமனாரிடம் செல்லும் காட்சி.  என் தம்பியில் பாலாஜியை திருத்தும் காட்சி.  பழனி படத்தில் அண்ணனாக நின்று அவர் பாடும் இரண்டு பாடல்களும் அருமையான கண்ணதாசன் பாடல்கள்.

படிக்காத மேதை தனிரகம்.  வளர்ப்புப் பிள்ளை.  அப்புறம் பெற்றோருக்குப் பிறந்த தம்பிகள்.  அதுவும் அப்பாவியான நடிப்பில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார். படிக்காத மேதை படத்தை உல்ட்டா செய்துதான் பின்னாட்களில் கமலை வைத்து 'பேர் சொல்லும் பிள்ளை' படமும், ரஜினியை வைத்து 'தர்மதுரை' படமும் செய்தார்கள்.

பைரவி, தர்மயுத்தம், முள்ளும் மலரும்  படங்களில் ரஜினி தங்கைக்கு பாசக்க்கார அண்ணனாக நடித்திருந்தார்.  அதில் முள்ளும் மலரும் டாப்.

முள்ளும் மலரும் ரஜினி-ஷோபா அண்ணன் தங்கை காட்சிகள் கூட ரொம்பப் பிடிக்கும்.  தங்கை மேல் கோபித்துக் கொண்டு 'சாப்பிடமாட்டேன் போ'  சொல்லுமிடமும், கடைசி கிளைமேக்ஸும் மிகவும் .பிடிக்கும்.

===========================================================================================

பாஹே பக்கம்  :




===========================================================================================

நெல்லைக் கண்ணன்  :  காமராஜர் பற்றி உரை.


======================================================================================

கவிதைப் பக்கம் -  கண்ணதாசன்.......





காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் 
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் 
காலில் விலங்கும் இட்டோம் 
கடமை என அழைத்தோம் 
நாலு விலங்குகளில் 
தினம் நாட்டியம் ஆடுகின்றோம்


தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக 
தாளாமல் துடிக்கின்றதே தம்பி 
தாளாமல் துடிக்கின்றதே
தாயென்றும் பிள்ளையென்றும் 
தழுவிக் கிடந்தவர்கும் 
தருமம் துணையில்லையே தம்பி 
தருமம் துணையில்லையே

உள்ளத்திலே உள்ளதுதான் 
உலகம் கண்ணா 
இதை உணர்ந்து கொண்டேன் 
துன்பம் எல்லாம் விலகும் கண்ணா

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் 
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் 
கீதை கேட்டான் 
நானிருக்கும் நிலையில் உன்னை 
ன்ன கேட்பேன் 
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் 
உள்ளம் கேட்பேன்

நீ கொடுத்த நிழலிருக்க 
பெண்மை ஊஞ்சலாட வருமோ 
ஒருவனுக்கு தருவதற்கு என்றே 
என்றும் இந்த மனமோ

எண்ணம் என்ற ஏடெடுத்து 
எழுதும் பாடலிலே தலைவி 
இல்லறத்தில் நல்லறத்தை தேடும் 
வாழ்க்கையிலே துணைவி  

அன்பு என்ற காவியத்தில் 
நல்ல ஆரம்பமே வருக  
முன்னுரைத்த காதலையே 
உந்தன் முடிவுரையாய்த் தருக

==========================================================================================

பழைய சாதம்!

கணக்குத்தானே வேண்டும்?

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் 'போர்டு' ஸ்தாபனத்தாருக்குப் பத்தாயிரம் டாலர் பில் ஒன்று வந்தது. பில் தொகை அதிகமாகப் படவே, விவரங்கள் கேட்டார்கள் போர்டு ஸ்தாபனத்தார்.

பில் அனுப்பியவரோ ஜெர்மனியிலிருந்து அப்போதுதாள் அமெரிக்காவில் குடியேறியிருந்த கணித மேதை சார்லஸ் பிராட்டியஸ் ஸ்டீன்மெட்ஸ்.  உலகப் புகழ் பெற்றவர் இவர்.  

தகராறு செய்து கொண்டிருந்த ஒரு மின் உற்பத்தி இயந்திரத்தைச் சரி செய்யும் வேலைவைத்தான் போர்ட் ஸ்தாபனத்தார் அவருக்குக் கொடுத்திருந்தார்கள். ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும் படுக்க ஒரு கட்டிலும் வேண்டுமென்று கேட்ட ஸ்டீன்மெட்ஸ், இரண்டு பகல் இரண்டு இரவுகள் கட்டிலில் சாய்ந்த வண்ணம் இயந்திரத்தின் சப்தங்களை உற்றுக் கேட்டுக் கொண்டும், ஏதோ கணக்குகளப் போட்டுக் கொண்டும் இருந்தார். பிறகு, ஓர் ஏணி மூலம் இயந்திரத்தின் மீது ஏறிச் சில அளவுகள் எடுத்து விட்டு, சாக்கட்டியால் இயந்திரத்தின் ஒரு பகுதியில் அடையாளக் குறியிட்டார். 

