JK;s thoughts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JK;s thoughts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.9.11

ஜே கே - 20. சமூக சேவையும் தன்னை அறிதலும்.

                    
உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதனே உண்மையில் புரட்சியாளன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனிதனோ அல்லது தன்னுடைய உண்மையான நிலையிலிருந்து தப்பிக்க விரும்பும், இதயத்தில் துயரம் நிறைந்த மனிதனோ புரட்சியாளன் அல்ல. தமக்கென்று பல உடைமைகளைக் கொண்டவனை இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதன் என்று நான் கூறவில்லை. உள்ளத்திலும், இதயத்திலும் மகிழ்ச்சியும், களிப்பும் நிறைந்த மனிதனே உண்மையில் சமய உணர்வுள்ள மனிதன். இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த இப்படிப்பட்ட சமய உணர்வுள்ள மனிதன் வாழும் முறையே சமூகத்திற்கு அவன் செய்யும் சேவையாகும். 

ஆனால் உலகில் உள்ள பல ஆயிரக்கணக்கான சமூக சேவகர்களைப் போல நீங்களும் மாறினால் உங்கள் இதயத்தில் களிப்பு இருக்காது. உங்களிடம் உள்ள பணத்தை ஏழை எளியோருக்கு தானமாக அளிக்கலாம், மற்றவர்களையும் அவர்களுடைய பணத்தையும் செல்வத்தையும் உங்களுடைய தூண்டுதலினால் ஏழை, எளியோருக்குத் தருமாறு வற்புறுத்தலாம். இந்த சமூகத்தில் பல பிரமிக்கத் தக்க, அற்புதமான சீர்திருத்தங்களை நீங்கள் கொண்டு வரலாம். ஆனால் உங்கள் இதயம் சாரமில்லாமல், வெறுமையாக இருக்கும் வரை, உங்கள் மனதில் கோட்பாடுகளும், அர்த்தமற்ற கருத்துகளும் நிறைந்திருக்கும்வரை, உங்கள் வாழ்வு மந்தமாகவும், தளர்ச்சியைடைந்தும், களிப்பில்லாமலும் இருக்கும். ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்.