18.9.15

வெள்ளிக்கிழமை வீடியோ 150918 & சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7

           


                  
சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7  


இந்த ஊரில் தமிழ் பேசுபவர்கள், தமிழ் தெரிந்தவர்கள் அதிகம். அதனால இதுல விசேஷமா எதுவும் இல்லை.
           
கட்டிடத் தொழிலாளர்கள் தொடங்கி காய்கறிக் கடைக்காரர் வரை எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள்.
             
ஏதேனும் கல்யாண மண்டபத்தில் உறவினருக்கு நண்பர் அல்லது நண்பருக்கு நண்பர் என்று பார்த்துப் பேசி இருப்பேனோ? ஊஹூம் - உறவினர்களிடமே அதிகம் பேசாதவன் என்று எனக்குப் பெயர்.
       
ஏதாவது ரயில் சிநேகமாக இருக்குமோ? சான்ஸ் இல்லை. 
    
(இது என் படம் இல்லை!) 


ரயிலில் நான் தனியாக வரும்பொழுதெல்லாம்  ஒன்று புத்தகம் படிப்பேன் அல்லது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பேன். இல்லையேல் கண்ணை மூடிக்கொண்டு ஆத்மவிசாரம் பண்ணிக்கொண்டு வருவேன்! (திருமதியுடன் வரும்பொழுது திருமதியின் பேச்சு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கும்!)
             
எனக்கு அவரைத் தெரியவில்லை என்று இருக்கும் பொழுது, அவருக்கு மட்டும் எப்படி என்னைத் தெரிந்திருக்கும்?

(தொடரும்)
       

17.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7


சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7  
 
    
இதோ இந்த ரவுண்டில் அவரருகே சென்ற சமயம் .....

அவருடைய அலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

"ஹலோ ஆமாம் .... தெரியும், தெரியும், சொல்லுங்க. ஓ அப்படியா! ...... " தொடர்ந்து பேசிக்கொண்டே என்னைப் பார்த்துத் தலை அசைத்தார். மீண்டும் புன்னகை.

தமிழ் பேசுகிறார்! தமிழ் தெரிந்தவர். இது எங்காவது என் மூளையில் பெல் அடிக்கிறதா என்று பார்த்தேன்.

ஊஹூம். மண்டை காய்கிறது. யார் அவர்?

(தொடரும்)

       

16.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் .... 3/7



     சொல்லாதே யாரும் கேட்டால் ...  3/7
   
ஒருவேளை ... முன்பே  எங்காவது பார்த்து, பேசி இருப்பேனோ?

சில சமயங்களில், தபால்காரரை அவருடைய யூனிஃபாரம் அல்லாத உடையில் அல்லது சலவைக்கடைக்காரரை சலவைக்கடை அல்லாத பிற இடங்களில் பார்த்தால் எனக்கு சட்டென்று ஞாபகம் வராது.

இவருக்கு விதவிதமாக யூனிஃபாரம் மனதால் போட்டுப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. வேறு ஏதும் ஞாபகம் வரவில்லை.

'அடுத்த ரவுண்டில் அவரையே கேட்டுவிடுவோமா?' என்று எண்ணமிட்டபடி, நடந்தேன்.

(தொடரும்)
        

15.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் 2/7



                                                 சொல்லாதே யாரும் கேட்டால்    2/7
            
  

இரண்டாவதுச் சுற்று வரும்பொழுது சந்தேகமாக அவர் இருந்த திக்கில் பார்த்தேன்.

மீண்டும் புன்னகை.

'எனக்குப் பின் பக்கத்தில் யாராவது வருகின்றார்களா?' என்று திரும்பிப் பார்த்தேன்.

யாரும் இல்லை.

அப்போ, என்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கின்றார் போலிருக்கு.