"குறியிடம் பட்டிருக்கும் இந்த இடத்தில் இந்தத் தகட்டை அகற்றி உள்ளேமிருக்கும் ஃபீல்டிங் காபிலிலிருந்து (Fielding coil) பதினாறு சுற்றுகளை (Windings) எடுத்து விடுங்கள்" என்றார் ஸ்டீன்மெட்ஸ். அப்படிச் செய்ததும் நன்றக இயங்கத் தொடங்கியது இயந்திரம்

தாம் அனுப்பிய பில் சரியல்லவென்றும், முழு விவரங்களும் அடங்கிய பில் ஒன்று வேண்டுமென்றும் கோரித் தம்மிடம் கணக்குக் கேட்ட போர்டு ஸ்தாபனத்தினருக்கு ஸ்டீன்மெட்ஸ் அனுப்பிய 'விவரமான' பில் இதுதான்: 

சாக்கட்டியால் குறியீட்டதற்கு  - 1 டாலர்

எங்கே குறிபிடவேண்டுமென்று தெரிந்து கொண்டதற்கு - 9999 டாலர்

மொத்தம் 10000 டாலர்

ஆதாரம்: இன்டர்நேஷனல் மானேஜ்மென்ட்

தகவல்: டி. என். கிருஷ்ணன்   -  கல்கி - 15-5-66

==========================================================================================

சாண்டில்யன் பக்கம்.  சாண்டில்யனுக்கு ரா பி சேதுப்பிள்ளை அறிமுகம்..  சாண்டில்யன் குமுதத்தில் எழுதிய காலத்திலேயே அமுதசுரபியிலும் தொடர்கதை எழுதி இருக்கிறார்.


அணிந்துரை

(திரு. ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்)

பழங்காலத்தில் வடமேற்குக் கணவாய்களின் பகைவர்கள். வழியாகப் பாரத நாட்டிற்கு வந்த தொல்லைகள் பலவாகும். பாரதத்தின் செல்வத்தை விரும்பிப் படையெடுத்தனர் இந்நாட்டு மன்னர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை நாமறிவோம். அத்தகைய படை யெடுப்புகளில் ஒன்று ஹூணர்கள் என்னும் நாடோடிச் சாதியாரால் நேர்ந்தது. அன்னவ ருடைய மின்னல் தாக்குதல்களை முறியடித்துப் பாரத நிலத்தில் அவர்கள் ஆதிக்கம் நிலைபெறா வண்ணம் தடுத்து வந்தனர் குப்த மன்னர்கள். ஆயினும், ஸ்கந்தகுப்தன் என்னும் மன்னன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோது அப்பகைவரது படையெடுப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பொன்னின் மதிப்பும் நாட்டில் குறைந்துபோயிற்று.

ஸ்கந்தகுப்தனுடைய மாற்றாந் தாயாகிய ஆனந்ததேவி தன் மகன் பூரகுப்தனை அரியாசனத்4

தில் ஏற்ற விரும்பி எதிரியான தோரமானா என்னும் படைத்தலைவனுடன் சேர்ந்து சதி செய்து வந்தாள். அச்சமயம் ஹூணத் தலைவன் அடிலனிடம் உபாத்தியாயராகப் பணியாற்றி வந்தான் குப்த ராஜ்ய உபசேனாதிபதி அஜித் சந்திரன். இந்த உள்நாட்டுக் கலகத்தையும், தோரமானாவின் தாக்குதலையும் உபசேனாதிபதி அஜித் சந்திரன் தன் ராஜதந்திரத்தால் முறியடித்து, அடிலன் மகள் சித்ராதேவியை மணந்த வரலாற்று உண்மையைப் பகைப்புலமாகக் கொண்டு சிறந்த தொரு சரித்திர நாவலைப் புனைந்திருக்கிறார் திரு. சாண்டில்யன் அவர்கள்.

வரலாற்று நூல் எழுதுதல் எளிதன்று. அதிலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மெய்ச்சான்றுகளுக்கு மாறுபடாமல், நாவலுக்கு ஏற்ற குணநலங் குன்றாமல் எழுதுதல் அதனினும் கடினமானதொன்று. மேனாட்டு ஆசிரியர்களாகிய சர் வால்டர் ஸ்காட், டூமாஸ் போன்றவர் தம் வரலாற்றுக் கற்பனை நாவல்களால் உலகப் புகழ் பெற்றதோடு தம் மொழிக்கும் ஆக்கம் தேடித் தந்திருக்கிறார்கள்.

