7.7.16

160707 என்ன, எது, எவை - எங்கள் பதில்கள்!

                                                            Image result for answers
     
எங்கள் பதில்களைச் சொல்வதற்கு  முன்பு, உங்கள் பதில்களை ஆராய்வோம்!




Ananya Mahadevan said...
ஒரு G, நாலு T.Originality யாமா! :D. பாக்கியெல்லாம் பெப்பே தான்!

கரெக்டு! பாராட்டுகள் அனன்யா !! வெரி குட். கீப் இட் அப். 

Ananya Mahadevan said...
முதல் கேள்வியே ஒரே குழப்பம். MC போட்டுட்டு ஒரு டப்பா இருக்கு. இதுல வினாக்குறி இருக்கற இடத்தை கண்டு பிடிக்கணுமாம். கிட்னிய யூஸ் பண்ணனும் போல்ருக்கே?
Ananya Mahadevan said...




1. E ஹிஹி

முதல் பதில் ஆறு  பத்துக்கு. சரியான பதில் ஆறு பன்னிரெண்டுக்கு. ரெண்டே நிமிஷத்தில் கிட்னிய  யூஸ் பண்ணிட்டாங்க. அப்புறம் போட்டிருக்கிற ஹி ஹி தான் எங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. அவருக்கே அந்த பதில் சரிதானா என்கிற சந்தேகம் வந்திருக்கும் என்று தோன்றியது. மகாதேவர் உதவியிருப்பாரோ?

Srimalaiyappanb sriram said...
௧. mca = ? போலருக்கு , d முன்னாடி e அப்போ f முன்னாடி g யா இருக்குமோ

மூன்றாவது கேள்விக்கு விடை காண முயன்ற முதல் வாசகர். பாராட்டுகள். வாழ்த்துகள். விடையை, இவைதான் அந்த இரண்டு எழுத்துகள் என்று அடித்துச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (எங்கள் விடை கொஞ்சம் வில்லங்கமானது. பதிவின்  கடைசியில்  சொல்கிறோம்)

1) X is the answer.
M = 1000.
C = 100
X = 10
Roman numerals.

வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறார். பாராட்டுக்கள். பிறகு இவரே சரியான பதில் கூறியிருக்கிறார். நன்று.

Madhavan Srinivasagopalan said...
3) E, F -- Reason, english alphabets in order. even an lkg student can answer this way..

இதையும் பிறகு சரியாக சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். இன்னும் இல்லை. எங்கள் பதிலைப் படித்துவிட்டு, போர் தொடுக்க, முதல் ஆளாக வருவார் என்று நினைக்கின்றேன். 

3. E F

2. T

1.

முயற்சிக்கு வாழ்த்துகள். இரண்டாம் பதிலை காரணம் கூறியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
அடுத்த வாரம் வெற்றிபெற வாழ்த்துகள். அடுத்த வாரம் எல்லா கேள்விகளும் சுலபமாக பதில் கூறும்படி அமைத்திருக்கின்றேன்.

வல்லிசிம்ஹன் said...
mc square is equal to E.
ABC E DBC

முதல் பதில் சரியானது.
மூன்றாவது கேள்விக்கு, ஒரு லாஜிக் சொல்லி பதில் கூறியிருக்கிறார். ஏற்றுக்கொள்வோம்.

G.M Balasubramaniam said...
முதல் புதிர் MC SQUARE= ? SOMETHING TO DO WITH PHYSICS.?
மூன்றாவது abCde FG
இரண்டாவது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஒன்று ஓ கே. பழைய பாடங்களை ஞாபகம் வைத்துள்ளார்.
மூன்றாவது a b C d e FG  என்று சொல்லியிருக்கிறார். நாங்கள்  A B C E D _ _  என்றல்லவா சொல்லியிருக்கோம்.
இரண்டாவது கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அது சரிதான் ! ஆனால் அது எப்படி என்று ஏதாவது ஒரு லாஜிக் சொன்னால் நன்றாக இருக்குமே!
ஜி எம் பி சாரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

Angelin said...
2, T

TTTTT = till they TELL the truth.

நல்ல பதில். லாஜிக் சேர்த்து. வாழ்த்துகள் - புதிய கோண சிந்தனைக்கு.

