செவ்வாய், 3 ஜூலை, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீங்கி.. - கீதா ரெங்கன்




இதந்தரு மனையின் நீங்கி.. 
கீதா ரெங்கன் 




“வாணிக்கா என்னக்கா இங்க படித்துறைல உக்காந்துருக்க? அப்பா வரலை?”

“ஊர்ல இருக்காரு பாலு.”

“சொல்லாம கொள்ளாம போவமாட்டாகளே. அவக ஊருக்குப் போற மாசமுமில்லியே. அதான் கேக்கேன். அப்பாட்ட ஒரு கடுதாசி எளுதித்தரணும்னு கேக்க வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்துச்சு. இன்னிக்குப் பிரதோஷம்லா. கோயிலுக்கு வந்தா நீ இங்க உக்காந்ருக்க…”

“சும்மாதான் ஊர்ல திருவிழா. கோயில் குளம்னு கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்னு. வந்துருவாரு’

“அவ்வோ இல்லாம கஷ்டமா இருக்குக்கா…வாரேங்க்கா..…நான் பேசிக்கிடறேன்…”

பாலு! அவர்கள் தெருவில் இருக்கும் டெய்லர். பாலு மட்டுமா, பெட்டிக்கடை முத்து, பூக்கார அம்மா, காய்கறிக்கார அம்மா, டீக்கடைக்காரர், பலசரக்குக் கடைக்காரர், பழக்கடைக்காரர் என்று அத்தெருவில் உள்ள பலருக்கும் வாணியின் அப்பாதான் ஆங்கிலத்திலும், தமிழிலும் விண்ணப்பம் எழுதுவதற்கும், பல தகவல்களைத் தந்தும், ரயில் டிக்கெட் புக் செய்ய விவரங்கள் எழுதிக் கொடுத்தும் கூடச் சென்றும் உதவுவார்.

படித்துறைக்கு வந்தவர்கள் அப்பாவை விசாரித்திட பாலுவுக்குச் சொன்ன அதே பதிலைச் சொல்லிவிட்டு திரும்பிய வாணியின் கண்களில், தண்ணீர் தொட்டு ஓடும் படியில் ஒரு பெரியவர் அமர்ந்து துணிகளை ஆற்றில் நனைத்து எடுத்து வாளியில் வைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஒல்லி தேகம். 80-85 வயது இருக்கலாம். முகத்தில் அமைதியான, பக்குவப்பட்ட ஆன்மீகக் களை. என்றாலும் ஏதோ ஒன்று மறைவாய் இருப்பது போல் தோன்றியது.

அப்பாவும் இப்படித்தான் தனது துணிகளைத் தானே துவைத்து, நீலம் போட்டு அழகாக உலர்த்துவார். வாணிக்கு அப்பெரியவரைப் பார்க்கப் பார்க்கத் தன் அப்பாவின் நினைவு. அவருக்கு உதவலாம் என்று நினைத்தாள். ஆனால் துணியை நனைத்த அவரோ, கண்ணை மூடி தியான நிலையில் அமர்ந்திட, அவளும் அவர் அருகிலேயே அமர்ந்தாள்.

மனம் கடற்கரை போன்றது. அலை வந்து வந்து செல்வது போல நினைவுகளும். பெரியவரிடம் எப்படி அமைதிப்படுத்த வேண்டும் என்று கேட்க வேண்டும். ஒரு வேளை அனுபவம் காரணமாக இருக்கலாம். நதியைப் போல. நதி பாறைகளில் முட்டி மோதி, துள்ளி, வேகத்துடன் ஓடி, வளைந்தும் நெளிந்தும், குறுகியும், விரிந்தும் சென்று இறுதியில் கடலுடன் சங்கமிக்கும் போது அமைதியாகிவிடுவது போல. வாணியின் மனம் அலை பாய்தது. சென்றவாரம் வாணி கடைக்குச் சென்ற போது ஃபேன்ஸி ஸ்டோர் செல்வியும், ராஜுவும் வாணியை பார்த்துவிட்டனர். “அக்கா! ஐயா ஊர்ல இருக்காக போல? காணலையேனு கூப்டோம். “இப்ப ஊருக்குப் போற மாசம் இல்லையே! என்ன சொல்லாம கொள்ளாம போயிட்டீக எப்ப வருவீகனு” கேட்டா “ம்ம்” பார்க்கலாம்னு சொல்லி மளுப்பறாரு. என்னாச்சுக்கா?

கோயில்…..குளம்…..திருவிழா….ரெடிமேட் பதில்.

“நாங்க இப்ப எங்க ஊருக்குப் போறம்லா. டிக்கெட் புக் பண்ணனும். ஐயா இருந்தாகனா உடனே ரயில் விவரம், டிக்கெட் புக்கிங்க் விவரம்னு எல்லாம் சொல்லி புக் பண்ணியாச்சா பண்ணியாச்சானு கேட்டு தேதிய நினைவுபடுத்திட்டே இருப்பாக. காலைல கடை தொறக்க லேட்டானா உடனே ஏன் லேட்டுனு, தொறந்ததும் விளக்கு பொருத்த லெட்டாயிடுச்சுனா “ஏன் இன்னும் விளக்கு பொருத்தி சாமி கும்பிடலை? அதுக்குள்ள என்ன சேல்ஸ்னு,. வேலை செய்யுற பிள்ளைக சும்மா இருந்தா வெரட்டுவாக. என் மாமனாரு பீடி குடிப்பாக. குடிக்காதனு சொல்லி சொல்லி குறைச்சு இப்ப பீடி குடிக்கறதையே நிறுத்திட்டாகனா பாருங்க. அவருக்கு ஐயானா உசுரு…. இப்படி எங்களுக்கெல்லாம் குடும்பத்துப் பெரியவரு மாதிரி.”

செல்வி சொல்லிக் கொண்டே போக, வாணிக்குக் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. எங்கேனும் தான் அழுது தன் வாய் வழி தெரிந்து விடுமோ? “சரி செல்வி. அப்புறமா வாரேன்”

மெடிக்கல் கடை வைத்திருக்கும் ஜானகியும் சொல்லியாயிற்று. “வயசான காலத்துல இப்ப ஏன் தனியா அங்க போய் இருக்கணும்?”

‘ஜானகியின் வார்த்தைகள் வித்தியாசமாக இருக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லுவது? அப்பாவுடன் பேசியிருப்பார்களோ? தெரிந்திருக்குமோ?’ எப்படியோ சமாளித்து வந்துவிட்டாள்.

“எங்க உங்க அப்பாவைக் காணலை? ஊருக்குப் போயிருக்காரா? கரண்ட் கட் பத்தி தகவல், ஃப்ளாட் மெயின்டெனன்ஸ் ஹெல்ப் இப்படி ரொம்ப ஹெல்ஃபுல், ஃப்ரென்ட்லி. தகவல் பீரோ.” இது ஃப்ளாட் செக்கரட்டரி. வீட்டில் நடந்தது தெரிந்துருக்குமோ? தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் போலீசுக்குச் சொல்லியிருப்பார்கள். வாணியின் மனம் அலை பாய்ந்தது.

எப்ப வருவாரு?”

“வருவார் அங்கிள்.”

“ஆமாங்க, எங்க என்ன சீப்பா கிடைக்கும், ஆஃபர் போடறாங்க எல்லாம் சொல்லிடுவாரு தாத்தா.” கீழ் வீட்டுப் பெண்.

உண்மைதான். செல்வியும், ராஜுவும் வாணியின் அப்பாவுக்கு நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் கடையை விட வேறு கடையில் ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் அங்குதான் சாமான் வாங்குவார். செல்வியும் ராஜுவும் தவறாக நினைத்ததில்லை. அத்தனைக்கு அவரிடம் மரியாதை. புரிதல். அன்பு. 

மழை பெய்திருந்ததால் எழுந்த சில் காற்று வாணியின் மனதை சற்று ஒய்வு எடுக்க வைத்தது. இளமையான ஆறு சலசலவென இனிய ரிதத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. பெரியவர் இன்னும் தியானத்தில்தான் இருந்தார்.

இனியும் கோயிலுக்கு வருவோர் படித்துறைக்கு வரும் போது கேட்கக் கூடும்தான். ஏதேனும் ஒரு பதிலை சொல்லிச் சமாளித்தால் ஆயிற்று. குறிப்பாக முகத்தில் சோகம் கூடாது என்று நினைத்த வாணி மனதைக் கொஞ்சம் அமைதிப்படுத்த துள்ளி ஓடும் ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்த போது, மொபைல் அடித்தது. பெரியவரின் தியானத்திற்கு இடைஞ்சல் கூடாது என்று வாணி சற்று தள்ளிச் சென்று பேசினாள். வாணியின் சின்ன மாமியார்.

“என்னமா? எப்படிருக்க? அக்கா, மாமா எல்லாம் வந்துட்டாங்களா? உங்கப்பா எப்படி இருக்காரு.…பாவம்”. சின்னத்தைக்கும் தெரிந்துவிட்டது போலும்.

“நல்லாருக்காங்க. அத்தையும், மாமாவும் எங்க அப்பா இல்லைனதும் கொஞ்சம் அப்செட். எங்கப்பா அவங்களை நல்லாக் கவனிச்சுக்குவார்னு சொல்லிட்டே இருக்காங்க.”

“இதை உன் புருசன்கிட்ட சொல்ல மாட்டாங்க அவனை ஒண்ணும் கேக்கவும் மாட்டாங்களே. அப்புறம் நீ கொடுத்த பரங்கிக்கா புளிக்கொளம்பு நல்லாருந்துச்சு. ஆனா உங்கப்பா செய்யறா மாதிரி இல்லை. அவரு சூப்பரா செய்வாரு.”

மனம் அலைபாயத் தொடங்கிய போது மீண்டும் மொபைல் அடித்திட வாணியின் அப்பா! “ஹை அப்பா. ஆயுஸ் நூறு. எப்படிருக்கீங்கப்பா”

“.ஆயுஸ் நூறா? என்னம்மா நீ. வெளாடற...”

“விளையாடலைப்பா. எல்லாரும் விசாரிச்சிட்டுருக்காங்க. சரி என்ன விஷயம்பா?”

“டேபிள் மேல ஒரு நோட் பாட் இருக்கும்ல. அதுல ஏசி மெயின்டனன்ஸ் ஆளு நம்பர் இருக்கும். செர்வீஸ் ட்யூ. கூப்டுக்க. அப்புறம் ப்ளம்பர் நம்பர், எலக்ட்ரீசியன் நம்பர் எல்லாம் எழுதி வைச்சுருக்கேன். கிளம்பும் போது சொல்ல விட்டுப் போச்சு. மாப்பிள்ளையோட அப்பா அம்மா வந்துட்டாங்களா? எல்லாரும் நல்லாருக்காங்கல்ல? வேற ஒன்னுமில்லைல?” வாணிக்கு மனம் என்னவோ செய்தது.



பெரியவரைப் பார்த்தாள். இன்னும் தியானத்தில்தான் இருந்தார். அருகில் சென்று அமர்ந்து அப்பா சொன்னதை மனதில் பதித்துக் கொண்டாள். மனம் தன் வேலையைத் தொடங்கியது. இப்படித்தான் வாணியின் அப்பா அத்தனை உதவியாக இருந்தவர். ஏனோ வாணியின் கணவனுக்கு மட்டும் அவர் மீது அத்தனை வெறுப்பு.

இவ்வுலக சாமர்த்தியமும், சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் திறனும் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளை பட்டியலில் வாணியின் பெற்றோரும் அடக்கம். அதனால் என்ன? குறைபாடு இல்லாத மனிதர்கள் யாரேனும் உண்டோ? குழந்தைகள் சொல்வதுதான் அவர்களுக்கு. வாணிக்கும் அவள் அண்ணனுக்கும் திருமணம் நடந்து அவர்கள் வேறு வேறு ஊர்களில் வாழ்க்கையைத் தொடங்கினர்.

வாணியின் அண்ணன் வீடு கட்டிய போது வாணியின் பெற்றோர் தங்களிடம் இருந்த சொற்ப பணம் முழுவதையும் கொடுத்து உதவினார்கள். வாணிக்குப் புகுந்த வீட்டில் பிரச்சனைகள் இருந்தாலும் அவள் தன் பெற்றோர் வரை எடுத்துச் சென்றதில்லை. அவர்களும் தலையிடமாட்டார்கள். ஆனால், அண்ணனின் திருமணத்திற்குப் பிறகு அண்ணியும் அவள் பெற்றோரும் பிரச்சனைகளை எழுப்பினார்கள்.

வாணியின் அம்மா நிம்மதியாகக் கண்ணை மூடினார். அப்பா ஊரில் தனியாக இருப்பதைவிட, தங்களில் யாருடனேனும் இருக்கலாமே என்று வாணி சொன்ன போது யாரும் எதிர்வாதம் செய்யவில்லை. அவள் அண்ணி அவளது பெற்றோரின் அட்வைஸின்படி வாணியின் அப்பாவின் கணக்குகளுடன் தன் பெயரையும் ஜாயிண்டாக இணைத்துக் கொண்டாள். எங்கேனும் தங்களின் பணம் அப்பா வழி வாணிக்கு வந்துவிட்டால்? வாணிக்கு புரியாமல் இல்லை. அவளுக்கு எதையுமே பிரச்சனையாக்கும் பழக்கம் கிடையாது.

வாணியின் அப்பா வேலைதேடிக் கொண்ட போது வாணியின் கணவன் வேலைக்குப் போகக் கூடாது என்றான். அவன் பின்னர் பிரச்சனை செய்வான் என்பது வாணிக்குக் கணிக்கும் அளவிற்குப் புத்திசாலித்தனம் இல்லை. வாணியின் அப்பா வீட்டில் சும்மா இருக்காமல் பல உதவிகள் செய்தார். தந்தையின் மீதான வாணியின் பாசம் கண்மூடித்தனமானதுமில்லை.

வாணி அப்பாவைத் தன்னுடன் வைத்துக் கொண்டது தவறு என்று அப்போது சொல்லாத அண்ணனும் அண்ணியும், அண்ணியின் பெற்றோரும் சொல்லத் தொடங்கியதால் இரு குடும்பத்திற்குமான பிரச்சனைகள் அடியில் புகைந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் இருந்த உறவு, ஆட்டம் காணத் தொடங்கியது.

வாணியின் அண்ணன் அப்பாவைத் தங்களிடம் சில மாதங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று அழைத்துக் கொண்டான். வாணியின் அண்னனும் அண்ணியும் அவள் பெற்றோரும் சேர்ந்து அவர்களது பணம் அப்பா வழி வாணிக்கு வந்துவிட்டது, அப்பா எந்தச் சொத்தும் சேர்த்து வைக்கவில்லை, பொய் பேசுபவன், வாணியுடன் பேசினால் தங்களுடன் இருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லித் துன்புறுத்திட, வாணியின் அப்பா எப்படியோ தப்பித்து வந்துவிட்டார்.

இப்படியானவர்களிடம் வாணி விளக்கங்கள் கொடுத்தால் எடுபடுமா என்ன? பீஷ்ம சபதம் போல, தன்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று தன் அம்மாவிற்குச் செய்த சத்தியத்தைக் காப்பாற்றுவதில் உறுதியாகவும் இருந்தாள். கூடவே “நான் போயிட்டேன்னா உங்கப்பா ரொம்பக் கஷ்டப்படுவாரு” என்ற அம்மாவின் தீர்க்கதரிசனமான வரிகளும் வாணிக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.

வாணியின் அப்பாவிடம் பணம் எதுவுமில்லாமல் ஆனது. ஆனால் அவர் உறவினர் சிலர் அவர் மறுத்தாலும் அவருக்கு அவ்வப்போது பணம் கொடுத்து உதவினர். அவளுடைய அப்பா அவர்கள் வீட்டிற்கு வந்த போது ஏற்றுக் கொண்ட அவள் கணவன், இடையிடையே பிரச்சனை செய்தாலும், பின்னர் வார்த்தைகளால் வதைக்கத் தொடங்கினான்.

