ஞாயிறு, 30 ஜனவரி, 2022

முக்கூடல் காண வாரீகளா? 01


முக்கூடல்  அணைக்கு 2014 இல் நடந்து சென்றிருக்கிறேன் . இந்த  முறை காரை  விட்டு இறங்காமல் ..









covid புண்ணியத்தில் உள்ளே விட மறுத்து விட்டார்கள் !!









நண்பர் குமரேசன் வீட்டில் , அவரால் வெளியே வரமுடியவில்லை ..




திட்டுவிளை செல்லும் வழியில் ..









வாய்க்காலின் மறுகரையில் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் 










ஒற்றைப் பனையின் பின்னே தெரிவதுதான் 


(தொடரும்) 

45 கருத்துகள்:

  1. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்..

    குறள் நெறி வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. // ஒற்றைப் பனையின் பின்னே தெரிவது.. //

    அது தான்..

    அதுவே தான்!..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்தப் பதிவு நேற்றைய தேதியில் வந்திருப்பதாய்க் காட்டுகிறது. என்னோட டாஷ்போர்டில் நேற்றைய பதிவு நேற்றுக் காண முடிந்தது. இன்னிக்கு இல்லை. பதிலாக இந்தப் பதிவையே காட்டுகிறது. :)

    படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து முக்கூடல் செய்திகளுக்கும்/படங்களுக்கும் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  5. முக்கூடல் என்றபோது சொக்கலால் ராம்சேட் பீடி நினைவில் வந்தது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  6. ஹஹ்ஹ்ஹா எதைத் தொட்டு எது பாருங்கள், ஜெயக்குமார் ஸார்..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் நான் பீடியும் புகைத்தவன் தான். அது ஒரு புரட்சியாக கருதப்பட்டது. அதுவும் இடது சிந்தனை உள்ளவர்கள் எப்போதும் புகைப்பர். 

      நீக்கு
    2. "பீடீ.. பீடீ.. என்ன பீடி?"

      "சொக்கலால் ராம்சேட் பீடி..'

      -- என்று மதுரை தெருக்களில் லவுட்ஸ் ஸ்பீக்கரும் கையுமாக சிறுவர்கள் உள்ளடக்கிய விளம்பர ஊர்வலம் வந்த காட்சி நினைவக்கு வந்தது.

      நீக்கு
    3. பீடி என்றால் பழைய மலையாள நடிகர்கள் தான். இருக்கவே இருக்கு குமுதம். இது பற்றி நெருங்கி நடித்த நடிகைகள் பேட்டி கொடுத்ததுண்டு.

      நீக்கு
    4. ஆ அவ் வ் வ் " புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு"

      நீக்கு
    5. நெல்லையைக் கேட்டால், தீவிர தமிழ் அன்பர் இல்லையா, 'எனக்கு முக்கூடல் பள்ளு ஞாபகத்திற்கு வந்தது' என்பார்!! ஹஹ்ஹாஹா.

      நீக்கு
    6. எனக்கு முக்கூடல் பள்ளு 'மந்தி தின்னும் கனிகளுக்கு' நினைவுக்கு வரலை. சொக்கநாதர் ராம்சேட் வருடத்துக்கு ஒரு முறை யானைக்கு கிலோ கிலோவா அல்வா ஊட்டுவது தான் நினைவுக்கு வந்தது

      நீக்கு
    7. தெரிந்த செய்தி,தெரியாத விவரம்ன்னு அந்தக் காலத்து பத்திரிகைகலிலெல்லாம் தூள் கிளப்புவார்கள்.

      இது தெரியாத செய்தியும் தெரியாத விவரமும் நெல்லை.

      நீக்கு
    8. நமக்குப் பிடித்ததெல்லாம் யானைக்கும் பிடிக்கும்னு நினைக்கும் மனித மனத்தை நினைத்து என்க்கு ஆச்சர்யமாக இருக்கும். யானைக்கு நீரிழவு வந்திருக்காதுங்கறீங்க? அதுக்குப் பதிலாக யானைக்கு விளாம்பழம், வாழைத்தண்டு, வெள்ளரிலாம் வாங்கிக்கொடுத்திருக்கலாமோ?

      நீக்கு
    9. நெல்லை, நீங்க சொல்வது சரியே! இங்கே ஶ்ரீரங்கம் ஆண்டாளம்மாவை இப்படித் தான் பழக்கிட்டுக் காலை காஃபிக்கு முரளி கஃபேக்கும் பின் மத்தியானம் ரஸ்னாவுக்கு இன்னொரு கடைக்கும் கூட்டிப் போய்ப் பழக்கப்படுத்தியதில் அதற்குச் சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாமும் உண்டு. :(

      நீக்கு

  7. எங்கிருந்து முக்கூடல் சென்றீர்கள். நெல்லையிலிருந்து?

