திங்கள், 9 ஜூலை, 2018

"திங்க"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி


கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... 
ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:)) 


லங்கையில், குறிப்பா யாழ்ப்பாணத்தில்  எந்தக் கொண்டாட்டமாயினும் இந்தக் கறி நிட்சயம் இருக்கும். இதில் கடலை போடுவதென்பது அவரவர் விருப்பம், மற்றும்படி வீட்டு விஷேசங்களில் இக்கறி முதலிடம் பிடித்து விடும்.

சரி சரி நான் ஓவராக அலட்டமாட்டன் எனக்கு ரைம் இல்லை:) அதனால ஸ்ரெயிட்டா வகுப்புக்குள் போயிடலாம்..

இன்று படம் பார்த்தாலே புரிந்துவிடும் தானே? இதில் கொண்டைக்கடலை சேர்த்திருக்கிறேன், கறியின் அழகுக்காக,  கொஞ்சமாக சேர்த்தால் போதும், இல்லை எனில் கடலைக்கறிபோல ஆகிடும். இது கத்தரிக்காயின் அளவைப் பொறுத்து கொஞ்சமா சேர்க்க வேண்டும், இடையிடையே கடலை தெரிய வேண்டும்.  7,8 மணித்தியாலங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள், 

மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய், உள்ளி, பழப்புளி கொஞ்சமாக தேவைப்படும்... கரைத்து எடுத்திருக்கிறேன்.. இதனோடு கொஞ்சம் பால்[விரும்பாது விட்டால் சேர்க்காமலும் விடலாம்] +உப்பு[இது சொல்லத் தேவை இல்லைத்தானே?:)]

இந்தக் கறிக்கு பெரும்பாலும் கத்தரிக்காயை அரை வட்டமாகத்தான் வெட்டுவது வழக்கம், சிலர் மெல்லிசா, ஒரு இஞ்சி நீளமாகவும் வெட்டுவினம். இரண்டையும் தனித்தனியே நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளோணும்.  

இன்னும் சிலர் வெங்காயம் மிளகாய் உள்ளியையும் பொரித்து எடுத்து கறி வைப்பார்கள், நாங்கள் எதுக்கு எண்ணெய் என இப்படி கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய்.. உள்ளியை வதக்கி வதங்கியதும் அதில் கறிப்பவுடர் சேர்த்து வதக்குவோம். இதில் நம் கறிப்பவுடர் என்பது... மிளகாய், மல்லி, சின்ன சீரகம், பெரிய சீரகம், மிளகு, மஞ்சள் எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்த பவுடர்.  இப்படி எண்ணெயிலேயே தூளைப்போட்டு வதக்கும்போது ஒரு வித்தியாசமான சுவை கிடைக்கும்.


பின்பு அதனுள் புளிக்கரைசலையும் விட்டு உங்கள் கத்தரிக்காயின் அளவுக்கு தண்ணியும் சேர்த்து கொதிக்க விடவும். அதிகம் தண்ணி சேர்க்கக்கூடாது பின்பு கறி தண்ணியாகிடும். உப்புச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொதித்து தடிப்பானதும், கொஞ்சம் பால் சேர்க்கவும்[முதல்பால்]

இப்போ கடலையை முதலில் கொட்டி ஒரு 2 நிமிடமாவது கொதித்ததும், பின்பு கத்தரிக்காயையும் கொட்டிப் பிரட்டவும்..

அப்படியே பொரிந்ததுபோல திரண்டு வந்ததும், உங்களிடம் இருந்தால் கறிவேப்பிலையை இலை இலையாகப் போட்டுப் பிரட்டி இறக்கி விடவும்[என்னிடம் அன்று இருக்கவில்லை].

ஆவ்வ்வ்வ் அதிராஸ் ஸ்பெஷல் கத்தரிக்காய்ப் பொரிக்கறி ரெடீஈஈஈ:))


ஊசி இணைப்பு:
ஊசி இணைப்புப் போடாவிட்டால் ஏதோ பாயாசம் குடிக்காத மாதிரி ஆகிடுது:).. இது என்ன தெரியுதோ? அந்த வீட்டின் மேலே தெரிவது அம்புலிமாமா:))[நிலவு என்றால் பெண் என்கிறார்கள்:), அம்புலி என்றால் மாமா என்கிறார்கள் என்ன டிஷைனோ?:).. எதுக்காகப் போட்டேன் எனில் இங்கு நிலவு பென்னாம் பெரிதாக இருக்கும்... இலங்கையில் பார்ப்பது குட்டியாக இருக்கும்.


இப்போ தெரியுதோ? அதிரா இருப்பது சந்திரனுக்குக் கிட்டவாக்கும்:))
=======================================================
=======================================================

98 கருத்துகள்:

  1. ஹையா!..
    இன்னைக்கு முண்டியடிச்சி
    மொதல் ஆளா வந்தாச்சு!...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    இண்டைக்கு ஞானாநந்தை அதிராம்பிகா வழங்கும் க.பொ.க!...

    சுருக்கா அல்லாரும் ஓடியாங்கோ!...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. //ஊசி இணைப்பு போடாவிட்டால் பாய்சன் குடிக்காத மாதிரி ஆகிடுது//

    அடப்பாவமே...?

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  6. முண்டியடிச்சு.....

    ஹா... ஹா.... ஹா... இன்னும் 'இன்றைய நற்செய்தியாளரை'க் காணோம்!

    பதிலளிநீக்கு
  7. நடைப்பயிற்சி முடிந்து மெல்ல வாங்க வெங்கட்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க கில்லர்ஜி... இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. கொண்டக்கடலை சேர்ப்பது கறியின் அழகுக்காகவா, இல்லை சுவைக்காகவா ?

    அப்படினு கேட்டால் கோபம் வரலாம் அதனால் கேட்காமல் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. ///
    இப்போ தெரியுதோ? அதிரா இருப்பது சந்திரனுக்குக் கிட்டவாக்கும்:)////

    அதிரா பக்கத்தில் சந்திரன் வந்தால் சந்திரனே சிறியதாக இருக்குதே

    பதிலளிநீக்கு
  11. கறி வித்த காசு மேல
    கடுவனுக்கு ஆசை..

    எடுக்கப் போன ஆளுக்குத் தான்
    கிடைக்குது பார் பூசை!...

    பதிலளிநீக்கு
  12. கில்லர் ஜி..

    கேட்டாலும் தோசம்..
    கேக்காட்டாலும் தோசம்!...

    கறி வித்த காசு..ந்னா
    பூசாருக்கும் சந்தோசம்!....

    பதிலளிநீக்கு
  13. கீதா/ கீதா..
    என்ன ஆயிற்று?...

    இங்கே கணினி பிரச்சினை..
    அங்கே காஃபி பிரச்சினை..

