மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 3
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
அமானுஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமானுஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20.8.24
9.9.21
முதுமைக்காலம்
மறுநாள் பொழுது விடிந்தது.
இதுவரை குறுக்கிடாமல் அவன் சொல்வதை என் மனக்கண்ணால் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது ஆர்வம் தாளாமல் ஸ்ரீயிடம் கேட்டேன்...
"அவுக, அம்மா என்றெல்லாம் சொல்றியே.. யாரு ஸ்ரீ அது?"
"நானே சொல்ல மாட்டேனா ஸார்... அவசரப்படறீங்களே... தெரியாமலா இருக்கப் போகுது?"
"அட, இப்பவேதான் சொல்லேன்.."
"அந்தந்த இடம் வரும்போது தெரியட்டும்னு நெனச்சேன் ஸார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்..."
5.2.11
அமானுஷ்ய அனுபவங்கள்
இருப்பவர்களைப் பற்றிப் பேசுவதில்லை நாம். இல்லாதவர்களைப் பற்றி சிந்திக்க சில நேரம் அவசியம் வந்து விடுகிறது!
சமீபத்தில் மனைவி வழி உறவினரில் ஒரு மூத்த உறுப்பினர் மறைந்தார். மனைவிக்கு அவர் மேல் மிகுந்த ப்ரியம். கோவிலுக்கு போகும்போது இறைவன் பிரதிமை மேல் அவர் உருவம் தெரிந்ததாகச் சொன்னார்!சில வருடங்கள் முன்பு நான் வீட்டில் தனித்திருந்த சமயம். எல்லோரும் வெளியூர் சென்றிருந்தார்கள். இரவு பன்னிரண்டரை மணி இருக்கும். தூக்கத்தில் இருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மச்சினன் ஒருவன் "கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கோங்க அத்திம்பேர்" என்று சொன்ன மாதிரி இருந்தது. தள்ளிப் படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டேன். யாரையும் காணோம். ஏதோ பிரமை என்று திரும்ப தூங்க முற்பட்டேன்.
நீங்கள் நினைப்பது சரிதான்...ஃபோன் அடிக்கத் தொடங்கியது. எடுத்தேன்.
ஏதோ ஜுரம் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த (அதுவே எனக்குத் தெரியாது) என் மச்சினன் எதிர்பாரா விதமாக சற்றுமுன் இறந்து போனதாக தகவல் வந்தது. அப்புறம் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது! (காலை கிளம்பிப் போனேன்)
ஆத்மாவுக்கு ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது என்பார்கள். உடல்தான் அழிகிறது ஆத்மா கர்மபலன்களை அனுபவித்து விட்டு அடுத்த உடலில் புகுவதற்குத் தயாராகி விடுகிறதாம். இறந்தவர்கள் உயிருடன் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்றும் சொல்வார்கள்.
முந்தின ஜென்மம் ஞாபகம் வந்த இந்த ஜன்மத்துக்காரர்கள் பழைய இடங்களைத் தேடி அலைந்ததையும் படித்திருக்கிறோம்.
வட நாட்டில் குடியானவச் சிறுவன் ஒருவன் வேற்று பாஷை பேசி வந்ததையும் அப்புறம் அர்த்தம் தெரிந்த போது தன்னுடைய தாய், தந்தை, மனைவி பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஊரில் இருப்பதாகவும் சொல்லி வந்தானாம். அங்கே போய்ப் பார்த்த பொழுது அது உண்மை என்று தெரிந்ததோடு, அந்த வீட்டில் இருந்த வாலிபன் மாட்டு வண்டியில் வந்த போது கனரக வாகனம் மோதி இறந்ததாகவும் அப்போது பட்ட காயத்தின் வடு இந்த சிறுவனின் உடலில் பிறந்தது முதல் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.
கிட்டத் தட்ட இதே போல சம்பவத்தை நேற்று டிஸ்கவரி சேனலில் கூட காட்டினார்கள். அவன் ஒரு ஸ்ரீலங்காச் சிறுவன்.
ஆத்மா விரைவில் அடுத்த சட்டை போட்டு விடும் நிலையில், அதாவது அடுத்த உடம்பில் புகுந்து விடும் என்றால் எப்படி தற்போதைய உறவினர்களைத் தொடர்பு கொள்ளும்? சில பல பிறவிகளை எடுத்த ஆத்மா தொடர்பு கொள்ள அழைத்தால் எந்த கணவன் எந்த மனைவி என்று குழம்பிப் போகாதா?
