FROM MY IN BOX 2011 03 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FROM MY IN BOX 2011 03 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.3.11

உள் பெட்டியிலிருந்து. 2011 03




சுவையான குழப்பங்கள்..
(அ) தண்ணீருக்கு அடியில அழ முடியுமா?
(ஆ) மீனுக்கு தாகம் வருமா?
   
(இ) பறவைகள் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லையே...
   
(ஈ) முழுசா கட்டி முடிச்சிட்ட கட்டிடத்தைக் கூட ஏன் building னு சொல்றாங்க...? (Built என்று சொல்லலாமே! )

(உ) புதுசு, சுவை கூட்டப்பட்டதுன்னுல்லாம் சொல்ற நாய் உணவை யார் டேஸ்ட் செய்து செக் செய்வார்கள்?
       
(ஊ) குரங்குலேருந்து வந்தவன் மனிதன்னா, இன்னும் குரங்கு இருக்கே...

(எ) குடிச்சிட்டு வண்டி ஓட்டறது தப்புன்னா 'பார்' லல்லாம் பார்க்கிங் எதுக்கு...

--------------------------------------------------------------------------

அட...!

அடுத்தவங்க கிட்டேருந்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட, நம்ம கிட்டேயிருந்து நாமே எதிர்பார்த்தா உற்சாகமா முன்னேறலாமே..

-------------------------------------------------------------------------

அடடா...!

மீறப் படாத சத்தியங்கள்..
எழுதப் படாத நினைவுகள்...
உண்மை உறவுகளில்
பல சமயம்
வார்த்தைகள்
பகிரத்
தேவையே இல்லை.

உடைந்த பென்சில்கள்
முடிக்கப் படாத வீட்டுப் பாடங்கள்...
முடித்த வீட்டுப் பாடம்
அழியாமலிருக்க
கையில் ஸ்லேட்டு...
பையில் புத்தகங்கள்....

அந்த சந்தோஷத்தை
இப்போது லேப் டாப்பில் தேடினேன்..
கிடைக்கவில்லை!
நஷ்ட ஈடாக
இதை லேப் டாப்பில்
சேமிக்கிறேன்.
----------------------------------------------------------------------

வானின் கருமேகங்கள் மழையாகப் பொழிவது போல்,
வாழ்வின் கறுப்பு தினங்கள் பிறிதொரு நாளில் இனிய தினங்களாக சந்தோஷத்தைப் பொழியும்.. நம்பிக்கை இழக்காமல், வாழும் வரைப் போராடு..!

------------------------------------------------------------------------

அன்பு மனித நேயத்தைக் காட்டும். சமய சந்தர்ப்பங்கள் உண்மையை வெளிப் படுத்தும்.

----------------------------------------------------------------------------