பனீர் க்ரேவி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனீர் க்ரேவி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.2.16

திங்கக்கிழமை 160229 :: பனீர் க்ரேவி.


 நாங்க பனீர் கிரேவியை இதுவரை...
கல்யாண விருந்துல சாப்பிட்டிருக்கோம்..
நண்பர்கள் வீட்டுல சாப்பிட்டிருக்கோம்
ஆபீஸ் பார்ட்டிகளில் சாப்பிட்டிருக்கோம்..
ஏன்,
ஹோட்டலில் கூடச் சாப்பிட்டிருக்கோம்..
ஆனா எங்க வீட்டில் செய்ததில்லை..
(சிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வரும் அல்ப தேர்தல் விளம்பரங்களும் நினைவுக்கு வருகிறதா)

எனவே நண்பர்களே..
ஸ்ரீராம் வீட்டுச் சமையலறை வரலாற்றில் முதல் முறையாக
புழக்கத்துக்கு வந்து பல வருடங்கள் ஆகியும்
இதுவரை நாங்கள் செய்யாமலிருந்த
(வெங்கட் நாகராஜ் உள்ளிட்ட சக பதிவர்களின் ரெசிப்பிகளைக் குறித்து வைத்திருந்தும்)
பனீர் பட்டர் மசாலாவை நாங்கள் செய்து சாப்பிட்டு விட்டோம்...  செய்து சாப்பிட்டு விட்டோம்...செய்து சாப்பிட்டு விட்டோம்...
முதல் முறை இப்படி மிக எளிமையாகச் செய்து விட்டாலும், எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளை வைத்து ஒவ்வொரு முறையாக இனி முயற்சிக்க வேண்டும்!

5 பெரிய வெங்காயம், நாலு தக்காளி, ஒரு பூண்டுக் கொத்து, கொஞ்சம் இஞ்சி ஆகியவற்றை தனித்தனியே மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டோம்.
வாங்கி வந்திருந்த பனீரைத் துண்டுகள் போட்டுக் கொண்டோம்.  வாணலியில் கொஞ்சம் வெண்ணெய் வைத்து அதில் பனீரைப் போட்டுத் திருப்பி எடுத்து வைத்துக் கொண்டோம்.

கால்கிலோ பனீருக்கு 2 அல்லது இரண்டரை ஸ்பூன் காரப்பொடி போதும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம் தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக முறையே இஞ்சி, 


பூண்டு, 





வெங்காயம், 





தக்காளி


ஆகியவற்றைப் போட்டு
, காரம், உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டு,  புரட்டி நன்றாக எண்ணெய் / வெண்ணெய் பிரியுமளவு கொதிக்க வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பனீரை அதில் போட்டு,  ஒரு கொதி வந்தவுடன்,

ஃபிரெஷ் க்ரீம் அதில் சேர்த்து,  மீண்டும் ஒரு கொதி வந்ததும்
இறக்கிச்...





சப்பாத்தியுடன் சாப்பிட்டு விட்டோம்!


(இறக்கும்போது இதில் கஸூரி மேதி போடுவார்களாம்.  எங்களிடம் அது இல்லை.  எனவே போடவில்லை!)
படங்கள் முன்னே பின்னே மாறியிருப்பதற்கு மன்னித்துக் கொள்ளவும்!