ஒரு பழைய அனுபவம்...
விடுமுறை நாள்..
அலுவலகத்தில் யாரும் இல்லை. பகல் நேரம்தான். காலை பதினோரு மணிக்குமேல் இருக்கும்.
உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது முன் ஹாலில் இருந்து ஏதோ சத்தம். கதவை லேசாக அறைந்து சாத்துவது போல.. தொடர்ந்து யாரோ நடந்து வருகிறார்களோ என்று மிக லேசான சத்தம் அல்லது பிரமை.
இரண்டு மூன்று முறை அபபடி ஆனதும் எழுந்து போய் பார்த்தேன். நீண்ட ஹால். எல்லா அறைக் கதவும் மூடியிருந்தன. முன் வாசல் மூடி உட்புறம் தாழிடப் பட்டிருந்தது. பாத் ரூம் வரை சென்று உள்ளே யாரும் இருக்கிறார்களா என்றும் பார்த்து விட்டு, ஜன்னல் கதவுகள் சரியாகத் தாழிடப் பட்டிருக்கின்றனவா என்றும் சோதித்துத் திரும்பினேன். ஒரு அறையைத் தாண்டும்போது வித்யாசமான வாடை ஒன்றை நாசி உணர்ந்தது.
உட்கார்ந்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் சத்தம். கதவை வேலை முடிந்து யாரோ மூடிப் பூட்டுவது போல ஆனால் தெளிவில்லாமல். நான் எனக்கு வந்த அழைப்பில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ வருவது போல உணர்வு. திரும்பி ஹாலைப் பார்த்தால் யாரும் இல்லை!
தொலைபேசியில் பேசிய நண்பரிடம் சொன்னேன். சிரித்தார். சமீபத்தில் அலுவலகத்திலேயே செத்துப் போன இரண்டு அலுவலர்களின் பெயர்களைச் சொன்னார்.
பேசிக் கொண்டே மீண்டும் எழுந்து செக் செய்து திரும்பினேன்.
"யார் கூடவாவது பேசிக் கொண்டே வேலை செய்தால் இப்படி பிரமை இருக்கும்..வைத்து விட்டு வேலையைப் பார்" என்றார்.
வைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மறுபடி யாரோ நடமாடுவது போல, ஜன்னலில் நின்று என்னை நோக்குவது போல உணர்வு. நிமிர்ந்து பார்த்தால் யாரும் இல்லை.
வேலையைத் தொடர்ந்தாலும் ஒரு சிறு அவஸ்தை இருந்தது.
எழுந்து கதவைத் திறந்து வெளியில் வந்து சாலையை நோக்கினேன். நார்மல். எல்லோரும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள்.... இயல்பாக. அந்த வெளிச்சமும் சுறுசுறுப்பும் பார்த்தபோது உள்ளே உணர்ந்த அனுபவம் அபத்தமாக இருக்கவே, மறுபடி அறைக்குத் திரும்பினேன்.
மீண்டும் மீண்டும் இதே அனுபவம். மறுபடி நண்பர் தொலைபேசி நிலைமையைக் கேட்க, சொன்னேன். பேசாமல் கிளம்பிச் சென்று விடு என்றார். கிளம்பி சாவியை எடுக்க முன்னறைக்கு சென்றால் என் முதுகில் மூச்சு விடும் உணர்வு. திரும்பினால் யாரும் இல்லை.
கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பி விட்டேன். பூட்டும்போது கூட முதுகுக்குப் பின்னால் ஒரு குறு குறு...
பிறகு தொடர்ந்த நாட்களில் பழகி விட்டது. மற்ற ஊழியர்களும் ஒரொரு சமயம் இது மாதிரி உணர்ந்திருப்பதாகச் சொன்னார்கள்.
மருத்துவமனையில் பணிபுரியும் என் சகோதரியிடம் இதைப் பகிர்ந்து கொண்ட போது பிரசவ வார்டின் அருகிலும், ஆபரேஷன் தியேட்டர் உள்ளும் சில சமயம் யாரும் இல்லாத இடத்தில் கேட்கும் அழுகுரல்கள் பற்றி சொன்னாள்.