“நீதான் ஒரு தண்டச் சோறுனா, உங்கப்பனும் வெளங்காதவன். உனக்கும் உங்கப்பனுக்கும் சோறு போட்டே நான் கடங்காரனானேன். நீ என்ன சொத்து கொண்டு வந்த? காலாட்டறவனுகெல்லாம் வேளா வேளைக்கு சமைச்சுக் கொட்டுவியோ. ஏன் அவன் பளையது சாப்பிட மாட்டானோ?”

“அவனவன் 80 வயசுலயும் வேலைக்குப் போயி சம்பாதிக்கறான். இவன் என்னடானா இத்தனை வருஷம் வேலைக்கே போகாம இங்க உக்காந்து தண்டச் சோறு தின்னுக்கிட்டு….வெளங்காதவனை எல்லாம் இந்த வீட்டுல வைச்சு சோறு போட வேண்டிக்கிடக்கு. ஏன் நீயோ உங்கப்பனோ உங்க அண்ணன், அண்ணி அவங்க அப்பா அம்மாகிட்ட மன்னிப்பு கேட்டு உங்கப்பனை அனுப்ப வேண்டியதுதானே.”

“அவங்க உங்களையும் தான் பழி சொன்னாங்க. நீங்களும் அவங்களோட சண்டை போட்டீங்கதானே” என்று வாணி தன் கணவனிடம் கேட்கவில்லை. தன் பக்க நியாயத்தைச் சொல்ல “நீ மட்டும் ஒழுங்கா” என்று கம்பேர் செய்து கேள்வி கேட்டுத் தன்னை நியாயப்படுத்திக் கொள்வது சரியல்லவே. அவன் வாணியின் தந்தையை துரத்த வேண்டும் என்று தீர்மானித்த பிறகு அவனிடம் பேசுவதில் பயனில்லை. வாணியின் அண்ணனோ தொடர்பிலேயே இல்லை. அப்பா அவள் அண்ணனைக் கூப்பிட்டுப் பேசினால் ஃபோனிலும் வசைப்பாடும் அவர்களுடன் என்ன பேசுவது?

“உங்கப்பன் சரியான பொம்பளை பொறுக்கி. கீழ்வீட்டுப் பொண்ணு பிரசவத்துக்குக் கஷ்டப்பட்டா இவனுக்கு என்ன வந்துச்சு? அவங்க சொன்னா நின்னு கேக்கணுமாக்கும்? வெக்கங்க்கெட்டவன். இவன் அந்த ஃபேன்ஸி ஸ்டோருக்கு எதுக்குப் போறான்? அந்தப் பொண்ணுங்களைப் பார்க்க. பொம்பளை பொறுக்கி. உங்க அண்ணி ஏன் உங்கப்பனை வெரட்டினா தெரியுமா? இவன் அவ இடுப்புல கைய போட்டத நானே பாத்தனே.”  எதற்கெல்லாமோ பழி சொன்ன அண்ணி இதையும் அம்பலப்படுத்தியிருப்பாளே ஆனால் இல்லையே என்று வாணிக்குத் தோன்றியது.

“உங்கப்பனை இந்த வீட்டுலருந்து வெளிய தொரத்தனும். அப்பத்தான் வெளங்கும். நீ தொரத்த மாட்ட ஏன்னா உங்கப்பன் உன்னையுந்தான் வைச்சுட்டுருக்கான். அதான் நீ ஒங்கப்பனுக்கு இத்தனை சப்போர்ட். அதான் அவன் திமிரெடுத்து ஆடறான்” கடவுளே! என்ன வார்த்தை இது!? படிச்சவன் பேசும் வார்த்தைகளா இது? வாணிக்கு மனம் மிகவும் நொந்து போனது. 

“வாணி, மாப்பிள்ளை தன் துணி எதுவும் தோய்க்காம அப்படியே போட்டு வைச்சுருக்காரு. நான் தோச்சுரட்டுமா? இல்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து தோச்சுருவோம். ‘இவருக்கு எதுவும் உரைக்காதா’ வாணிக்கு வியப்பு. அதிகம் வார்த்தைகளால் வதைபட்டபோது பேசினார்தான். வாணியின் கணவனின் கோபம் தலைக்கேறியது. தன் கணவனை அடக்க முடியாத வாணி தன் அப்பாவைத்தான் அடக்கினாள். மகன் வீட்டிலிருந்து தப்பித்து மகள் வீட்டிற்கு வந்தவர் இப்போது எங்கு போவார்?

சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாத ஒருவருக்கு எத்தனை துன்பங்கள் என்பதை வாணியால் புரிந்துகொள்ள முடிந்தது. வாணி பொறுக்க முடியாமல்,. “அப்பா வெளில ஏதாவது ஒரு ரூம் பார்த்துரலாம்பா? நீங்க அங்க இருந்துக்கங்க.” என்ற போது அவர் மனம் வேதனைப்பட்டாலும் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை. அதற்கான ஏற்பாடுகளை வாணி செய்யத் தொடங்கிட அதற்குள் நிலைமை விபரீதமானது.

வாணி உறவினர் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்த சமயம், அவள் கணவன் அவரை அடித்து “வீட்டை விட்டு இறங்குடா நாயே” என்று சொல்லி சுவருடன் வைத்து மோதிட அவர் தலையில் முழைத்து, மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. அதற்கு முந்தைய தினமும் அவள் வெளியில் சென்றிருந்த போது அவள் கணவன் அப்பாவை அடித்ததாகவும் அன்று அவள் கணவன் வீட்டில்  இருந்ததால் அவளிடம் அப்பாவால் சொல்லமுடியவில்லை என்றும் சொல்லிட வாணிக்கு மனது மிகவும் வலித்தது.

அப்பாவை உறவினர் உதவியுடன் வெளியில் தங்க வைக்கலாம் என்று யோசித்த வேளையில், “உங்கப்பனை பக்கத்துலயே வைச்சுக்கிட்டுக் கொஞ்சலாம்னு கனவு காணாத. நான் விட மாட்டேன். அவன் தனியா இருந்து கஷ்டப்பட்டுச் சாவணும்.” என்று நெருப்புப் பந்தாய் வார்த்தைகள். அவள் அப்பா அவள் அண்ணனுக்குச் செய்தி சொல்லிவிட்டு ஊருக்கே சென்றுவிட்டார். தன் குழந்தைகள் அருகில் இல்லையே என்ற உணர்வு அவள் அப்பாவிற்கு ஏற்படத் தொடங்கியது.

“ஒரு வழியா வாணி அப்பாவை அடிச்சுத் தொரத்திட்டேன்” என்று பெருமையாகப் பேசினான் வாணியின் கணவன். யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. அவன் வாய்ஜாலக்காரன். பேசி ஜெயிப்பதில் கில்லாடி.

“அவந்தான் எல்லாம் வாங்கித்தாரானே. அப்ப கோபம் வந்தா அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டுத்தான் போவணும் பொம்பளை நீ” நாவில் நரம்பில்லாதவர்களின் வார்த்தைகள். வலதுகையால் சோறு போட்டு இடத் கையால் அடிப்பது. வலது கையை மட்டுமே பார்த்துப் பொறுத்துப் போன வாணிக்கு இடது கையின் இந்த செயலைப் பொறுக்க முடியவில்லை.

வாங்கிக் கொடுத்தல், பொருட்கள் என்பதை எல்லாம் விட வாழ்க்கையில் மிக மிக முக்கியம் கம்பாட்டிபிலிட்டி, நல் வார்த்தைகள் இல்லையோ? வாணிக்கு, தான் எப்போதோ வாசித்த, ராஜம் கிருஷ்ணனின் “சுழலில் மிதக்கும் தீபங்கள்” கதையை நினைவுபடுத்தியது.

திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்கு அவள் முன்னேற்றங்கள், திறமைகள் முடங்கும் நிலை வந்தால், சுய விருப்பத்தினால், அன்பினால், அன்யோன்யத்தினால் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்வதற்கும், ஏதோ கடமைக்காக, இந்தச் சமூகத்திற்காக, வேறு வழியில்லை என்று விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு. சில பெண்களுக்கு ஒரு வயதிற்கு மேல் சலிப்பும், அயற்சியும் ஏற்படத்தான் செய்கிறது.

அக்கதையில் கதாநாயகி எடுக்கும் முடிவு வாணிக்கு ஏற்புடையதாக இல்லை. அதே சமயம் வீட்டில் கணவனது வார்த்தைகளையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலை. மனப்போராட்டம். கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. திடீரென்று காற்றில் தவழ்ந்து வந்த கீதம் அவள் மன அலையை அமைதிப்படுத்தியது. அப்பெரியவர்தான் துணிகளைக் கும்மிக் கொண்டே பாடிக் கொண்டிருந்தார்.

பதமலர் போற்றுகின்றேன் புவனேஸ்வரி உந்தன்
பாதங்களே கதி எனக்கு ஜகதீஸ்வரி
இகபர சுகத்தினிலே உழலுகின்றேன், உந்தன்
காலடி நிழல் தந்து காத்திடுவாய்
அபயம் அபயம் என்று ஓடி வந்தேன், எனக்கு
அடைக்கலம் உனையன்றி எவர் தருவார்?  என்று பாடி முடித்தார்.

“அப்பா, ரொம்ப நல்லா பாடுறீங்க.”

“பெரியவரு பாட்டு வாத்தியார்தான் புள்ளை. பெரிய வேலையிலயும் இருந்தவருதான். ஆனா அவரு பெத்த கெரகங்க சரியில்லை. அதான் அவரு இப்படி இங்க தனியா அது சரி உங்கப்பா எங்க?” குளிக்க இறங்கிய வள்ளியைச் சமாளித்தாள்.

“அப்பா?” நெற்றியும் கண்களும் சுருக்கிச் சிரித்தார். விரக்தி?

“உங்கள நான் அப்பானு கூப்பிடலாம்தானே? கொடுங்க துவைச்சத. நான் அலசறேன்.” என்றவளை அவர் விடவில்லை என்றாலும் வாணியும் வள்ளியும் அலசி பிழிந்து பக்கெட்டில் போட்டானர். நுரை இல்லை ஆனால் துணிகள் மணத்தது. ஹோம் மேட் ஆர்கானிக் சோப்? “தாங்க்ஸ்” பக்கெட்டுடன் பெரியவர் ஏறினார்.

“நீங்க எனக்கு பாட்டு கத்துக் கொடுப்பீங்களாப்பா?”

“பாட்டுல ஆர்வம் உண்டா? நான் கத்துக் கொடுக்கறதில்லை உன் பெயர் என்ன?”

வாணி அவர் பாடிய வரிகளையே பாடி, அப்படியே ராஜா இசையமைத்த “வாராயோ உனக்கே சரண்” பாடலைத் தொடங்கிட, அவரது புருவங்கள் உயர்ந்து முகத்தில் ஆச்சரியத்துடன் கூடிய பெரிய புன்னகை. “ரிஷிவாணி”? புன்சிரிப்புடன் ஆமோதித்தாள். 

“அபூர்வ ராகம், பெயர்!!” என்றவர் ஏதோ யோசனையுடன் படிகளில் ஏறியவர் தள்ளாடிட வாணி தாங்கிப் பிடித்து, அவர் படிகளில் ஏற உதவினாள். “நாளைக்கு சாயந்திரம் 4 மணிக்கு என் வீட்டுக்கு வா!”. வாணிக்கு மகிழ்ச்சி. மேலே ஏறியதும், அவர் சொன்ன வார்த்தைகள்.

“உங்கப்பா ரொம்பக் கொடுத்து வைச்சவர்” அகராதியில் இதற்கான அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறாள் வாணி.

(பாட்டு வரிகள் வலைப்பதிவர் கவிநாயா https://ammanpaattu.blogspot.in அவர்களின் வரிகள்)

157 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹை நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊ வா இங்கு....இப்பத்தான் பானுக்காவுக்குக் கமென்ட் போட அடித்தேன் அதற்குள் 6 என்றதும் இங்கு ஓடி வந்தேன் கீதாக்கா துரை அண்ணா வந்துருப்பாங்களோனு...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. ஓ...

    இன்றைக்கு
    கீதா அவர்களின் கை வண்ணமா!...

    பதிலளிநீக்கு
  5. ஓ ஆமாம் ல இன்று இந்தக் கதை...நான் இன்று ஒரு நெருங்கிய உறவினரின் 90 வது பிறந்தநாள் ஹோமத்திற்குச் செல்ல வேண்டும். 7 மணிக்குக் கிளம்பணும் இங்கு ஆஜர் வைத்துவிட்டுச் செல்லலாம் என்று காத்திருந்தேன்....ஸோ போய் வந்து பதில் கொடுக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கீதாக்கா என்ன க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானும் போட்டிக்கு வந்தாச்சே ஹெ ஹெ ஹெ ஹெ சரி பானுக்காவைக் கொஞ்சம் கவனிச்சுட்டு அப்பால வாரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். காணாமல் போன கனவுகள் ராஜி பெண் முகநூலில் பேசுவதைக் கேட்டு நேரம் ஓடிவிட்டது!

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  10. வயதான காலத்தில்
    இப்படியும் கஷ்டங்களா?...

    வேதனைதான் வாழ்க்கை என்றால்
    தாங்காது பூமி....

    கவியரசரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன....

    கதையை நன்றாக நடத்தியிருக்கின்றார் - கீதா....

    ஆனால் மனம் தான் கனக்கின்றது...

    பதிலளிநீக்கு
  11. மக்களே இக்கதைக்கும் நம்ம ஸ்ரீராம் தான் தலைப்பு!!! என்ன கவிநயம் இல்லைஅய துரை அண்ணா...செம தலைப்பு இல்லையா....மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்....தலைப்பு ஈர்க்கும் ஒன்று!!! கட்டுரையானாலும் சரி கதையானாலும் சரி தலைப்புதான் ஒருவரை உள்ளே இழுக்கும்...தலைப்பு மன்னர் ஸ்ரீராமுக்கு மிக்க நன்றி!!! இதை அடித்துவிட்டு கண்ணி ரொம்ப டிமான்ட்....அப்புறம் கடமைகள் என்று ஓடிவிட்டென் இப்ப துரை அண்ணாவின் கமெண்டையும் பார்த்தேன்...இதோ பப்ளிஷிங்க்...ஸ்ரீராம் மிக்க நன்றி மீண்டும்...வேறு என்ன சொல்ல என்று தெரியலை

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி கீதா ரெங்கன்.
    நன்றி துரை ஸார்.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. கதை இல்லை நிகழ்வுகள் மனதை கணக்க வைத்து விட்டது.

      இது எனக்கு மட்டும் அறிந்த உண்மை வாழ்க்கையின் சிறு பகுதி என்றே தோன்றுகிறது... இதற்கு மேல் எழுத வேண்டாம் என ஒதுங்குகிறேன்...

      நீக்கு
  15. கீதா, இதென்ன ஒரே சோகம்.
    அப்படி அடிக்கிற கணவனோடு ஒரு பெண் இருக்கும் காலமா இது.
    மனம் வெகுவாகக் கனக்கிறது.
    நிஜ அப்பாவுக்குப் பதில் இன்னோரு அப்பாவைத் தேடிக் கொண்டாளா வாணி. இதனால் தொந்தரவு வந்தால் என்ன செய்வாள்.பாவம். கதையின் நடை ரொம்ப அழகு. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம்.

    நல்ல கதை. ரொம்பவே மாறிவிட்ட இச்சூழலிலும் இப்படியான பெண்கள்/ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

    பாராட்டுகள் கீதா ஜி1

    பதிலளிநீக்கு
  17. நான் சில வருடங்களாக எதையும் படிப்பதில்லை.கவனம் செலுத்துவதில்லை.

    என் மவுத்தார்கன் இசையை தவிர.



    இருந்தாலுமிதை படித்து பார்க்கலாமே என்று தோன்றியது.