மாடிப்படி மாது said...
1. Y
2. A
3. F, G

விடை சரியா இருந்தா, விளக்கம் சொல்கிறேன்....!!!

மாது சார்! விளக்கத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கலாம். நாங்க ஏற்கெனவே சொல்லியிருப்பது போல, சரியான விடை தவறான விடை என்று எதுவும் கிடையாது. நிறைய சரியான விடைகள் உண்டு. அதை நாம் லாஜிக்கோடு சொன்னால் போதும்!


Anandaraja Vijayaraghavan said...
E= m c square..

T

FG.

ஆ வி வித்தியாசமான கோணத்தில் யோசிக்கும் திறன் படைத்தவர். அவர் அவசரமா சிந்தித்திருக்கிறார் என்று தெரிகிறது. முதல் கேள்விக்கு முழு மதிப்பெண்கள்.
இரண்டாம் கேள்வி பதில் வித்தியாசமாக இல்லை. மூன்றும் அப்படியே!

ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.


இப்போ எங்கள் பதில்கள். (மீண்டும் ஒருமுறை கூறுகின்றேன். இவைதான் சரி மற்றதெல்லாம் தவறு என்று யாரும் நினைக்கவேண்டாம். லாஜிக்கோடு சொல்லியிருந்தால், உங்கள் பதில்களும் சரியே!) 

1) E (Einstein)
 Image result for e = mc2 einstein

2) G (Oru G Naalu T) (Originality)  
  
3) GH 
இதற்கு எங்கள் விளக்கம் கொஞ்சம் வில்லங்கமானது. 'டி' க்கு முன்னாடி 'இ' போனதைப் பார்த்த 'F' என்ன பண்ணிச்சுன்னா .... டி கிட்ட போயி, "டி டீ , இ மட்டும் உனக்கு முன்னாடி போயிடுச்சே, என்னையும் முன்னாடி போகவிடு" என்று சொல்லியது. 

ஏற்கெனவே இ முன்னாடி போன கடுப்பில் இருந்த டி என்ன பண்ணிச்சுன்னா எஃப் ஐப்பார்த்து, " அது முடியாது போடா @*#$&(beep beep) என்னை டி போட்டு பேசறியா? மடையா Fool.... " என்று திட்டிடுச்சு. 

 F உடனே  கோபம் வந்து, அருவாள்  வாங்குவதற்காக அவசரமா கிளம்பிப் போயிடிச்சு.  
   
அதனால, G H இரண்டும்  D க்கு அருகே வந்து நின்னுகிட்டு இருக்கு. 

(எங்கே கிளம்பிட்டீங்க? ஆட்டோ ஸ்டாண்ட் க்கா? ஆட்டோ அனுப்பப் போறீங்களா! எஸ்கேப்) 

Image result for auto rickshaw clipart
  

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! 
    




6.7.16

புதிர் 160706 :: என்ன? எது? எவை?



1)     கீழே காணப்படும் படத்தில், வினாக்குறி  வருகின்ற இடத்தில் வரவேண்டிய ஒற்றை ஆங்கில எழுத்து என்ன ? 
  

2)   கீழே  காணப்படும் படத்தில், ஆரம்ப ஆங்கில எழுத்து எது? 


3)  கீழே காணப்படும் படத்தில், அடுத்து  வருகின்ற  இரண்டு எழுத்துகள் எவை? ஏன்? 

  

  கேள்விக்குத் தக்க விதத்தில்,  என்ன பதில் வேண்டுமானாலும்,  யார்  வேண்டுமானாலும்  சொல்லலாம். தப்பு, சரி என்று எதுவும் இல்லை. யாரையும்  பெஞ்சு மேல ஏறி நிற்கச் சொல்லமாட்டோம். 
     
முக்கியக் குறிப்பு:  ஒவ்வொரு  கேள்விக்கும்  நிறைய  விடைகள், சரியான விடைகள் இருக்கலாம். மற்றவர்கள்  சொல்லிவிட்டார்கள், நானும்  அதையே  சொல்லநினைத்தேன்  என்றெல்லாம் எஸ்கேப்  ரூட் தேடாமல், எல்லோரும் நல்லா அடிச்சு ஆடுங்க! பெஸ்ட் ஆஃப் லக்! 
        
