Shyama Sastri லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Shyama Sastri லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.4.10

ஸ்ரீ சியாமா சாஸ்திரி

சங்கீத மும்மணிகளில் ஒருவர் ஆகிய ஸ்ரீ சியாமா சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 26, 1762) என்று  படித்தேன்.
                                                                
 காலத்தினால் அழியாத பாடல்களை இயற்றுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சியாமா சாஸ்திரி அவர்களால் மதுரை மீனாட்சியின் பேரில் பாடப் பெற்ற நவரத்னமாலிகை பாடல்கள் மிகவும் பிரசித்தம். மத்யமாவதியில் அவர் இயற்றிய 'பாலிஞ்சு காமாட்சி' போன்ற பாடல்கள் மனதை உருக்கும் சக்தி வாய்ந்தவை. 

இதை எழுதும்போதே, இரண்டு வருடங்களுக்கு முன், ஹிந்து நாளிதழில், படித்த செய்தி ஒன்றும் நினைவுக்கு வருகிறது. சியாமா சாஸ்திரி வழித் தோன்றல்கள், சென்னை குரோம்பேட்டை சித்லப்பாக்கம் பகுதியில், வறுமையில் வாடுகிறார்கள் என்னும் செய்திதான் அது. 
                                 
எத்தனையோ சங்கீத விழாக்கள், சங்கீத சபாக்கள், சங்கீத ஆர்வலர்கள், சங்கீத விற்பன்னர்கள் நிறைந்த நம் நாட்டில், இவர்களுக்கு உதவி புரிய யாரும் முன் வந்ததாகத் தெரியவில்லை.