    "அவள் அண்ணி அவளது பெற்றோரின் அட்வைஸின்படி வாணியின் அப்பாவின் கணக்குகளுடன் தன் பெயரையும் ஜாயிண்டாக இணைத்துக் கொண்டாள். எங்கேனும் தங்களின் பணம் அப்பா வழி வாணிக்கு வந்துவிட்டால்? "

    இது போன்ற நிலையை நேரிலேயே கண்டவன் நான். பாவம் அந்த பெரியவர் மனம்வெதும்பி .இளைத்து மெலிந்து மாண்டு போனார்..ஆனால் ஒரு சிறு திருத்தம். கணவன் என்பதற்கு பதில் மகன். மனைவியை எதிர்க்க துணிவற்ற மகன். எல்லாம் இருந்தும் பல பெரியவர்களின் வாழ்க்கை இதுபோல் அமைந்துவிடுகின்றது.மகன் செத்த பிறகு கொல்லி போடுவான் என்று நினைத்து கொல்லிக் கட்டையை எடுத்து தலையை சொரிவதுபோல் தான் உண்மையில்நடக்கிறது.

    ஆனால் பாசத்தை மூட்டை கட்டி விட்டு புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.

    மற்றவர்களை இறைவன்தான் காப்பாற்றவேண்டும்.என்ன செய்வது யார் மனதை யார் வேண்டுமானாலும் ஒரே ஒருநொடியில் கலைக்கக்கூடும். ராமாயணத்தில் வரும்கூனி போல. இதுபோன்றசம்பவங்கள் மனதை பிழிகிறது. ஆனால் என்ன செய்ய " மனம்" என்று ஒன்று இருக்கும் வரை. வேறு வழியில்லை. பகவான் ரமணர் திருவடிகளே காரணம்.

    பதிலளிநீக்கு
  18. "கொள்ளிக்கும் " " கொல்லிக்கும் " பெரிய வேறுபாடு இல்லை. கொள்ளி போடுவதை உணர முடியாது. ஆனால் "கொல்லி"மிகக் கொடுமையானது.சொல்லி அழவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  19. என்னவொரு அராஜகம் என்றே தோன்றியது,,,

    பதிலளிநீக்கு
  20. @ Pattabi Raman: ..பகவான் ரமணர் திருவடிகளே காரணம்.//

    திருவடிகளே சரணம் என்றுதானே எழுத நினைத்தீர்கள்?

    பதிலளிநீக்கு
  21. @ கீதா : .. என்றாலும் ஏதோ ஒன்று மறைவாய் இருப்பது போல் தோன்றியது.//

    பொதுவாகவே நன்றாகக் கவனியுங்கள். ஒவ்வொரு முகத்தின் பின்னும் ஒன்றல்ல, பல சங்கதிகள்..

    பதிலளிநீக்கு
  22. கீதா, கதை மனதை கனக்க வைத்து விட்டது.
    பக்கத்திலிருந்து யார் வாழ்க்கையோ கீதாவை பாதித்து இருக்கிறது. உண்மைகதை போல்தான் இருக்கிறது.
    ஓவ்வொரு வீடுகளில் நடப்பதை பார்க்கிறோம். கணவன் தன் பொற்றோர்களை வைத்துக் கொள்ளவே கஷ்டபடும் காலம் , இதில் மனைவியின் பெற்றோர்களை வைத்துக் கொள்வது என்பது பெரிய மனது, நல்ல மனது இருந்தால் மட்டுமே சாத்தியம்.

    அழகான நடையில் கதையை கொண்டு போகிறார்.

    பணம் இல்லாத அப்பா எப்படி தனியறையில் இருக்க முடியும்?
    அப்பாவின் அருகாமையை படித்துறை அப்பாவிடம் எதிர்ப்பார்க்கும் வாணி.

    பதிலளிநீக்கு
  23. காலையிலேயே படித்துவிட்டேன், கொஞ்சம் நெடியதாக இருந்தபோதும். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. கதைக்கு தலைப்பு கொடுத்த ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்.
    கீதாவின் கதைக்கு வாழ்த்துக்கள்.

    முதுமையில் கவலையின்றி வாழ கொஞ்சம் தங்களுக்கு என்று பணசேமிப்பும் வேண்டும் , குழந்தைகள் , உறவினர் அன்பும் வேண்டும்.
    இது எல்லா முதியவர்களுக்கும் கிடைக்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துக்கள் கீதாக்கா...

    ஆனால் என் மனம் ஆறவில்லை ...கதைதான் ஆனாலும்...


    என்ன மனிதர்கள்...ஏன் இப்படி

    அனைவருக்கும் முதுமை உண்டு அல்லவா...
    அதை நினைக்காமல்...வாழும் வாழ்வு....எதற்கோ..

    பதிலளிநீக்கு
  26. ஆஆஆஆ கீதா ஸ்ரோறியா?... நான் வெளியே நிற்கிறேன் கொஞ்சம் லேட்டாத்தான் வந்து படிச்சு..... கொமெண்ட்ஸ் வரும்... அதுவரை ஒரு ஸ்ரோங் ரீ ஊத்தி வையுங்கோ ....

    பதிலளிநீக்கு
  27. துரை செல்வராஜு அண்ணா கருத்திற்கு மிக்க நன்றி.

    //வயதான காலத்தில்
    இப்படியும் கஷ்டங்களா?...//

    இதையும் விட கொடுமையான ஒன்று சமீபத்தில் அறிந்தேன். எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் எங்கள் ஏரியாவில் சமீபத்தில் பார்த்தேன். முன்பு குடியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்தவர் 15 வருடங்களுக்கு முன்பு. தன் பேரன்களுக்கு நன்றாகப் பாடம் எலலம் சொல்லித் தருவார். கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருப்பார். அதாவது நல்ல விதத்தில்தான். நல்லொழுக்கம், சிக்கனமாக இருக்க வேண்டும் என்று. அவரது இரு மகன்ககளும் அவரது ஒரே சொத்தான வீட்டை எடுத்துக் கொண்டு இப்போது அவர் தெருவில். கடந்த 5 வருடங்களாக எங்கள் ஏரிய்யவில் இருக்கும் பெண்மணி அவரைத் தெருவில் பார்த்து இரக்கப்பட்டு தற்போது உணவளித்து படுக்க இடம் கொடுத்துப் பார்த்து வருகிறார். இத்தனைக்கும் அந்தப் பெண்மணி வீட்டு வேலைகள் செய்து வருபவர். பல வயதானவர்களைப் பார்க்கும் போது வேதனைதான் வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வாங்க அதிரா ஸ்ராங்க் ரீ ரெடியா நீங்க வரும் போது சூடா கிடைக்கும்...கூடவே சமோசாவும். வாங்க வரும் முன் ஒரு சின்ன அதிர்வு கொடுங்க இங்க ரீயும் சமோசாவும் ரெடியா இருக்கும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. காலம்பரேயே கதையைப் படிச்சாலும் வேலை இருந்ததால் உட்காரலை! மனைவி இறந்த பின்னர் கணவன் தனியாக இருப்பது ரொம்பவே கஷ்டம்! இதை என் சொந்தக்காரர் ஒருத்தர் ரொம்பவே மனம் வெதும்பிச் சொல்லி இருக்கார். இத்தனைக்கும் பிள்ளைகள் தான் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் சாப்பாடு நேரத்துக்குக் கிடைக்காமல், டிஃபன் சூடாகக் கொடுக்காமல், பண்ணி வைச்சுடுவாங்களாம் காலம்பரேயே! தோசை எல்லாம் காலம்பர வார்த்தால் எப்படி இருக்கும்? காஃபியும் போட்டு ஃப்ளாஸ்கில் வைச்சுடுவாங்களாம். தோசையை ஒரு டப்பாவிலும் போடாமல் தட்டிலேயே போட்டு அப்படியே பார்க்கவே வரட்டுனு இருக்கும். நானே பார்த்திருக்கேன். பாவமாகத் தான் இருக்கும். மனைவி என்றால் இப்படி எல்லாம் செய்ய மாட்டா! என்றாலும் அதுக்கே கோவிச்சுப்பேன். அதுக்கெல்லாம் தான் இப்போ அனுபவிக்கிறேன் என்பார்!:(

    பதிலளிநீக்கு
  30. பிள்ளைகள் இருவர் இருக்க, இருவரும் பார்த்துக்காமல் கடைசியில் பெண் பார்த்துக் கொண்ட அனுபவங்களையும் கண்டிருக்கேன். அப்புறமா ஜோசியத்தில் சொன்னாங்க என்பதால் பிள்ளை ஒருத்தர் அப்பாவை அழைத்துக் கொண்டுபோனார். ஆனாலும் அப்பா அங்கே ரொம்ப நாட்கள் இருக்கவில்லை! :(

    பதிலளிநீக்கு
  31. பெற்ற தகப்பனுக்கு ஒரு வாய்க் காஃபி கூடக்கொடுக்க முடியாமல் தவித்த பெண்களையும் பார்த்திருக்கேன். அப்படிக் கணவனை மீறிக் காஃபி கொடுத்துட்டா அப்புறம் அந்தப் பெண் அங்கே இருக்க முடியாது! விரட்டி விடுவார் கணவன்! ஒரு முறை தோய்த்த துணி காயலைனு அப்புறம் எடுத்துக்கலாம்னு பிறந்த வீட்டில் போட்டு வந்த ரவிக்கையை உடனே போய் எடுத்து வா என விரட்டி விட்ட கணவனையும் தெரியும். மனைவி, பெண் ஆகியோரின் உடைகளைத் தன்னிடமே வைத்திருந்து அவங்களுக்கு ஒரே உடையை மாற்றி மாற்றி அணியக் கொடுத்திருக்கும் கணவனையும் பார்த்திருக்கேன். ஆனால் யாரானும் வந்தால் அவங்களுக்குத் துணிமணிகளில் அக்கறையே இல்லாமப் போட்டு வைச்சிருந்தாங்க. நான் எடுத்து பத்திரப் படுத்தி இருக்கேன். இதோ, சாவி இங்கே தான் இருக்கு. இவங்க எடுத்துக்கலாமே என்பார்! ஆனால் வரவங்க எதிரே தான் சாவி வெளியே தொங்கும். அவங்க போனதும் சாவி அவர் சட்டைப்பைக்குள்ளேயே போகும்! வெளியே போனாலும் சாவியை விடாமல் எடுத்துச் செல்லுவார். ஒரு முறை அறுவை சிகிச்சை ஆனப்போவும் சாவியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய் அங்கே உள்ள நர்சிடம் கொடுத்து வைத்தார்! நிறையப்பார்த்தாச்சு!:))))

    பதிலளிநீக்கு
  32. வல்லிம்மா சமீபத்தில் இப்படியான சோகங்கள் நிறைய கேள்விப்பட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. நேற்று என் கஸினின் மனைவி பேசிக் கொண்டிருந்தாள். அவள் வேலை செய்யும் கடைக்கு எதிரே ஒரு மூதாட்டி சாலையைக் க்ராஸ் செய்யும் போது ஒரு வண்டி இடித்துவிட்டது. மூதாட்டி கீழே விழுந்து கொஞ்சம் தலையில் அடி. மயங்கிவிட்டார். என்ன செய்ய என்று யாருக்கும் தெரியவில்லை. இடித்தவருக்கும் தெரியவில்லை. கூட்டத்தில் ஒருவர் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று காட்டி அவருக்குச் சுயனினைவு வந்ததும் "அம்மா உங்கள் வீடு எங்கிருக்கு? மகன் மகள் என்று கேட்க...அவர் சொன்னார் என்னை அங்கு மட்டும் கொண்டு விட்டு விடாதீர்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்லுங்கள் என்று. ஒருவருக்கும் புரியவில்லை என்ன செய்ய என்று அப்புறம் மெதுவாக அவரது இருப்பிடம் ஒரு ரூம் அதற்குக் கூட்டிச் செல்லச் சொன்னாராம் இரு மகன்கள் இரு பெண்கள். இவரது வீடு சொத்து எல்லாம் எடுத்துக் கொண்டு நீ வைத்துக் கொள்கிறாயா நான் மாட்டேன் என்று இறுதியில் வெளியில்...என் கஸின் மனைவி இதைச் சொல்லி எப்படிக்கா இப்படி மனது வருது என்று வேதனைப்பட்டாள். இப்படியும் நடக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வெங்கட்ஜி மிக்க நன்றி கருத்திற்கும் பாராட்டிற்கும்

    உங்களுக்குக் கிடைக்கும் கதை மாந்தர்கள் போலத்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. பட்டாபி ராமன் அண்ணா மிக்க மிக்க நன்றி. இந்தக் கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கு. உங்கள் மௌத் ஆர்கனைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதும் பாடல்களும் ரொம்ப அருமையாக இருக்கிறது.

    ஆம், இப்படியான வேதனைச் சம்பவங்கள் நிறைய நடக்கிறதுதான். மிக்க நன்றி விரிவான கருத்திற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  35. பட்டாபி அண்ணா கண்டிப்பாக அந்த மகன் முதுகெலும்பு அற்றவன் என்று சொல்லலாமா? சுயசிந்தனை இல்லாதவன்....ஆனால் பெண்கள் சுயமாகச்சிந்தித்தாலும் முடிவு எடுக்க முடியாமல் கணவன் குடும்பம் என்றுதானே போக வேண்டியதாகிறது பல பெண்களுக்கும்...இல்லைஅய

    கீதா

    பதிலளிநீக்கு
  36. கோமதிக்கா என்னை மிகவும் பாதித்த கதை இது. எனது பயணங்களின் போது ஜன்னல் கிடைத்துவிட்டால் ஃபோட்டோ க்ளிக்ஸ் அண்ட் வேடிக்கைதான். ஜன்னல் கிடைக்கவில்லை என்றால் மனிதர்களை வேடிக்கைப் பார்ப்பது. யாராவது பேசினால் அவர்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு இருப்பேன். அப்படிக் கேட்டதில் கிடைத்ததில் நிகழ்வும் சம்பவங்களும் அதில் கற்பனையும் கலந்து. கிராமத்துப் பெண். வேலையில்லை. இப்படி முதியோர் பற்றி நிறைய சம்பவங்கள் உள்ளன. கதைக்குப் பஞ்சமில்லை. நான் தான் எழுத சுணக்கத்தில் இருக்கிறேன்...

    மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  37. கோமதிக்கா ஸ்ரீராம் அழகா பெயர் வைக்கிறார் இல்லையா? இனி யாருக்கேனும் குழந்தை பிறக்கும் போது ஸ்ரீராமிடம் பெயர் வைக்கச் சொல்லலாம்...நிறைய பேர் தங்களுக்குப் பிடித்த தலைவர், சினிமாக்காரர்களிடம் செல்வதை பார்த்திருக்கேன். என்னக் கேட்டால் ஸ்ரீராம் பேசாமல் ஒரு போர்ட் போடலாம்..நல்ல அழகான பெயர்கள் வைப்பார்....ஹா ஹா ஹா என்ன சொல்றீங்க ஸ்ரீராம்....(அதிரா ச்ரீராம் எல்லாம் சொல்லப்படாது கேட்டோ!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  38. கில்லர்ஜி கோமதிக்காவிற்கு, வல்லிம்மாவிற்கு, துரை அண்ணாவிற்குச் சொன்ன பதில்தான் தங்கள் கருத்திற்கும்

    மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  39. என்றாலும் ஏதோ ஒன்று மறைவாய் இருப்பது போல் தோன்றியது.//

    பொதுவாகவே நன்றாகக் கவனியுங்கள். ஒவ்வொரு முகத்தின் பின்னும் ஒன்றல்ல, பல சங்கதிகள்..//

    ஹையோ ஏகாந்தன் அண்ணா உண்மையே!! நான் பயணங்களின் போது பயணிப்பவர்களின் கவனத்தை ஈர்க்காமல் அவர்களுக்குத் தெரியாமல் முகம் படிப்பதுண்டு. ஹா ஹா ஹா...

    நிறைய கதைகள் கிடைக்கும். நீங்கள் கூட உங்கள் பதிவு ஒன்றில் ஒரு ஆட்டோக்காரருடன் பேச்சுக் கொடுத்ததைச் சொல்லியிருந்தீர்கள். அதுவே கூட கதையாக விரியலாம்...அந்த அளவுமேட்டர் உண்டு அதில்...

    மிக்க நன்றி அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  40. கீசா மேடம்- //வரட்டுனு இருக்கும். நானே பார்த்திருக்கேன். பாவமாகத் தான் இருக்கும். மனைவி என்றால் இப்படி எல்லாம் செய்ய மாட்டா! என்றாலும் அதுக்கே கோவிச்சுப்பேன். அதுக்கெல்லாம் தான் இப்போ அனுபவிக்கிறேன் // - இது ஒரு வகையில் சரிதான். நமக்கு நல்லா செய்துபோடும்போது அதன் அருமை தெரியாது. பிற்காலத்தில் இந்த மாதிரி நிகழும்போதுதான் அருமை தெரியும், ஆனால் காலம் போன காலத்துல.