    

5.7.16

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஏறி வந்த ஏணி




          எங்கள் பிளாக்கின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் மரியாதைக்குரிய ஜி எம் பாலசுப்ரமணியம் ஸார்  கதை இடம் பெறுகிறது.


         அவரின்தளம் gmb writes.


          ஜி எம் பி ஸார் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அவரின் தளத்துக்கு நண்பர்கள் அனைவரும் ரசிகர்களே.  முன்பொருமுறை "பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தால் ஸ்ரீராம் எங்கள் பிளாக்கில் "கேட்டு வாங்கிப் போட்டு" இருப்பார்"  என்று தனது ஒரு பதிவில் எழுதி இருந்தார்.  ஏற்கெனவே பத்திரிகையில் பிரசுரமான ஆப்ஷன் முடிந்தவுடன் வலையுலக நண்பர்களைக் கேட்பதற்காகத்தான் இருந்தேன்.  இப்போது ஸாரிடம் கேட்டும் வாங்கி விட்டேன்.


          இந்தக் கதை பற்றிய அவரின் முன்னுரையும், தொடர்ந்து அவரின் படைப்பும்.


================================================================


          "கதைகள் புனையப்படும்போது  அதன் பின்னணியில் நாம் சந்தித்த மாந்தர்கள் இருக்கலாம் நம்மை பாதித்த நிகழ்வுகள் இருக்கலாம் நான் அனுப்பிய இந்தக் கதையில் என்னை பாதித்த நிகழ்வு நாய்க்குச் சோறு ஊட்டுவது. என்னை முன்னிலைப் படுத்தி  எழுதும்போது கற்பனை கை கொடுக்கிறது கதையைப் படித்த பலரும் இது உண்மை நிகழ்ச்சி பொல் இருப்பதாக அபிப்பிராயப்பட்டார்கள்அதை என் புனைவின் வெற்றியாகக் கருதுகிறேன் நான் எழுதும்போது பெரும்பாலும் என் கற்பனையே என்னை வழிநடத்தும்படியாக இருக்கும்"


====================================================================== 





ஏறி வந்த ஏணி 

ஜி எம் பாலசுப்ரமணியம்



ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன்,பேருக்காக

பேப்பரை புரட்டியபடி.வாசல் பக்கம் யாரோ வந்தமாதிரி
இருந்தது.சடாரென்று எழுந்துபோய்ப் பார்த்தால் அங்கே,


அங்கிள், உங்களைத் தேடிக்கொண்டு ஒருத்தர் எங்கள்
வீட்டுக்கு வந்திருக்கிறார்.கீழே வரச் சொன்னாலும் வர
மாட்டேன் என்கிறார்.என்ன செய்ய...”என்று கூறிக்கொண்டு
உள்ளே வந்தாள் மாடிவீட்டுச் சிறுமி.

என் மனைவி அந்தப் பெண்ணுடன் சென்றாள். சிறிது நேரத்த்தில்
நண்பன் சேகரனுடன் கீழே இறங்கி வந்தாள்.வந்த சேகரன்
“தொப்”பென்று அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தான். பிறகு ஒரு
அசட்டுச் சிரிப்புடன்,  “ தெரியாமல் மேல் வீட்டுக்குப் போய்
விட்டேன். நீங்கள் யாராவது வந்து கூட்டிக் கொண்டு வருவீர்கள்
என்று தெரியும் . அதனால்தான்....”என்று கூறினான். அவன்
பேச்சும் நடவடிக்கையும் அவன் குடித்திருக்கிறானோ என்று
சந்தேகப் பட வைத்தது. சைகையால் என் மனைவியிடம்
கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.

சேகரன் களைப்புடன் காணப்பட்டான். “ நான் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக் கொள்கிறேன்.பிறகு பேசலாம் “ என்று சோஃபாவில்
இன்னும் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

“ காஃபி டி ஏதாவது குடிக்கிறாயா, இல்லை நேராகவே சாப்பிட
லாமா “என்று கேட்டேன்

“சே ..சே.. ஒண்ணும் வேண்டாம்..இப்போதுதான் சாப்பிட்டு
வந்தேன் “..அவன் சொல்லும்போதே அது பொய் என்று
தெரிந்தது.

