திங்கள், 21 பிப்ரவரி, 2022

திங்கக்கிழமை  : மசாலா சேலட் - அப்பாதுரை ரெஸிப்பி 

 

மசாலா சேலட்

நான் அவ்வப்போது செய்யும் தென்னிந்திய பாணிக் காய்கறிக் கலவை. கறி சேலட். பரங்கி மொழியில் எபி வாட்சப் குழுமத்தில் பகிர்ந்ததை கூகில் துணையுடன் அமோகமாக (அனேகமாக) தமிழில் மொழிமாற்றிக் கொடுத்த கேஜிஜி அவர்களுக்கு நன்றியுடன் இங்கே பதிவாகிறது. 4 பேருக்கான மதிய உணவு ஆகிவரும். தேவையானவை:       பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் வகைக்கு ஒன்றாக, தடிமனான துண்டுகளாக       1 பெரிய தக்காளி, ஐந்தாறு துண்டுகளாக       அரை நடுத்தர சிவப்பு வெங்காயம் சிறிய துண்டுகளாக       ஒன்றரை கப் பொடிதாக நறுக்கப்பட்ட சிவப்பு, பச்சை முட்டைக்கோஸ்       அரை கப் துருவிய கேரட்       1 கப் ப்ரோக்கோலி பூ மற்றும் தண்டு துண்டுகள்       2 கப் ஏதேனும் கீரைகள் (நன்றாகக் கழுவி உலர்ந்தவை, தண்டு நீக்கி இலையாக உதிர்க்கப்பட்டவை)       2 மேசைக்கரண்டி வெண்ணை       1 தேக்கரண்டி நல்லெண்ணை (வாசனைக்கு)       1 தேக்கரண்டி கரம் மசாலா       2 மேசைக்கரண்டி சாம்பார் அல்லது கறி மசாலாத்தூள்       1 தேக்கரண்டி பொடிக்கப்பட்ட கருமிளகு       அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்       1 தேக்கரண்டி உப்பு (அல்லது தேவைக்கேற்ப)       1 தேக்கரண்டி தேன்       1 ஏலக்காய் பொடிக்கப்பட்டது       1 தேக்கரண்டி சீரகம்       1 தேக்கரண்டி ஓமம்       1 மேசைக்கரண்டி வெள்ளை எள் செய்முறை:       காய்கறிகளை நன்கு கழுவவும்       மைக்ரோவேவ் அல்லது நீராவியில் முட்டைக்கோஸ், கேரட் மற்றும் ப்ரோக்கோலி 1 நிமிடம் வைக்கவும் - அதிகம் வேக விட வேண்டாம்       ஒரு அகண்ட சட்டியை நன்றாக சுட வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகிச் சூடானதும், சூட்டை மிதமாக்கி அதில் சீரகம், ஓமம், கறி மசாலா, மஞ்சள் தூள், மிளகு, ஏலக்காய் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும்       நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்       வெட்டப்பட்ட தக்காளி சேர்த்துக் கிளறவும்       வெட்டு மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்       அரை நிமிடம் மூடி வேக வைக்கவும்       திறந்து தேன் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும்       1 நிமிடம் மூடி வேக வைக்கவும்       முன்பு வேகவைத்த ப்ரோக்கோலி, கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அனைத்து காய்கறிகளும் மசாலா கலவையுடன் நன்கு பூசப்படும் வரை கலக்கவும், கிளறவும்       குறைந்த தீயில் 1 நிமிடம் மூடி வேக வைக்கவும்       சூட்டிலிருந்து அகற்றி இன்னொரு நிமிடம் 1 நிமிடம் வேக வைக்கவும்       ஒரு சிறிய கரண்டியைச் சுடவைத்து அதில் நல்லெண்ணை சேர்க்கவும். எண்ணை நன்கு சூடானதும் வெள்ளை எள்ளைச் சேர்த்துப் பொறித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். பரிமாறல்:       கழுவிய கீரைகளை முழுவதுமாக வடிகட்டவும். சுத்தமான துண்டால் ஈரமில்லாமல் ஒற்றி எடுக்கவும்       நான்கு உணவுத்தட்டுகளில் கீரைகளை பரப்பவும்       வேக வைத்த கறி சாலட்டை கீரைகளை மூடும்படி நான்கு தட்டுகளிலும் நிரப்பவும்.(எனவே கீரைகள் சாலடின் சூட்டில் மென்மையாகி சாப்பிடும் பதமடையும்)       பொறித்த வெள்ளை எள்ளை நான்கு தட்டுகளிலும் சாலட் மேல் தூவவும். உண்ணல்:       தட்டின் முன் அமரவும்       ஒரு நிமிடம் பொறுக்கவும்       தங்கம் தோண்டி எடுத்தது போல் அடித்துத் தூக்கவும்.

*என் மாமா பெண்ணிடம் இந்த செய்முறையை அனுப்பினேன். பதிலுக்கு அவள்: ஆமா, என்னடா இது சாதமே காணோம்?