    ஆனா அடுத்த தலைமுறை வேலைக்குச் சென்றால், அவங்க வேலை அப்புறம் பசங்க என்று அதுவே சரியா இருக்கும். அப்போ கணவனின் பெற்றோரைக் கவனிக்க நேரமோ அல்லது விருப்பமோ இருக்காது, பெரும்பாலானவர்களுக்கு. எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னால் முடியும் எல்லா வேலைகளையும் செய்யறார் (யாருக்கு, தன் குடும்பத்துக்குத்தானே அதாவது தன் மகன் குடும்பத்துக்குத்தானே). அப்படி இருக்கும்போது குடும்பத்துடன் ஓரளவு ஒட்டி இருக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  41. கீசா மேடம் - //ஆனப்போவும் சாவியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய் அங்கே உள்ள நர்சிடம் கொடுத்து வைத்தார்! // - என்ன இது... எல்லாம் ஏடாகூடமான கேசா இருக்கு. அது எல்லாம் உங்களுக்குத் தெரியும்படி நடக்குது.. ஐயோ... ஒரு நல்ல சம்பவம் இல்லையா பகிர்வதற்கு?

    பதிலளிநீக்கு
  42. வாங்க நெத .....மெதுவா வாங்க ...அதிரடி ரீ கேட்டிருக்காங்க...நீங்க ரீ குடிக்க மாட்டீங்க. ஸோ சமோசா ஓகேதானே...ரெடியா வைச்சுருக்கேன்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  43. கீதாக்கா உங்கள் கருத்துகள் அனைத்தையும் வாசிச்சாச்சு. ஹப்பா நிறைய கதைகள் இருக்கு. எனக்கும் இப்படி நிறைய சுற்றுப்பட்டில் பயணங்களில், முன்பு மாமியார் வீட்டில் உதவி செய்ய வந்த பெண் நிறைய நிகழ்வுகள் சொல்லுவார். அத்தனை கதைகள் இருக்கும்.

    மிக்க நன்றி அக்கா கதைக்கு நிகரான நிறைய சம்பவங்கள் சொன்னதற்கு..இனி எழுதும் கதைக்கும் உதவுமே ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  44. எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னால் முடியும் எல்லா வேலைகளையும் செய்யறார் (யாருக்கு, தன் குடும்பத்துக்குத்தானே அதாவது தன் மகன் குடும்பத்துக்குத்தானே). அப்படி இருக்கும்போது குடும்பத்துடன் ஓரளவு ஒட்டி இருக்கமுடியும்.//

    நெல்லை நானும் நிறைய பார்த்திருக்கேன். என் உறவினரின் சம்பந்தி மகன் வீட்டிற்குப் போனாலும் சரி மகள் வீட்டிற்குப் போனாலும் சரி பல உதவிகள் செய்வார். கிச்சன் முதல் வெளி வேலை வரை. எனவே அவருக்குப் பிரச்சனைகள் இலலி அவருக்கும் சரி அவர் மனைவிக்கும் சரி இருவருமே அப்படித்தான். குழந்தைகளை கவனித்துக் கொள்வது என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  45. ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ Pattabi Raman: ..பகவான் ரமணர் திருவடிகளே காரணம்.//

    திருவடிகளே சரணம் என்றுதானே எழுத நினைத்தீர்கள்?
    சரணம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது காரணம் என்று வந்துள்ளது. அதற்கும் ஒரு காரணம் இருக்கலாம். ஏனென்றால் காரணம் இல்லாமல் காரியமில்லை என்று யோகி ராம்சூரத்குமார்.கூறியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  46. Thulasidharan V Thillaiakathu said...
    பட்டாபி ராமன் அண்ணா மிக்க மிக்க நன்றி. இந்தக் கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கு. உங்கள் மௌத் ஆர்கனைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதும் பாடல்களும் ரொம்ப அருமையாக இருக்கிறது.
    நன்றி துளசிதரன்.நான் எழுதி பாடிய பாடல்கள் என் இதயத்தினூற்று.ஊற்று நீர் சுவையாக இருக்கும் அதை குடித்தவர்க்கு தெரியும்.
    ஆம், இப்படியான வேதனைச் சம்பவங்கள் நிறைய நடக்கிறதுதான்.



    என் 70 வருட வாழ்க்கை அனுபவத்தில் இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை கண்டிருக்கிறேன். இன்றும் கண்டுகொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால். சிலஆண்டுகளுக்கு பிறகு அந்த கொடுமையை செய்தவர்கள் அவற்றைப் பற்றி முற்றிலும் மறந்துவிடுவதும் அவர்கள் இந்த சமூகத்தில் நல்ல நல்ல நிலைமையில் இருப்பதும்தான்.
    இதற்க்கு என் குருநாதர் அளித்த விளக்கம்.
    இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் நடிகர்கள். இறைவன் என்ற அந்தஇயக்குனர் அவ்வப்போது நமக்கு அளிக்கும் பாத்திரத்தை சரியாக செய்வோமே என்பதுதான். புதிய பாத்திரத்தில் நடிக்கும்போது ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை மறந்துவிடுவதுதான் அனைவருக்கும் நல்லது. அப்போதுதான் மனதில் நிம்மதி(சாந்தி)இருக்கும்).
    அதைத்தான் கண்ணதாசன் "நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை என்றான்.
    உனக்கு மன அமைதிவேண்டுமென்றால் எதன் மீதும் /யார் மீதும் குற்றம் கூறாதே.அப்படி ஏதாவது குற்றம் சுமத்த நினைத்தால் அதை உன் மீது கூறிக்கொண்டு அதிலிருந்து விடுபட முயற்சி செய். ( அன்னை சாரதா தேவி)

    ஒரு மனிதரை பார்த்தால் உன் மனம் அந்த மனிதரோடு நீ கொண்டுள்ள தொடர்புகளை அனைத்தையும் (கடந்த காலம் மற்றும் முற்பிறவிகளில் உனக்கு ஏற்பட்ட கசப்பானஅல்லது மகிழ்ச்சியான தருணங்களும் இதில் அடங்கும்) உன் முன் கொண்டு நிறுத்தும்,

    ஆனால் நீ செய்ய வேண்டியது எல்லாவற்றையும்புறம் தள்ளிவிட்டு . அவரை அப்போதுதான் முதன்முதலாக சந்திப்பதாக கருதிக்கொண்டு பழகுவாயானால் எந்த பிரச்சினையும் வராது. நான் அதை கடைபிடித்து பார்த்தேன் என் மனதில் பல எரிச்சல்கள் அழிந்து போயின. மனம் அமைதியாக இருக்கிறது. ஆனால் மனம் அவர்களை பார்க்கும்போது மீண்டும் குப்பையை கிளறிக்கொண்டுதான் இருக்கும். அந்த எண்ணங்களை நீக்கும் வரை. நாம் அதற்க்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  47. இப்போதுதான் கவனித்தேன் ஸ்ரீராம்....நான் காப்பி பேஸ்ட் செய்து உங்களுக்கு அனுப்பிய போது கதையில் இறுதியில் கவிநயாமமவிற்கு நன்றி சொன்னது காப்பி ஆகாமல் வந்திருக்கு....

    ஸோ இங்கு சொல்லி விடுகிறேன். கவிநயாம்மா உங்களின் பாடல் வரிகளை இக்கதையில் சொல்ல எடுத்துக் கொண்டேன். மிக்க நன்றி கவிநயாம்மா.

    கீதா

    பதிலளிநீக்கு
  48. உனக்கு மன அமைதிவேண்டுமென்றால் எதன் மீதும் /யார் மீதும் குற்றம் கூறாதே.அப்படி ஏதாவது குற்றம் சுமத்த நினைத்தால் அதை உன் மீது கூறிக்கொண்டு அதிலிருந்து விடுபட முயற்சி செய். ( அன்னை சாரதா தேவி)//

    இதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதும் உண்டு மகனிடம் சொல்வதும் உண்டு. இப்போது அறிந்து கொண்டேன் தங்களின் மூலம் அது சாரதா தேவி அவர்களின் வரிகள் என்பதையும். என் வீட்டில் ஒரு போஸ்டர் என் மகன் ஷெல்ஃபில் ஒட்டி வைத்துள்ளான் அதில் சக்ஸஸ்ஃபுல் பீப்பிள் என்றும் அன் சக்ஸஸ்ஃபுல் பீப்பிள் என்றும் ஒவ்வொன்றின் கீழும் சொல்லப்பட்டிருப்படில் அன் சக்ஸஸ்ஃபுல்லில் சொல்லப்பட்டிருப்பது இதுதான் unsuccessful people Blame others for their failures.....successful people accept responsibility for their failures என்று....

    //நீ செய்ய வேண்டியது எல்லாவற்றையும்புறம் தள்ளிவிட்டு . அவரை அப்போதுதான் முதன்முதலாக சந்திப்பதாக கருதிக்கொண்டு பழகுவாயானால் எந்த பிரச்சினையும் வராது. //

    மிக மிக மிக அருமையான வரிகள். உண்மையும் கூட. அனுபவமும் உண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  49. நன்றி துளசிதரன்.//

    பட்டாபி அண்ணா நான் கீதா. துளசிதரன் என் நண்பர் அவரது வலைத்தளத்தில்தான் அவருடன் நான் எழுதி வருகிறேன்.

    மிக்க நன்றி அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  50. மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு எல்லா நலங்களும் அமைந்து நிலைத்து இன்பம் தர இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  51. எங்க அப்பா பணம் பற்றியும் சொத்து பற்றியும் சிலவற்றை, மற்றவர்கள் அனுபவமாகச் சொல்லுவார். அவைகள் என் மனதில் பதிந்திருக்கு. அவர் சொன்ன சம்பவங்களில், ஒரு பையன், அப்பாவின் வீட்டில் (கொஞ்சம் பெரிய இடம்), முன் பகுதியில் அவனது லேத் மாதிரி ஒன்று போட்டுக்கொள்கிறேன் என்று சொன்னானாம். அப்பாவும், பையன் தொழிலில் வளரட்டும் என்று இடம் கொடுத்தாராம். நாளாக் நாளாக, அப்பாவின் இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டு அவரைப் பரிதவிக்க விட்டுவிட்டார்களாம். இதுபோன்று பல சம்பவங்களைச் சொல்லுவார்.
    1. கையில் பணம் இருக்கணும். பையனை வளர்த்ததோடு சரி, மற்ற எல்லாம் அவங்களேதான் பார்த்துக்கணும். கல்யாணம் பண்ணியாசுன்னா, தனக்குப் பணத்தை வைத்துக்கணும், பையன் ஃபேமிலிக்குக் கொடுக்கறதுன்னு வச்சுக்கக்கூடாது.
    2. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. கடைசி வரையில் பணம் இருந்தால்தான் நிம்மதி இருக்கும். பையனே ஆனாலும் பணம் வாங்கிக்கக் கூடாது
    3. பசங்க ஃபேமிலி வேற, தன்னோடது வேறன்னு இண்டிபெண்டெண்டா இருக்கணும். ரொம்பவே முடியாத நிலைமைக்கு வந்தபோதுதான் அவங்க உதவி கேட்கலாம்.

    இதுபோன்று பல செய்திகள்/அறிவுரைகள், பணத்தைப் பற்றிச் சொல்லுவார்.

    உங்கள் கதை அவற்றை நினைவுபடுத்தியது.

    இதைப்பற்றி நிறைய எழுதலாம். எதுக்கு மூடைக் கெடுத்துப்பானேன்.

    வாழ்க்கை என்பது நிச்சயமில்லாதது. அதனால்தான் எல்லோருக்கும் (பெரும்பாலானவர்களுக்கு) ஒரு பய உணர்ச்சி இருக்கும்.

    கதை நல்லா வந்திருக்கு. ஆனால் ரொம்பவே சோக கீதம் பாடியிருக்கீங்க. படிக்கறவங்க சந்தோஷமா இருக்கக்கூடாது என்ற எண்ணமா?

    பதிலளிநீக்கு
  52. ரொம்பவே சோக கீதம் பாடியிருக்கீங்க. படிக்கறவங்க சந்தோஷமா இருக்கக்கூடாது என்ற எண்ணமா?

    வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இது போன்ற காட்சிகள் அவ்வப்போது வரும்.ஒரு சொட்டு கண்ணீர் விட்டுவிட்டு அடுத்த காட்சிக்கு தாவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  53. கீதா மிக அழகா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் ஸ்ஸ்ரீராமுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் அழகான பொருத்தமான கவித்துவமான தலைப்பை தந்ததற்கு :)

    பதிலளிநீக்கு
  54. ஆனா மனசை கனமாகிடுச்சி கதாபாத்திரங்கள் .வாணியின் அப்பா எத்தனை நல்லவர் பாவம் .
    ஆனா வாணியின் கணவன் ,அண்ணன் அண்ணி போன்றோரை நினைச்சா மனம் வெறுக்குது .கடவுள் படைச்ச மக்களில் எத்தனை விதம் :(

    இப்படியும் பொல்லாத மனுஷரா :(
    வாணி போன்றோர் கொஞ்சம் forward ஸ்டேப் எடுக்கணும் இல்லைன்னா உலகில் அரக்கர்கள் கூட்டம் அதிகரிக்கும் .

    பதிலளிநீக்கு
  55. //வாணி போன்றோர் கொஞ்சம் forward ஸ்டேப் எடுக்கணும் // - குடும்பம் ஆணைச் சுத்தித்தான் இன்னமும் இருக்கு. அதனால் பெண் மட்டும் பெற்ற பெற்றோருக்குப் பிரச்சனைகள் வரும் (வயதானபோது). அதே சமயம், ஒரே பெண் என்பதால், ஆரம்பத்திலிருந்தே பெண்/மாப்பிள்ளையை தங்கள் பக்கம் திருப்பி, அல்லது பெண்ணைப் பிரித்து தன் வீட்டுக்குக் கொண்டுவந்து அதன் மூலமாக மாப்பிள்ளையும் குழந்தைகளும் தன் வீட்டுக்கே வரவைக்கும் பெற்றோர்களும் உண்டு.

    அப்பாவுக்கு உதவமுடியாம (வயதானதுனால), தானும் அந்தக் குறையினால் மனதில் குற்ற உணர்ச்சியோடு பல பெண்கள் வாழ்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  56. இங்கே வெளிநாட்டு முதியோர் விஷயமே வேறு அவர்களின் பணம் அவர்களுக்கு .தன் இறுதி பயணத்துக்கு கூட தானே சேமித்து வைப்பாங்க அதை டிவிலயும் அட்வெர்டைஸ்மெண்ட்டா போடுவாங்க . இதிலும் இப்போ விதிவிலக்குகள் சில வந்திருக்கு ஒரு ஸ்கூல் ஆசிரியர் .இங்கே பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைய சேலரி உண்டு .வீட்டில் மூன்று ஜாகுவார் கார் வச்சிருக்கார் ஸ்பெயினில் ஹாலிடே ஹோம் இப்படி பணத்தில் மிதப்பவர் தன் காது கேளா தந்தைக்கு பல restrictions போட்டுருக்கார் .எங்கே தந்தை பிறருடன் பழகினா அவரது பணத்தை சேரிட்டிக்கு மற்றும் வர செல்லும் அசெம்பிளிக்கு ( சிறு ஆலயம் ) கொடுத்திடுவாரோன்னு .அந்த முட்டாள் மகனுக்கு தெரியலை தந்தையின் உயிரே அந்த அசெம்பிளி ஆலயம்தான் அவர்வயது (80) நண்பர்கள் அங்கிருக்காங்க அவர்களையும் வீட்டுக்குள் தந்தையை சந்திக்க அனுமதி மறுப்பு .இவ்ளோ அட்டூழியம் செய்யும் மகன் தந்தையை தனி அபாரட்மென்டில் வச்சிருக்கார் .எண்ணத்தை இவரின் எண்ணத்தை என்ன சொல்வது :(

    பதிலளிநீக்கு
  57. இங்கே வெளியில் போனா சூப்பர்மார்கெட் டவுன் பக்கம் நிறைய பஞ்சாபி குஜராத்தி முதியோரை பார்க்கலாம் லண்டனில் இன்னும் அதிகம் .சாப்பாடுகூட இல்லாம யாரிடமாவது ஒரு பவுண்ட் கேட்டு கெஞ்சுவாங்க .
    இங்கே முதியோருக்கு நிறைய சலுகைகள் உண்டுன்னு தெரிஞ்சி பெற்றோரை இங்கே கொண்டுவந்து அவர்கள் பென்ஷனை உறிந்து மாடு போல வேலை வாங்குவதில் நம் நாட்டு மக்களுக்கு கைவந்த கலை .

