news and views லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
news and views லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.3.14

வார் ரீல்!


# இரட்டை இலை விவகாரம்:கோர்ட் முடிவு 
! மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதானே முக்கியம்! 

# கெஜ்ரிவால் காங்.,கின் கைப்பாவை: பா.ஜ., 
! பாவை! கெஜ்ரிவால் காஜல் அகர்வாலின் தங்கையா?  

# மோடிக்கு கெஜ்ரிவால் 'செக்' 
! என்ன அமவுண்ட்? 

# இந்திய பங்குசந்தைகளில் சரிவு 
! நேற்று ஒரு முழம் ஏறி, இன்று ஒரு சாண் இறங்கினால் தவறு இல்லை! 

# காங்கிரசை அகற்ற வேண்டும்-சந்திரபாபு 
! அகற்றியபிறகு அங்கே எதை வைக்கவேண்டும்? மலரா? சைக்கிளா? விளக்குமாறா? 

# ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.54 
! யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா நாணய மதிப்பு !

# பா.ஜ., ஏதோ திட்டமிடுகிறது-கெஜ்ரிவால் 
! ஏதோ ஒரு திட்டம் இருந்தால் சரி! 

# பா.ஜ.,வுக்கு புதிய செய்தி தொடர்பாளர் 
! புதிய செய்திகளை மட்டும் பகிர்வாரா? 
 
# அமெரிக்காவுக்கு பாக்., வலியுறுத்தல் 
! பாக்குக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் ஏதும் உண்டா? 

# ஒடிசாவில் சுரங்க பணிக்கு தடை 
! இரண்டு மாதங்கள் பொறுத்துக்குங்க. தேர்தலுக்குப் பிறகு தொடரும்! 

# ஹூஸ்டன் கால்வாய் மூடல் 
! ஏன்? முழு வாயையும் மூட வேண்டியதுதானே! 

# மாற்றம் தவிர்க்க முடியாதது:மோகன் பாகவத் 
! மாற்றம் வேண்டி தவி(ர்)க்கிறார்கள் மக்கள்! 
           

4.1.12

Y THIS கொலைவெறி....? (எங்கள் வலையங்கம்)

                        

பிரசவத்துக்கு தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென ஒரு நாள் வயிற்று வலி என்று வந்ததும் குழந்தை உள்ளே இறந்து விட்டது என்று கண்டறிந்து உடனே தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமியை,

                     
தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்போது இறந்து விட்ட அந்தப் பெண்ணின் கணவர் தன் நண்பர்களுடன் வந்து கொடூரமாகக் கொலை செய்து விட்ட செய்தி இரண்டு நாட்களாக செய்தித் தாள்களில்...
                      
குழந்தை இறந்து பிறந்ததும் உடலில் ஏற்பட்ட வேறு கோளாறுகளினால் பெண் இறந்து விட்டதும் நடந்திருந்தால் வருந்தக் கூடியதுதான். ஆனால் உடனே அந்தப் பெண்ணைத் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டார் என்று செய்திகள் சொல்லும்போது கொடூரமாகக் கொலை செய்யுமளவு இந்த மருத்துவர் செய்த பிழை என்ன? 
            
சமீப காலங்களில் தோன்றியுள்ள ஒரு விபரீத விழிப்புணர்வு என்ற மாயையின் விளைவு இது.
                  
மருத்துவம் தவறினால் இப்படிக் கொலைகள், அடி உதை கிடைக்கும் என்றால் மருத்துவர்கள் எந்த நம்பிக்கையில் மக்கள் உடலைப் பரிசோதிக்க முன் வருவார்கள்? சிறிய வியாதிகளுக்குக் கூட பெரிய சோதனைகளைக் காட்டுவதும், கை கழுவ நினைப்பதும் ஆரம்பித்து விடுமே...   
              
இது ஒரு புறம்.... இன்னொருபுறத்தைப் பார்க்கையில்... 
                  
கொலை தவறுதான்...மன்னிக்க முடியாத குற்றம்தான். அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் மருத்துவர்கள் தங்கள் சேவையைப் புறக்கணித்திருக்கிறார்களே... (தங்கள் வேலைக்கு அவர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்றாலும் இதை சேவை என்றே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்) இது நியாயமா... ? எதிர்ப்பு காட்ட பாதி மருத்துவர்கள் ஒரு நாளும் மீதி மருத்துவர்கள் இன்னொரு நாளும் பேரணியோ, கோஷமோ எழுப்பி தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தலாம்.
             