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  15. Sufi தத்துவங்கள் போல் Selfi தத்துவங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. இன்னைக்கு அதிரடி சமையலா? கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி சப்பாத்திக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு சில மாறுதல்களோடு செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. நிலாவைத் தொடும் தூரத்தில் திருக்கயிலை யாத்திரையின் போதும் பார்த்தேன் அதிரடி. எட்டினால் தொட்டு விடும் தூரம். ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படம் எடுத்திருந்தோம். எங்கே இருக்குனு தேடணும்.மானசரோவரில் அந்த நிலாவும், நட்சத்திரங்களும் பிரதிபலிக்கையில் இரண்டும் ஒண்ணை ஒண்ணு தொட்டுக்கறாப்போல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. @ கீதா சாம்பசிவம்:
    //நிலாவைத் தொடும் தூரத்தில் திருக்கயிலை யாத்திரையின் போதும் பார்த்தேன். மானசரோவரில் அந்த நிலாவும், நட்சத்திரங்களும் பிரதிபலிக்கையில் இரண்டும் ஒண்ணை ஒண்ணு தொட்டுக்கறாப்போல் இருக்கும்.//

    ஆகாசம் பார்த்துப் பரவசமடைவதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும். இம்மண்ணில் பலருக்கு, ஆகாசம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. அதற்கப்புறம் அல்லவா நிலவும் நட்சத்திரங்களும்..

    பதிலளிநீக்கு
  19. ஆஹா... கத்தரிக்காய் பொரிச்ச கறியா?

    உடனே செய்துபார்த்துடணும்னு, பால் வாங்க பால்கார்ர் வீட்டுக்குப் போனேன். அவர் நிறைபேருக்கு ஏற்கனவே பால் விற்றுவிட்டதால் "முதல் பால்" இல்லையென்றார். நாளைக்கு காலைல மூன்று மணிக்கே போய்ப் பார்க்கிறேன்.... ஆமாம்.. கட் பண்ணின கத்திரிக்காயை என்ன செய்யறது? நெட்ல பார்க்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  20. கொண்டைக் கடலையையும் கத்தரிக்காயையும் பொரிச்சு எடுக்கணுமா? அப்படீன்னா எண்ணெய்ல வதக்கறதா இல்லை பொரிக்கறதா? உங்களுக்காக வைத்திருந்த டிக்‌ஷனரியை எங்க இடம் மாற்றி வச்சேன் என்று தெரியலையே!

    பதிலளிநீக்கு
  21. பொண்ணு அழகா இருந்தால் மிக விலை உயர்ந்த டிரெஸ், அதீத மேக்கப் தேவையில்லைனு புலாலியூர் பூசானந்தா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்புறம் ஏன் அழகா வந்திருக்கிற பொரிச்ச கறி பக்கத்துல, லைட், மணிலாம் போட்டு அழகுபடுத்தியிருக்கீங்க? கறி நல்லா வரலையா?

    பதிலளிநீக்கு
  22. @மதுரைத் தமிழன் - //அதிரா பக்கத்தில் சந்திரன் வந்தால் சந்திரனே சிறியதாக இருக்குதே// - நல்லா புரியும்படி எழுதுங்க. அதிரா தவறுதலா, தான் சந்திரனைவிட ஒளியுள்ளவர்னு புரிந்துகொண்டு "டாங்க்ஸ்" சொல்லிடப் போறாங்க.

    பதிலளிநீக்கு
  23. அதிரா , கத்தரிக்காய் பொரிச்ச கறி நல்லா இருக்கிறது.பொறிச்சகறி விற்று இவ்வளவு காசு வைத்து இருக்கே ! பூஸார், அதற்குதான் பணத்தின் மீது எவ்வளவு ஆசை மற்றவர்களை தொடகூட விட மாட்டேன் என்கிறதே!
    தேங்காய் பாலில் முதல் பாலா? கெட்க நினைத்தேன். நெல்லைத்தமிழன் நகைச்சுவையாக சொல்லி விட்டார்.

    அதிரா கவிதாயினி ஆகும் போது நிலவை பெண்ணாக, அம்புலி மாமாவாக எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று சொல்வீர்கள். இப்போது ஞானி அதிரா அதனால் சந்திரன் கிட்டவும் போகலாம் தான்.சந்திரனுடன் கதைக்கவும் செய்யலாம்.
    கடைசியில் ஞானி சொல்லும் வாழ்க்கை தத்துவமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. பதிவிலேயே பிடித்தது ஊசிக் குறிப்புதான் /ஆகாசம் பார்த்துப் பரவசமடைவதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும். இம்மண்ணில் பலருக்கு, ஆகாசம் என்று ஒன்றிருப்பதே தெரியாது./கைக்கெட்டும் தூரத்தில் ஆனால் கைக்கெட்டாதது தானே ஆகாசம் ..

    பதிலளிநீக்கு
  25. கத்தரிக்காய் பொரிச்ச கறி செய்முறை நன்றாக இருக்கிறது அதிரா!!

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் _()_.. ம்ஹூம்ம் இது ஒண்ணுதான் குறைச்சல்:) எனச் சொல்வது கேய்க்குது கர்ர்ர்ர்ர்:)) தேம்ஸ்ல தள்ளிப்போடுவேன்ன் ஜாக்க்க்க்ர்ர்த்டை:))..

    ஹையோ சொல்ல வந்ததை விட்டிட்டு.. என்னமோ எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேனே.. அதாவது இப்போ ஸ்கூல் ஹொலிடே என்பதாலும் வழமையை விட.. ஏன் நாங்க இந்த நாட்டுக்கு வந்ததுக்கு இம்முறைதான் இப்படி வெயில் பார்க்கிறோம் என்பதால, புளொக்க்ஸ் பக்கம் வரவே நேரம் கிடைக்குதில்லை... முந்தினதைப்போல கும்மியடிக்க முடியவில்லை, எல்லோர் பக்கமும் ஒழுங்காப் போக முடியவில்லை.. இன்னும் ஒரு மாதத்தில் நிலைமை கொன்றோலுக்கு வந்துவிடும்.. குளிரும் மெதுவா தொடங்கிவிடும்...

    அதுவரை, அதிரா என்னிடம் இப்போ முந்தின மாதிரி வந்து பேசுவதில்லை.. என்ன குறையோ என்ன கோபமோ எண்டெல்லாம் ஆரும் சந்தேகப் பட்டிடாதீங்கோ.. முடியும்போது நிட்சயம் வருவேன்.. மற்றும்படி கோப தாபம் எல்லாம் இல்லை.. இருந்தால் நான் எல்லாம் நேரடி அட்டாக்தான் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  27. வாங்கோ துரை அண்ணன் வெங்கட் ஸ்ரீராம்..

    சைன் மட்டும் வச்சுப்போட்டு கறிபற்றிப் பேசாமல் ஓடுவதைப் பார்க்க, என் கத்தரிக்கறி வித்த காசில பங்கு கேட்டு சைன் வச்சது போல இருக்கே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்/.. நோ பங்ஸ்ஸ்ஸ்:)) தர மாட்டேன்ன் அதை அப்படியே சுவிட்ட்ட்ட் பாங்க்ல போடப்போறேன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  28. //துரை செல்வராஜூ said...
    ஹையா!..
    இன்னைக்கு முண்டியடிச்சி
    மொதல் ஆளா வந்தாச்சு!...//

    ஹா ஹா ஹா துரை அண்ணன்.. முண்டி அடிச்செல்லாம் இல்லை:)). இண்டைக்கு நீங்க மட்டும்தேன்ன்ன் கியூவரிசையில:)) நிற்கிறீங்க ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
  29. //துரை செல்வராஜூ said...