இன்னொரு நண்பர் அவர் பங்குக்கு உதகை அலுவலகத்தில் வேலைபார்த்தபோது இரவில் தங்கி வேலை பார்த்த ஒரு சந்தர்ப்பத்தில் வந்த அனுபவம் சொன்னார்.
பற்பல வருடங்களுக்கு முன்னால் செத்துப் போன எட்டாம் ஹென்றி அந்த அரண்மனையில் வேலை பார்த்த காவலாளிகளை தீ விபத்து ஏற்படாமல் அரூபமாய் எச்சரித்த சம்பவத்தை டிஸ்கவரியில் காட்டினார்கள். செக்யூரிட்டி அறையைப் படமெடுக்கும் கேமிரா ஒரு தொப்பி அணிந்த நிழலுருவத்தின் நடமாட்டத்தைப் படமெடுத்திருப்பதைக் காட்டினார்கள்.
இத்தனை வருடங்களாக அவர் மறுபிறவி எடுக்காமல் இருக்கிறாரா? சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் இருக்கிறாரா? டவுட்டு#
(எங்கள் கமெண்ட்: இதை, 'அப்படியே பப்ளிஷ் செய்யலாமா அல்லது திருத்தங்கள் ஏதாவது செய்யலாமா' என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், வாசலில் ஒரு சிறு குழந்தை 'பப்பளிக்கா' என்று சொல்லியது காதில் விழுந்தது. எனவே - அப்படியே பப்ளிஷ் செய்ய முடிவெடுத்து, இதோ ......)
18.12.10
பயமா பாசமா...
பெரியப்பா இறந்து விட்டார் என்று தெரிந்தபோது சாந்தி அதிர்ந்துதான் போனாள்.
பெரியப்பா மகன் குமார்தான் ஃபோன் பேசினான்.

ஒரு சிறு விபத்து என்பதற்காக முதலில் ஒரு மருத்துவமனையிலும், பின்னர் அங்கே ரொம்பக் காசு பிடுங்குகிறார்கள்என்று தோன்றியதாலும், அங்கே சிகிச்சை பார்க்க வந்த மருத்துவர்கள் மிக இள வயதினராகத் தெரிந்ததாலும் சில பேரை யோசனை கேட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். கணுக்காலில் ஒரு சிறு எலும்பு முறிவு அவளவுதான். ஆனால் இந்த மருத்துவமனையிலோ நோயாளியை பார்க்க உறவினர் நண்பர் என்று யாரையும் விடாமல் மறைத்து வைத்திருந்தது சோதனையாக இருந்தது.
பிபி அதிகமாக இருந்தது என்று அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள். இவருக்கானால் வயது ஐம்பத்தாறு ஆனாலும் பிபி சுகர் என்று ஏதும் கிடையாது.
உறவினர்களை யாரும் பார்க்க முடியாத டென்ஷனில் அவர் கத்த, ஒரு வழியாய் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அப்போதும் யாரையும் உள்ளே விடவில்லை. இரண்டு நாளில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்த நிலையில் இப்போது இப்படி ஒரு ஃபோன்.
"என்னடா ஆச்சு?"
"இல்லக்கா...எல்லாம் சரியாதான் இருக்குன்னாங்க...அப்பா கிட்ட ஃபோன்ல கூடப் பேசினோம். நல்லாத்தான் பேசினாரு..என்ன ஆச்சோ...ரெண்டு மணி நேரத்துல ஃபோன்...க்ரிடிகல்னாங்க...ஹை பிபின்னாங்க..." திணறித் திணறிப் பேசினான் குமார். அழுகையில் புதைந்த அவன் குரல் பல இடங்களில் தெளிவில்லாமல் இருந்தது.
"அப்புறம்.." சாந்தி குரல் நடுங்கியது. "சொல்லுடா...என்ன ஆச்சு சொல்லு..எப்படி இப்படி...அவருக்கு ஏதுடா பிபி?"
மறுமுனையில் குமார் குரலெடுத்து அழுதான். "தெரியலையேக்கா ... ஒருவேளை நம்மளை யாரும் பார்க்கவே விடாத டென்ஷன்லேயே BP ஏறிடுச்சோ என்னவோ தெரியலையே..."