    பதிலளிநீக்கு
  58. // ஆரம்பத்திலிருந்தே பெண்/மாப்பிள்ளையை தங்கள் பக்கம் திருப்பி, அல்லது பெண்ணைப் பிரித்து தன் வீட்டுக்குக் கொண்டுவந்து அதன் மூலமாக மாப்பிள்ளையும் குழந்தைகளும் தன் வீட்டுக்கே வரவைக்கும் பெற்றோர்களும் உண்//

    100% இப்படி பட்டவர்களும் இருக்காங்க எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கிருக்கு அப்பெண் சொல்வார் பெருமையா அவங்கம்மா கல்யாணம் முடிந்ததும் பெண்ணிடம் சொன்னாராம் உன் இன்லாசிடம் கவனம் .அதை அந்த பெண் கெட்டியா பிடிச்சிக்கிச்சு தன கணவரை அவரின் சகோதரி சகோதரர் பெற்றோர் யாரிடமும் பேச விடாது .கணவருக்கு கால் பண்ணினா மனைவிதான் கால் அட்டென்ட் செஞ்சு பிறகு கணவரிடம் தருவார் .தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு கணவர் இதுவரை ஒன்றும் செய்ததில்லை .வீட்டில் அன்பான உபசரிப்போ சகோதரிகளுக்கு உதவியோ ஒருவேளை உணவோ செஞ்சதில்லை ஆனால் மாமியாருக்கு வீல்சேர் வாங்கி தள்ளிக்கிட்டு போறார் :( அதை நான் கடைக்குப்போகும்போது தூரத்தில் பார்த்தேன் ஒரு நாள்.. பக்கத்தில் கூழாங்கல் இருந்தது நாலஞ்சி பேர் இருந்தாங்க இல்லைனா தூக்கி போடலாம்போல் கோபம் வந்தது .

    பதிலளிநீக்கு
  59. அந்த பெண்ணை தையல் கார்மெண்ட் கோர்ஸில் சந்தித்தேன் கொஞ்சம் நாள் தொடர்பில் இருந்தா பிறகு நானே விலகிட்டேன் ..இப்படிப்பட்டவங்க விஷம் நமக்கும் ஒட்டிக்கும் காலப்போக்கில்

    பதிலளிநீக்கு
  60. கதை எண்ணச் சுழலில் சுற்ற விடுகிறது! அந்தப் பெண் இவ்வளவையும் பொறுத்துப் போக வேண்டியதன் அவசியம் என்ன? அப்பா வேலை தேடிக் கொள்ள இயலும் என்றால் அவளும் அவரும் தொல்லைதரு மனையின் நீங்கி வெளியே வர வேண்டியது தானே?
    கதையின் தலைப்பு பாரதியாரின் சுதந்தர தேவியின் துதியின் முதல் வரி! அந்தப் பெரியவர் சுதந்தரம் நாடிச் சென்று விட்டார்... இதந்தரு மனையாள் நீங்கி என்றிருந்தால் - அதிலிருந்து தானே அவருக்கு இடர் - இன்னும் பொருத்தமாய் இருக்குமோ?
    இவ்வளவு தூரம் கதை மாந்தரோடு ஒன்ற வைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  61. ஆஆஆஆஆஆ நான் வந்துட்டேன்ன் கீதாவுக்கு கொமெண்ட்ஸ் போடோணும் என்றே அவசரமா அனைத்தையும் பாதியில விட்டுப்போட்டு ஓடி வந்தேஎன்.. கதையின் நீளத்தைப் பார்த்தால் எனக்கு ஒரு ரீ போதாதூஊஊஊ ரெண்டு ரீ வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:))... படிச்சுப் படிச்ச்சுக் கொமெண்ட் போடட்டோ.. ஆஆஆஆஆஅ அகேய்க்க மறந்துட்டேன்.. எனக்கு சமோசா இருக்கோ இல்லை நெ.தமிழன் தம்பி[கீதாவின் முறையில சொன்னேன்:)] எல்லாத்தையும் சாப்பிட்டாரோ?:).. என் செக் கையைக் கொண்டு வந்திருப்பாவே எடுக்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவவுக்கு மட்டும் குடுத்திடாதீங்கோ கீதா:).. பிறகு இங்கின நான் இருந்த பாடில்லை:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  62. ஓ இது படத்துக்கான கதை... என் கதையும் எழுதி அனுப்பிட்டேனே:)) எல்லோரும் ரெடியாஆஆஆஆஆ இருங்கோ:) ஆனா அது அடுத்த வருசம்தான் வரும் என பொய் சொல்லுறேன்ன்:)).

    //இதந்தரு மனையின் நீங்கி.. ///

    இது என்ன தலைப்பு? ஏதும் திருக்குறள் அல்லது பட்டினத்தார் பாடல்.. எதில் வருகிறது?... இதமான வீட்டை விட்டு நீங்கிப் போதல் எனத்தானே பொருள்???

    பதிலளிநீக்கு
  63. @MIYAAW

    //இதந்தரு மனையின் நீங்கி இழி மிகு சிறைப்பட்டாலும்
    பதந்திரு இரண்டும் மாரிப் பழி மிகுந்திழிவுற்றாலும்
    விதந்தருகோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும்
    சுதந்திரதேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!
    - பாரதி.
    இது பாரதியார் சுதந்திரதேவி பாட்டு

    பதிலளிநீக்கு
  64. @ஏகாந்தன் அண்ணன்..

    நில்லுங்கோ கீதா .. இடையில ரீ குடிக்கிறேன் இப்போ கொஞ்சம் ஏ அண்ணனோடு பேசிட்டு வாறேன்..

    ஏ அண்ணன் இண்டைக்கு நித்திரை ஆகிடாதீங்க.. நைட் பால் , ரீ குடிக்கும் பழக்கம் இருந்தா குடிச்சிடாதீங்க, நித்திரைக் குளிசை போட்டுத்தந்தாஅலும் தந்திடுவினம்..:) காலை பச்சைத்தண்ணிக்குள் வச்சாவது முழிச்சிருந்து பாருங்கோ:) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் இன்று இங்கிலண்ட் வெள்ளாடாகப்போகுதூஊஊஊஊ ஹையொ டங்கு ஸ்லிப் ஆகுதேஏஏஏ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) .. வெளாடப்போகுது.. சே..சே விளையாடப்போகுது....

    ஆனா நீங்க இங்கிலண்ட் க்கு மட்டும் சப்போர்ட் பண்ணிடக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). நான் வீட்டில் சொன்னேன் இங்கிலண்ட் ஊக்கேயில தானே இருக்கு ச்ச்சோ அது நம் நாட்டில தானே இருக்கு அதனால அதுக்கு நாம் சப்போர்ட் பண்ணோனும் என.. சின்னவர் ஓடிவந்து இல்லை அம்மா.. நீங்க அதுக்கு சப்போர்ட் பண்ணக்கூடாது.. ஸ்கொட்டிஸ் க்கு இங்கிலிசுப் பீப்பிளைப் பிடிக்காதூஊஊஊ என்றிட்டார்ர்.... சரி ராசா உங்க கட்சிதான் உங்கட சுவீட் 16 மம்மியும் இருக்கப்போறேன் எனச் சொல்லிட்டேன்ன்:)).. ஹா ஹா ஹா. இப்போ ஒருவருக்குப் பொறுக்காதே இது:))

    பதிலளிநீக்கு
  65. இது பாரதியாரின் நேஷனல் ANTHEM

    பதிலளிநீக்கு
  66. //Angel said...
    @MIYAAW

    //இதந்தரு மனையின் நீங்கி இழி மிகு சிறைப்பட்டாலும்
    பதந்திரு இரண்டும் மாரிப் பழி மிகுந்திழிவுற்றாலும்
    விதந்தருகோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும்
    சுதந்திரதேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!
    - பாரதி.
    இது பாரதியார் சுதந்திரதேவி பாட்டு ///

    ஆவ்வ்வ்வ்வ் ஓ அப்படியா அஞ்சு.. எனக்கு பாரதியார் பாடல்கள் சிலதுதான் தெரியும்.. முக்கியமா ஓடி விளையாடு...

    பதிலளிநீக்கு
  67. //ஸ்கொட்டிஸ் க்கு இங்கிலிசுப் பீப்பிளைப் பிடிக்கா//
    ஹலோவ் மியாவ் இருங்க இனிமே லண்டன் வரதுனாலும் நீங்க விசா எடுக்கணும் :) ஆமா எப்போ பிரியப்போறீங்க :) உங்க நிக்கோலா சால்மன் சேசே நிகோலா டார்ஜான் கரர் சேசே :) ஸ்டர்ஜன் ஆளே பேச்சு காணோமே :)

    பதிலளிநீக்கு
  68. / ஆவ்வ்வ்வ்வ் ஓ அப்படியா அஞ்சு.. எனக்கு பாரதியார் பாடல்கள் சிலதுதான் தெரியும்.. முக்கியமா ஓடி விளையாடு..//
    மியாவ் எனக்கு காக்கை சிறகினிலே ,வெள்ளைநிறத்தொரு பூனை செந்தமிழ் நாடெனும் போதினிலே
    நின்னையே ரதியென்று பாயுமொளிநீஎனக்கு இதெல்லாம் தெரியும் .

    பதிலளிநீக்கு
  69. http://i.imgur.com/dlRFSdC.png

    ஆனா எனக்கு நேர்மை எருமை பொறுமை கருமை எல்லம் பிடிக்குமென்பதால் :) இவ்வுண்மையை உங்களிடம் சொல்கிறேன் :)
    இதம்தருமனை என்பதை சேர்ச் பண்ண்ணப்போ கண்டுபிடிச்சேன் :)

    பதிலளிநீக்கு
  70. இப்போதான் கவனிக்கிறேன் மிகிமா வும் பதிலில் சுதந்திராதேவி பாடல்னு சொல்லியிருக்காங்க :) அவங்களுக்கு நிச்சயம் அது தெரிஞ்சிருக்கும்

    பதிலளிநீக்கு
  71. ஏஞ்சலின் - ///இதந்தரு மனையின் நீங்கி இழி மிகு சிறைப்பட்டாலும்
    ப// - நான் இத்தனை நாள் ஏன் பாரதியார் இவ்வளவு சின்னனாக இருக்கும்போதே போயிட்டார் என்று யோசிச்சிருக்கேன். 4 வரில, 40 எழுத்துப்பிழை. கையில் சிறிய காயம் வந்தது, அதைச் சாக்கிட்டு, எழுத்துப் பிழை ஏகப்பட்டது வர ஆரம்பிச்சிடுச்சு.

    இழி மிகு - இடர் மிகு, மாரி-மாறி, நீங்க எழுதியுள்ளதுக்கு அர்த்தம் மழை,

    எழுத்துப் பிழை அ.அ வுடைய காப்பிரைட். அதை நீங்க அபகரிக்காதீங்க.

    பதிலளிநீக்கு
  72. //மியாவ் எனக்கு காக்கை சிறகினிலே ,வெள்ளைநிறத்தொரு பூனை செந்தமிழ் நாடெனும் போதினிலே///

    ஆவ்வ்வ்வ் இவை எனக்கும் தெரியுமே... என் பிரச்சனை என்னான்னா.. நிறையப் பாடல்கள் கவிதைகள் தெரியும் ஆனா அது ஆர் எழுதியது என்பது தெரியாமல் இருக்கும்.. அதனால வாய் திறக்க முடியாதெல்லோ:)).

    //Angel said...
    //ஸ்கொட்டிஸ் க்கு இங்கிலிசுப் பீப்பிளைப் பிடிக்கா//
    ஹலோவ் மியாவ் இருங்க இனிமே லண்டன் வரதுனாலும் நீங்க விசா எடுக்கணும் :)///
    நாங்க அப்போ தொடக்கம்.. கையை விடுங்கோ கையை விடுங்கோ என இழுக்கிறோம்ம்.. நீங்கதான்.. இல்ல இல்ல விட்டிட்டுப் போயிடாதீங்க நீங்க போயிட்டால் எங்களுக்கு குடி தண்ணீர் பற்றாக்குறை வரும், பெற்றோல் வருமானம், மீன் வருமானம் இல்லாமல் போயிடும்.. முக்கியமா அந்த நியூகிளியர் பாஆஆஆஆஆம்ம் இங்கின தானே பதுக்கி இருக்கு அந்தப் பயமாக்கும் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  73. //எழுத்துப் பிழை அ.அ வுடைய காப்பிரைட். அதை நீங்க அபகரிக்காதீங்க.//


    ஆங் ஹாஹ்ஹா :) ஓகே ஓகே :)

    எழுத்துப்பிழைக்கே காப்பிரைட் வாங்கின தமிழில் D எடுத்த புலவி எங்க அ .அ மட்டுமே :))

    பதிலளிநீக்கு
  74. //மனம் கடற்கரை போன்றது. அலை வந்து வந்து செல்வது போல நினைவுகளும்.//

    மிக அருமையான வரிகள்..

    //அப்புறம் நீ கொடுத்த பரங்கிக்கா புளிக்கொளம்பு நல்லாருந்துச்சு//

    ஹா ஹா ஹா இது எங்கள் புளொக்கில் வெளிவந்த ரெசிப்பியோ?:)

    பதிலளிநீக்கு
  75. ஆனா இப்போ அழிச்சா அது நேர்மையா இருக்காது :)

    //4 வரில, 40 எழுத்துப்பிழை. கையில் சிறிய காயம் வந்தது, அதைச் சாக்கிட்டு, எழுத்துப் பிழை ஏகப்பட்டது வர ஆரம்பிச்சிடுச்சு.

    //
    இப்போ அடிஷ்னலா allergy rhinitis வேற வந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தும்மல் .