    இண்டைக்கு ///ஞானாநந்தை அதிராம்பிகா//// வழங்கும் க.பொ.க!...//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவசரத்தில் நத்தை எனப் படிச்சு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சூ நத்தை ஊருவதைப்போல:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு ஞானியை இப்பூஉடியா மிரட்டுவது:))

    ///சுருக்கா அல்லாரும் ஓடியாங்கோ!...///

    ஆவ்வ்வ்வ் இந்த சுறுக்கா... எனும் சொல்லை இலங்கையில் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தில் பேசுவார்கள்.. விரைவா என்பதை சுரு/றுக்கா எனச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  30. வாங்கோ கில்லர்ஜி
    ///KILLERGEE Devakottai said...
    //ஊசி இணைப்பு போடாவிட்டால் பாய்சன் குடிக்காத மாதிரி ஆகிடுது//

    அடப்பாவமே...?///

    கர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது ஸ்ரீராம் செய்த ஜதீஈஈஈஈஈஈ.. கொப்பி பண்ணும்போது எழுத்தெல்லாம் டப்புத் டப்பா வருவதுபோல செட்டிங்கில் செய்து வச்சிருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. ஹையோ இப்போ இதைப்படிச்சு ஸ்ரீராம் பதட்டமாகிடப்போறாரே.. நான் ஒண்ணும் பண்ணல்லியே என:))

    பதிலளிநீக்கு
  31. //KILLERGEE Devakottai said...
    கொண்டக்கடலை சேர்ப்பது கறியின் அழகுக்காகவா, இல்லை சுவைக்காகவா ?

    அப்படினு கேட்டால் கோபம் வரலாம் அதனால் கேட்காமல் போகிறேன்.//

    ஹா ஹா ஹா ஸ்ரீராம் கேய்க்கச் சொன்னார். நெ.த கேய்க்கச் சொன்னார் இல்ல துரை அண்ணன் கேய்க்கச் சொன்னார் எனச் சொல்லிட்டு ஓடிடோணும் அதிராவைப்போல:))..

    அது கில்லர்ஜி. சுவை இரண்டாம் பட்சம்:).. முதலாவது, கண்ணுக்கு அழகா இருந்தால் மட்டுமே விற்பனையாகுது இக்காலத்தில்...:)... இல்ல இரண்டுமே இதில் உண்டு நம்பி காசு குடுத்து வாங்கலாம்:). எத்தனை கிலோ வேணும்? ஓடரை என் செக் இடம் குடுங்கோ:))..

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. பல்லு வலில இருக்கும்போதுதான் கடலைக்கறி சமைப்பீங்களா?!

    பதிலளிநீக்கு
  33. வாங்கோ ட்றுத்.. சந்திரன் கதை இருக்கட்டும் முதல்ல இண்டைக்கு இக்கறி செய்து மாமியைத் திக்குமுக்காட வச்சிடுங்கோ:)..

    ///Avargal Unmaigal said...
    ///
    இப்போ தெரியுதோ? அதிரா இருப்பது சந்திரனுக்குக் கிட்டவாக்கும்:)////

    அதிரா பக்கத்தில் சந்திரன் வந்தால் சந்திரனே சிறியதாக இருக்குதே///

    ஹா ஹா ஹா என் உள்ளுணர்வை எப்பூடியோ ஞான திருஸ்டியால கண்டுபிடிச்சு:) கீழே நெ.தமிழன் சொல்லிட்டார்ர் ஹா ஹா ஹா:))..

    பின்ன அதிராவின் ஒளிர்வுக்கு முன்னால சந்திரன்பிள்ளை சின்னனாத்தானே தெரிவார் ஹையோ ஹையோ:))..

    ஹா ஹா ஹா...நன்றி ட்றுத்.

    பதிலளிநீக்கு
  34. //துரை செல்வராஜூ said...
    கறி வித்த காசு மேல
    கடுவனுக்கு ஆசை..

    எடுக்கப் போன ஆளுக்குத் தான்
    கிடைக்குது பார் பூசை!...//

    ஹா ஹா ஹா இதுதான் படம் பார்த்து ஹைக்கூ எழுதுவது:)) அருமை..அருமை...

    பதிலளிநீக்கு
  35. //துரை செல்வராஜூ said...
    கில்லர் ஜி..

    கேட்டாலும் தோசம்..
    கேக்காட்டாலும் தோசம்!...

    கறி வித்த காசு..ந்னா
    பூசாருக்கும் சந்தோசம்!....//

    பின்ன.. ஜொந்த உழைப்பெல்லோ:))

    நன்றி துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
  36. //Pattabi Raman said...
    Sufi தத்துவங்கள் போல் Selfi தத்துவங்களும் அருமை.//

    வாங்கோ மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  37. வாங்கோ கீசாக்கா...

    //Geetha Sambasivam said...
    இன்னைக்கு அதிரடி சமையலா? கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி சப்பாத்திக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு சில மாறுதல்களோடு செய்து பார்க்கிறேன்.///

    ஆங்ங்ங் கீசாக்காதான் ஒழுங்கான பிள்ளையாக்கும்:).. சப்பாத்தி புட்டு இடியப்பம், வெள்ளை ரைஸ் இதுக்கெல்லாம் சூப்பரா இருக்கும்... இது எப்பவும் குழந்த கறிபோலதான் செய்யோணும் .. இறுக்கமா .. தளதள என...

    பதிலளிநீக்கு
  38. //Geetha Sambasivam said...
    நிலாவைத் தொடும் தூரத்தில் திருக்கயிலை யாத்திரையின் போதும் பார்த்தேன் அதிரடி. எட்டினால் தொட்டு விடும் தூரம். ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படம் எடுத்திருந்தோம்.//

    ஓ நிலவோடு நட்சத்திரங்களைப் பார்ப்பது என்ன ஒரு அழகு.. சின்ன வயதில்... நம் வீட்டுக்கு மாமா குடும்பம் வருவார்கள்.. அவர்களுக்கு 4 கேள்ஸ், என்னோடும் அக்காவோடும் சேர்த்து 6 கேள்ஸ் உம் அப்படியே இரவு நிலவில்.. கொஞ்சம் வீட்டுக்கு தூரமாக வெள்ளை அழகிய மணலில் சீட் விரித்து படுத்திருந்து வானம் பார்த்தபடி பேசிக்கொண்டே இருப்போம்..[ஏனெனில் வீட்டு முற்றத்தில் பேரன்ஸ் இருப்பார்கள் ஹா ஹா ஹா:)]

    அப்போ மாமாவின் மகள் ஒருநாள் சொன்னா அங்கே பாருங்கோ வெள்ளி ஒன்று விழுகிறது என.. பார்த்தோம் ஒரு வெள்ளி கீழே விழுவதைப்போலவே இருந்துது.... அப்படி இரவில் 10,11 வரை வெளியே இருந்து வானம் பார்த்து ரசித்த பல இரவுகளை என்றும் மறக்கவே முடியாது.

    சில நேரங்களில் கொஞ்சம் முகில் கூட்டமாக அலையும்.. அப்போது பார்க்க ஒவ்வொரு உருவம் தெரியும்...

