சனி, 10 ஆகஸ்ட், 2019

ஓய்வு பெற்றவரின் ஓய்வில்லா சேவை



1)  ஏளனம் பேசியவர்கள் இப்போது யோசனை கேட்கிறார்கள். ஜெயித்தவர்கள்பின் செல்லும் உலகமிது!  சென்றவாரம் ஒரு இளைஞரைப் பார்த்தோம். இந்த வாரம் இவர்.    




2)  ஆத்துாரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற, வன அலுவலர், மணி, ஐந்து ஆண்டுகளாக, பொது இடங்களில், 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பசுமைக் காப்பாளராக திகழ்ந்து வருகிறார்.



45 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    இரு செய்திகள் தானோ

    வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆம்.. ரெண்டே ரெண்டு!

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்...
    கீதாக்கா/ கீதா , வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிந்து வரவேற்கிறேன் அனைவரையும்.

      நீக்கு
    2. தினம் தினம் சலிப்பில்லாமல் வரவேற்கும் துரைக்கும், வந்திருக்கும் தி/கீதா, ஸ்ரீராம்,வெங்கட், பானுமதி மற்றும் கமலாவுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் நேற்றிலிருந்து மெயில் பார்க்கலை போல! இன்னும் கொழுக்கட்டை மயக்கம்? :))))))

      நீக்கு
    4. வாங்க கீதா அக்கா... நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
    5. >>> தினம் தினம் சலிப்பில்லாமல் வரவேற்கும் துரைக்கும்...<<<

      தங்களையெல்லாம் வரவேற்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி..
      நம்ம வீட்டு விசேஷம் போல மனதில் கொண்டாட்டமாக இருக்கும்..

      இதற்கெல்லாம் கொடுத்து வைக்க வேண்டுமே!...

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய எனது பிரார்த்தனைகளும்.

    செய்திகளை படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      பிரார்த்தனைகளுக்கு(ம்) நன்றி.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இரண்டு செய்திகளுமே சிறப்பான செய்திகள். மழைநீர் சேகரிப்பு - அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    வன அலுவலர் சிறப்பான செயலைச் செய்து வருகிறார். ஒவ்வொருவரும் இப்படிச் செய்தால் நல்லது தான்.

    பதிலளிநீக்கு
  5. அதிகச் செய்திகளோ, படங்களோ, நீளமான விமரிசனப் பகுதியோ இல்லை என்றாலும் வலைப்பக்கம் திறக்க நேரம் எடுக்கத் தான் செய்கிறது. முதல் செய்தி தெரியாது. இரண்டாவது மரம் நடு விழா நடத்தியவர் பற்றிப் படித்தேன். எங்கேனு தான் நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சில நாட்கள் ஆகலாமோ! இரண்டு நாட்களுக்குமுன் இதைவிட மோசமாக இருந்தது!

      நீக்கு
  6. ஒரு சிலராவது இப்படிப்பட்ட நல்ல செயல்களை செய்வது சந்தோஷமாக இருக்கிறது. விமர்சனத்தை காணவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா. விமர்சனம்... யாரும் முன்வரவில்லை! இந்த வார எனது இறுக்கமான பணியில் யாரையும் கேட்கவும் மறந்தேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  8. முதல் செய்தி இது போலவே படித்த நினைவு.

    கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்தி ஊருக்கே இப்போது உதவி வருவது நல்ல செயல்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    எங்கள் வீட்டு கிணறை இப்படி உபயோக படுத்தலாம் ஆனால், எங்களுக்கு பாதி அண்ணனுக்கு பாதி என்று இருக்கு குறுக்கே சுவர் வருகிறது. இருவரும் சேர்ந்து செய்யலாம். நல்ல யோசனை.

    தங்கை வீட்டில் மழை நீரை ஒரு சொட்டு வீணாகமல் தொட்டியில் சேகரம் செய்து இப்படி சூரிய ஒளி படாமல் மூடி போட்டு இருக்கிறாள். வடிகட்டிகள் இணைத்து இருக்கிறாள். கோடையில் இந்த மழை நீர் கை கொடுக்கிறது.

    ஓய்வு பெற்றவர்" பசுமை மையம்" அறக்கட்டளை அமைத்து இருப்பது நல்ல செயல். அவர் ஓய்வு காலத்தை பயன் உள்ளதாக மாற்றிக் கொண்டார். அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    நல்ல செய்தியை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு வார ஊர் சுற்றலுக்குப் பிறகு வீடு திரும்பினேன். இனிமேல்தான் எல்லா தளங்களுக்கும் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. பாராட்டுக்குரியவர்கள். திரு வீரமணியின் வெற்றி பெற்றத் திட்டம் பலருக்கும் பயனாகும். திரு மணியின் சேவை போற்றுதலுக்குரியது.