    அதோட இந்த கூகிள் டைப்பிங் வேற தி ஜாவை எழுதினா ஜெயாவைனு காட்டுது பாக்காமையே காப்பி பேஸ்டிடறேன் :)

    பதிலளிநீக்கு
  76. //“உங்கப்பனை இந்த வீட்டுலருந்து வெளிய தொரத்தனும். அப்பத்தான் வெளங்கும். நீ தொரத்த மாட்ட ஏன்னா உங்கப்பன் உன்னையுந்தான் வைச்சுட்டுருக்கான். அதான் நீ ஒங்கப்பனுக்கு இத்தனை சப்போர்ட். அதான் அவன் திமிரெடுத்து ஆடறான்” கடவுளே! என்ன வார்த்தை இது!? படிச்சவன் பேசும் வார்த்தைகளா இது? வாணிக்கு மனம் மிகவும் நொந்து போனது. //

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பார்ப்பதைப்போல ஃபீல் ஆகுது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  77. நான் இத்தனை நாள் ஏன் பாரதியார் இவ்வளவு சின்னனாக இருக்கும்போதே போயிட்டார் என்று யோசிச்சிருக்கே//

    ஹசாஹ்ஹா இல்லைனா கம்ப பாரதி பட்டம் சூட்டிகிட்டவங்களை பார்த்து மயக்கமே போட்டிருப்பார் :)

    பதிலளிநீக்கு
  78. //Angel said...
    நான் இத்தனை நாள் ஏன் பாரதியார் இவ்வளவு சின்னனாக இருக்கும்போதே போயிட்டார் என்று யோசிச்சிருக்கே//

    ஹசாஹ்ஹா இல்லைனா கம்ப பாரதி பட்டம் சூட்டிகிட்டவங்களை பார்த்து மயக்கமே போட்டிருப்பார் :)//

    அல்லோ மிஸ்டர்:)) டப்பு டப்பா நினைக்கப்பூடா.. கம்ப-பாரதி பிறக்கப் போகிறார்.. இனி நாட்டில் தனக்கென்ன வேலை என்றே. அவர் சந்தோசமாக கண்ணை மூடிட்டாராம்:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இந்தாங்கோ இந்தாங்கோ மோர் குடிங்கோ.. ஹையோ இந்த வெயிலுக்கு நல்லது எனச் சொன்னேன்ன்:))

    பதிலளிநீக்கு
  79. //நெ.த. said...
    ஏஞ்சலின் - //

    எழுத்துப் பிழை அ.அ வுடைய காப்பிரைட். அதை நீங்க அபகரிக்காதீங்க.///

    ஐயா ஜாமீஈஈஈஈ பிச்சை வாணாம் பப்பியைப் பிடிச்சாலே போதும் எனும் நிலையாகிட்டுதே என் நிலைமை:))..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சு இறுக்கிப் பிடிச்சுத்தள்ளுங்கோ.. காலை வாரி விட்டிடாதீங்கோ பிளீஸ்ஸ் இண்டைக்கு மட்டும் சேவ் மீஈஈஈஈஈ:))

    http://img.izismile.com/img/img5/20121222/640/a_couple_of_very_helpful_animals_640_14.jpg

    பதிலளிநீக்கு
  80. @ Pattabi Raman, Geetha :
    ..//நீ செய்ய வேண்டியது எல்லாவற்றையும்புறம் தள்ளிவிட்டு . அவரை அப்போதுதான் முதன்முதலாக சந்திப்பதாக கருதிக்கொண்டு பழகுவாயானால் எந்த பிரச்சினையும் வராது.//

    கோவிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். அருமை மனைவி அழகாக செய்துள்ள அனுமாருக்கான வடை மாலையுடன்! வந்து சொல்கிறேன் கொஞ்சம் - மேற்சொன்ன வரிகளைப்பற்றி.

    கீதா கதைக்கான கமெண்ட்டுகள் இன்று செஞ்சுரி அடித்துவிடும் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  81. http://img.izismile.com/img/img5/20121222/640/a_couple_of_very_helpful_animals_640_14.jpg


    ஹாஹா soooo ச்வீட் :) அப்டியே நீங்க உங்க மருமகன் குண்டுப்பிரபு போலவே இருக்கீங்க :)

    பதிலளிநீக்கு
  82. //சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாத ஒருவருக்கு எத்தனை துன்பங்கள் என்பதை வாணியால் புரிந்துகொள்ள முடிந்தது.///

    திரும்படியும்:) க.அங்கிளின் வசனமே நினைவுக்கு வருது..
    “பல புத்தகங்களைப் புரட்டி, ஒன்றைத்தெரிவு செய்ய முடியாதவர், மற்றவர்கள் வாங்கிக் கொடுத்ததை வச்சே காலத்தை நகர்த்திட வேண்டும்”...

    இன்னொன்று கீதா, சுயமாக மேலே பார்த்து கீழே பார்த்து வானம் பார்த்து பூமி பார்த்து ஜிந்தியோ ஜிந்தி என ஜிந்திச்சு எடுக்கும் முடிவுகூட சில சமயம் காலை வாரிவிடுவதுண்டெல்லோ?:) ஹா ஹா ஹா .. விதி வலியது பாருங்கோ:))

    பதிலளிநீக்கு
  83. @ ஏ அண்ணன்//
    //கோவிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். அருமை மனைவி அழகாக செய்துள்ள அனுமாருக்கான வடை மாலையுடன்! வந்து சொல்கிறேன் கொஞ்சம் - மேற்சொன்ன வரிகளைப்பற்றி.

    கீதா கதைக்கான கமெண்ட்டுகள் இன்று செஞ்சுரி அடித்துவிடும் என்று தோன்றுகிறது!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடை மாலையுடன் போகும்போது அனுமாரை நினைக்காமல்.. கொமெண்ட்ஸ் பற்றியே நினைப்பூஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்கும் வடை வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  84. ///திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்கு அவள் முன்னேற்றங்கள், திறமைகள் முடங்கும் நிலை வந்தால், சுய விருப்பத்தினால், அன்பினால், அன்யோன்யத்தினால் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்வதற்கும், ஏதோ கடமைக்காக, இந்தச் சமூகத்திற்காக, வேறு வழியில்லை என்று விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு. சில பெண்களுக்கு ஒரு வயதிற்கு மேல் சலிப்பும், அயற்சியும் ஏற்படத்தான் செய்கிறது.
    ///

    ஆங்ங்ங் என் கலெக்‌ஷனில் இருக்கும் ஒரு ஹைக்கூஊஊஊஊஊஊஊ

    “கொடியில் காயப்போட்டிருப்பது
    குழந்தைகளின் ஆடைகளும்
    கொடிகட்டிப் பறந்த
    அவளின் குதூகலங்களும்தான்”

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் இது சூப்பராப் பொருந்துதூஊஊஊ...

    பதிலளிநீக்கு
  85. கீதா..கதை ரொம்ம்ம்ம்ப அழகு.. வசனங்களும் ரொம்ப ரொம்ப அழகு.. குறை ஒன்றும் இல்லை மறை ரெங்கன் மாமா.. பெண்ணே:)) ஆனா இது படத்துக்கான கதை அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னை ஆரும் பேய்க்காட்டவே முடியாதூஊஊஊஊஊஊஊ.. படத்துக்கான கதை எனில் அந்த 80..85 வயசு தாத்தா[ஹையோ நான் அவருக்கு கொடுத்த வயசு 60-62 ஹா ஹா ஹா:)] தான் ஹீரோவா இருந்திருக்கோணும், ஆனா இங்கு வாணிதான் ஹீரோயினாக இருக்கிறா.. நோஓஓஓஓஓ விட மாட்டேன்ன்ன் நேக்கு நீதி வேணும்...

    இங்கு வந்த ஆருமே இதைக் கவனிக்கல்ல..:) அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுமெல்லோ:))..

    ஹையோ ஓவராப் பேசிட்டமோ:) இன்று நாள்பலன்கூடப் பார்க்காமல் விட்டிட்டனே.. பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஊஊஊ மட்டின் சமோசா வாங்கி.. இல்ல இல்ல செஞ்சு தருவேன்ன் பீஈஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈஈ:))

    பதிலளிநீக்கு
  86. ஆஆஆஅவ்வ்வ்வ் நாட்டு மக்களுகோர் நற்செய்தி.. இருங்கோ முதலில் நானே மோர் குடிச்சிட்டு வாறேன்..:)

    இங்கு ஸ்ரீராம் பக்கத்தில் கீழே ஒரு புது ஒப்ஷன் வந்திருக்கு.. அதாவது நியூவெர் போஸ்ட்.. ஓல்டெர் போஸ்ட் என.. அங்கிருந்தே கிளிக் பண்ணி புதுப்பகம் அல்லது முந்தைய போஸ்ட்டுக்கு போயிடலாம்:).. என் பக்கம் செக் பண்ணினேன் அப்படி இல்லை:)).. ஏதும் செட்டிங் மாற்றமாக இருக்குமோ...

    பதிலளிநீக்கு
  87. // “கொடியில் காயப்போட்டிருப்பது
    குழந்தைகளின் ஆடைகளும்
    கொடிகட்டிப் பறந்த
    அவளின் குதூகலங்களும்தான்”//

    அய்... நல்லாருக்கே...

    பதிலளிநீக்கு
  88. // இங்கு ஸ்ரீராம் பக்கத்தில் கீழே ஒரு புது ஒப்ஷன் வந்திருக்கு.. அதாவது நியூவெர் போஸ்ட்.. ஓல்டெர் போஸ்ட் என//

    எனக்குத் தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
  89. அவள் கழுத்தில் பறப்பது தாலி அல்ல
    என் சுதந்திரமும்தான்

    இது எப்படி இருக்கு ஸ்ரீராம் (இல்லை இல்லை ச் ச் ரீரீராம்)

    பதிலளிநீக்கு
  90. தாலி எப்படிப் பறக்கும்? பொருந்தவில்லை நெல்லை!

    பதிலளிநீக்கு
  91. எனக்குத் தெரியவில்லையே...

    yessss எனக்கும்தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
  92. //ஸ்ரீராம். said...
    // இங்கு ஸ்ரீராம் பக்கத்தில் கீழே ஒரு புது ஒப்ஷன் வந்திருக்கு.. அதாவது நியூவெர் போஸ்ட்.. ஓல்டெர் போஸ்ட் என//

    எனக்குத் தெரியவில்லையே...//

    ஏனோ? இன்னும் ஆராவது சொன்னால் புரியும்.. கொம்பியூட்டரிலா ஃபோனில பார்த்தீங்க நான் ஃபோன் இல் இன்னும் செக் பண்ணவில்லை.. அது ஒருவேளை ஓட்டமெட்டிக் அப்டேட் ஆக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  93. கொமெண்ட் பொக்ஸ் இன் கீழே வலது மூலையில் பாருங்கோ புளூ எழுத்தில் மின்னுது Older Post என.

    அதுபோல., ஒரு பழைய போஸ்ட்டைக் கிளிக் பண்ணி அங்கு கொமெண்ட் பொக்ஸ் இன் கீழே போய்ப் பார்த்தால், இடது பக்கம் நியூவெர் போஸ்ட் எனவும் வலது பக்கம் ஓல்டெர் போஸ்ட் எனவும் காட்டுது.. அங்கிருந்தே ஜம்ப் பண்ண ஈசியா இருக்குது.

    பதிலளிநீக்கு
  94. //நெ.த. said...
    அவள் கழுத்தில் பறப்பது தாலி அல்ல
    என் சுதந்திரமும்தான்

    இது எப்படி இருக்கு ஸ்ரீராம் (இல்லை இல்லை ச் ச் ரீரீராம்)//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
    கழுத்தில் அடங்கிக் கிடப்பது
    தாலி மட்டும் அல்ல
    என் சுகந்திரமும் தான்..

    என வந்திருந்தால் பொருந்தும்..:).. அது செரி:)) உங்களுக்கு[ஆண்களுக்கு:)] எப்போ சுகந்திரம் போச்சுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  95. //Angel said...
    100//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    https://media.giphy.com/media/5xtDarq4PxZjQ1C1ww8/giphy.gif

    பதிலளிநீக்கு
  96. //என வந்திருந்தால் பொருந்தும்..:).. அது செரி:)) உங்களுக்கு[ஆண்களுக்கு:)] எப்போ சுகந்திரம் போச்சுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

    haaahaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    பதிலளிநீக்கு
  97. கணினியில்தான் பார்த்தேன்.

    // கொமெண்ட் பொக்ஸ் இன் கீழே வலது மூலையில் பாருங்கோ புளூ எழுத்தில் மின்னுது Older Post என.//

    ஓ... ஆமாம். அது முன்னரே இருந்ததோ என்கிற சம்சயம்! மேலும் எனக்கு ஓல்டர் போஸ்ட் மட்டும்தான் கன்னுக்குத் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  98. @miyaw
    https://media3.giphy.com/media/vFKqnCdLPNOKc/giphy.gif

    பதிலளிநீக்கு
  99. // கழுத்தில் அடங்கிக் கிடப்பது //

    அடங்கிக் கிடப்பது என்பதை விட 'ஊசலாடுவது' இன்னும் பொருத்தமாக இருக்குமோ!

    பதிலளிநீக்கு
  100. ஹலோ மியாவ் சொல்றதை முழுசா சொல்லணும் :) kfc சாப்பிட்டுக்கிட்டே கமென்டினா இப்படித்தான்:)

    பதிலளிநீக்கு
  101. ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீ ராம் முருகரின் வாகனத்தை பாருங்க

    பதிலளிநீக்கு
  102. July 3, 2018 at 7:37 PM
    Anuradha Premkumar said...
    105...//

    https://www.iizcat.com/uploads/2017/08/pl5us-happy-cat-friday-20.JPG

    பதிலளிநீக்கு
  103. // ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீ ராம் முருகரின் வாகனத்தை பாருங்க //

    அபுரி!!

    பதிலளிநீக்கு
  104. அன்பு கீதா,
    சோகம் தான் சூழ்ந்து வாட்டுகிறதே என்கிற எண்ணத்தில் சொல்லிவிட்டேன்.
    மன்னிக்கணும்.
    90 வயதானாலும் பணம் படைத்திருந்தாலும் மனதால் வருந்தியவர்களைத் தெரியும் மகளை குடிக்குப் பலி கொடுத்தவர்கள், தொழில் சாம்ராஜ்யத்தைத் தொலைத்தவர்கள்
    இன்னும் எத்தனையோ.
    எங்க முனிம்மா, மகள் வீட்டில் சாப்பிடுகிறாள். மகன் வீட்டில் மூன்று மாடியேறிப் போய்ப்படுக்கிறாள். அவளுக்கும் 78 வயதாகிறது.
    ஒருவரைப் பற்றியும் என்னிடம் அலுத்துக் கொள்ள மாட்டாள்.
    அவள் பெற்ற குழந்தைகளுக்கு இன்னும் நியாயம் தர்மம் இருக்கிறது..
    வீட்டை விட்டு விலகும் தைரியம் பெண்களுக்கு வரவில்லை.

    அதுவும் இந்த மாதிரி பேசின கணவனை அவள் எப்படிச் சகித்தாள்.
    இதுவே குடிசையாக இருந்தால் அந்தப் பெண் அவனை நையப் புடைத்திருப்பாள்.

    எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  105. @ athira : ஆனா நீங்க இங்கிலண்ட் க்கு மட்டும் சப்போர்ட் பண்ணிடக்கூடா கர்ர் ..//

    இன்று இரவு இங்கிலாந்து- கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்தோடு, இந்தியா-இங்கிலாந்து க்ரிக்கெட் மேட்ச்சும்(டி-20) நடக்கிறது அங்கே! நான் ரொம்ப பிஸி! பெங்களூராக இருந்தால் குளுகுளு நைட்டாக இருக்கும். நான் டெல்லியில் இப்போது மாட்டிக்கொண்டிருப்பதால், ஏசி கூட எஃபெக்ட் காண்பிக்காத,கடும் வெப்ப இரவில் கடுப்பில் மேட்ச் பார்க்கிறேன்.

    இங்கிலாந்தை நான் க்ரிக்கெட்டிலும், கால்பந்திலும் சப்போர்ட் பண்ண சான்ஸே இல்லை! கால்பந்தில் கொலம்பியாவுக்குக் கடுமையான சப்போர்ட் நானும் எனது வீட்டாரும். க்ரிக்கெட்டில் இங்கிலாந்தை இன்றிரவு இந்தியா நகட்டிவிடும் என நினைக்கிறேன். நீங்களும் அவ்வப்போது டிவிக்கு முன்னால் செல்லவும்.. புரியாவிட்டால் சின்னவரிடம் கேட்டுக்கொள்ளவும்!

    பதிலளிநீக்கு
  106. @ Pattabi Raman, Geetha :

    ..//நீ செய்ய வேண்டியது எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு . அவரை அப்போதுதான் முதன்முதலாக சந்திப்பதாக கருதிக்கொண்டு பழகுவாயானால் எந்த பிரச்சினையும் வராது.//

    ஜே.கிருஷ்ணமூர்த்தி, கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர், தத்துவஞானி என மேலை நாட்டு அறிஞர்களால் கருதப்பட்டவர். ஆனால் உண்மையில், மேற்சொன்ன வகைமைகளை எல்லாம் எளிதாகத் தாண்டி மேல் சென்றவர்.மெய்ஞானி.