    அதன் எபெக்ட்டோ என்னமோ 8-10 வருடங்களுக்கு முன், நான் ஒரு கனவு... வானத்தைப் பார்க்கிறேன்ன்.. அப்படியே முகிலில் உருவம் தெரிகிறது, அது என்ன உருவம் என உற்று உற்று பார்க்கிறேன்ன்ன்ன்.. அது அப்படியே ஒரு சிவபெருமான் உருவம்.. பென்னாம்ம்ம்ம்ம்ம் பெரிசாக வானத்திலே தெரிஞ்சுது... அந்தக் கனவின் எபெக்ட் .. அந்த அழகு.. அந்த மகிழ்ச்சி என்னக்கு சில நாட்கள் நீடிச்சுது.. இப்பவும் கண்ணில் தெரியுது..

    ஆனா இந்நாட்டில் எப்பவும் சந்திரன் அங்கிள் மட்டுமே தெரிவார்ர்.. சிலவேளை அருகில் சுக்கிரனார் மட்டும் மின்னுவார்ர்.. மற்றும்படி ஒரு நட்சத்திரம்கூடக் காணக் கிடைக்காது..

    பதிலளிநீக்கு
  39. வாங்கோ மிடில்கிளாஸ் மாதவி..

    //middleclassmadhavi said...
    Selfie thathutham great!!//

    மிக்க நன்றி.. இதனால்தான் நான் எப்பவும் கலந்து போஸ்ட் போடுவது.. அப்போதான் அவரவரும் பிடிச்சதைப் பற்றிச் சொல்ல வசதி, இல்லை எனில் பேசாமல் போயிடுவினம் எல்லோ.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்கோ ஏ அண்ணன்... என்னதான் இருப்பினும் நீங்க இங்கிலண்டை செமி ஃபைனலுக்கு போக விட்டுவிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))

    //ஏகாந்தன் Aekaanthan ! said...
    ஆகாசம் பார்த்துப் பரவசமடைவதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும். இம்மண்ணில் பலருக்கு, ஆகாசம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. அதற்கப்புறம் அல்லவா நிலவும் நட்சத்திரங்களும்..///

    ஹா ஹா ஹா உண்மைதான்.. ஆனா ரசனை உள்ள ஒவ்வொருவரும் ஆகாயத்தை ரசிக்காமல் விடமாட்டினம்.. அதுவும் சூரியன் மறையும் நேரம், கொஞ்சம் மப்பாக வானம் இருக்கும்போது அங்காங்கு முகில்கள் தெரியும் போது.. கொஞ்ச நேரம் வானத்தையே பார்த்தபடி இருந்தால்.. அதில் நிறைய உருவங்கள் தெரியும்.. மிருகங்கள்.. பூஸ், முயல்கூட தெரியும்... மலை தெரியும் மரங்கள் தெரியும்.. இப்படியே நாமும் இன்னொரு உலகத்தில் இருப்பதைப்போல இருக்கும்...

    ஆனா வெளிநாட்டு வாழ்க்கையில் இவை நிறையவே குறைஞ்சு போச்சு... ரசிப்பதற்கே நேரம் இருப்பதில்லை.. ரிவி, கொம்பியூட்டர் என மனம் அதில் மூழ்கிப்போச்சு...:(

    மிக்க நன்றி ஏ அண்ணன்.

    பதிலளிநீக்கு
  41. வாங்கோ நெல்லைத்தமிழன்..

    ///நெ.த. said...
    ஆஹா... கத்தரிக்காய் பொரிச்ச கறியா?

    உடனே செய்துபார்த்துடணும்னு, பால் வாங்க பால்கார்ர் வீட்டுக்குப் போனேன். அவர் நிறைபேருக்கு ஏற்கனவே பால் விற்றுவிட்டதால் "முதல் பால்" இல்லையென்றார். நாளைக்கு காலைல மூன்று மணிக்கே போய்ப் பார்க்கிறேன்.... ////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தமிழ்ப் புரொஃபிஸருக்கே இந்த நிலைமை எனில்?:))... இனி அறப்பால், பொருட்பால் என்றால் இவர் எந்தக் கியூவில போய் நிற்பாரோ நினைச்சேன் சிரிச்சேன்ன்ன் ஹா ஹா ஹா:)).. அது ஓவராப் படிச்சாலும் இப்பூடி ஆகிவிடுவது இயறகைதான்.

    ஐன்ஸ்டைன் தாத்தா{இப்பூடிச் சொல்லாட்டில் ஸ்ரீராம் தனக்கு தாத்தா ஆக்கிடுவார் கர்:)} தன் லாப் இலே ஆரையும் உள்ளே விடமாட்டாராம், அனுமதி குடுக்கவே மாட்டாராம், ஆனா அவர் அன்பா.. பாசமா ஒரு பூஸ் வளர்த்தாராம்.. அப்போ அந்த பூஸ் எப்பவும் உள்ளே வந்து போகோணும் என்பதற்காக, சுவரிலே வட்டமா ஒரு ஓட்டை போட்டு விட்டிருந்தாராம், அப்பூசாரும் குட் கேளாக அதனூடு வந்து இவரைச் சந்தித்து விட்டுப் போவது வளக்கமாம்.

    அப்போ திடீரென ஒருநாள் பார்த்தால், அப்பூஸார் ஒரு குட்டியோடு வந்திட்டாராம், ஐன்ஸ்டைன் தாத்தாவுக்கு லெக்ஸ்சும் ஆடல்லயாம் கான்ஸும் ஓடல்லியாம்:))... உடனேயே ஆட்களைப் பிடிச்சு.. குட்டியும் உள்ளே வந்து போவதற்கு தாயின் அந்த ஓட்டை அருகிலே ஒரு குட்டி ஓட்டை போட்டு விடுங்கோ எனச் சொல்லிட்டாராம்:)).. அவருக்கே அந்நிலைமை எனில்..

    நெல்லைத்தமிழன் முதற்பால் தேடி.. பால் ஃபக்டரிக்குப் போனதில் என்ன டப்பு இருக்குதென்கிறேன்ன் ஹா ஹா ஹா:))


    ///ஆமாம்.. கட் பண்ணின கத்திரிக்காயை என்ன செய்யறது? நெட்ல பார்க்கவேண்டியதுதான்.//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதைத்தான் நன்கு பொரிச்சு எடுத்து பேப்பரில போட்டு வச்சிருக்கிறேன் எல்லோ:))

    பதிலளிநீக்கு
  42. //நெ.த. said...
    கொண்டைக் கடலையையும் கத்தரிக்காயையும் பொரிச்சு எடுக்கணுமா? அப்படீன்னா எண்ணெய்ல வதக்கறதா இல்லை பொரிக்கறதா?!//

    மர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனிப் புது வார்த்தையாலதான் திட்டோணும்:)) ஏனெனில் என் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கு ஆரும் பயப்பிடீனம் இல்லை:)) ஹா ஹா ஹா.