"பெரியம்மா எங்கேடா?"
"உண்மையை இன்னும் சொல்லலைக்கா... இங்கதான் இருக்காங்க...நீங்களும் வாங்க...அம்மாவுக்கு ஆறுதலா இருக்கும்"
சாந்தி அங்கு போனபோது கணவர் இறந்தது தெரியாமல் அவர் கையைத் தடவியபடி "கவலைப் படாதீங்க...பெரியபாளையத்தம்மன் உங்களைக் கை விட மாட்டாங்க...காப்பாத்திடுவாங்க" என்று சொல்லிக் கொண்டிருந்த பெரியம்மாவைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது. குமாரிடம் சொல்லி உண்மையை உடனே எடுத்து சொல்லச் சொன்னாள்.
அப்புறம் நடந்தது எல்லாமே இப்போது நினைக்கும்போது வேகமாக நடந்தது போலவும் அப்போது யோசிக்கும்போது மிக மெதுவாக நடந்தது போலவும் உணர்வு.
தன வீடு வந்து விட்டாலும் அவ்வப்போது தொலைபேசியில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டே இருந்தாள் சாந்தி. ஆறுதல் சொல்லிக் கொண்டே இருப்பாள். பெரியப்பா தினமும் புதிதாகக் காய்கறி வாங்கி வருவது, நறுக்கித் தருவது, ஊறுகாய் போடுவது எல்லாவற்றையும் நினைவு படுத்தி சொல்லிச் சொல்லி அழுதாள் பெரியம்மா.

"ஏம்பா ஆறுதல்ங்கற பேர்ல பெரியம்மாவை அழ விடறே.." என்று சாந்தியின் கணவன் கூடக் கடிந்து கொண்டான்.
பத்தாம் நாள் காரியம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பற்றி பேச சாந்தி அன்றும் பெரியம்மாவுக்கு தொலைபேசினாள்.

"சாந்தி...சாந்தி...நானே ஃபோன் செய்யணும்னு நினைச்சேன்.."
பெரியம்மாவின் குரலில் பதட்டம் இருந்தது. ஆனால் கிசுகிசுப்பாக இருந்தது.
"என்ன பெரியம்மா" ஆச்சர்யத்துடன் கேட்டாள் சாந்தி.
"சாந்தி..சாந்தி...அது...பெரியப்பா..." குரல் வரவில்லை பெரியம்மாவுக்கு.
"சொல்லுங்க.."ஊக்கினாள் சாந்தி.
"எப்படிடி சொல்றது...பயமா இருக்கு...காலைல எழுந்து பல்லு விளக்கிட்டு குமார் கிட்ட ஏதோ சொல்றதுக்காக ஹாலுக்கு வந்தேனா..." பெரியம்மா மூச்சை இழுத்துப் பிடிப்பது தெரிந்தது. குரலில் நடுக்கம் இருந்தது.
"அட சொல்லுங்க பெரியம்மா..."
"ஹால்ல அவர் உட்கார்ந்திருக்கார்டி...."
"எவர்?" சாந்தி குரலில் எதிர்பார்ப்பு எகிறியது. விடை தெரிந்துவிட்டது போல ஒரு நடுக்கம் உடம்பில் ஓடியது. வரப் போகும் பதிலை நம்ப முடியாது என்று மனதில் எண்ணம் தோன்றியது.
"உன் பெரியப்பாடி..." குரலில் நடுக்கமா, பயமா எதுவென்று சொல்ல முடியாமல் கிசுகிசுப்பாய் வார்த்த்தைகள் விட்டு விட்டு வந்தன.
"பெரியம்மா உளறாதீங்க...குமார் எங்க...அவன் கிட்ட ஃபோனைக் குடுங்க..."
"அவன்....அவன்... அங்க இருக்காண்டி...வர மாட்டான்.." இலேசான அழுகையுடன் வந்தது பெரியம்மா குரல்.
"எங்க...எங்க இருக்கான்...என்ன பெரியம்மா..என்ன ஆச்சு உங்களுக்கு...வேற யார் இருக்கா அங்க..."
"குமார்...அவர் எதிர்ல உறைஞ்சிப் போய் உட்கார்ந்திருக்கான். அவர் கைல கன்னத்துல காயம்லாம் இருந்ததே அதைக் காணோமடி..."