54 கருத்துகள்:

  1. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிரம்பிய வாழ்க்கை தொடர இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. மாமா பெண் சொன்னதை அப்படியே
    ஆதரிக்கிறேன்.
    அங்கேயும் சொன்னேன். இங்கேயும் சொல்கிறேன்.
    வாழ்வின் முக்கிய அங்கமான சாதத்தை விட்டுக் கொடுக்க மனமில்லை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுக் கொடுக்கவும் முடியாது. ஆனால் ஒருவேளை கூடவா?!

      நீக்கு
    2. நாங்க முன்னெல்லாம் அப்படித்தான் இருந்தோம். இப்போதெல்லாம் மதியம் சில நாட்கள் உப்புமாவோ, சப்பாத்தியோ மட்டும் பண்ணிக் கொள்வது உண்டு. முக்கியமாய் ஏகாதசி எனில் அன்று அரிசி உப்புமா இருக்கும்.

      நீக்கு
    3. பூவை புய்ப்பம்னு சொல்றதும் சாதம். தேங்காய்சாதம் அரிசியுப்மா. எல்லாம் ஒரே ஜல்லிதான். அரிசியை உடைச்சா உபவாசமா?

      நீக்கு
    4. தேங்காய் சாதம் சாப்பிடக் கூடாது விரத நாட்களில். அரிசியை உடைச்சுச் சாப்பிடுவதை தர்ம சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதைப் பற்றி விரிவாகச் சொல்லணும். இப்போ ராத்திரிக்கு என்னோட சோதனையை ஆரம்பிக்கப் போகணும். வரேன் அப்புறமா! திக், திக், திக்!

      நீக்கு
    5. பெண்கள் சமையலறையில் செய்யும் சோதனைகள் ஆண்களுக்குத்தானே திக் திக். ஹாஹாஹா

      நீக்கு
    6. வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!

      நீக்கு
  6. வண்ணங்கள் நிறைய இருக்கும் இந்த கலவை
    அதிகம் நன்மை தரும்.

    கண்ணுக்குக் குளுமை. வயிற்றுக்கு ஆதரவு.
    முக்கால் வயிறு நிரம்பினால் மீதிக்கு
    ததியோன்னம் சாப்பிட்டு விடலாம்.
    நன்றி அன்பு துரை.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்று அதிகரிப்பதும்/குறைவதுமாக இருக்கிறது. முற்றிலும் குறைந்து அடியோடு ஒழிந்து அனைவரும் எப்போதும் போல் அச்சமின்றி (தொற்று குறித்த) வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. இந்த மாதிரி மிக்சட் சாலட் பண்ணி அன்னிக்குக் காய் ஏதும் பண்ணாமல் ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கலாம். ஆனால் இங்கே (திருச்சியில் மஞ்சள், சிவப்புக் குடமிளகாய் கிடைப்பதில்லை!) பிஞ்சுச் சோளமும் போட்டுக்கலாம். இதே போல் மற்றக் காய்களும் சேர்த்து வெஜிடபுள் ஊறுகாயும் பண்ணலாம். பூண்டு பிடிச்சவங்க அதையும் சேர்த்துக்கலாம். :)))))

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம். ஆரோக்கியமான உணவுக்கு நன்றி.
    படமும், செய்முறையும் சிறப்போ சிறப்பு!

    பதிலளிநீக்கு
  10. ஹை! சலாட்!! காய்க் கலவை வதக்கல்??!! சூப்பர்!!! அடி பொளி!

    எனக்கு மிகவும் பிடித்தது எல்லாக் காயும் கலந்த சலாட். இப்படி வதக்கியோ அல்லது பச்சையாகவோ சாதம் இல்லாமல் சப்பாத்தி ப்ரெட் எதுவும் இல்லாமல் இப்படியானதை வைத்தே ஓட்டிடுவேன்!! (நான் மட்டும் என்றால்)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுனாலத்தான் நாங்க பெண்கள் சுலபமாச் செய்யும் உப்மா நூடுல்ஸ் சாலட் போன்றவைகளை ஒத்துக்கறதில்லை ஹாஹா

      நீக்கு
  11. ஒன்று, சூடான பதார்த்தத்தில் தேன் கலக்கக் கூடாது. தேன் கலந்து கொதிக்கக் கூடாது என்று ஆயுர்வேதம் சொல்கிறதே, மறைந்த எங்கள் குடும்ப ஆயுர்வேத மருத்துவர் சொன்னது.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சூடான பதார்த்தத்தில் தேன் கலக்கக் கூடாது..//

      தேன் மட்டுமல்ல.. தயிர், மோர் கூடத் தான்!//

      நீக்கு
    2. தேனைச் சூடே பண்ணக் கூடாது.

      நீக்கு
    3. ஆமாம்... அதுனாலத்தான் காதல் மிகுதில. தேனேன்னுலாம் கொஞ்சிட்டு அப்புறம் நாம கடுப்படிச்சா சூடாகி தேளாயிடறாங்க

      நீக்கு
    4. தேன் சூடு பண்ணினா என்ன ஆகும்? மேற்கத்தி உணவில் சூடான தேன் சேர்க்கிறார்களே?