எதற்கும் இருக்கட்டும் என்று பதில் புன்னகை ஒன்றை வீசிவிட்டு நடைப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

(தொடரும்)  

14.9.15

'திங்க'க் கிழமை 150914 கடலை (வடை) போடக் கற்றுக்கொள்ளுங்கள் + சொ யா கே ... 1/7


வாங்க எல்லோரும் வரிசையாய். 

உங்களுக்கு கடலை வடை போடக் கற்றுத் தருகின்றேன் 

கடைக்குச் சென்று, இதெல்லாம் வாங்கிகிட்டு வாங்க:

பொட்டுக்கடலை : (Fried gram) : கால் கிலோ.
பச்சை மிளகாய் : ஐந்து.
பெரிய வெங்காயம் : மூன்று.
முந்திரிப்பருப்பு : பத்து.
கச முசா ஓ சாரி --- கச கசா  (poppy seeds) ஒரு மேசைக் கரண்டி. (சின்ன பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு மே க அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்) 
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு. 
பொடி உப்பு :தோராயமாக இரண்டு மேசைக்கரண்டி. (சுவைக்கேற்ப மாறலாம்) 
ஒரு தேங்காய் மூடி. 
கொஞ்சம் கொத்தமல்லித் தழை. 

நல்லெண்ணெய் : கால் லிட்டர்.

பொட்டுக்கடலையை மிக்சியில் இட்டு, தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றை பொடிப்பொடியாய் அரிந்து கடலைப்பொடியில் போடவும். முந்திரிப்பருப்பு, கசகசா, தேங்காய்த்துருவல் இவற்றையும் மிக்சியில் அரைத்து, கடலைமாவில் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து, வடை மாவு பிசைந்துகொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், வடைகளை ஒவ்வொன்றாகத் தட்டி, எண்ணெயில் இட்டு, இருபுறமும் திருப்பி, பொன்னிறமாகப் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
      
(இது கூகிளில் சுட்ட வடை) 

கடலை வடை தயார். 
   ============================================================

சொல்லாதே யாரும் கேட்டால் ... 1/7  

பெங்களூரு.

ஒரு பொன்மாலைப் பொழுது.

பார்க்கில் அதிகக் கூட்டம் இல்லை.

முகநூல், ட்விட்டர், ப்ளாக் என்று பல்வேறு சிந்தனைகள் பின்தொடர, பார்க்கில் சுற்றி வந்துகொண்டிருந்தேன்.

பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருவர், என்னைப் பார்த்து முறுவலித்த மாதிரித் தோன்றியது.
  
(இது அவர் படம் இல்லை)

(தொடரும்) 
     

13.9.15

ஞாயிறு 323 மா ஜா மு! கே கே 7/7

                       
 
  

கேட்டது கேட்டபடி - இறுதிப்பகுதி.
     

"நான் முன்பு ஒரு தடவை வந்தப்போ சின்னம்மா அருமையான சுக்குக் காபி தயார் பண்ணிக் கொடுத்தாங்க. அதைக் குடித்தபின் தலைவலி, உடல்வலி, ஜலதோஷம் எல்லாம் போயே போச்சு. அன்றிலிருந்து சுக்குக் காபின்னா சின்னம்மா தயார் செய்து கொடுத்த அந்த சுக்குக் காபிதான் நினைவுக்கு வருது. சின்னம்மா எங்கே? "

"இதோ சமையலறையில்தான்  இருக்காங்க. சின்னம்மா - இங்கே வாங்க. முகுந்தன் சாருக்கு சுக்குக் காபி வேணுமாம்."

"அஞ்சே நிமிஷத்துல கொண்டு வரேன் அய்யா" என்று சமையல்கார சின்னம்மா சொன்னார்.

"அட ஜானகீ! இங்கேதான் இருக்கியா! ஆபீசிலேருந்து வந்துட்டியா! ஓஹோ இன்று சனிக்கிழமை! உங்க கம்பெனி அரை நாள்தான் வேலை! அதை மறந்துவிட்டேன். வா வா உன் ரூமுக்குப் போகலாம். உன்னிடம் தனியா கொஞ்சம் பேசணும்."