சாந்தியால் நம்ப முடியவில்லை. பேச்சு வரவில்லை. அவள் கணவர் கூட மின் மயானத்துக்கு சென்று வந்து ஆஜானுபாகுவான பெரியப்பா உடல் ஒன்றரை மணி நேரத்தில் வெறும் சாம்பலாக பெட்டியில் கலெக்ட் செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே......பெரியம்மாவுக்கு புத்தி பேதலித்து விட்டதோ...உளறுகிறாளே ...
"காய் கொண்டு வா நறுக்கனுங்கறார்... நாயை அவுத்து வெளில விடச் சொல்றாரு...யாருக்கும் பேச்சே வரலை..."
ஃபோனை கையால் மூடிக் கொண்டு கணவனிடம் சொன்னாள்.
நடந்ததைக் கேட்ட அவள் கணவனும் நம்பவில்லை.
சிரித்தான்.
சாந்தியின் செல் ஒலித்தது. அவள் பேசிக் கொண்டிருந்தது லேண்ட் லைனில்.
செல்லில் "Periyappa calling.." என்று வர சாந்தி திகைப்புடன் அதை நோக்கினாள்.
"பெரியம்மா! பெரியப்பா செல் யார் கிட்ட இருக்கு..எனக்கு அதிலேருந்து கால் வருது.." என்றாள் லேண்ட் லைனில்.
"அவர் கைலதாண்டி இருக்கு...யாருக்கோ அடிச்சிகிட்டு இருந்தார்...உனக்குத்தானா..ஐயோ ஃபோனை வச்சிடுடி...பயமா இருக்கு..."
இப்போது செல்ஃபோன் தானாகவே அட்டென்ட் செய்யப் பட்டது. அதிலிருந்து பெரியப்பா குரல் ஒலித்தது.
"என்ன சாந்தி...என்ன நம்ப மாட்டேங்கறே...பெரியம்மா கிட்ட என்ன சந்தேகம் உனக்கு.."
"நான்...நான்...பெரி...பெரி..." குரல் குழற லேண்ட் லைனை அதன் இடத்தில் சாத்தினாள் சாந்தி.
செல்ஃபோன் ஆஃப் ஆக, சாந்தியின் கணவன் "சா...ந்தி..." என்று பதட்டத்துடன் கிட்டத்தட்ட அலறினான்.
திரும்பி ஹாலைப் பார்த்தவள் கண்கள் இருண்டன. சோபாவில் பெரியப்பா.

"என்ன மாப்பிள்ளை..பேச மாட்டேங்கறீங்க..... நாந்தான் நம்புங்க..."
".........................."
"சொல்லுங்க மாப்பிள்ளை...என்னமோ சொல்ல வரீங்க...வாயைத் திறந்து திறந்து மூடினா என்ன அர்த்தம்?"
"கன்னத்துல காயத்தைக் காணோமே..." என்னமோ பேச நினைத்து பேசாமல் இருக்க முடியாமல் உளறினான் சாந்தியின் கணவன்.
"அதுவா...இதோ...." என்று இடது கன்னத்தை கொசுவை விரட்டுவது போலத் தட்ட, அங்கே ஒரு காயம்...
"என்ன...காய்கறி நறுக்கவா...எங்கே காய்..என்ன காய் வச்சிருக்கீங்க...அதென்ன மாப்பிள்ளை கன்னத்து காயத்தையே பார்க்கறீங்க.."
"இந்தப் பக்கம்...இந்தக் கன்னத்துலதானே காயம் இருந்தது....காய்...ஒண்ணும் இல்லை... நறுக்க வேணாம்...நானே...நானே..."வாய் குழற குழற உளறினான் சாந்தி கணவன்.
"இதுல என்ன பிரச்னை மாப்பிள்ளை...இந்தக் கன்னமா...இதோ..."என்ற பெரியப்பா இடது கன்னத்தை தடவி, வலது கன்னத்தில் ஓட்டுவது போல தட்ட, காயம் அங்கே தோன்றி சிவப்பு நிறம் தோன்றியது.
சாந்தி கணவன் மயக்கமானான் . சாந்தி ஏற்கெனவே மயக்கமாகியிருந்தாள்.
படங்கள் : நன்றி கூகிள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