என் மனைவி எதுவும் கேட்டுக் கொண்டிருக்காமல் அவனுக்கு
சாப்பாடு எடுத்து வந்து , முன்னால் ஒரு ஸ்டூலில் வைத்துச்
சாப்பிடச் சொன்னாள். அவனும் கொஞ்ச தயக்கத்துக்குப்
பிறகு வேக வெகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

சேகரன் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபோர்மேனாகப்
பணியாற்றி வந்தான்.சில மாதங்களுக்கு முன்பு அந்த
வேலையை விட்டுவிட்டு தனியாக ஏதோ தொழில் தொடங்கி
இருப்பதாகக் கூறியிருந்தான். தன் மனைவி, மகன் மகளுட்ன்
நன்றாகவே இருப்பதாகவும், ஒரு வீடு கட்டிக் கொண்டு
இருப்பதாகவும் கூறியிருந்தான். என்ன ஏது என்று துருவிக்
கேட்கும் பழக்கம் இல்லாதிருந்ததால் , மேற்கொண்டு எதுவும்
எனக்குத் தெரிய வில்லை. மகன் பெரியவன் டிகிரி முடித்து
வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், பெண்
அப்போதுதான் படிப்பு முடித்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன்
என்னதான் வேண்டப் பட்டவர்களாக இருந்தாலும் சில கால
கட்டங்களில் அன்னியர்கள் போலத்தான் வாழ வேண்டி
உள்ளது.எது எப்படியிருந்தாலும் ஏதோ நல்ல படியாக இருக்
கிறார்கள் என்னும் சேதியே எல்லோரும் கேட்க விரும்புவது.

நான் சென்னைக்கு வரும்போது இரண்டு மூன்று நாட்கள் என்
மகனுடன் தங்குவேன். குறிப்பாகச் சொல்லப் போனால் ,
அத்தியாவசியமல்லாமல் எங்கும் போக மாட்டேன். கம்ப்ளீட்
ரெஸ்ட் தான்.

உணவு உட்கொண்டதும் சற்றே தெம்புடன் எங்களைப் பார்த்து
நலம் விசாரிக்க ஆரம்பித்தான். அவன் எங்களைப் பார்த்துப்
பேசிய விதத்தில் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய என்ன
என்று கேட்டேன்.

“ எனக்கு ஒரு கண் சரியாகத் தெரிவதில்லை.சக்கரை வியாதி
என்று சொல்லுகிறார்கள் “

”டாக்டரிடம் காட்டிகண்ணுக்குக் கண்ணாடி வாங்கிக் கொண்
டிருக்கலாமே “,என்றேன்

“ இப்போது அது ஒன்றுதான் குறைச்சல் “,என்று முணு
முணுத்தான்.

” என்னையா, என்னாச்சு,?ஏதாவது ப்ராப்ளமா.?தொழில் எல்லாம்
சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது ? “.

“ தொழில் என்று ஏதாவது இருந்தால்தானே சரியாகப் போக.”

“என்ன சொல்றெ நீ.?சொந்தத் தொழில் செய்வதாகத்தானே
சொல்லிக் கொண்டிருந்தாய்.வேலை என்னாயிற்று.?”

“ பின் என்னங்க..வேலை இல்லை சும்மா இருக்கிறேன் என்றா
சொல்லிக் கொள்ள முடியும்.”

“ வேலையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு தொழில் செய்வதாக
சொல்லிக் கொண்டிருந்தாயே”

“அதெல்லாம் சும்மா. VRS-ம் வாங்கலை, தொழிலும் செய்யலை.
என்னை அனுப்பி விட்டார்கள் “

“ அடடா...15/-வருஷத்துக்கு மேலா வேலையில் இருக்கும்
உன்னை எப்படி அவர்கள் அனுப்ப முடியும்.?”