      நீக்கு
    5. இப்பத்தான் google கவனிச்சேன். தேனை நேரடியாக சூடு செய்தால் விஷம்னு போட்டிருக்கானே? பாவிகளா!

      நீக்கு
  12. அடடா... தங்கம் தோண்டி எடுத்தால்...

    மாமாவின் பெண், ஒரே பதிலில் அடித்து தூக்கி விட்டார்கள்...!

    "எப்போதும் சாதத்தை காய்கறிகள் போல்... ம்ஹீம்... ஊறுகாய் போல எடுத்துக் கொள்ளவும்" என்ற மருத்துவரின் ஆலோசனை காற்றில் பறந்து வந்து செவியில் விழுந்தது...!

    பதிலளிநீக்கு
  13. மிக்ஸ்ட் வெஜிடபுள் பொரியலை செய்து விட்டு அதை இங்கே சாலட் என்று சொல்லுறீங்களே அதனால்தான் மாமா பெண் சாதம் எங்கே என்று கேட்கிறார்கள்...




    பதிவை பாரா பாராவாக பிரித்து இடைவெளிவிட்டு பதிந்து இருந்தால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எழுத்தும் மிகச் சின்னதாக வந்திருக்கு. பெரிசு பண்ணிப் படிச்சேன். :(

      நீக்கு
    2. salad போல் எல்லாமும் கலந்து கட்டி பதிவாகியிருக்குது. ஏனென்று தெரியவில்லை.

      நீக்கு
  14. // சூடான பதார்த்தத்தில் தேன் கலக்கக் கூடாது.. //

    நம்ம ஆளுங்க வெள்ளரிப் பிஞ்சுகளையும் வதக்கி வச்சி அடிக்கிறாங்க...

    பதிலளிநீக்கு
  15. // தேன் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும்.. //

    தேன் என்பது உண்மையில் உணவுப் பொருள் அல்ல..

    அது மருந்துப் பொருள்..
    தானும் கெடாது.. தன்னைச் சேர்ந்தவைகளையும் கெடுவதற்கு விடாது..

    தேனுடன் உப்பு என்பது தகாத விஷயம்..

    அது போல தேனும் நெய்யும் சேர்ந்தால் நஞ்சு என்பது ஆன்றோர் சொல்லி வைத்த மருத்துவக் குறிப்பு..

    இங்கு தான் நெய் சொல்லப்பட வில்லையே என்றால் -

    இதனுடன் சொல்லப் பட்டிருக்கும் வெண்ணெய்..

    சூடான பாத்திரத்தில் வெண்ணெயை இட்டால் தான் அது நெய்யாக உருமாற்றம் ஆகி விடுமே!..

    கவனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பஞ்சாமிர்தத்தில் நெய்யும், தேனும் கலக்கிறாங்களே! !!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  16. காலையில் நான் கவனக் குறைவுடன் எழுதியிருந்த கருத்தினை நீக்கி விட்டேன்..

    பத்தி பிரிக்கப்படாத பதிவை சரியாகப் படிக்காதது என்னுடைய தவறு..

    பதிலளிநீக்கு
  17. சலட் சோட்டே இரண்டுக்கும் இடைப்பட்டதா எதுவாக இருந்தாலும் மரக்கறிகள் சேர்வதால் சத்துதான்.

    பதிலளிநீக்கு
  18. பதிவைப் படித்தால், மனைவியை புலாவோ இல்லை வெஸ் பிரியாணியோ செய்யச் சொல்லிவிட்டு பாதியில், இவ்வளவு தாமதமாகும்னா நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்னு கோச்சுக்கிட்டு அரைகொறையா தயாரானதை தட்டுல போட்டு சாப்பிடற ஃபீலிங் வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! நெல்லை! இன்னிக்கு ஒரு பரிசோதனை செய்யறேன். நேத்தே பண்ணி இருக்கணும். இன்னிக்குப் பதிவு போட்டிருக்கலாம். நேத்திக்கு என்னமோ முடியலை. இன்னிக்கு ராத்திரி அந்தச் சோதனையில் வெற்றியா/தோல்வியா என்பது தெரியும்.

      நீக்கு
  19. மசாலா சேலட் செய்முறையும், சேலட் படமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. இன்னிக்கு என்னப் பதிவு காத்தாட இருக்கு??????????????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குக் காரணம்,,, சமையல் செஞ்சவர்.. சாப்பாடு ரெடி. மேசைல வச்சுட்டேன் யாருக்கு வேண்டுமோ எடுத்துப்போட்டு சாப்டுக்குங்க .. எனக்கு வேற வேலையிருக்கு. என்று சொல்ற ஃபீலிங் வரதுனால இருக்குமோ? ஹிஹிஹி

      நீக்கு
    2. ஆமாம், அப்பாதுரை எட்டிக்கூடப் பார்க்கலையே!

      நீக்கு
    3. மறந்தே போனேன். (kgg மாமனிதர்)

      நீக்கு
  21. //ஆமா, என்னடா இது சாதமே காணோம்?// ஹாஹா...

    குறிப்பு நன்று. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!