வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180803 : பொங்கி வரும் காவேரி





இன்று ஆடி பதினெட்டு.  பதினெட்டாம் பெருக்கு.  ஆடிப்பெருக்கு.  

கொத்தமங்கலம் சுப்புவின் பாடலுக்கு இசை ஏ எம் ராஜா.  சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடல்.

யார் யார் வீட்டில் சித்ரான்னங்கள் செய்தீர்கள்?  (சித்ரா யாருன்னு கேட்கக் கூடாது!) 


40 கருத்துகள்:

  1. காலங்கார்த்தாலே சித்ரான்னங்கள் தயார் செய்தது எல்லாம் குழந்தைங்க பள்ளிக்குப் போன சமயங்களில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவிரி வணக்கம் கீதாக்கா... குழந்தைகள் பள்ளிக்குப் போகும் சமயத்தில் செய்ததுதானா சித்ரான்னங்கள்?

      :)))

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு விதத்தில் சரி தான். அப்போல்லாம் எப்போவோ இம்மாதிரி நாள், கிழமைகளில் தானே செய்வோம். எப்போவானும் பள்ளிக்கு மத்தியானம் சாப்பிட எலுமிச்சை சாதமோ, தக்காளி சாதமோ, புளியோதரையோ கொடுத்தால் அன்னிக்கு சுமார் 4 பேர் சாப்பிடும் அளவுக்குக் கொடுத்து அனுப்பணும். சொல்லப் போனால் வகுப்பு ஆசிரியருக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டி வரும். இப்போல்லாம் இந்தச் சித்ரான்னங்கள் அன்றாடச் சாப்பாட்டில் வாரம் ஒரு நாள் இடம் பெற்று விடுகின்றன. நான் இப்போத் தான் புளிக்காய்ச்சலை முடித்ததால் இன்னிக்குப் புளியோதரை இல்லை. எலுமிச்சை சாதம் தான்.

      நீக்கு



    3. அப்படியே செய்தாலும் எல்லா வெரைட்டிகளையும் ஒரேநாளில் செய்வது வீணாகி விடலாம். என் பாஸுக்கு இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லை. இல்லாவிட்டால் வருடம்தோறும் செய்துவிடுவார். இன்று அவர் செய்ய ரெடி. நான் கூடாது, என்று சொல்லி ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
    4. முக்கியமாய் ஐந்து சாதம் இன்று கணக்கு. எல்லாம் ஆழாக்கு அரிசியில் கொஞ்சம் கொஞ்சம்! முன்னெல்லாம் அக்கம்பக்கம் கொடுப்பது உண்டு. இங்கே அக்கம்பக்கம் கொடுத்து வாங்குவது அவ்வளவா இல்லை. அம்பத்தூரில் இருந்தா இப்போவும் அக்கம்பக்கம் கொடுப்பது உண்டு.

      நீக்கு
    5. கீசா மேடம்... நீங்க ரொம்ப லக்கிதான். இப்போல்லாம் பசங்க கலந்த சாதம் டிபன் பாக்ஸ்க்கு என்றால் முதலிலேயே 'வேண்டவே வேண்டாம்'னு சொல்லிடறாங்க.

      பொதுவா கலந்த சாதம் செய்தால் ஏதேனும் ஓரிரு சாதம் மீந்துவிடும். இதில் சர்க்கரைப் பொங்கல் உண்டா?

      நீக்கு
    6. நெ.த. நான் தினமுமே சாதம் மிஞ்சாதபடிக்கு வடிப்பேன். அதே அளவு அரிசி தான் நேத்திக்குச் சித்ரான்னங்களுக்கும் எடுத்துக் கொண்டேன். எல்லாம் ஓர் அளவு தான்! மிஞ்சினதைக் குடியிருப்பின் பாதுகாவலருக்கு நாங்களே எடுத்துப் போய்க் கொடுத்துட்டோம்.

      நீக்கு
  2. அனைவருக்கும்
    ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. வாழ்க வளமுடன்...


    இந்த நாள் மிக மகிழ்வுடன், சிறப்புடன் அமைய...


    எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனுராதா பிரேம்குமார். உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் இந்த பாடலை போடுவீர்கள் என்று நினைத்தேன்.
    ஆனால் இது தனியாக பாடிய பாடல் போலும் சினிமா இசைதட்டு கொஞ்சம் வேகமாய் போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா...

      நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்று காவிரியைப் பார்த்தும் பாடலாம்; இந்தப் பாடலைப் பார்த்தும் பாடலாமோ!!

      நீக்கு
    2. பாடலாம். நூறு வயதை கடந்து காலம் காலமாய் பாடல் நிலைத்து நிற்கட்டும்.

      நீக்கு
  5. //இன்று அவர் செய்ய ரெடி. நான் கூடாது, என்று சொல்லி ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறேன்.//
    இந்த கரிசனம் என்றும் வேண்டும் ஸ்ரீராம்.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த கரிசனம் என்றும் வேண்டும் ஸ்ரீராம்.வாழ்க வளமுடன். //

      இல்லாமல் எங்கு போகும் அக்கா? நன்றி.

