சனி, 9 ஏப்ரல், 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  "மொத்தத்தில் குழந்தையின் ஆயுசுக்கும் உடம்பு வளருமே தவிர மூளை வளராது அவன் குழந்தையாகவேத்தான் இருப்பான், காலையில் பாத்ரூம் போக வைப்பதில் இருந்து இரவில் படுக்கையில் படுக்கவைப்பது வரை இரண்டு பேர் துணை எப்போதும் தேவை என்பது புரிந்தது.  குழந்தையை தத்து கொடுத்த காப்பகத்திற்கு நடந்ததை சொல்லவேண்டும் என்பதற்காக சொன்னோம்.ஏழு டாக்டர்கள் கொண்ட குழு ஸ்கேனிங் உள்ளீட்ட அனைத்து சோதனைகளையும் செய்த பிறகுதானே குழந்தையை தத்து கொடுத்தோம்,எங்கோ தப்பு நடந்துவிட்டது மன்னியுங்கள் சார்.. நீங்கள் உடனே அந்த குழந்தையை கொண்டுவந்து எங்கள் காப்பகத்தில் கொடுத்துவிட்டு வேறு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள், இதற்கு சட்டத்திலும் வழியிருக்கிறது என்றார்கள்.

நாங்கள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை, எப்படியும் இந்த குழந்தையை வளர்க்க ஒரு பெற்றோர் தேவைதானே அந்த பெற்றோராக நாங்கள் இருந்துவிட்டு போகிறோம் என்று சொல்லிவிட்டோம். இனி எங்களைப் பொறுத்தவரை அஜய்தான் நம் மகன் அவன் கடவுள் கொடுத்த பரிசு அவனை நல்லபடியாக வளர்க்கவேண்டியது நமது கடமை என்று முடிவு செய்தோம்."
 


தெய்வங்கள்.  ஆனால் இவர்கள் காலத்துக்குப் பின் அந்தக் குழந்தை நிலை என்ன ஆகும்?

2)  வித்யா.
 



3)  பாக்கியலட்சுமி என்ற, 90 வயது பாட்டி.
 


4)  மென்மேலும் உதவட்டும்.  விக்ரம்.
 


5)  ஸ்வாதியின் சேவை.
 



6)  "தினமும், 15 நிமிடங்கள் சைக்கிளை மிதிக்கும்போது, 400 லிட்டர் வரை நீர் தொட்டிக்கு சென்று விடும். தொடர்ச்சியாக இதை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஐந்து, ஆறு நிமிடங்கள் தொடர்ந்து இயக்கலாம். அதன் பின், பணிகளை மேற்கொள்ளலாம்.... 
 


நல்ல விஷயம்தான்.  ஆனால் எல்லோருக்கும் கோவை ராம்நகரை சேர்ந்த கிருஷ்ணனுக்குக் கிடைத்த மாதிரி பழமை வாய்ந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட, 'ரெசிபுரோக்கேட்டிங்' பம்ப் கிடைக்க வேண்டுமே...!!
7)  அமுதன் சாந்தி.
 


8)  "மனிதம் என்பதைத் தவிர வேறு ஜாதி அறியேன்" என்கிறார் மிதாலால் சிந்தி.
 


9)  கல்விச்சாலை ஆனா சாலைக் கல்வி.  கண்ணகி நகரின் ஒன்பதாவது முதன்மை தெருவை ஒட்டியிருக்கும் நடைபாதை அது....
 


10) இது இந்த கணத்தின் அவசியம்.  கோயம்புத்தூரில் தொடங்கி இருக்கும் இரு இளைஞர்கள்.
 


11)   சிவகாசி எஸ்.ஐ.பி.டி., பாலிடெக்னிக் மாணவர்கள் மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கி உள்ளனர்.  சபாஷ் மாணவர்களே...  


15 கருத்துகள்:

  1. இந்த தெய்வங்களை நாத்திகன் கூட இல்லையென்று மறுக்க முடியாது !

    பதிலளிநீக்கு
  2. "மனிதம் என்பதைத் தவிர வேறு ஜாதி அறியேன்" என்கிறார் மிதாலால் சிந்தி

    பதிலளிநீக்கு
  3. "மனிதம் என்பதைத் தவிர வேறு ஜாதி அறியேன்" என்கிறார் மிதாலால் சிந்தி

    பதிலளிநீக்கு
  4. அஜயை தத்து எடுத்தவர்கள் மனித உருவில் வாழும் கடவுள்கள்தான்.

    பதிலளிநீக்கு
  5. இப்படியும் சில மனிதர்கள் இருப்பதால்தான் மனிதம் தளைக்கின்றது வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. அஜயயின் பெற்றோர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த கோடானு கோடி வணக்கங்கள் தெய்வங்களே நோ டவுட்...

    வித்யா சொல்லும் செய்தி அருமை..பெண்கள் சுயதொழில் என்பது...

    கோவை இளைஞர்கள் + ஸ்வாதி அருமையான சேவை...அனைத்தும் வழக்கம் போல் அருமையான செய்திகள்...மற்றதும் வாசித்தோம்

    பதிலளிநீக்கு
  7. மரம் நட்டு சுற்றுச் சூழலுக்கு உதவிடும் பாட்டி அட போட வைக்கிறார்...

    பதிலளிநீக்கு
  8. ஆச்சர்யம் ..இந்த பாக்யலட்சுமி பாட்டி பற்றி எங்கோ கேள்விப்பட்டேன் .உலக வன நாளுக்கு இவர் படம் தகவல் எதுவும் எனக்கு கிடைக்காததால் அந்த படங்களில் இணைக்க முடியாம போச்சி ..இப்போ சேமிசுக்கறேன் அடுத்த வருட போஸ்டுக்கு உதவும் .நன்றி .
    அனைத்தும் முத்தான தகவல்கள் .அஜயின் பெற்றோர் தான்என்னை பொறுத்தவரைவாழும் தெய்வங்கள் அவங்க நீடூழி வாழனும்

    பதிலளிநீக்கு
  9. இந்த மாதிரி பாசிடிவ் செய்திகள் நம்மில் ஒருவரையாவது அவர்களை பின் பற்ற வைக்க முடிந்தால் மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  10. நல்ல மனிதநேயம் மிக்கவர்கள் அனைவரும்.
    அஜயின் பெற்றோர்களை வணங்க வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    சித்திரையாள் வருகை
    இத்தரையில் எல்லோரும்
    எல்லாமும் பெற்று வாழ
    எல்லோருக்கும் வழிகிட்டுமென
    புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
    இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!