ஜானகியின் பதிலை எதிர்பார்க்காமல் ஜானகியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஜானகியின் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டான் முகுந்தன்.

"முதல் விஷயமா உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். உன்னுடைய தோழி மோகனா பற்றி நான் அடித்த கமெண்ட்தான் உன் கோபத்திற்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்தமாதிரி பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு."

"பெரிய வார்த்தைகள் எல்லாம் நீங்க என்னிடம் ........"

"முதலில் இந்த நீங்க வாங்க போங்க என்ற மரியாதை வார்த்தைகளை மறந்துவிடு ஜானகி. "

"சரி."

"அப்புறம், நான் உன்னிடம் பிரபோஸ் செய்யலாம் என்று வந்திருக்கின்றேன். உன்னுடைய முழுச் சம்மதத்தைப் பெற்றால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உன் அண்ணன் சொல்லிவிட்டான்!" 

"பிரபோஸ்? என்ன பிரபோஸ்?" 

"பிசினெஸ்." 

"பிசினெஸ் !"

"ஆமாம்டா ஜானகிராமா! நீயும் உன் அண்ணனும் சேர்ந்து இங்கே மா ஜா எண்டர்ப்ரைசஸ் கம்பெனியை சிறப்பாக நடத்தி வருகின்றீர்கள். இந்த கம்பெனியின் மலேசியக் கிளையைத் தொடங்கி, மலேசியக் கிளையின் சி இ ஓவாக நான் செயல்படலாம் என்று இருக்கின்றேன்." 

"அட! மலேசியாவிலும் இதே பெயர் வைக்கப் போகின்றீர்களா?" 

"கொஞ்சம் பெயர் மாற்றி, மா ஜா மு எண்டர்ப்ரைசஸ் என்று வைத்துவிடலாம் என்று நானும் மாதவனும் முடிவெடுத்திருக்கின்றோம். மா ஜா மு என்றால், மலேசிய மொழியில் என்ன அர்த்தம் என்று தெரியுமாடா?" 

"தெரியாதே! என்ன அர்த்தம்?" 

" எனக்கும் தெரியாது! எனக்கு மலேசிய மொழியே தெரியாது! "

முகுந்தனும், ஜானகிராமனும் வாய்விட்டு பெரிதாகச் சிரித்தார்கள்!
         
 (முற்றும்)
 

இது என்னங்க கேடயம்?

பதிவாசிரியர் தாக்க வருகின்ற வாசகர்களிடமிருந்து தப்பிக்க இதற்குப் பின்னே ஒளிந்துகொண்டிருக்கிறார்! 
            

12.9.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம். + கேட்டது கேட்டபடி 6/7




1)  ஆறு வயதில் கிராமத்துக்கே ரோல் மாடலாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்!  சானியாவின் பெருமையில் அர்த்தம் உண்டு.




2)  சுய அனுபவம் சமுதாயத்துக்குப் பாடுபடும் எண்ணத்தை விதைக்கிறது.  மும்தாஜ் போல!  அதையும் செயல்படுத்த வேண்டுமே..  நாலுபேருக்கு நல்லது செய்யும் மனுஷி.





 
3)  A 4,818 வயது மனிதர்,  120வயது மனிதர்...  இதெல்லாம் எங்கு?  வாக்காளர் பட்டியலில்!  18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் பலரைச் சொல்லி இருக்கிறார்களாம்.  இதைச் சரிப்படுத்த முனைந்திருக்கும் 66 வயது P G பட்.





 
4)  நடனமாடிய குழந்தைகளின் பாதங்களை அவ்வப்போது குத்தியது, இது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியதோ இல்லையோ மேடையில் விழா தலைவராக அமர்ந்திருந்த ஒருவருக்கு வலியை ஏற்படுத்தியது.