    பொரிப்பதென்றால் டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈப் ஃபிறைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ கேய்க்குதோ?:)) ஹையோ அஞ்சு பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூடா ஒரு மங்கோ லஸி பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

    வதக்குவதெனில் நெ.தமிழன் அண்ணன்ன்ன்ன்ன்ன்ன்:)[ஹா ஹா ஹா:)]... ஒரு 2 அல்லது 3 மேசைக் கரண்டி ஒயில் விட்டு அடிப்பிடிக்காமல் மெதுவா நீர்த்தன்மையை அகற்றுவது.. ஹையோ இனி யும் நான் சமையல் குறிப்பு போடுவன் எண்டோ நினைக்கிறீங்க?:)) நெவர்.. அப்பூடி எண்டெல்லாம் ஜொள்ள மாட்டன்:)) மீ விக்கிரமாதித்தன் அண்ணன் மாறீஈஈஈஈ யாக்கும்:)).. அடுத்து வர இருப்பது “வெங்காயத்தாள் சுண்டல்” அதிராஸ் ரெசிப்பி.. அதிராவின் புளொக்கில் விரைவில் எதிர்பாருங்கோ:))..

    விளம்பரம் இல்லாத எதுவும் விற்பனையாகாது!!:)) ஹா ஹா ஹா..

    // உங்களுக்காக வைத்திருந்த டிக்‌ஷனரியை எங்க இடம் மாற்றி வச்சேன் என்று தெரியலையே///
    ஹா ஹா ஹா கர்ர்ர்:)) பூனை கொண்டுபோயிட்டுது என குழந்தைகளுக்குச் சொல்லுவோமே அப்பூடித்தான் இருக்கும்போல:))... என் செக் கும் வர மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  43. அவசர அலுவல்.. கொஞ்சம் லேட்டா வாறேன்ன்ன்ன்... அதுவரை பொரிக்கறி செய்திட்டு ரெடியா இருங்கோ:))... ஏனையோர் பக்கமும் கொஞ்சம் ஈவினிங்தான் வருவேன்ன் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்:) பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  44. சுவை எப்படி இருக்கும் என்பதை முடிவில் உள்ள படத்தின் கருத்து சொல்கிறதோ..? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  45. //வாங்கோ ட்றுத்.. சந்திரன் கதை இருக்கட்டும் முதல்ல இண்டைக்கு இக்கறி செய்து மாமியைத் திக்குமுக்காட வச்சிடுங்கோ:).///


    நீங்க சொன்னபடி இக்கறியை செய்து கொடுத்தேன்... அதை பார்த்த அவள் அவளை கொல்ல முயற்சிப்பதாக நினைத்து போலீஸை கூப்பிட்டு என்னை அரெஸ்ட் செய்து என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறாள்...

    பதிலளிநீக்கு
  46. அதிரா கத்திரிக்காய் கறி யின் பதிவு அருமை.
    எங்கள் கத்திரிக்காயில் கடலிப் பருப்பு சேர்ப்போம்.
    சன்னா சிலசமயம் வாயுப் படுத்தல் கொடுக்கும்.
    பூண்டு இஞ்சி சேர்ப்பது சமன் செய்துவிடும் என்றாலும்.
    இங்கே செய்வதில்லை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  47. அதிரா, கலக்கல் ரெசிபியாக இருக்கிறதே. ஆனால் ஒன்றுதான் இடிக்கிறது. அதிராவின் பதிவுக்கு வெறும் 55 பின்னூட்டங்கள்தானா? நம்ப முடியவில்லை. என்ன அதிரா இது? நம்ம ஸ்டாண்டர்ட் இல்லையே? கீதா ரெங்கனை காணவில்லை அதனால்தான் என்று நினைக்கிறேன். அவர் இருந்தால்,ஒரு 25 பின்னூட்டம் போட்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
  48. //ஆனா ரசனை உள்ள ஒவ்வொருவரும் ஆகாயத்தை ரசிக்காமல் விடமாட்டினம்..//

    உண்மைதான். நீங்கள் சொல்லியிருப்பதைப் போல, கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் முற்றத்தில்தான் நிலவையும், நட்சத்திரங்களையும் ரசித்தபடி படுத்துக்கொள்வோம். ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
  49. அது சரி, கத்தரிக்காய் பொரித்த கறிக்கு அருகில் 'A' என்று எழுதியுள்ளீர்களே? இது என்ன அடல்ட்ஸ் ஒன்லி கறியா? ;) ஹி ஹி .

    பதிலளிநீக்கு
  50. எல்லா ரெசிபியிலும் கடைசி ரெசிபி சூப்பரோ சூப்பர் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  51. கத்தரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இதில் கத்தரிக்காயின் சுவடே தெரியாது போலவே...! ரொம்ப வறுத்துட்டீங்களோ....

    பதிலளிநீக்கு
  52. //அது சரி, கத்தரிக்காய் பொரித்த கறிக்கு அருகில் 'A' என்று எழுதியுள்ளீர்களே? இது என்ன அடல்ட்ஸ் ஒன்லி கறியா? ;) //

    A Class ஆக இருக்கும் என்று சொல்கிறாரோ!

    பதிலளிநீக்கு
  53. //ஹா ஹா ஹா.. ஹையோ இப்போ இதைப்படிச்சு ஸ்ரீராம் பதட்டமாகிடப்போறாரே.. நான் ஒண்ணும் பண்ணல்லியே என:))//

    இப்பல்லாம் அப்படி ஆவதில்லை! பழகி விட்டது!

    பதிலளிநீக்கு
  54. சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் கடலை சேர்ப்பார்கள். அதுவே எனக்குப் பிடிக்காது என்று பிட்லேயில் கொ.க சேர்க்காமல்தான் செய்வோம் வீட்டில்!

    பதிலளிநீக்கு
  55. //சில நேரங்களில் கொஞ்சம் முகில் கூட்டமாக அலையும்.. அப்போது பார்க்க ஒவ்வொரு உருவம் தெரியும்...//

    நான் கூட புரைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் பயமுறுத்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  56. ஶ்ரீராம் - //A Class ஆக இருக்கும் என்று சொல்கிறாரோ!//

    திருவிளையாடல் படம் எஃபெட்ல "நான்... நானேதான் செய்தது" என்பதற்காக அதிராவின் முதல் எழுத்து A. முன்னமேயே எங்கேயோ சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  57. @ Sriram/ Athira: ... சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் கடலை சேர்ப்பார்கள். //

    முதன்முதலாக அதிரா, அப்புறம் நீங்கள் - கொண்டக்காய் கதையைச் சொல்கிறேன். பிட்லேயும் பாவம்!

    பதிலளிநீக்கு
  58. * அதிரா ரெஸிப்பி படித்த குழப்பத்தில் கடலை காயாகி, காய் கடலையாகி, பைரவனே அப்பா!

    கொண்டக்கடலை என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  59. @ அதிரா: ..இங்கிலண்டை செமி ஃபைனலுக்கு போக விட்டுவிட்டீங்களே கர்ர்..//

    அது காலியாகப்போறது அங்கினதான்..!

