திங்கள், 30 ஜூலை, 2012

எட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ

             
இந்தத் தொடரின் முன்னுரை வெளியானது, ஆகஸ்ட் எட்டாம் தேதி, கி பி இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டு, (ஹி ஹி போன வருஷம்தானுங்க!) காலை எட்டு மணி, எட்டு நிமிடங்களுக்கு. 
         
இந்த 2012 - ஆகஸ்ட் எட்டாம் தேதி, காலை எட்டு மணி எட்டு நிமிடங்களுக்கு, இந்தத் தொடரின் இறுதிப் பகுதி (26) வெளியாகும். 
            
இந்த சந்தோஷ சமாச்சாரத்துடன், பதிவைத் தொடர்கின்றேன்! - பதிவாசிரியர்.        
             
(போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் 
பதிவாசிரியருக்கே! ) 
************************************  
            
                      
அலைபேசியில் அழைத்த இன்ஸ்பெக்டர் கு.ரங்கன், 'ஒரு கேஸ் விஷயமாக, இந்தூர் போக இருப்பதாகவும், எ சா, தன்னுடைய குருநாதரையும், கா சோ தன்னுடைய தோழியையும் பார்க்க வருவதாக இருந்தால் அவர்களும் வரலாம்' என்று தெரிவித்தார். எ சா & கா சோ உடனே, 'தாங்களும் வரத் தயார்' என்று கூறினார்கள். 
             
மறக்காமல், காவிக் கலர் மாத்திரையையும் நீல நிற பாட்டிலோடு சேர்த்து எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். 
*****************************  
      
இந்தூர். 
           
இன்ஸ்பெக்டர் கு ர - போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுச் சென்றவுடன், எ சா & கா சோ கூட்டணி, குருநாதர் விலாசத்திற்குச் சென்றனர். எ சாமியாரின் குருநாதரின் வீடு, ஜோதிட நிலையம், மருத்துவ ஆலோசனை வழங்குமிடம், எல்லாம் ஒன்றுதான்! 
   
குருநாதர், ஒரு அதிசய மூலிகை, இமாலயத்தில் ஓரிடத்தில் கிடைக்கின்றது என்று (ரஜினிகாந்த் உடன் சென்ற ஒருவர் கூறிய தகவல் கேட்டு) தெரிய வந்ததால், அங்கு அவசர பயணம் சென்றிருந்தார். ஆனாலும், உதவியாளரிடம், எ சாமியார் கேட்கின்ற தகவல்கள், டாகுமெண்ட்ஸ், எல்லாம் கொடுத்து உதவும்படியும், உதவியாளர் செய்த ஒரு தவறை, எ சாமியாரிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் கூறியிருந்தார். 
      
எ சா & கா சோ வந்தவுடனேயே குருநாதரின் உதவியாளர், கண்களில் கண்ணீர் மல்க, சாமியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்னை கடவுள் கூட மன்னிக்க மாட்டார் ... " என்றார். 
            
எ சா: "ஏன் வினோத் குமார்?" (ஆமாம் குருநாதரின் உதவியாளர் பெயர் வினோத் குமார். சென்ற பதிவில் கா சோ குறிப்பிட்டது, இவரைத்தான். வாசகர் வினோத் குமாரை அல்ல!
          
வி கே: "கவனக் குறைவாக, நான் மாத்திரைகளை, பாட்டிலில் போடும்பொழுது, இப்ரால் நூறு எம் ஜி, மற்றும் இப்ரால் ஆயிரம் எம் ஜி மாத்திரைகளை, மாற்றிப் போட்டுவிட்டேன். அந்த நேரத்தில், கரண்ட் கட் ஆனதும் ஒரு காரணம். அதனால இப்போ, பிங்கி இறந்து போக நேரிட்டுவிட்டது. உங்க குருநாதர், என்னுடைய பாஸ், இந்த உண்மையை உங்களிடம் கூறி, உங்களிடம் மீதி இருக்கின்ற மாத்திரையை, உங்கள் மனசாட்சி சொல்வது போல உபயோகித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்" 
    
எ சா: "ஆமாம், நான் இந்தூருக்குக் கிளம்புவதற்கு முன்பே, குருநாதரிடம் அலைபேசியில் பேசினேன். அவரும் இதைத்தான் சொன்னார். மாயா கன்சல்டேஷன் பற்றிய ஃபைலை எடு."
    
வி கே, எ சா கேட்ட ஃபைலை எடுத்துக் கொடுக்கின்றார். அந்த ஃபைலில், மாயா, ஜோதிட மருத்துவ ஆலோசனைக்கு வந்த நாள், அவர் கூறிய விவரங்கள், அவருக்கு குருநாதர் அளித்த மருந்து விவரங்கள், எல்லாம் இருந்தன. மாயா கொடுத்த ஜாதகங்களின் நகல்களும் இருந்தன. கடைசியாக, மாயாவின் புகைப்படத்துடன், உள்ளூர் தினசரியில், ஓ ஏயும், பிங்கியும் கொடுத்திருந்த 'கண்ணீர் அஞ்சலி' செய்தியும் இருந்தன. 
   
எ சா: "வி கே - எனக்கு சமீபத்தில் நமக்கு வந்த ஒரு போஸ்டல் கவர், அது விண்டோ கவர் போல இருக்கவேண்டும். பிறகு, இதோ இந்தக் கண்ணீர் அஞ்சலி விளம்பரத்திற்கு ஒரு ஜெராக்ஸ் வேண்டும். மேலும் இரண்டு வெள்ளைத் தாள்கள் வேண்டும். அவற்றைக் கொடுப்பாயா?" 
    