அவர் யாரையாவது கூப்பிட்டு நடனத்தை நிறுத்திவிட்டு கற்களை அப்புறப்படுத்தச்சொல்லி இருக்கலாம், யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவரே விறுவிறுவென எழுந்துவந்து குழந்தைகளை ஒரு ஒரமாக இருக்கச்சொல்லிவிட்டு துருத்திய கற்களை எந்த கவுரவமும் பார்க்காமல் குனிந்து பொறுக்கி ஒரு
ரமாக போட்டுவிட்டு தரையை செம்மைப்படுத்திவிட்டு பிறகு குழந்தைகளை ஆடவைத்தார்.   பி.சங்கர் மகாதேவன்.



5)  எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மனைவி திருமதி சீதாலட்சுமி.





6) விதைக் kalaam குழுவினருக்கு நம் பாராட்டுதல்களைத் தெரிவிப்போம்.





7)  நல்ல மனம் வாழ்க.. உலகம் போற்ற வாழ்க.. எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.






9)  இலவசமாகத் தருகிறார் என்றதும், நான் கூட மக்கள் இதை உபயோகப் படுத்திக் கொள்வார்களே தவிர, இதனால் அர்த்தமில்லை என்றுதான் நினைத்தேன்.  நல்லெண்ணத்தைப் பரப்பச் சொல்கிறார்,  தேவையில் இருப்போருக்கு உதவச் சொல்லி, அதைத்தான் விலையாகக் கேட்கிறார் என்றதும் மதிப்பு வந்தது.  மிராஜுதின் சையத்.






 
10)  சென்னபுரி அன்னதான சமாஜத்தைப் பாராட்டுவதா?  அறியத்தந்த நடராசன் அவர்களை பாராட்டுவதா?





11)  இப்படியும் ஒரு அடேடே பள்ளி!  மதுரை அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி.




12)  விளையும் பயிர்.  அனிருத் கதிர்வேல்




 

13)  நெகிழ வைக்கிறார் திவ்யா.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.







======================================================================





கேட்டது கேட்டபடி 6/7 





அந்த மறுநாளும் இதோ வந்துவிட்டது. 
              
அது சனிக்கிழமை. 
            
மா ஜா எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்திற்கு அரை நாள் வேலை, அரை நாள் லீவு. மறுநாள் ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் எல்லோருமே ரொம்ப உற்சாகமாகக் காணப்பட்டனர். 
           
மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. 
            
'முகுந்தன் எப்போது வருவான்?  அவனிடம் நாமே பேச்சை ஆரம்பிப்பதா அல்லது அவன் பார்த்து மன்னிப்புக் கேட்கட்டும் என்று இருந்துவிடுவதா? ' ஜானகிக்கு ஒரே குழப்பம். 
              
மாலை நாலரை மணிக்கு டாக்சி வந்தது. அதிலிருந்து கோட் சூட் அணிந்து, டை, கூலிங் கிளாஸ் சகிதம் இறங்கிய முகுந்தனை மாடி பால்கனியிலிருந்து நோட்டமிட்ட ஜானகியின் மனம், 'அட ஆள் எப்படி மாறிப் போயிட்டான்! முந்தி இருந்த முகுந்தன் எங்கே? இப்போ இருக்கின்ற இந்த முகுந்தன் ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி ஆயிட்டானே! ' என்று எண்ணியது. 
               
மாடி அறையிலிருந்து கீழே முகுந்தன் பேசியது எல்லாம் நன்றாகக் கேட்டது. அந்த வெண்கலக் குரல் மட்டும் மாறவே இல்லை. 
              
"நாராயணன் ! வெந்நீர் ரெடியா இருக்கா? முதல் விஷயமா குளிக்கணும். பார்க் ஹோட்டல் பாத் டப் குளியல் பிரயோசனமே இல்லை. சின்னம்மா எங்கே? " 

"சின்னம்மாவை ஏன் தேடறீங்க?" 
     
(தொடரும்)