திரு. சாண்டில்யன் அவர்கள் தமிழில் சிறந்த எழுத்தாளர். இயற்கையான நகைச்சுவையாலும் சிறந்த பாத்திரங்களைப் படைக்கும் திறத்தாலும், நன்றாகக் கதையை நடத்திச் செல்லும் நலத்தாலும் நல்லதொரு நாவலைத் தமிழ்நாட்டிற்கு அவர்கள் அளித்திருக்கிறார்கள். அவர்கள் படைத்துள்ள பல்தேவ், ராகுலன், காமினி போன்ற பாத்திரங் களே இதற்குச் சான்று.

ஏறக்குறைய ஐநூறு பக்கங்கள் கொண்ட இந்த வரலாற்று நாவலை இயற்றித் தமிழ் நாட்டிற்கு அளித்ததற்காகத் தமிழ் ஆசிரியர் சாண்டில்யனைப் போற்றுவர் என்பதில் ஐயமில்லை. மேலும் மேலும் வரலாற்றுக் கதைகளைப் பொதிந்து புனைந்து நாட்டின் புகழையும் மொழியின் வளத்தையும் வாழ்விப்பீர்களாக.

காந்தி நகர் 13-2-56

ரா. பி. சேதுப்பிள்ளை

====================================================================================

தெய்வமகன் படத்தின் ஆரம்பக் காட்சி..  சிவாஜி,,,


=========================================================================================
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி Y G மகேந்திரன் சொல்லும் .சிறு துளி தகவல்.


========================================================================================

1969 ஆம் வருட கல்கியிலிருந்து....


அகாதெமிப் பரிசு

திருஜெயகாந்தன் அவர்கள் வாசகர்களின் மனப்போக்கை அதுசரித்து எழுதும் 'மாமூல்' எழுத்தாளரல்ல, அவர் எழுத்தில் இளைஞர் சமுதாயத்தை ஈர்க்கும் சக்தியும், அவர் களுக்கு விழிப்பூட்டி வழி காட்டும் ஆற்றலும் உண்டு; சாதாரணமான ஒரு கருத்தை வைத்துக்கொண்டு ஓர் அசாதாரணப் படைப்பை வாசகர்களுக்கு அளிக்கும் திறமையும் உண்டு.

அவரது "சில நேரத்தில் சில மனிதர்கள்" என்னும் நூலுக்கு சாகித்ய அகாதெமியின் பரிக கிடைத் திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நூலாசிரியரை வாழ்த்தஹிறோம்.

ஒரு பேதைப் பெண், அவள்தா ய், மாமன் ஆகிய குறைவான பாத்திரங்களை வைத்துக் கொண்டு நிறைவான கதையைப் படைத்து அலுப்புத் தட்டாமல் சுவையாகக் கூறியிருக்கிறார்.  மனித உள் ளங்களில் உள்ள ஆசாபாசங்களை -அழுக்குகளையும் கூடந்தான் - கூசாமல் வெளியிட்டு, சமூக நெறிகளின் ஊழல்களுக்குச் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.  விவாதத்துக்குரிய பல பிரச்னைகளை அநாயாசமாகத் தொட்டு அவற்றை இன்றைய வாழ்க் கையோடு பிணைத்துக் காட்டி, அப்பட்டமான உண்மைகள நிலைநாட்ட முயன்று வெற்றியடைந்திருக்கிறார். 

சந்தர்ப்ப வசத்தினாலும், தன் பேதைமையினாலும் ஓ ஆணின் இச்சைக்குப் பலியான இளம் பென் கங்காவை ஒரு விரக்திப் பிரகிருதியாய் மாற்றி அவளைக் கொண்டே தன் கதையை சொல்ல வைத்திருக்கும் பாணி பாராட்டுக் சூரியது.

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்கும் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.  யதார்த்தத்தை நாம் புரிந்த கொள்ள மறுப்பதனாலேயே அது இல்லை என ஆகிவிடாது. யதார்த்தத்தை, அதாவது ரியலிஸத்தை அடிப்படையாசுக் கொண்டு புனையப்பட்ட நாவலுக்கு வரவேற்பு ஒரு தினுசாகத்தான் இருக்கும்.  ஒரு பாத்திரத்தின் மீது அர்ததமற்ற வெறுப்போ, அல்லது அசட்டுத்தனமான அனுதாபமோ கொண்டு விடும் வாசகர்கள் எழுத்தின் மூலம் மனித் வாழ்வைப் புரிந்துகொள்ள மறுத்து விடுகிறார்கள். இந்நாவலில் இக்கருத்தை வலியுறுத்தவே முயன்றிருக்கிறர் ஆசிரியர். இம் முயற்சி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவதாகும்.