வி கே, எ சா கேட்ட எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்தார். 
  
அவற்றை வாங்கிக் கொண்டு, எ சா & கா சோ, இருவரும் தாங்கள் வந்திருந்த வாடகை காருக்குச் சென்றனர்.
          
எ சா: " சோ - இந்த ஆபிச்சுவரி விளம்பர ஜெராக்ஸ் காப்பியின் மறுபக்கத்தில், இவ்வாறு எழுது:
            
" அன்புள்ள ஓ ஏ!
           
நீங்கள் தன்னிலை அறிய, ஜோதிட மருத்துவர் கொடுத்த மூன்று மாத்திரைகளில், முதலாவது என் கை தவறி, உங்கள் அறையில், ஆரஞ்சுக் கலர் கம்பளத்தில் விழுந்து விட்டது. அப்பொழுது எனக்குத் தெரியாது, இது கொடிய விஷம் என்று.
           
இரண்டாவது மாத்திரையை, உங்களை தன்னிலை அறியச் செய்ய, நீங்கள் அருந்தப் போகும் கோக்க கோலா பானத்தில் போடச் செய்தேன். என்ன துர் அதிருஷ்டம்! அதை பிங்கி அருந்தி உயிரை விட்டுவிட்டாள்.
             
இந்த மாத்திரை கொடிய விஷம் என்று இப்பொழுது தெரியவந்துள்ளது.
           
மூன்றாவது மாத்திரையை இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளேன். இதைக் கொடுத்தவரின் பெயர், முகவரி விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். 
           
இந்த மாத்திரையை என்ன செய்வது என்பதை, உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்.
              
ஒன்று, நீங்கள் இந்த மாத்திரையையும், இந்தக் கடிதத்தையும், போலீசில் கொடுத்து, என்னுடைய மரணம் தொடங்கி, உண்மையில் நடந்தவை எல்லாவற்றையும் கூறி, ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து, சட்டப்படி என்ன தண்டனை அடைய வேண்டுமோ அதைப் பெறலாம்.
             
இல்லையேல், இந்த மாத்திரையை, சிறையில் உங்களுக்கு காலுசிங் கொண்டுவந்து கொடுக்கும் கோக்ககோலா பானத்தில் கலந்து நீங்கள் குடிக்கலாம். அப்படிச் செய்வதாக இருந்தால், இதோடு இணைத்திருக்கும் வெள்ளைக் காகிதங்களில், உங்கள் வாக்குமூலத்தையும், உயிலையும் எழுதிக் கொடுத்துவிடலாம். அப்படி நீங்கள், நான் இருக்கின்ற உலகத்திற்கு வருவதாக இருந்தால், எனக்காக என்னுடைய அம்மா காத்திருந்தது போல, உங்களுக்காக நான் காத்திருப்பேன்.
           
என்றும் உங்கள்
மாயா. "
               
"எழுதிவிட்டாயா? அதை இப்படிக் கொடு.
            
எ சா அந்தக் கடிதத்தை வாங்கி, அதோடு கே வி யிடமிருந்து பெறப்பட்ட காவிக் கலர் மாத்திரையை ஒரு நீல நிற டிரான்ஸ்பெரன்சி காகிதத்தில் சுற்றி அதையும், வெள்ளைக் காகிதங்களையும் இணைத்து, மேலே ஒரு சிறிய காகிதம் இணைத்து, அதில் விலாசம் எழுதினார். அந்தத் துண்டுத் தாளின் மறுபுறத்தில், தன்னுடைய குருநாதரின் பெயர், விலாசம் ஆகியவற்றை எழுதினார். எல்லாவற்றையும் மடித்து, விண்டோ கவருக்குள் வைத்தார். 


கவரை ஒட்டி, தயாராக வைத்துக் கொண்டார்.   
           
            
டாக்சியில் செல்லும் பொழுது, மாயா ஹோட்டல் இருக்கின்ற தெருவில் சென்று, அதை, ஹோட்டல் வாசலில் இருந்த லெட்டர் பாக்சில் யாரும் பார்க்காத நேரத்தில் போட்டுவிட்டு வந்து டாக்சியில் ஏறிக் கொண்டார். 
    
(தொடரும்) 
           
ஓய் பதிவாசிரியரே - இ கு ர எ சா கா சோ என்றால் என்ன? அதைச் சொல்லாமல் தொடரும் போட்டுவிட்டீர்களே! 
           

4 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமாக செல்கிறது... முடிவு August 8-டா?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டை குறும்பன்1 ஆகஸ்ட், 2012 அன்று PM 5:36

    இ கு ர எ சா கா சோ என்றால் ... இந்தூரில் கு.ரங்கன், எலெக்டிரானிக் சாமியார், காசு சோபனா - சரிதானே?
    பரிசு அனுப்பிடுங்க!

    பதிலளிநீக்கு
  3. கு.ர., எ.சா., கா.சோ., எல்லாருக்கும் விடுதலை, விடுதலை, விடுதலை. அப்பாடி ஒரு வழியாத் தொடரை முடிச்சுக் கா.சோ.வை விடுவிக்கப் போறீங்களே இந்தக் கேஸிலே இருந்து! :))))) பாவம் கா.சோ. மாட்டிண்டு முழிக்கிறாங்க. எப்படிக் கேஸை டீல் பண்ணறதுனு தெரியாமத் தான்! :)))))

    பதிலளிநீக்கு
  4. ஹ்ம்ம்... திரும்பவும் விருவிருப்பு வரும் போல... நன்றி....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!