கருப்பு பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபடலாம். 
                 
கடமை முதலில் என்று முடித்து விட்டு வேலை நேரம் முடிந்த பிறகு அமைதியான முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். 
                    
சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் திருநெல்வேலி என்று தமிழ்நாடெங்கும் அப்பாவிப் பொது மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து அங்கு செய்தி கேள்விப் பட்டு ஏமாந்து நிற்கையில்  மக்களுக்கு  மருத்துவர்கள் மீது  என்ன உணர்வு எழும்? கற்றதனாலாய பயனென் கொல்.... 
                 
சென்னை பொது மருத்துவமனை தலைவர் திரு கனகசபை நல்ல முறையில் தெளிவாகவே இது பற்றிக் கூறி இருக்கிறார். உணர்வுகள் நியாயமானவை. ஆனால் வேலையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார். 
                 
மருத்துவத்துறைக்கு இது சோதனை நேரம். மருத்துவ உதவி தேடி வரும் அப்பாவி பொது மக்களுக்கும் .... 
                    

17.9.11

படிப்பது செய்தி... அடிப்பது அரட்டை...






நாகை மாவட்டம் சீர்காழியில் லுத்தரன் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் முதுநிலைத் தமிழாசிரியர் ஒருவருக்கு சென்ற வருடம் திடீரென கண் பார்வை பறி போய் விட, மருத்துவச் சான்றிதழ் பெற்று அவரை வேலையை விட்டே தூக்கியதாம் பள்ளி நிர்வாகம். கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர் முறையிட, கோர்ட் தலையிட்டு பார்வை பறி போனதால் பயிற்றுவிக்கும் திறமை பறி போனதாக அர்த்தமில்லை, கடைசி வருடமும் அவர் திறமையில் தேர்ச்சி விகிதம் நன்றாகவே இருக்கிறது, மேலும் அரசு மாற்றுத் திறனாளிகளுக்குக் காட்டும் பரிவையும் மனதில் வைத்து வேலை நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது. ஒரு உதவியாளர் உதவியுடன் அவர் நன்றாகவே பாடம் நடத்துகிறாராம். இது செய்தி.

எனக்குத் தெரிந்த நண்பரின் பையனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை கிடையாது. அவர் பெற்றோர்கள் கவனிப்பிலும் பரிவிலும் படித்து முன்னேறியவர் தான் படித்த பள்ளியிலேயே சில காலம் ஆசிரியராக இருந்தவர் (குரோம்பேட்டை சுந்தரவல்லி) தற்சமயம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். இந்தச் செய்தி படித்ததும் அவர் நினைவு வந்தது. அவர் தனக்குப் பார்வை தெரியாததை ஒரு குறையாகவே உணர்ந்ததில்லை. பார்ப்பவர்களையும் உணர வைத்ததில்லை.

=========================================
Brain Pacemaker Holds Promise for Untreatable Depression
பாகிஸ்தான் நோயாளிக்கு மூளையில் பேஸ் மக்கர்....செய்தி.

பாகிஸ்தான் என்று இல்லை உலக மக்கள் அனைவரின் இதயத்திலுமே பீஸ் (peace) மேக்கர் என்று பொருத்தப் படும்..?

=========================================


வெளிச்சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை விட இலவசப் பொருட்களின் தரம் மேம்பட்டு இருக்கிறதாம். செய்தி.மிக்சியில் 550 வாட்ஸ் மோட்டார், டேபிள் டாப் கிரைண்டரில் 150 வாட்ஸ் மோட்டாரும் பொருத்தப் பட்டுள்ளதாம். கிரைண்டரில் வெளிச்சந்தையில் 80 முதல் 120 வாட்ஸ் வரைதான் மோட்டார் பொருத்தப் பட்டிருக்குமாம். மேலும் வெளிச்சந்தை க்ரைண்டர்களில் 0.5% நிக்கல் இருக்க, இலவச க்ரைண்டர்களில் 4% நிக்கல் இருக்கிறதாம். செய்தி சொல்கிறது.