    அவர் ஒரு இடத்தில் சொல்கிறார்: (நேரடி மொழிபெயர்ப்பல்ல - கருத்தோட்டம்): நீங்கள் கவனித்ததுண்டா? உங்கள் மனம் எதை, யாரைப் பார்த்தாலும் உடனே அவர்களைப்பற்றி ஒரு இமேஜை, ஒரு பிம்பத்தைத் தனக்குள் ஏற்படுத்திக்கொண்டுவிடுகிறது - அது நல்லதோ, கெட்டதோ. ஒருவேளை ஒரு நபருடன் உங்களின் அனுபவம் கசப்பானதாக இருப்பின், அடுத்த முறை நீங்கள் அவரை சந்திக்க நேர்கையில், உங்கள் மனம் உடனே குறுக்கே பாய்ந்து தான் போட்டுவைத்திருக்கும் பிம்பத்தை உங்கள் முன் வைக்கும். அந்த ப்ரிஸத்தின் (Prism) மூலமாகத்தான் நீங்கள் அந்த நபரை இப்போது எதிர்கொள்கிறீர்கள். என்ன ஆகிறது? அவரைப் பார்த்து இனிமையாகச் சிரிக்க முடியுமா? இயல்பாகப் பழகமுடியுமா? அவரிடமிருந்து நல்லதாக ஏதாவது வெளிப்பட்டாலும் உங்கள் மனம் கவனிக்க, ஏற்க மறுக்கிறது. நோ! இந்த ஆளைப்பற்றி எனக்குத் தெரியாதா? வேஷம் போடுகிறான். நல்லவனில்லை இவன்.. என்றெல்லாம் சொல்லி மேற்கொண்டு அவரோடு சுமுகம் ஏற்படுவதைத் தடை செய்கிறது. உங்களை முகத்தைத் திருப்பிக்கொள்ளவைக்கிறது.

    யோசித்துப்பாருங்கள். உங்களால், நீங்கள் வாழ்வில் சந்திக்கும், பழக நேரிடும் ஒருவரைப்பற்றி எந்த ஒரு இமேஜும், பிம்பமும் கொள்ளாதிருக்கமுடியுமா? அப்படியே ஒரு இமேஜ் ஏற்கனவே ஏற்பட்டிருப்பினும், அவரை இன்னொருமுறை சந்திக்க நேர்கையில், அந்த பிம்பத்தைத் தள்ளிவிட்டு, அந்த நபரை முதன்முதலாக சந்திப்பதுபோல், புதிதாகப் பார்ப்பதுபோல், பார்க்கமுடியுமா? அப்படி முடிந்தால், அத்தகைய அனுபவம் எத்தகையதாக இருக்கும்.. எத்தகைய ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் என்றெல்லாம் கேட்கிறார்.

    இப்படி மனதின் சிக்கலான இயல்பு, dynamics-பற்றியெல்லாம் சிந்திக்கவைத்து, நம்மை ஆழ்தளங்களில் அழைத்துச் செல்பவர் ஜே.கே. ’Truth is a pathless land’ என்று சொன்னவர் இவரே. (இங்கு Truth : Absolute Truth, பரப்பிரும்மம், இறை). இவருடைய வாக்கை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு தாங்கள்தான் கண்டுபிடித்து சொன்னதுபோல் சொல்லி அலைகிறார்கள். இவர் பெயர் சொல்லாமலே quote செய்கிறார்கள். பேமானிகள்!

    ஆனால் ஜே. கிருஷ்ணமூர்த்தி எல்லோருக்குமானவரல்ல! - அதாவது, He is not everyone's cup of tea! புரிந்துகொள்வதும், தொடர்வதும் கடினம். தமிழில் ஜேகே-யின் தத்துவ உரைகள் (discourses), வெவ்வேறு தலைப்புகளில் {அறிந்ததிலிருந்து விடுதலை (Freedom from the known) , ஒரே புரட்சி(The only revolution) போன்ற தலைப்புகள்} , புத்தகங்களாக அமேஸான் மற்றும் நர்மதா, உடுமலை போன்ற பதிப்பகங்களில் கிடைக்கின்றன.

    பின்னூட்டம் பயந்ததுபோலவே நீண்டுவிட்டது. Can't help.

    பதிலளிநீக்கு
  107. //ஏகாந்தன் Aekaanthan ! said...//

    ஹா ஹா ஹா ஏ அண்ணன்.. கால் பந்து காலை வாரி விட்டுவிட்டதே:)).. காத்து ஓவரா அடிக்குதுபோல இங்கிலாந்துக்கு:)).. சின்னவரின் முகமே வாடிப்போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா சரி விடுங்கோ ஊக்கேயில:) தானே இருக்கு இங்கிலாந்து.. அது வின் பண்ணினால் நமக்கும் பெருமைதானே எனச் சமாதானம் ஜொன்னேன்ன்:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  108. //ஹா ஹா ஹா ஏ அண்ணன்.. கால் பந்து காலை வாரி விட்டுவிட்டதே:)).//

    https://i.ytimg.com/vi/5GP9RVZkWQo/hqdefault.jpg

    பதிலளிநீக்கு
  109. //அது வின் பண்ணினால் நமக்கும் பெருமைதானே எனச் சமாதானம் ஜொன்னேன்ன்:)) ஹா ஹா ஹா:)..//

    haiyo hiyo

    https://lh3.googleusercontent.com/-LjLvXF8-jh0/WYB-f5gff4I/AAAAAAAAK20/jSBpDQ55Fyo5IRRVVtBV1yO9er_0pxWswCJoC/w530-h530-n/18299012_1693377420964023_3428291415912742912_n.jpg

    பதிலளிநீக்கு
  110. ///Angel said...
    https://www.youtube.com/watch?v=5GP9RVZkWQo//

    ஒரு குழந்தையிட ஃபீலிங்ஸ் ஐப் புரியாமல் ஓவராத் துள்ளக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hello :) நான் குழந்தைக்கு ஒண்ணுமே சொல்லலை .உங்கள் சமாதானம் நினைச்சி சிப்பு வந்து:).

      எனக்கும் கொலம்பியா /பிரேசில் போன்ற நாடுகள் வெல்ல தான் ஆசை.
      குழந்தைக்கு அடுத்து என்ன கந்ற்றி வர ஆசைனநு கேளுங்கள் அத வின் பண்ண வைப்போம்

      நீக்கு
  111. ஏகாந்தன் ஸார்.. ஜேகேயின் சொற்பொழிவுகள் அடங்கிய சிற்றிதழ் ஒன்று மூன்று மாதத்துக்கொருமுறை வரும். அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து முன்னர் எங்கள் ப்ளாக்கில் பகிர்ந்திருக்கிறேன்.

    இன்று நீங்கள் எடுத்துக் காட்டி இருக்கும் வரிகள் மிக நன்றாய் இருக்கின்றன. மிகவும் யோசிக்க வைக்கின்றன. அப்படி அபிப்ராயம் இல்லாமல் இருக்க முடியுமா? கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  112. // கொமெண்ட் பொக்ஸ் இன் கீழே வலது மூலையில் பாருங்கோ புளூ எழுத்தில் மின்னுது Older Post /////என.//

    ஓ... ஆமாம். அது முன்னரே இருந்ததோ என்கிற சம்சயம்! மேலும் எனக்கு ஓல்டர் போஸ்ட் மட்டும்தான் கன்னுக்குத் தெரிகிறது!//எனக்குத் தெரிஞ்சு இது பல வருடங்களாக இருந்து வருகிறது. இன்றைய பதிவைப் பக்கம் பார்த்தோமானால் "ஓல்டர் போஸ்ட்" மட்டும் கண்ணுக்குத் தெரியும். அங்கே க்ளிக் செய்து முந்தைய பதிவின் பக்கம் போனால் இடப்பக்கம் "நியூயர் போஸ்ட்" வலப்பக்கம் "ஓல்டர் போஸ்ட்" தெரியும். இது பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  113. நெ த உங்கள் அப்பா சொன்ன கருத்துகள் செம. ஆனால் சில பெற்றோருக்குத் தங்களுக்கென்று வைத்துக் கொள்ள முடியாத பொருளாதார நிலையும் வருவதையும் நான் அறிந்து பார்க்கிறேன். அவர்களில் சிலருக்கு நல்ல பாதுகாப்பும் அன்பும் கிடைக்கிறது. சிலருக்குக் கிடைப்பதில்லை.
    ஹா அஹ ஹா சோகம் அடையனூம்னு சொல்லலை நெல்லை. இரு வேறாக அறிந்ததை நிகழ்வுகளை மாற்றாமல் கற்பனை கலந்து அவ்வளவே…

    கீதா

    பதிலளிநீக்கு
  114. ஏஞ்சல் உங்கள் கருத்துகள் அனைத்தையும் வாசித்தேன். அதில் ஃபோர்வேர்ட் ஸ்டெப் என்பதற்கு நெல்லையே பதில் சொல்லிவிட்டார் எனவே அதையே வழி மொழிகிறேன்.

    அப்புறம் நீங்கள் மேலை நாடுகள் பெண்கள் பற்றிச் சொல்லியது மிகவும் சரியே…..ஏஞ்சல் நீங்க நல்லா இப்படியான பிரச்சனைகளைக் கவனிச்சீங்கனா இங்குள்ள குடும்ப அமைப்பு அதாவது நெல்லை சொல்லியதைச் சொன்னாலும் பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். அடுத்து பெண்கள் குடும்பம் குழந்தைகள் என்று எண்ணும் போது ஃபேர்வேர்ட் ஸ்டெப் அடிபட்டு போகும். அடுத்து பிறந்த வீட்டுச் சப்போர்ட் கொஞ்சமேனும் வேண்டும் அதாவது நல்ல சப்போர்ட். டாமினேட்டின் சப்போர்ட் அல்ல நான் சொல்லுவது. வீட்டுப் பெரியவர்கள் இப்படியான சிச்சுவேஷங்களை வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சியும் எடுக்கலாம் அதாவது ம்கனின் பெற்றோர்கள். ஆனால் இதெல்லாம் நடக்காத பட்சத்தில் நாம் நினைக்கும் ஃபேர்வேர்ட் ஸ்டெப் எடுப்பது என்பது கொஞ்சம் கஷ்டமதான். மற்றொன்று பெண்கள் பொதுவாகவே கணவன் கொஞ்சம் மூர்க்கமாக இருந்தாலும் அவனிடம் இருக்கும் நல்லதையும் நினைத்துப் பார்ப்பார்கள்தான். ஏனென்றால் இது குடும்பம் என்ற ரீதியில் திங்க் பண்ணும் போது. தியாகம் என்று சொல்லமுடியாது. இப்படிப் பல சொல்லலாம் சரி நிறைய பதில் போடணும் ஸோ இங்கு நிறுத்திக் கொள்கிறேன்…

    மிக்க நன்றி ஏஞ்சல்

    கீதா

    பதிலளிநீக்கு
  115. ஏஞ்சல் பெண் வீட்டார் டாமினேட் செய்யும் பெற்றோரும் இருக்கின்றனர் நீங்கள் சொல்லுவது போல்….ஸோ வீட்டுக்கு வரும் பெண் டாமினேஷன் மகன் குடும்பத்தார் தத்தி என்றால் இப்படியான நிகழ்வுகள் ந்டக்கத்தான் செய்யும்….

    கீதா

    பதிலளிநீக்கு
  116. மிகிமா மிக்க மிக்க நன்றி தங்கள் கருத்துகளுக்கு. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் சரியே. அதைப் பற்றித்தான் மேலே நெல்லை ஏஞ்சல் பரிமாறிக் கொண்ட கருத்துகளுக்கு நானும் சொல்லியிருக்கேன்.

    மிக்க நன்றி கதையோடு ஒன்றியமைக்கும் பாராட்டிற்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  117. அதிரா நானும் உங்களுக்கு ரீ சமோசா என்று காத்திருந்ந்தேன் அப்புறம் எங்கள் ஏரியாவில் கரென்ட் போயிடுச்சு. வரும் போது நான் நித்திரையில்…ஹா அஹ ஹா

    ஹா ஹா ஹா அதிரா சமோசா ஆறிப் போனால் பூசார் வரவில்லை என்று நெ த ஏஞ்சல் எல்லோரும் சாப்பிட்டாச்சூஊஊஊஊஉ ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  118. அதிரா அது பாரதியின் பாடலில் இருந்து ஸ்ரீராம் அழகா எடுத்த தலைப்பு…
    //மனம் கடற்கரை போன்றது. அலை வந்து வந்து செல்வது போல நினைவுகளும்.//

    //மிக அருமையான வரிகள்..//

    மிக்க நன்றி அதிரா…

    //அப்புறம் நீ கொடுத்த பரங்கிக்கா புளிக்கொளம்பு நல்லாருந்துச்சு//

    ஹா ஹா ஹா இது எங்கள் புளொக்கில் வெளிவந்த ரெசிப்பியோ?:)//

    ஹா ஹா இல்லை என்று நினைக்கிறேன் நான் அறிந்து. ஸ்ரீராம் நெல்லை கீதாக்காதான் சொல்லோணும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  119. //இன்னொன்று கீதா, சுயமாக மேலே பார்த்து கீழே பார்த்து வானம் பார்த்து பூமி பார்த்து ஜிந்தியோ ஜிந்தி என ஜிந்திச்சு எடுக்கும் முடிவுகூட சில சமயம் காலை வாரிவிடுவதுண்டெல்லோ?:) ஹா ஹா ஹா .. விதி வலியது பாருங்கோ:))//

    யெஸ் அதிரா மிகவும் சரியே. அப்படிப் ப்ளான் பண்ணிச் சேர்த்த ஒரு தந்தையின் நிலையையும் மேலே கோமதிக்கா க்குச் சொன்ன பதிலில் இருக்கு. கீதாக்காவும் நிறைய சம்பவங்கள் சொல்லிருக்காங்க பாருங்க..

    அதிரா இப்ப என்பதால் சூடு ஆறி போச்சா ஏஞ்சலோடும் உங்களோடும் கும்மி அடிக்க முடியயலை…ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  120. ஆஹா ஏகாந்தன் அண்ணா ஆஞ்சுவுக்கு அழகான வடை மாலையுடனா வந்து என்ன சொல்லப் போறீங்கனு பார்க்கிறேன். உங்க கருத்தும் என்னவென்று தெரிந்து கொள்ளணும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  121. அதிரா கோட் செய்து அதற்குத் தகுந்த க்விதை வரிகளைக் கொடுத்தது சூப்பர். அருமையான வரிகள் அதிரா………உங்கள் நினைவுத் திறன் ஏஞ்சலின் நினைவுத்திறன் எல்லாம் அபாரம். எனக்கு ஏஞ்சலின் வல்லாரை ஸ்மூத்தி குடிக்கணும் போல
    இப்ப உங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேய்க்குதே இங்க வரை..ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  122. அதிரா க்தையைப் பாராட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி.
    சரி சரி பார்த்து போடுங்க ஹீரோயின. ஏற்கனவே எபில அனுக்கா தமனாக்கா எல்லாம் போட்டில இருக்காங்க…இப்ப கீர்த்திக்கா வேற வந்துருக்காங்க (எனக்குக் கீர்த்திக்காதான் அவங்க ஹா ஹா ஹா)

    ரொம்ப நன்றி அதிரா

    கீதா

    பதிலளிநீக்கு
  123. அதிரா இன்னிக்குத்தான் பார்க்கறீங்களா எபியில்? புது போஸ்ட் பழைய போஸ்ட்எப்பவு இருக்குமே…..புதுசா என்ன ? வேறு எதுவும் என் கண்ணுக்குத் தெரியலையே…அதிரா

    கீதா

    பதிலளிநீக்கு
  124. தாலி பறப்பது அந்த இடத்தில் சரியா இல்லை போல இருக்கே…….நெல்லை!!த் தம்பி!!!!
    கழுத்தில் ஆடுவது
    தாலி மட்டுமல்ல
    அவள் சுதந்திரமும் தான்

    இது ஓகேயா நெல்லை அண்ட் ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  125. //அது செரி:)) உங்களுக்கு[ஆண்களுக்கு:)] எப்போ சுகந்திரம் போச்சுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

