வியாழன், 6 அக்டோபர், 2011

விஜயதசமியில் படிக்க ...


'அக்னிச் சிறகுகள்'
- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.
- அருண் திவாரி. 
தமிழில் : மு. சிவலிங்கம். 
கண்ணதாசன் பதிப்பகம். 
தொலைபேசி: 044-24332682.

10 கருத்துகள்:

  1. விஜய் தசமியன்று நல்லதே படிக்கவேண்டும் என்பதற்கு ஏற்ப கலாம் அவர்களின் நற்செய்தி . நன்றி .. நமக்குள்ளே இருக்கும் உள் ஆதாரம் ..ஆக்கத்திறன் ... மனிதனாக வாழும் அடிப்படை உரிமை ... சிறகு விரித்து பறக்க வைக்கிறார் ...

    பதிலளிநீக்கு
  2. 'வானப்பிரஸ்தம்' என்று நாவலொன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். சுமார் 150 பக்கங்கள் வந்திருக்கிறது. இதுவரை எழுதிய பகுதிகளை புத்தக அடுக்கில் பூஜையில் வைத்திருந்தேன். காலையில் புனர்பூஜை முடிந்ததும் கொஞ்சம் படித்து விட்டு தொடர்ந்து கொஞ்சம் எழுதினேன் அந்த நாவலை தொடர்ந்து எழுதி முடித்து விடவேண்டும் என்கிற பிரக்ஞை நினைவில் பதிந்தது.

    உங்களது நல்ல நினைவூட்டல். படிக்கலாம் என்று 'அக்னிச்சிறகுகள்' எடுத்தேன்.என்னிடம் உள்ளது 2000 வருட பதிப்பு. மு. சிவலிங்கத்தின் தமிழாக்கம் தான். 216-ம் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதி இல்லாமலிருந்தது ஆச்சரியமாக இருந்தது. 216-ம் பக்கம் என்னிடம் இருக்கும் பிரதியில் 'தியான'த்திற்கு பதில் 'படைத்தல்' அத்தியாயமாக இருக்கிறது. கடைசியில் ஒரு வழியாக அந்தப் பகுதியைத் தேடிப் படித்து விட்டேன். என்னிடம் உள்ள பிரதியில், இந்த குறிப்பிட்ட பகுதி 365-ம் பக்கத்தில் 'அமைதிபடுத்துதல்' அத்தியாயத்தில் உள்ளது.

    படித்து முடித்ததும் தான் மனத்தில் ஒரு திருப்தி உணர்வு பரவியது.
    நல்ல வாசிப்பை எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு

    நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

    பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

    பதிலளிநீக்கு
  4. ஜீவி சார் - உங்கள் ஆர்வம எங்களை சந்தோஷமடைய வைக்கின்றது! இங்கு காணப்படும் இரண்டு பக்கங்களும் - 'அக்னிச் சிறகுகள்' சுருக்க வடிவு (abridged version) புத்தகத்தில் இரண்டு பக்கங்கள். மாணவர் பதிப்பு என்றும் - விலை அறுபது ரூபாய் என்றும் போடப்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசன் மஹால் கல்யாண மண்டபத்தில், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் காட்சியில் வாங்கியது.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு அறிமுகம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. முக்கியமான வரிகள்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை நான்கு சிறகுகளில் அடக்கியிருக்கிறார்கள்.
    1. முனைதல் 2. படைத்தல் 3. அமைதி படுத்துதல் 4. தியானம். முன்னுரை, அறிமுகம், நிறைவுரை தனி. மொத்தம் 374 பக்கங்கள். ஜூலை 2000 நான்காவது பதிப்பு. விலை: ரூ.93/-
    கண்ணதாசன் பதிப்பகம். ஹிக்கின் பாதம்ஸில் வாங்கியிருக்கிறேன்.

    இப்பொழுது மீண்டும் சரிபார்க்கையில் என்ன தெரிந்ததென்றால், நான்காவது சிறகான 'தியானம்' பகுதியைத் தனியாகப் பிரித்திருக்கிறார்களே தவர, அதையும் 'அமைதிபடுத்துதல்' என்றே ஒவ்வொரு பக்கத்திலும் பக்கத்தலைப்பிட்டுப் பிரசுரித்து விட்டார்கள். அதனால் தான் 'அமைதி படுத்துதல்' பகுதியில் நீங்கள் குறிப்பிட்டிருந்த பக்கங்கள் உள்ளடங்கி விட்டன. ஆக, என்ன தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து விட்டது.

    போகட்டும். மேதகு கலாமின் கவிதைகளுக்கான தமிழாக்கம் கவிஞர் புவியரசு. தமிழ்ப் பதிப்புக்கு அழகு சேர்க்கிற வகையில் அவர் பணி சிறப்பாகத் தென்பட்டது. இல்லையா?..

    பதிலளிநீக்கு
  8. //கவிதைகளுக்கான தமிழாக்கம் கவிஞர் புவியரசு. தமிழ்ப் பதிப்புக்கு அழகு சேர்க்கிற வகையில் அவர் பணி சிறப்பாகத் தென்பட்டது. இல்லையா?..//
    ஆமாம். மிகவும் சரி.

    பதிலளிநீக்கு
  9. "விஜயதசமியில் படிக்க ..

    விஜய தசமி வாழ்த்துக்கள்.!

    பதிலளிநீக்கு
  10. வித்யாசமான, நல்ல சிந்தனை. படித்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!