    பதிலளிநீக்கு
  60. //நெ.த. said...
    பொண்ணு அழகா இருந்தால் மிக விலை உயர்ந்த டிரெஸ், அதீத மேக்கப் தேவையில்லைனு புலாலியூர் பூசானந்தா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்புறம் ஏன் அழகா வந்திருக்கிற பொரிச்ச கறி பக்கத்துல, லைட், மணிலாம் போட்டு அழகுபடுத்தியிருக்கீங்க? கறி நல்லா வரலையா?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னாதூஊஊஊஊ?:) கறி நல்லா வரல்லயாவா?:) எப்போ என் சமையல் பிழைச்சிருக்குது ஜொள்ளுங்கோ?:)) நீங்க செய்து பார்த்தால்தானே அதன் அருமை புரியும்:) சரி சரி என் கேசரி செய்யப்போறேனெ நச் சொல்லிட்டீங்க அதனால மீ இப்போ உங்களோடு ஜண்டை எல்லாம் போடமாட்டேன்ன்:) பின்பு செய்யாமல் விட்டிடுவீங்க:))..

    ஆள் பாதி.. ஆடை பாதி..:))
    சமையல் பாதி.. பிரசெண்டேசன் பாதி:)).. இப்படிக்கு தேம்ச்கரைப் புலாலியூர்ப் பூஸானந்தா:)..

    ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்..

    பதிலளிநீக்கு
  61. //நெ.த. said...
    @மதுரைத் தமிழன் - //அதிரா பக்கத்தில் சந்திரன் வந்தால் சந்திரனே சிறியதாக இருக்குதே// - நல்லா புரியும்படி எழுதுங்க. அதிரா தவறுதலா, தான் சந்திரனைவிட ஒளியுள்ளவர்னு புரிந்துகொண்டு "டாங்க்ஸ்" சொல்லிடப் போறாங்க//

    ஹா ஹா ஹா அதுதான் மேலே ஜொள்ளிட்டனெல்லோ இனியும் என்ன ஜந்தேகம்?:).. பல நேரங்களில் எனக்கே டவுட்.. என்னிடம் கடன் வாங்கித்தான் சந்திரன் அங்கிள் ஒளிகிறாரோ என:).. ஓகே ஓகே.. அமைதி அமைதி.. நம்மளை நாமளேதானே புகழோணும்:)) இல்லை எனில் அடுத்தவங்களோ வந்து புகழுவீனம் ?:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  62. வாங்கோ கோமதி அக்கா..

    //பொறிச்சகறி விற்று இவ்வளவு காசு வைத்து இருக்கே ! பூஸார், அதற்குதான் பணத்தின் மீது எவ்வளவு ஆசை மற்றவர்களை தொடகூட விட மாட்டேன் என்கிறதே!//
    அது சுவிஸ் பாங்கில போடப்போறாராம்:) அங்கினதான் வட்டி அதிகமாமே:).. ஹா ஹா ஹா.

    //தேங்காய் பாலில் முதல் பாலா? கெட்க நினைத்தேன். நெல்லைத்தமிழன் நகைச்சுவையாக சொல்லி விட்டார்.//

    ஹா ஹா ஹா அதேதான் கோமதி அக்கா.. தேங்காய்ப் பால் எனில் முதல் பால், பசுப்பால் எனின் ஃபுல் ஃபற்:))

    //இப்போது ஞானி அதிரா அதனால் சந்திரன் கிட்டவும் போகலாம் தான்.சந்திரனுடன் கதைக்கவும் செய்யலாம்.///
    ஹா ஹா ஹா இதுக்காகத்தான் கோமதி அக்காவோடு எப்பவும் ஒற்றுமையாகவே இருக்கோணும் என்பது:)).. பாருங்கோ நீங்க மெடிரேஷன் போயிருப்பதனால் நீங்களுக்குப் புரியுது:).. ஆனா மெடிரேஷன் போயும் என்ன பலன்?:) நெ.தமிழனுக்குப் புரியுதில்லையே ஞானி அதிராவின் பெருமைகள்:)) ஹா ஹா ஹா..

    //கடைசியில் ஞானி சொல்லும் வாழ்க்கை தத்துவமும் நன்றாக இருக்கிறது.//

    தங்கூஉ தங்கூ.. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  63. //G.M Balasubramaniam said...
    பதிவிலேயே பிடித்தது ஊசிக் குறிப்புதான்//

    வாங்கோ ஜி எம் பி ஐயா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஊசிக்குறிப்பாவது பிடிச்சிருக்கே இன்று உங்களுக்கு.. சந்தோசம் சந்தோசம்.. சமையல் எப்பவும் உங்களுக்குப் பிடிக்காதுதானே அதனால அதுபற்றி நமக்குக் கவலை இல்லை:) பழகிப்போச்ச்ச்ச்ச்ச்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  64. வாங்கோ அஞ்சு..
    //Angel said...
    Nei kathiri looks delicious//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதில நெய்யே போடல்லியே நான் .. விடமாட்டேன் இன்று சூரியன் மறைவதுக்குள் தேம்ஸ்ல தள்ளியே தீருவேன்ன்.. இப்போ 9.34 ஆனா வெயில் சுட்டெரிக்குதே...

    ஒருவேளை தள்ளத் தவறினால்.. என் குழைஜாதம்:) உடனடியா செய்து தே.கிச்சினில் போட வேண்டும் இதுதான் உங்களுக்கான பணிஸ்மெண்ட்:)).. ஹா ஹா ஹா நன்றி.

    பதிலளிநீக்கு
  65. //Nagendra Bharathi said...
    அருமை//

    வாங்கோ நன்றி..
    [இந்தப் பின்னூட்டமும் நமக்கெல்லாம் பழகிபோச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா].

    பதிலளிநீக்கு
  66. //மனோ சாமிநாதன் said...
    கத்தரிக்காய் பொரிச்ச கறி செய்முறை நன்றாக இருக்கிறது அதிரா!!//

    வாங்கோ மனோ அக்கா, இப்பெல்லாம் அடிக்கடி லீவு போடுறீங்க:) இது கொஞ்சம்கூட நல்லாயில்லையாக்கும்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  67. வாங்கோ ராஜி..

    //ராஜி said...
    பல்லு வலில இருக்கும்போதுதான் கடலைக்கறி சமைப்பீங்களா?!//

    ஓ உங்களுக்கு பல்லு வலிக்குதோ? இது இந்தக் கடலை அதிராவை விட சொஃப்ட் ஆக்கும்:)) பயப்பூடாமல் கடிக்கலாம் ஹா ஹா ஹா மிக்க நன்றி. விரைவில் பல்வலி குணமாக என் பிரார்த்தனைகள். கோமதி அக்காவுக்கும் பல்லுக்குத்து வந்து இப்போ குணமாச்சு.. வெயிலால தான் போல வருது.