    பதிலளிநீக்கு
  11. எதிர்பார்த்திருந்த விமரிசனப் பகுதி இல்லாதிருந்தது ஏமாற்றமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. திருவாளர்கள். வீரமணி மற்றும் மணி இவர்களது செயல் பாராட்டுக்குறியது.

    பதிலளிநீக்கு
  13. கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரமணி அவர்களுக்கும், பசுமைக் காப்பாளர் மணி அவர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  14. //விமர்சனம்... யாரும் முன்வரவில்லை! //

    இரண்டு பகுதிகள். 1. செவ்வாய் கே.வா.போ.க. பகுதி
    2. சனிக்கிழமை ஒருவாரம் செய்ததைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விமரிசனப் பகுதி. இந்த இரண்டு பகுதிகளும் 'எங்கள் பிளாக்'கு பெருமை சேர்த்த பகுதிகள். இதுவரை யாருமே செய்யாதது.

    பதிலளிநீக்கு
  15. விமரிசனம் வரவில்லை என்றால் நான் வேண்டுமானால் ஒரு யோசனை சொல்கிறேன். உங்கள் ஆசிரியர் குழுவில் வைத்து விவாதித்துப் பாருங்கள்.

    விமரிசனக் கட்டுரைகள் அனுப்ப விருப்ப முள்ளவர்களின் விருப்பம் கேட்டு அப்படி விருப்பம் உள்ளவர்களின் பட்டியல் ஒன்று தயாரித்துக் கொள்ளுங்கள். அந்த பட்டியலில் வரிசைப்படி அவர்கள் அனுப்பும் விமரிசனத்தை ஒவ்வொரு வாரமும் தடங்கல் இல்லாமல் நீங்கள் பிரசுரிக்கலாம்.

    பட்டியலில் இருப்போருக்கு வரிசை எண்ணும் கொடுத்து எங்கள் பிளாக்கில் பிரசுரித்து விட்டீர்கள் என்றால் அந்த வரிசைப் படி
    அடுத்த வாரம் நாம் தான் விமரிசனம் அனுப்ப வேண்டும் என்று பட்டியலில் இருப்பவரும் அதற்கான தயாரிப்பு வேலையில் இறங்க செள்கரியமாக இருக்கும்.

    1. எதிர்பாராத காரணங்களால் வரிசையில் வரும் ஒருவருக்கு அந்த வாரம் விமரிசனம் செய்ய செளகரியப்பட வில்லை என்றால் அதை அவர் முன் கூட்டியே தெரிவித்து விட்டால் அடுத்து வரிசையில் இருப்பவர் தன் தயாரிப்பில் இறங்க செளகரியமாக இருக்கும்.

    2. பட்டியல் இத்தனை பேர்களைக் கொண்டது தான் என்று இல்லை.
    விருப்பம் உள்ளவர்கள் சேரச் சேர இந்தப் பட்டியலும் நீளும். விருப்பம் இல்லை என்றால் சுருங்கவும் செய்யும். அதற்கேற்ப நாம் சரி செய்து கொள்ளலாம்.

    3. விமரிசனக் கலை வளர வேண்டும் என்ற உன்னத ஏற்பாட்டில் வாசகர்கள் அதிகம் கொண்ட எங்கள் பிளாக்கின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் இவ்வளவு யோசிப்பு.

    உங்கள் ஆசிரியர் குழுவில் இந்த ஏற்பாட்டை விவாதித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸார்... ஏற்கெனவே இப்படி யோசித்ததுதான். நண்பர்கள் எல்லோரும் ஒரு ரவுண்ட் விமர்சனம் முடித்த நிலையில் இரண்டாம் சுற்றுக்கு யார் யார் ரெடி என்று மெயிலில் கூடச் சொலலவேண்டாம். இங்கேயே சொன்னால் கூட நான் வரிசைக்கிரமமாக அழைத்து விடுகிறேன்.

      நீக்கு
  16. ஜீவியின் ஆலோசனகள் என்னைவேறு ஒருபதிவின் பின்னூட்டத்டுக்ச இழுத்துச் சென்றது யாருக்காவதுநினைவுக்கு வருகிறதா வார விமரிசனம்வரவில்லையே நீக்கி விட்டீர்களா

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    மழைநீர் சேகரிப்பு செய்து குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து வரும். இளைஞரையும், வன அலுவர் பணியிலிருந்து விடுபட்ட பின்பும், ஐந்தாண்டுகள் மரம் நட்டு வளர்த்து வரும் மணி என்பவரின் சமுதாய சேவையையும் பாராட்டுவோம். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. ஞாயிற்றுக்கிழமைப்பதிவு இத்தனை நேரம் வந்திருக்கும்னு நினைச்சேன். இன்னிக்கு நான் சீக்கிரமா வந்துட்டேன் போல! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!