=======================================================================================

OTT யில் பார்த்த படம்  JIO Hot Star - மா  பங்காரம் - மூலம் தெலுங்கு - பார்த்தது தமிழ் வசனத்தில் 


சமந்தாவுக்கு ஆக்ஷன் ரோல் ஒத்து வரவில்லை.  

ஹீரோவை விட வில்லன் அழகாக இருக்கிறார்.  நன்றாகவும் நடிக்கிறார்.

முன்னர் 'ஈ' படத்திலும், ஏதோ ஒரு விஜய் படத்திலும் சமந்தாவைப் பார்த்து அழகாக இருக்கிறார்  என்று நினைத்திருக்கிறேன்.  ஏன், 'நீதானே எந்தன் பொன்வசந்தம்' படத்தில் கூட நன்றாகத்தான் இருந்தார்.  

இந்தப் படத்தில் டைஃபாய்டில் விழுந்து எழுந்தவர் போல இருக்கிறார்.  ஆனால் வில்லன் சொல்லும் டயலாக் 

"அவளைக் கொன்று விடு"  

"ஏன் அண்ணா?"  

"அவள் ஸ்வர்ணாவாய் இருந்தால் கொன்று விடலாம்.  ஜான்சியாய் இருந்தால் அவள் உன்னைக் கொன்று விடுவாள்"

அவள் ஜான்ஸிதான் என்பதை நிரூபிக்க சிஷ்யனை பாலி கொடுக்கும் வில்லன்.  படத்தில் அவன் பெயர் கருணா.

இன்னொரு இடத்தில் அவனே சமந்தாவை எதிர்க்கும்போது வெறுப்புடன் அலுத்துக் கொள்வது -  

"தெரியாமல் இப்படி ஒரு ராட்சசியை (மான்ஸ்டர்) உருவாக்கி விட்டேன்" 

அனாதை ஸ்வர்ணா அனாதை விடுதி காப்பாளர் பாலியல் இச்சைக்கு பலியாகாமல் சிறு வயதிலேயே அங்கிருந்து தப்பி, இங்கே அங்கே என்று அலைந்து, ஒவ்வொரு இடத்திலும் பாலியல் சவால்களை எதிர்கொள்கிறாள்.  அங்கே வந்த ஒரு நக்ஸலைட் போன்ற குழுவால் கவரப்பட்டு அவர்களுடன் சென்று யுத்தம் பழகுகிறாள்.  அவர்கள் நியாயத்தை விட அநியாயம்தான் அதிகம் செய்கிறார்கள் என்று தெரிந்ததும் கருணாவை போலீசிடம் மாட்டி விட்டு, அங்கிருந்து தப்பி, ஒரு நல்ல கணவனை அடைந்து, அவன் குடும்பத்தில் ஐக்கியமாகப் போகும் நேரம் பழைய வாழ்க்கை துரத்துகிறது. 

வில்லனாக நடிக்கும் குல்ஷன் தேவய்யா கதாநாயகன் திக்நாத்தை விட நன்றாக இருக்கிறார்.  உடல்மொழி நன்றாக இருக்கிறது.  வசனம் டெலிவரி தெளிவாக இருக்கிறது.

சரி, ஒரு நல்ல ஆக்ஷன் படமாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் 50 சதவிகிதம்தான் தெரிகிறது.  சும்மா ஒருமுறை பார்க்கலாம்.

============================================================================================

MGR ன் நடையும் சாவித்ரியின் நடையும் ரசிக்கத்தக்கவை.  பாடலோ அருமையான பாடல்.  சிறுவயதில் என் மகன்களுக்கு அடிக்கடி பாடிக் காட்டும் பாடல்!  குதிரையிலிருந்து MGR கீழே இறங்கி நடந்து வரும்போது குதிரை சாவித்ரியை கடிப்பது போல வரும்போது லாவகமாக அதை தள்ளி விடுவார் MGR 

வேட்டைக்காரன் 1964 ல் கண்ணதாசனுடன் பிணக்கு வருவதற்கு முன் வந்த படம்.  பாடல்களும் அவர்தான்.இசை கே வி மஹாதேவன்.  குரல் TMS என்று .சொல்லவும் வேண்டுமோ...

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.. வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  2. பாசமலர் - நான் பார்த்தது இல்லை - சினிமா என்று தெரிந்து ஏன் அழ வேண்டும்? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி.. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை!

      நீக்கு
  3. மற்ற பகுதிகளும் நன்று. அப்பாவின் கவிதை மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!