“நான் வேலையிலிருந்தது ஒரு தனியார் தொழிற்சாலை-ன்னு
உங்களுக்குத் தெரியும்.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
அனுப்பிவிடலாம். ஒன்றும் கேட்க முடியாது.”என்று சொல்லிக்
கொண்டு வந்தவன் கூறியதிலிருந்து,

மெக்கானிக்காகச் சேர்ந்தவன் ஃபோர்மனாகப் பதவி உயர்வு
பெற்று நன்றாகவே இருந்தான். ஒரு முறை வாடிக்கையாளர்
களுடனான ஒரு மீட்டிங்கில் இவனும் கலந்து கொண்டிருந்த
போது, வந்தவர்களுக்கு தண்ணீரும் காஃபியும் கொடுக்க
இவனுடைய அதிகாரி இவனிடம்கூறியிருக்கிறார். “நான்
என்ன ப்யூனா.. ஆஃபீஸ் பாயா...நனொரு ஃபோர்மன் என்னால்
முடியாது “ என்று இவன் கூறியிருக்கிறான். வந்தவர்கள்
முன்னால் எதிர்த்து வாயாடிய இவனுக்கு கல்தா கொடுத்து
விட்டார்கள்.இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் எல்லோரிடமும் வீ.ஆர். எஸ் -ல்வந்து விட்டதாக
கூறி வந்திருக்கிறான்.

தன்னிலை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஈகோவும் அகம்
பாவமும் அவனை அலைக் கழித்துக் கஷ்டப்பட வைத்து
விட்டது. போதாக் குறைக்கு தொழிற்சாலையில் கிடைத்த
பணத்தில்வீடு கட்டத் துவங்கி முடிக்க முடியாமல் திண்டாடிக்
கொண்டிருந்தான். அங்கும் இங்கும் கடன் வாங்கி வட்டியும்
கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் நான்
சென்னை வந்தது எப்படியோ தெரிந்து , விலாசம் வாங்கி
என்னை காண வந்திருக்கிறான்.

“ சரி.. விஷயத்துக்கு வா ,”என்றேன்.

“என் பையனின் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும். இரண்டு
நாள்தான் இருக்கிறது. வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி
வேறு கட்ட வேண்டும்”

“பையன் டிகிரி முடித்து விட்டான் என்றல்லவா சொல்லி
இருந்தாய்.”

“எங்கே முடித்தான்...அரியர்ஸ் இருக்கிறது “

“எவ்வளவு பணம் தேவைப்படும்.?”

” இப்போதைக்கு ஒரு மூவாயிரம் தேவைப் படும்.”

”  இந்த மூவாயிரத்தால் உன் கஷ்டங்கள் தீர்ந்து விடுமா.?”

“கஷ்டம் எங்கே தீரும்...இப்போதைக்கு சமாளிக்கலாம்.
அவ்வளவுதான் “

“ நான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன். என்னிடம் அவ்வளவு
பண்ம் இல்லை.ஊருக்குப் போன பிறகு வேண்டுமானால்
முயற்சிக்கலாம். ஆனால் அது உன் பிரச்சனைக்குத் தீர்வு
ஆகாது. ‘என்று நான் சொன்னதும் அவன் முகம் வாடி விட்டது.

“ நம்பிக்கையோடு வந்தேன் “ என்றான்.

“ நீ எங்கிருக்கிறாய்.?உன் விலாசம் சொல்லு. நான் உன் வீடு
வந்து உன் மனைவியையும் மக்களையும் பார்க்க வேண்டும் “
என்றேன்.விலாசம் கொடுத்தான். திருவொற்றியூரிலிருந்து
வந்திருந்தான்.

“ நீ எப்படி வந்தாய்.. உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது”
என்று கேட்டேன்.

”எப்படி எப்படியோ வந்தேன் “என்று சொல்லி ஒரு ஐந்து ரூபாய்
நாணயத்தைக் காண்பித்தான்.

ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது.அது போகாத இடத்துக்கு
டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த
நிறுத்தத்தில் இறங்கி விடுவது இப்படியே இவ்வளவு தூரம்
வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான்.எனக்குப் பாவமாக
இருந்தது. என்னிடம் அப்போது இருந்த ரூ.500/- ஐ அவனிடம்
கொடுத்து, அவனை வீட்டில் பார்ப்பதாகக் கூறி அனுப்பி
வைத்தேன்.