      நீக்கு
  6. சித்ரான்னங்கள் எடுத்துக் கொண்டு, பூம்புகார், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி, பிச்சாவரம் , திருச்சி முக்கொம்பு, கல்லணை போய் வந்து இருக்கிறோம் முன்பு. , உறவுகள், நட்புகளுடன்.இனிய காலங்கள் அவை.

    பதிலளிநீக்கு
  7. ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. காலை வணக்கம், ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  9. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் வணக்கமும் ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். வளம் பொங்கும் நாடாக நம் தமிழ்னாடு
      எப்போதும் விளங்கவேண்டும்.

      அன்னம் அதிகம் விளைந்து அன்னை அருளால்
      உடல் மனம் செழிக்க வேண்டும்.

      நீக்கு
    2. ஆடிப்பெருக்கு படம் பிடிவாதம் பிடித்து முதல் நாள் முதல் ஷோ எங்க வீட்டில் உதவி செய்த அம்மாவோடு திண்டுக்கல்லில் பார்த்த ஞாபகம்.

      அந்தப் பதினாலு வயதில் சரோஜாதேவி சினிமாவில் துன்பப் படுவதைப் பார்த்து
      அழுத நினைவு. ஹாஹா.

      அம்மா எல்லா கலந்த சாதமும் செய்வார். மணக்க மணக்க
      மலைக் கோட்டை சென்று உண்போம்.

      நீக்கு
    3. அதுவும் ஒரு ஆகஸ்டு 3 ஆம் தேதி தான்.
      நாளை எங்கள் வீட்டில் புளியோதரை, தயிர் சாதம் மட்டுமே.
      ஆடி வெள்ளியியாதலால் கண்ணமுதும் உண்டு.

      நீக்கு
    4. //அதுவும் ஒரு ஆகஸ்டு 3 ஆம் தேதி தான்.//

      ஆனாலும் உங்களுக்கு அபார நினைவாற்றல்மா...

      நீக்கு
  10. பாடல் அருமை...

    அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  11. அழகான பாடல் நண்பரே...
    ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் நண்பரே...!

    பதிலளிநீக்கு
  12. பொங்கும் காவிரி. ஆடிப்பெருக்கு. நினைக்கவே ரம்யமாக இருக்கிறது. விவசாயிகளும் அவர்தம் குடும்பங்களும் ஆனந்திக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் -

    லேபிள் எம்.எம்.ராஜா என்கிறது. மாற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள். பொங்கும் மங்கலம் எங்கும், என்றும் நிரந்தரமாய் தங்கட்டும்.
    பாடல் அருமை. சீர்காழியின் குரல் வளத்தில் மிகவும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    என் பதிவுக்கு வந்து கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். கொஞ்சம் வேலைகள் முடிந்ததும் அனைவருக்கும் நன்றியுடன் பதில்கள் கூறுகிறேன்.
    சகோதரருக்கு "குட் ஈவினிங்" சொல்லிதான் நன்றி கூற இயலும் போலிருக்கிறது. ஹா ஹா. ஆனாலும் மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. இது 'இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவளே' என்ற பாடலின் ராகத்தை ஒத்ததா? எங்கே இசைப் பேரரசி கீதா ரங்கன்?

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம், அது சித்ர அன்னம். எல்லா அன்னங்களையும் செய்தால் கலர் கலரா இருக்கும். தேஞ்காய் சாதம் தந்த வெண்மை, எலுமிச்சை சாதம் மஞ்சள், புளியோதரை - பிரவுன், எள் சாதம் - கருப்பு என்று இலையில் போட்டுக்கொண்டால், சித்திரங்களைப் போல இலை மின்னும் ஹா ஹா ஹா

    இதுல நல்லெண்ணெய்ச் சித்ராவை ஏன் நினைவுகூறுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  17. பாடல் நல்ல மிகப் பழமையான பாடல்.

    சித்ரான்னங்கள் மாலையில்தான் செய்வார்கள் இல்லையோ? எடுத்துக்கொண்டு அற்றின் கரைக்குச் சென்று சாப்பிட. சென்னைக்கு புலம் பெயர்ந்ததிலிருந்து ஆறுன்னா என்ன, ஆடிப் பெருக்குன்னா என்ன என்று பாடம் நடத்த வேண்டுமோ? ஹா ஹா

    பதிலளிநீக்கு
  18. எங்க ஊர் பக்கம் இந்த பண்டிகை இல்லைங்க சகோ. ஜஸ்ட் ஆடிவெள்ளி கொண்டாட்டம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  19. இந்த இனிய பாட்டை அனிருத் பாடியிருந்தால் என்ன ஆகியிருக்கும். ஆடிப் பெருக்கே வேண்டாமென்று கங்கை காணாமல் போயிருக்கும்

    பதிலளிநீக்கு
  20. யார் சித்ரா.... ஹாஹா.... நாங்க கேப்போமே!

    ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!