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா அவங்க போயிருக்கறது நாகர்கோவிலிலிருந்து இப்ப காளிகேசம் தெரிசனங்கோப்பு அழகியபாண்டிபுரம் பகுதிலதானே சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அங்குதான் திட்டுவிளை எல்லாம்....

      கீதா

      நீக்கு
    2. ஏரியா வஸ்தாத் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நான் அங்கெல்லாம் போனதில்லை.

      நீக்கு
    3. ஏரியா வஸ்தாத் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்//

      ஹாஹாஹா கௌ அண்ணா நான் உஸ்தாத் எல்லாம் இல்லை. ஆர்வத்தில் செல்லும் இடங்களைப் பற்றியும் போவது எப்படி என்றும் கொஞ்சம் அறிய தெரிந்துகொள்வது. ஊர் சுற்ற ரொம்பப் பிடிக்குமே!!!!!!

      ஓ ஜெகே அண்ணா சொல்லியிருக்கும் முக்கூடல் அது திருநெல்வேலி - கிராமம். மூணு ஆறு கலக்கும் இடம். அந்த கிராமமும் கண்ணுக்கு விருந்து சேரன்மாதேவி, வீரவநல்லூர் கடையம் போறப்ப...என் உறவினர் அத்தை அப்போது காருகுருச்சியில் இருந்தார் அப்போது சென்றிருக்கிறேன்.

      இவங்க போயிருப்பது அணை. முக்கடல் ன்னுதான் இதைச் சொல்றது.. ஒரு வேளை முக்கூடல்னு சொன்னா குழப்பம் வரும்னு இருக்குமோ!! திருநெல்வேலி முக்கூடலா கன்னியாகுமரி முக்கூடலான்னு...ஆனால் முக்கூடல் அணை ன்னு சொன்னா அது கன்னியாகுமரி மாவட்ட அணைதான். முக்கூடல் ன்னு சொன்னால் அது திருநெல்வேலி மாவட்ட கிராமம்.

      கீதா

      நீக்கு
    4. நாங்க போனப்போ இந்த இடங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே தான் சென்றிருக்கோம். ஆனால் விபரங்கள் தெரியலை. கார் ஓட்டுநரும் எதுவும் சொல்லவில்லை.

      நீக்கு
    5. முக்கூடல் அணையிலிருந்து தான் நாகர்கோவிலுக்கு குடிதண்ணீர் வருகிறது.

      தரிசனம் கோப்பில் ஒரு மாதம் தங்கியிருந்த பொது தான் keerippaarai முதலிய இடங்களுக்கு சென்று வந்தோம் ஆனால் இம்முறை கார்விட்டு இறங்க அனுமதி இல்லை.

      நீக்கு
  8. ஆஹா முக்கூடல்/முக்கடல் சென்றீர்களா!! அது இயற்கை சார்ந்து களிமண்ணால் கட்டப்பட்ட அணை. சிமென்ட் எதுவும் வைக்காமல் களிமண் கற்களால் சித்திரை திருநாள் பாலராமவர்மாவால் கட்டப்பட்ட அணை. இதுதான் நாகர்கோவிலுக்குக் குடிநீர் சப்ளை. (எங்க ஊருக்கெல்லாம் ஊரிலேயே தண்ணிதான்!!!)

    எங்கள் ஊரிலிருந்து ஜஸ்ட் 20 நிமிடம் வண்டியில் சென்றால். வீரநாராயணமங்கலம், இறைச்சகுளம் வழியா நெடுமங்காடு ஹைவே போய் போய்விடலாம். பல வருடங்களுக்கு முன் ஊரில் இருந்த போது கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் போன இடம். மலைகளின் நடுவே நீர் நிறைந்து ரம்மியமாக இருக்கும். எந்தவித பூச்சும் இல்லாமல் ஃப்ரீயாகப் போய் பார்த்த இடம்.

    இப்போது ஏதோ நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாகவும் பார்க் எல்லாம் வந்து சுற்றுலாத்தலமாக ஆக்கியிருப்பதாகவும் நுழைவுக்கட்டணம் உண்டு என்று சொல்லப்பட்டதால் இம்முறை சென்ற போது போகலாம் என்று நினைத்தேன் ஆனால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டதால் போக முடியவில்லை.

    அருமையான இடம் உங்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லையோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நானும் பல வருடங்களுக்கு முன் நடந்துதான் சென்றேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முக்கூடல் பயணம் தொடங்கிவிட்டது... படங்களை கண்டேன் மகிழ்ச்சி அடைந்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. முக்கூடல் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  12. ''வாய்க்கால் அருகே வசிக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.''

    ஏகப்பட்ட ஜந்துக்கள் அங்கே இருக்காதோ:)

    முக்கூடல் அணை, முக்கடல் விவரம் கீதா ரங்கன் சொல்வது அனைத்துமே சுவாரஸ்யம்.
    படங்கள் பசுமை.
    எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. முக்கூடல் சாலைக்காட்சிகள் படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!