அடுத்த நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் அங்கே
இருக்கவில்லை. அவன் மகன் ஸீக்ஸ்பாக் உடம்புடன் இருந்தான்
போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு முயற்சிப்பதாகக்
கூறினான். அவனுக்கு எந்தக்கவலையும் இருப்பதாகத் தெரிய
வில்லை.அப்பாவுக்கு சக்கரை வியாதியால் கண் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரியுமா என்று கேட்டபோது, அவருக்கு வயசாகி
விட்டது என்று விட்டேத்தியாக பதில் கூறினான். அவனது
மனைவியோ வீட்டில் இருந்த நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டு
இருந்தாள். சற்று நேரத்தில் பெண் வந்தாள்.சூட்டிகையான பெண்
போல் காணப்பட்டாள் வேலைக்கு முயற்சி செய்வதாய்க்
கூறினாள்.பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்
பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் என்று தோன்றியது.
நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை
விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது எனத்
தோன்றியது. அப்போது அங்கு வந்த சேகரன் என்னைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்தான்..எனக்கு அவனைப்பார்க்கப் பாவமாக
இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்
இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே
என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.

நல்ல வேளை ..அப்போதே எனக்குத் தெரிந்த நண்பனுக்குப்
ஃபோன் போட்டு, ( அவன் ஒரு எம்ப்ளாய்மெண்ட் கன்சல்டன்சி
வைத்திருந்தான்.) சேகரனின் மகளுக்கு வேலைக்கு ஏற்பாடு
செய்ய முடியுமா என்று கேட்டேன். அதிர்ஷ்டவசமாக,மறுநாளே
வந்தால் ஒரு வேலையில் சேரலாம் என்றான்.இந்த
மகிழ்ச்சியான சேதியை அவர்களிடம் கூறி விடை பெற்றேன்.

சேகரன் இறந்து பத்து வருடங்கள் ஓடி விட்டன. அன்றைக்கு
வழி காட்டப்பட்ட பெண் நன்றாக இருக்கிறாள்.மகனும் ஏதோ
வேலையில் இருக்கிறான்.இருவருக்கும் மணமாகி விட்டது.
அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.யாருக்காவது சேகரனைப் பற்றிய
நினைவோ,ஏறி வந்த ஏணிபற்றிய எண்ணமோ இருப்பதாகத்
தெரியவில்லை.

4.7.16

திங்கக்கிழமை 160704 :: வாழைப்பூ வடகறி!



          இதை வடகறி என்றும் சொல்லலாம், உசிலி என்றும் சொல்லலாம்.
 
 





          எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வதில்லை.  காரணம் இதை இதழ் இதழாக உரித்து, கள்ளனை நீக்கி,  நறுக்கப் படும் பாடு.  அது நச்சு வேலையாம்!  என்ன செய்ய, நமக்கு இதுதானே பிடிக்கிறது!  உசிலின்னா அது வாழைப்பூ உசிலிதான்.  எனக்கு பீன்ஸ், கொத்தவரை, குடைமிளகாய் உசிலியெல்லாம் பிடிப்பதில்லை.
 
 



          வாழைப்பூவில் தேங்காய் சேர்த்தும் இன்னும் பலவிதங்களிலும் கறி செய்யலாம்.  உடம்புக்கு வாழைப்பூ எவ்வளவு நல்லது என்று சொல்லவே வேண்டாம்.  உங்கள் எல்லோருக்கும் என்னை விட அதிகமாகவே தெரியும்.
 
 







          உரித்துக்கொண்டே செல்லச்செல்ல, உள்ளே இருக்கும் இதழ்களை எடுப்பதுவும், பிரிப்பதுவும், நறுக்குவதும் ...
 
 


          ... நெம்பக் கஷ்டமுங்க...  அதனால் ஒரு ஸ்டேஜில் பாக்கி இருக்கும் வாழைப்பூவை...
 
 


          ..... அப்படியே சாப்பிட்டு விடுவேன்!

          வாழைப்பூவை இதழ் உரித்து, உள்ளே மறைந்திருக்கும் பூக்களை கொத்தாக தலையைப் பிடித்து வெளியில் இழுத்து, அதன் தலையில் உள்ளங்கையால் பரபரவென தேய்த்தால் இதழ் விரியும்.  
 
                                        
 
 
 
          நடுவில் வயிற்று வலியை உண்டாக்கும் கள்ளன் விழிப்பான்.  அதை அடியோடு கிள்ளி எடுத்து ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு, மற்றவற்றை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியிலிட்டு புரட்டிக் கொள்ளவும்.
 