    அதிரா ஆண்களுக்கும் சுதந்திரம் போகும் நிகழ்வுகள் இருக்கு. வெளியில் தெரிவதில்லை. பெண்களை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவதால் ஆண்களின் சுதந்திரம் பற்றிப் பேசப்படுவதில்லை. குறிப்பாக இந்த சமூகம் ஆண்கள் டாமினேட் செய்யும் சமூகம் என்று வந்துவிட்டது. ஆனால் பல குடும்பங்களில் ஆண்களும் நிறைய விட்டுக் கொடுத்து தங்கள் விருப்பங்களையும் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள் தான் ஏனோ அது முன்னிருத்தப்படுவதில்லை. முதுகெலும்பு இல்லை என்றும் சொல்லப்பட்டுவிடும். நானும் சொல்லியிருக்கிறேன் தான்.
    ஆனால் யோசித்தால் முதுகெலும்பு என்று சொல்வதை விட அவர்கள் விட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் அமைதி இருக்கும் என்றால் அதை விட்டுக் கொடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். முதுகெலும்பு இல்லை என்பதை விட முதுகெலும்பை அட்ஜஸ்ட் செய்து…..அப்படி அட்ஜஸ்ட் செய்வதில்தான் பல வேதனைகள் எழுகின்றன. எனவே நல்ல புரிதல் இருந்துவிட்டால் நல்லது..இருபக்கமும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  126. சகோ நாகேந்திர பாரதி மிக்க நன்றி கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  127. வல்லிம்மா நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும் ஹையோ அம்மா ப்ளீஸ் அப்படி எல்லாம் சொல்லாதீங்க….ப்ளீஸ்….
    சோகம் தான் நெல்லையும் சொல்லியிருக்கார் பாருங்க…ஸோ ….ஒரு வேளை நான் பதில் தப்பா கொடுத்துட்டேனோ வல்லிம்மா….
    வீட்டை விட்டு விலகும் தைரியம் பெண்களுக்கு வரவில்லை.//

    ஆமாம் அம்மா அதைப் பற்றித்தான் ஏஞ்சலுக்குச் சொல்லியிருப்பதிலும் சொல்லியிருக்கேன்…..
    நீங்கள் சொல்லியிருக்கும் முனியாம்மா ப்ளெஸ்ட்…

    மிக்க நன்றி வல்லிம்மா மீண்டும் வந்து கருத்து சொன்னமைக்கு. ப்ளீஈஸ் இனி மன்னிப்பு எல்லாம் என்னிடம் கூடாது ஓகேயா…

    கீதா

    பதிலளிநீக்கு
  128. ஏகாந்தன் அண்ணா ஜேகேயின் வரிகள் மிகவும் சிந்திக்க வைக்கிறது. யதார்த்தம் இல்லையா….மிக மிக ரசித்தேன்…..நல்ல விரிவான கருத்து. நானும் அவரது சில வரிகளைப் படித்திருக்கிறேன்.
    அவரைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இறுதி வரிகள் உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
  129. ஸ்ரீராம்நீங்க கொடுத்திருக்கும் வரியும் நல்லாருக்கு/....//ஊஞ்சலாடுவது//


    அப்புறம் ஸ்ரீராம், அதிரா, ஏஞ்சல் கீதாக்கா.....எனக்கு எப்போதுமே எபியில் ந்யூ போஸ்ட் ஓல்டர் போஸ்ட் தெரியுமே.

    புதிய போஸ்ட் வந்ததும் ந்யூ போஸ்ட் ஆப்ஷன் ஆட் ஆகிடும். வராத வரை ஓல்ட் போஸ்ட் மட்டும்தான் இருக்கும்....இது எல்லாரது தளத்தின் கீழும் இருப்பதுதானே....நான் அதை வைத்துத்தான் ஓகே ந்யூ வரலைனும் தெரிஞ்சுப்பென்...அப்புரம் ஓல்ட் மிஸ் ஆகியிருக்கானும் பார்த்துக்கொள்வேன்


    கீதா

    பதிலளிநீக்கு
  130. இவருடைய வாக்கை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு தாங்கள்தான் கண்டுபிடித்து சொன்னதுபோல் சொல்லி அலைகிறார்கள். இவர் பெயர் சொல்லாமலே quote செய்கிறார்கள். பேமானிகள்!



    JK அவர்களை மேற்கோள் காட்டாமல் தாங்கள்தான் கண்டுபிடித்து சொன்னதுபோல் சொல்லி அலைபவர்களை "பேமானிகள்" என்று பட்டம் சூட்டியுள்ளீர்கள். அவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்.



    காரணம் உங்களுக்கு ஜே.கே. மீது அவ்வளவு பற்று போலும்.



    அவர் கருத்தை அவர் பெயரை குறிப்பிடாமல் கையாண்டால் அவர்தான் ஆத்திரப்படவேண்டுமே வேண்டுமே நீங்காலோ அல்லது நானோ அல்ல.



    உண்மை என்பது எக்காலத்திலும் எப்போதும் ஒன்றுதான்



    ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் அவரவர் புரிந்து கொண்ட நிலையை பிறருக்கு எடுத்துரைத்துள்ளார்கள் அவ்வளவே.



    அது எத்தனை பேருக்கு போய் சேர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம்.



    நான் ஜே.கே. யின் புத்தகங்களையும், காணொளிகளை பல ஆண்டுகளாக கண்டு வந்துள்ளேன்.



    ஆனால் என்னை மிகவும் பாதித்தவர் பகவான் ரமணர் மட்டும்தான்.



    அவர் ஆதவன்போல் ஓரிடத்திலேயே இருந்துகொண்டு இந்தஅகிலத்தையே தன்னை சுற்றி வர வைத்தவர்.



    சில ஆண்டுகளாக நொச்சூர் வெங்கடராமன் என்பவர் பகவான் ரமணரின் உபதேசங்களுக்கு . மிக தெளிவான விளக்கங்களை அளித்து வருகிறார். நீங்கள் அவர் காணொளிகளை அவசியம் கண்டு கேட்டு பயன் பெறவேண்டும் என்பது இந்த சிறியேனின் வேண்டுகோள்.



    பதிலளிநீக்கு
  131. @ Pattabi Raman:

    //..உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்.//
    நான் ஒரு சாதாரணன். கோபம் என் இயல்புகளில் ஒன்று!

    //..உண்மை என்பது எக்காலத்திலும் எப்போதும் ஒன்றுதான்//
    இல்லை, அது வெவ்வேறானது என்று நான் எப்போது சொன்னேன்?

    //..ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் அவரவர் புரிந்து கொண்ட நிலையை பிறருக்கு எடுத்துரைத்துள்ளார்கள் அவ்வளவே. //
    வார்த்தைக்குள் வரமுடியாத ஒன்றை, something which belongs to another realm, எடுத்துரைக்க முயன்றிருக்கிறார்கள்..

    //..அது எத்தனை பேருக்கு போய் சேர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம். //
    யார் யாரிடம் போய்ச்சேரவேண்டுமென இருக்கிறதோ, அவர்களிடம் அது ஒவ்வொரு காலகட்டத்திலும் போய்ச்சேர்ந்துதானிருக்கிறது.

    //..ஆனால் என்னை மிகவும் பாதித்தவர் பகவான் ரமணர் மட்டும்தான்.//
    ஆதிசங்கரரின் ஆத்மபோதத்திற்கு ரமணரின் தமிழாக்கத்தை 2006-ல் நெட்டில் வாசிக்க நேர்ந்தது. ப்ரிண்ட் எடுத்து என் மனைவிக்குக் கொடுத்ததில் ஆர்வமாகப் படித்தார். அதனால், தன் மனம் தெளிவு மிகப்பெற்றதாக பின்னொரு சமயத்தில் என்னிடம் சொன்னார்.

    //..நொச்சூர் வெங்கடராமன் என்பவர் பகவான் ரமணரின் உபதேசங்களுக்கு மிக தெளிவான விளக்கங்களை அளித்து வருகிறார்.//
    பொதுவாக ஒரு படைப்புக்கு, ஆளுமைக்கு விளக்கம்கொடுக்கும், உரையெழுதும் மனிதர்களை நான் கவனித்துவருகிறேன். அவர்களுக்கு ஒரு ஞானியின், கவிஞனின், படைப்பாளியின் வார்த்தைகள், உண்மையில் அவர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமே அல்ல. அதனை தான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறோம், அழகாகச் சொல்கிறோம் எனக் காட்டுகிற சாக்கில், தங்களின் ‘மேதமை’யைப் பறைசாற்றிக்கொள்வதே குறிக்கோள் (பல உதாரணங்கள் -குறிப்பாக திருக்குறளுக்கு உரை எழுதிய ‘மேதைகள்’ பலர், திருவள்ளுவரை விடத் தங்களின் scholarly qualification-ஐ முன்னிருத்தவே முயன்றதாகத் தெரிகிறது.) அத்தகையோரை நான் உடனடியாக அலட்சியம் செய்துள்ளேன்.

    நொச்சூரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கேட்டதில்லை. ஏதும் சொல்வதற்கில்லை.

    விரிவான பதில்களுக்கு/மறுமொழிகளுக்கு மனமார்ந்த நன்றி.


    பதிலளிநீக்கு
  132. மற்றொன்று சொல்ல நினைத்தது. இக்கதையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு மட்டுமே அந்தப் படத்திற்காகச் சொல்லப்பட்டது. மற்றபடி இந்த நிகழ்வைக் கேட்டறிந்த போது மற்றொன்றும் அறிய நேர்ந்தது. அக்கணவனிடம் நல்லதும் உண்டுதானாம். ஆனால் அந்த நல்லவையை மூழ்கடிக்கும் அளவிற்கு மைனஸ் அதாவது நெகட்டிவ் சிந்தனைகள், ஹை ஈகோ அதனால் தர்க்கம், விவாதாம் விதண்டாவதம் என்பதெல்லாம். வெளியில் கணவனைப் பார்த்தால் தெரியாதாம். ஆனால் வீட்டில் அவனுடன் இருப்பவர்கள் நெருங்கிப் பழகுபவர்கள் மட்டுமே நெகட்டிவை அறிய முடியுமாம். கீதாக்க சொன்னதும் நினைவுக்கு வருது அந்தக் கணவன் சாவி கொடுத்தது...வெளியில் தெரியயது பலருக்கும் அவன் ஓகே வீட்டிலுள்ளோர்தான் சரியில்லை என்றுதான் புலப்படும். பழியை மற்றவர்கள் மீது போடும் நல்ல வாய்ஜாலக்காரர்களாக இருப்பார்கள் இத்தகையோர். மட்டுமல்ல அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அந்த ஃப்ரேமிற்குள் எல்லாம் நடக்க வேண்டும் இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. ஒருவழி பண்ணி விடுவார்கள் அதை எப்படியேனும் ஏற்க வைப்பார்கள் அலல்து பழி சுமத்துவார்கள்.

    கேட்டதில் மற்றொன்றும் சிந்திக்க வைத்தது. அப்பெண் கணவனை மன்னித்தாள் என்பதை விட அவளது அமைதி கெடாமல் இருப்பதற்காக என்று...வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தது. forgive others not because they deserve forgiveness but because you deserve peace. இதெல்லாம் கதையில் எழுதி எல்லாம் எடிட் செய்யும் போது கட் செய்தேன்...

    பல பெண்களுக்கும் இப்படியான இக்கட்டான சூழல்கள் வரத்தான் செய்கிறது கணவனா/புகுந்தவீடா அல்லது பெற்றோரா என்று....சிலர் சிறிய விஷயங்களுக்குக் கூட கணவனை விட்டு பெற்றோருடன் ஒதுங்குவது சிலர் பெரிய விஷயத்திற்குக் கூட கணவனை விடாமல் பெற்றோரை இழப்பது என்பதும். சில பெண்கள் கணவன் ஒருவனுக்காக அவனைச் சுற்றியுள்ள நல்லோரையும் விட்டு வரணுமா அவன் பெற்றோர் என்ன தவறு செய்தனர் அவர்களது மனதைப் புண்படுத்த வேண்டுமா என்றும் நினைத்து முடிவெடுப்பவர்கள் உள்ளனர்

    எல்லா உறவுகளும் ஒருவிதமேனும் நல்ல முறையில் கிடைக்கப் பெற்றவர்கள் ப்ளெஸ்ட் அவ்வளவுதான்..இந்த சப்ஜெக்ட் ஒரு குறுநாவலுக்கு உரியது. கூடியவரை எழுதியவற்றில் நிறைய கட் செய்து கொடுக்க முயற்சித்தேன்.....நிறைய பேசலாம் இதைப் பற்றி. இருந்தாலும் நான் இந்த ஹெவி சப்ஜெக்டிலிருந்து வெளி வந்து இன்று புதனில் சிரிக்கப் போறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  133. ஒவ்வொரு மனிதரிடமும் ego இருக்கும் வரை அது எல்லாவற்றுடனும் தன்னை முன்னிறுத்தத்தான் செய்யும். அதற்க்கு நானும் விதிவிலக்கல்ல .அது இருப்பதால்தான் நான் உங்களின்/மற்றவர்களின் கருத்துகளுக்கு எதிர் வினை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். அது தொலைந்தால்தான் நான் என்னை தொலைக்கமுடியும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறேன். தற்போது நான் மற்றவர்கள் என்னுள் உமிழ்ந்த எச்சில்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அந்த குப்பைகளை வாரிவாரிவெளியில் கொட்ட கொட்ட இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. போராட்டம் தொடரும்.

    பதிலளிநீக்கு
  134. @ Geetha: படித்தேன். சோகம் கருப்பாக அடர்ந்து கவ்வுகிறது.

    //..மகன் வீட்டிலிருந்து தப்பித்து மகள் வீட்டிற்கு வந்தவர் இப்போது எங்கு போவார்?//
    வாழ்க்கை சிலரை ஒரு இடத்தில் அமர விடுவதில்லை. பிள்ளை பெறாதவர்களுக்கு அதுவே பெரும் சோகம். எங்களுக்குப் பிள்ளை இல்லை. வயதான காலத்தில் யார் கவனித்துக்கொள்வார்கள் என்று. இன்னொரு பக்கமோ, பிள்ளைகளே தொல்லைகளாகிப்போன பெரிசுகளின் சோகக் கதைகள். அவர்களின் பெண் குழந்தைகள் மேலும் கவலைப்படுவார்கள். கண்ணீர் விடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்?

    இந்த விவஸ்தையற்ற வாழ்க்கையில், நீண்ட ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்வது அர்த்தமற்றது. மேலும் ஆபத்தானது.



    பதிலளிநீக்கு
  135. @ Pattabi Raman: ..குப்பைகளை வாரிவாரிவெளியில் கொட்ட கொட்ட இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. போராட்டம் தொடரும்.//

    நம்மில் பலர், மற்றவர்களின் அனுபவங்களை (அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருப்பினும்) நம்மில் போட்டு, அசைபோட்டுக்கொண்டு நடக்கிறோம், வாழ்கிறோம். கர்மவினைகள் எனும் சுமையோடு, இதுவும் ஒரு உளவியல் சுமை. எல்லாவற்றையும் உதறி எறிய, மனதையே காலிசெய்ய, மனித முயற்சி மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. இருந்தும், நீங்கள் சொல்கிறபடி தொடர்ந்து முயற்சி செய்யவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  136. தடைகளை பெரிதுபடுத்தாமல் தளர்ச்சியின்றி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் .உயிருள்ளவரை நடத்தவேண்டிய போராட்டம்.இப்பிறவியில் முடியாவிட்டால் அடுத்த பிறவியிலும் அது தொடருவது உறுதி.

    பதிலளிநீக்கு
  137. @ஏகாந்தன், //ஆதிசங்கரரின் ஆத்மபோதத்திற்கு ரமணரின் தமிழாக்கத்தை 2006-ல் நெட்டில் வாசிக்க நேர்ந்தது.//

    நேரம் இருக்கையில் சுட்டி கொடுங்கள்.புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  138. கேட்டு வாங்கிப் போடும்கதைகளில் ஒரே படம்வருகிறதே படத்துக்காக கதை எழுதக் கேட்கப்பட்டதா

    பதிலளிநீக்கு
  139. @ கீதா சாம்பசிவம்:

    ஆத்மபோதம் - ரமண மகரிஷியின் தமிழாக்கம், விளக்கத்துடன் கீழ்க்காணும் லிங்கில் படியுங்கள்:

    http://www.sriramana.org/tamilparayana/songs.php?dayno=5&men=1

    பதிலளிநீக்கு
  140. வயதான காலத்தில்தான் ஆறுதலாக வார்த்தைகள் தேவை

    பதிலளிநீக்கு
  141. பலமாக வருத்தப்பட வைத்துவிட்டது கதை. கீதா ரெங்கன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!