கூடவே மற்றொரு செய்தி பயனாளிகளுக்கு வழங்கப் பட்ட இலவச ஆடுகளில் நான்கு இறந்து விட்ட னவாம்.
==============================================


ரயில் விபத்து விசாரணை ஆரம்பம். டிரைவர் தவறா, சிக்னல் கோளாறா...?

பயணம் செய்தவர்களின் ஜாதகக் கோளாறு!
===============================================

star wars star, two suns, double planet
இரண்டு சூரியன்களைச் சுற்றும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அந்த கிரகம் இரண்டு சூரியனையும் சுற்ற 229 நாள் எடுக்கிறதாம். இரண்டு சூரியன்களும் தன்னைத் தானேயும் சுற்றுவதால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் வருகிறதாம். இரண்டு சூரியனும் ஒரே திசையில் இருப்பதால் வழக்கம் போல பகலிரவாம். தூரத்தைக் கேட்டால் ஸ்பெக்ட்ரம் ஞாபகம் வருகிறது! . 200 ஒளி வருடங்கள். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி ஒளி வருடங்களாம்.

=================================================

பத்மநாபசுவாமி கோவில் ஆறாவது அறையை இப்போது திறக்க வேண்டாம் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. தேவப்ப்ரச்னம் சொல்லிய இயற்கைக்கு மீறிய காரணங்களால் இல்லாமல், தேவையின்றி இப்போது திறக்க வேண்டாம் என்பதாலேயே இந்தத் தீர்ப்பு என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.

=================================================

பைக் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் பதினெட்டு வயது மகன் மரணமடைந்தது ஒரு சோகம்.
====================================================

இந்தியாவின் சுவர் என்று அழைக்கப் படும் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் அழகிய ஆட்டம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது.

==================================================






பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரத்துக்கும் இடமில்லை - பிரதமர்.

ஒவ்வொரு விபரீதமும் நடந்த பிறகு இந்த பதில் ஆட்டோ ஜெனேரெட் ஆகும் வண்ணம் செட் செய்து வைத்திருப்பார்கள் போலும்.

=============================================

பீகாரில் (என்று ஞாபகம்) போலீஸ் ஸ்டேஷன் எதிரே போராட்டம் நடத்திய பெண்களை போலீஸ்காரர்கள் துரத்தித் துரத்தி லத்தியால் அடித்துத் துவைத்ததை சில செய்திச் சேனல்களில் பார்க்க முடிந்தது. கொடுமை.

=============================
                       
படங்கள் உதவி : நன்றி கூகிள்.   
                    
                             

18.7.11

காதல் மீடியா கேஸ் நித்யா நடனம் பொதுஜனம் -வெட்டி அரட்டை


                        
மாண்டலின் ராஜேஷுடன் காதல் முடிந்து விட்டது என்று மீரா ஜாஸ்மின் சொல்லியிருக்கிறாராம். காதல் என்ன கட்டுரையா நாவலா... முடிய? இந்தக் காதல் எல்லாம் எந்த வகையில் சேர்த்தி? அல்லது காதல் ஒரு ஜோக்கா? 
                     
தினமலரில் சமீபத்தில் ரசித்த ஜோக். ராகுல் காந்தி திடீர் திடீரென உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து ஏர் பிடிக்கிறேன், கூழ் குடிக்கிறேன், ஏழைகளுடன் குடிசையில் தங்குகிறேன் என்று ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பதை கிண்டலடிக்கும் ஜோக். "சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்.." நியூஸ் சானல்களுக்கு ராகுல் ஃபாலோ அப் நல்ல தீனி. 
                            
தயாநிதி ராஜினாமா செய்த நாளில் மற்ற அனைத்து சேனல்களும் அதைச் சொல்ல கலைஞர் டிவியில் மட்டும் 'பிரபுதேவா ரமலத் விவாகரத்துக்கு முக்கியத்துவம் தந்த அளவு இதைப் பற்றி ஒரு வரி கூட கிடையாது! தி மு கவுக்கு இரண்டு இடம் நிறுத்தப் பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ். பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்க புதிய துறைகள் உருவாக்கலாம். அறிக்கைத்துறை, சமாளிப்புத்துறை, இப்படி...
                          