 
                                        


          சம அளவு துவரம்பருப்பு,  கடலைப்பருப்பை (நிறைய பேர்கள் து. ப மட்டும்தான் போடுவார்கள்) ஊறவைத்து எடுத்து கொண்டு, காரம் தேவைப்படும் அளவு காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து வாணலியிலில் எண்ணெய் விட்டு இதை போட்டுப் புரட்டி வறுத்துக் கொண்டு, 
 
 


          தனித்தனியாக உள்ள வாழைப்பூ, வடகறி இரண்டையும் ஒன்று  சேர்த்து எடுத்துக் புரட்டவும்.   இறக்கி வைக்கவும்.  தட்டில் போடவும்....
 
 
          சாப்பிடவும்.


பின்குறிப்பு  :   முடிந்தவரை படங்களை 


ரி
சை
யா

க் 

கொடுத்திருக்கிறேன்.

2.7.16

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்





          இன்றைய இளைஞர்களின் சமூகப் பார்வை அபாரமாய் மாறிக் கொண்டு வருகிறது.  உதவும் எண்ணம் என்பது அவர்களிடம் அதிகம் என்பதை சமீபத்து சென்னை வெள்ளத்தில் பார்த்தோம்.  தமிழ் நாடு மட்டும் அல்ல, நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இது மாதிரி இளைஞர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டி இருக்கிறது.  ஒருவர் தொடங்கி வழி காட்டினால், அந்தப் பாதையைச் செம்மைப்படுத்தி இன்னும் சிறப்பாகச் செய்ய பலர் வருவார்கள்.




          நாம் சம்பாதிக்கும் பணத்தைப் பலவகையிலும் செலவு செய்து மகிழலாம்.  எது அதிக மகிழ்ச்சியைத் தரும்?  அடுத்தவர் கஷ்டத்தைத் தீர்த்து வர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிப் புன்னகையைப் பார்க்கும்போது உண்டாகும் சந்தோஷம்..  





          பசியை விடக் கொடியது தாகம்.  அந்த தாகத்தைத் தீர்க்க ஸ்ரீகாந்த் ஜாதவ் தனது குறைந்த வருமானத்திலிருந்து செய்யும் முயற்சிகள் உண்மையிலேயே மனதை நெகிழ வைப்பதாய் இருக்கின்றன.  அவர் தந்திருக்கும் விளம்பரத்தைப் பாருங்கள்..



His number is displayed on the card that he distributes in slum areas; the card says, “If you are struggling for drinking water then just make one call to get free drinking water.”



          இந்தச் செய்தி கடைசியில் கிடைத்தாலும், இன்றைய பாஸிட்டிவ் செய்திகளின் முதலிடத்தைப் பெறும் செய்தியாய் என் மனதில் தங்கி விட்டது.  


        

           அந்த இளைஞனின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை?  உங்களுக்குள்ளும் ஒரு சந்தோஷப் புன்னகையை மலர வைக்கவில்லை?




1)  நன்றி சைதை அஜீஸ், princes' of hell, குங்குமம்!




2)  ஆங்கோர் ஏழைக்கு...



3)  ஆளில்லா நூலகம்.  கே ஆர் மகேந்திர குமார்.





4)  "மரங்களை நட்டு பூமியைப் பாதுகாப்போம், ஏனெனில் பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது' என்ற வாசகத்தை முன்னிறுத்தி குப்பை கொட்டும் இடத்தை பசுஞ்சோலையாக மாற்றியுள்ளனர் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் மக்கள்.






 

5)  அறியாத ஜீவன்களுக்கு இல்லம் வேண்டும்!

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி திருத்தி, குளிப்பாட்டி, உடையும், உணவும் கொடுத்து, மறுவாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வராஜ்.





6)  "......இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டினரிடமும் இருந்து நன்கொடையாக வசூலித்த மொத்தம் ரூ.5.50 லட்சத்தில் 2 வகுப் பறைகளிலும் ஏ.சி., மின்விசிறி களைப் பொருத்தினோம். சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளை ஏற்படுத்தியதுடன், கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினோம்...."





புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசுப் பள்ளியை புதுப்பித்து, மாணவர் சேர்க்கையில் ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிக் காட்டியுள்ளனர்.