    பதிலளிநீக்கு
  68. //திண்டுக்கல் தனபாலன் said...
    சுவை எப்படி இருக்கும் என்பதை முடிவில் உள்ள படத்தின் கருத்து சொல்கிறதோ..? ஹிஹி..//

    வாங்கோ டிடி.. ஹையோ அதிராவின் குறிப்பு என்றால் எல்லோருக்க்குமே கிட்னி:) ரொம்ப ஷார்ப்பா வேர்க் பண்ணுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  69. ///Avargal Unmaigal said...
    //நீங்க சொன்னபடி இக்கறியை செய்து கொடுத்தேன்... அதை பார்த்த அவள் அவளை கொல்ல முயற்சிப்பதாக நினைத்து போலீஸை கூப்பிட்டு என்னை அரெஸ்ட் செய்து என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறாள்...//

    ஹா ஹா ஹா ஹையோ ட்றுத் பதட்டமடையாமல் முதல்ல ஸ்ரெடியா நில்லுங்கோ:) அதுதான் ரொம்ப முக்கியம்:) இந்நேரம் கை கால் நடுக்கத்தைக் காட்டினால் எதிராளி உஷாராகிடுவினம்:)).. அது நீங்க அதிராவை விட அழகா மேக்கப் பண்ணி வைக்கிறேன் டிஸ் ஐ எனச் சொல்லி.. அருகிலே கத்தி, சுட்டியல் எதையாவது மாறி வச்சிருப்பீங்க:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    எதுக்கும் கொஞ்ச நேரம் கட்டிலுக்குக் கீழ இருங்கோ:) நான் இப்பவே ட்றம்ப் அங்கிளிடம் ஜொள்ளி வக்கீலுக்கு அரேஞ் பண்ணுறேன்.. அவர் வந்து கோலிங் பெல்லை அமுக்கும்வரை வெளியில வந்திடாதீங்க:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  70. வாங்கோ வல்லிம்மா..

    //வல்லிசிம்ஹன் said...
    அதிரா கத்திரிக்காய் கறி யின் பதிவு அருமை.
    எங்கள் கத்திரிக்காயில் கடலிப் பருப்பு சேர்ப்போம்.
    சன்னா சிலசமயம் வாயுப் படுத்தல் கொடுக்கும்.
    பூண்டு இஞ்சி சேர்ப்பது சமன் செய்துவிடும் என்றாலும்.
    இங்கே செய்வதில்லை. வாழ்த்துகள்.//

    ஓ கடலை வாய்வுதானே.. நாங்கள் கடலைக் கறியே செய்வதில்லை.. ஆருக்குமே பிடிக்காததும்கூட, ஆனா இப்படி மேக்கப்புக்காக பொரிச்சுப் போடும்போது விரும்பிச் சாப்பிடுவினம்.. ஓம் அதுக்காகத்தான் உள்ளி சேர்ப்பது.. கொஞ்சம் வெந்தயமும் சிலர் சேர்ப்பதுண்டு.

    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  71. வாங்கோ பானுமதி அக்கா..
    ///Bhanumathy Venkateswaran said...
    அதிரா, கலக்கல் ரெசிபியாக இருக்கிறதே. ஆனால் ஒன்றுதான் இடிக்கிறது. அதிராவின் பதிவுக்கு வெறும் 55 பின்னூட்டங்கள்தானா? நம்ப முடியவில்லை. என்ன அதிரா இது? நம்ம ஸ்டாண்டர்ட் இல்லையே?///

    ஹா ஹா ஹா இல்ல பானுமதி அக்கா.. கோடையில் சிலசமயம் இப்படித்தான் ஆகிறது.. என்னாலயும் உடனுக்குடன் பதில் குடுக்க முடியாமல் போச்சு.. டக்கு டக்கெனப் பதில் குடுத்தால் ஆராவது திரும்ப வந்து பேசக்கூடும்... சமர் என்பதால் எல்லோரும் பிசிதானே.. காத்து எப்பவும் ஒரே பக்கம் வீசாதுதானே.. ஹா ஹா ஹா..

    /// கீதா ரெங்கனை காணவில்லை அதனால்தான் என்று நினைக்கிறேன். அவர் இருந்தால்,ஒரு 25 பின்னூட்டம் போட்டிருப்பார்.//

    ஹா ஹா ஹா .. உண்மைதான் நான் பதில் குடுத்து முடிக்க முடியாமல் திண்டாடியிருப்பேன்:)).. அதென்ன அது என் குறிப்பு வெளிவரும்போது பார்த்து அவவுக்கு நெட் இல்லாமல் போச்சா?:) விட மாட்டேன்ன்.. இன்று இங்கின வராத ஆரையும் நாளைக்கும் வர விடாமல் காவல் இருந்து தேஸ்ல தள்ளுவேன்ன் ஹா ஹா ஹா:) ஹையோ என் சவுண்ட் பார்த்து.. எல்லோரும் பயந்திடப்போகினம்:)) “குரைக்கும் நாய் கடிக்காதாக்கும்:))” ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  72. ///Bhanumathy Venkateswaran said...
    //ஆனா ரசனை உள்ள ஒவ்வொருவரும் ஆகாயத்தை ரசிக்காமல் விடமாட்டினம்..//

    உண்மைதான். நீங்கள் சொல்லியிருப்பதைப் போல, கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் முற்றத்தில்தான் நிலவையும், நட்சத்திரங்களையும் ரசித்தபடி படுத்துக்கொள்வோம். ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.//

    உண்மைதான்..., இலங்கையில் நான் பார்த்த வானத்தை அதன் பின்பு இங்கு பார்க்கவில்லை பானுமதி அக்கா.. இங்கு எப்பவும் கிளியரான நீல வானமாக இருக்கும் அல்லது ஒரே புகை மூட்டம்போல இருக்கும்..

    பதிலளிநீக்கு
  73. //Bhanumathy Venkateswaran said...
    அது சரி, கத்தரிக்காய் பொரித்த கறிக்கு அருகில் 'A' என்று எழுதியுள்ளீர்களே? இது என்ன அடல்ட்ஸ் ஒன்லி கறியா? ;) ஹி ஹி .//

    ஹா ஹா ஹா இது நான் முன்பும் என் கத்தரிக்காய் தொக்கில் போட்டு விளக்கமும் சொல்லியிருந்தேன்ன். நீங்களும் மறந்திட்டீங்க ஸ்ரீராமும் மறந்திட்டார்.. நெ.தமிழன் மெடிரேஷனால ஞாபகமா வச்சிருக்கிறார்ர்.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  74. //Asokan Kuppusamy said...
    எல்லா ரெசிபியிலும் கடைசி ரெசிபி சூப்பரோ சூப்பர் பாராட்டுகள்//

    வாங்கோ.. ஆஅவ்வ்வ்வ்வ் இண்டைக்கு நீங்க அதிகம் பேசியிருக்கிறீங்க.. சந்தோசம் பொங்குதே.. மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  75. //ஸ்ரீராம். said...
    கத்தரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இதில் கத்தரிக்காயின் சுவடே தெரியாது போலவே...! ரொம்ப வறுத்துட்டீங்களோ....//

    ஆஆஆஆஆ ஸ்ரீராம் எதுவும் ஜொள்ளல்லியே என நினைச்சேன்.. இது வித்தியாசமான சுவை குடுக்கும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  76. //ஸ்ரீராம். said...
    //அது சரி, கத்தரிக்காய் பொரித்த கறிக்கு அருகில் 'A' என்று எழுதியுள்ளீர்களே? இது என்ன அடல்ட்ஸ் ஒன்லி கறியா? ;) //

    A Class ஆக இருக்கும் என்று சொல்கிறாரோ!//

    ஹா ஹா ஹா கர்:) அது அதிராவின் முதல் எழுத்தாக்கும்:))

    பதிலளிநீக்கு
  77. ///ஸ்ரீராம். said...
    //ஹா ஹா ஹா.. ஹையோ இப்போ இதைப்படிச்சு ஸ்ரீராம் பதட்டமாகிடப்போறாரே.. நான் ஒண்ணும் பண்ணல்லியே என:))//

    இப்பல்லாம் அப்படி ஆவதில்லை! பழகி விட்டது!///

    ஹா ஹா ஹா ... புல்லைக்கூடப் பாட வச்ச புல்லாங்குழல்.. கல்லைக் கூடக் கரைய வைத்த.. அது சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதூஊஊஊஊ..