"மீடியாக்கள் ராஜ்ஜியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது... யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம்...தயாநிதி விதிவிலக்கல்ல" என்பது கலைஞரின் கருத்து. கலைஞர் டிவி, சன் டிவி மீடியாக்கள் இல்லையா... இவர்கள் செய்யாததா... இது ஒருபுறமிருக்க இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
                        
சமீபத்தில் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் ஆகியோருக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் ஒரு யோக்கியமான காரணத்துக்காக (கங்கையைக் காப்பாற்றுங்கள்) இந்த வருடம் பிப்ரவரி முதல் உண்ணாவிரதம் இருந்து யாராலும் கவனிக்கப் படாமல் உயிர் நீத்த சுவாமி நிகமானந்தா பற்றி செய்தி எங்காவது வெளியில் வந்ததா... துக்ளக்கிலும் கல்கியில் ஞானியும் சொல்லியிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் பா ஜ க வும் கண்டு கொள்ளவில்லை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை, மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் எல்லோரும் கண்டு கொண்ட ஆட்டம் ஒன்று உண்டு!   ராம்தேவின் நள்ளிரவு போராட்டக் கலைப்புக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்வில் பி ஜே பியின் சுஷ்மா ஸ்வராஜ் நடனமாடியது செய்தியாகியதாம். தேசபக்திப் பாடல்களுக்குத்தானே ஆடினேன் என்ன தவறு என்றாராம் அவர்! ஆனால் நடுத்தர மக்கள் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டார்கள் கேஸ் சிலிண்டர் அநியாய விலை ஏற்ற விவரம் கேட்டு. 
                        
கேஸ் சிலிண்டர்கள் புதிய செய்தி ஒன்று படித்தேன்..வருடத்திற்கு நான்கு சிலிண்டர்கள் இப்போது இருக்கும் விலையில் அதற்கு அப்புறம் வாங்கும் எல்லா சிலிண்டர்களும் சுமார் எழுநூறு ரூபாய் விலையில் வழங்கப் படலாம் என்கிறது செய்தி. பத்மநாப சுவாமிதான் இந்திய மக்களுக்கு அருள் செய்ய வேண்டும்!
                        
பத்மநாப சுவாமியின் நகைப் பொக்கிஷத்தை உலகுக்கு காட்டிக் கொடுத்த சுந்தரராஜன் காலமாகி விட்டாராம். 70+ வயது. இயற்கை மரணமாகத்தான் இருக்கும். இவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்தவராம். கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இவர் வீடு நோக்கி தினமும் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடந்ததாம். தெருவில் எதிர்ப்படுவோர் எல்லாம் இவரைத் திட்டிக் கொண்டே இருந்தார்களாம். இனி அதற்கெல்லாம் தேவை இல்லை. அவரை எதிர்த்து குதித்துக் கொண்டு இருந்தவர்கள் அடங்கி விட்டாலும் .... 
              
பிடதி ஆஸ்ரமத்தில் குருபூர்ணிமா அன்று நடந்த நித்யானந்தரின் புவி ஈர்ப்பு விசையை எதிர்க்கும் நிகழ்ச்சி அல்லது நடனம் எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் 'நம்பி' தலையை உயர்த்தி யோகாவின் அரைமண்டியிட்ட போஸில் அப்படியே எழும்பிக் குதிக்கத் தொடங்கியது கண் கொள்ளாக் காட்சி! ரஞ்சியும் இருந்தார். சும்மா இருந்தவர் நித்தியானந்தா சைகை காட்டியதும் அவரும் ஒரு முறை முயற்சித்தார். ஒரு நிருபர் எதிர்த்ததையும் பார்க்க முடிந்தது. உச்சகட்ட பரவச நிலைக்குப் போன ஒரு பெண்மணி அந்தக் கால பாம்பு டான்ஸ் போல ஆடத் தொடங்கி தரையில் விழுந்து நெளிய அருகில் சேரில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி அதைப் பார்த்த பார்வையில் அவர் கேலியாகப் பார்க்கிறார் என்று நம்பத் தொடங்கிய கணத்தில் அவர் உடம்பிலும் அதிர்வுகள் தொடங்கி, பாம்பு டான்சுக்கு ரெடியானதைப் பார்க்க முடிந்தது. தெய்வீகப் பரவச நிலை என்று இதை ஏற்றுக் கொண்டால் கூட - மனிதம் என்பதே சற்றும் இல்லாத சில நிகழ்வுகளையும் வருத்தத்துடன் சொல்லவேண்டி உள்ளது. 
     
