எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வாரப் பாஸிட்டிவ் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வாரப் பாஸிட்டிவ் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.11.14

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.



1) மாற்றி யோசித்த மாதேஸ்வரன்.
 

 
2) இந்த ஆரம்பம் இவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டுபோகட்டும். 9ம் வகுப்பு மாணவன் எஸ். பிரணவ்கிருஷ்ணா.
 

 
3) சொந்தத்தில் திருமணம் வேண்டாமே என்பது செய்தி. அவர்களின் மன உறுதி பாஸிட்டிவ் செய்தி. கண்ணன் - ஜெயபாரதி  தம்பதியர்.
 

 
4) சத்தமில்லாத சேவை செய்யும் பொன்னுத்தாய்.
 

 
5) அம்மையார் குப்பம் பட்டதாரி இளைஞர்களின் சாதனை. பொட்டல்காட்டை மூலிகை வனமாக்கினார்கள்.
 




6) மாடுகளுக்கும் பயன். மனிதர்களுக்கும் பயன். மடிநோய்க்கு செலவில்லாத, எளிய மருந்து கண்டுபிடித்து, அதற்காக ஜனாதிபதி விருதும் பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்.

 

 
7) கண்ணைக் கொடுக்கவில்லை. குரலைக் கொடுத்தான். நம்பிக்கையைக் கொடுத்தான். பார்வைக் குறைபாட்டை வென்ற திவாகர். படிப்பிலும் முதல்.
 

 
8) சுதாகரன். நம்ப முடியாத அளவு நேர்மையாளர்.



26.10.13

பாஸிட்டிவ் செய்திகள்


1) படிக்கவில்லை. ஆனால் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். குறைந்த செலவில் மின்சாரம் உட்பட புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் சுப்பிரமணியம்.
                                    

2) சம்பளத்துக்காக மட்டும்தான் வேலையா? இல்லை என்கிறார் புதுமைப் பெண் பிரான்சிஸ் ஆரோக்கிய மேரி!
                                                    


3)  சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமுர்த்தி என்ற இளைஞர் 2012 கான "rolex award" ஐ சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் பெற்றுள்ளார் .  

                                                    
 

இவர் முன்பு கூகிள் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தார். அதை துறந்து விட்டு ஒரு சுற்று சூழல் பாதுகாக்கும் நிறுவனத்தை சென்னையில் நிறுவி, அதை வேறு இரண்டு இந்திய மாநிலங்களிலும் விரிவு படுத்தி உள்ளார், இவரது தொண்டு நிறுவனத்தில் 900கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இலவசமாக வேலை செய்கின்றனர்.

அவருக்கு rolex நிறுவனம் அளித்த பரிசு தொகையான "50'000 சுவிஸ் பிராங்குகளை" அதாவது "2'993'792.70 ரூபாய்களை சென்னையில் உள்ள கீழ்கட்டளை பெரிய ஏரியை சீர் அமைக்க பயன்படுத்துவார். இவருக்கு நாமும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.


அந்த இளைஞரின் தொடர்பு விபரம் :
Arun Krishnamurthy:
9940203871, 9500043483, 9884737757
Mail us at: arunoogle@gmail.com, efievents@gmail.com
 
4) இது ஒரு பாஸிட்டிவ் செய்தியா என்று நீங்கள் நினைக்கலாம். ஏற்கெனவே இதய நோயை 80 களிலேயே எதிர்த்து நின்று இது வரை தாக்குப் பிடித்திருக்கிறார், இந்த 90 வயதில் வந்திருக்கும் புற்று நோயை எண்ணி மனம் தளராமல் மிகுந்த பாஸிட்டிவாக இருக்கும் இவரைப் பார்த்து மற்றவர்களுக்கும் தைரியம் வரலாமே. நாகேஸ்வர ராவ்
                                                 
 
5) அரசாங்கத்தை நம்பாமல், நடமாட முடியாத நிலையிலும் கூட, ஏற்கெனவே நடத்தி வரும் ஆதரவோற்றோருக்கான ஆறுதல் நிழலைத் தரும் திரு சிவப்பிரகாசம் பற்றிய செய்தி. 89 இல் சின்னதா ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலா இருக்கு. 2004-ல் சாலை விபத்தில் சிக்கி இவர் படுத்த படுக்கையாய் ஆனாலும், பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் போன்றவர்கள் உதவியோடு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல மனிதர்.
                                      
 
6) அடுத்தவரைச் சொல்வதை விட, நாமே செய்து காட்டினால் நல்ல உதாரணமாக இருக்கும் என்று செய்து காட்டி மாணவர்களை வழி நடத்தும் பாசிட்டிவ் ஆசிரியர் ஜோதிமணி
                                            
 
7) சட்டம் படித்திருந்தால்தான் சட்ட நுணுக்கங்கள் தெரியுமா என்ன? இல்லை கோர்ட்டில் தனக்கு வாதாடிக் கொள்ள சட்டம் படித்திருக்க வேண்டுமா?  இல்லை என்று நிரூபிக்கும் பெரம்பலூர் எளம்பலூர் ராஜேந்திரன், அதை மக்களுக்கும் எடுத்துரைக்கிறார்.
                                          

 
8) ஈர நெஞ்சம் அமைப்பினரின் இன்னொரு நற்செயல். செய்யப்பட்டு துரத்தி விடப்பட்டு நடக்க இயலாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்த அவரின் நிலையைகண்டு B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தது.
                                                    

ஸ்ரீராமலுவை விசாரித்ததில் அவர் இரயில்வே துறையில் பணியாற்றியதும் மேலும் அவருக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை கேட்டு தனது மகன்கள் சித்ரவதை செய்து கைவிடப்பட்டதும் தெரியவந்தது. யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கு ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார்.
 
 
9) சாதனை ஆட்சியாளர் சகாயத்தின் இன்னொரு சாதனை. 'சத்து' இல்லாத துறையில் அவரைத் தூக்கிப் போட்டது அரசு. ஆனால் அங்கும் தன்னால் என்ன முடியும் என்று நிரூபித்திருக்கிறார். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கோ ஆப்டெக்சை நம்பிக்கையுடன் புதிய திட்டங்களால் நிமிர்த்தி இருக்கிறார். (நேரடிச் செய்திக்காக 'தி இந்து' பக்கத்தில் தேடித் தேடித் தேடி... கிடைக்காததால் இந்த லிங்க்!)