    இன்னும் ஒன்றுக்கு நீங்க பழக்கப்பட வேணுமாக்கும்:))

    பதிலளிநீக்கு
  78. //ஸ்ரீராம். said...
    சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் கடலை சேர்ப்பார்கள். அதுவே எனக்குப் பிடிக்காது என்று பிட்லேயில் கொ.க சேர்க்காமல்தான் செய்வோம் வீட்டில்!//

    இதிலும் கடலை கட்டாயம் இல்லை ஸ்ரீராம், நான் குழந்தையாக இருந்தபோது கடலை சேர்க்காமலேதான் இக்கறி பார்த்திருக்கிறேன் எங்கும்.. இடையில தான் எங்கோ கண்டுபிடிச்சு ஒரு கல்யாண வீட்டில போட்டுச் சமைக்க.. அதைப் பார்த்த மக்கள்.. தம் கொண்டாட்டத்துக்கும் கடலை போடுங்கோ எனச் சொல்லி.. பின்னளில் அது ஒரு பாஷனாகி விட்டது.. இப்போ எப்படியோ தெரியவில்லை.. ஒரு தடவை போனால்தான் தெரியும் ஊருக்கு.

    பதிலளிநீக்கு
  79. //ஸ்ரீராம். said...
    //சில நேரங்களில் கொஞ்சம் முகில் கூட்டமாக அலையும்.. அப்போது பார்க்க ஒவ்வொரு உருவம் தெரியும்...//

    நான் கூட புரைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் பயமுறுத்துகிறேன்!//

    ஓ போடுங்கோ போடுங்கோ உங்கள் “புரைப்படத்தை” ஹா ஹா ஹா... ஆனா ஒன்று நாம் வானத்தில் பார்க்கும் அழகே தனி.. படத்தில நாம் பார்த்த அழகு சரியாக தெரியாதெல்லோ..

    இன்னும் ஒன்று.. நமக்கு தெரியும் ஒரு உருவம் அடுத்தவர் கண்ணுக்கு வேறாகத் தெரியும் ஹா ஹா ஹா...

    முகிலைப் பார்த்தாலே எனக்கு.. நினைவுக்கு வந்துவிடும் வரிகள்..

    முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தவறியதோ...

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  80. //நெ.த. said...
    ஶ்ரீராம் - //A Class ஆக இருக்கும் என்று சொல்கிறாரோ!//

    திருவிளையாடல் படம் எஃபெட்ல "நான்... நானேதான் செய்தது" என்பதற்காக அதிராவின் முதல் எழுத்து A. முன்னமேயே எங்கேயோ சொல்லியிருக்கிறார்.//

    ஆவ்வ்வ்வ் கரீட்டூஊஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  81. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ Sriram/ Athira: ... சாதாரணமாக பிட்லேயில் கொண்டாய் கடலை சேர்ப்பார்கள். //

    முதன்முதலாக அதிரா, அப்புறம் நீங்கள் - கொண்டக்காய் கதையைச் சொல்கிறேன். பிட்லேயும் பாவம்!//

    ஹா ஹா ஹா இதில எங்கின அதிரா வருகிறேன்ன்?:) நான் கடலைக்குக் கொண்டை போட்டனே:) ஸ்ரீராம் தான் “கொண்டாய் கடலையை” எனச் சொல்லிட்டார் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  82. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    * அதிரா ரெஸிப்பி படித்த குழப்பத்தில் கடலை காயாகி, காய் கடலையாகி, பைரவனே அப்பா!

    கொண்டக்கடலை என்று படிக்கவும்.//

    ஓ டை:) வராதோ?:) அதுக்கு கொண்டைபோல இருப்பதனாலதானே அப்பெயர் வந்துதாமே:) அப்போ கொண்டைக்கடலை எனத்தானே வரும் ஹையோ ஏ அண்ணன் கொயப்புறார் கர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  83. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ அதிரா: ..இங்கிலண்டை செமி ஃபைனலுக்கு போக விட்டுவிட்டீங்களே கர்ர்..//

    அது காலியாகப்போறது அங்கினதான்..!//

    ஹா ஹா ஹா..ஓ அப்பூடிச் சொல்றீங்களோ?:) ஹா ஹா ஹா ஓகே பார்ப்போம் எதுக்கும் பொறுமையா இருப்போம்:) மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  84. ஆஆஆஆங் இன்று கீதா வராமையால அதுக்குப் பணிஸ்மெண்ட்டா என் இந்த ரெசிப்பியை செய்யோணும் இல்லை எனில்.. கீதாவீட்டு
    “கொம்பியூட்டர் எலி சாகக் கடவது”:)) ஹா ஹா ஹா ஹையோ இதை நான் ஜொள்ளல்லே.. கீசாக்கா பக்கத்தில
    jk2238408 ஐயா அவர்கள் தான் சொன்னார்:) விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை.. மீ பொறுக்கிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  85. தி/கீதாவுக்கு அடிக்கடி இணையம் படுத்து விடுகிறதே. சேவையை மாற்றிப் பார்ப்பது தானே!

    பதிலளிநீக்கு
  86. நல்ல ருசியான ரெசிப்பி....அதிரா..

    👍👌👍👌👍👌👍👌👍

    பதிலளிநீக்கு
  87. அதிரா உங்கட கத்தரிக்காய் பொரியல் எங்கட வீட்டில பாட்டி செய்வாங்க. நானும். ஆனால் எண்னையில் பொரிப்பதில்லை. தண்ணீர் சேர்க்காமல் மூடி வைக்காமல் நன்றாக முறுமுறுவென்று வதக்கி தேங்காய்ப்பால் எல்லாம் சேர்த்து செய்வதுண்டு. இலங்கையில் என் பாட்டி எங்கள் குடும்ப நண்பரிடம் கற்றுக் கொண்டது. பாட்டி வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டார். நான் சேர்ப்பேன்.

    இதே போல் பீன்ஸ் காரட் பால்கறி செய்வதுண்டு. முருங்கை சின்ன வெங்காயம் எல்லாம் போட்டும் பால்கறி செய்வதுண்டு செம டேஸ்டியா இருக்கும்...

    உங்கள் குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  88. அதிரா மேலே உள்ள கமென்ட்ஸ் படித்து......ஆமாம் கொ கடலை சேர்க்க மாட்டாங்க பாட்டி. நானும் சேர்த்ததில்லை....அதான் சொன்னேன் உங்கட குறிப்பும் எடுத்துக் கொண்டேனென்டு...

    ஸ்ரீராம் பிட்லையில் நானும் கொ க சேர்ப்பதில்லை. து ப தான். இன்னிக்கு பாகற் பிட்லைதான் வீட்டில்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!