ஓரிரு வருடங்களுக்கு முன்னால் அமைச்சர்கள் தலைமைச் செயலர் எதிரிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தோம். உதவி கேட்டு அவர் எழுந்து எழுந்து அலறியும் யாரும் பக்கத்திலேயே போகவில்லை அப்போது. அதே போல ஒரு காட்சி சென்ற வாரம் கோவையில் அரங்கேறியது. 'குடிமகன்கள்' இடையே நடந்த சண்டையில் பைக்கில் மோதி கீழே தளளி அடித்துத் துவைத்து, தலையில் கல்லைப் போட்டு கொல்லுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கூட்டமான பொது ஜனம்...! cctv யில் ரெகார்ட் ஆனதை சேனல்களில் தமிழ்பட காட்சி போல காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் வேறு இருந்ததாம். ஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை? சிக்னல் விழுந்ததும் ஏதோ ரோடில் பிச்சை எடுப்பவர்களைத் தாண்டிச் செல்வது போல வாகனங்கள் தங்கள் வேலையைப் பார்க்க விரைந்தது ஏன்? கலிகாலம்.  
                      
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ... 
                   

9.10.10

பத்து செய்திகள், பத்து கமெண்டுகள் !



# டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் 'அதிரடி' உத்தரவு. 

** லத்திகாவுக்கே 'லத்தி' சார்ஜா! 

# ஆத்தூர் அருகே நரபலி முயற்சி ? 
** யார் அந்த நரபலி? ஆத்தூர் அருகே என்ன முயற்சி செய்தார் அவர்? 

# இந்தியா - ஆஸி., 2வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா பேட்டிங், அதிரடி ஆட்டம்.
** இப்பிடித்தான் முதல் டெஸ்டும் ஆரம்பித்தது. அப்புறம் என்ன ஆச்சு? 

# 20 கி.மீ., நடைப்போட்டி : இந்திய வீரருக்கு வெண்கலம். 
** எவ்வளவோ தடைப் போட்டிகளில் அன்றாடம் ஜெயித்து வரும் இந்தியருக்கு, நடைப்போட்டி சர்வ சாதாரணம்! 

# மின்சார ரயில் தப்பியது.  
** பவர் கட்டா? 

# பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இந்தியா அல்ல :முஷாரப். 
** அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்! 

# அடுத்த காமன்வெல்த் போட்டி: பெண்களுக்கான மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி!  
** இன்றளவில் இந்தியா இன்னும் இருபது தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள மற்ற போட்டிகளுக்கும் ஏதாவது வேட்டு வைப்பார்களா? 

# நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?   
** விளைவிப்பது சாத்தியமாக இருக்கலாம்; ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?         
    
  
# இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டி. 
** எங்களைக் கேட்டால், தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து, போட்டியிடலாம். 


# அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!   

17.7.10

அகட விகடம் 170710

ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல். 
ஆத்தூரிலேயே நீர் இல்லை என்றால், மக்கள் 'ஆற்றாமை' கொள்வது சரிதான்.

கூட்டுப் படைகளை எதிர்கொள்ள தயார்: மாவோயிஸ்ட்.
இப்படி சொன்னால் கூட்டுப் படையினர் குழம்பிப் போய்விடுவார்களோ?


கம்ப்யூட்டரில் இந்திய ரூபாய் குறியீடு.
இந்திய ரூபாயின் மதிப்புக் குறையாமல் ஈடு செய்வதில் குறியாக இருந்தால் நலம்


புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்.
(வாசகர்கள் கமெண்டுக்கு )



விருதுநகர் கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்சேர்க்கை.
* மாணவர்கள் படிப்போடு டூ விடாமல், சேர்க்கையாக இருந்தால் சரி. 
** சேர்க்கை சரியில்லை என்று பிறகு பெற்றோர் சொல்லாமல் இருக்கவேண்டும். 


ஊழல் வழக்கு: எச்.பி.சி.எல்., இயக்குநர் கைது.
மற்றவர்கள் தப்பிவிட்டார்களோ? 

வான்வழி தாக்குதலில்: 17 தாலிபான்கள் பலி.
தாலிபான்களுக்கு பலி கொடுத்துதானே பழக்கம்? 


மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு.
(வாசகர்கள் கமெண்டுக்கு )


குப்பையில் தபால்கள் : மக்கள் அதிர்ச்சி.
* junk mail என்று தபால்காரர் நினைத்துவிட்டார் போலிருக்கு. 
** பழிக்குப் பழி என்று மக்கள், தபால் பெட்டியில் குப்பை போடாமல் இருந்தால் சரி. 


சரக்கு அடித்துவிட்டு, லாரியை தண்டவாளத்தில் ஓட்டி சென்ற லாரி டிரைவர்! 
அப்போ ஒரு சரக்கு ரயில் வந்து லாரியில் மோதிடிச்சோ? 


வாக்காளர் பட்டியல் திருத்தம் : நரேஷ்குப்தா தகவல். 
என்ன மார்க்?  அது பற்றிய தகவல் உண்டா?


+2 போலி சான்றிதழ் தயாரிக்க ரூபாய் பத்தாயிரம்.
அடேங்கப்பா - படிச்சு மார்க் வாங்கறது சிக்கனமா இருக்கும் போலிருக்கு. 

ஐநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மரத்திற்கு, தொல்காப்பியர் பெயர்.
தொல்காப்பியர் காலம் இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு. (May 1, 865 BC says Wiki) நமக்கு ரொம்ப தெரிஞ்ச தமிழ் உரை, 'கோனார் தமிழ் உரை' என்பதால், அவர் பெயரை வைத்திருக்கலாம் என்கிறார் எஸ் எஸ் எல் சி பரீட்சை இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் என் தாத்தா. 


அணையை பார்வையிடச் சென்ற முன்னாள் முதல்வர் கைது.
அவரே 'அன்னை'யை பார்க்க சென்றிருந்தால், வரவேற்பு கிடைத்திருக்கும். 


நித்யானந்தா பக்தர்கள் பெங்களூருக்கு பாத யாத்திரை.
மாளவிகா போன்ற பக்தைகளை தரிசனம் செய்யவோ?


போலி என்கவுண்டர் வழக்கில் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை.
12 பேரும் ஏதாவது போலி டாக்டரிடம் போலி சான்றிதழ் பெற்று, Poly கிளினிக்ல அட்மிட் ஆகி தப்பிப்பார்களாகுக!


மன வேதனையை விலக்க படம் பார்த்தார் எடியூரப்பா.
சுறா பார்த்திருந்தா மன வேதனை இன்னும் அதிகரித்திருக்கும். 


கபில் தந்த உலகக் கோப்பை! ஸ்ரீக்காந்த் பெருமிதம்.
கபில் தந்ததா? International Cricket Council தந்தது இல்லையா? 

5.1.10

தினசரி - அது சரி !!

# கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி
* அப்போ, மத்த இடங்களில் மெதுவா மின் உற்பத்தியா?

# சிறைவளாகத்தில் செம்மொழி பூங்கா
* செந்தமிழ்த் திருடர்களுக்கா?


# ஆந்திராவில் பந்த் : இயல்பு பாதிப்பு
* பந்த் இல்லேன்னா மட்டும் என்ன கிழிச்சிடப் போறாங்க?

# புதுக்கட்சி துவங்குகிறார் கல்யாண் சிங்
* உமாபாரதி இப்போ எங்கே இருக்கிறாரோ - அங்கே அப்புறம் போய்ச்சேருவாரோ?

# செலவு பழக்கம் : மரபணு காரணம்.
* சேமிப்புப் புழக்கம் --- இடைத் தேர்தல் காரணமோ?

# தேர்வுதாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
* தேர்வு எழுதுவதையே புறக்கணித்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!
 
# கொசுவை ஒழிக்க புதிய யுக்தி.
* பல்லி வளர்ப்பதோ?

# முடிந்து போன விஷயம் : இளங்கோவன்
* இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே!

# கஞ்சா வழக்கிலிருந்து சிறுவன் விடுவிப்பு
* இருந்த கொஞ்சா நஞ்சா நம்பிக்கையும் போச்சு (இளைய தலைமுறை மீது)

# பணம் திரும்பத்தாக்கும் காலம் : வைகோ
* பணம் திரும்பாது போகும் காலம்?

# குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி
* டீ குடித்துவிட்டு - தூங்காமலேயே இருந்துவிடுவதோ?